MCQ Questions

பணவியல் பொருளியல் 12th Economics Lesson 5 Questions in Tamil

12th Economics Lesson 5 Questions in Tamil

5] பணவியல் பொருளியல்

பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திரும்பச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக் கருவி

A) நிலம்

B) வாரம்

C) பணம்

D) கூலி

(குறிப்பு: பொது இடையீட்டுக் கருவி என்பது பல்வேறு பரிமாணங்களில் அனைவராலும் தயக்கமின்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று ஆகும். உலக நாடுகளில் அண்மைக்காலமாக கடனின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. காசோலைகள், மாற்றுச் சீட்டுகள் போன்ற கடன் கருவிகள் அதற்காக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், பணமே அனைத்து கடன்களுக்கான அடிப்படை ஆகும்.)

“பணம் எதைச் செய்கிறதோ, அதுதான் பணம்” என்பது யாருடைய கூற்று

A) சாமுவேல்சன்

B) வாக்கர்

C) கிரௌதர்

D) மில்டன் பிரெடுமேன்

“பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக் கருவியாகவும், மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்.” என்று கூறியவர்

A) இர்விங் பிஷர்

B) கோல்பர்ன்

C) கிரிகெரி

D) கிரௌதர்

பண்டமாற்று முறையின் வரலாறு______________இல் துவங்கியது.

A) 3000 BC

B) 5000 BC

C) 6000 BC

D) 7000 BC

(குறிப்பு: பிறரிடம் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறும் பொருட்டு, தங்களிடம் உள்ள பொருட்களை அல்லது பணிகளை மாற்றாக வழங்குவது பண்டமாற்று முறையாகும்.)

பண்டமாற்று முறையை கடல் கடந்து பல்வேறு நகரங்களில் பயன்படுத்தியவர்கள்

A) மெசபடோமியர்கள்

B) போயனீசியர்கள்

C) பாபிலோனியர்கள

D) ஆங்கிலேயர்கள்

(குறிப்பு:

மெசபடோமியா பழங்குடியினரால் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது.

பாபிலோனியர்கள் பொருட்களுக்குப் பொருட்களை மாற்றும் பண்டமாற்று முறையை பயன்படுத்தினர்.)

பண்டமாற்று முறை மற்றும் பண்டப் பணமுறைக்கு பின் தோன்றிய நவீன பண முறைகளில் முதன்மையானது

A) உலோகப் பணத்திட்டம்

B) காகிதப் பணத்திட்டம்

C) நெகிழிப் பணம்

D) மெய்நிகர்ப் பணம்

(குறிப்பு: உலோகத் திட்டத்தில் தங்கம், வெள்ளி போன்ற ஏதாவது ஒரு உலோகம் பணத்தின் திட்ட மதிப்பினை நிர்ணயிக்க பயன்படுத்தப்பட்டது.)

கூற்று 1: உலோக நாணயங்கள் முழு மதிப்பு பணமாக அல்லது முழு நிறையுடைய சட்டமுறை பணமாக இருந்து வந்தன.

கூற்று 2: உலோக நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமற்றதாக இருந்தன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: உலோக நாணயங்களில் முக மதிப்பு மற்றும் உள்ளடக்க மதிப்பு ஆகிய இரண்டும் சமமாக இருந்தன.)

___________ திட்டத்தில் ஒரு பணத்தின் அலகு குறிப்பிட்ட அளவிலான வெள்ளி உலோகத்தின் மதிப்பிற்கு ஈடானதாக இருந்தது.

A) உலோகத் திட்டம்

B) பொன் திட்டம்

C) வெள்ளித் திட்டம்

D) காகிதப் பணத் திட்டம்

(குறிப்பு: வெள்ளி திட்டத்தில், ஒரு நாட்டின் அரசு அதன் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளியாக மாற்றிக்கொள்ளும் அனுமதியினை வழங்கியிருந்தது.)

கூற்று 1: பொன் திட்டத்தின் கீழ் ஒரு பணத்தின் அலகு ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் வரையறுக்கப்பட்டிருந்தது.

கூற்று 2: ஒரு பண அலகின் வாங்குதிறன் அப்பொன் பணத்தின் எடை அளவுக்கு சமமாக நிர்வகிக்ப்பட்டு வந்தது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. காகிதப் பணத்திட்டம் என்பது நாட்டின் கருவூலமோ, மைய வங்கியோ அல்லது இரண்டுமோ வரையறையற்ற சட்டமுறை பணமாக காகித பணத்தினை புழக்கத்திற்கு வழங்கும் ஓர் பண முறையாகும்.

2. காகித பண முறையில், பணத்திற்கு ஈடான மதிப்பினை உலோகமாக மாற்ற முடியும்.

3. காகிதப் பண மதிப்பு நிர்ணயம் பொன் மற்றும் வெள்ளி போன்ற உலோக மதிப்புகளை சார்ந்து இருப்பதில்லை.

A) 1, 3 தவறு

B) 2 மட்டும் தவறு

C) 2, 3 தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: காகித பண முறையில், பணத்திற்கு ஈடான மதிப்பினை உலோகமாக மாற்ற முடியாது.)

காகிதப் பணத் திட்டம் கீழ்க்கண்ட எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1. நிர்வகிக்கப்படும் காகிதப் பணத்திட்டம்

2. அடிப்படை பணத்திட்டம்

3. கட்டளைப் பணத்திட்டம்

4. நெகிழி காகிதப் பணத்திட்டம்

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 2, 4

(குறிப்பு: விலைவாசியை நிலைப்படுத்தும் நோக்கில் புழக்கத்திலுள்ள பண அளவினை நாட்டின் உச்ச நிலை அதிகார அமைப்பான மைய வங்கி கட்டுப்படுத்துகிறது. பண மதிப்பிற்கான அரசின் கட்டையைத் தாங்கி வருவதால் காகிதப் பணத்திட்டம் கட்டளைப் பணத்திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் நெகிழிப் பணத்தின் பல்வேறு வடிவங்கள் எவை?

