General Tamil

10th Tamil Questions – Unit 3

10th Tamil Questions – Unit 3

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 3 With Answers Uploaded Below.

1. உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். ‘விருந்தே புதுமை’ என்று ____________ கூறியுள்ளார்.

A) ஒளவையார்

B) பாரதிதாசன்

C) பாரதியார்

D) தொல்காப்பியர்

2. திருவள்ளுவர் ___________ இயலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்.

A) பாயிரம்

B) ஊழியல்

C) இல்லறவியல்

D) துறவறவியல்

3. இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை “மோப்பக் குழையும் அனிச்சம்” என்று எடுத்துரைக்கிறார் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) ஒளவையார்

B) திருவள்ளுவர்

C) பாரதியார்

D) தொல்காப்பியர்

4. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) வளையாபதி

D) குண்டலகேசி

5. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் _________________ குறிப்பிட்டுள்ளார்.

A) ஒளவையார்

B) திருவள்ளுவர்

C) பாரதியார்

D) கம்பர்

6. விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளவர் யார்?

A) ஒளவையார் (ஆத்திச்சூடி)

B) திருவள்ளுவர் (திருக்குறள்)

C) சயம்கொண்டார் (கலிங்கத்துப்பரணி)

D) கம்பர் (இராமாயணம்)

7. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) (ஆத்திச்சூடி) ஒளவையார்

B) (கலிங்கத்துப்பரணி) சயம்கொண்டார்

C) (திருக்குறள்) திருவள்ளுவர்

D) (கம்பராமாயணம்) கம்பர்

8. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) (ஆத்திச்சூடி) ஒளவையார்

B) (கலிங்கத்துப்பரணி) சயம்கொண்டார்

C) (திருக்குறள்) திருவள்ளுவர்

D) (கம்பராமாயணம்) கம்பர்

9. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை, “உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) (ஆத்திச்சூடி) ஒளவையார்

B) (கலிங்கத்துப்பரணி) சயம்கொண்டார்

C) (புறநானூறு) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

D) (கம்பராமாயணம்) கம்பர்

10. “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்துகிறாள். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை _________ உணர்த்துகிறார்.

A) திருவள்ளுவர்

B) அறவண அடிகள்

C) சீத்தலைச் சாத்தானர்

D) இளங்கோவடிகள்

11. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று _________ நூல் குறிப்பிடுகிறது.

A) அகநானூறு

B) கலித்தொகை

C) நற்றிணை

D) புறநானூறு

12. ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர். பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர். (“காலின் ஏழடிப் பின் சென்று”) என்று கூறும் நூல் எது?

A) கலித்தொகை

B) பொருநராற்றுப்படை

C) கலிங்கத்துப்பரணி

D) வளையாபதி

13. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி. இதனை, “குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” – என்று கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) பொருநராற்றுப்படை

C) கலிங்கத்துப்பரணி

D) வளையாபதி

14. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான். இச்செய்தி, “நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்” – என்று கூறும் நூல் எது?

A) வளையாபதி

B) பொருநராற்றுப்படை

C) கலிங்கத்துப்பரணி

D) புறநானூறு

15. இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் ________________ நூலில் காட்டப்படுகிறது.

A) வளையாபதி

B) பொருநராற்றுப்படை

C) பெரியபுராணம்

D) புறநானூறு

16. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது _____________ நூல்.

A) சிறுபாணாற்றுப்படை

B) திருவாசகம்

C) நளவெண்பா

D) ஐங்குறுநூறு

17. “இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு” – என்று கூறியவர் யார்?

A) அருந்ததி

B) அம்சப்பிரியா

C) ரம்யா

D) மதிவதனி

18. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – என்று கூறும் நூல் எது?

A) சிறுபாணாற்றுப்படை

B) திருவாசகம்

C) குறுந்தொகை

D) ஐங்குறுநூறு

19. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று __________ நூலில் ஒளவையார் பாடியுள்ளார்.

A) நல்வழி

B) மூதுரை

C) கொன்றை வேந்தன்

D) ஆத்திசூடி

20. “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ(து) எல்லா உலகும் பெறும்” – என்று தனிப்பாடல் நூலில் __________________ அவர்கள் கூறுவதிலிருந்து வள்ளல்களால் விருந்தினர் போற்றப்பட்டதை அறியமுடிகிறது.

