Science Questions

8th Std Science Lesson Wise Questions in Tamil – Part 3

8th Science Lesson 22 Questions in Tamil

22] தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு

1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நமது பூமி பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நிரப்பப்பட்டுள்ளது.

2] பூமியில் சுமார் 70 – 100 லட்சம் இனங்கள் உள்ளன. இந்த விலங்குகளின் மொத்த தொகை பல்லுயிர் என அழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நமது பூமி பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நிரப்பப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பூமியில் சுமார் 70 – 100 லட்சம் இனங்கள் உள்ளன. இந்த விலங்குகளின் மொத்த தொகை பல்லுயிர் என அழைக்கப்படுகிறது.

2. _________ என்பது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் அத்தியாவசிய சார்புநிலை ஆகும்.

A) உயிர்

B) பன்முகத்தன்மை

C) பல்லுயிர் தன்மை

D) உயிர் பன்முகத்தன்மை

விளக்கம்: உயிர் பன்முகத்தன்மை பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களின் அத்தியாவசிய சார்புநிலை ஆகும்.

3. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை ?

1] உயிர் என்றால் வாழ்க்கை, பன்முகத்தன்மை என்பது பல்வேறு ஆகும்.

2] உயிர் பன்முகத்தன்மை என்பது பூமியில் உள்ள பல்வேறு வகையான உயிர் வடிவங்கள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உயிர் என்றால் வாழ்க்கை, பன்முகத்தன்மை என்பது பல்வேறு அல்லது வேறுபட்டது. ஆகவே உயிர் பன்முகத்தன்மை என்பது பூமியில் உள்ள பல்வேறு வகையான உயிர் வடிவங்கள் ஆகும்.

4. புதுப்பிக்கத்தக்க வளங்கள் _________

A) நிலக்கரி

B) பெட்ரோலியம்

C) கனிமம்

D) காடுகள்

விளக்கம்: புதுப்பிக்கத்தக்க வளங்கள் காடுகள் ஆகும்.

5. கூற்று(A): காடுகள் உலகின் நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதத்தை உள்ளடக்கியது.

காரணம்(R): ஆக்ஸிஜனை உருவாக்கி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை பராமரிக்கின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: காடுகள் உலகின் நிலப்பரப்பில் சுமார் 30 சதவீதத்தை உள்ளடக்கியது. காடுகள் ஆக்ஸிஜனை உருவாக்கி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை பராமரிக்கின்றன.

6. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மரங்கள் காகிதம் மற்றும் மருத்துவ தாவரங்கள் போன்ற பல முக்கியமான பொருட்களை காடுகள் வழங்குகின்றன.

2] காடுகள் நீர் வளத்தையும், மண்ணையும் பாதுகாக்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மரங்கள் காகிதம் மற்றும் மருத்துவ தாவரங்கள் போன்ற பல முக்கியமான பொருட்களை காடுகள் வழங்குகின்றன. காடுகள் நீர் வளத்தையும், மண்ணையும் பாதுகாக்கின்றன.

7. காடழிப்பு என்றால் _____________

A) காடுகளை அழித்தல்

B) தாவரங்களை வளர்ப்பது

C) தாவரங்களை கவனிப்பது

D) இவை எதுவுமில்லை

விளக்கம்: மனிதனின் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக காடுகளை அழிப்பது காடழிப்பு என்று அழைக்கப்படுகிறது.

8. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] காடழிப்பு காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு, மழையின் குறைபாடு போன்ற பல சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

2] இது பல வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காடழிப்பு காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு, மழையின் குறைபாடு போன்ற பல சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இது பல வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது.

9. கூற்று(A): காடழிப்பு இயற்கையால் ஏற்படலாம் அல்லது அது மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம்.

காரணம்(R): தீ மற்றும் வெள்ளம் போன்றவை காடழிப்புக்கான இயற்கை காரணங்கள்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: காடழிப்பு இயற்கையால் ஏற்படலாம் அல்லது அது மனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். தீ மற்றும் வெள்ளம் போன்றவை காடழிப்புக்கான இயற்கை காரணங்கள் ஆகும்.

10. காடழிப்புக்கு காரணமான மனித நடவடிக்கைகள் யாவை?

A) விவசாய விரிவாக்கம்

B) கால்நடை வளர்ப்பு

C) சட்டவிரோத மரம் வெட்டுதல்,

D) இவை அனைத்தும்

விளக்கம்: காடழிப்புக்கு காரணமான மனித நடவடிக்கைகளான விவசாய விரிவாக்கம், கால்நடை வளர்ப்பு, சட்டவிரோத மரம் வெட்டுதல், சுரங்கம், எண்ணெய் பிரித்தெடுத்தல், அணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும்.

11. கூற்று(A): அதிகரித்து வரும் மக்கள்தொகையுடன், உணவு உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது.

காரணம்(R): பயிர்கள் மற்றும் கால்நடை மேய்ச்சலுக்காக அதிக அளவு மரங்கள் வெட்டப்படுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அதிகரித்து வரும் மக்கள்தொகையுடன், உணவு உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பயிர்கள் மற்றும் கால்நடை மேய்ச்சலுக்காக அதிக அளவு மரங்கள் வெட்டப்படுகின்றன.

12. விவசாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எத்தனை சதவீத காடுகள் அழிக்கப்படுகின்றன?

A) 30%

B) 40%

C) 50%

D) 60%

விளக்கம்: நிலத்தைப் பெறுவதற்கும் விவசாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் 40% க்கும் மேற்பட்ட காடுகள் அழிக்கப்படுகின்றன.

13. நகரங்களின் விரிவாக்கத்திற்கு காரணமாவது எது?

A) விவசாய விரிவாக்கம்

B) நகரமயமாக்கல்

C) சுரங்க தொழில்

D) அணைகள் அமைத்தல்

விளக்கம்: மக்கள்தொகை அதிகரிப்பு நகரங்களின் விரிவாக்கத்திற்கு காரணமாகிறது.

14. கூற்று(A): நகரங்களின் விரிவாக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் குடியேற்றத்தை நிறுவ அதிக நிலம் தேவைப்படுகிறது.

காரணம்(R): நகரமயமாக்கல் காரணமாக சாலைகள் அமைத்தல், வீடுகளின் பெருக்கம், கனிம சுரண்டல் மற்றும் தொழில்களின் விரிவாக்கம் போன்ற தேவைகளும் எழுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நகரங்களின் விரிவாக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் குடியேற்றத்தை நிறுவ அதிக நிலம் தேவைப்படுகிறது. நகரமயமாக்கல் காரணமாக சாலைகள் அமைத்தல், வீடுகளின் பெருக்கம், கனிம சுரண்டல் மற்றும் தொழில்களின் விரிவாக்கம் போன்ற தேவைகளும் எழுகின்றன. இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்படுகின்றன.

15. கூற்று(A): நிலக்கரி, வைரம் மற்றும் தங்கம் சுரங்கத்திற்கு அதிக அளவு வன நிலம் தேவைப்படுகிறது.

காரணம்(R): வனப்பகுதியை அழிக்க ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நிலக்கரி, வைரம் மற்றும் தங்கம் சுரங்கத்திற்கு அதிக அளவு வன நிலம் தேவைப்படுகிறது. வனப்பகுதியை அழிக்க ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும் சுரங்கத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி அருகிலுள்ள தாவரங்களை பாதிக்கிறது.

16. கூற்று(A): அதிகரித்து வரும் மக்களுக்கேற்ப நீர் வழங்க, பெரிய அளவிலான அணைகள் கட்டப்படுகின்றன.

காரணம்(R): வனப்பகுதியின் பெரும் பகுதி அழிக்கப்படுகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அதிகரித்து வரும் மக்களுக்கேற்ப நீர் வழங்க, பெரிய அளவிலான அணைகள் கட்டப்படுகின்றன. எனவே, வனப்பகுதியின் பெரும் பகுதி அழிக்கப்படுகிறது.

17. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] காகிதம், தீக்குச்சி, தளவாடங்கள் போன்ற மர அடிப்படையிலான தொழில்களுக்கு கணிசமான அளவு மர விநியோகம் தேவை.

2] எரிபொருள் விநியோகத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் வெட்டப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: நமது அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நமக்கு மரம் தேவை. காகிதம், தீக்குச்சி, தளவாடங்கள் போன்ற மர அடிப்படையிலான தொழில்களுக்கு கணிசமான அளவு மர விநியோகம் தேவை. எரிபொருள் விநியோகத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் வெட்டப்படுகின்றன.

18. மரம் பொதுவாக _________ ஆக பயன்படுத்தப்படுகிறது.

