General Tamil

10th Tamil Questions – Unit 4

10th Tamil Questions – Unit 4

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 10th Tamil Questions – Unit 4 With Answers Uploaded Below.

1. __________ ஆம் ஆண்டுகளில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் (personal computers) வளர்ச்சியும், இணையப் பயண்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் (digital revolution) காரணமாயின. அவற்றுள் இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.

A) 1970

B) 1980

C) 1990

D) 2000

2. செயற்கை நுண்ணறிவு – சரியான கூற்று எது?

I. அறையின் மூலையில் நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறதே, அதனுள் பொதிந்திருப்பது செயற்கை நுண்ணறிவு.

II. ‘அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இதுவே சுருக்கமான வழி’ என்று நமது திறன்பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம் காட்டுகிறதல்லவா? அதற்குக் காரணமாக இருப்பதும் செயற்கை நுண்ணறிவே.

III. நமது திறன்பேசியோ, கணினியோ நாம் சொல்லச் சொல்லத் தன் அகண்ட தரவுகளில் உள்ள கோடிக்கணக்கான சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான சொல்லைக் கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தேர்ந்தெடுத்துத் திரையில் காண்பிக்கிறதல்லவா? அங்கு இணைந்திருப்பது செயற்கை நுண்ணறிவுதான்.

IV. செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது. கண் அறுவை மருத்துவம் செய்கிறது; சமைக்கிறது; சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

3. இதழியல், செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தகுந்த மாறுதல்களைச் செய்து வருகிறது. அவற்றுள் விந்தையான ஒன்று, இயல்பான மொழிநடையை உருவாக்குதல் (natural language generation) என்னும் மென்பொருள். அதற்கு __________ என்று பெயர். தகவல்களைக் கொடுத்தால் போதும், இது அழகான கட்டுரையைச் சில நொடிகளில் உருவாக்கிவிடும்.

A) விகாஸ்பீடியா

B) மித்திரன்

C) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

D) இவற்றில் ஏதுமில்லை

4. இணையத்தில் வணிகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று ___________ பயன்படுத்திப் பெரும்பாலும் ஆளற்ற பல்பொருள் அங்காடிகளை உலகெங்கிலும் திறந்து வருகிறது.

A) இணையச் செயலியை

B) செயற்கை நுண்ணறிவை

C) வலைதளத்தை

D) இவற்றில் ஏதுமில்லை

5. 2016இல் _________ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான _________, சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

A) ஐ.பி.எம்., வாட்சன்

B) மைக்ரோசாப்ட், எக்ஸ் பாக்ஸ்

C) கூகுள், ஆல்பபெட்

D) இவற்றில் ஏதுமில்லை

6. _________ நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இயந்திர மனிதர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன. அவை அங்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.

A) மலேசியா

B) அமெரிக்கா

C) சீனா

D) அயர்லாந்து

7. செயற்கை நுண்ணறிவு – சரியான கூற்று எது?

I. இவ்வுலகை இதுவரை மென்பொருள் (Software) ஆண்டுகொண்டிருக்கிறது; இனிமேல் செயற்கை நுண்ணறிவுதான் ஆளப்போகிறது.

II. சமூக ஊடகங்கள் வழியாகவும் மின்னணுச் சந்தை மூலமாகவும் செயற்கை நுண்ணறிவு கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் வந்து சேரத் தொடங்கிவிட்டது.

III. சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கிற ஒவ்வொன்றும், தேடுபொறிகளில் தேடிக் கிடைக்கும் விடைகளும் செயற்கை நுண்ணறிவு தீர்மானிப்பதைத்தான்.

IV. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு வன்பொருள்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

8. தொழில்நுட்ப வரையறைகளின்படி செயற்கை நுண்ணறிவு – சரியான கூற்று எது?

I. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு (Computer Program) எனலாம். அது தானாகக் கற்றுக் கொள்ளக்கூடியது. இந்த அறிவைக்கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப்போல, தானே முடிவெடுக்கும் திறனுடையது.

II. ஒளிப்படங்கள், எழுத்துகள், காணொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் இயல்புடைய மென்பொருளை ஆராய்ச்சியாளர் வடிவமைக்கிறார். அவ்வாறு கற்றுக் கொண்டதை அந்த இயந்திரம் தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரங்களில் செயல்படுத்தும்.

III. செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை; செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்பதே அதன் சிறப்பு.