1. ரொக்க அட்டை

2. கடன் அட்டை

3. பற்று அட்டை

4. முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட அட்டை

5. வணிக நிறுவன அட்டை

6. அந்நிய செலாவணி அட்டை

7. சூட்டிகை அட்டை

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4, 5

C) 1, 2, 4, 6, 7

D 1, 2, 4, 5, 6

(குறிப்பு: நெகிழி பணம் நடைமுறையிலுள்ள காகிதப் பணத்திற்கு ஒரு மாற்றாகும். தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் நெகிழிப் அட்டையால் உருவாக்கப்பட்டிருப்பதால் இது நெகிழி பணம் என்றழைக்கப்படுகிறது.

வணிக நிறுவன அட்டை – Store card

அந்நிய செலாவணி அட்டை – Forex card

சூட்டிகை அட்டை – Smart card)

கீழ்க்கண்டவற்றுள் நெகிழிப் பணத்தின் நோக்கமாக கருதப்படுவது எது?

A) அந்நிய செலாவணியை அதிகரிப்பது

B) அரசின் வரி வருவாயை அதிகரிப்பது

C) பரிவர்த்தனைக்காக ரொக்கப் பணம் கையில் கொண்டு வருவதை தடுப்பது

D) பணவீக்கத்தை குறைப்பது

மைய வங்கியை சாராமல் பண பெருக்கத்தை சீர் செய்தல் மற்றும் நிதி மாற்றத்தை சரிபார்த்தல் போன்ற சுதந்திரம் கொண்ட பணம்

A) நெகிழிப் பணம்

B) உலோகப் பணம்

C) காகிதப் பணம்

D) மெய்நிகர் பணம்

(குறிப்பு: பிட்காயின் போன்ற பரவலாக்கப்பட்ட பணம் தனிநபர் சொத்துக்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் கையகப்படுத்தலுக்குள்ளும் உட்படாமல் இருக்க ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகின்றது.)

பணத்தின் முக்கிய பணிகள் ____________ நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: பணத்தின் பணிகள்

முதல்நிலை பணிகள்

இரண்டாம் பணிகள்

துணைப் பணிகள்

இதர பணிகள்)

பணத்தின் அடிப்படை பணி_____________.

A) மதிப்பு நிலைக்கலனாக செயல்படுவது

B) பரிவர்த்தனை கருவியாக செயல்படுவது

C) பொது அளவுகோலாக செயல்படுவது

D) கடனுக்கான அடிப்படை

(குறிப்பு: பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்து பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது.)

பணத்தை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைகளை____________ பகுதிகளாக பிரிக்கலாம்.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: இரண்டு வகை பரிவர்த்தனைகள்

மற்றொருவருக்கு பொருட்களை வழங்கும்பொழுது பணம் பெறப்படும் செயல் விற்பனை எனப்படும்.

பொருட்களை நாம் வாங்கும்பொழுது பணம் செலுத்தப்படுவது கொள்முதல் எனப்படும்.)

பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்புகள் பண அலகில் _____________ ஆக வெளிப்படுத்தப்படுகிறது.

A) வாரம்

B) கடன்

C) விலை

D) சேமிப்பு

(குறிப்பு: பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது. இதனால் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொருட்களுக்கான பரிவர்த்தனை விகிதங்களை எளிதாக தீர்மானிக்க உதவுகிறது.)

கூற்று: பணம் மிகச்சிறந்த மதிப்பின் நிலைக்கலனாக செயல்படுகிறது.

காரணம்: பணம் நீர்மைத் தன்மையைக் கொண்டிருப்பதனால், அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிலம், இயந்திரம் மற்றும் தளவாடம் என எளிதாக சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களாக மாற்றிக்கொள்ளலாம். அவ்வகை சொத்துக்களை மீண்டும் பணமாகவும் மாற்றிக் கொள்ள இயலும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் தவறு

D) கூற்று காரணம் இரண்டும் சரி

(குறிப்பு: பணத்தின் மதிப்பு ஓரளவுக்கு நிலைத்தன்மை கொண்டதாக இருந்தால் தான் தனது பணியை (மதிப்பின் நிலைக் கலனாக செயல்படுவது) சிறப்பாக செய்ய முடியும்.)

கூற்று 1: ரொக்க பணமே கடனுக்கான அடிப்படையாக அமைகிறது.

கூற்று 2: வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளிலுள்ள ரொக்க இருப்பின் அளவை பொறுத்தே கடன்களை உருவாக்குகின்றன.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கடன் முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக பரிவர்த்தனைகள் ரொக்கத்திலோ அல்லது கடனிலோ நடைபெறுகிறது.)

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவை குறிப்பது ____________ எனப்படும்.

A) பணவீக்கம்

B) பணவாட்டம்

C) பண அளிப்பு

D) பணத் தேவை

(குறிப்பு: ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்தப் பண அளவே பணஅளிப்பு ஆகும். வட்டி விகிதம், விலைவாசி போன்றவற்றை நிர்ணயிப்பதில் பண அளிப்பு முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பிட்ட காலத்தில் பண அளிப்பு நிலைக் கருத்தாகவும் ஒரு கால இடைவெளியில் ஓட்டக் கருத்தாகவும் உள்ளது.)

இந்தியாவில் காகிதப் பணங்கள் _____________ ஆல் வெளியிடப்படுகின்றது.

A) மத்திய நிதித்துறை

B) ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா

C) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

D) மத்திய உள்துறை அமைச்சகம்

(குறிப்பு: இந்தியாவில் நாணயங்கள் மத்திய அரசின் நிதித்துறையால் வெளியிடப்படுகிறது. இது தவிர பொது மக்களால் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வித கணக்குகளில் உள்ள இருப்புத் தொகைகளும் பணமாக கருதப்படுகின்றது.)

கூற்று 1: பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது தேசிய வருவாயை எளிதாக பகிர்ந்தளிக்க முடிகிறது.

கூற்று 2: காகித பணங்கள் அதிகாரம் பெற்ற சட்ட பூர்வமான செலாவணியாகும்.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

தவறான இணையைத் தேர்ந்தெடு. (இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பின் அளவீடுகள்)

1. M1 = காகிதப்பணம், நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்

2. M2 = M1 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்

3. M3 = M2 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்

4. M4 = M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புகள்

A) 2 மட்டும் தவறு

B) 2, 3 தவறு

C) 1, 3 தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் M1, M2, M3 மற்றும் M4 என நான்கு வகையிலான அளவீடுகளை செய்கின்றது.