A) எரிபொருள்

B) ஆற்றல்

C) வீடுசாமன்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மரம் பொதுவாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சிலர் சட்டவிரோத மரம் வெட்டுவதில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மரங்களை அழிக்கின்றனர். சில மதிப்புமிக்க தாவரங்கள் அழிய இதுவே முக்கிய காரணம்.

19. ‘சிப்கோ’ என்ற சொல்லின் பொருள் _________

A) ஒட்டிக்கொள்வது

B) கடைபிடிப்பது

C) காப்பாற்றுவது

D) பாதுகாப்பது

விளக்கம்: சிப்கோ என்ற சொல்லுக்கு ‘ஒட்டிக்கொள்வது’ அல்லது ‘கட்டிப்பிடிப்பது’ என்று பொருள்.

20. சிப்கோ இயக்கத்தின் நிறுவனர் யார்?

A) சுந்தர்லால் பகுனா

B) சுந்தர்லால்

C) பகுனா

D) சந்தர்லால்

விளக்கம்: சிப்கோ இயக்கத்தின் நிறுவனர் சுந்தர்லால் பகுனா ஆவார்.

21. சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு_________

A) 1980

B) 1970

C) 1975

D) 1985

விளக்கம்: சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1970 ஆகும்.

22. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சிப்கோ இயக்கம் முதன்மையாக வன பாதுகாப்பு இயக்கம்.

2] மரங்களை பாதுகாத்தல் மற்றும் காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல் என்பது இதன் நோக்கமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சிப்கோ இயக்கம் முதன்மையாக வன பாதுகாப்பு இயக்கம் ஆகும். மரங்களை பாதுகாத்தல் மற்றும் காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல் என்பது இதன் நோக்கமாகும்.

23. பல்லுயிர் மற்றும் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது எது?

A) காட்டுத் தீ

B) சுரங்க தொழில்

C) விவசாய விரிவாக்கம்

D) நகரமயமாக்கல்

விளக்கம்: பல்லுயிர் மற்றும் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது காட்டுத் தீ  ஆகும்.

24. கூற்று(A): சூறாவளிகள் மரங்களை பெரிய அளவில் அழிக்கின்றன.

காரணம்(R): மரங்களை அழிப்பது மட்டுமல்லாமல், அவற்றைச் சார்ந்திருக்கும் பலரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: சூறாவளிகள் மரங்களை பெரிய அளவில் அழிக்கின்றன. அவை மரங்களை அழிப்பது மட்டுமல்லாமல், அவற்றைச் சார்ந்திருக்கும் பலரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன.

25. பொருத்துக

a) பானி – 1] தமிழ்நாடு

b) கஜா – 2] ஒரிசா

c) ஒக்கி – 3] தமிழ்நாடு

d) பேத்த – 4] தமிழ்நாடு

e) வர்தா – 5] ஆந்திரா

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 2 3 4 5 1

D) 3 4 5 1 2

26. பொருத்துக

a) பானி – 1] 2019

b) கஜா – 2] 2018

c) ஒக்கி – 3] 2018

d) பேத்த – 4] 2017

e) வர்தா – 5] 2016

a b c d e

A) 1 2 3 4 5

B) 4 1 2 5 3

C) 2 3 4 5 1

D) 3 4 5 1 2

27. ஒவ்வொரு ஆண்டும் உலகில் எவ்வளவு காடுகள் வெட்டப்படுகின்றன?

A) 1.1 கோடி ஹெக்டேர்

B) 1.0 கோடி ஹெக்டேர்

C) 2.1 கோடி ஹெக்டேர்

D) 1.3கோடி ஹெக்டேர்

விளக்கம்: ஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.1 கோடி ஹெக்டேர் காடுகள் வெட்டப்படுகின்றன.

28. இந்தியாவில் எவ்வளவு காடுகள் அழிக்கப்படுகின்றன?

A) 10 லட்சம் ஹெக்டேர்

B) 11 லட்சம் ஹெக்டேர்

C) 12 லட்சம் ஹெக்டேர்

D) 13 லட்சம் ஹெக்டேர்

விளக்கம்: இந்தியாவில் மட்டும் 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன.

29. குளிர்காலத்தில் எப்பறவைகள் இந்தியாவுக்கு குடிபெயர்கின்றன?

A) நைஜீரிய கிரேன்

B) ஆஸ்திரேலிய கிரேன்

C) ஆஸ்திரிய கிரேன்

D) சைபீரிய கிரேன்

விளக்கம்: சைபீரியாவில் கடுமையான சூழ்நிலைகளில் இருந்து தப்பிப்பதற்கும், இந்தியாவில் வசதியான சூழ்நிலைகள் மற்றும் உணவைப் பெறுவதற்கும் சைபீரிய கிரேன் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்கிறது.

30. சைபீரிய கிரேன் ஒரே நாளில் எவ்வளவு மைல்கல் பயணிக்கிறது?

A) 300 மைல்கல்

B) 400 மைல்கல்

C) 200 மைல்கல்

D) 100 மைல்கல்

விளக்கம்: சைபீரிய கிரேன் ஒரே நாளில் சராசரியாக 200 மைல்கள் பயணிக்கிறது.

31. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளிலிருந்து தப்பிக்க பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.

2] சாதகமற்ற பருவத்தில் நீண்ட தூரம் பல பறவைகள் மற்றும் பல விலங்குகள் இடம் பெயர்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளிலிருந்து தப்பிக்க பறவைகள் நீண்ட தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது. சாதகமற்ற பருவத்தில் நீண்ட தூரம் பல பறவைகள் மற்றும் பல விலங்குகள் இடம் பெயர்கின்றன.

32. உலகின் 80% க்கும் மேற்பட்ட இனங்கள் எங்கு காணப்படுகின்றன?

A) வெப்பமண்டல காடுகள்

B) மழைக்காடுகள்

C) வெப்பமண்டல மழைக்காடுகள்

D) பருவக்காற்று காடுகள்

விளக்கம்: உலகின் 80% க்கும் மேற்பட்ட இனங்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் உள்ளன.

33. கூற்று(A): மரங்களின் வேர்கள் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி மண்ணரிப்பை தடுக்கின்றன.

காரணம்(R): மரங்கள் வெட்டப்படும்போது, மண் அரிக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் நீக்கப்படும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R விளக்கம்

விளக்கம்: மரங்களின் வேர்கள் தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி மண்ணரிப்பை தடுக்கின்றன. மரங்கள் வெட்டப்படும்போது, மண் அரிக்கப்பட்டு, ஊட்டச்சத்துக்கள் நீக்கப்படும்.

34. கூற்று(A): மரங்களை வெட்டும்போது வெளியாகும் நீராவியின் அளவு அதிகரிக்கிறது.

காரணம்(R): மழைப்பொழிவு அதிகரிக்கிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மரங்களை வெட்டும்போது வெளியாகும் நீராவியின் அளவு குறைகிறது, எனவே மழைப்பொழிவு குறைகிறது.

35. கூற்று(A): மரங்கள் அவற்றின் வேர்களின் உதவியுடன் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சி சேமித்து வைக்கின்றன.

காரணம்(R): மரங்கள் வெட்டப்படும்போது, நீரின் ஓட்டம் சீர்குலைந்து சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ரங்கள் வெட்டப்படும்போது, நீரின் ஓட்டம் சீர்குலைந்து சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.

36. பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் காடுகள்____________

A) அமேசான் காடுகள்

B) ஸ்பைனி காடுகள்

C) க்ரீன் மௌண்டைன் காடுகள்

D) ரெடவுட் காடுகள்

விளக்கம்: அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

37. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அமேசான் காடு உலகின் மிகப்பெரிய மழைக்காடு.

2] இது 60,00,00 சதுர கி.மீ. ஆகும்.

3] இது CO2 ஐ சமன்செய்வதன் மூலம் பூமியின் காலநிலையை உறுதிப்படுத்தவும், புவி வெப்பமடைதலை மெதுவாக்கவும் உதவுகிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 3 சரி 2 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: அமேசான் காடு உலகின் மிகப்பெரிய மழைக்காடு. இது 60,00,000 சதுர கி.மீ. ஆகும். இது CO2 ஐ சமன்செய்வதன் மூலம் பூமியின் காலநிலையை உறுதிப்படுத்தவும், புவி வெப்பமடைதலை மெதுவாக்கவும் உதவுகிறது.

38. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அமேசான் காடு பிரேசிலில் அமைந்துள்ளது.

2] இதில் சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன.

3] உலகின் 30% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 3 சரி 2 தவறு

D) 1, 2 சரி 3 தவறு

விளக்கம்: அமேசான் காடு பிரேசிலில் அமைந்துள்ளது. இதில் சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. உலகின் 20% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

39. கூற்று(A): காடழிப்பு மரங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

காரணம்(R): கார்பன் டை ஆக்சைடு அளவு வளிமண்டலத்தில் குவிகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: காடழிப்பு மரங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது, எனவே கார்பன் டை ஆக்சைடு அளவு வளிமண்டலத்தில் குவிகிறது.