A) மாணிக்கவாசகர்

B) கம்பர்

C) சயம்கொண்டார்

D) ஒளவையார்

21. விருந்தினர் – விருந்து பற்றிய சரியான கூற்று எது?

I. சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.

II. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.

III. புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

22. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர் பண்பு எது?

A) அந்நிய மொழியைப் பேணிக்காத்தல்

B) இறக்குமதியில் சிறந்து விளங்குதல்

C) விருந்தோம்பல்

D) இவற்றில் ஏதுமில்லை

23. இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும் – இவ்வாறு கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் பற்றி கூறியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) அழ. வள்ளியப்பா

24. ______________ நாட்டின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ‘வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப் பாயசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.

A) மலேசியா

B) சிங்கப்பூர்

C) தென் ஆப்பிரிக்கா

D) அமெரிக்கா

25. வாழை இலையில் விருந்து – சரியான கூற்று எது?

I. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.

II. தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.

III. உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

26. காசிக்காண்டம் – நூலின் ஆசிரியர் யார்?

A) அதிவீரராம பாண்டியர்

B) ஒளவையார்

C) கம்பர்

D) சேக்கிழார்

27. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் – என்ற பாடல் எதைப்பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகிறது?

A) நல்லொழுக்கம் (பொறை)

B) இல்லொழுக்கம் (விருந்தோம்பல்)

C) நன்றியுணர்வு

D) மேற்கூறிய அனைத்தும்

28. பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் சொல்லும் பொருளும் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) திருவாசகம், மாணிக்கவாசகர்

B) கம்பராமாயணம், கம்பர்

C) கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்

D) காசிக்காண்டம், அதிவீரராம பாண்டியர்

29. சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்தியது எது?

I. அருகுற – அருகில்

II. முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்

III. கேழல் – பன்றி

IV. நவ்வி – மான்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

30. விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், ‘வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல், அவர் விடை பெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும் – என்று விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தைப் பற்றி கூறுபவர் யார்?

A) அதிவீரராம பாண்டியர்

B) ஒளவையார்

C) கம்பர்

D) சேக்கிழார்

31. நன்மொழி – இலக்கணக்குறிப்பு தருக?

A) அன்மொழித்தொகை

B) பண்புத்தொகை

C) வேற்றுமைத்தொகை

D) வினைத்தொகை

32. வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – இலக்கணக்குறிப்பு தருக?

A) தொழிற்பெயர்

B) வினைமுற்று

C) வினையெச்சம்

D) வியங்கோள் வினைமுற்று

33. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?

I. உரைத்த – உரை + த் + த் + அ

II. உரை – பகுதி

III. த் – சந்தி

IV. த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

34. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?

I. வருக – வா(வரு) + க

II. வா – பகுதி

III. க – வியங்கோள் வினைமுற்று விகுதி

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

35. ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து, உண்மை பேசி, உப்பிலாக் கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தம் ஆகும். முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) புறநானூறு

C) விவேகசிந்தாமணி

D) ஐங்குறுநூறு

36. காசிக்காண்டம் நூல் பற்றிய சரியான கூற்று எது?

I. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.

II. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

III. ‘இல்லொழுக்கம்’ பகுதியில் உள்ள பதினேழாவது பாடலே “விருந்தினனாக” – எனத் தொடங்கும் பாடல்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

37. கீழ்க்கண்டவர்களுள், முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?

A) இரும்பொறை

B) அதிவீரராம பாண்டியர்

C) விக்கிரம சோழன்

D) நெடுங்கிள்ளி

38. வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துக்களைக் கூறும் நூல். இந்நூலின் ஆசிரியர் யார்?

A) ஒளவையார்

B) ஒட்டக்கூத்தர்

C) அதிவீரராம பாண்டியர்

D) கம்பர்

39. சீவலமாறன் என்ற பட்டப்பெயர் உடைய மன்னன் யார்?

