General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 12

31. “ஆதிகவி” என்று போற்றப்பட்டவர்

(அ) கம்பர்

(ஆ) வான்மீகி

(இ) வியாசர்

(ஈ) ஒட்டக்கூத்தர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வான்மீகி

32. “தனயை” என்பது யாரைக் குறிக்கும்?

(அ) மருமகள்

(ஆ) மகள்

(இ) கொழுந்தி

(ஈ) மாமியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மகள்

33. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்” கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) சுரதா

(ஈ) வாணிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதியார்

34. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

மரக்கலம்

(அ) வங்கம்

(ஆ) அம்பி

(இ) திமில்

(ஈ) புணரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) புணரி

புணரி – கடல்

35. “அறவுரைக்கோவை” என்றழைக்கப்படும் நூல்

(அ) முதுமொழிக்காஞ்சி

(ஆ) நான்மணிக்கடிகை

(இ) பழமொழிநானூறு

(ஈ) நாலடியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) முதுமொழிக்காஞ்சி

36. ரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்

(அ) வால்ட் விட்மன்

(ஆ) லியோ டால்ஸ்டாய்

(இ) கலீல் கிப்ரான்

(ஈ) ஜான் பன்யன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) லியோ டால்ஸ்டாய்

37. தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலை இயற்றியவர்

(அ) வீரமாமுனிவர்

(ஆ) பவணந்தி முனிவர்

(இ) அகத்தியர்

(ஈ)நச்சினார்க்கினினயர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வீரமாமுனிவர்

தொன்னூல் விளக்கம்.

இந்நூலாசிரியர் வீரமாமுனிவர். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து பிரிவுகளுடன் 370 பாக்களைக் கொண்டது இந்நூல்.

38. “ஒரு பைசாத் தமிழன்” என்ற இதழை வெளியிட்டவர் யார்?

(அ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஆ) திரு.வி.க

(இ) அரும்பத உரைகாரர்

(ஈ) ஜானகிராமன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) அயோத்திதாசப் பண்டிதர்

எழுத்துச் சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் ஆகியவற்றிற்காகப் பாடுபட்டவர் அயோத்திதாசப் பண்டிதர். இவரின் இயற்பெயர் காத்தவராயன். தன் குருவின் மீதிருந்த பக்தியால், குருவின் பெயரையே தன் பெயராக (அயோத்திதாசர்) மாற்றிக் கொண்டார். இவருடைய காலம் 1845 முதல் 1914 வரையாகும். அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் “இந்திரதேச சரித்திரம்” என்ற நூலை எழுதியுள்ளார்.

39. உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை அதன் தொன்மைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” எனக் கூறியவர்.

(அ) திருநாவுக்கரசர்

(ஆ) தொல்காப்பியர்

(இ) கம்பர்

(ஈ) திருவள்ளுவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கம்பர்

கம்பராமாயணம்-ஆரண்ய காண்டம்.

நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல்உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்

-கம்பர்.

பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன் ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல்வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான். உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி “என்றுமுள தென்தமிழ்” என்று கம்பர் கூறியுள்ளார்.

40. “திரைக்கவித் திலகம்” என் சிறப்புப் பெயர் பெற்றவர்

(அ) கண்ணதாசன்

(ஆ) வாலி

(இ) வைரமுத்து

(ஈ) மருதகாசி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) மருதகாசி

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!