Ethics Questions

உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை 12th Ethics Lesson 9 Questions

12th Ethics Lesson 9 Questions

9] உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை

1) தேசிய ஒருமைப்பாட்டை மையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் எனக் கூறியவர் யார்?

A) சுவாமி விவேகானந்தர்

B) தயானந்த சரஸ்வதி

C) இராமானுஜம்

D) கபீர்

விளக்கம்: இந்திய நாடு, பழைமையான பண்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்வியல் முறைகள், இலக்கியம், கணிதம், வானவியல், இசை, ஓவியம், நடனம், சிற்பம், கட்டடக்கலை போன்றவற்றில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தேசிய ஒருமைப்பாட்டை மையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

2) ‘உலகப்பொதுமறை’ என்றழைக்கப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) நன்னூல்

C) நற்றிணை

D) நாலடியார்

விளக்கம்: ‘உலகப்பொதுமறை’ என்றழைக்கப்படும் நூல் திருக்குறள். இது தமிழர் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிகளைக் கூறும் சங்க இலக்கியம். இராமாயணம், மகாபாரதம், கௌதம புத்தர் தோற்றுவித்த பௌத்த சமயம் போன்றவை உலகிற்கு இந்தியா வழங்கிய அளப்பரிய பண்பாட்டுக் கொடையாகும்.

3) இந்தியப் பாரம்பரியத்தின் உயரியப் பண்பு எது?

A) சகிப்புத்தன்மை

B) பன்முகத்தன்மை

C) அனைவரும் சமம்

D) A மற்றும் B

விளக்கம்: இந்தியப் பாரம்பரியத்தின் உயரியப் பண்பு சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மையாகும். யூதர்கள், கிறித்துவர்கள், முஸ்லீம்கள், பார்சிக்கள் போன்றோர் இந்தியாவில் குடியேறி, இந்தியப் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு, இ;ந்தியப் பண்பாட்டுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். மதநல்லிணக்க அடிப்படையில் அனைத்துச் சமயங்களிலுமுள்ள நல்ல கருத்துககளை ஏற்றுக்கொளல், பிற சமயத்தினருக்கும் மதிப்பளித்தல் போன்ற உணர்வுகளைத் தன்னகத்தே கொண்டு, சகிப்புத் தன்மையுடன் நடப்பது இந்தியர்களின் தலைசிறந்த பண்பாடாகும்.

4) நம் சமுதாயம்———————-என்ற அறக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது

A) தருமம்

B) கர்மம்

C) வினைப்பயன்

D) நிலையாமை

விளக்கம்: நம் சமுதாயம், தருமம் என்ற அறக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எல்லாச் சமயங்களும் எல்லா இனங்களும் சரிசமம். இஃது ஆண்-பெண் சமத்துவம் போன்ற சிறந்த கொள்கைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. நம் பண்பாடு இயற்கையிலுள்ள அனைத்து உயிர்களையும் உயிரற்றவைகளையும் நேசிக்கும் பண்பைக் கொண்டுள்ளது. மரம், செடி, கொடி, நதி என எல்லாவற்றையும் வணங்கும் பாங்கு, நமது உயரிய நற்பண்புகளை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.

5) கூற்றுகளை ஆராய்க

1. இந்தியப் பண்பாட்டில் கட்டடக்கலை, மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக எல்லோரா குகைக்கோயில், அஜந்தா ஓவியம், குடைவரைக்கோயில்(மகாபலிபுரம்), லிங்கராஜா கோயில், சூரியனார் கோயில், நடராஜர் கோயில், தஞ்சைப் பெரியகோயில் போன்றவை.

2. சிற்பங்கள், ஓவியங்கள், நடனங்கள், நாடகங்கள், இசை போன்றவற்றில் உலகிற்கே முன்னோடியாக இந்தியப் பண்பாடு திகழ்கிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியப் பண்பாட்டில் கட்டடக்கலை, மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக எல்லோரா குகைக்கோயில், அஜந்தா ஓவியம், குடைவரைக்கோயில் (மகாபலிபுரம்), லிங்கராஜா கோயில், சூரியனார் கோயில், நடராஜர் கோயில், தஞ்சைப் பெரியகோயில் போன்றவை.

2. மேலும் சிற்பங்கள், ஓவியங்கள், நடனங்கள், நாடகங்கள், இசை போன்றவற்றில் உலகிற்கே முன்னோடியாக இந்தியப் பண்பாடு திகழ்கிறது.

6) “மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் நிறை வடிவமே அறம்” எனக் குறிப்பிடுபவர் யார்?

A) க.அரங்கசாமி

B) நா.முத்துக்குமார்

C) ந.பிச்சமூர்த்தி

D) எஸ்.வைத்தியலிங்கம்

விளக்கம்: “மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளின் நிறை வடிவமே அறம்” என க.அரங்கசாமி குறிப்பிடுகின்றார்.

7) தமிழ் இலக்கிய அகராதி “அறம்” என்னும் சொல்லுக்குத் தரும் பொருள் என்ன?

A) புண்ணியம்

B) தருமம்

C) வாழ்வியல் விதி

D) அனைத்தும்

விளக்கம்: ‘அறம்’ என்ற சொல்லுக்குச் சான்றோர்கள் பல்வேறு பொருள்களைக் குறிப்பிடுகிறார்கள். தமிழ் இலக்கிய அகராதி அறம் என்னும் சொல்லுக்கும் புண்ணியம், தருமம், வாழ்வியல் விதி, ஒழுக்கம் எனப் பல பொருள்களைக்குறிப்பிடுகிறது.

8) ‘சனாதனதர்மம்’ என்பதன் பொருள் என்ன?

A) முடிவில்லா அறம்

B) முடிவில்லா வளம்

C) முடிவில்லா அன்பு

D) முடிவில்லா ஒளி

விளக்கம்: ‘சனாதனதர்மம்’ என்பதற்கு ‘முடிவில்லா அறம்’ என்று பொருள். மனிதன் இயற்கையோடு ஓன்றிய நல்வாழ்விற்கு அடிப்படைபயாக விளங்குவது தர்மமேயாகும். சடங்குகளைவிட, ஒழுக்கமே முக்கியம் என்று தருமம் கூறுகிறது. மனிதனின் குடும்பக்கடமைகள் சமூகக் கடமைகளாகப் போற்றப்படுகின்றன.

9) வாழ்வின் உறுதிப் பொருள்கள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: வாழ்வின் உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் ‘புருஷார்த்தங்கள்’ என்று அழைக்கிறோம். இவற்றில் வீடுபேற்றை அடைவதையே மனிதன் தம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதனை அடைய, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்வியல் நெறிக்கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்துகின்றனர்.

10) ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ என்று பாடியவர் யார்?

A) அகத்தியர்

B) தொல்காப்பியர்

C) இளங்கோவடிகள்

D) திருத்தக்கத்தேவர்

விளக்கம்: தொல்காப்பியர் அகத்தினையில், களவியல், கற்பியல், பொருளியல் முதலிய அகப்பொருள் கோட்பாடுகளையும், புறத்திணையில், மரபியல் பற்றிய அறக்கோட்பாடுகளையும் வழங்கியுள்ளார். பிற்போக்கு எண்ணம் இல்லாத தொல்காப்பியர், ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ எனக்கூறி பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தார்.

11) பொருத்துக.

அ. லிங்கராஜா கோயில் – 1. தஞ்சை

ஆ. சூரியனார் கோயில் – 2. சிதம்பரம்

இ. நடராஜர் – 3. கோனார்க்

ஈ. தஞ்சைப் பெரியகோயில் – 4. புவனேஸ்வர்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 4, 2, 3, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்: லிங்கராஜா கோயில் – புவனேஸ்வர்

சூரியனார் கோயில் – கோனார்க்

நடராஜர் கோயில் – சிதம்பரம்

தஞ்சைப் பெரியக்கோயில் – தஞ்சை

12) கீழ்க்காண்பவைகளுள் எவை இதிகாசங்கள்?

1. வால்மீகி இராமாயணம்

2. கம்ப இராமாயணம்

3. வேதவியாசரின் மகாபாரதம்

4. பெருந்தேவனாரின் மகாபாரதம்

A) 1 மற்றும் 2

B) 1 மற்றும் 3

C) 1 மற்றும் 4

D) 2 மற்றும் 4

விளக்கம்: வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணமும், வேதவியாசரால் எழுதப்பட்ட மகாபாரதமும் இதிகாசங்களாகும்.

13) இராமாயணம் கூறும் அறக்கருத்து என்ன?

A) ஒருவனுக்கு ஒருத்தி

B) பெரியோருக்குக் கீழ்படிதல்

C) கற்புநெறி

D) அனைத்தும்

விளக்கம்: இராமாயணம், ‘ஒருவனுக்கு ஒருத்தி’, ‘பெரியோருக்குக் கீழ்படிதல்’, ‘கற்புநெறி’, ‘நன்றிமறவாமை’, ‘பிறன்மனை நோக்கதிருத்தல்’, ‘உண்மையே வெல்லும்’ போன்ற உயரிய அறநெறிக் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கியுள்ளது.

14) சூது வாழ்க்கைக்கு கேடு, மண்ணாசை வேண்டாம், செஞ்சோற்றுக் கடன்தீர்த்தல் போன்ற அறங்களை கூறும் நூல் எது?

A) இராமாயணம்

B) மகாபாரதம்

C) வில்லிபாரதம்

D) நாலடியார்

விளக்கம்: மகாபாரதம் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதன் பின்பற்ற வேண்டிய 4 வகை நோக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. தனிப்பட்டவர்களுக்கு உரிய சிறந்த குணங்களையும், சூது வாழ்க்கைக்கு கேடு, மண்ணாசை வேண்டாம், தர்மம் வெல்லும். நன்றிமறவாமை, சகிப்புத் தன்மை, தியாகம், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் போன்ற அறங்களை இவ்வுலகிற்கு எடுத்தியம்புகிறது.

15) ‘திரிரத்தினா’ என்பது எந்த சமயத்தோடு தொடர்புடையது?

A) பௌத்தம்

B) சமணம்

C) சீக்கியம்

D) இந்து

விளக்கம்: சமண சமயத்தைத் தோற்றுவித்த வர்தமான மகாவீரர் ‘திரிரத்தினங்கள்’ என்ற மும்மணிகளையும் வாழ்வியலுக்கான இல்லறக் கோட்பாடுகளையும், கர்மவினை போன்ற அறக்கோட்பாடுகளையும் சமண சமயம் மூலம் நமக்கு அளித்தார்.

16) மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 4 வகை உண்மைகளை கூறிய சமயம் எது?

A) சமணம்

B) பௌத்தம்

C) இந்து

D) கிறித்துவம்

விளக்கம்: கௌதம புத்தர், மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நால்வகை உயரிய உண்மைகளையும், எண்வகை பாதைகளையும் வகுத்தளித்துள்ளார். மேலும் இல்லறத்தார், துறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் வழங்கியுள்ளார்.

17) ‘நல்வழி’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) கம்பர்

B) கபிலர்

C) நாதமுனி

D) ஒளவையார்

விளக்கம்: ஒளவையார் தமது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற அறநூல்கள் வாயிலாக வாழ்வியல் அறங்களான கற்பு, தர்மம், கல்வி, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்றவற்றை எளிமையாகக் கடைபிடிக்கும் நோக்கில் விளக்கியுள்ளார்.

18) ‘நல்வழி’ கூறும் அறக்கருத்து என்ன?

A) சாதி இரண்டே இதுவே நீதி

B) வருவது வரும் வாடாதே

C) ஏர் பிடித்தோர்க்கு இணையில்லை

D) அனைத்தும்

விளக்கம்: சாதி இரண்டு இதுவே நீதி, வருவது வரும் வாடாதே, ஏர் பிடித்தோர்க்கு இணையில்லை, ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ போன்ற உயர்ந்த அறக்கருத்துகளை மனித சமூகத்திற்கு ‘நல்வழி’ நூல் மூலம் ஒளவையார் வழங்கியுள்ளார்.

19) தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய அறநூல் எது?

A) நன்னூல்

B) திருக்குறள்

C) நாலடியார்

D) இராமாயணம்

விளக்கம்: தமிழரின் பெருமையை உலகுக்கு உணத்திய அறநூல் திருக்குறள். இந்நூல் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தமிழரின் பண்பாடைப் பறைசாற்றுகிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை எடுத்துரைக்கின்றன.

20) திருவள்ளுவர், வாழ்வியல் நெறியை எத்தனை பகுதிகளாகப் பிரித்துள்ளார்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: திருவள்ளுவர், வாழ்வியல் நெறியை அறம், பொருள், இன்பம் என்னும் 3 பகுதிகளாகப் பிரித்துள்ளார். திருக்குறளின் தத்துவமே அறவழியில் வாழ்ந்து, அறவழியில் பொருள் சேர்த்து இன்பமாக வாழ்வதேயாகும்.

21) “எல்லாப் பொருளும் இதன்பால் உள” என்பதற்கேற்ப எந்த நூலில் அறக்கருத்துகள் நிறைந்துள்ளன?

A) நன்னூல்

B) திருக்குறள்

C) நாலடியார்

D) இராமாயணம்

விளக்கம்: “எல்லாப் பொருளும் இதன்பால் உள” என்பதற்கேற்ப திருக்குறளில் அறக்கருத்துகள் நிறைந்துள்ளன. அவை, உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதால் இந்நூலைப் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர்.

22) திருக்குறள் மொழிபெயர்ப்பாளர்களை அந்தந்த மொழியோடு பொருத்துக

அ. ஆங்கிலம் – 1. ஜி.யு.போப்

ஆ. இலத்தீன் – 2. வீரமாமுனிவர்

இ. ஜெர்மன் – 3. ஏரியல்

ஈ. பிரெஞ்சு – 4. டாக்டர் கிரௌல்

A) 4, 3, 2, 1

B) 1, 3, 4, 2

C) 1, 2, 4, 3

D) 1, 2, 3, 4

விளக்கம்: ஆங்கிலம் – ஜி.யு.போப்

இலத்தீன் – வீரமாமுனிவர்

ஜெர்மன் – டாக்டர் கிரௌல்

பிரெஞ்சு – ஏரியல்

23) திருக்குறள் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்க

A) திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூலாகும்.

B) இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமின்றி இந்நூற்றாண்டின் புதிய தலைமுறையினருக்கும் வழிகாட்டும் அறநூலாக விளங்குகிறது.

C) வள்ளுவத்தின் பொருண்மை, காலந்தோறும், புதிய கருத்தாக்கங்களைத் தந்து இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது

D) அனைத்தும்

விளக்கம்: திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று, அஃது ஒரு வாழ்வியல் நூலாகும்.

இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமின்றி இந்நூற்றாண்டின் புதிய தலைமுறையினருக்கும் வழிகாட்டும் அறநூலாக விளங்குகிறது.

வள்ளுவத்தின் பொருண்மை, காலந்தோறும், புதிய கருத்தாக்கங்களைத் தந்து இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. இவ்வாறு பல சிறப்பியல்புகளைக் கொண்ட அறக்கோட்பாடுகளை உலகிற்குத் திருக்குறள் வழங்கியுள்ளது.

24) ஆன்மிகம் பற்றிய சரியானக் கூற்றைத் தேர்வு செய்க

A) ஆன்மீகம் என்பது பொதுவாகப் ‘புலன்கடந்த அனுபவநிலையாகும்’.

B) மனிதன், தன்னுள் இருக்கும் ஆத்ம ஞானத்தை உணர்வதுதான் ஆன்மிகமாகும்

C) ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம் என்பன ஒவ்வோர் உயிரும் அதன் கர்ம வினைகளின்படி, அதன் தற்போதைய நிலையின்படி, ஏற்ற வழியைப் பின்பற்றித் தமது குறிக்கோளான வீடுபேறு அல்லது ஆன்மாவின் உண்மை நிலையை அறிவதே ஆன்மிகம் எனலாம்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஆன்மீகம் என்பது பொதுவாகப் ‘புலன்கடந்த அனுபவநிலையாகும்’.

மனிதன், தன்னுள் இருக்கும் ஆத்ம ஞானத்தை உணர்வதுதான் ஆன்மிகமாகும்

ஞானயோகம், கர்மயோம் மற்றும் பக்தியோகம் என்பன ஒவ்வோர் உயிரும் அதன் கர்ம வினைகளின்படி, அதன் தற்போதைய நிலையின்படி, ஏற்ற வழியைப் பின்பற்றித் தமது குறிக்கோளான வீடுபேறு அல்லது ஆன்மாவின் உண்மை நிலையை அறிவதே ஆன்மிகம் எனலாம்.

25) ஆன்மிகம் பற்றய சரியானக் கூற்றை தெரிவு செய்க

A) சமயக் கோட்பாடுகளின்படி, உயிரினங்கள் அனைத்தும் தெய்வீகத் தன்மை கொண்டவை எனலாம்

B) தெய்வீகத்தின் அங்கமாகத்தான் இவ்வுலகம் அமைந்துள்ளது. அந்தத் தெய்வீகத் தன்மையை உணர்த்துவதுதான் ஆன்மிகமாகும்.

C) மனிதன் இவ்வுலகில் இயற்கையோடு இணைந்து வாழ்வதே ஆன்மிகம். இதுவே இந்தியப் பண்பாட்டின் ஆணிவேராகும்.

D) அனைத்தும்

விளக்கம்: சமயக் கோட்பாடுகளின்படி, உயிரினங்கள் அனைத்தும் தெய்வீகத் தன்மை கொண்டவை எனலாம்

தெய்வீகத்தின் அங்கமாகத்தான் இவ்வுலகம் அமைந்துள்ளது. அந்தத் தெய்வீகத் தன்மையை உணர்த்துவதுதான் ஆன்மீகமாகும்.

மனிதன் இவ்வுலகில் இயற்கையோடு இணைந்து வாழ்வதே ஆன்மிகம். இதுவே இந்தியப் பண்பாட்டின் ஆணிவேராகும்.

26) யோகா என்பது சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பாரத நாட்டில் தோன்றிய பழைமையான ‘வாழ்வியல் பயிற்று முறை’ ஆகும்?

A) 4000 ஆண்டுகள்

B) 5000 ஆண்டுகள்

C) 3000 ஆண்டுகள்

D) 10000 ஆண்டுகள்

விளக்கம்: சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நம் பாரத நாட்டில் தோன்றிய பழைமையான ‘வாழ்வியல் பயிற்று முறை’ யோகாவாகும். உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை யோகக்கலையாகும்.

27) கூற்றுகளை ஆராய்க

1. யோகா, உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி

2. ‘யோகா’ என்பது, ஒரு சமயம் அன்று, அது ஒரு பெருந்தத்துவம், ஒரு கலை, ஓர் அறிவியல் மற்றும் வாழ்க்கை நெறிமுறையாகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. யோகா, உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.

2. ‘யோகா’ என்பது, ஒரு சமயம் அன்று, அது ஒரு பெருந்தத்துவம், ஒரு கலை, ஓர் அறிவியல் மற்றும் வாழ்க்கை நெறிமுறையாகும்.

28) ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ – இதனுடன் தொடர்புடையவர் யார்?

A) இராமலிங்க அடிகள்

B) கபீர்

C) இராமானுஜர்

D) விவேகானந்தர்

விளக்கம்: யோகநிலையில் உள்ள மற்ற உயிர்களையும் தன்னுயிர் போலவே நேசிக்க முடியும். இதனால் இராமலிங்க அடிகளார், ’ஜீவகருண்ய ஒழுக்கம்’ என்றார்.

29) “உன்னைப் போல பிறரையும் நேசி” என்று குறிப்பிடும் நூல் எது?

A) குரான்

B) பகவத் கீதை

C) பைபிள்

D) அனைத்தும்

விளக்கம்: கிறித்துவ புனித நூலான பைபிள் “உன்னைப் போல பிறரையும் நேசி” என்று குறிப்பிடுகின்றது.

30) “நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம் இருமடங்கு இரக்கமுடையவனாய் இருப்பேன்” என்று குறிப்பிடும் நூல் எது?

A) திருக்குரான்

B) பகவத் கீதை

C) பைபிள்

D) அனைத்தும்

விளக்கம்: இஸ்லாமிய புனித நூலான திருக்குரான் “நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம் இருமடங்கு இரக்கமுடையவனாய் இருப்பேன்” என்கிறது. இந்த ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமை, யோகமுறையை மேற்கொள்வதால் அடையமுடிகிறது.

31) ‘பஞ்சசீலம்’ என்பது எத்தனை நற்பண்புகளைக் குறிக்கிறது?