A) இரும்பொறை

B) சடையவர்மன் வீரபாண்டியன்

C) விக்கிரம சோழன்

D) அதிவீரராம பாண்டியர்

40. நைடதம், கூர்ம புராணம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) அதிவீரராம பாண்டியர்

B) ஒட்டக்கூத்தர்

C) ஒளவையார்

D) கம்பர்

41. அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி, கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி, அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) முதுமொழிக்காஞ்சி

B) மலைபடுகடாம்

C) பரிபாடல்

D) குறுந்தொகை

42. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி நோனாச் செருவின் வலம்படு நோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே, நும்இல் போல் நில்லாது புக்கு – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) பெருங்கெளசிகனார்

B) கூடலூர் கிழார்

C) பிசிராந்தையார்

D) மாணிக்கவாசகர்

43. கிழவிர் போலக் கேளாது கெழீஇ சேட் புலம்பு அகல இனிய கூறி பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள மலைபடுகடாம் நூலை ______________ என்றும் அழைப்பர்.

A) முதுமொழிக்காஞ்சி

B) கூத்தராற்றுப்படை

C) பரிபாடல்

D) குறுந்தொகை

44. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. அசைஇ – இளைப்பாறி

II. அல்கி – தங்கி

III. கடும்பு – சுற்றம்

IV. நரலும் – ஒலிக்கும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

45. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. ஆரி – அருமை

II. படுகர் – பள்ளம்

III. வயிரியம் – கூத்தர்

IV. வேவை – வெந்தது

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி.

D) I, II, III, IV அனைத்தும் சரி

46. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. இறடி – திணை

II. பொம்மல் – சோறு

III. கடும்பு – சுற்றம்

IV. நரலும் – இணைக்கும்

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

47. கீழ்க்கண்டவற்றுள் தினைச்சோற்று விருந்து பற்றி கூறும் நூல் எது?

A) ஆசாரக்கோவை

B) மூதுரை

C) கொன்றை வேந்தன்

D) மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

48. நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல் – இந்த கூற்று எந்த நூலுடன் தொடர்புடையது?

A) ஆசாரக்கோவை

B) மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

C) சிலப்பதிகாரம்

D) குண்டலகேசி

49. பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள் – இந்த கூற்றுடன் தொடர்புடைய ஆசிரியர் யார்?

A) கூடலூர் கிழார்

B) நன்னன் வேண்மான்

C) இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார்

D) ஒளவையார்

50. நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்துவந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர். அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் – இந்த கூற்று _____________ என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனார் அவர்களால் பாடப்பட்டுள்ளது.

A) இரணியன்

B) நன்னன்

C) தொண்டைமான் இளந்திரையன்

D) அதியமான் நெடுமான் அஞ்சி

51. அசைஇ, கெழீஇ – இலக்கணக்குறிப்பு தருக?

A) செய்யுளிசை அளபெடை

B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) இவற்றில் ஏதுமில்லை

52. பரூஉக், குருஉக்கண் – இலக்கணக்குறிப்பு தருக?

A) செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளபெடை)

B) இன்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) இவற்றில் ஏதுமில்லை

53. மலைந்து – பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?

I. மலைந்து – மலை +த்(ந்) + த் + உ

II. மலை – பகுதி; த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்

III. த் – இறந்தகால இடைநிலை

IV. உ – வினையெச்ச விகுதி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

54. பொழிந்த – பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?

I. பொழிந்த – பொழி +த்(ந்) + த் + அ

II. பொழி – பகுதி; த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம்

III. த் – இறந்தகால இடைநிலை

IV. அ – பெயரெச்ச விகுதி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

55. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம். நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை.

II. நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது, மலைபடுகடாம்.

A) I, II இரண்டுமே தவறு

B) I, II இரண்டுமே சரி

C) I மட்டும் சரி

D) II மட்டும் சரி

56. மலைபடுகடாம் ____________ நூல்களுள் ஒன்று.

A) எட்டுத்தொகை

B) பத்துப்பாட்டு

C) ஐம்பெரும் காப்பியங்கள்

D) ஐஞ்சிறு காப்பியங்கள்

57. மலைபடுகடாம் நூல் ________ அடிகளைக் கொண்டது.

A) 503

B) 523

C) 553

D) 583

58. மலையை __________ ஆக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

A) யானை

B) கரடி

C) புலி

D) சிங்கம்

59. கீழ்க்கண்டவற்றுள், கருப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம் எது?

A) சோளம்

B) கேழ்வரகு

C) கம்பு

D) கரும்பு

60. கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

A) சுஜாதா

B) சேர்மக்கனி

C) ராஜம் கிருஷ்ணன்

D) கி.ராஜநாராயணன்

61. வட்டார வழக்குச் சொற்கள் – சரியானது எது?