40. கூற்று(A): கார்பன் டை ஆக்சைடானது நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றுடன் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகிறது.

காரணம்(R): இந்த வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கார்பன் டை ஆக்சைடானது நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றுடன் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகிறது. இந்த வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகின்றன.

41. கூற்று(A): வளிமண்டலத்தில் சேரும் குளோரின் ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலைப் உட்கவர்கின்றன.

காரணம்(R): இது புவி வெப்பமடைதல் என்று அழைக்கப்படுகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வளிமண்டலத்தில் சேரும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலைப் உட்கவர்கின்றன. இது வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது புவி வெப்பமடைதல் என்று அழைக்கப்படுகிறது.

42. சமூக வனவியல் என்ற சொல் அமலுக்கு வந்த ஆண்டு ____________

A) 1975

B) 1976

C) 1980

D) 1985

விளக்கம்: சமூக வனவியல் என்ற சொல் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது.

43. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சமூக வனவியல் என்ற சொல் முதன்முதலில் அப்போதைய தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அமுலுக்கு வந்தது.

2] காடுகளை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் தரிசு நிலங்களில் காடுகளை வளர்ப்பது என்பது இதன் நோக்கமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சமூக வனவியல் என்ற சொல் முதன்முதலில் அப்போதைய தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அமுலுக்கு வந்தது. சமூக மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்துடன் காடுகளை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் தரிசு நிலங்களில் காடுகளை வளர்ப்பது என்பது இதன் நோக்கமாகும்.

44. கூற்று(A): பழங்குடி மக்கள் தங்கள் பிழைப்புக்காக காடுகளில் வாழ்கிறார்கள்.

காரணம்(R): காடுகளை அழிப்பது அவர்களின் வாழ்க்கை முறையையும் பாதிக்கிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பழங்குடி மக்கள் தங்கள் பிழைப்புக்காக காடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் உணவு மற்றும் பல வளங்களை காடுகளிலிருந்து பெறுகிறார்கள். காடுகளை அழிப்பது அவர்களின் வாழ்க்கை முறையையும் பாதிக்கிறது.

45. காடு வளர்ப்பின் முக்கியத்துவம் யாவை?

1] காடு வளர்ப்பு காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தங்குமிடம் மற்றும் அவற்றின் உணவு மூலத்தைக் அளிக்கிறது.

2] காடு வளர்ப்பு நிலத்தை பாலைவனமாக்குவதைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காடு வளர்ப்பு காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தங்குமிடம் மற்றும் அவற்றின் உணவு மூலத்தைக் அளிக்கிறது. காடு வளர்ப்பு நிலத்தை பாலைவனமாக்குவதைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது. தரிசு நிலங்கள் பலத்த காற்றை வெளியேற்றி மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. மழையின் போது மேலும் மண் நீக்கப்படும். காடு வளர்ப்பு அதிக மரங்களை வளர்க்க உதவுகிறது, இதனால் அவை ஊட்டச்சத்துக்களுடன் மண்ணைப் இறுக்கி பிடிக்கிறது.

46. எதன் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்____________

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: காடு வளர்ப்பு மூலம் நாம் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். நடப்பட்ட மரங்களால் மழையளவு அதிகரிக்கும்.

47. புவி வெப்பமடைதல், பசுமை இல்ல வாயுக்கள் ஆகியவற்றின் விளைவுகளை எதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்?

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: மரங்களை நடவு செய்வதன் மூலம் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவைக் சமன் செய்ய முடியும், இதனால் காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றின் விளைவுகளை கட்டுப்படுத்த முடியும்.

48. பச்சை பட்டை இயக்கத்தை தொடங்கியவர் ____________

A) மங்காரி மாதாய்

B) அபியா மாதாய்

C) சுந்தர்லால்

D) வாங்கரி மாதாய்

விளக்கம்: பச்சை பட்டை இயக்கத்தை வாங்கரி மாதாய் நிறுவினார்.

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] 1976 ஆம் ஆண்டில் கென்யாவில் பச்சை பட்டை இயக்கம் தொடங்கப்பட்டது.

2] கென்யாவில் இந்த இயக்கம் 52 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளது.

3] 2005 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 2, 3 தவறு

விளக்கம்: 1977 ஆம் ஆண்டில் கென்யாவில் பச்சை பட்டை இயக்கம் தொடங்கப்பட்டது. கென்யாவில் இந்த இயக்கம் 51 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

50. காடு வளர்ப்பின் முக்கியத்துவம் யாவை?

1] காடுகளை உருவாக்குவதால் தீவனம், விறகு மற்றும் பல வளங்களை வழங்குகிறது.

2] ஒவ்வொரு தொழில்களுக்கும் குறிப்பிட்ட வகை மரங்கள் தேவை. குறிப்பிட்ட வகை மரங்களை வளர்க்க காடு வளர்ப்பு நமக்கு உதவுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காடுகளை உருவாக்குவதால் தீவனம், விறகு மற்றும் பல வளங்களை வழங்குகிறது. ஒவ்வொரு தொழில்களுக்கும் குறிப்பிட்ட வகை மரங்கள் தேவை. குறிப்பிட்ட வகை மரங்களை வளர்க்க காடு வளர்ப்பு நமக்கு உதவுகிறது.

51. காடாக்குதலின் முக்கியத்துவம் யாவை?

1] காடாக்குதல் காற்றில் கார்பன் டை ஆக்சைடை குறைப்பதன் மூலம் நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.

2] காடழிப்பின் விளைவுகளை சரிசெய்யவும் மற்றும் புவி வெப்பமடைதலைக் குறைக்கவும் உதவுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: காடாக்குதல் காற்றில் கார்பன் டை ஆக்சைடை குறைப்பதன் மூலம் நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. காடழிப்பின் விளைவுகளை சரிசெய்யவும் மற்றும் புவி வெப்பமடைதலைக் குறைக்கவும் உதவுகிறது.

52. சுற்றுச்சூழலில் எதிர்மறையான விளைவைக் கொண்டுள்ளது எவை?

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: காடழிப்பு சுற்றுச்சூழலில் எதிர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.

53. ஒரு மரம் பெற ஒரு மரக்கன்று நடப்படுவது ____________

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: காடழிப்பில் ஒரு மரம் பெற ஒரு மரக்கன்று நடப்படுகிறது.

54. தாவரங்கள் அல்லது மரங்கள் வளர்க்கப்படும் போது அல்லது நடப்படும் போது, அது ____________ என்று அழைக்கப்படுகிறது.

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: தாவரங்கள் அல்லது மரங்கள் வளர்க்கப்படும் போது அல்லது நடப்படும் போது, அது காடாக்குதல் என்று அழைக்கப்படுகிறது.

55. கீழ்க்கண்டவை எவை என அடையாளம் காணவும்?

1] இயற்கையின் மீது நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.

2] வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக பல மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

3] காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது.

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: மறுகட்டமைப்பு மூலம் சுற்றுச்சூழலை உருவாக்குவதால் இயற்கையின் மீது நல்ல விளைவை ஏற்படுத்துகிறது. வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக பல மரக்கன்றுகள் நடப்படுகின்றன. காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது. காடழிப்பைத் தவிர்க்க இது நடைமுறையில் உள்ளது.

56. கீழ்க்கண்டவை எவை என அடையாளம் காணவும்?

1] காடுகள் இல்லாத புதிய பகுதிகளில் மரங்கள் நடப்படுகின்றன.

2] அதிக பகுதியை காடுகளின் கீழ் கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது.

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: காடுகள் இல்லாத புதிய பகுதிகளில் மரங்கள் நடப்படுகின்றன. அதிக பகுதியை காடுகளின் கீழ் கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது.

57. நீர்நிலைகளை மறுகட்டமைப்பு செய்வது ____________

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: வன மறுசீரமைப்பு மண் அரிப்பு மூலம் ஏற்படும் சேதத்தை மாற்றியமைக்கும். சுற்றுச்சூழல் நல்வாழ்வின் முக்கிய அம்சங்களான நீர்நிலைகளை மறுகட்டமைப்பு செய்யும்.

58. நீர் சுழற்சியை பராமரிப்பது ____________

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: மரங்கள் வேர்கள் வழியாக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் காடாக்குதல் இப்பகுதியின் நீர் சுழற்சியை பராமரிக்கிறது.

59. கீழ்க்கண்டவை எவை என அடையாளம் காணவும்?

1] மரங்களின் வாயு பரிமாற்றம் வளிமண்டலத்தின் ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும். வெப்பநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.

2] வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவிலிருந்து உயிரினங்களை மீட்டெடுக்கிறது.

A) காடு வளர்ப்பு

B) சமூக வனவியல்

C) காடாக்குதல்

D) காடழிப்பு

விளக்கம்: மரங்களின் வாயு பரிமாற்றம் வளிமண்டலத்தின் ஈரப்பதத்தை மீட்டெடுக்கவும். வெப்பநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. காடாக்குதல் வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவிலிருந்து உயிரினங்களை மீட்டெடுக்கிறது.

60. உலக பல்லுயிர் தினம் ____________

A) மே 23

B) ஜூன் 22

C) மே 22

D) ஜூன் 22

விளக்கம்: ஒவ்வொரு ஆண்டும், மே 22 உலக பல்லுயிர் தினமாக கொண்டாடப்படுகிறது .

61. கீழ்க்கண்டவற்றில் ஆபத்தான நிலையில் இல்லாத உயிரினம் எது?

A) பனிச்சிறுத்தை

B) வங்காள புலி

C) ஆசிய சிங்கம்

D) யானை இனம்

விளக்கம்: பனிச்சிறுத்தை, வங்காள புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்திய ராட்சத அணில் ஆகியவை இந்தியாவில் ஆபத்தான நிலையிலுள்ள விலங்குகள்.

62. பொருத்துக

a) உலக காடுகள் தினம் – 1] மார்ச் 21

b) உலக நீர் தினம் – 2] மார்ச் 22

c) சுற்று சூழல் தினம் – 3] ஜூன் 05

d) ஓசோன் தினம் – 4] செப்டம்பர் 16

e) உலக இயற்கை பாதுகாப்பு தினம் – 5] ஜூன் 28

a b c d e

A) 3 2 1 4 5

B) 4 1 2 5 3

C) 2 4 3 1 5

D) 1 2 3 4 5

63. கூற்று(A): வெட்டுக்கிளி ஒரு பறவை இனம்.

காரணம்(R): இது இந்தியாவில் மறைந்து வருகிறது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A தவறு மற்றும் R சரி

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வெட்டுக்கிளி ஒரு பூச்சி வகை. இது இந்தியாவில் மறைந்து வருகிறது.

64. பொருத்துக

a) ஊர்வன – 1] பல்லிகள்

b) பறவைகள் – 2] கழுகு

c) பாலூட்டிகள் – 3] கலைமான்

a b c

A) 3 2 1

B) 1 2 3

C) 2 1 3

65. கீழ்க்கண்டவற்றுள் பறவை இனம் அல்லாதது எது?

A) வல்லூறு

B) வண்டி குதிரை

C) வாத்து

D) பிளாக்பக்

விளக்கம்: பறவைகள்: வல்லூறு, கழுகு, வண்டி குதிரை, கழுகு, மயில், புறா, வாத்து.

66. கீழ்க்கண்டவற்றுள் பாலூட்டிகள்அல்லாதது எது?

A) பறக்கும் அணில்

B) சிரு

C) நீல திமிங்கலம்,

D) வல்லூறு

விளக்கம்: பாலூட்டிகள்: புலிகள், சிங்கங்கள், கலைமான் மற்றும் பிளாக்பக் போன்ற மான், சிரு (திபெத்திய ஆடு), கஸ்தூரி மான், காண்டாமிருகம், யானைகள், நீல திமிங்கலம், பறக்கும் அணில், காட்டுப் பூனைகள்.

67. கீழ்க்கண்டவற்றுள் ஆபத்தான நிலையிலுள்ள தாவரங்கள் யாவை?

A) குடை மரம்

B) மலபார் லில்லி

C) ராஃப்லீசியா மலர்

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஆபத்தான நிலையிலுள்ள தாவரங்கள்: குடை மரம், மலபார் லில்லி, ராஃப்லீசியா மலர், இந்திய மல்லோ, முஸ்லி தாவரம்.

68. தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது எது?

A) ராமன் பட்டாம்பூச்சி

B) ஏமன் பட்டாம்பூச்சி

C) விமன் பட்டாம்பூச்சி

D) இனாம் பட்டாம்பூச்சி

விளக்கம்: ஏமன் பட்டாம்பூச்சி தமிழகத்தின் மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்கப்பட்டுளளது.

69. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஏமன் பட்டாம்பூச்சி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுபவை.

2] கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் இதுவும் ஒனறாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஏமன் பட்டாம்பூச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுபவை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் இதுவும் ஒனறாகும்.

70. சமீபத்திய ஆண்டுகளில், அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் ________ வடிவ கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

A) திரவ

B) திட

C) வாயு

D) நெகிழி

விளக்கம்: காற்று மாசுபாடு, நீர் மாசுபாடுபோன்ற மாசுபாடுகளால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் நெகிழி வடிவ கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

71. கூற்று(A): ஒரு காலத்தில் டைனோசர், ஃபெரன்கள் மற்றும் சில ஜம்னோஸ்பெர்ம்கள் பூமியில் பரவலாக பரவியிருந்தன.

காரணம்(R): இடம் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாகவோ அல்லது காலநிலை மாற்றம் காரணமாகவோ இருக்கலாம்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A தவறு மற்றும் R சரி

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு காலத்தில் டைனோசர், ஃபெரன்கள் மற்றும் சில ஜம்னோஸ்பெர்ம்கள் பூமியில் பரவலாக பரவியிருந்தன. அவை பூமியிலிருந்து மறைந்து விட்டன. இடம் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாகவோ அல்லது காலநிலை மாற்றம் காரணமாகவோ இருக்கலாம்.

72. கூற்று(A): நம் சுற்றிலும் வேப்பமரம், ஆலமரம் போன்ற மரங்களை நடவு செய்வது விலங்குகளுக்கு உதவியாக இருக்கும்.

காரணம்(R): பல பறவைகளுக்கு தங்குமிடமாக இந்த மரங்கள் உள்ளன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A தவறு மற்றும் R சரி

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: நம் சுற்றிலும் வேப்பமரம், ஆலமரம் போன்ற பூர்வீக மரங்களை நடவு செய்வது விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். பல பறவைகளுக்கு தங்குமிடமாக இந்த மரங்கள் உள்ளன.

73. கூற்று(A): திட்ட புலி என்பது வனவிலங்கு பாதுகாப்பு திட்டமாகும்.

காரணம்(R): இது 1971 இல் இந்தியாவில் வங்காள புலிகளை பாதுகாக்க தொடங்கப்பட்டது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A தவறு மற்றும் R சரி

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: திட்ட புலி என்பது வனவிலங்கு பாதுகாப்பு திட்டமாகும். இது 1972 இல் இந்தியாவில் வங்காள புலிகளை பாதுகாக்க தொடங்கப்பட்டது.

74. திட்ட புலி திட்டம் செயல்படுத்தப்பட்டது _________

A) ஏப்ரல் 1 1972

B) ஏப்ரல் 1 1973

C) ஏப்ரல் 2 1972

D) ஏப்ரல் 2 1973

விளக்கம்: திட்ட புலி திட்டம் ஏப்ரல் 1, 1973 அன்று செயல்படுத்தப்பட்டது . இது மிகவும் வெற்றிகரமான வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

75. புலி திட்டத்தின் கீழ் மூடப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா_________

A) கிர் பூங்கா

B) நேரு சரணாலயம்

C) அறிஞர் அண்ணா சரணாலயம்

D) கார்பெட் தேசிய பூங்கா

விளக்கம்: புலி திட்டத்தின் கீழ் மூடப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய பூங்கா கார்பெட் தேசிய பூங்கா ஆகும்.

76. ‘திட்டப் புலி’ காரணமாக இந்தியாவில் புலிகளின் மக்கள் தொகை 2006 ல் 1400 -ல் இருந்தது. 2018 இல் _________ ஆக உயர்ந்துள்ளது.

A) 2968

B) 2967

C) 2969

D) 2900

விளக்கம்: ‘திட்டப் புலி’ காரணமாக இந்தியாவில் புலிகளின் மக்கள் தொகை 2006 ல் 1400 -ல் இருந்தது. 2018 இல் 2967 ஆக உயர்ந்துள்ளது.

77. பொருத்துக

a) மெட்ராஸ் வனவிலங்கு சட்டம் – 1] 1873.

b) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் – 2] 1986

c) வங்காள காண்டாமிருக சட்டம் – 3] 1932

d) அகில இந்திய யானை பாதுகாப்பு சட்டம் – 4] 1879

e) காட்டு பறவை மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டம் – 5] 1912

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 2 4 3 1 5

D) 1 2 3 4 5

78. சிவப்பு தரவு புத்தகம் நிறுவப்பட்ட ஆண்டு_________

A) 1966

B) 1965

C) 1964

D) 1962

விளக்கம்: இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு உயிரினங்களின் முழுமையான பதிவைப் பராமரிக்கும் நோக்கத்துடன் சிவப்பு தரவு புத்தகம் 1964 இல் நிறுவப்பட்டது.

