General Tamil

9th Tamil Unit 5 Questions

9th Tamil Unit 5 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 9th Tamil Unit 5 Questions With Answers Uploaded Below.

1. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக திகழ்ந்தவர்

அ) மாதவி

ஆ) கண்ணகி

இ) மணிமேகலை

ஈ) காரைக்கால் அம்மையார்

2. இறைவனுக்கு பாமாலை சூட்டிய பெண்கள் யார்?

அ) ஒளவையார், ஆண்டாள்

ஆ) ஆண்டாள், காரைக்கால் அம்மையார்

இ) நக்கண்ணையார், ஆண்டாள்

ஈ) நப்பசலையர், ஒளவையார்

3. மகளிருக்கெதிரான கொடுமைகளை மாண்புடனே எதிர்த்த பெண்மணி யார்?

அ) மூவலூர் இராமாமிர்தம்

ஆ) முத்துலெட்சுமி

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய் பூலே

4. மனித குலத்தின் மாணிக்கமாய் மக்கள் மனங்களில் நிறைந்த பெண் யார்?

அ) முத்துலெட்சுமி

ஆ) மூவலூர் இராமாமிர்தம்

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய்

5. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

அ) முத்துலெட்சுமி

ஆ) மூவலூர் இராமாமிர்தம்

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய்

6. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ) மூவலூர் இராமாமிர்தம்

ஆ) முத்துலெட்சுமி

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய் பூலே

7. சமூக சேவகியாக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் யார்?

அ) மூவலூர் இராமாமிர்தம்

ஆ) முத்துலெட்சுமி

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய் பூலே

8. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?

அ) முத்துலெட்சுமி

ஆ) மூவலூர் இராமாமிர்தம்

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய்

9. சட்ட மேலவைக்கு தேர்தெடுக்குப்பட்ட முதல் பெண்மணி யார்?

அ) முத்துலெட்சுமி

ஆ) மூவலூர் இராமாமிர்தம்

இ) பண்டித ரமாபாய்

ஈ) சாவித்திரிபாய்

10. அடையாற்றில் அவ்வை இல்லம் தோற்று விக்கப்பட்ட ஆண்டு

அ) 1952

ஆ) 1930

இ) 1940

ஈ) 1950

11. முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு

அ) 1952

ஆ) 1954

இ) 1930

ஈ) 1968

12. முத்துலெட்சுமி அவர்கள் பின்வரும் எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்

1. குழந்தை திருமணத் தடைச் சட்டம்

2. இருதாரத் தடைச்சட்டம்

3. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்

4. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்

அ) 1, 3 மட்டும்

ஆ) 2, 3, 4

இ) 3 மட்டும்

ஈ) அனைத்தும்

13. முத்துலெட்சுமி ரெட்டி வாழ்ந்த காலம் ___.

அ) 1886-1968

ஆ) 1858 – 1922

இ) 1883 – 1962

ஈ) 1870 – 1960

14. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர்

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) பெரியார்

ஈ) ஒளவை

15. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடி முழக்கம் செய்தவர் யார்?

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) ஈ. வெ. ரா

16. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) ஈ. வெ. ரா

17. பெண் கல்வியை முதன்முதலில் பரிந்துரை செய்த குழு ____

அ) கோத்தாரி குழு

ஆ) ஹண்டர் குழு

இ) சர்க்காரியா குழு

ஈ) தேசிய பெண் கல்வி குழு

18. முதல் பெண்களுக்கான பள்ளியை மராட்டிய மாநிலத்தில் தொடங்கியவர்கள் யார்?

அ) ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே

ஆ) முத்துலெட்சுமி, பண்டித ரமாபாய்

இ) பெரியார், பண்டித ரமாபாய்

ஈ) இராமாமிர்தம், பண்டித ரமாபாய்

(விளக்கம்: முதல் பெண்களுக்கான பள்ளியை ஜோதிராவ் பூலே, சுவித்திரிபாய் பூலே மராட்டியத்தில் தொடங்கினர்.)

19. மூவலூர் இராமாமிர்தம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை பெற தேவையான கல்வி தகுதி

அ) 10ம் வகுப்பு

ஆ) 8ம் வகுப்பு

இ) 12ம் வகுப்பு

ஈ) குறிப்பிட்ட கல்வி தகுதி இல்லை.