IV. மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

9. மெய்நிகர் உதவியாளர் சரியான கூற்று எது?

I. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப்போல நம்முடன் உரையாடி, சில உதவிகள் செய்கின்றது. இவை நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கும். நாம் திறக்கக் கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியில் (browser) தேடும்.

II. நாம் விரும்பும் அழகான கவிதையை இணையத்தில் தேடித் தரும்! எந்தக் கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றிக் கருத்துரைக்கும். எதிர்காலத்தில் உங்கள் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் இதுபோன்ற மெய்நிகர் உதவியாளர் உங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கும்;

III. “டாக்டர்! திரும்பவும் ஐயாவுக்கு மூச்சுத் திணறல்! டெரிஃப்லின் ஊசி போட்டுவிடட்டுமா?” – என்று கேட்கும். இந்த உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக் கொள்ளலாம்!

IV. மெய்நிகர் உதவியாளர், இயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் தனித்துவம் வாய்ந்தது.

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

10. ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு – சரியான கூற்று எது?

I. தற்போது வெளிவருகிற சில உயர்வகைத் திறன்பேசியின் ஒளிப்படக்கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. கடவுச் சொல்லும் கைரேகையும் திறன்பேசியைத் திறப்பது பழமையானது.

II. உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டுதிறப்பது, இன்றைய தொழில்நுட்பம். இது படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. திறன்பேசிகளில் உள்ள ஒளிப்படக் கருவியில், எடுக்கும் படங்களை மெருகூட்ட இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

III. ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த, பணம் மிக மிக அதிக அளவில் வீணாகும்.

IV. காணொலிகளைத் தொகுக்கும் மென் பொருள்களில் (Video Editing ) இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் மூலம் நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, IV மட்டும் சரி

11. இந்தியாவின் பெரிய வங்கியான __________, ‘இலா’ (ELA – Electronic Live Assistant) என்னும் உரையாடு மென்பொருளை (Chatbot) உருவாக்கியிருக்கிறது. ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் அது உரையாடும்.

A) இந்தியன் வங்கி

B) பாரத ஸ்டேட் வங்கி

C) ஆக்ஸிஸ் வங்கி

D) கனரா வங்கி

12. செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் __________ (DATA SCIENTISTS) தேவை கூடியுள்ளது. இயந்திரக் கற்றல் வல்லுநர்கள் முதலான பல தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவையும் பெருகி வருகிறது.

A) வன்பொருள் வல்லுநர்கள்

B) மென்பொருள் வல்லுநர்கள்

C) தரவு அறிவியலாளர்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

13. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே __________. இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன. இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுகின்றன. இந்த ரோபோவை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

A) அசிமோ

B) பெப்பர்

C) நவ்

D) டோபியோ

14. பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் __________ யைப் பயன்படுத்துகின்றன.

A) செயற்கை நுண்ணறிவு

B) விளம்பரங்கள்

C) தானியங்கி இயந்திரங்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

15. ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது. இப்போது கல்வியறிவுடன் __________ அறிந்திருப்பது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது. ஆனால் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவுமே நம்மை வளப்படுத்த உதவும்.

A) மென்பொருள் தகவமைப்பை

B) வன்பொருள் தகவமைப்பை

C) மின்னணுக் கல்வியறிவையும் (Digital Literacy) மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் (Digital Marketing)

D) இவற்றில் ஏதுமில்லை

16. சீன நாட்டில் ‘__________’ நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அது சீனப் பேரரசரான __________ ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் __________ காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

A) பெய்ஜிங், ஆங் வு, சேரர்

B) காண்டன், குப்லாய்கான், சோழர்

C) ஹாங்காங், தான் லுன், பாண்டியர்

D) இவற்றில் ஏதுமில்லை

17. பொருந்திய இணையைக் கண்டறிக.

I. பெப்பர் – ஜப்பான் சாப்ட் வங்கி

II. வாட்சன் – ஐ.பி.எம். நிறுவனம்

III. இலா – பாரத ஸ்டேட் வங்கி

IV. சுகா – புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் இயந்திர மனிதன்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

18. வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ________ என்று அழைப்பர்.

A) எழுத்தாளி

B) எழுத்தாணி

C) எழுத்தோவியம்

D) குரலாளி

19. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) வைரமுத்து

20. ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன் பெயர்?

A) வாட்சன்

B) இலா

C) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

D) பெப்பர்

21. காண்டன் நகர் அமைந்துள்ள நாடு எது?

