General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 12

Tnpsc General Tamil Previous Question Paper 12

Tnpsc General Tamil Previous Question Paper 12: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக

(அ) மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்

(ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம்

(இ) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்

(ஈ) முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம்

2. “குடிதழீஇக் கோல் ஓச்சும்” – எவ்வகை அளபெடை?

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) செய்யுளிசை அளபெடை

(இ) சொல்லிசை அளபெடை

(ஈ) ஒற்றளபெடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சொல்லிசை அளபெடை

சொல்லிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தரும் பொருட்டு அளபெடுப்பது சொல்லிசை அளபெடையாகும்.

தழீஇ-தழீ என்னும் தொழிற்பெயர்ச்சொல்.

“தழீஇ” (தழுவி) என வினையெச்சச் சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடையாகும்.

3. கருவி, கருத்தா-இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை

(அ) இரண்டாம் வேற்றுமை

(ஆ) மூன்றாம் வேற்றுமை

(இ) நான்காம் வேற்றுமை

(ஈ) ஆறாம் வேற்றுமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மூன்றாம் வேற்றுமை

மூன்றாம் வேற்றுமை.

இவ்வேற்றுமையின் உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் முதலியனவாகும்.

கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி ஆகிய மூன்று பொருள்களில் இவ்வேற்றுமை அமையும்.

வினாவில் கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களில் மட்டுமே அமையும் எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

எ.கா:எழுதுகோலால் எழுதினான்-கருவி.

தந்தையால் தொடங்கப்பெற்றது-கருத்தா.

தந்தையுடன் தாயும் வந்தாள்-உடனிகழ்ச்சி

4. திணைகளுக்குரிய ஊர்ப் பெயர்களைப் பொருத்துக:

(அ) குறிஞ்சி – 1. பாடி, சேரி

(ஆ) முல்லை – 2. பேரூர், மூதூர்

(இ) மருதம் – 3. பட்டினம், பாக்கம்

(ஈ) நெய்தல் – 4. சிறுகுடி

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 2 1 4 3

இ. 2 4 3 1

ஈ. 3 1 4 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

அ. 4 1 2 3

அகப்பொருள் திணைகளின் கருப்பொருள்களில் “ஊர்” என்ற பிரிவில் ஐந்திணைகளுக்குமான ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன.

குறிஞ்சி-சிறுகுடி.

முல்லை-பாடி,சேரி.

மருதம்-பேரூர், மூதூர்.

நெய்தல்-பட்டினம், பாக்கம்.

பாலை-குறும்பு.

5. பொருத்துக:

அ. கூழை – 1. 1,3,4 – ஆம் சீர்களில் வரும்

ஆ. மேற்கதுவாய் – 2. 1,2,3,4 – ஆம் சீர்களில் வரும்

இ. கீழ்க்கதுவாய் – 3. 1,2,3 – ஆம் சீர்களில் வரும்

ஈ. முற்று – 4. 1,2,4 – ஆம் சீர்களில் வரும்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 2 3 4

இ. 1 3 4 2

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

அ. 3 1 4 2

தொடை விகற்பங்கள்:

இணை-1,2-ஆம் சீர்களில் வரும்.

பொழிப்பு-1,3-ஆம் சீர்களில் வரும்.

ஒரூஉ-1,4-ஆம் சீர்களில் வரும்.

கூழை-1,2,3-ஆம் சீர்களில் வரும்.

மேற்கதுவாய்-1,3,4-ஆம் சீர்களில் வரும்.

கீழ்க்கதுவாய்-1,2,4-ஆம் சீர்களில் வரும்.

முற்று-1,2,3,4-ஆம் சீர்களில் வரும்

6. DUBBING, DIRECTOR-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

(அ) படப்பிடிப்பு, இயக்குநர்

(ஆ) நகர்த்தும் வண்டி, இயக்குநர்

(இ) ஒலிச்சேர்க்கை, இயக்குநர்

(ஈ) படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஒலிச்சேர்க்கை, இயக்குநர்

7. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்

(அ) வளையல்

(ஆ) ஐந்து

(இ) திண்ணை

(ஈ) ஏதுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) திண்ணை

வளையல்-இடையில் ஐகாரம் குறுகி வந்தது.

ஐந்து-முதலில் ஐகாரம் குறுகி வந்தது.

திண்ணை-ஈற்றில் ஐகாரம் குறுகி வந்தது.

8. கூகை-உரிய மரபுச் சொல்லை எழுது

(அ) கூவும்

(ஆ) கத்தும்

(இ) குழறும்

(ஈ) அகவும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குழறும்

ஒலி மரபு

குயில் கூவும்

வாத்து கத்தும்

கூகை குழறும்.

மயில் அகவும்

9. “SNACKS”- என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க

(அ) சிற்றுண்டி

(ஆ) சிற்றுணா

(இ) சிற்றுணவு

(ஈ) சீரான உணவு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) சிற்றுணா

10. மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா

(அ) வெண்பா

(ஆ) ஆசிரியப்பா

(இ) கலிப்பா

(ஈ) வஞ்சிப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வஞ்சிப்பா

மூன்றடிகளைச் சிற்றெல்லைகளாகக் கொண்டு பாடப்படும் பாவகைகள் ஆசிரியப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகியனவாகும்.