A) 4

B) 3

C) 7

D) 5

விளக்கம்: சமஸ்கிருத மொழியில் ‘பஞ்ச’ என்றால் ‘ஐந்து’, ‘சீலம்’ என்றால் ஒழுக்கம் (நற்பண்புகள்), எனவே, ‘பஞ்சசீலம்’ என்றால் ‘ஐந்து நற்பண்புகள்’ எனப்படுகிறது.

32) பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கியவர் யார்?

A) மோதிலால் நேரு

B) தாஸ்

C) ஜவஹர்லால் நேரு

D) காந்தி

விளக்கம்: ‘பஞ்சசீலக் கொள்கை’, இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது. பஞ்சசீலக் கொள்கையை உலகிற்கு அளித்தவர் ‘ஜவஹர்லால் நேரு’ ஆவார். பஞ்சசீலக் கோட்பாடு, இந்தியப் பண்பாட்டு உணர்வை அடித்தளமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது.

33) பஞ்சசீலக் கொள்கை பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க

A) ஒரு நாடு மற்ற நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையும் மதிக்க வேண்டும்

B) ஒரு நாடு, பிறநாட்டின் எல்லைகளை அத்துமீறக் கூடாது.

C) ஒரு நாடு பிறநாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

D) அனைத்தும்

விளக்கம்: ஒரு நாடு மற்ற நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையும் மதிக்க வேண்டும்.

ஒரு நாடு பிறநாட்டின் எல்லைகளை அத்துமீறக் கூடாது.

ஒரு நாடு பிறநாட்டு உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.

மேலும், சமத்துவ மற்றும் சகோதரத்துவ நலனுக்காகப் பாடுபட வேண்டும் மற்றும் சமாதான சகவாழ்வு ஆகிய கொள்கைகளும் பஞ்சசீலக் கொள்கைகள் ஆகும்.

34) பாண்டுங் மாநாடு – அணிசேரா இயக்கம் யாரால் உருவாக்கப்பட்டது?

A) ஜவஹர்லால் நேரு

B) சூ-யென்-லாய்

C) சுகர்னோ

D) மார்ஷல் டிட்டோ

விளக்கம்: இரண்டாம் உலகப்போர் முடிவில் அமெரிக்கா தலைமையில் முதலாளித்துவ நாடுகள் ஓரணியாகவும், சோவியத் ரஷ்யா தலைமையில் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்ட நாடுகள் மற்றொரு அணியாகவும் செயல்பட்டன. இவைகளுக்குள் ஆயுதங்களை பெருக்கும் போட்டியும் மறைமுகமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த இரு அணியிலும் இல்லாத நாடுகளை ஜவஹர்லால் நேரு தனது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையில் ஓர் புதிய அணியை உருவாக்கினார். இதுவே ‘அணிசேரா இயக்கம்’ ஆகும்.

35) பாண்டுங் மாநாடு எங்கு நடைபெற்றது?

A) இந்தியா

B) இந்தோனேசியா

C) சீனா

D) எகிப்து

விளக்கம்: அணிசேரா இயக்க நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவில் 1955-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-24 வரை, பாண்டுங் நகரில் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் மாநாடு கூட்டப்பட்டது.

36) பாண்டுங் மாநாட்டில் எத்தனை நாடுகள் கலந்துக் கொண்டன?

A) 25

B) 29

C) 32

D) 41

விளக்கம்: இம்மாநாட்டில் 29 நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவின் சார்பாக ஜவஹர்லால் நேரு, சீனாவின் சூ-யென் லாய், இந்தோனேசியாவின் சுகர்னோ, யுக்கோஸ்லோவியாவின் மார்ஷல் டிட்டோ, எகிப்தின் கர்னல் நாசர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

37) ‘ஆசியபட்டர்’ யார் காலத்தில் வாழ்ந்தவர்?

A) மௌரியர்கள்

B) குப்தர்கள்

C) சாளுக்கியர்கள்

D) இராஷ்டிரக்கூடர்கள்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் கணிதம், வானவியல், மருத்துவம், ஜோதிடம் போன்ற துறைகளில் இந்தியா வளர்ச்சி பெற்றிருந்தது. இவர்கள் காலத்தில் வாழ்ந்த ‘ஆரியபட்டர்’ வானவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினர்.

38) ‘ஆரிய சித்தாந்தம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) ஆரியபட்டர்

B) கெப்ளர்

C) கோபர்நிகஸ்

D) எட்வின் ஆல்ட்ரி

விளக்கம்: ஆரியபட்டர், “ஆரிய சித்தாந்தம்” என்ற தமது வானவியல் நூலில், “உலகம் உருண்டையானது, பூமி தனது அச்சில் சுழலுவதால் இரவு பகல் ஏற்படுகிறது“ என்று விளக்கினார்.

39) சூரிய, சந்திர கிரகணங்கள் தோன்ற உண்மையான காரணங்களை முதன் முதலில் விளக்கி கூறியவர் யார்?

A) ஆரியபட்டர்

B) கெப்ளர்

C) கோபர்நிகஸ்

D) எட்வின் ஆல்ட்ரி

விளக்கம்: ஆரியபட்டர், சூரிய-சந்திர கிரகணங்கள் தோன்ற உண்மையான காரணங்களை விளக்கிக் கூறியுள்ளார். ஆனால், மேலைநாட்டு வானவியல் அறிஞர்கள் பிற்காலத்தில்தான் இவ்வுண்மைகளை அறிந்தனர். ஆரியபட்டர் எழுதிய ‘ஆரியபட்டீயம்’ என்ற நூல் உலகமே வியக்கும் வானவியல் நூலாகப் போற்றப்படுகிறது.

40) ‘வராகமிகிரர்’ எழுதிய நூல்களில் பொருந்தாததைத் தேர்வு செய்க

A) பஞ்ச சித்தாத்திகா

B) ஆரிய சித்தாந்தம்

C) பரிக ஜாதகம்

D) பிருகத் சம்ஹிதா

விளக்கம்: ஆரிய சித்தாந்தம் மற்றும் ஆரியபட்டீயம் – ஆரியபட்டர்.

வராகமிகிரரின் நூல்கள்:

இவர் ‘பஞ்ச சித்தாந்திகா’, ‘பிருகத் சம்ஹிதா’ முதலான ஜோதிட, வானவியல் நூல்களை எழுதியுள்ளார். மேலும், ‘லகு ஜாதகம்’, ‘பிரிக ஜாதகம்’ போன்ற ஜோதிட, வானவியல் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் தம் நூல்களில் கோள்கள் யாவும் மனித வாழ்வோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதை விளக்கிக் கூறியுள்ளார்.

41) பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டவர் யார்?

A) வராகமிகிரர்

B) பிரம்மகுப்தர்

C) பாஸ்கரர்

D) ஆரியபட்டர்

விளக்கம்: வானவியலிலும், கணிதவியலிலும் வல்லுநரான ‘பிரம்மகுப்தர்’ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

42) ‘காரணகண்டாக்கடியகா’ என்ற நூலை இயற்றியவர் யார்?

A) வராகமிகிரர்

B) பிரம்மகுப்தர்

C) பாஸ்கரர்

D) ஆரியபட்டர்

விளக்கம்: வானவியலிலும், கணிதவியலிலும் வல்லுநரான பிரம்மகுப்தர்,

1. பிரம்மஸ்பு சித்தாந்தம்

2. காரணகண்டாக்கடியகா முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

43) ‘காரண குதூகலா’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) வராகமிகிரர்

B) பிரம்மகுப்தர்

C) பாஸ்கரர்

D) ஆரியபட்டர்

விளக்கம்: வானவியலிலும் கணிதத்திலும் சிறந்து விளங்கிய அறிஞர் பாஸ்கரர். இவர், ‘காரண குதுகலா’ என்ற நூலையும், ‘தட்கலிகத்தி’ என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்நூல்கள் கிரகங்களின் இயக்கங்களைப் பற்றிக் கூறுகின்றன. இதன்மூலம் அக்காலத்திலேயே வானவியலில் இந்தியர்கள் சிறந்து விளங்கியிருந்தது என்பதை அறியமுடிகிறது.

44) இந்தியா முதன் முதலில் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள் எது?

A) ஆரியபட்டா

B) பாஸ்கரா

C) ரோகிணி

D) ஆப்பிள்

விளக்கம்: இஸ்ரோ நிறுவனம் (ISRO), இந்தியாவின் சார்பில் ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகினி, ஆப்பிள் போன்ற செயற்கைக் கோள்களையும், IRS-1A, 1B ஆகிய தொலையுணர்வு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தியாவின் வானவியல், கணித வல்லுநர்களான ஆரியபட்டர் பெயரும், பாஸ்கரர் பெயரும் இந்தச் செயற்கைக்கோள்களுக்கு சூட்யது குறிப்பிடத்தக்கது.

45) கூற்றுகளை ஆராய்க.

1. இந்தியா மருத்துவம், சிந்துவெளி நாகரிகம் காலந்தொட்டு வளர்ந்திருக்க வேண்டும்

2. ஆனால், போதிய தகவல்களும் ஆதாரங்களும் இல்லாமையால் ஆயர்வேதம் தோன்றுவதற்குள் பழங்குடியினர்களின் மருத்துவம் இருந்திருக்கலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இந்தியா மருத்துவம், சிந்துவெளி நாகரிகம் காலந்தொட்டு வளர்ந்திருக்க வேண்டும்

2. ஆனால், போதிய தகவல்களும் ஆதாரங்களும் இல்லாமையால் ஆயர்வேதம் தோன்றுவதற்குள் பழங்குடியினர்களின் மருத்துவம் இருந்திருக்கலாம்.

46) வேதகால மருத்துவம், எந்த நூற்றாண்டுவரை, நடைமுறையில் இருந்தது?

A) கி.மு. 6-ஆம் நூற்றாண்டு

B) கி.மு. 8-ஆம் நூற்றாண்டு

C) கி.பி. 8-ஆம் நூற்றாண்டு

D) கி.பி. 6-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: கி.மு.(பொ.ஆ.மு) 8-ஆம் நூற்றாண்டு வரை வேதகால மருத்துவம் நடைமுறையில் இருந்தது. அதன்பின் ஆயுர்வேத மருத்துவம் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

47) எந்த நூற்றாண்டுக்கு முன்பே காம்பில்யா, வாரணாசி ஆகிய இடங்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இருந்துள்ளன?