A) இந்தியா

B) சீனா

C) அமெரிக்கா

D) ஜப்பான்

22. சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர் யார்?

A) சூ யுவான்சாங்க்

B) கின் ஷி ஹுவாங்

C) குப்லாய்கான்

D) இவர்களில் யாருமில்லை

23. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் ____________ தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.

அ) மூன்றாவது

ஆ) நான்காவது

இ) ஐந்தாவது

ஈ) இரண்டாவது

24. பெருமாள் திருமொழி என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) கம்பர்

B) சுந்தரர்

C) மாணிக்கவாசகர்

D) குலசேகர ஆழ்வார்

25. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. சுடினும் – சுட்டாலும்

II. மாளாத – தீராத

III. மாயம் – விளையாட்டு

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

26. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! – வித்துவக்கோடு என்னும் ஊர் எங்கு உள்ளது? இங்குள்ள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடியவர் யார்?

A) ஆந்திரா மாநிலம் திருப்பதி, நம்மாழ்வார்

B) கேரளா மாநிலம் பாலக்காடு, குலசேகர ஆழ்வார்

C) தமிழ்நாடு மாநிலம் சென்னை, கம்பர்

D) கர்நாடகம் மாநிலம் பெங்களூரு, சுந்தரர்

27. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) திருப்பாவை

B) பெரியாழ்வார் திருமொழி

C) திருச்சந்த விருத்தம்

D) பெருமாள் திருமொழி

28. கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?

I. இலக்கியங்கள் தாம் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு மட்டும் இல்லாமல் அக்காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தாங்கி அமைகின்றன.

II. அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்க விதைகளைப் பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்க முடிகிறது.

III. மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல், துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் துளிர்த்திருக்கும் அறிவியல் கருத்துகள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப்போவதைக் காண்கையில் பெருவியப்பு மேலிடுகிறது. புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகிற கருத்தை அன்றே காட்டிய பழங்கவிதை வியப்பிலும் வியப்பே!

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II சரி III தவறு

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

29. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக், கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந் தீச்சுடரிய ஊழியும் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) பரிபாடல்

B) கலித்தொகை

C) ஐங்குறுநூறு

D) அகநானூறு

30. பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) சேக்கிழார்

B) ஒளவையார்

C) கீரந்தையார்

D) சீத்தலை சாத்தனார்

31. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன் – என்ற கூற்று யாருடையது?

A) மாணிக்கவாசகர்

B) கம்பர்

C) ஒளவையார்

D) குலசேகர ஆழ்வார்

32. எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும் படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது – என்ற கூற்று யாருடையது?

A) கீரந்தையார்

B) ஒளவையார்

C) பாரதியார்

D) நாமக்கல் கவிஞர்

33. பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது – என்ற கூற்று யாருடையது?

A) சுத்தானந்த பாரதி

B) வைகுண்ட சுவாமிகள்

C) திரு.வி.க

D) கீரந்தையார்

34. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. விசும்பு – வானம்

II. ஊழி – யுகம்

III. ஊழ் – முறை

IV. தண்பெயல் – குளிர்ந்த மழை

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

35. சொல்லும் பொருளும் சரியானது எது?

I. ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

II. பீடு – சிறப்பு

III. ஈண்டி – செறிந்து திரண்டு

IV. நவ்வி – கரடி

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) II, III, IV மட்டும் சரி

36. ஊழ் ஊழ் – இலக்கணக்குறிப்பு தருக?

A) அடுக்குத்தொடர்

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

37. வளர்வானம் – இலக்கணக்குறிப்பு தருக?

A) அடுக்குத்தொடர்

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

38. செந்தீ – இலக்கணக்குறிப்பு தருக?

A) அடுக்குத்தொடர்

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

39. வாரா (ஒன்றன்) – இலக்கணக்குறிப்பு தருக?

A) அடுக்குத்தொடர்

B) வினைத்தொகை

C) பண்புத்தொகை

D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

40. கிளர்ந்த – பகுபத உறுப்பிலக்கணம் சரியானது எது?

I. கிளர்ந்த – கிளர் + த்(ந்) + த் + அ

II. கிளர் – பகுதி; த் – சந்தி;

III. த்(ந்) – ஆனது விகாரம்

IV. த் – இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

41. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே – இந்த பாடலைப் பற்றிய சரியான கூற்று எது?

I. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

II. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.