M2 = M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்

M3 = M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலுள்ள கால வைப்புகள்.)

இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பின் அளவீடுகளில் குறுகிய பணம் என்றழைக்கப்படுவது எது?

A) M1 B) M2 C) M1, M2 D) M3, M4

(குறிப்பு: M3 மற்றும் M4 பரந்த நிலை பணம் என்றழைக்கப்படுகிறது. M1 முதல் M4 வரையிலான வகைப்பாட்டு வரிசையில் பணத்தின் நீர்மைத்தன்மை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.)

“பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு” என்று கூறியவர்

A) J.R. ஹிக்ஸ்

B) சாமுவேல்சன்

C) கல்பர்ட்சன்

D) மில்டன் பிரெடுமேன்

திரு. D. உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட புதிய பணக் குறியீடு (₹) மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்

A) ஆகஸ்ட் 15, 2008

B) ஜூலை 15, 2008

C) ஆகஸ்ட் 20, 2010

D) ஜூலை 15, 2010

(குறிப்பு: D. உதயகுமார் அவர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மும்பையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். பணக் குறியீடு (₹) தேவநாகரி எழுத்து ‘ரா’வும் ரோமன் எழுத்து ‘R’இல் செங்குத்துக்கோடு இல்லாமலும் உள்ள வடிவமைப்பாகும்.)

தனிப் பணக் குறியீடு கொண்ட நாடுகளில் தவறானது எது?

A) பிரிட்டன்

B) ஜப்பான்

C) ஐரோப்பா

D) தென் ஆப்பிரிக்கா

(குறிப்பு: அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப்பின் இந்தியா தனிப் பணக் குறியீடு கொண்ட நாடாக விளங்குகின்றது.)

பொது மக்கள் கையில் வைத்திருக்கும் பணம்/வங்கி வைப்புக்களில் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிப்பது

A) SLR B) CRR C) RDR D) CDR

(குறிப்பு: CDR – ரொக்க வைப்பு விகிதம் (Cash Deposit Ratio))

வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு/மொத்த வைப்புகள் என்ற விகிதத்தை குறிப்பது

A) CDR B) RDR C) CRR D) SLR

(குறிப்பு: RDR – ரொக்க இருப்பு வைப்பு விகிதம் (Reserve Deposit Ratio))

“வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு /வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள்” என்ற விகிதம்

A) ரொக்க வைப்பு விகிதம்

B) ரொக்க இருப்பு வைப்பு விகிதம்

C) ரொக்க இருப்பு விகிதம்

D) சட்டபூர்வ நீர்மை விகிதம்

(குறிப்பு: CRR – ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio))

வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள்/வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பு மற்றும் கால வைப்புகள்” என்ற விகிதம்

A) ரொக்க வைப்பு விகிதம்

B) ரொக்க இருப்பு வைப்பு விகிதம்

C) ரொக்க இருப்பு விகிதம்

D) சட்டபூர்வ நீர்மை விகிதம்

(குறிப்பு: SLR – சட்டபூர்வ நீர்மை விகிதம் (Statutory Liquidity Ratio))

டாவன்ஷட்டி என்ற இத்தாலிய பொருளியல் அறிஞரால் பண அளவுக் கோட்பாடு முன்மொழியப்பட்ட ஆண்டு

A) 1562 B) 1568 C) 1578 D) 1588

(குறிப்பு: பண அளவுக் கோட்பாடுகள் பணத்தின் அளவிற்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையேயான தொடர்பினை எடுத்துரைப்பதாகும்.)

“பணத்தின் வாங்கும் சக்தி” என்ற நூலை எழுதியவர்

A) மார்ஷல்

B) கீன்ஸ்

C) இர்விங் ஃபிஷர்

D) கோல்பர்ன்

(குறிப்பு: நவீன வடிவிலான பண அளவு கோட்பாட்டினை உருவாக்கிய புகழ் முழுதும் அமெரிக்க பொருளியலறிஞரான இர்விங் ஃபிஷரை சாரும்.)

கீழ்க்கண்டவற்றுள் “ரொக்க பரிவர்த்தனைக்கான சமன்பாடு” என்று அழைக்கப்படுவது

A) M = VPT

B) P = MVT

C) V = MPT

D) MV = PT

(குறிப்பு: இர்விங் ஃபிஷர் தனது கோட்பாட்டினை “பரிவர்த்தனைக்கான சமன்பாடு” என்று கணித சமன்பாட்டின் வாயிலாக வழங்கியுள்ளார்.

M = மொத்த (காகித) பண அளவு

V = பணத்தின் சுழற்சி வேகம்

P = பொது விலை மட்டம்

T = வாணிபத்தின் அளவு)

கூற்று 1: P = MV/T என்ற சமன்பாட்டில் பண அளவு மாறுதல் நேரடியாக விலைமட்டத்தை பாதிக்கிறது.

கூற்று 2: P = MV/T சமன்பாடு காகிதப் பணத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நவீன வாணிப பொருளாதாரத்தில் காகிதப் பணத்துடன் வங்கியிலிருக்கும் கேட்பு வைப்புக்கள், கடன் பணம் மற்றும் அவைகளின் சுழற்சி வேகம் ஆகிய அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகவே, ஃபிஷர் தனது சமன்பாட்டினை கீழ்க்கண்டவாறு விரிவாக்கினார்.

PT = MV + M1V1

P = MV + M1V1 / T

மேற்கண்ட விரிவாக்கப்பட்ட சமன்பாட்டில், பொது விலைமட்டமானது (P) காகிதப் பண அளவு (M), பணத்தின் சுழற்ச்சி வேகம் (V), வங்கி கடன் பணத்தின் அளவு (M1) வங்கிக் கடன் பணத்தின் சுழற்ச்சி வேகம் (V1) மற்றும் மொத்த வாணிபத்தின் அளவு (T) ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் மார்ஷலின் சமன்பாடு எது?