20. மராட்டிய மாநிலத்தில் முதல் பெண்களுக்கான பள்ளி தொடங்க காரணமாக இருந்த அறிக்கை

அ) கோத்தாரி குழு அறிக்கை

ஆ) ஹண்டர் குழு அறிக்கை

இ) தேசிய பெண் கல்வி குழு அறிக்கை

ஈ) சர்க்காரியா குழு அறிக்கை

21. ஹண்டர் குழு பெண் கல்வியை பரிந்துரை செய்த ஆண்டு

அ) 1952

ஆ) 1868

இ) 1858

ஈ) 1882

22. தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதராகிய பெண்மணி யார்?

அ) இராமாமிர்தம்

ஆ) முத்துலெட்சுமி

இ) ரமாபாய்

ஈ) ஒளவையார்.

23. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்த காலம்

அ) 1886 – 1968

ஆ) 1858-1922

இ) 1883 – 1962

ஈ) 1870 – 1960

24. வேலூரில் இலவச மருத்துவம் அளித்த பெண்மணி யார்?

அ) முத்துலெட்சுமி

ஆ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

இ) இராமாமிர்தம்

ஈ) சாவித்திரிபாய்

25. இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?

அ) சாவித்திரிபாய் பூலே

ஆ) முத்துசுலெட்சுமி

இ) பெரியார்

ஈ) ஹண்டர்

26. பண்டித ரமாபாய் அவர்கள் வாழ்ந்த காலம்

அ) 1886 – 1968

ஆ) 1858-1922

இ) 1883-1962

ஈ) 1870 – 1960

27. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் அவர்களின் காலம்

அ) 1886-1968

ஆ) 1858 – 1922

இ) 1883 – 1962

ஈ) 1870 – 1960

28. கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு

அ) 2016

ஆ) 2013

இ) 2014

ஈ) 2015

29. குழந்தையை பாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

அ) 80000

ஆ) 800000

இ) 8000

ஈ) 8000000

30. பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய வீரச்சிறுமி யார்?

அ) ராமாபாய்

ஆ) மலாலா

இ) சோபியா

ஈ) சாவித்திரிபாய்

31. பெண் கல்வி வேண்டுமென மலாலா போராடிய நாடு எது?

அ) ஆப்கானிஸ்தான்

ஆ) இஸ்ரேல்

இ) பாகிஸ்தான்

ஈ) கஜகஸ்தான்

32. பெண் கல்விக்காக போராட தொடங்கிய போது மலாலாவின் வயது

அ) 11

ஆ) 13

இ) 15

ஈ) 12

33. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?

அ) சாவித்திரிபாய் பூலே

ஆ) ஜோதிராவ் பூலே

இ) ஐடாஸ் சோபியா

ஈ) முத்துலெட்சுமி

34. பொருத்துக

1. முத்துலெட்சுமி – i) உயர்வு

2. பண்டித ரமாபாய் – ii) புரட்சி

3. இராமாமிர்தம் – iii) துணிவு

4. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் – iv) அறிவு

5. சாவித்திரிபாய் பூலே – v) சிறப்பு

அ) iii i ii v iv

ஆ) iii ii i iv v

இ) ii i iii v iv

ஈ) i ii iii iv v

35. சாவித்திரிபாய் பூலே வாழ்ந்த காலம் ____

அ) 1831 – 1897

ஆ) 1886 – 1968

இ) 1858 – 1922

ஈ) 1883 – 1962

36. கற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின் பொற்காலம் எது?

அ) இரும்பு காலம்

ஆ) கற்காலம்

இ) சங்க காலம்

ஈ) சங்கம் மருவிய காலம்

37. பாட்டும் தொகையும் உருவான காலம் ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்

அ) இரும்பு காலம்

ஆ) கற்காலம்

இ) சங்க காலம்

ஈ) சங்கம் மருவிய காலம்

38. கொவ்வை தமிழைக் கொண்டு பாடியவர் யார்?

அ) மாசாத்தியார்

ஆ) வெண்ணி குயத்தியார்

இ) பொன் முடியார்

ஈ) ஆதிமந்தியார்

39. மலாலா பெண் கல்விக்காக போராட்டத்தை தொடங்கிய ஆண்டு

அ) 1998

ஆ) 1996

இ) 1992

ஈ) 1997

40. மூவலூர் இராமாமிர்தம் பற்றிய கூற்றுகளில் எது / எவை சரி?

1. திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.

2. தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற துணை நின்றவர்.

3. முதல் பெண் மருத்துவர்.

4. சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 1, 4

ஈ) 1, 2, 4

41. முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் எது / எவை தவறு என ஆராய்க.

1. உலக பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

2. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

3. 1962 ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்

4. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

அ) 1, 3, 4

ஆ) 1, 3

இ) 1, 4

ஈ) 2 மட்டும்

(விளக்கம்:

1. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

3. 1952 ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்

4. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.)