III. திருக்கை வழக்கம், சிலையெழுபது, சடகோபர் அந்தாதி ஆகியன குலசேகராழ்வாரின் பிற நூல்கள்.

IV. குலசேகராழ்வார் மயிலாப்பூரில் தங்கி சேவை புரிந்தார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) IV மட்டும் சரி

42. _________ நாட்டின் வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் _________ ஆம் ஆண்டு நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

A) இங்கிலாந்து, 1914

B) அமெரிக்கா, 1924

C) ரஷ்யா, 1934

D) அயர்லாந்து, 1944

43. __________ ஆண்டுகளுக்கு முன் __________ என்பவர் __________ நூலில், திருஅண்டப் பகுதியில் இவ்வாறாக எழுதுகிறார். “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் …. சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”.

A) 1000, கம்பர், கம்பராமாயணம்

B) 1100, இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்

C) 1200, சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை

D) 1300, மாணிக்கவாசகர், திருவாசகம்

44. பரிபாடல் __________ நூல்களுள் ஒன்றாகும்.

A) பத்துப்பாட்டு

B) எட்டுத்தொகை

C) சிற்றிலக்கியம்

D) ஐம்பெரும் காப்பியங்கள்

45. பரிபாடல் மற்றும் சங்க இலக்கியம் பற்றிய சரியான கூற்று எது?

I. பரிபாடல் – இந்நூல் ஓங்கு பரிபாடல் எனும் புகழுடையது. இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.

II. உரையாசிரியர்கள் பரிபாடலில் 70 பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.

III. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, அறிவாற்றல், இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

46. பரிபாடல் __________ ஆகும்.

A) இலக்கண நூல்

B) நாடகம்

C) இசைப்பாடல்

D) இவற்றில் ஏதுமில்லை

47. கீழ்க்கண்டவற்றுள் பெருவெடிப்புக் காட்சி – பற்றி கூறும் நூல் எது?

A) பரிபாடல்

B) கலித்தொகை

C) நற்றிணை

D) ஐங்குறுநூறு

48. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகம் எங்கு உள்ளது?

A) ஈரோடு, கோபிசெட்டி பாளையம்

B) திருவாரூர், மன்னார்குடி

C) சென்னை, கோட்டூர்புரம்

D) இவற்றில் ஏதுமில்லை

49. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் __________ ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பத்துக் காட்சிக் கூடங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சி பூங்கா, புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூங்கா, இயந்திரவியல் பூங்கா, குழந்தைகள் விளையாடத்தக்க பொம்மைகளைக் கொண்ட பூங்காக்கள் உள்ளன.

A) 1966

B) 1978

C) 1988

D) 2000

50. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கோளரங்கம் தனித்துவம் வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன்முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை இங்குதான் உள்ளது. இது __________ ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

A) 2000

B) 2003

C) 2006

D) 2009

51. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திக்கூர்மை.

II. அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

52. தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் யார்?

A) அப்துல் கலாம்

B) ஸ்டீபன் ஹாக்கிங்

C) சிவன்

D) இவர்களில் யாருமில்லை

53. ஸ்டீபன் ஹாக்கிங் – பற்றிய சரியான கூற்று எது?

I. இங்கிலாந்தின் மருத்துவமனை ஒன்றில் 1963ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவத்திற்குப் பின் அவர் இன்னும் சில திங்களே உயிர் வாழ்வார் என்றும் விரைவில் இறந்து விடுவார் என்றும் மருத்துவர்கள் அறிக்கை தந்தனர்.

II. பக்கவாதம் என்னும் நரம்பு நோய்ப் பாதிப்புடன் அவர், மருத்துவ உலகமே மிரண்டுபோகுமளவு மேலும் 53 ஆண்டுகள் இயங்கினார்.

III. 1985இல் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்தார்.

IV. கன்னத் தசையமைவு மூலம் தன் கருத்தைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வுகளுக்குத் துணையாகச் செயற்கை நுண்ணறிவுக் கணினி செயல்பட்டது.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

54. பேரண்டப் பெருவெடிப்பு – பற்றிய ஸ்டீபன் ஹாக்கிங் கூறியனவற்றுள் சரியானது எது?

I. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் (BIG BANG THEORY) உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்.

II. இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை மறுத்தார்.

III. பிரபஞ்சத்தை இயக்கம் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை, என்றார்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

55. கருந்துளை – பற்றிய சரியான கூற்று எது?

I. நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது.

II. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. சில நேரங்களில் உண்மை, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்து விடுகிறது.

III. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும். புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்துகொள்ள முயல்கிறது என்று கூறுகிறார், ஸ்டீபன் ஹாக்கிங்.

IV. சில சமயங்களில் கருந்துளையின் ஈர்ப்பு விசை பூமியில் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது.

A) I, II சரி III, IV தவறு

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

56. _____________ நாட்டின் அறிவியலாளர் _____________ என்பவர்தாம் கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஏன் ஒளியும் கூடத் தப்ப முடியாது. உள்ளே ஈர்க்கப்படும். இவ்வாறு உள் சென்ற யாவையும் வெளிவரமுடியாததால் இதனைக் கருந்துளை எனலாம் என்று இவர் கருதினார்.

A) அமெரிக்கா, ஜான் வீலர்

B) இங்கிலாந்து, லாரல் சுமி

C) அயர்லாந்து, செபாஸ்டியன்

D) ரஷ்யா, சுர்ரம் ரகி

57. ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை – ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய சரியான கூற்று எது?

I. கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது.

II. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து (Event Horizon) கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

III. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்துவிடும்.

IV. ஸ்டீபன் ஹாக்கிங்கின் இந்த ஆராய்ச்சி முடிவு ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று அழைக்கப்படுகிறது. இது கருந்துளை பற்றிய முந்தைய கருத்துகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங், கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று நிறுவினார்.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

58. ஐன்ஸ்டைன், நியூட்டன் முதலானோர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவியல் முன்னோடிகள். இவர், அவர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார். நியூட்டன், _______________ பல்கலைக்கழகத்தில் வகித்த _______________ துறையின் ‘லூகாசியன் பேராசிரியர்’ என்ற மதிப்பு மிகுந்த பதவியை ஸ்டீபன் ஹாக்கிங்கும் வகித்திருக்கிறார்.

A) நாட்டிங்காம், அறிவியல்

B) ஆக்ஸ்போர்டு, புவியியல்

C) கேம்பிரிட்ஜ், கணக்கியல்

D) இவற்றில் ஏதுமில்லை

59. _______________ என்பவர் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவர் காலத்தில் E = MC2 எனும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டுகொண்டது.

A) ஸ்டீபன் ஹாக்கிங்

B) ஐன்ஸ்டைன்

C) நியூட்டன்

D) இவற்றில் ஏதுமில்லை

60. கருந்துளை குறித்த தன்னுடைய ஆய்வை ஐன்ஸ்டைன் போல, கோட்பாடுகளாக வெளியிடாமல், ________________ இயக்கத்தோடு ஒப்பிட்டு ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது.

A) விண்மீன்

B) சூரியன்

C) காற்று

D) ஆகாயம்

61. அறிவியல் கோட்பாடுகளை எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங் வாங்கிய விருதுகளுள் சரியானது எது?

I. அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது (Presidential medal of Freedom), ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது

II. உல்ஃப் விருது (Wolf Foundation Prize), காப்ளி பதக்கம் (Copler Medal), அடிப்படை இயற்பியல் பரிசு (Fundamental Physics Prize)

III. நோபல் பரிசு, பாரத ரத்னா

IV. பத்ம ஸ்ரீ, ஆஸ்கர், மேன் புக்கர்

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி.

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

62. ஹாக்கிங், _______________ என்பவரின் நினைவு நாளில் பிறந்து, _______________ என்பவரின் பிறந்த நாளில் இறந்தது அறிவியலைப் பொறுத்தவரை ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அந்தத் தற்செயலிலும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இம் மூன்று அறிவியலாளர்களும் அவரவர் காலத்தில் இந்தப் பேரண்டத்தைப் பற்றி இருந்த புரிதலைப் பலமடங்கு வளர்த்தவர்கள்; பேரண்டத்தைப் பற்றி மனித இனம் நம்பியதைப் புரட்டிப் போட்டவர்கள். ஹாக்கிங்குடைய துணிச்சல், உறுதி, அறிவாற்றல், நகைச்சுவை உணர்வு முதலானவை உலக மக்களால் என்றும் நினைவுகூரப்படும்.

A) நியூட்டன், ராண்ட்ஜன்

B) தாமசு ஆல்வா எடிசன், அப்துல் கலாம்

C) கலீலியோ, ஐன்ஸ்டைன்

D) இவற்றில் ஏதுமில்லை

63. தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? – என்று கூறியவர் யார்?