A) MK = PY

B) M = KPY

C) n = pk

D) n = p (k + rk)

(குறிப்பு:

M = பணத்தின் அளவு

Y = சமுதாயத்தின் மொத்த உண்மை வருமானம்

P = பொது விலைமட்டம்

K = மக்கள் தங்கள் கையில் ரொக்கமாக வைத்திருக்க விரும்பும் சமுதாயத்தின் மொத்த உண்மை வருமானத்தின் ஒரு பகுதி.)

கீழ்க்கண்டவற்றுள் பணத்தின் வாங்கும் சக்தியை (பண மதிப்பினை) கண்டறிய உதவும் சமன்பாடு

A) M = VPT

B) n = pk

C) n = p (k + rk)

D) 1/P = KY/M

(குறிப்பு: 1/P = KY/M என்ற சமன்பாட்டினை மேலும் சற்று விளக்கமாக கூற வேண்டுமெனில், மக்கள் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பும் உண்மை வருமானத்தை (KY = மொத்த பணத்தேவையின் அளவு) பண அளிப்பினால் (M) வகுத்தால் பணத்தின் மதிப்பினை கண்டறியலாம்.)

ஒரு நாட்டில் குறிப்பிட்ட கால அளவில் மொத்த பண அளிப்பு என்பது நாட்டில் வாங்க-விற்கப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் அளவின் பண மதிப்பிற்கு (அதாவது மொத்த பணத்தேவைக்கு) சமமாக இருக்கும் என்று குறிப்பிட்டவர்

A) இர்விங் பிஷர்

B) கீன்ஸ்

C) மார்ஷல்

D) கிரிகெரி

(குறிப்பு: ஃபிஷரின் ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு, MV = PT.

பண அளிப்பு (MV) = பணத்தேவை (PT).)

கீழ்க்கண்டவற்றுள் கீன்ஸின் முதல் சமன்பாடு எது?

A) P = M/KY

B) n = pk

C) MV = PT

D) PT = MV + M1V1

(குறிப்பு: n = pk

இங்கு,

n = மொத்த பண அளிப்பு

p = நுகர்ச்சிப் பொருட்களின் விலை மட்டம்

k = மக்கள் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பும் வருமானத்தின் ஒரு பகுதி – நுகர்ச்சிப் பொருட்களின் அலகுகளில். கீன்ஸ் k என்பதனை உண்மை இருப்பு என்று குறிப்பிடுகிறார்.)

மக்களின் ரொக்க விருப்பத்தினை பணவியல் அமைப்புகள் மாற்ற இயலாது, ஆகவே பணத்தின் அளவை நெறிப்படுத்துவதன் மூலம் விலைவாசியை கட்டுப்படுத்தலாம், பணத்தின் மதிப்பினை நிலைப்படுத்தலாம் என்று கூறியவர்

A) இர்விங் பிஷர்

B) கீன்ஸ்

C) கிரிகெரி

D) கிரௌதர்

(குறிப்பு: கீன்ஸ் தனது சமன்பாட்டினை (n = pk) பின்வருமாறு விரிவாக்குகிறார்.

n = p (k + rk’) my; yJp = n / (k + rk’)

n = மொத்த பண அளிப்பு

p = நுகர்ச்சிப் பொருட்கள் (தொகுப்பின்) விலை மட்டம்

k = மக்கள் தங்கள் கையில் வைத்திருக்க விரும்பும் வருமானத்தின் ஒரு பகுதி-நுகர்ச்சிப் பொருட்களின் எண்ணிக்கையில் (பல பொருட்களின் தொகுப்பு)

r = வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம்

k’ = வங்கி வைப்புகளாக சமுதாயம் வைத்திருக்கும் பணத்தின் அளவு-நுகர்ச்சிப் பொருட்களின் எண்ணிக்கையில்.

இவ்விரிவாக்க சமன்பாட்டிலும், கீன்ஸ் k, k’ மற்றும் r ஆகியவைகள் மாறாதிருக்கும் என்கிறார். அச்சூழ்நிலையில், பண அளவை (n) மாற்றும் பொழுது விலைமட்டம் (P) நேரடியாகவும், சமவிகிதத்திலும் மாறும் என்கிறார்.)

பணவீக்கம் என்பது

A) விலைகள் அதிகரிப்பு

B) விலைகள் குறைதல்

C) பணமதிப்பு அதிகரிப்பு

D) விலைகள் மாறாதிருத்தல்

(குறிப்பு: பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும்படியான பொது விலை மட்ட அதிகரிப்பு ஆகும். சற்று விளக்கமாக கூறினால், பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது.)

“குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை” என்று பணவீக்கத்தை விளக்கியவர்

A) இர்விங் பிஷர்

B) கோல்பர்ன்

C) கிரிகெரி

D) கிரௌதர்

“வாங்கும் சக்திக்கான அளவின் அசாதாரண குறைவு நிலையாகும்” என்று கிரிகெரி எதை குறிப்பிடுகிறார்

A) பணவீக்கம்

B) பணவாட்டம்

C) வாணிபச் சுழற்ச்சி

D) மந்தம்

கீழ்க்கண்டவற்றுள் பணவீக்கத்தின் வகைகளில் அல்லாதது எது?

A) தவழும் பணவீக்கம்

B) நடக்கும் பணவீக்கம்

C) ஓடும் பணவீக்கம்

D) பறக்கும் பணவீக்கம்

(குறிப்பு: பணவீக்கம் வேகத்தின் அடிப்படையில் தவழும் பணவீக்கம் (Creeping Inflation), நடக்கும் பணவீக்கம் (Walking Inflation), ஓடும் பணவீக்கம் (Running Inflation), தாவும் பணவீக்கம் (Galloping Inflation) அல்லது உயர் பணவீக்கம் (Hyper Inflation) என நான்காக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் இருக்கும் பணவீக்கம்

A) தவழும் பணவீக்கம்

B) நடக்கும் பணவீக்கம்

C) ஓடும் பணவீக்கம்

D) தாவும் பணவீக்கம்

(குறிப்பு: தவழும் பணவீக்கம் என்பது மிக குறைவான மற்றும் எளிமையான விகிதத்தில் பணவீக்க விகிதம் இருப்பதாகும். இது மிதமான பணவீக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.)

பணவீக்கம் மிதமான வேகத்தில் ஒற்றை இலக்கத்தில், அதாவது 3 முதல் 9 சதவிகிதத்தில், இருந்தால் அது _____________ என்றழைக்கப்படுகிறது.