42. கீழ்க்கணவற்றுள் எது நீலாம்பிகை அம்மையாரின் நூல்களில் அல்லாதது எது?

1. வடசொல் தமிழ் அகரவரிசை

2. முப்பெண்மணிகள் வரலாறு

3. பட்டினத்தார் பாராட்டிய மூவர்

4. பெண்ணின் பெருமை

5. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

அ) 4 மட்டும்

ஆ) 2, 4

இ) 4, 5

ஈ) அனைத்தும்

43. 1964 ஆம் ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது?

அ) கோத்தாரி கல்வி குழு

ஆ) சர்க்காரியா குழு

இ) ஹண்டர் குழு

ஈ) தேசிய பெண் கல்வி குழு

44. மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்

அ) 1903 – 1943

ஆ) 1913 – 1933

இ) 1903 – 1953

ஈ) 1913 – 1953

45. சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1919

ஆ) 1939

இ) 1929

ஈ) 1949

46. 1929 ல் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டம் எதனுடன் தொடர்புடையது

அ) குழந்தை தொழிலாளர்

ஆ) குழந்தை திருமணம்

இ) விதவைகள் மறுமணம்

ஈ) சதி ஒழிப்பு

47. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார்?

அ) இராஜேஸ்வரி

ஆ) நீலாம்பிகை

இ) சுரதா

ஈ) சிவகாமி அம்மை

48. இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார்?

அ) நீலாம்பிகை

ஆ) சாரதா

இ) இராஜேஸ்வரி

ஈ) சிவகாமி

49. தொல்காப்பியம், திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆறறியவர் யார்?

அ) இராஜேஸ்வரி

ஆ) நீலாம்பிகை

இ) சாரதா

ஈ) சிவகாமி அம்மை

50. ஈ. வெ. ரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் யாருடன் தொடர்புடையது

அ) பெண்கள்

ஆ) முதியோர்கள்

இ) ஊனமுற்றவர்கள்

ஈ) குழந்தைகள்

51. இராஜேஸ்வரி அம்மையாரின் வாழ்காலம் ____.

அ) 1903 – 1943

ஆ) 1906 – 1955

இ) 1913 – 1955

ஈ) 1916 – 1955

52. பின்வருவனவற்றுள் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள் எது / எவை?

1. லக்ஷயா திட்டம்

2. சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம்

3. ஈ. வெ. ரா – நாகம்மை இலவச கல்வி உதவித் திட்டம்

4. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவித் திட்டம்

அ) 2, 3

ஆ) 2 மட்டும்

இ) 3, 4

ஈ) அனைத்தும்

53. ஈ. வெ. ரா – நாகம்மை இலவச கல்வி உதவி திட்டம் எந்த வகையான படிப்பிற்கு தரப்படுகிறது.

அ) உயர்நிலைக் கல்வி

ஆ) பட்டப்படிப்பு

இ) பட்ட மேற்படிப்பு

ஈ) முனைவர் பட்டம் பெற

54. இராஜேஸ்வரி அம்மையார் பற்றிய கூற்றுகளில் எது / எவை தவறு

1. அறிவியல் துறையில் மட்டும் சிறந்து விளங்கினார்

2. இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பயின்றவர்

3. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்

4. திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகளை சொற்பொழிவு ஆற்றியுள்ளார்

5. இவரது காலம் 1903 – 1943

அ) 1, 2, 3

ஆ) 1, 2, 5

இ) 1, 3, 5

ஈ) அனைத்தும்

(விளக்கம்: 1. தமிழ், இலக்கியம், அறிவியல் துறையில் சிறந்து விளங்கினார்.

2. இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்.

5. இவரது காலம் 1906 – 1955)

55. தனித்தமிழில் எழுத விரும்புவோருக்கு பயனுள்ளதாக யாருடைய நூல்கள் விளங்குகின்றன

அ) இராஜேஸ்வரி

ஆ) நீலாம்பிகை

இ) சாரதா

ஈ) திரு. வி. க

56. கோத்தாரி கல்விக் குழு மகளிர் கல்வியை பரிந்துரைத்த ஆண்டு

அ) 1964

ஆ) 1864

இ) 1974

ஈ) 1994

57. புதுமைக் கருத்துகளை இயம்பும் மறுமலர்ச்சி இலக்கியங்கள் எந்த நூற்றாண்டில் எழுந்தவை?