A) கி.மு. 6-ஆம் நூற்றாண்டு

B) கி.மு. 8-ஆம் நூற்றாண்டு

C) கி.பி. 6-ஆம் நூற்றாண்டு

D) கி.பி. 8-ஆம் நூற்றாண்டு

விளக்கம்: கி.மு. (பொ.ஆ) ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே காம்பில்யா, வாரணாசி, தட்சசீலம் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன.

48) பொருத்துக.

அ. வயிற்றுப் புறத்தோல் அறுவைச் சிகிச்சை – 1. Lab Parotomy

ஆ. சிறுநீரக கற்கள் அகற்றும் சிகிச்சை – 2. Lithicotomy

இ. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை – 3. Plastic Surgery

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: இந்தியர்கள் அறுவை சிகிச்சை முறையில், மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். வயிற்றுப் புறத்தோலில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை (Lab Parotomy), சிறுநீரகக் கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை (Lithicotomy), ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic Surgery) ஆகியவற்றில் இந்திய மருத்துவர்களின் பணிகள் பாராட்டுக்குரியவை.

49) இந்தியா முழுவதும் இப்போது ஆயுர்வேத – யுனானி மருத்துவர்கள் பயன்படுத்தி வரும் சீலாசித்துவேர் எங்கு கிடைத்துள்ளது?

A) ஹரப்பா

B) லோத்தல்

C) காளிபங்கன்

D) மொகஞ்சதாரோ

விளக்கம்: இந்தியா முழுவதும் இப்போது ஆயுர்வேத-யுனானி மருத்துவர்கள் பயன்படுத்தி வரும் ‘சிலோசித்துவேர்’ மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளது. இவ்வேர் வயிறு, குடல், நுரையீரல் போன்றவற்றில் உருவாகும் நோய்களையும் குணமாக்கும் தன்மை உடையது.

50) மௌரியர் ஆட்சிக் காலத்தில் மருத்துவம் பற்றிய சரியானக் கூற்றைத் தெரிவு செய்க.

A) மருத்துவப் பராமரிப்புக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

B) முதியோர், ஆதரவற்றோர், மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்காக சிறப்பு மருத்துவமனைகள் இயங்கி வந்தன.

C) கால்நடைகளுக்கெனத் தனியாக மருத்துவமனைகளும் இருந்தன.

D) அனைத்தும்

விளக்கம்: மருத்துவப் பராமரிப்புக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

முதியோர், ஆதரவற்றோர், மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்காக சிறப்பு மருத்துவமனைகள் இயங்கி வந்தன.

கால்நடைகளுக்கெனத் தனியாக மருத்துவமனைகளும் இருந்தன.

51) ‘அஷ்டாங்கசங்கிரகம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?

A) பிரம்ம குப்தர்

B) வாக்பட்டர்

C) ஆரியபட்டர்

D) வராகமிகிரர்

விளக்கம்: வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம், அஷ்டாங்கஹிருதயா என்னும் இரு மருத்துவ நூல்கள் புகழ்பெற்றவையாகும். ‘அஷ்டாங்கஹிருதயா’ என்ற மருத்துவநூல், நோய் தீர்க்கும்முறை, சுகாதாரம், உடலுறுப்பு அமைப்பியல் அறுவைசிகிச்சை, தாய்மை மருத்துவம், கண் மருத்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றது.

52) பொருத்துக

அ. அஷ்டாங்கஹிருதயா – 1. சரகர்

ஆ. சரக சம்ஹிதா – 2. சுசுருதர்

இ. சுசுருத சம்ஹிதா – 3. வாக்பட்டர்

A) 3, 2, 1

B) 3, 1, 2

C) 2, 1, 3

D) 1, 3, 2

விளக்கம்: அஷ்டாங்கஹிருதயா – வாக்பட்டர்

சரக சம்ஹிதா – சரகர்

சுசுருத சம்ஹிதா – சுசுருதர்

சரகர் எழுதிய சரக சம்ஹிதா என்னும் நூல் உடல், உள மருத்துவத்தையும், சுசுருதர் எழுதிய ‘சுசுருத சம்ஹிதா’ அறுவை சிகிச்சை முறையைப் பற்றிக் கூறுகின்றன.

53) ஆயுர்வேதம் பற்றி தமது ஆய்வேடுகளில் தொகுத்துக் கூறியவர் யார்?

A) வாக்பட்டர்

B) சரகர்

C) சுசுருதர்

D) ஆத்ரேயர்

விளக்கம்: கி.மு.(பொ.ஆ.மு) 8-ஆம் நூற்றாண்டில் ‘ஆத்ரேயர்’ என்ற மருத்துவர் வாழ்ந்தார். அவர், தமது சீடர்களுக்குத் தொகுத்தளித்த ஆய்வேடுகளில் ஆயுர்வேதம் பற்றிக் கூறுகின்றார்.

54) ‘அக்னி வேத தந்தரா’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) வாக்பட்டர்

B) சரகர்

C) சுசுருதர்

D) அக்னி வேசர்

விளக்கம்: அக்னி வேசர் எழுதிய ‘அக்னி வேச தந்தரா’ என்ற நூல் ‘ஆயுர்வேதம்’ பற்றிக் கூறுகின்றன. ஆத்ரேயர் ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றி வரிசையாக தம் ஆய்வேடுகளில் குறிப்பிடுகிறார்.

55) ‘இரசவாத முறை’ பற்றி அறிந்தவர்கள் யார்?

A) சரகர்

B) சுசுருதர்

C) சித்தர்கள்

D) ஆத்ரேயர்

விளக்கம்: உயரிய பண்பாடும், அறிவுத்திறனும், சிறந்த ஆற்றலுடனும் விளங்கிய சித்தர்களால் உருவாக்கப்பட்டது சித்த மருத்துவமாகும். இவர்கள் எல்லாவகை நோய்தீர்க்கும் மருந்துகளையும், தாதுக்களையும் வேதியியல் பொருள்களையும் ஆராய்ந்து பயனுள்ளவை எவை, பயனற்றவை எவை என்று கண்டறிந்துள்ளனர். பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட ஆயுள்பெற ‘இரசவாத முறையில்’ மருந்து தயாரிக்கும் முறையை அறிந்து வைத்திருந்தனர். இது தமிழ்நாட்டுக்கு உரித்தான மருத்துவ முறையாகும்.

56) கர்நாடக மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் ‘யஷகானம்’ நாட்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது?

A) கடப்பா

B) ரேணிகுண்டா

C) பெல்லாரி

D) சிமோசா

விளக்கம்: கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் குருங்கோடு என்றோர் இடமுள்ளது. அங்குள்ள சோமசுந்தர் ஆலயத்தில் இந்நாட்டியம் நாடகம் அரங்கேற்றப்பட்டதாக வரலாற்றுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை, உரையாடலோடு கூடிய இந்நடனத்தின் மூலம் இராமாயணம், மகாபாரத்தின் முக்கிய காட்சிகள், சமணக் கதைகள், மக்களின் ஆன்மிக நம்பிக்கைகள் போன்றவை விளக்கப்படுகின்றன.

57) பண்டைய கால மருத்துவமனைகள் மற்றும் அவை இருந்த இடங்களைப் பொருத்துக.

அ. ஆந்திரா – 1. திருப்புகலூர்

ஆ. தமிழ்நாடு – 2. கௌடியமடம்

இ. கர்நாடகா – 3. விஜயபுரி

A) 3.2, 1

B) 1, 3, 2

C) 3, 1, 2

D) 2, 3, 1

விளக்கம்: ஆந்திரா – விஜயாபுரி, நாகார்ஜுனா கொண்டா

தமிழ்நாடு – தஞ்சாவூர், திருமுக்கூடல், திரிபுராந்தகம், திருப்புகலூர், திருவரங்கம்.

கர்நாடகம் – கௌடிமடம்

58) கேரளாவில் அமையாத பண்டைய கால மருத்துவமனை எது?

A) ஆலப்பூர்

B) புலிமந்தாள்

C) வயந்தகரை

D) ஷிபாக்கனா மருத்துவமனை

விளக்கம்: பீகார் – ஷிபாக்கனா மருத்துமனை

கேரளா – ஆலப்பூர், புலிமந்தாள், வயங்கரை, வெள்ளோடு, சோட்டானிக்கரை, குருவாயூர்.

59) வட்டத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க உதவும் π-ன் உண்மையான மதிப்பைத் துல்லியமாக கூறியவர் யார்?

A) பிரம்மகுப்தர்

B) ஆரியபட்டர்

C) சரகர்

D) சித்தர்கள்

விளக்கம்: குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர், ஆரியபட்டீயத்தில், வட்டத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க உதவும் π-ன் உண்மையான மதிப்பை 3.1416 எனக் துல்லியமாகக் கூறியுள்ளார். மேலும், இலட்சம், கோடி என்ற மிகப்பெரிய சொற்களைக் சுருக்கமாகக் குறிப்பிடும் வகையை ‘ஆரியபட்டர்’ பயன்படுத்தினார்.

60) இயற்கணிதம் (Algebra) பயன்படுத்திய முதல் இந்தியர் யார்?

A) பிரம்ம குப்தர்

B) ஆரியபட்டர்

C) சரகர்

D) சுருசுருதர்

விளக்கம்: இயற்கணிதம் (Algebra) பயன்படுத்திய முதல் இந்தியர் ஆரியபட்டர். மேலும் π-3.1416 என்ற மதிப்பினையும் துல்லியமாகக் கணித்துள்ளார்.

61) பூஜ்யத்தின் (0) பயனை எடுத்துக்காட்டியவர் யார்?

A) பிரம்ம குப்தர்

B) ஆரியபட்டர்

C) சரகர்

D) சுசுருதர்

விளக்கம்: பிரம்மகுப்தர் ஆற்றிய மிகப்பெரிய பணி பூஜ்யத்தின்(0) பயனை எடுத்துக்காட்டியதாகும். இவர், குப்தர் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதையாவார்.

62) ‘சித்தாந்த சிரோன்மணி’ என்ற நூலை எழுதியவர் யார்?

A) பிரம்மகுப்தர்

B) சரகர்

C) சுசுருதர்

D) ஆரியபட்டர்

விளக்கம்: பிரம்மகுப்தர் எழுதிய நூல் ‘சித்தாந்த சிரோன்மணி’ ஆகும். இதில் எண்ணியல், எடை, கொள்ளளவு, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பரப்பு, கனஅளவு பற்றியும், பூஜ்யம், இயற்கணிதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

63) இந்திய இசையின் சாரமாகத் திகழ்வது எது?