I. பாச்சல் – பாத்தி

II. பதனம் – கவனமாக

III. நீத்துப்பாகம் – மேல்கஞ்சி

IV. மகுளி – சோற்றுக் கஞ்சி

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

62. வட்டார வழக்குச் சொற்கள் – சரியானது எது?

I. தொலவட்டையில் – தொலைவில்

II. அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)

III. சடைத்து புளித்து – சலிப்பு

IV. வரத்துக்காரன் – புதியவன்

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

63. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதையே கோபல்லபுரத்து மக்கள். ஆசிரியர் தன் சொந்த ஊரான இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்துள்ளார்.

II. இந்திய விடுதலைப் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல்.

III. இது 1991ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

IV. கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

64. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போக்கில் அமைந்திருக்கும்.

II. கி.ராஜநாராயணன் அவர்கள் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

III. இவர் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழிப் புனைகதைகள் ‘கரிசல் இலக்கியம்’ என்று அழைக்கப்படுகின்றன.

IV. கி.ராஜநாராயணன் அவர்கள் எழுத்துலகில் கி.ரா என்று குறிப்பிடப்படுகிறார்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) I, II மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

65. கறங்கு இசை விழவின் உறந்தை – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) அகநானூறு

C) கலித்தொகை

D) கலிங்கத்துப்பரணி

66. காலையிலிருந்தே வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார். என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போறாங்களா என்ன?” “ஏங்க… காலையிலேருந்து வேப்ப மரத்துல காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப் போறாங்க பாருங்க.” “அடடே, ஆமாம் காக்கா கத்துது. யாரு வரப் போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே… உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிக்கிட்டு” – நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம். அப்பா சொன்னதும் சரி, காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெரு முனையில் அறந்தாங்கி மாமா தலையில் பலாப்பழத்துடன் வந்து கொண்டிருப்பார். அம்மாவுக்குக் காக்கை மொழி தெரியும்! – என்ற கூற்று யாருடையது?

A) சுஜாதா

B) தஞ்சாவூர்க் கவிராயர்

C) ராஜம் கிருஷ்ணன்

D) உடுமலை நாராயண கவி

67. ‘கறங்கு இசை விழவின் உறந்தை’ என்ற கூற்று கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை

B) திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி

C) திருச்சி மாவட்டத்தின் உறையூர்

D) இவற்றில் ஏதுமில்லை

68. ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது ____________ எனப்படும்.

A) தொகைநிலைத் தொடர்

B) வழுவமைதி

C) வழு

D) தொகாநிலைத் தொடர்

69. கீழ்க்கண்ட கூற்று எதனுடன் தொடர்புடையது?

(எ.கா) காற்று வீசியது; குயில் கூவியது.

முதல் தொடரில் “காற்று” என்னும் எழுவாயும் “வீசியது” என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றது. அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றது.

A) தொகைநிலைத் தொடர்

B) தொகாநிலைத் தொடர்

C) வழு

D) வழுவமைதி

70. தொகாநிலைத் தொடர் _________ வகைப்படும்?

A) 6

B) 7

C) 8

D) 9

71. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது _______________ ஆகும். இனியன் கவிஞர் – பெயர்; காவிரி பாய்ந்தது – வினை; பேருந்து வருமா? – வினா. மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன – இந்த கூற்று கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?

A) எழுவாய்த்தொடர்

B) விளித்தொடர்

C) வினைமுற்றுத்தொடர்

D) பெயரெச்சத்தொடர்

72. விளித்தொடர் – சரியான கூற்று எது?

I. விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

II. நண்பா எழுது! – “நண்பா ” என்னும் விளிப்பெயர் “எழுது” என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.

III. எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது விளித்தொடர் ஆகும்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

73. வினைமுற்றுத் தொடர் – சரியான கூற்று எது?

I. வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

II. ‘பாடினாள் கண்ணகி’ – “பாடினாள்” என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் சரி

D) I, II அனைத்தும் தவறு

74. பெயரெச்சத்தொடர் – சரியான கூற்று எது?

I. முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

II. கேட்ட பாடல் – “கேட்ட” என்னும் எச்சவினை “பாடல்” என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

III. தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

75. வினையெச்சத் தொடர் – சரியான கூற்று எது?

I. முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் ஆகும்.

II. பாடி மகிழ்ந்தனர் – “பாடி” என்னும் எச்சவினை “மகிழ்ந்தனர்” என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் சரி

D) I, II அனைத்தும் தவறு

76. வேற்றுமைத் தொடர் – சரியான கூற்று எது?

I. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.

II. கட்டுரையைப் படித்தாள் – இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

III. அன்பால் கட்டினார் – (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

IV. அறிஞருக்குப் பொன்னாடை – (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

77. இடைச்சொல் தொடர் – சரியான கூற்று எது?

I. இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

II. மற்றொன்று – மற்று + ஒன்று. “மற்று” என்னும் இடைச்சொல்லை அடுத்து “ஒன்று” என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.

III. வருக! வருக! வருக! – ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வருவது, இடைச்சொல் தொடராகும்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

78. உரிச்சொல்தொடர் – சரியான கூற்று எது?

I. உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

II. சாலச் சிறந்தது – “சால” என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து “சிறந்தது” என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் தவறு

D) I, II அனைத்தும் சரி

79. அடுக்குத் தொடர் – சரியான கூற்று எது?

I. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

II. வருக! வருக! வருக! – ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

III. சல சல, கரகரத்த ஆகியவை அடுக்குத் தொடருக்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

80. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன. (எ.கா) கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

II. தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும். அவையாவன: எழுவாய்த் தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமைத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

81. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இறங்கினார் முகமது – வினைமுற்றுத் தொடர்

II. அவர் பாடகர் – எழுவாய்த் தொடர்

III. பாடுவதும் கேட்பதும் – எண்ணும்மை

IV. கேட்ட பாடல்கள் – பெயரெச்சத் தொடர்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

82. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. கேட்காத பாடல்கள் – எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்

II. அடுக்கு அடுக்காக – அடுக்குத் தொடர்

III. பழகப் பழகப் – அடுக்குத்தொடர்

IV. வடித்த கஞ்சியில் – பெயரெச்சத் தொடர்

A) I, III மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

83. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. நன்றாகப் பேசினான் – வினையெச்சத் தொடர்

II. வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்

III. கவிதைகளின் தொகுப்பு – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

84. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

A) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

B) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

C) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

D) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

85. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது?

A) புத்தூர்

B) மூதூர்

C) பேரூர்

D) சிற்றூர்

86. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது எது?

A) வேற்றுமை உருபு

B) எழுவாய்

C) உவம உருபு

D) உரிச்சொல்

87. காசிக்காண்டம் என்பது?

A) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

B) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

C) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  

D) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

88. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை?

A) நிலத்திற்கேற்ற விருந்து

B) இன்மையிலும் விருந்து

C) அல்லிலும் விருந்து

D) உற்றாரின் விருந்து

89. பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகுமுன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன் – கீழ்க்கண்டவற்றுள் இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஒரு கிராமத்து நதி, சிற்பி பாலசுப்ரமணியம் – 2002

B) காதுகள், எம். வி. வெங்கட்ராம் -1993

C) அஞ்ஞாடி, பூமணி – 2014

D) கண்ணன், பிரசாந்தி சேகரம் – அடிசில் 2017

90. பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு- அது கிராமத்து உன்னதம் – கீழ்க்கண்டவற்றுள் இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?

A) ஒரு கிராமத்து நதி, சிற்பி பாலசுப்ரமணியம் – 2002

B) கண்ணன், பிரசாந்தி சேகரம் – அடிசில் 2017

C) அஞ்ஞாடி, பூமணி – 2014

D) காதுகள், எம். வி. வெங்கட்ராம் -1993

91. “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” – என்று பழைய சோறு பற்றி பற்றி கூறும் நூல் எது?

A) புறநானூறு

B) கலித்தொகை

C) குற்றாலக்குறவஞ்சி

D) முக்கூடற்பள்ளு

92. “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்” – இந்தப் பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) மனோன்மணியம்

B) காளமேகப் புலவர்

C) ஒளவையார்

D) இளங்கோவடிகள்

93. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பண்டைய இலக்கியம் – Ancient literature

II. பக்தி இலக்கியம் – Devotional literature

III. காப்பிய இலக்கியம் – Epic literature

IV. செவ்விலக்கியம் – Classical literature

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

94. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பண்டைய இலக்கியம் – Ancient literature

II. வட்டார இலக்கியம் – Regional literature

III. நாட்டுப்புற இலக்கியம் – Folk literature

IV. நவீன இலக்கியம் – Modern literature

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

95. ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், ‘ஆம், காணாமல் போய்விடும்’! உங்கள் குழந்தைகள், “ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்! – இக்கருத்து யாருடையது?

