குடிமக்களும் குடியுரிமையும் Book Back Questions 8th Social Science Lesson 18
8th Social Science Lesson 18
18] குடிமக்களும் குடியுரிமையும்
Book Back Questions with Answer and Do You Know Box Content
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.
முன்னுரிமை வரிசைப்படி குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார்.
நாட்டுரிமை மற்றும் குடியுரிமை: பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை எனப்படும். சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது குடியுரிமை எனப்படும். ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியாது. ஆனால் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டு வகையினராக நாம் அழைக்கின்றோம் அவை:
1. அந்நியர் (Alien): ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர். உதாரணம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்.
2. குடியேறியவர் (Immigrant): ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்): இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பினை பெறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த தினமான ஜனவரி 9ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
(அ) பிறப்பின் மூலம்
(ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
(இ) வம்சாவழியின் மூலம்
(ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
2. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
(அ) பகுதி II
(ஆ) பகுதி II பிரிவு 5-11
(இ) பகுதி II பிரிவு 5-6
(ஈ) பகுதி I பிரிவு 5-11
3. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
(அ) பிரதமர்
(ஆ) குடியரசுத் தலைவர்
(இ) முதலமைச்சர்
(ஈ) இந்திய தலைமை நீதிபதி
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ஒரு நாட்டின் ___________ அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகைளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ___________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
3. இந்தியக் கடவுச் சீட்டினைப்பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ___________ என அழைக்கப்படுகிறார்.
4. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ___________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
5. __________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
2. வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.
3. அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசிலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.
4. நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.
பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:
1. ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும்போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
(அ) i மற்றும் ii சரி
(ஆ) i மற்றும் iii சரி
(இ) i, ii, iv சரி
(ஈ) i, ii, iii சரி
2. கூற்று: 1962ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம்: 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.
(அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
(ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
(இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
(ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)
1. சொத்துரிமை பெறுவதன் மூலம் 2. பகுதி ii பிரிவு 5 – 11 3. குடியரசுத் தலைவர்
கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)
1. குடிமகன் 2. ஒற்றை 3. NRI வெளிநாட்டுவாழ் இந்தியர் 4. கடமைகள்
5. உலகளாவிய குடியுரிமை
சரியா / தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)
1. தவறு
2. தவறு
3. சரி
4. தவறு
பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)
1. i மற்றும் iii சரி
2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.