A) ரிக் வேதம்

B) யஜுர் வேதம்

C) சாம வேதம்

D) அதர்வண வேதம்

விளக்கம்: இசை, மனித மனத்திற்கு அமைதி தருவதாகும். இசையானது காலத்திற்கு ஏற்றாற்போலப் பரிமாணத்தைப் பெற்று வருகிறது. இயற்கையினின்றே முதல் இசை தோன்றியது. இதனை ‘ஓசை’ என்றழைப்பர். அதன்பின்னர் இசை புதிய வளர்ச்சியைப் பெற்றது. இந்திய இசையின் சாரமாகத் திகழ்வது, சாமவேதமாகும்.

64) ‘இந்துஸ்தானி இசை’ எந்த வேதத்தை அடிப்படையாக் கொண்டு உருவானது?

A) ரிக் வேதம்

B) யஜுர் வேதம்

C) சாம வேதம்

D) அதர்வண வேதம்

விளக்கம்: பிற்காலத்தில் சாம வேதத்தைத் தழுவி, வட இந்தியாவில் தோன்றிய இசைப்பாணி, ‘இந்துஸ்தான் இசை’ (Hindustanic Music) எனப்பட்டது. அதே காலகட்டத்தில், தென்னிந்தியாவில் ‘கர்நாடக இசை’ (Karnatic Music) புகழ் பெறத் தொடங்கியது. மௌரியர்கள், குப்தர்கள் போன்ற வட இந்திய வம்சாவழி மன்னர்களும், தமிழகத்தில் சங்ககாலம் முதல் பிற்காலப் பாண்டியர்கள் வரையிலான மன்னர்களும், இசைக்கலையையும், இசைக்கலைஞர்களையும் ஆதரித்துள்ளனர்.

65) குவாலிஸ் இசையை உருவாக்கியவர் யார்?

A) இந்து

B) இஸ்லாமியம்

C) கிறிஸ்துவம்

D) சீக்கியம்

விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமியர்களின் இசை இந்தியாவில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. இஸ்லாமிய துறவிகளான சூபிக்கள், ‘குவாலிஸ்’ (Qualis Music) என்ற இசைமுறையை உருவாக்கிப் பரப்பினர்.

66) இந்தியா உலகிற்கு அளித்த கொடை என்ன?

A) தமிழிசை

B) கர்நாடக இசை

C) இந்துஸ்தானி இசை

D) அனைத்தும்

விளக்கம்: ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னர் மேற்கத்திய இசை (Western Music) இந்தியாவில், புகுத்தப்பட்டது. தமிழிசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவை இந்தியா உலகிற்கு அளித்த கொடைகளாகும்.

67) “தமிழிசை மூவர்” என வழங்கப்பட்டவர்களுள் பொருந்தாதவர் யார்?

A) முத்துத்தாண்டவர்

B) அருணாச்சலக் கவிராயர்

C) மாரிமுத்தாப்பிள்ளை

D) அண்ணாமலைச் செட்டியார்

விளக்கம்: முத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரும் ‘தமிழிசை மூவர்’ எனப்படுகின்றனர். ‘கிருதி’ எனப்படும் கீர்த்தனைகளை மையப்படுத்தித் தமிழ்ப் பாடல்களைச் சரணம், பல்லவி, அனுபல்லவி ஆகிய இசையம்சங்களுடன் இயற்றினர்.

68) ‘தமிழிசை மூவரின்’ தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு, எங்கு மணிமண்டபத்தை அமைத்துள்ளது?

A) சிதம்பரம்

B) சீர்காழி

C) மதுரை

D) சென்னை

விளக்கம்: முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரும் ‘தமிழிசை மூவர்’ எனப்படுகின்றனர். இவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு சீர்காழியில் மணிமண்டபத்தை அமைத்துள்ளது.

69) ‘பஞ்சமுக வாத்தியம்’ எதனால் செய்யப்பட்டிருக்கும்?

A) வெண்கலம்

B) இரும்பு

C) மரம்

D) தாமிரம்

விளக்கம்: பழங்காலத் தொன்மையான இசைக்கருவிகளுள் பஞ்சமுக வாத்தியமும் ஒன்று. இது வெண்கல வார்ப்பால் உருவாக்கப்பட்ட உயரமான குடமாகும். இதில் மூடப்பட்ட 5 வாய்கள இருக்கும். ஒவ்வொரு வாயிலில் இருந்தும் தனித்துவமான இசை வெளியாகும். இதுவே பஞ்சமுக வாத்தியமாகும்.

70) பஞ்சமுக வாத்தியம் எந்தக் கோயிலில் உள்ளது?

A) திருவாரூர் தியாகராஜர் கோயில்

B) தஞ்சை பெரிய கோயில்

C) வரதராஜ பெருமாள் கோயில்

D) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

விளக்கம்: பஞ்சமுக வாத்தியம் திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும், திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோயிலிலும் உள்ளது.

71) ‘பரத முனிவரால்’ உருவாக்கப்பட்ட கலை எது?

A) குச்சுப்புடி

B) மோகினி ஆட்டம்

C) கதக்களி

D) பரதநாட்டியம்

விளக்கம்: தமிழ்நாட்டுக்குரிய சிறந்த நடனங்களில் முக்கியமானது ‘பரதநாட்டியம்’. இது புராணவியல் அடிப்படையில் ‘பரதமுனிவரால்’ உருவாக்கப்பட்டதால், ‘பரதம்’ எனப் பெயர் பெற்றது. மிகத்தொன்மை வாய்ந்த இந்நடனம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்று விளங்குகிறது.

72) கர்நாடக இசையின் மூம்மூர்த்திகளில் பொருந்தாததைத் தேர்வு செய்க

A) தியாகராஜர்

B) சியாமா சாஸ்திரிகள்

C) முத்துசுவாமி தீட்சிதர்

D) முத்துத்தாண்டவர்

விளக்கம்: தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளாவர். இவர்களுடைய பாடல்கள் பரதநாட்டியத்திலும் ஆன்மிக இசை நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருவாரூரில், இவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

73) ‘பரதம்’ பற்றிய சரியானக் கூற்றைத் தேர்க

A) பரதம் என்ற சொல் ப-பாவம், ர-ராகம், த-தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகச் சொல்லப்படுகிறது

B) பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும்.

C) இவற்றுடன் (பாவம்+ராகம்+தாளம்) தாளம் சேர்ந்த நடனமே ‘பரதநாட்டியமாகும்’

D) அனைத்தும்

விளக்கம்: பரதம் என்ற சொல் ப-பாவம், ர-ராகம், த-தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகச் சொல்லப்படுகிறது

பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும்.

இவற்றுடன் (பாவம்+ராகம்+தாளம்) தாளம் சேர்ந்த நடனமே ‘பரதநாட்டியமாகும்’.

74) சிவபெருமான் ஆடிய ‘ருத்ரதாண்டவம்’ எதை வெளிப்படுத்துகிறது?

A) உவகை

B) காதல்

C) வேதனை

D) சினம்

விளக்கம்: வரலாற்று நோக்கில் இந்தியாவின் செவ்வியல் ஆடல் வகையில் ஒன்று பரத நாட்டியமாகும். இந்த நடனத்தை ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களே என்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ரதாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. இது சினத்தின் வெளிப்பாடாகும்.

75) பெண்கள் மென்மையான அசைவுகளுடன் ஆடும் நடனம் எது?

A) தாண்டவம்

B) ஆனந்ததாண்டவம்

C) ருத்ரதாண்டவம்

D) லஸ்யம்

விளக்கம்: சிவபெருமான் ஆடுவது – தாண்டவம்,

சிவபெருமான் மகிழ்ச்சியின் உச்சியில் ஆடுவது – ஆனந்த தாண்டவம் .

சிவபெருமான் அழிக்கும் கடவுளாக ஆடுவது – ருத்ரதாண்டவம்.

பெண்கள் மென்மையான அசைவுகளுடன் ஆடும் நடனம் – லாஸ்யம்.

76) ‘கதகளி’ எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும்?

A) கேரளா

B) தமிழ்நாடு

C) கர்நாடகா

D) ஆந்திரா

விளக்கம்: ‘கதகளி’ கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும். இந்நடனம், கேரள மக்களின் பண்பாட்டினை எடுத்துக்காட்டும் தெய்வீக நடனக் கலையாகும். கதகளி என்றால் ‘கதையை அடித்தளமாகக் கொண்டு ஆடுதல்’ என்று பொருள்.

77) ‘ஆட்டக்கதை’ எனப்படும் நடனம் எது?

A) பரதம்

B) கதகளி

C) குச்சுப்புடி

D) A மற்றும் B

விளக்கம்: கதகளிக்கு ‘ஆட்டக்கதை’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் சொல்லப்பட்ட சமயம் சார்ந்த நிகழ்வுகள், இந்த நடனத்திற்குக் கருப்பொருளாக அமைகின்றன.

78) ‘மோகினி ஆட்டம்’ எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

A) கேரளா

B) கர்நாடகா

C) ஆந்திரா

D) தமிழ்நாடு

விளக்கம்: ‘மோகினி ஆட்டம்’ கேரளாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று. மோகினி என்ற சொல், ஓர் அழகான பெண்ணென்றும், ஆட்டம் என்றால் நடனம் என்றும் பொருள்படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தைக் கொடுக்கும் திருமாலின் அவதாரமாக ‘மோகினி’ மையப்படுவதால் ‘மோகினியாட்டம்’ என்று பெயர் பெற்றது.

79) குச்சிப்புடி – எந்த மாநிலத்தில் உருவான நடனம்?

A) தமிழ்நாடு

B) குஜராத்

C) ஒடிசா

D) ஆந்திரா

விளக்கம்: ‘குச்சிப்புடி’ ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உருவான நடனமாகும். இப்பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலு;ள ‘குச்சிணபுரம்’ என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கிய இக்கலை இன்று இந்தியாவிலும் உலகளவிலும் ஆடப்பட்டு வருகிறது.

80) யஷகானம் – எந்த மாநிலத்தின் நடனம்?

A) கர்நாடகா

B) கேரளா

C) ஆந்திரா

D) தமிழ்நாடு

விளக்கம்: கர்நாடகத்தின் மாநில நடனமாகக் கருதப்படுவது யஷகானமாகும். கி.பி(பொ.ஆ) 16-ஆம் நூற்றாண்டு முதல் இந்நடனம் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.