79. பொருத்துக

a) IUCN – 1] இயற்கை பாதுகாப்பு க்கான சர்வதேச ஒன்றியம்

b) WWF – 2] உலக வனவிலங்கு நிதி

c) ZSI – 3] இந்திய விலங்கியல் ஆய்வு

d) BRP – 4] உயிர்க்கோள இருப்பு திட்டம்

e) CPCB – 5] மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 2 4 3 1 5

D) 1 2 3 4 5

80. உலக வனவிலங்கு தினம் _________

A) மார்ச் 4

B) மார்ச் 5

C) மார்ச் 3

D) மார்ச் 7

விளக்கம்: உலக வனவிலங்கு தினம் மார்ச் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

81. இந்தியாவில் _________தேசிய பூங்காக்கள் மற்றும் _________சரணாலயங்கள் உள்ளன.

A) 74, 415

B) 73, 416

C) 76, 416

D) 73, 415

விளக்கம்: இந்தியாவில் சுமார் 73 தேசிய பூங்காக்கள், 416 சரணாலயங்கள் மற்றும் 12 உயிர்க்கோள இருப்புக்கள் உள்ளன.

82. கூற்று(A): ஒரு தேசிய பூங்கா என்பது வனவிலங்குகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதி.

காரணம்(R): இந்த பூங்காக்களில் தாவர அல்லது விலங்கு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A தவறு மற்றும் R சரி

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு தேசிய பூங்கா என்பது வனவிலங்குகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பகுதி. இந்த பூங்காக்களில் தாவர அல்லது விலங்கு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

83. பொருத்துக

a) கார்பெட் தேசிய பூங்கா – 1] உத்தரபிரதேசம்

b) துத்வா தேசிய பூங்கா – 2] உத்தரகண்ட்

c) கிர் தேசிய பூங்கா – 3] குஜராத்

d) கன்ஹா தேசிய பூங்கா – 4] மத்திய பிரதேசம்

e) சுந்தர்பன்ஸ் தேசிய பூங்கா – 5] மேற்கு வங்கம்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 2 4 3 1 5

D) 2 1 3 4 5

84. பொருத்துக

a) கார்பெட் தேசிய பூங்கா – 1] 1936

b) துத்வா தேசிய பூங்கா – 2] 1977

c) கிர் தேசிய பூங்கா – 3] 1975

d) கன்ஹா தேசிய பூங்கா – 4] 1955

e) சுந்தர்பன்ஸ் தேசிய பூங்கா – 5] 1984

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 2 4 3 1 5

D) 1 2 3 4 5

85. பொருத்துக

a) கிண்டி தேசியப் பூங்கா – 1] ராமநாதபுரம்

b) மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா – 2] சென்னை

c) இந்திரா காந்தி தேசியப் பூங்கா – 3] நீலகிரி

d) முதுமலை தேசியப் பூங்கா – 4] கோயம்புத்தூர்

e) முக்கூர்த்தி தேசியப் பூங்கா – 5] நீலகிரி

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 2 1 4 3 5

D) 1 2 3 4 5

86. பொருத்துக

a) கிண்டி தேசியப் பூங்கா – 1] 1976

b) மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா – 2] 1980

c) இந்திரா காந்தி தேசியப் பூங்கா – 3] 1989

d) முதுமலை தேசியப் பூங்கா – 4] 1990

e) முக்கூர்த்தி தேசியப் பூங்கா – 5] 1990

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 2 4 3 5

D) 1 2 3 4 5

87. பொருத்துக

a) மேகமலை வனவிலங்கு சரணாலயம் – 1] சென்னை

b) வண்டலூர் வனவிலங்கு சரணாலயம் – 2] தேனி

c) களக்காடு வனவிலங்கு சரணாலயம் – 3] திருநெல்வேலி

d) சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம் – 4] காஞ்சிபுரம்

e) வேடந்தாங்கல் வனவிலங்கு சரணாலயம் – 5] விருதுநகர்

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 2 4 3 5

D) 2 1 3 5 4

88. பொருத்துக

a) மேகமலை வனவிலங்கு சரணாலயம் – 1] 1991

b) வண்டலூர் வனவிலங்கு சரணாலயம் – 2] 2016

c) களக்காடு வனவிலங்கு சரணாலயம் – 3] 1988

d) சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம் – 4] 1976

e) வேடந்தாங்கல் வனவிலங்கு சரணாலயம் – 5] 1936

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 2 4 3 5

D) 2 1 4 3 5

89. . பொருத்துக

a) நந்தாதேவி – 1] உத்தரபிரதேசம்

b) நோக்ரெக் – 2] மேகாலயா

c) மனாஸ் – 3] அஸ்ஸாம்

d) சுந்தர்பன்ஸ் – 4] மேற்குவங்கம்

e) மன்னார்வளைகுடா – 5] தமிழ்நாடு

a b c d e

A) 3 1 2 4 5

B) 4 1 2 5 3

C) 1 2 3 4 5

D) 2 1 4 3 5

90. மிகப் பழமையான மிருகக்காட்சி சாலை_________

A) ரெடவுட் மிருகக்காட்சி சாலை

B) ஸ்பைனி மிருகக்காட்சி சாலை

C) கிர் மிருகக்காட்சி சாலை

D) சோஹன்பிரம் மிருகக்காட்சி சாலை

விளக்கம்: 1759 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வியன்னாவில் உள்ள சோஹன்பிரம் மிருகக்காட்சிசாலையானது மிகப் பழமையான மிருகக்காட்சி சாலையாகும்.

91. இந்தியாவில் முதல் மிருகக்காட்சி சாலை எங்கு நிறுவப்பட்டது?

A) பாரக்பூர்

B) சூரத்

C) மிர்சாபூர்

D) பரச்சாபூர்

விளக்கம்: இந்தியாவில் முதல் மிருகக்காட்சி சாலை 1800 ஆம் ஆண்டில் பரச்சாபூரில் நிறுவப்பட்டது.

92. ப்ளூ கிராஸ் தொடங்கப்பட்ட ஆண்டு _________

A) 1900

B) 1896

C) 1897

D) 1898

விளக்கம்: ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு ஆகும், இது 1897 இல் நிறுவப்பட்டது.

93. முதல் விலங்கு மருத்துவமனை தொடங்கப்பட்ட ஆண்டு _________

A) 1905 மே 14

B) 1906 மே 15

C) 1905 மே 15

D) 1906 மே 16

விளக்கம்: முதல் விலங்கு மருத்துவமனை1906 மே 15 அன்று லண்டனின் விக்டோரியாவில் தனது முதல் விலங்கு மருத்துவமனையைத் திறக்கப்பட்டது.

94. சென்னையில் ப்ளூ கிராஸ் அமைப்பு தொடங்கியவர்_________

A) கேப்டன் வி. சுந்தரம்

B) கேப்டன் வி. லட்சுமி

C) கேப்டன் வி. பிரபாகரன்

D) கேப்டன் வி. மனோகர்

விளக்கம்: கேப்டன் வி. சுந்தரம் அவர்களால் சென்னையில் ப்ளூ கிராஸ் அமைப்பு தொடங்கப்பட்டது.

95. பெட்டா என்பது _________

A) விலங்குகளை காப்பாற்றுதல்

B) விலங்குகளை பராமரித்தல்

C) விலங்குகளுக்கான நெறிமுறை

D) விலங்குகளின் நெறிமுறை சிகிச்சைகளுக்கான மக்கள்

விளக்கம்: பெட்டா என்பது ‘விலங்குகளின் நெறிமுறை சிகிச்சைகளுக்கான மக்கள்’ என்பதைக் குறிக்கிறது.

96. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அழிந்துபோன இனங்கள் என்பது பூமியிலிருந்து முற்றிலும் மறைந்துபோன இனங்கள் ஆகும்.

2] ஆபத்தான இனங்கள் உயிரியல் அழிவுக்கு உடனடி ஆபத்து என்று ஒரு வகை தாவர அல்லது விலங்கு ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அழிந்துபோன இனங்கள் என்பது பூமியிலிருந்து முற்றிலும் மறைந்துபோன இனங்கள் ஆகும். ஆபத்தான இனங்கள் உயிரியல் அழிவுக்கு உடனடி ஆபத்து என்று ஒரு வகை தாவர அல்லது விலங்கு ஆகும்.

97. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] உள்ளூர் இனங்கள் என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இனங்கள் ஆகும்.