A) ஸ்டீபன் ஹாக்கிங்

B) எடிசன்

C) நியூட்டன்

D) கலிலியோ

64. ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் – கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. 2012 இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் “தொடக்க விழா நாயகர்” என்ற சிறப்பைப் பெற்றார். ‘அடுத்த தலைமுறை’ (The next generation), ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ (The Bigbang Theory) உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்றார்.

II. சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

III. போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

IV. ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான ஒன்று, அவர் இமயமலை சென்றது.

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

65. உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ, ஊனமோ ஒருவருக்குக் குறையாகாது; ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் ______________?

A) கலிலியோ

B) எடிசன்

C) நியூட்டன்

D) ஸ்டீபன் ஹாக்கிங்

66. ‘விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை’ குறும்படம் யாரைப்பற்றியது?

A) கல்பனா சாவ்லா

B) ஸ்டீபன் ஹாக்கிங்

C) ரைட் சகோதரர்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

67. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் ________________ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ________________ ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையானது.

A) இருபது, 1975

B) நாற்பது, 1988.

C) ஐம்பது, 2000

D) அறுபது, 2010

68. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” (கரூர் மாவட்டத்தின் கருவூர் (கரூர் )) – என்று கூறும் நூல் எது?

A) ஐங்குறுநூறு

B) கலித்தொகை

C) புறநானூறு

D) அகநானூறு.

69. “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்துவிடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்துகொள்ளப்போவதையும் உள்ளடக்கியது – என்று கூறியவர் யார்?

A) ஐன்ஸ்டைன்

B) ஸ்டீபன் ஹாக்கிங்

C) கல்பனா சாவ்லா

D) ரைட் சகோதரர்கள்

70. “வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” – என்று கூறியவர் யார்?

A) ஐன்ஸ்டைன்

B) ஸ்டீபன் ஹாக்கிங்

C) கல்பனா சாவ்லா

D) ரைட் சகோதரர்கள்

71. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இருதிணை: ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.

II. ஐம்பால்: பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால் – பகுப்பு; பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.

III. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.

IV. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

72. உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் – சரியானது எது?

I. வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்

II. மகள், அரசி, தலைவி – பெண்பால்

III. மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்

IV. நாற்காலி, மேசை – பலவின்பால்

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

73. அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் – சரியானது எது?

I. அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும். எ.கா. யானை, புறா, மலை

II. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும். எ.கா. பசுக்கள், மலைகள்

A) I மட்டும் சரி

B) I, II இரண்டுமே சரி

C) II மட்டும் சரி

D) I, II இரண்டுமே தவறு

74. மூவிடம் பற்றிய சரியான கூற்று எது?

I. தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.

II. தன்மை – தன்மைப் பெயர்கள்: நான், யான், நாம், யாம்; தன்மை வினைகள்: வந்தேன், வந்தோம்.

III. முன்னிலை – முன்னிலைப் பெயர்கள்: நீ, நீர், நீவிர், நீங்கள்; முன்னிலை வினைகள்: நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்.

IV. படர்க்கை – படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அது, அவை; படர்க்கை வினைகள்: வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்தது, பறந்தன.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

75. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______________ எனப்படும்.

A) வழாநிலை

B) வழு

C) வழுவமைதி

D) இவற்றில் ஏதுமில்லை

76. இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______________ எனப்படும்.

A) வழாநிலை

B) வழு

C) வழுவமைதி

D) இவற்றில் ஏதுமில்லை

77. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது _______________ ஆகும்.

A) வழாநிலை

B) வழு

C) வழுவமைதி

D) இவற்றில் ஏதுமில்லை

78. வழு – கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. திணை – செழியன் வந்தது; பால் – கண்ணகி உண்டான்.

II. இடம் – நீ வந்தேன்; காலம் – நேற்று வருவான்.

III. வினா – ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்டல்; விடை – ‘கண்ணன் எங்கே இருக்கிறார்?’ என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்.

IV. மரபு – தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

79. வழாநிலை – கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. திணை – செழியன் வந்தான்; பால் – கண்ணகி உண்டாள்.

II. இடம் – நீ வந்தாய்; காலம் – நேற்று வந்தான்.

III. வினா – இரு விரல்களைக் காட்டி ‘எது சிறியது? எது பெரியது?’ என்று கேட்டல். விடை – கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்.