81) சித்தர்கள் எத்தனைப் பேர்?

A) 16

B) 17

C) 18

D) 12

விளக்கம்: பதினெண் சித்தர்கள் திருமூலர், இடைக்காடர், போகர், அகத்தியர், பதஞ்சலி, தன்வந்திரி, மச்சமுனி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

82) ஒடிசி – எந்த மாநிலத்தின் நடனம்?

A) கர்நாடகா

B) ஆந்திரா

C) கேரளா

D) ஒடிசா

விளக்கம்: ஒடிஸா மாநிலத்தின் பாரம்பரிய நடனம் ஒடிசி. இது கோயில்களில் நடைபெற்று வந்த ஒரு பாரம்பரிய நடனக்கலையாகும். 17-ஆம் நூற்றாண்டில் ‘கோட்டிப்புகழ்’ எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தை பெண்ணுடை தரிசித்து கோயில்களில் ஆடினார்.

83) குஜராத்தின் பாரம்பரிய நடனம் எது?

A) கர்பா

B) தாண்டியா

C) கார்

D) A மற்றும் B

விளக்கம்: குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனங்கள் கர்பா மற்றும் தாண்டியாவாகும். இவை நவராத்திரி விழாவின்போது, கலாச்சார உடையணிந்து ஆடி மகிழும் நடனங்களாகும். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் நவராத்திரி திருவிழா நடனங்களைக் காண பலரும் நம் பாரத திருநாட்டிற்கு வருகை புரிகின்றனர்.

84) பொருத்துக.

அ. பீகார் – 1. பிதஸி நடனம்

ஆ. மேற்கு வங்காளம் – 2. காத், ஜாத் நடனங்கள்

இ. மகாராஷ்டிரா – 3. தமாஸா, லாவனி நடனங்கள்

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 2, 3

D) 2, 3, 1

விளக்கம்: பீகார் – பிதஸிநடனம்

மேற்கு வங்காளம் – காத், ஜாத் நடனங்கள்

மகாராஷ்டிரா – தமாஸா, லாவனி நடனங்கள்

இவை உலகிற்கு இந்தியாவின் பண்பாட்டை எடுத்தியம்புகின்றன.

85) இந்தியாவில் ஓவியக்கலை எதை மையமாக வைத்து தோற்றுவிக்கப்பட்டது?

A) அரசன்

B) சமூகம்

C) இயற்கை

D) கற்பனை

விளக்கம்: இந்தியாவில் ஓவியக்கலை இயற்கையை மையமாக வைத்து தோற்றுவிக்கப்பட்து. பழங்கால மனிதர்கள் இயற்கையின் அம்சங்களான மேகம், மழை, மரங்கள், விலங்குகள் மனித உருவங்கள் போன்றவற்றைக் குகைகளிலும், இறந்த விலங்குகளின் தோல்களிலும் வரைந்தனர்.

86) தொடக்க காலத்தில் ஓவியம் வரைய பயன்படுத்தப்பட்ட பொருள் எது?

A) வட்டி

B) தூரிகை

C) மணல்

D) கரித்துண்டு

விளக்கம்: கரித்துண்டுகளைத் தொடக்க காலத்தில் ஒவியம் வரைய பயன்படுத்தினர். பிற்காலத்தில் மன்னர்கள் ஆட்சி நடைபெற்றபோது ஓவியங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றன. இவர்களின் காலத்தில் கோயில்களின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. வண்ணத் தூரிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

87) ‘தட்சிணசித்திரம்’ என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதியவர் யார்?

A) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

B) சேரன் செங்குட்டுவன்

C) கரிகாலச் சோழன்

D) எவருமில்லை

விளக்கம்: பல்லவ மன்னான முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக்கலைக்கு பேராதரவு தந்தார். ‘தட்சிணசித்திரம்’ என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதினார். இவர், இக்கலையில் வல்லவராதலால் ‘சித்திரகாரப்புலி’ என்ற விருதினைப் பெற்றார்.

88) காலத்திற்கேற்றார்போல ‘நமது நாட்டில்’ எத்தனை ஓவிய பாணிகள் தோன்றி வளர்ந்தன?

A) 4

B) 5

C) 3

D) 2

விளக்கம்: காலத்திற்கேற்றார்போல் நமது நாட்டில் பல்வேறு ஓவிய பாணிகள் தோன்றி வளர்ந்தன. அவையாவன,

1. மதுபாணி ஓவியங்கள்

2. இராஜபுதன ஓவியங்கள்

3. தஞ்சாவூர் ஓவியங்கள்

4. முகலாய ஓவியங்கள்

5. பசோஹ்லி ஓவியங்கள்

89) இராமாயணத்தின் முக்கிய காட்சிகள் எவ்வகை ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன?

A) மதுபாணி ஓவியங்கள்

B) இராஜபுதன ஓவியபாணி

C) தஞ்சாவூர் ஓவியங்கள்

D) முகலாய ஓவியங்கள்

விளக்கம்: பீகார் – நேபாள எல்லையில் உள்ள மதுபாணி என்ற மாவட்டத்தில் இவ்வோவியக்கலை தோன்றியதால் ‘மதுபாணி ஓவியங்கள்’ எனப் பெயர் பெற்றது. நன்கு மெழுகப்பட்ட மண்சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் அதிகமாக வரையப்பட்டன. தாவர இலைகளிலிருந்து பெறப்படும் ஒருவகைச்சாறு நிறம்தரும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இராமாயணத்தின் முக்கியக் காட்சிகள் இவ்வகை ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன.

90) எந்த ஓவியங்கள் சிற்றோவியங்கள் என்று அழைக்கப்பட்டன?

A) மதுபாணி ஓவியங்கள்

B) இராஜபுதன ஓவியபாணி

C) தஞ்சாவூர் ஓவியங்கள்

D) முகலாய ஓவியங்கள்

விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 18-ஆம் நூற்றாண்டில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசப் பகுதிகளில் தோன்றி வளர்ச்சி பெற்ற ஓவியங்களே இராஜபுதன ஓவியங்களாகும். இந்த ஓவியங்கள் சிற்றோவியங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் அரண்மனை மற்றும் கோட்டை சுவர்களில் வரையப்பட்டன.

91) அரசன், அரசவை, தொழில், போர் முறைகள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்ட ஓவியப்பாணி எது?

A) மதுபாணி ஓவியங்கள்

B) இராஜபுதன ஓவியபாணி

C) தஞ்சாவூர் ஓவியங்கள்

D) முகலாய ஓவியங்கள்

விளக்கம்: அரசன், அரசவை நிகழ்வுகள் மக்களின் தொழில் அரசனின் போர் முறைகள் போன்றவை இவ்வோவிய உருவாக்கத்தின் கருப்பொருளாக அமைந்தன. இவ்வோவியம் வரைவதற்கான நிறங்கள் தாவரங்களின் சாறு, சிப்பி போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. சிறிய வகை வண்ணத்தூரிகைகள் இவ்வோவியம் வரைய பயன்படுத்தப்பட்டன.

92) தஞ்சாவூர் ஓவியங்கள் யாருடைய காலத்தில் புகழ் பெற்றன?

A) மராட்டியர்கள்

B) சாளுக்கியர்கள்

C) சந்தேலர்கள்

D) இராஷ்டிரகூடர்கள்

விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 17-ஆம் நூற்றாண்டின் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் வளர்ந்த இவ்வகை ஓவியங்கள் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் மராட்டியர்கள் காலத்தில் புகழ்பெற்றன. தஞ்சை மராட்டிய மன்னரான ‘சரபோஜி’ காலத்தில் ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு குடியயேறிய ‘மூச்சி’ என்ற பெயர் கொண்ட ஓவியக்கலைஞர்கள் பரம்பரைத் தொழிலாகவே இவ்வோவியத்தை வரைந்தனர்.

93) தஞ்சாவூர் ஓவியப் பாணியில் ஓவியங்களின் பின்புல வண்ணம் என்ன?

A) கரும்பச்சை

B) அடர்நீலம்

C) ஒளிர் சிவப்பு

D) அனைத்தும்

விளக்கம்: தஞ்சாவூர் ‘மூச்சி’ ஓவியர்கள், புராணங்களில் கூறப்படும் கடவுளரின் உருவங்களை ஓவியமாகத் தீட்டினர். இவ்வகை ஓவியங்களின் பின்புல வண்ணம் கரும்பச்சை, அடர்நீலம, ; ஒளிர்சிவப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

94) முகலாய ஓவியப் பாணி எக்காலக்கட்டத்தில் தோன்றியது?

A) கி.பி.16 ஆம் நூற்றாண்டு

B) கி.பி. 17 ஆம் நூற்றாண்

C) கி.பி. 18 ஆம் நூற்றாண்டு

D) கி.பி 19 ஆம் நூற்றாண்டு

விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 16-ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் தோன்றி வளர்ந்த ஓவியங்கள் இவ்வகை ஓவியங்களாகும். முகலாய மன்னரான ஹ{மாயூன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பாரசீக பாணியிலான ஓவியங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின. முகலாயர் கால ஓவியர்கள் பாரசீக பாணியில் ஓவியங்களை வரையத் தொடங்கி இந்திய ஓவியப் பாணியையும் அதனோடு இணைத்தனர்.

95) பாரசீக இந்திய ஓவியப் பாணிகளின் இணைப்பாக அமைந்த ஓவியப் பாணி எது?

A) பாசோஹ்லி ஓவியப்பாணி

B) தஞ்சாவூர் ஓவியப்பாணி

C) மதுபாணி ஓவியப்பாணி

D) முகலாய ஓவியப்பாணி

விளக்கம்: முகலாய மன்னரான ஹீமாயூன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பாரசீக பாணியிலான ஓவியங்கள் வளர்ச்சிப் பெறத் துவங்கின. முகலாயர் கால ஓவியர்கள் பாரசீக பாணியில் ஓவியங்களை வரையத் தொடங்கி இந்திய ஓவியப் பாணியையும் அதனோடு இணைந்தனர். எனவே பாரசீக இந்திய ஓவியப் பாணிகளின் இணைப்பாக முகலாய ஓவியப் பாணி அமைந்தது.

96) எந்த முகலாய மன்னர் சிறந்த ஓவியராக விளங்கினர்?