A) கு. சிவராமன்

B) பாலாஜி

C) மதிவதனி

D) கந்த பாலன்

96. சரியானது எது?

I. திருக்குறள் தெளிவுரை – வ. உ. சிதம்பரனார்

II. சிறுவர் நாடோடிக் கதைகள் – கி. ராஜநாராயணன்

III. ஆறாம் திணை – மருத்துவர் கு. சிவராமன்

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

97. விடுபட்டதை நிரப்புக.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் __________ __________ __________?

A) உயிரினும் ஓம்பப் படும்

B) எய்துவர் எய்தாப் பழி

C) கல்லார் அறிவிலா தார்

D) மெய்ப்பொருள் காண்ப தறிவு

98. விடுபட்டதை நிரப்புக.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் __________ __________ __________?

A) உயிரினும் ஓம்பப் படும்

B) எய்துவர் எய்தாப் பழி

C) கல்லார் அறிவிலா தார்

D) மெய்ப்பொருள் காண்ப தறிவு

99. விடுபட்டதை நிரப்புக.

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் __________ __________ __________?

A) உயிரினும் ஓம்பப் படும்

B) எய்துவர் எய்தாப் பழி

C) கல்லார் அறிவிலா தார்

D) மெய்ப்பொருள் காண்ப தறிவு

100. விடுபட்டதை நிரப்புக.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் __________ __________ __________?

A) உயிரினும் ஓம்பப் படும்

B) எய்துவர் எய்தாப் பழி

C) கல்லார் அறிவிலா தார்

D) மெய்ப்பொருள் காண்ப தறிவு

101. விடுபட்டதை நிரப்புக.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் __________ __________ __________?

A) நாமம் கெடக்கெடும் நோய்

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

102. விடுபட்டதை நிரப்புக.

அறியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் __________ __________ __________?

A) நாமம் கெடக்கெடும் நோய்

B) பேணித் தமராக் கொளல்.

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

103. விடுபட்டதை நிரப்புக.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் __________ __________ __________?

A) நாமம் கெடக்கெடும் நோய்

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

104. விடுபட்டதை நிரப்புக.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே __________ __________ __________?

A) நாமம் கெடக்கெடும் நோய்

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

105. விடுபட்டதை நிரப்புக.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் __________ __________ __________?

A) கோலொடு நின்றான் இரவு

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

106. விடுபட்டதை நிரப்புக.

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் __________ __________ __________?

A) கோலொடு நின்றான் இரவு

B) நாள்தொறும் நாடு கெடும்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

107. விடுபட்டதை நிரப்புக.

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் __________ __________ __________?

A) கோலொடு நின்றான் இரவு

B) பேணித் தமராக் கொளல்

C) கண்ணோட்டம் இல்லாத கண்

D) நல்லார் தொடர்கை விடல்

108. விடுபட்டதை நிரப்புக.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க் __________ __________ __________?

A) கோலொடு நின்றான் இரவு

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) குரிமை உடைத்திவ் வுலகு

109. விடுபட்டதை நிரப்புக.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க __________ __________ __________?

A) நாகரிகம் வேண்டு பவர்

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

110. விடுபட்டதை நிரப்புக.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் __________ __________ __________?

A) நாகரிகம் வேண்டு பவர்

B) பெருமை முயற்சி தரும்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நல்லார் தொடர்கை விடல்

111. விடுபட்டதை நிரப்புக.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே __________ __________ __________?

A) நாகரிகம் வேண்டு பவர்

B) பேணித் தமராக் கொளல்

C) வேளாண்மை என்னும் செருக்கு

D) நல்லார் தொடர்கை விடல்

112. விடுபட்டதை நிரப்புக.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை __________ __________ __________?

A) நாகரிகம் வேண்டு பவர்.

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) இன்மை புகுத்தி விடும்

113. விடுபட்டதை நிரப்புக.

பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந் __________ __________ __________?