A) தவழும் பணவீக்கம்

B) நகரும் பணவீக்கம்

C) ஓடும் பணவீக்கம்

D) தாவும் பணவீக்கம்

(குறிப்பு: நடக்கும் பணவீக்கம், நகரும் பணவீக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.)

ஆண்டு பணவீக்க விகிதம் _______________ சதவிகிதத்திற்குள் இருந்தால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது.

A) 5 முதல் 10

B) 10 முதல் 20

C) 10 முதல் 15

D) 20 முதல் 30

(குறிப்பு: வேகமான விலைவாசி அதிகரிப்பை ஓட்டத்துடன் உவமைப்படுத்தி சொல்வதால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது.)

உண்மையான பணவீக்கம் என கீன்ஸ் எதனை குறிப்பிடுகிறார்?

A) தவழும் பணவீக்கம்

B) நடக்கும் பணவீக்கம்

C) ஓடும் பணவீக்கம்

D) தாவும் பணவீக்கம்

(குறிப்பு: தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம் என்பது சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவிகிதத்தில் உள்ள பணவீக்கம் ஆகும். மிக அதிகமான உயர் பணவீக்கம் இருக்கும்பொழுது ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆண்டிற்கு 20 முதல் 100 சதவிகிதமாக இருக்கும்.)

21ஆம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவாக ஆண்டிற்கு 3714 சதவிகிதமாக ______________ நாட்டில் உயர்ந்தது.

A) அமெரிக்கா

B) கனடா

C) சீனா

D) ஜிம்பாப்வே

(குறிப்பு: ஜிம்பாப்வே நாட்டில் உயர் பணவீக்கம் ஆண்டிற்கு 3714 சதவிகிதமாக ஏப்ரல் 2007 இறுதியில் உயர்ந்தது.)

அளிப்பு நிலையாக உள்ள நிலையில், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது விலைவாசி உயருவது ____________ என்று அழைக்கப்படுகிறது.

A) தேவை-இழுப்பு பணவீக்கம்

B) செலவு-உந்து பணவீக்கம்

C) இலாபத் தூண்டல் பணவீக்கம்

D) காகிதப் பணவீக்கம்

(குறிப்பு: தேவை மற்றும் அளிப்பு ஆகியன பணவீக்கத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உற்பத்தியில் மூலப்பொருட்கள் மற்றும் இதர இடுபொருட்களுக்கான செலவு உயருகின்றது பொழுது உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிப்பது _____________ பணவீக்கம் எனப்படுகிறது.

A) பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்

B) செலவு-உந்து பணவீக்கம்

C) இலாபத் தூண்டல் பணவீக்கம்

D) காகிதப் பணவீக்கம்

அளவுக்கு அதிகமான காகிதப் பணத்தை மையவங்கி பயன்பாட்டிற்கு விடுவிக்கும்பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வு_____________ எனப்படுகிறது.

A) கடன்பண பணவீக்கம்

B) காகிதப்பண பணவீக்கம்

C) வரவு-செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்

D) வரி தூண்டல் பணவீக்கம்

வணிக வங்கிகள் தாராளமாக கடனை அளிக்கும்பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வு

A) கடன்பண பணவீக்கம்

B) பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்

C) இலாபத் தூண்டல் பணவீக்கம்

D) வரி தூண்டல் பணவீக்கம்

வரவு-செலவுத் திட்டத்தினால் ஏற்படும் பற்றாக்குறையை சரிசெய்யும் நிதியாக்க முறைகளில் ஒன்றாக, மைய வங்கி மூலம் கூடுதல் காகிதப் பணத்தினை அச்சிட்டு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது. இக்கூடுதல் பணத்தினால் ஏற்படும் விலைவாசி உயர்வினை _____________ என்கிறோம்.

A) வரவு-செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்

B) பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்

C) இலாபத் தூண்டல் பணவீக்கம்

D) வரி தூண்டல் பணவீக்கம்

அதிக இலாபத்தினை பெறும் நோக்கில் பொருட்களின் விலையில் உயர் இலாப விகிதத்தை சேர்ப்பதால் பொருட்களின் விலை அதிகரிப்பது ____________ பணவீக்கம் ஆகும்.

A) தேவை-இழுப்பு பணவீக்கம்

B) செலவு-உந்து பணவீக்கம்

C) இலாபத் தூண்டல் பணவீக்கம்

D) காகிதப் பணவீக்கம்

கீழ்க்கண்ட எக்காரணங்களால் பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் ஏற்படுகிறது?

1. விவசாயத் துறையில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள்

2. பதுக்கல் நடவடிக்கை

3. கருப்புச் சந்தை

4. வரி விதிப்பு

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 1, 2, 4

D) 2, 3, 4

(குறிப்பு: விவசாயம் போன்ற துறைகளில் இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் இதர காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்படும்பொழுது பொருள் ஏற்படும். மேலும், பதுக்கல் நடவடிக்கையினாலும் கருப்புச் சந்தையினாலும் பொருள் பற்றாக்குறை ஏற்படும். இப்பற்றாக்குறைகளினால் ஏற்படும் விலைவாசி உயர்வினை பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் என்கிறோம்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மீதான வரி உயர்வு பணவீக்கத்தை தூண்டுகிறது.

2. இவ்வகையான பணவீக்கத்தை வரிவீக்கம் என அழைக்கிறோம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

(குறிப்பு: மறைமுக வரிகளான கலால்வரி, சுங்கவரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றில் ஏற்படும் உயர்வு காரணமாக விலைவாசி உயர்ந்து செல்வது வரி தூண்டல் பணவீக்கம் எனப்படுகிறது. இது வரிவீக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.)

கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பணவீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?

1. பண அளிப்பு உயர்வு

2. செலவிடத் தகுந்த வருவாயில் உயர்வு

3. உயர்ந்து வரும் பொதுச் செலவுகள்

4. நுகர்வு செலவு அதிகரித்தல்

5. மலிவு பணக் கொள்கை

A) அனைத்தும்

B) 1, 2, 4, 5

C) 2, 3, 4, 5

D) 1, 2, 3, 5

(குறிப்பு: பற்றாக்குறை நிதியாக்கம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப் பணம், பொதுக் கடனை மீளச் செலுத்துதல், ஏற்றுமதி உயர்வு போன்றவையும் பணவீக்கத்திற்கான காரணங்களாக உள்ளன.)