2] ஃப்ளோரா என்பது ஆபத்தான உயிரினங்களைப் பற்றி பதிவு செய்தல் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: உள்ளூர் இனங்கள் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இனங்கள் ஆகும். ஃப்ளோரா ஆபத்தான உயிரினங்களைப் பற்றி பதிவு செய்தல் ஆகும்.

98. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சிவப்பு தரவு புத்தகம் என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிகழும் விலங்குகளின் வாழ்க்கை ஆகும்.

2] உலக வெப்பமயமாதல் என்பது புவியில் வெப்பம் அதிகரித்தல் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சிவப்பு தரவு புத்தகம் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிகழும் விலங்குகளின் வாழ்க்கை ஆகும். உலக வெப்பமயமாதல் புவியில் வெப்பம் அதிகரித்தல் ஆகும்.

99. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவு என்பது பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்கள்உயிர் உருப்பெருக்கம் உணவுச் சங்கிலியில் அடுத்தடுத்து அதிக அளவில் உயிரினத்தின் திசுக்களில் நச்சு இரசாயனம் போன்ற பொருட்களின் செறிவு அதிகரிக்கும்.

2] பல்லுயிர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உயிர் வளங்கள் பற்றிய விரிவான உருவாக்கம் கொண்ட ஒரு ஆவணமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பல்லுயிர் என்பது பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்கள்உயிர் உருப்பெருக்கம் உணவுச் சங்கிலியில் அடுத்தடுத்து அதிக அளவில் உயிரினத்தின் திசுக்களில் நச்சு இரசாயனம் போன்ற பொருட்களின் செறிவு அதிகரிக்கும். மக்கள் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உயிர் வளங்கள் பற்றிய விரிவான உருவாக்கம் கொண்ட ஒரு ஆவணமாகும்.

100. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அரிதான மற்றும் ஆபத்தான அழிவிலுள்ள உயிரினங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு திட்டங்களுக்கு சிவப்பு தரவு புத்தகம் முக்கியமான தரவை வழங்குகிறது.

2] பல்லுயிர் பாதுகாப்பு என்பது ஆபத்தான விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் உதவுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அரிதான மற்றும் ஆபத்தான அழிவிலுள்ள உயிரினங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு திட்டங்களுக்கு சிவப்பு தரவு புத்தகம் முக்கியமான தரவை வழங்குகிறது. பல்லுயிர் பாதுகாப்பு என்பது ஆபத்தான விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும், மீட்டெடுக்கவும் உதவுகிறது.

101. கூற்று(A): CPCSEA என்பது விலங்குகள் மீதான சோதனைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக்கான குழுவைக் குறிக்கிறது.

காரணம்(R): இது விலங்குகளுக்கான ஒரு சட்டக் குழுவாகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: CPCSEA என்பது விலங்குகள் மீதான சோதனைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக்கான குழுவைக் குறிக்கிறது. இது விலங்குகளுக்கான கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 1960 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டக் குழுவாகும்.

102. CPCSEA எந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது?

A) 1990

B) 1991

C) 1992

D) 1993

விளக்கம்: 1991 ஆம் ஆண்டு முதல் விலங்குகள் அவற்றின் மீதான சோதனைகளின் போது தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இது செயல்பட்டு வருகிறது.

103. CPCSEA இன் நோக்கங்கள் அல்லாதது எது?

A) சோதனைக்கு முன்னும் பின்னும் தேவையற்ற வலியைத் தவிர்த்தல்.

B) சோதனைகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் பராமரிப்பைமேம்படுத்துதல்.

C) விலங்குகள், வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கானவழிகாட்டுதல்களை வழங்குதல்.

D) விலங்கு வசதிகளுக்கு ஒப்புதல் அளித்தல்.

விளக்கம்: சோதனைக்கு முன்னும் பின்னும் தேவையற்ற வலியைத் தவிர்த்தல். சோதனைகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் பராமரிப்பைமேம்படுத்துதல். விலங்குகள், வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கானவழிகாட்டுதல்களை வழங்குதல். உயிரியல் மற்றும் நடத்தை ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் பராமரிப்பைமேம்படுத்துதல்.

104. CPCSEA இன் செயல்பாடுகள் அல்லாதது எது?

A) விலங்குகளின் பயன்பாடு சம்பந்தப்பட்ட சோதனைகளை நடத்துவதற்கான அனுமதி.

B) மீறல் ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை.

C) விலங்கு பரிசோதனை நடத்தும் நிறுவனங்களை பதிவு செய்தல்.

D) இவை அனைத்தும்

விளக்கம்: விலங்குகளின் பயன்பாடு சம்பந்தப்பட்ட சோதனைகளை நடத்துவதற்கான அனுமதி. மீறல் ஏற்பட்டால் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை. விலங்கு பரிசோதனை நடத்தும் நிறுவனங்களை பதிவு செய்தல்.

105. உலகின் மிகப்பெரிய விலங்கு உரிமை அமைப்பு_________

A) CPCSEA

B) பெட்டா

C) ப்ளூ கிராஸ்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பெட்டா உலகின் மிகப்பெரிய விலங்கு உரிமை அமைப்பாகும்.

106. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பெட்டா அமெரிக்காவின் வர்ஜீனியா, நோர்போல்டில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும்.

2] இது 1980 இல் இங்க்ரிட் நியூக்ரிக் மற்றும் அலெக்ஸ் பச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்டது.

C) இது அனைத்து விலங்குகளின் உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: பெட்டா அமெரிக்காவின் வர்ஜீனியா, நோர்போல்டில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். இது 1980 இல் இங்க்ரிட் நியூக்ரிக் மற்றும் அலெக்ஸ் பச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்டது. இது அனைத்து விலங்குகளின் உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

107. பெட்டா எதனை எதிர்க்கிறது?

A) விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட உணவை உண்ணுதல்

B) விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட துணிகளை அணிவது

C) தொந்தரவு செய்வது

D) இவை அனைத்தும்

விளக்கம்: விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட உணவை உண்ணுதல், விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட துணிகளை அணிவது, தொந்தரவு செய்வது போன்ற மனித செயல்பாடுகளை இது எதிர்க்கிறது.

108. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கேப்டன் வி. சுந்தரம் 1958 ஆம் ஆண்டில் சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவை நிறுவினார்.

2] இது செல்லப்பிராணி வளர்ப்பு மற்றும் விலங்குகள் பற்றிய சரியான விழிப்புணர்வு போன்ற பல விலங்கு நல நிகழ்வுகளை நடத்துகிறது.

3] மருத்துவமனைகள், தங்குமிடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளுடன் சென்னை கிண்டியில் பிரதான அலுவலகம் அமைந்துள்ளது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: கேப்டன் வி. சுந்தரம் 1959 ஆம் ஆண்டில் சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவை நிறுவினார். இது செல்லப்பிராணி வளர்ப்பு மற்றும் விலங்குகள் பற்றிய சரியான விழிப்புணர்வு போன்ற பல விலங்கு நல நிகழ்வுகளை நடத்துகிறது. ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த அமைப்பு முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் கவனிக்கப்படுகிறது மருத்துவமனைகள், தங்குமிடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளுடன் சென்னை கிண்டியில் பிரதான அலுவலகம் அமைந்துள்ளது.

109. கூற்று(A): ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு ஆகும், இது 1897 இல் ‘எங்கள் ஊமை நண்பர்கள் லீக்’ என்று நிறுவப்பட்டது.

காரணம்(R): இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கம் ஒவ்வொரு செல்லப்பிராணியும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி மற்றும் R சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A தவறு மற்றும் R சரி

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ப்ளூ கிராஸ் என்பது யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு ஆகும், இது 1897 இல் ‘எங்கள் ஊமை நண்பர்கள் லீக்’ என்று நிறுவப்பட்டது. இந்த தொண்டு நிறுவனத்தின் பார்வை என்னவென்றால், ஒவ்வொரு செல்லப்பிராணியும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

110. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஆற்றல் கொண்ட வேதிச்சேர்மம் இயற்கை சூழ்நிலைக்காரணிகளுக்கு அப்பாற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள அளவைக்காட்டிலும் பன்மடங்கு பெருகி அவை உயிர்களுக்குள் சேர்வதே உயிர்வழிப்பெருக்கமாகும்.

2] இவை பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் மற்றும் பாலிக்குளோரினேட் பைபீனைல்கள் மற்றும் டி.டி.டி போன்ற பூச்சிக்கொல்லிகளாக இருக்கலாம்.