A) ஒளரங்கசீப்

B) ஹீமாயூன்

C) ஷாஜகான்

D) ஜஹாங்கீர்

விளக்கம்: முகலாய மன்னரான ஜஹாங்கீர் ஓவியக்கலைக்கு முக்கியத்துவம் தந்ததுடன் சிறந்த ஓவியராகவும் விளங்கினர். முகலாய கால ஓவியங்களில் அரசர், அரசியர், அரண்மனைக் கொண்டாட்டங்கள், அரசவை நிகழ்வுகள், இயற்கை காட்சிகள், இளவரசர் மற்றும் இளவரசியர் ஆகியோரின் வீரச்செயல்கள் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.

97) பசோஹ்லி ஓவியப்பாணி எந்த நதிக்கரையில் தோன்றி வளர்ச்சிப் பெற்றது?

A) ராவி நதிக்கரை

B) கங்கை நதிக்கரை

C) சிந்து நதிக்கரை

D) பிரம்மபுத்திரா நதிக்கரை

விளக்கம்: கி.பி.(பொ.ஆ) 17-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள ‘பசோஹ்லி’ என்ற இடத்தில் தோன்றி வளர்ந்த ஓவியக்கலையே “பசோஹ்லி ஓவியக்கலைப்பாணி” ஆகும்.

98) எவ்வகை ஓவியங்களில் புராணங்களில் குறிப்பிடப்பட்ட கடவுளர்களின் உருவம் முக்கியத்துவம் பெற்றது?

A) மதுபானி ஓவியப் பாணி

B) தஞ்சாவூர் ஓவியப்பாணி

C) முகலாய ஓவியப்பாணி

D) பசோஹ்லி ஓவியப்பாணி

விளக்கம்: பசோஹ்லி வகை ஓவியங்களில் புராணங்களில் குறிப்பிடப்பட்ட கடவுளர்களின் உருவம் முக்கியத்துவம் பெற்றது. இவ்வாறு, இந்திய வரலாற்றில் ஓவியங்கள், இயற்கையையும், கடவுளையும் அரசர்களையும், அரசவை நிகழ்ச்சிகளையும் உலகிற்கு உணர்த்துகின்றன.

99) எந்த நாட்டில் உள்ள ‘சிகிரியா’ என்ற இடத்திலுள்ள ஓவியங்களில் இந்திய ஓவியக் சாயல் காணப்படுகிறது?

A) நேபாள்

B) பூடான்

C) இலங்கை

D) மியான்மர்

விளக்கம்: அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் இந்திய ஓவியத்தின் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன. இலங்கை நாட்டில் ;’சிரியர்’, ‘சிகிரியா’ என்ற இடத்திலுள்ள ஓவியங்களில் இந்திய ஓவியங்களின் சாயல்கள் காணப்படுகின்றன.

100) கூற்றுகளை ஆராய்க

1. சிற்பம் எனப்படுவது, ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள்

2. சிற்பம் எனப்படுவது ஒரு இரு பரிமாணக் கலைப்பொருள்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சிற்பம் எனப்படுவது, ஒரு முப்பரிமாணக் கலைப் பொருளாகும். இது கடினமாக அல்லது நெகிழ்வுத் தன்மையுள்ள பொருள்களுக்கு உருவம் கொடுப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பியென அழைக்கப்படுகிறார்.

101) கூற்றுகளை ஆராய்க

1. சிற்பக்கலையின் வாயிலான இந்தியாவின் தொன்மை வரலாற்றையும் மக்களின் பண்பாட்டையும் அறிந்து கொள்ள முடிகிறது.

2. சிற்பக்கலையைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தொல்பொருள் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் முதலியன சான்றுகளாக உள்ளன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சிற்பக்கலையின் வாயிலான இந்தியாவின் தொன்மை வரலாற்றையும் மக்களின் பண்பாட்டையும் அறிந்து கொள்ள முடிகிறது.

2. சிற்பக்கலையைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் தொல்பொருள் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் முதலியன சான்றுகளாக உள்ளன.

102) ஆதிச்சநல்லூர் எங்குள்ளது?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) நாகப்பட்டினம்

D) புதுக்கோட்டை

விளக்கம்: திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தாய்க்கடவுளின் செப்புத் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பழந்தமிழகத்தில் உலோகத் திருமேனிகள் இருந்தன என்பதை எடுத்தியம்புகின்றன.

103) வெண்கலத்தில் செய்யப்பட்ட நடனமாதுவின் உருவச்சிற்பம் எங்கு கண்டெடுக்கப்பட்டது?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) ஆதிச்சநல்லூர்

D) கீழடி

விளக்கம்: மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்யப்பட்ட நடனமாதுவின் உருவச்சிற்பம், நமக்குச் சிந்துவெளி மக்களின் சிற்பக்கலையைப் பறைசாற்றுகின்றன.

104) இந்தியாவில் பௌத்த சிற்பக்கலை, யாருடைய ஆட்சியில் துவங்கியது?

A) குப்தர்

B) மௌரியர்

C) பாலர்

D) சமணர்

விளக்கம்: இந்தியாவில் பௌத்த சிற்பக்கலை கி.மு.(பொ.ஆ.மு) 3-ஆம் நூற்றாண்டில், மௌரியர் ஆட்சியில் தொடங்கி கி.பி(பொ.ஆ). 12-ஆம் நூற்றாண்டில் பீகார், வங்களாத்தை ஆண்ட பாலர், சேனர் ஆட்சிவரை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இதைத் தவிர பௌத்த சமய கலைக்கூறுகள், ஜாவா, தாய்லாந்து, இலங்கை, சீனா, ஜப்பான், கொரியா, பர்மா, திபெத், நேபாளம் போன்ற ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளன.

105) பௌத்த சமயத்தோடு தொடர்புடைய நாடுகளை அங்குள்ள கட்டடங்களுடன் பொருத்துக.

அ. ஜாவா – 1. பாப்ச்சுசா

ஆ. இலங்கை – 2. அனுராதபுரம், பொலனருவா

இ. கொரியா – 3. போரோபுதூரிலுள்ள ஸ்தூபி

A) 3, 2, 1

B) 1, 3, 2

C) 2, 1, 3

D) 3, 1, 2

விளக்கம்: ஜாவா – போரோபுதூரில் உள்ள ஸ்தூபி

இலங்கை – அனுராதபுரம், பொலனருவா

கொரியா – பாப்ச்சுசா

106) பௌத்த சமயத்தோடு தொடர்புடைய நாடுகளை அங்குள்ள கட்டடங்களுடன் பொருத்துக.

அ. சீனா – 1. பகானின் ஆனந்த கோயில்

ஆ. பர்மா – 2. பதானில் உள்ள தங்க விகாரம்

இ. நேபாளம் – 3. உலகிலேயே மிகப்பெரிய செப்புத் திருமேனி

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 3, 1, 2

D) 1, 3, 2

விளக்கம்: சீனா – உலகிலேயே மிகப்பெரிய செப்புத் திருமேனி.

பர்மா – பகானின் ஆனந்த கோயில்

நேபாளம் – பதானில் உள்ள தங்க விகாரம்.

107) யார் லிங்க வழிபாடடை மேற்கொண்டனர்?

A) குஷாணர்

B) குப்தர்

C) மௌரியர்

D) சந்தேலர்

விளக்கம்: குஷாணர் காலத்தில், லிங்கவழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும், நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் கொண்டிருந்தனர்.

108) சிற்பக்கலையின் வியத்தகு வளர்ச்சியினை யார் காலத்தின் சிற்பங்கள் மூலம் அறியலாம்?

A) குஷாணர்

B) குப்தர்

C) மௌரியர்

D) சந்தேலர்

விளக்கம்: இந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் வியத்தகு வளர்ச்சியினை குப்தர்கள் கால சிற்பங்களின் மூலம் நாம் அறியலாம்.

109) பொருத்துக.

அ. மதுரா – 1.திருமால் சிற்பம்

ஆ. தியோகர் – 2. புத்தர் சிற்பம்

இ. வடமதுரா – 3.விஷ்ணு கற்கோயில்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 2, 1, 3

D) 1, 3, 2

விளக்கம்: சாரநாத், மதுரா – புத்தருக்கு சிலை

தியோகர் – விஷ்ணுவிற்குக் கற்கோயில்

வடமதுரா – திருமால் சிற்பம்

110) குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புராணக்கதைகள் கூறும் ‘சுடுமண் சிற்பங்கள்’ எங்குள்ளன?

A) பித்தார்கான் கோயில்

B) தசாவதாரக் கோயில்

C) உதயகிரி குகைக்கோயில்

D) தியோகர் விஷ்ணு கோயில்

விளக்கம்: உதயகிரி குகைவாயிலில் உள்ள திருமாலின் வராக அவதார புடைப்புச் சிற்பம், பித்தார்கோன்கோயிலில் காணப்படும் புராணக்கதைகள் கூறும் சுடுமண் சிற்பங்கள், தசாவதராக் கோயிலின் நுழைவாயிலில் இருபுறமும் உள்ள, கங்கை, யமுனை சிற்பங்கள் போன்றவை குப்தர் கால சிற்பங்களுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

111) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழ்நாடு, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் “தொன்மைப் பாதுகாப்புமன்றம்” தொடங்கப்பட்டுள்ளது.

2. இம்மன்றம் நம் பண்பாட்டு அடையாளத்தையும், பாரம்பரியத்தையும், தொன்மையையும் பாதுகாத்து வருகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: தமிழ்நாடு, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் “தொன்மைப் பாதுகாப்புமன்றம்” தொடங்கப்பட்டுள்ளது.

இம்மன்றம் நம் பண்பாட்டு அடையாளத்தையும், பாரம்பரியத்தையும், தொன்மையையும் பாதுகாத்து வருகிறது.

112) கூற்றுகளை ஆராய்க

1. இராஷ்டிரகூடர் காலசிற்பங்கள் புகழ்பெற்றவையாகும்.

2. எல்லோரா, எலிபெண்டா குகைகளில் காணப்படும் பைரவர், கைலாயமலையை இராவணன் தூக்கும் காட்சி, நடனமாடும் சிவபெருமான், பாடல் கேட்டு மகிழும் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிற்பங்கள் இந்திய சிற்பக்கலையின் மேன்மையைப் போற்றுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. இராஷ்டிரகூடர் காலச்சிற்பங்கள் புகழ்பெற்றவையாகும்.