காகித பண அளிப்பு உயர்வினால் ___________ அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது.

A) உற்பத்தி

B) வரி

C) மொத்த தேவை

D) கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள்

(குறிப்பு: பெயரளவு பண அளிப்பு (Nominal money supply) உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கின்றது.)

செலவிடத்தகுந்த வருவாய் உயர்வு எதனால் ஏற்படும்?

1. தேசிய வருவாய் அதிகரிப்பு

2. வரிவிகித குறைப்பு

3. வரி ஏய்ப்பு

4. புதிய காகிதப் பணம் அச்சடித்தல்

A) 1, 2 B) 1, 3, 4 C) 2, 3 D) 1, 4

(குறிப்பு: மக்களின் செலவிடத் தகுந்த வருவாய் அதிகரிக்கும் பொழுது அவை பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை தூண்டுகின்றன. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படும்.)

கூற்று 1: வளர்ச்சி மற்றும் சமுதாய நலத் திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றில் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது.

கூற்று 2: தவணை கொள்முதல் போன்ற கடன் கொள்முதல் முறைகள் அமல்படுத்தப்படுவதனால் நுகர்ச்சிப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

மலிவு பணக் கொள்கை பொருளாதாரத்தில், மைய வங்கி கடன் அளவை _____________.

A) அதிகப்படுத்தும்

B) குறைக்கும்

C) பூஜ்ஜியமாக்கும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

(குறிப்பு: மலிவு பணக் கொள்கையின் கடன் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை உயர்த்துவதால் ஏற்படும் விலைவாசி உயர்வு பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடி வருவதால், அரசின் வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.

2. இப்பற்றாக்குறையை ஈடு செய்ய கடன் வாங்குதல், புதிய காகிதப் பணம் அச்சடித்தல் என பற்றாக்குறை நிதியாக்க முறைகளில் அரசு ஈடுபடுகிறது.

3. இதன் விளைவாக தொகு தேவையை விட தொகு அளிப்பின் அளவு அதிகரித்து, விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: பற்றாக்குறை நிதியாக்க முறைகளில் அரசு ஈடுபடுவதால் தொகு அளிப்பை விட தொகு தேவையின் அளவு அதிகரித்து, விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.)

இலஞ்சம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுவோர் பகட்டாக செலவு செய்வதால் ___________ அதிகரிக்கின்றது.

A) தொகு அளிப்பு

B) தொகு தேவை

C) பொதுக் கடன்

D) பண அளிப்பு

(குறிப்பு: இலஞ்சம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன. மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பகட்டாக செலவு செய்வதால் தொகு தேவை அதிகரிக்கின்றது. அதே சமயம் கருப்புச் சந்தையும், பதுக்கலும் தொகு அளிப்பினை குறைக்கின்றது. இவைகளின் காரணமாக விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.)

உள்நாட்டில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்போது ______________ல் அதிகரிப்பு ஏற்படுகிறது.

A) மொத்த பணத் தேவை

B) மொத்த பண அளிப்பு

C) பணவாட்டம்

D) வரி ஏய்ப்பு

ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு ____________, விலைவாசி ___________ ஏற்படுகிறது.

A) அதிகரித்து, உயர்வு

B) குறைந்து, குறைவு

C) குறைந்து, உயர்வு

D) அதிகரித்து, குறைவு

(குறிப்பு: ஏற்றுமதி உயர்வின் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது.)

பணவீக்கத்தின் விளைவுகள் _____________ ஆக வகைப்படுத்தப்படுகிறது.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: இரண்டு வகைகள்

உற்பத்தியின் மீதான விளைவு

பகிர்வின் மீதான விளைவு)

இலாப நோக்கில் பங்குகள் அல்லது பொருட்கள் விலை குறையும் என காத்திருந்து, அது குறையும்பொழுது வாங்கி விலை அதிகரிக்கும்பொழுது விற்பனை செய்வது ____________ ஆகும்.

A) உற்பத்தி வாணிபம்

B) பகிர்வு வாணிபம்

C) ஊக வாணிபம்

D) இலாப நோக்க வாணிபம்

(குறிப்பு: ஊக வாணிபத்தில் நிகர உற்பத்தியோ, நிகர வேலைவாய்ப்போ அதிகரிப்பதில்லை.)

பணவீக்கம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினை குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பை அதிகரிக்கிறது.

B) பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்.

C) பதுக்கல்காரர்களும் நுகர்வோரும் பொருட்களை பதுக்கி வைக்க பணவீக்கம் காரணமாக அமைகிறது. இது தொடர்ந்து உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

D) பணவீக்கமானது பொருள் உற்பத்தியை அதிகரிப்பதை விட, ஊக வாணிப செயல்பாடுகளை அதிகரிக்கின்றது.

(குறிப்பு: உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினை குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பை குறைக்கும். பணவீக்கத்தின் காரணமாக வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்வதால் மூலதன திரட்சி குறையும். இது புதிய முதலீட்டில் பின்னடைவை ஏற்படுத்தி நாட்டின் உற்பத்தியின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தொழில்முனைவோர் மற்றும் வணிகர்களின் இடர் ஏற்றல் பணியினை ஊக்கமிழக்கச் செய்வதாக அமையும்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. மிதமான பணவீக்கம் உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு ஒரு ஊக்கக்காரணியாக செயல்படும்.

2. மிதமான விலைவாசி உயர்வினால் ஏற்படும் இலாபத்தினால் தூண்டப்பட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். தொடர்ந்து வேலைவாய்ப்பும் வருமானமும் அதிகரிக்கும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு: பணவீக்கம் குறித்த மேற்கண்ட கூற்றுகள் உற்பத்திக் காரணிகள் முழுவேலைவாய்ப்பை எய்தாத நிலையில் மட்டுமே சரியாக இருக்கும்.)

கூற்று: பணவீக்க காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர்.