A) தாள்வினை இன்மை பழி

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) இன்மை புகுத்தி விடும்

114. விடுபட்டதை நிரப்புக.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் __________ __________ __________?

A) தாள்வினை இன்மை பழி

B) தாழா துஞற்று பவர்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) இன்மை புகுத்தி விடும்

115. விடுபட்டதை நிரப்புக.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய __________ __________ __________?

A) தாள்வினை இன்மை பழி

B) பேணித் தமராக் கொளல்

C) கோடிஉண் டாயினும் இல்

D) இன்மை புகுத்தி விடும்

116. விடுபட்டதை நிரப்புக.

நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள் __________ __________ __________?

A) தாள்வினை இன்மை பழி

B) பேணித் தமராக் கொளல்

C) கெடுப்பார் இலானும் கெடும்

D) நச்சு மரம்பழுத் தற்று

117. நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று – என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

A) உவமையணி

B) எடுத்துக்காட்டு உவமையணி

C) தற்குறிப்பேற்ற அணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

118. பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் – என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

A) உவமையணி

B) எடுத்துக்காட்டு உவமையணி

C) தற்குறிப்பேற்ற அணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

119. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு – என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

A) தற்குறிப்பேற்ற அணி

B) எடுத்துக்காட்டு உவமையணி

C) உவமையணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

120. திருக்குறள் பற்றிய கவிதை: உரை(றை) ஊற்றி ஊற்றிப் பார்த்தாலும்

புளிக்காத பால்! தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்! – என்று பாடியவர் யார்?

A) மதிவதனி

B) செங்கல்வராயன்

C) சாலை இளந்திரையன்

D) அறிவுமதி

121. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

A) தேமா புளிமா காசு

B) கூவிளம் தேமா மலர்

C) புளிமா தேமா பிறப்பு

D) கூவிளம் புளிமா நாள்

122. உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டியது எது?

A) ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால், அவ்வொழுக்கத்தை

B) ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர்

C) உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார்

D) உண்மைப்பொருளைக் காணும் அறிவை

123. பொருத்தமானதை தேர்வு செய்க.

I. ஒழுக்கமாக வாழும் எல்லாரும் மேன்மை அடைவர் – ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர்

II. உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதார் – பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே எனக் கருதப்படுவார்

III. எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் – அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்

IV. ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் – அழிந்தால் இவற்றால் வரும் துன்பமும் அழியும்

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

124. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும்.

II. குற்றங் கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்ற மன்னன், பகைவர் இன்றியும் தானே கெடுவான்.

III. தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும்.

IV. ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

125. மன்னவன், தன் நாட்டை நாள் தோறும் இழக்க நேரிடுவது எப்போது?

I. தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாதபோது.

II. பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன் என்றவாறு ஆட்சி செய்யும் போது

III. நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டும் போது

IV. விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டுள்ள போது

126. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?

I. பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் என்ன பயன்? – இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன்?

II. நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு – இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

III. விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள் – பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் அதனை உண்ணும் பண்பாளர் ஆவார்.

A) I, II, III அனைத்துமே சரி

B) I மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்துமே தவறு

127. யாரால் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்?

A) அறிய வேண்டியதை அறிய முயற்சி செய்யாதவர்கள்

B) விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்கள்

C) சோர்விலாது முயற்சி செய்வோர்

D) பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர்கள்

128. யார் ஒருவர்க்குச் செல்வம் பெருகும்? யார் ஒருவர்க்கு வறுமையே வந்து சேரும்?

A) ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பவர்; அறிய வேண்டியதை அறிய முயற்சி செய்யாதவர்கள்

B) சோர்விலாது முயற்சி செய்வோர்; பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர்கள்

C) முயற்சி செய்பவர்; முயற்சி செய்யாதவர்

D) இவற்றில் ஏதுமில்லை

129. எது இழிவன்று? எது இழிவாகும்?

A) ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருத்தல்; அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாதிருத்தல்

B) சோர்விலாது முயற்சி செய்தல்; பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருத்தல்

C) முயற்சி செய்தல்; இகழ்ச்சி இல்லாதிருத்தல்

D) இவற்றில் ஏதுமில்லை

130 கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. சோர்விலாது முயற்சி செய்வோர், செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன் வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர்

II. பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர், அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை

III. பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!