IV. மரபு – தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

80. “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது _______________ ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

A) திணை வழுவமைதி

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி

D) கால வழுவமைதி

81. “வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது _______________ ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

A) திணை வழுவமைதி

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி

D) கால வழுவமைதி

82. மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது _______________ ஆகும்.

A) திணை வழுவமைதி

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி

D) கால வழுவமைதி

83. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் _______________ ஆக ஏற்றுக் கொள்கிறோம்.

A) திணை வழுவமைதி

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி

D) கால வழுவமைதி

84. “கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்”- பாரதியார். குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது ______________ ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

A) மரபு வழுவமைதி

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி

D) கால வழுவமைதி

85. இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் _______________ எனப்படும். அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை _______________ எனப்படும்.

A) வழு, வழாநிலை

B) வழு, வழாநிலை

C) வழுவமைதி, வழாநிலை

D) இவற்றில் ஏதுமில்லை

86. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக – சரியானது எது?

I. அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் – கால வழுவமைதி

II. “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான் – இட வழுவமைதி

III. சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் – மரபு வழுவமைதி

IV. செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார் – திணை வழுவமைதி.

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

87. ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

A) குலசேகராழ்வாரிடம் இறைவன்

B) இறைவனிடம் குலசேகராழ்வார்

C) மருத்துவரிடம் நோயாளி

D) நோயாளியிடம் மருத்துவர்

88. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

A) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

B) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

C) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

D) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

89. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

A) வானத்தையும் பாட்டையும்

B) வானத்தையும் புகழையும்

C) வானத்தையும் பூமியையும்

D) வானத்தையும் பேரொலியையும்

90. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –

A) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

B) இடவழுவமைதி, மரபு வழுவமைதி

C) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

D) கால வழுவமைதி, இடவழுவமைதி

91. முகந்தெரியா நபரிடையே இனம்புரியா உறவு முறை நட்பெனும் சங்கிலிக்குள் நாடெல்லாம் சங்கமிக்கும் வாடிக்கை செய்பவரின் கேளிக்கை கூத்துகளை வேடிக்கை பார்ப்பதனை வாழ்க்கையெனக் கொண்ட பலர் தேடியுமே கிடைக்காத தேசம் கடந்த உறவுகளை இணையத்தின் தேடலினால் நிமிடத்தில் அறியும் சிலர் பகடிகளின் பகிர்ந்தளிப்பும் விருப்பத்தின் தெரிவிப்பும் கருத்துக்களின் பரிமாற்றம் தினமும் இங்கு இடம்பெறுமே – இந்த பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) மதன் கார்க்கி

B) வைரமுத்து

C) சச்சிதானந்தன்

D) டெபோரா பர்னாந்து (இலங்கைத் தமிழ்க் கவிஞர்)

92. பலர் அறிந்த பாடல்வரியும் பகலுணவின் சுவையினையும் பாட்டி தந்த பரிசினையும் பறைசாற்றும் வாய்ப்பிதுவே புகைப்படத்தில் தெரிந்தமுகம் பார்த்ததுமோர் புன்சிரிப்பு உரையாடல் செய்கையிலே அர்த்தமற்ற கலகலப்பு பரீட்சைக்கு முன்தினமும் புத்தகத்தைத் திறவாதோர் பரீட்சையின் நொடிவரைக்கும் திறந்து வைப்பதிதுவன்றோ புத்தகத்தின் மத்தியிலே மயிலிறகை வைத்தவர்கள் -முகப் புத்தகத்தைத் திறந்தவுடன் உணர்வுகளை வைப்பதேனோ – இந்த பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) மதன் கார்க்கி

B) வைரமுத்து

C) சச்சிதானந்தன்

D) டெபோரா பர்னாந்து (இலங்கைத் தமிழ்க் கவிஞர்)

93. காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா? எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச் செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காது கேட்கும். பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம் – இந்த கூற்று கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) வர்ணம்

B) கிரியா

C) யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு

D) இவற்றில் ஏதுமில்லை

94. நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோல வெறிபடைத்தோம்; உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்; பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ? – இந்த பாடலின் ஆசிரியர் பெயர் என்ன?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) பாரதியார்

D) வாணிதாசன்

95. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்

II. Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்

III. Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்

IV. Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

96. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்

II. Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்

III. Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்

IV. Mini Computer – இணையக் கணினி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

97. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் – நீலமணி

II. அன்றாட வாழ்வில் அறிவியல் – ச. தமிழ்ச் செல்வன்

III. காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!