எல்லோரா, எலிபெண்டா குகைகளில் காணப்படும், பைரவர், கைலாயமலையை இராவணன் தூக்கும் காட்சி, நடனமாடும் சிவபெருமான், பாடல் கேட்டு மகிழும் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிற்பங்;கள் இந்திய சிற்பக்கலையின் மேன்மையைப் போற்றுகின்றன.

113) ஒடிசா மாநிலத்தின் தலைநகர் எது?

A) பூரி

B) ரிட்லி

C) புவனேஸ்வர்

D) கலிங்கம்

விளக்கம்: ஒடிசா மாநிலத்தின் தலைநர் புவனேஸ்வர். இது ஒடிசாவின் ‘கோயில் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.

114) “லிங்கராஜா கோயில்” எங்குள்ளது?

A) கர்நாடகா

B) மத்தியப்பிரதேசம்

C) ஒடிசா

D) கோவா

விளக்கம்: ‘லிங்கராஜா கோயில்’, ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் கி.பி(பொ.ஆ) 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். அனந்தவர்மன் காலத்தில் இக்கோயில் கட்டுதவற்கான நிலம் கொடையாக வழங்கப்பட்டது. இக்கோயிலின் வழிபாட்டுக்கூடம் “ஜெக்மோகனா” என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள புவனேஸ்வரர் நகரம், ஒடிசாவின் ‘கோயில் நகரம்’ என்று அழைக்கபபடுகிறது.

115) சரியான கூற்றைத் தெரிவு செய்க

A) மனித நாகரிக வளர்ச்சியின் சிறப்பு கூறுகளில் ஒன்று கட்டடக்கலை. மனித இனத்தின் பண்பாட்டினை அவ்வினத்தின் கலையமைப்பினைக் கொண்டே கணக்கிடலாம்.

B) கட்டக்கலை சின்னங்களே மனித இனத்தின் பல்வேறு கலை வளர்ச்சினை எடுத்துக்காட்டுகின்றன

C) இந்தியக் கட்டடக்கலையானது, பெரும்பாலும் அந்தந்தப்பகுதிகளை சார்ந்த சமூக பண்பாட்டின் வெளிப்பாடாக அமைந்துள்ளது

D) அனைத்தும் சரி

விளக்கம்: மனித நாகரிக வளர்ச்சியின் சிறப்பு கூறுகளில் ஒன்று கட்டடக்கலை. மனித இனத்தின் பண்பாட்டினை அவ்வினத்தின் கலையமைப்பினைக் கொண்டே கணக்கிடலாம்.

கட்டக்கலை சின்னங்களே மனித இனத்தின் பல்வேறு கலை வளர்ச்சினை எடுத்துக்காட்டுகின்றன

இந்தியக் கட்டடக்கலையானது, பெரும்பாலும் அந்தந்தப்பகுதிகளை சார்ந்த சமூக பண்பாட்டின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

116) பொதுவாக இந்தியக் கட்டடக்கலை எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பொதுவாக இந்தியக் கட்டடக்கலை வடஇந்தியக் கட்டக் கலை, தென் இந்தியக் கட்டக்கலை என்று பிரிக்கப்படுகிறது. இந்த இரு கட்டடக் கலைகளுக்கு இடையில் பல்வேறு விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியக் கட்டடக்கலையின் சிறப்பம்சம் உயர்கோபுரங்களும், சிற்பங்களும், மண்டபங்களும், தூண்களுமேயாகும். இச்சிறப்புமிக்க கோயில் கட்டமைப்புகள் திடீரென வந்தவை அல்ல. இவை சுமார் 1500 ஆண்டுகாலம் சிறிது சிறிதாக முன்னேறி வந்துள்ளன.

117) இந்தியக் கட்டடக்கலை வளரச்சிக்கு முதலில் வித்திட்டவர்கள் யார்?

A) பௌத்தர்கள்

B) சமணர்கள்

C) சீக்கியர்கள்

D) A மற்றும் B

விளக்கம்: இந்தியக்கட்டக்கலை வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர்கள் பௌத்தர்களும், சமணர்களும் ஆவர். மௌரியர்கள் இந்தியாவில் பௌத்த கட்டடக்கலையைத் தொடங்கி வைத்தனர். பின்னர் வந்த குப்தர்களும் சமயம் சார்ந்த கோயில்களை வளர்த்தனர்.

118) தமிழகத்தில் கட்டக்கலைப் பணியை துவங்கியவர்கள் யார்?

A) பல்லவர்கள்

B) சேரர்

C) சோழர்

D) பாண்டியர்கள்

விளக்கம்: இந்தியக்கட்டக்கலை வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர்கள் பௌத்தர்களும், சமணர்களும் ஆவர். மௌரியர்கள் இந்தியாவில் பௌத்த கட்டடக்கலையைத் தொடங்கி வைத்தனர். பின்னர் வந்த குப்தர்களும் சமயம் சார்ந்த கோயில்களை வளர்த்தனர். தமிழகத்தில் இப்பணியைத் தொடங்கியவர்கள் பல்லவர்களேயாவர்.

119) சரியானக் கூற்றை தேர்வு செய்க

A) ஒரு நாட்டின் கலை மற்றும் பண்பாடு அச்சமூகத்தினை வெளிப்படுத்தும் சிறந்த கருவியாகும்.

B) கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், பண்பாட்டு ஊடகமாகவும் திகழ்கின்றது.

C) கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடாகும்

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஒரு நாட்டின் கலை மற்றும் பண்பாடு அச்சமூகத்தினை வெளிப்படுத்தும் சிறந்த கருவியாகும்.

கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், பண்பாட்டு ஊடகமாகவும் திகழ்கின்றது.

கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

120) சரியானக் கூற்றை தெரிவு செய்க.

A) நாட்டுப்புறக்கலைகள் நமது வாழ்வியலோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்துபவை.

B) கலை, சமூக வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சிறந்த கருவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

C) நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகளின் வாயிலாக அறிய முடிகிறது.

D) அனைத்தும் சரி

விளக்கம்: நாட்டுப்புறக்கலைகள் நமது வாழ்வியலோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்துபவை.

கலை, சமூக வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சிறந்த கருவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகளின் வாயிலாக அறிய முடிகிறது.

121) கூற்றுகளை ஆராய்க

1. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து கரகாட்டம், காவடியாட்டம், அலகு குத்துயாடுதல் போன்ற கலைகள் சென்றன.

2. தமிழகத்திலிருந்தே தைப்பூசம், பொங்கல் போன்ற பண்பாட்டு பண்டிகைகளும் அங்குச் சென்று அங்குள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு தமிழகத்திலிருந்தே கரகாட்டம், காவடியாட்டம், அலகு குத்தியாடுதல் போன்ற கலைகள் சென்றன.

தமிழகத்திலிருந்தே தைப்பூசம், பொங்கல் போன்ற பண்பாடு பண்டிகைகளும் அங்குச் சென்று, அங்குள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன.

122) கூற்றுகளை ஆராய்க

1. உலகிற்கு இந்தியா வழங்கிய கொடைகள் அளப்பரியன. உலக அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், ஊன்றுகோலாய் அமைந்தது. மேலும், இது பல கொடைகளை வழங்கியுள்ளது.

2. நறுமணப் பொருள்களான மஞ்சள் ஏலக்காய், சந்தனம், கிராம்பு போன்ற பொருள்ளையும் மருத்துவப் பொருட்களையும் கண்டறிந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உலகிற்கு இந்தியா வழங்கிய கொடைகள் அளப்பரியன. உலக அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், ஊன்றுகோலாய் அமைந்தது. மேலும், இது பல கொடைகளை வழங்கியுள்ளது.

2. நறுமணப் பொருள்களான மஞ்சள், ஏலக்காய், சந்தனம், கிராம்பு போன்ற பொருள்ளையும் மருத்துவப் பொருட்களையும் கண்டறிந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

123) கூற்றுகளை ஆராய்க

1. ஜனநாயக முறைப்படி, தேர்தலை நடத்திப் பெருமை பெற்றுள்ள இந்தியா, பிறநாடுகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

2. சோழர்காலத்தில் ஜனநாயக முறைப்படி “குடவோலை தேர்தல் முறை” நடைபெற்றுள்ளதை உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. இது இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஜனநாயக முறைப்படி, தேர்தலை நடத்திப் பெருமை பெற்றுள்ள இந்தியா, பிறநாடுகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

2. சோழர்காலத்தில் ஜனநாயக முறைப்படி “குடவோலை தேர்தல் முறை” நடைபெற்றுள்ளதை உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. இது இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

124) கூற்றுகளை ஆராய்க

1. அறிவியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்களைப் கொண்டது “இந்தியா” ஆகும்

2. சர்.சி.வி.இராமன், ஹர்கோவிந்தகொரானா, சுப்பிரமணியம் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மருத்துவம் மற்றும் அறிவியலிலும், இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திலும், அமர்த்தியாசென் பொருளாதாரத்திலும், அன்னை தெரசாவுக்கு அமைதிக்காகவும் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்குப் புகழ் சேர்த்தனர்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: அறிவியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்களைக் கொண்டது “இந்தியா” ஆகும்.

சர்.சி.வி.இராமன், ஹர்கோவிந்தகொரனா, சுப்ரமணியம் சந்திரசேகர், வெங்கடராமன் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மருத்துவம் மற்றும் அறிவியலிலும், இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திலும், அமர்த்தியாசென் பொருளாதாரத்திலும், அன்னை தெரசாவுக்கு அமைதிக்காகவும் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்குப் புகழ் சேர்த்தனர்.

125) பொருத்துக

அ. ஜெகதீஸ்சந்திரபோஸ் – 1. இசை

ஆ. சீனிவாச இராமனுஜம் – 2. விளையாட்டு

இ. ஏ.ஆர் ரஹ்மான் – 3. பூஜ்யம்

ஈ. விஸ்வநாதன் ஆனந்த் – 4. தாவரவியல்

A) 4, 3, 2, 1

B) 4, 3, 1, 2

C) 4, 1, 2, 3

D) 3, 4, 1, 2

விளக்கம்: தாவரவியலில் ஜெகதீஸ்சந்திரபோஸ்-ம், பூஜ்ஜியத்தின் மதிப்பைப் பரப்பிய சீனிவாச இராமானுஜமும். இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானும், விளையாட்டுத் துறையில் (சதுரங்கம்) விஸ்வநாதன் ஆனந்த்-ம் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!