3] இந்த பொருட்களை கீழ்நிலை உயிரினங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த பாதிப்பு தொடங்கிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: ஆற்றல் கொண்ட வேதிச்சேர்மம் இயற்கை சூழ்நிலைக்காரணிகளுக்கு அப்பாற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள அளவைக்காட்டிலும் பன்மடங்கு பெருகி அவை உயிர்களுக்குள் சேர்வதே உயிர்வழிப்பெருக்கமாகும். இவை பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் மற்றும் பாலிக்குளோரினேட் பைபீனைல்கள் மற்றும் டி.டி.டி போன்ற பூச்சிக்கொல்லிகளாக இருக்கலாம். இந்த பொருட்களை கீழ்நிலை உயிரினங்கள் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த பாதிப்பு தொடங்கிறது.

111. கீழ்க்கண்டவற்றுள் உயிர் வழிப்பெருக்கம் காரணங்கள் அல்லாதது எது?

A) இவை நீர்வாழ் உயிரினங்களிலும் மனிதர்களிலும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

B) தொழில்துறை நடவடிக்கைகள் நச்சுப் பொருள்களை வெளியிடுகின்றன, அவை உணவுச் சங்கிலியில் நுழைகின்றன.

C) வனவிலங்குகளின் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

D) இது கடல் உயிரினங்களின் இனப்பெருக்க மற்றும் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

விளக்கம்: உயிர் வழிப்பெருக்கம் காரணங்கள்: விவசாய பூச்சிக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பூஞ்சை கொல்லிகள் மிகவும் நச்சுத்தன்மையுள்ளவை, அவை மண், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் வெளியிடப்படுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களிலும் மனிதர்களிலும் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. கரிம மாசுகளானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் வனவிலங்குகளின் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தொழில்துறை நடவடிக்கைகள் நச்சுப் பொருள்களை வெளியிடுகின்றன, அவை உணவுச் சங்கிலியில் நுழைகின்றன.

112. சுரங்க நடவடிக்கைகள் தண்ணீரில் அதிக அளவு ____________ படிவுகளை உருவாக்குகின்றன.

A) தாமிரம், அலுமினியம்

B) சல்பைடு, செலினியம்

C) அலுமினியம், செலினியம்

D) தாமிரம், சல்பைடு

விளக்கம்: சுரங்க நடவடிக்கைகள் தண்ணீரில் அதிக அளவு சல்பைடு மற்றும் செலினியம் படிவுகளை உருவாக்குகின்றன. இந்த நச்சு பொருட்கள் உணவு சங்கிலியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களால் உறிஞ்சப்படுகின்றன.

113. உயிர்-வழிப்பெருக்கத்தின் விளைவுகள் அல்லாதது எவை?

A) புற்றுநோய், சிறுநீரக பிரச்சினைகள், இதய நோய்களை ஏற்படுத்தி மனிதர்களுக்கு இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

B) இது கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

C) பவளப்பாறைகளின் அழிவு பல நீர்வாழ் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது.

D) நீர் மாசுபாட்டிற்கு காரணமாகிறது.

விளக்கம்: புற்றுநோய், சிறுநீரக பிரச்சினைகள், கல்லீரல் செயலிழப்பு, பிறப்பு குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தி மனிதர்களுக்கு இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீர்நிலைகளில் வெளியாகும் ரசாயனங்கள் மற்றும் நச்சுகள் உணவுச் சங்கிலியை சீர்குலைக்கின்றன. இது கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியையும் பாதிக்கிறது. பவளப்பாறைகளின் அழிவு பல நீர்வாழ் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது.

114. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2001 இன் விதிகளின்படி ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு பல்லுயிர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது.

2] இந்த குழு தேசிய பல்லுயிர் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர் வாரியங்களின் வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் உயிரினங்களின் பல்லுயிர் பதிவேடுகளைத் தயாரிக்கிறது.

3] இந்த பதிவேட்டை தயாரிப்பது விலங்குகளின் பாதுகாப்பு, வாழ்விடங்களை பாதுகாத்தல் தொடர்பான தகவலை சேகரித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1, 3 சரி 2 தவறு

விளக்கம்: உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 இன் விதிகளின்படி ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு பல்லுயிர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேசிய பல்லுயிர் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர் வாரியங்களின் வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் உயிரினங்களின் பல்லுயிர் பதிவேடுகளைத் தயாரிக்கிறது. இந்த பதிவேட்டை தயாரிப்பது விலங்குகளின் பாதுகாப்பு, வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான தகவலை சேகரித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

115. வெளிப்புற பாதுகாப்பின் நன்மைகள் யாவை?

A) இது உயிரினங்களின் வீழ்ச்சியைத் தடுக்கிறது.

B) ஆபத்தான நிலையிலுள்ள விலங்குகளை இந்த வழிகளில் இனப்பெருக்கம் செய்யலாம்.

C) அச்சுறுத்தப்பட்ட இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு இயற்கை சூழலில் வெளியிடப்படுகின்றன.

D) இவை அனைத்தும்

விளக்கம்: இது உயிரினங்களின் வீழ்ச்சியைத் தடுக்கிறது. ஆபத்தான நிலையிலுள்ள விலங்குகளை இந்த வழிகளில் இனப்பெருக்கம் செய்யலாம். அச்சுறுத்தப்பட்ட இனங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு இயற்கை சூழலில் வெளியிடப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் அறிவியல் பணிகளை நடத்துவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

116. இது உயிரினங்களை வாழ்விடங்களுக்கு வெளியே பாதுகாக்கும் வனவிலங்கு பாதுகாப்பு ____________

A) உயிரியல் பூங்கா

B) தாவரவியல் பூங்காக்கள்

C) வெளிப்புற பாதுகாப்பு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இது உயிரினங்களை வாழ்விடங்களுக்கு வெளியே பாதுகாக்கும் வனவிலங்கு பாதுகாப்பு வெளிப்புற பாதுகாப்பு ஆகும்.

117. கீழ்க்கண்டவை எந்த வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] பூக்கள், பழங்கள், காய்கறிகள் வளர்க்கப்படும் இடம் இது.

2] இந்த இடங்கள் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது.

A) உயிரியல் பூங்கா

B) தாவரவியல் பூங்காக்கள்

C) வெளிப்புற பாதுகாப்பு

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பூக்கள், பழங்கள், காய்கறிகள் வளர்க்கப்படும் இடம் இது. இந்த இடங்கள் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது.

118. கீழ்க்கண்டவை எந்த வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] இது காட்டு விலங்குகள் பாதுகாக்கப்படும் பகுதிகள் ஆகும்.

2] இந்தியாவில் சுமார் 800 பாதுகாப்புகள் இவ்வகையில் உள்ளன.

A) உயிரியல் பூங்கா

B) தாவரவியல் பூங்காக்கள்

C) வெளிப்புற பாதுகாப்பு

D) விலங்குகள் சரணாலயம்

விளக்கம்: இது காட்டு விலங்குகள் பாதுகாக்கப்படும் பகுதிகள் ஆகும். இந்தியாவில் சுமார் 800 உயிரியல் பூங்காக்கள் உள்ளன.

119. கீழ்க்கண்டவை எந்த வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] இது ஊட்டச்சத்து ஊடகத்தில் வளர்க்கும் ஒரு நுட்பமாகும்.

2] மலட்டு சூழலில் தாவர செல்கள், திசுக்கள், உறுப்புகள், விதைகள் அல்லது பிற தாவர பாகங்களை வளர்க்கும் ஒரு நுட்பமாகும்.

A) திசு வளர்ப்பு

B) விதை வங்கி

C) வெளிப்புற பாதுகாப்பு

D) விலங்குகள் சரணாலயம்

விளக்கம்: இது ஊட்டச்சத்து ஊடகத்தில் மலட்டு சூழலில் தாவர செல்கள், திசுக்கள், உறுப்புகள், விதைகள் அல்லது பிற தாவர பாகங்களை வளர்க்கும் ஒரு நுட்பமாகும்.

120. கீழ்க்கண்டவை எந்த வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] ஒரு விதை அல்லது கரு மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும்.

2] அழிவை எதிர்கொள்ளும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது உதவியாக இருக்கும்.

A) திசு வளர்ப்பு

B) விதை வங்கி

C) வெளிப்புற பாதுகாப்பு

D) க்ரையோ வங்கி

விளக்கம்: ஒரு விதை அல்லது கரு மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும். அழிவை எதிர்கொள்ளும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது உதவியாக இருக்கும்.

121. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] விதை வங்கி உலர்ந்த விதைகளை மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பதன் மூலம் பாதுகாக்கிறது.

2] உலகின் மிகப்பெரிய விதை வங்கி அமெரிக்காவில் உள்ள மில்லினியம் விதை வங்கி ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: விதை வங்கி உலர்ந்த விதைகளை மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பதன் மூலம் பாதுகாக்கிறது. உலகின் மிகப்பெரிய விதை வங்கி இங்கிலாந்தில் உள்ள மில்லினியம் விதை வங்கி ஆகும்.