வெண்பா: இரண்டடிக்கும் குறையாமல் பன்னிரண்டு அடிகளுக்கு மிகாமல் வரும்.

ஆசிரியப்பா: மூன்றடிச் சிற்றெல்லைக்குக் குறையாமல் எத்தனை அடிகள் வேண்டுமானாலும் வரலாம்.

வஞ்சிப்பா: மூன்றடிச் சிறுமை கொண்டு பல அடிகளில் வரும்.

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?

அ. சிங்கம்-முழங்கும் (ஆ) பூனை-கீச்சிடும் (இ) புறா-குனுகும் (ஈ) வண்டு-முரலும்

(அ) அ மற்றும் ஆ சரி

(ஆ) இ மற்றும் ஈ சரி

(இ) அ, இ மற்றும் ஈ சரி

(ஈ) ஆ, இ மற்றும் ஈ சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அ, இ மற்றும் ஈ சரி

ஒலி மரபு:

சிங்கம்-முழங்கும்.

பூனை-சீறும்.

புறா-குனுகும்.

வண்டு-முரலும்.

12. கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை

(அ) சிந்துவிருத்தம்

(ஆ) கட்டளை கலித்துறை

(இ) ஆசிரிய விருத்தம்

(ஈ) கலித்தாழிசை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கலித்தாழிசை

கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையில் பாடப்பட்டுள்ளது. இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.

13. கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்

(அ) காக்கைப்பாடினியார்

(ஆ) காரைக்காலம்மையார்

(இ) வெள்ளி வீதியார்

(ஈ) நப்பசலையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வெள்ளி வீதியார்

வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர். அவர் தன் கணவனைத் தேடியலைந்த செய்தியை அவரின் சமகாலப் புலவரான ஒளவையார் “ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த” எனத் தொடங்கும் அகநாநூற்றுப் பாடலில் விளக்கியுள்ளார்.

14. உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர் ஓக் கும்மே

– இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

(அ) புறநானூறு

(ஆ) அகநானூறு

(இ) ஐங்குநுறூறு

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புறநானூறு

புறநானூறு

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர் ஓக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்போம் எனினே தப்புந பலவே.

– மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனர்

15.”—- சிறு புல் நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலைப் பாடியவர்.

(அ) கபிலர்

(ஆ) கம்பர்

(இ) ஒளவையார்

(ஈ) பரணர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) கபிலர்

திருக்குறளின் சிறப்பினை உணர்த்த இயற்றப்பட்டது “திருவள்ளுவமாலை” என்ற நூலாகும். இந்நூலில் அமைந்துள்ள 55 பாடல்களை 53 புலவர்கள் இயற்றியுள்ளனர். இந்நூலில் உள்ள 3-ஆவது பாடல் கபிலர் இயற்றியதாகும்.

“திணையளவு போதாச் சிறபுல்நீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு

வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி.

– கபிலர்.

16. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

(அ) 100

(ஆ) 105

(இ) 107

(ஈ) 110

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 107

திருக்குறள் 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றுள் இந்திய மொழிகள் 14

17. “வருகைப் பருவம்” – என்பது

(அ) குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது

(ஆ) குழந்தையின் பன்னிரண்டாம் திங்களில் நிகழ்வது

(இ) குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது

(ஈ) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது

பிள்ளைத் தமிழ் பருவங்கள்:

3-ஆம் திங்கள்-காப்பு.

5-ஆம் திங்கள்-செங்கீரை.

7-ஆம் திங்கள்-தாலாட்டு.

9-ஆம் திங்கள்-சப்பாணி.

11-ஆம் திங்கள்-முத்தம்.

13-ஆம் திங்கள்-வருகை.

15-ஆம் திங்கள்-அம்புலி.

17-ஆம் திங்கள்-சிற்றில் (ஆண்பால்)/கழங்க பெண்பால்).

19-ஆம் திங்கள்-சிறுபறை (ஆண்பால்)/அம்மானை(பெண்பால்).

21-ஆம் திங்கள்-சிறுதேர் (ஆண்பால்)/ஊசல் (பெண்பால்)

18. “உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே” – என்று தொடங்கும் பாடல் எந்தப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது?

(அ) செங்கீரைப் பருவம்

(ஆ) முத்தம் பருவம்

(இ) வருகைப் பருவம்

(ஈ) அம்புலிப் பருவம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) வருகைப் பருவம்

முத்துக்குமராசாமி பிள்ளைத் தமிழ்.

“உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே

உருகும் அடியர் இதய நெகிழ உணர்வில் எழுநல் உதயமே”

எனத் தொடங்கும் பாடல் வருகைப் பருவத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.

19. உமறுப்புலவரின் காலம்

(அ) கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

(ஆ) கி.பி பதினேழாம் நூற்றாண்டு

(இ) கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

(ஈ) கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கி.பி பதினேழாம் நூற்றாண்டு

சீறாப்புரணத்தை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவார். இவரது காலம் 17-ஆம் நூற்றாண்டு (கி.பி.1642 முதல் கி.பி.1703) ஆகும்.

20. “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ——— காதையாக உள்ளன.

(அ) இருபதாவது

(ஆ) இருபத்து நான்காவது

(இ) இருபத்தேழாவது

(ஈ) இருபத்தொன்றாவது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இருபத்து நான்காவது

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!