Tnpsc

Tnpsc Group 1 Age Limit is Increased By CM : 01.06.2018

Tnpsc Group 1 Age Limit is Increased By CM : 01.06.2018

குரூப்-1, 1ஏ, 1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு: குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் விதி எண் 110 – ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது வரம்பை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதாகவும் பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு மூலம் துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் -1ஏ மூலம் வனத்துறை அலுவலர் பணியிடங்களும், குரூப் – 1பி தேர்வு மூலம் இந்து அறநிலையத்துறை பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!