பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Book Back Questions 6th Social Science Lesson 5
6th Social Science Lesson 5
5] பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
பேரண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு “பிரபஞ்சவியல்” (Cosmology) என்று பெயர். காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும்.
ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும். ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3, 00, 000 கி. மீ ஆகும். ஆனால், ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
கற்பனை செய்து பார்க்கவும். சூரியன் 1. 3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கூடிய வகையில் மிகப்பெரியதாகும்.
கோள்களின் வரிசையை நினைவிற் கொள்ள (Mnemonics): புது வெள்ளம் புவியில் செலுத்தினால் விவாதம், சண்டை, யுத்தம் நெருங்காது.
பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக நமக்குப் புலனாகிறது. உதாரணமாக, சிறுபாணாற்றுப்படையில் காணப்படும் “வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு” என்று பாடல் வரிகளிலிருந்து நாம் தெரிந்துகொள்வோம்.
சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டராகும். மணிக்கு 800 கி. மீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 21 வருடங்கள் ஆகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24. 09. 2014 அன்று மங்கள்யான் (Mars Orbiter Mission) எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. இதனால் இந்திய செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா (USA), ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் உள்ளது.
நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன்-1 ஆகும். இது 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி. மீ/மணி ஆகவும், 60o வடக்கு அட்சரேகையில் 845 கி. மீ/மணி ஆகவும், துருவப் பகுதியில் சுழலும் வேகம் சுழியமாகவும் இருக்கும்.
நள்ளிரவு சூரியன் என்பது இரு அரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்க்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்குமேல் தெரியும் நிகழ்வாகும்.
“சூரிய அண்மை புள்ளி (Perihelion)” என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும். “சூரிய தொலைதூர புள்ளி” (Aphelion) என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வாகும்.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் 10, 500 சதுர கி. மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு __________
2. இரு வான்பொருள்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _________ ஆகும்.
3. சூரியக் குடும்பத்தின் மையம் ___________
4. கோள் என்ற வார்த்தையின் பொருள் ___________
5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் ___________
6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் ___________
7. புவியின் சாய்வுக் கோணம் ___________
8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாள்கள் ___________ மற்றும் __________
9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு ___________ ல் காணப்படும்
10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு __________ என்று பெயர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
(அ) சுற்றுதல்
(ஆ) பருவகாலங்கள்
(இ) சுழல்தல்
(ஈ) ஓட்டம்
2. மகர ரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
(அ) மார்ச் 21
(ஆ) ஜீன் 21
(இ) செப்டம்பர் 23
(ஈ) டிசம்பர் 22
3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
(அ) ஆண்டிரோமெடா
(ஆ) மெகலனிக் கிளவுட் (Magellanic Clouds)
(இ) பால்வெளி
(ஈ) ஸ்டார்பர்ஸ்ட்
4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
(அ) செவ்வாய்
(ஆ) சந்திரன்
(இ) புதன்
(ஈ) வெள்ளி
5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
(அ) வியாழன்
(ஆ) சனி
(இ) யுரேனஸ்
(ஈ) நெப்டியூன்
பொருந்தாததை வட்டமிடுக:
1. வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி
2. சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி மெகலனிக்கிளவுட்
3. புளுட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ
4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்.
5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானூர்தி, விண்கலம்.
பொருத்துக:
1. வெப்பமான கோள் – செவ்வாய்
2. வளையம் உள்ள கோள் – நெப்டியூன்
3. செந்நிறக்கோள் – வெள்ளி
4. உருளும் கோள் – சனி
5. குளிர்ந்த கோள் – யுரேனஸ்
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜீன் 21ஆம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
(அ) 1 மற்றும் 2
(ஆ) 2 மற்றும் 3
(இ) 1, 2 மற்றும் 3
(ஈ) 2 மட்டும்
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக:
(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
(ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.
(இ) இரண்டு கூற்றுகளும் சரி
(ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
பெயரிடுக:
1. விண்மீன்களின் தொகுப்பு ___________
2. சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் ___________
3. பிரகாசமான கோள் __________
4. உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் ___________
5. 366 நாட்களை உடைய ஆண்டு ___________
கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)
1. பெருவெடிப்பு 2. ஒளி ஆண்டு 3. சூரியன்
4. சுற்றிவருபவர் 5. வியாழன்
6. சந்திராயன்-1 7. 23 ½ 8. (மார்ச் 21, செப்டம்பர் 23)
9. அருகில் 10. ஒளிர்வு வட்டம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: (விடைகள்)
1. சுழல்தல் 2. (டிசம்பர் 22) 3. பால்வெளி
4. சந்திரம் 5. சனி
பொருந்தாததை வட்டமிடுக:
1. நெப்டியூன் 2. சிரியஸ் 3. அயோ
4. குறுளைக் கோள்கள் 5. வானுர்தி
பொருத்துக:
1. வெப்பமான கோள் – வெள்ளி
2. வளையம் உள்ள கோள் – சனி
3. செந்நிறக் கோள் – செவ்வாய்
4. உருளும் கோள் – யுரேனஸ்
5. குளிர்ந்த கோள் – நெப்டியூன்
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க: (விடை)
1. 1 மற்றும் 2
2. இரண்டு கூற்றுகளும் சரி
பெயரிடுக:
1. விண்மீன்கள் 2. ஆண்ட்ரோமெடா மெகலனிங்
3. வெள்ளி 4. புவி 5. லீப்