காரணம்: கடன் வாங்கியபொழுது பணமதிப்பு உயர்வாகவும், பணவீக்க காலத்தில் திருப்பிச் செலுத்தும் பொழுது பணமதிப்பு குறைவாக இருப்பதனால் கடன் வாங்கியோர் ஆதாயம் பெறுகிறார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

(குறிப்பு: கடன் வழங்கியோர் கூடுதலான பண மதிப்பு இருக்கும்பொழுது கடன் வழங்கி, பணவீக்க காலத்தில் குறைந்த பண மதிப்பில் பணத்தை மீளப் பெறும்பொழுது இழப்பு ஏற்படுகிறது.)

கூற்று 1: நிலையான வருவாயை உடைய பிரிவினர் பணவீக்கத்தினால் பெரிதும் பயனடைகின்றனர்.

கூற்று 2: உற்பத்தியாளர், வணிகர் என்று தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்கு பணவீக்கம் ஒரு வரமாகும். பணவீக்கம் அவர்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக அமைகிறது.

A) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நிலையான வருவாயை உடைய பிரிவினர் பணவீக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், விலைவாசி உயர்வினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு உயர்வுடன், நிலையான வருவாய் பொருந்தி செல்வதில்லை. (உ.ம்) ஒரே மாதிரியான மாதச் சம்பளம் அல்லது கூலி பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர், வட்டி பெறுவோர், வாடகை பெறுவோர் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுவர்.)

பணவீக்க காலத்தில் இழப்பினை சந்திப்பவர்கள் யார்?

A) பங்கு முதலீட்டாளர்கள்

B) வணிகர்கள்

C) உற்பத்தியாளர்கள்

D) கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோர்

(குறிப்பு: கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோருக்கு நிலையான வட்டியை பெறுவதால் அவர்கள் பணவீக்க காலத்தில் இழப்பினை சந்திப்பார்கள். மாறாக, பங்கு முதலீட்டாளர்கள் நல்ல இலாப ஈவு மற்றும் பங்கு மதிப்பேற்றம் போன்ற ஆதாயங்களை பெறுவார்கள்.)

மந்த காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்?

A) உயர்ந்தபட்சமாக

B) மிக மோசமாக

C) மிக குறைந்தபட்சமாக

D) மிக நல்லநிலையில்

கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கருத்துக்களின் அடிப்படையில் ____________ ஆக பிரிக்கலாம் என்கின்றனர்.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பணவியல் முறைகள்

நிதியியல் முறைகள் (J.M.கீன்ஸ்)

இதர முறைகள்

i) குறுகிய கால நடவடிக்கைகள்

ii) நீண்ட கால நடவடிக்கைகள்)

கீழ்க்கண்டவற்றுள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் பணவியல் முறைகள் எவை?

1. வங்கி விகிதத்தை உயர்த்துதல்

2. வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்

3. ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டபூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்

4. நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்

5. கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்

6. மீள் வாங்கல் விகிதம் (Repo Rate) மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் (Reverse Repo Rate) ஆகியவற்றினை உயர்த்துதல்.

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4, 5

C) 2, 3, 4, 5, 6

D) 1, 2, 4, 5, 6

பணவீக்கத்திற்கு எதிரான நிதியியல் நடவடிக்கைகள் எவை?

1. அரசு செலவினங்களை குறைப்பது

2. பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது

3. வரிவிதிப்புகளை விரிவாக்குவது

4. சட்டப்பூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 2, 3, 4

D) 1, 3, 4

பணவாட்டத்தின் முக்கிய இயல்புகள் யாவை?

1. விலைவாசி குறைதல்

2. குறைந்த பண அளிப்பு

3. வேலைவாய்ப்பின்மை

4. விலைவாசி அதிகரிப்பு

5. அதிக பண அளிப்பு

A) 1, 2, 3 B) 1, 3, 4, 5 C) 1, 4, 5 D) 3, 4, 5

(குறிப்பு: பணவாட்டத்தின் போது விலைவாசி குறைதல் என்பது நுகர்வோருக்கு விரும்பத்தகுந்த ஒன்றாக இருந்தாலும், அக்குறைவு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் குறைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது. முழுவேலைவாய்ப்புள்ள நிலையில் விலைவாசி குறைந்தால் அது வருமானம் மற்றும் வேலைவாய்ப்பில் விரும்பத்தகாத விளைவினை ஏற்படுத்தும்.)

வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தாமலும், உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தை திருப்பும் செயல்முறையே _____________ ஆகும்.

A) பணவாட்டம்

B) பணவீக்கம்

C) மீள்பணவீக்கம்

D) தேக்கவீக்கம்

(குறிப்பு: வேலைவாய்ப்பினை பாதிக்காத வகையில் கடன்களை (வங்கிக்கடன், தவணை முறை கொள்முதல் முறைகளை) கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்கத்தினை குறைத்து வருவது மீள் பணவீக்கம் ஆகும்.)

பொருளாதார வளர்ச்சியில் தேக்கநிலையும், வேலைவாய்ப்பின்மையும், அதிக அளவிலான பணவீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை ______________ எனப்படும்.

A) பணவாட்டம்

B) பணவீக்கம்

C) மீள்பணவீக்கம்

D) தேக்கவீக்கம்

சீரான கால இடைவெளியில் அமையும் பொருளாதார நடவடிக்கைகளின் ஏற்ற இறக்கங்கள் ______________ என்றழைக்கப்படுகிறது.

1. வணிகச் சுழற்ச்சி 2. வியாபாரச் சுழற்ச்சி

3. தொழில் ஏற்ற இறக்கங்கள் 4. வருமானச் சுழற்ச்சி

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 2, 3, 4

D) 1, 3, 4

(குறிப்பு: வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருமானம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் அலைவுகளே வணிகச் சுழற்ச்சி என குறிப்பிடப்படுகிறது.)