122. க்ரையோ வங்கியில் விதை எதில் பாதுகாக்கப்படுகிறது?

A) திரவ ஹைட்ரஜன்

B) திரவ நைட்ரஜன்

C) திரவ ஹீலியம்

D) திரவ அம்மோனியா

விளக்கம்: க்ரையோ வங்கியில் விதை பொதுவாக திரவ நைட்ரஜனில் – 196˚ C இல் பாதுகாக்கப்படுகிறது.

123. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] உயிர்க்கோளம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி, அங்கு மனிதர்களும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்.

2] அவை சுற்றுச்சூழல் அமைப்பு, இனங்கள் மற்றும் மரபணு வளங்களை பாதுகாக்கின்றன.

3] இந்த பகுதிகள் முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: உயிர்க்கோளம் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி, அங்கு மனிதர்களும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த இடங்களின் பரப்பளவு சுமார் 5000 சதுர கிலோமீட்டர் இருக்கும். அவை சுற்றுச்சூழல் அமைப்பு, இனங்கள் மற்றும் மரபணு வளங்களை பாதுகாக்கின்றன. இந்த பகுதிகள் முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன.

124. வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பதன் நன்மைகள் யாவை?

A) இனங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு வாழலாம்.

B) இனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம்.

C) பழங்குடியின மக்களின் ஆர்வங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

D) இவை அனைத்தும்

விளக்கம்: இனங்கள் அவற்றின் வாழ்விடத்திற்கு ஏற்றவாறு வாழலாம். இனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம். இயற்கை வாழ்விடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இது குறைந்த செலவினத்துடன் நிர்வகிக்க எளிதானது. பழங்குடியின மக்களின் ஆர்வங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

125. கீழ்க்கண்டவை எந்த வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] மனித நடவடிக்கைகள் அனுமதிக்கப் படுகின்றன.

2] ஒரு குறிப்பிட்ட தாவரங்கள் அல்லது விலங்கினங்களை பாதுகாப்பதே முக்கிய நோக்கம்.

3] நிலையான எல்லைகள் இல்லை. இது பொது மக்களின் பார்வைக்கு திறந்திருக்கும்.

A) உயிரியல் பூங்கா

B) தாவரவியல் பூங்காக்கள்

C) வெளிப்புற பாதுகாப்பு

D) வனவிலங்கு சரணாலயம்

விளக்கம்: மனித நடவடிக்கைகள் அனுமதிக்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தாவரங்கள் அல்லது விலங்கினங்களை பாதுகாப்பதே முக்கிய நோக்கம். நிலையான எல்லைகள் இல்லை. இது பொது மக்களின் பார்வைக்கு திறந்திருக்கும். சரணாலயங்கள் பொதுவாக மத்திய அல்லது மாநில அரசின் உத்தரவால் உருவாகின்றன. ஒரு சரணாலயத்தை தேசிய பூங்காவாக மேம்படுத்தலாம்.

126. கீழ்க்கண்டவை எந்த வகையான பாதுகாப்பு என கண்டறிக?

1] மனித நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப் படவில்லை.

2] தாவரங்கள், விலங்கினங்கள் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றை அனுமதிக்கிறது.

3] எல்லைகள் சரி செய்யப்பட்டு வரையறுக்கப் படுகின்றன. இது பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படுவதில்லை.

A) தேசிய பூங்காக்கள்

B) தாவரவியல் பூங்காக்கள்

C) வெளிப்புற பாதுகாப்பு

D) வனவிலங்கு சரணாலயம்

விளக்கம்: மனித நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப் படவில்லை. தாவரங்கள், விலங்கினங்கள் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றை அனுமதிக்கிறது. எல்லைகள் சரி செய்யப்பட்டு வரையறுக்கப் படுகின்றன. இது பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படுவதில்லலை. தேசிய பூங்காக்கள் மாநில அல்லது மத்திய சட்டமன்றத்தால் உருவாக்கப்படுகின்றன. ஒரு தேசிய பூங்காவை சரணாலயத்திற்கு தரமிறக்க முடியாது.

127. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்று அமைச்சகம் (MoEFCC) மூலம் 1996 ஆம் ஆண்டில் இந்தியா ஐ.யூ.சி.என் மாநில உறுப்பினரானது.

2] ஐ.யூ.சி.என் இந்தியா நாட்டு அலுவலகம் 2007 இல் புதுதில்லியில் நிறுவப்பட்டது

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்று அமைச்சகம் (MoEFCC) மூலம் 1969 ஆம் ஆண்டில் இந்தியா ஐ.யூ.சி.என் மாநில உறுப்பினரானது. ஐ.யூ.சி.என் இந்தியா நாட்டு அலுவலகம் 2007 இல் புதுதில்லியில் நிறுவப்பட்டது.

128. பாதுகாப்பின் வகைகள் யாவை?

A) 1

B) 3

C) 2

D) 4

விளக்கம்: பாதுகாப்பு என்பது இரண்டு வகையாகும். அவை: வாழ்விட பாதுகாப்பு (வாழ்விடத்திற்குள்), வெளிப்புற பாதுகாப்பு (வாழ்விடத்திற்கு வெளியே).

129. சிவப்பு தரவு புத்தகத்தில் அழிந்துபோன உயிரினங்களுக்கு_________, ஆபத்தில் உள்ள உயிரினங்களுக்கு போன்ற வண்ணகுறியிடப்பட்ட தகவல் தாள்கள் உள்ளன.

A) சிவப்பு, கருப்பு

B) கருப்பு, சிவப்பு

C) சிவப்பு, ஊதா

D) கருப்பு, ஊதா

விளக்கம்: சிவப்பு தரவு புத்தகத்தில் அழிந்துபோன உயிரினங்களுக்கு கருப்பு, ஆபத்தில் உள்ள உயிரினங்களுக்கு சிவப்பு போன்ற வண்ணகுறியிடப்பட்ட தகவல் தாள்கள் உள்ளன. அவை பல இனங்கள் மற்றும் கிளையினங்களின் அழிவு அபாயத்திற்கு ஏற்ப வண்ணம் செய்யப்பட்டுள்ளன.

130. சிவப்பு தரவு புத்தகத்தின் நன்மைகள் யாவை?

A) இது ஒரு குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

B) இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு உலக அளவிலுள்ள இனங்கள் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம்.

C) உலகளவில் அழிந்துபோகும் ஒரு இனத்தின் அபாயத்தை இந்த புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம்.

D) இவை அனைத்தும்

விளக்கம்: இது ஒரு குறிப்பிட்ட இனத்தின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை கொண்டு உலக அளவிலுள்ள இனங்கள் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம். உலகளவில் அழிந்துபோகும் ஒரு இனத்தின் அபாயத்தை இந்த புத்தகத்தின் உதவியுடன் மதிப்பிடலாம். ஆபத்தான நிலையிலுள்ள இனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.

131. சிவப்பு தரவு புத்தகத்தின் தீமைகள் யாவை?

A) சிவப்பு தரவு புத்தகத்தில் கிடைக்கும் தகவல்கள் முழுமையடையாமல் உள்ளது.

B) புத்தகத்தின் தரவின் ஆதாரம் ஊகிக்கப்படுகிறது.

C) இந்த புத்தகம் அனைத்து விலங்குகள், தாவரங்கள், பிற உயிரினங்களின் முழுமையான பதிவைப் பராமரிக்கிறது, ஆனால் அதில் நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.

D) இவை அனைத்தும்

விளக்கம்: சிவப்பு தரவு புத்தகத்தில் கிடைக்கும் தகவல்கள் முழுமையடையாமல் உள்ளது. அழிந்துபோன மற்றும் தற்போதுள்ள பல இனங்கள் இந்த புத்தகத்தில் புதுப்பிக்கப்படவில்லை. புத்தகத்தின் தரவின் ஆதாரம் ஊகிக்கப்படுகிறது. இந்த புத்தகம் அனைத்து விலங்குகள், தாவரங்கள், பிற உயிரினங்களின் முழுமையான பதிவைப் பராமரிக்கிறது, ஆனால் அதில் நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.

132. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] சிவப்பு தரவு புத்தகத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பராமரிக்கிறது.

2] இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு உயிரினங்களின் முழுமையான பதிவைப் பராமரிக்கும் நோக்கத்துடன் இது 1965 இல் நிறுவப்பட்டது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: சிவப்பு தரவு புத்தகத்தை இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் பராமரிக்கிறது. இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு உயிரினங்களின் முழுமையான பதிவைப் பராமரிக்கும் நோக்கத்துடன் இது 1964 இல் நிறுவப்பட்டது.

Previous page 1 2 3 4 5 6 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!