“உயர்கின்ற விலைகளையும், குறைந்த வேலையற்றோர் சதவிகிதத்தையும் கொண்ட நல்ல வாணிபக் காலங்களையும்; குறைகின்ற விலைகளையும், மிகுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட சதவிகிதத்தையும் கொண்ட கெட்ட வாணிபக் காலங்களையும் உள்ளடக்கியது வாணிபச் சூழல் ஆகும்.” என்ற கருத்து யாருடையது

A) J.M. கீன்ஸ்

B) கோல்பர்ன்

C) கிரிகெரி

D) கிரௌதர்

வாணிபச் சுழற்ச்சியில் ___________கட்டங்கள் உள்ளன.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: வாணிபச் சுழற்ச்சியின் நான்கு கட்டங்கள்

பூரிப்பு

பின்னிறக்கம்

மந்தம்

மீட்சி

)

வாணிபச் சுழற்ச்சியில் வளர்ச்சிக் கட்டத்தின் உச்சத்தில் ______________ நிலை தோன்றும்.

A) பூரிப்பு

B) பின்னிறக்கம்

C) மந்தம்

D) மீட்சி

(குறிப்பு: பூரிப்பு நிலையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் உச்சநிலையில் இருக்கும்.)

நீண்டகால இயல்பான வளர்ச்சி நிலைக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து முழு வேலைவாய்ப்பு நிலையை தாண்டுவது வணிகச் சுழலின் _______________ எனப்படுகிறது.

A) செழிப்பு கட்டம்

B) பூரிப்பு கட்டம்

C) வளர்ச்சிக் கட்டம்

D) மீட்சிக் கட்டம்

(குறிப்பு: வளர்ச்சிக் காலக்கட்டத்தில் பொருள் உற்பத்தி, பணக் கூலி, லாபம் மற்றும் வட்டி விகிதங்கள் உயரும். வங்கிக் கடன் தேவைகள் உயரும். பொதுவாக அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கைகள் உயரும்.)

ஆர்பிஐ – ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

A) டில்லி

B) சென்னை

C) மும்பை

D) பெங்களுரு

___________ல் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதை பின்னிறக்கம் என்கிறோம்.

A) பூரிப்பு

B) மீட்சி

C) போக்கு

D) வளர்ச்சி

(குறிப்பு: பின்னிறக்கக் காலக் கட்டத்தில் உற்பத்தி, பணக் கூலி, லாபம் மற்றும் வட்டி விகிதம் ஆகியன குறையத் துவங்கும். நிறுவனங்கள் தோல்வியடைய துவங்கும். வணிகர்கள் தாங்கள் அகலக்கால் வைத்து வணிகத்தை விரிவாக்கிவிட்டதை உணர்வார்கள். நம்பிக்கைகள் இருந்த இடத்தில் அவநம்பிக்கைகள் தோன்ற ஆரம்பிக்கும். இதன் காரணமாக மூதலீட்டை பெருமளவுக்கு குறைக்க ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து உற்பத்தி, வருமானம் ஆகியன குறைந்து வரும். பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியின் காரணமாக பெரும் அச்சம் உருவாகும். வணிக நடவடிக்கைகள் சுணக்கமடையும். மக்களின் நீர்மை விருப்பம் அதிகரித்து பணத்தை ரொக்கமாக கையில் வைத்துக்கொள்ள விரும்புவதால் பணச் சந்தை நடவடிக்கைகள் சுருங்க ஆரம்பிக்கும்.)

வணிகச் சுழற்ச்சியின் மிக மோசமான கட்டம் ______________ ஆகும்.

A) பூரிப்பு

B) பின்னிறக்கம்

C) மீட்சி

D) மந்தம்

(குறிப்பு: வணிகச் சுழற்ச்சியின் மூன்றாவது கட்டமான மந்தகாலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்கு கீழ் மிகத்தீவிரமாக குறைந்து வரும். நிறுவனங்கள் நட்டமடைவதும், மூடப்படுவதும் பொது இயல்புகளாக இருப்பதுடன் வேலைவாய்ப்பின்மையையும் ஏற்படுத்தும். வட்டி, இலாபம் மற்றும் கூலி ஆகியன மிகக்குறைந்த அளவில் இருக்கும். விவசாயிகளும், கூலிவேலை செய்வோரும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். வணிகர்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் தயக்கம் காட்டும்.)

மந்தத்தின் கீழ் நிலை _____________ என்றழைக்கப்படுகிறது.

A) தேய்வு

B) தொட்டி

C) இறக்கம்

D) போக்கு

(குறிப்பு: பொருளாதார நடவடிக்கைகள் மந்த நிலையின் ஆழத்தில் விழுந்துவிட்டால், வெளியார் உதவியின்றி தானே மீள இயலாத நிலையை குறிக்க “தொட்டி” என்ற கருத்து பயன்படுத்தப்படுகிறது.)

வணிகச் சுழற்ச்சியின் கட்டங்களில் ஒன்றான மீட்சி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) இது மந்தத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மேல்நோக்கி திரும்பும் நிகழ்வாகும்.

B) முதலில், மூலதன பொருட்களுக்கான தேவை மீட்சிபெறுவதில் துவங்குகிறது.

C) அரசால் செய்யப்படும் தன்னிச்சை முதலீடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மேல்நோக்கி திரும்ப ஊக்கமளிக்கின்றன.

D) தனியார் முதலீடுகள் மெதுவாக குறைந்து வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது.

(குறிப்பு: மீட்சிக் காலத்தில் தனியார் முதலீடுகள் மெதுவாக அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளான வேலைவாய்ப்பு, உற்பத்தி, வருவாய், கூலி, லாபம் ஆகியன மீட்சிபெறுகின்றன.)

பணத்தின் தேவையானது கீழ்க்கண்ட எந்த காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது?

1. வருமானம் 2. விலை மட்டம்

3. வட்டிவீதம் 4. தேவை

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

பணம் என்பது

A) உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது

B) நிலையான வாங்கும் சக்தியை கொண்டது

C) உள்ளவற்றில் அதிக நீர்மைத் தன்மை கொண்ட சொத்து ஆகும்.

D) வளங்களை பங்கிட்டுக் கொள்ள தேவைப்படுகிறது.

(குறிப்பு: பணம் என்பது பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு இடையீட்டுக் கருவி ஆகும்.)

இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு

A) 1908

B) 1910

C) 1911

D) 1914

_____________ பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை ஏற்படுத்துகிறது.

A) தவழும்

B) நடக்கும்

C) ஓடும்

D) உயர்

(குறிப்பு: தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம் என்பது சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவிகிதத்தில் உள்ள பணவீக்கம் ஆகும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!