அ) 18

ஆ) 20

இ) 19

ஈ) 17

58. சரியான இணையை தேர்ந்தெடு

1. வையம் – உலகம்

2. மாக்கடல் – பெரிய கடல்

3. களர்நிலம் – உவர் நிலம்

4. நவிலல் – செய்தல்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 4

(விளக்கம்: நவிலல் – சொல்லல்)

59. “கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும்

மின்னாள் என்றே உரைப்பேன் ! ”

என்ற வரிகள் யாருடையது?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

60. சரியான பொருளைத் தேர்ந்தெடு

மின்னாளை, மின்னாள்

அ) ஒளிரமாட்டாள், மின்னலைப் போன்றவளை

ஆ) மின்னலைப் போன்றவளை, ஒளிரமாட்டாள்

இ) மின்னல், ஒளிரமாட்டாள்

ஈ) மின்னலை போன்றவளை, மின்னல்

61. சரியான பொருளை தேர்ந்தெடு

இயற்றுக, அணித்து

அ) சொல்லல், அருகில்

ஆ) வெளியிடுதல், அணிந்து

இ) செய்க, அருகில்

ஈ) செய்க, அருகில்

62. சரியான பொருளை தேர்ந்தெடு

தணல், தாழி

அ) நெருப்பு, சமைக்கும் கலன்

ஆ) சமைக்கும் கலன், தாழ்வு

இ) அருகில், சமைக்கும் கலன்

ஈ) நெருப்பு, தாழ்வு

63. சரியான பொருளை தேர்ந்தெடு

தவிர்க்க ஒணா, யாண்டும்

அ) தவிர்த்தல், எங்கும்

ஆ) தவிர்த்தல், எப்பொழுதும்

இ) தவிர்க்க இயலாத, எங்கும்

ஈ) தவிர்க்க இயலாத, எப்பொழுதும்

64. இலக்கணக் குறிப்பு தருக.

மாக்கடல், தவிர்க்கஒணா

அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்

ஆ) உரிச்சொற்றொடர்கள்

இ) உரிச்சொல் தொடர், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உரிச்சொல் தொடர்

(விளக்கம்: 1. ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச் சொற்களாக வரும்.

2. ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும். ‘ஆ’ எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.)

65. இலக்கணக் குறிப்பு தருக.

மலர்க்கை, வில்வாள்

அ) உம்மைத் தொகை, உவமைத்தொகை

ஆ) உவமைத்தொகை, உம்மைத் தொகை

இ) பெயரெச்சம், வினையெச்சம்

ஈ) வினையெச்சம், பெயரெச்சம்

(விளக்கம்: 1. பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற, போல, அன்ன, நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.

2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘உம்’ எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.)

66. இலக்கணக் குறிப்பு தருக.

ஆக்கல், பொன்னேபோல்

அ) அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, உவம உருபு

ஆ) தொழில்பெயர், உவமைத்தொகை

இ) தொழிற்பெயர், உவம உருபு

ஈ) பெயரெச்சம், உவம உருபு

(விளக்கம்: ஏதேனும் ஒரு தொழிலை உணர்த்தும் (தொழிலின் பெயராக வரும்) பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் அல், தல் முதலிய விகுதிகளைப் பெற்று வரும்)

67. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விளைவது

அ) விளைவு + அது

ஆ) விளை + வ் + அது

இ) விளை + வ் + அ + து

ஈ) விளைவு + அ + து

68. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சமைக்கின்றார்

அ) சமை + கின்று + ஆர்

ஆ) சமை + க் + கின்று + ஆர்

இ) சமை + கின்று + அர்

ஈ) சமை + கிறு + ஆர்

69. “ விளைவது 🡪 விளை + வ் + அ + து “ இதில் ‘ து ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) ஒன்றன்பால் வினை முற்று விகுதி

ஆ) பலர் பால் வினைமுற்று விகுதி

இ) ஆண்பால் வினை முற்று விகுதி

ஈ) பெண்பால் வினைமுற்று விகுதி

(விளக்கம்: ஒன்றன்பால் வினை முற்று விகுதிகள் – து, று)

70. ” சமைக்கின்றார் –> சமை + க் + கின்று + ஆர்” இதில் ‘ ஆர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) ஒன்றன்பால் வினை முற்று விகுதி

ஆ) பலர் பால் வினைமுற்று விகுதி

இ) ஆண்பால் வினை முற்று விகுதி

ஈ) பெண்பால் வினைமுற்று விகுதி

(விளக்கம்: பலர் பால் வினைமுற்று விகுதிகள் – அர், ஆர், ப, மார்)

71. குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

72. “கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம் அந்நி லத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை”

என்னும் பாடல் குடும்ப விளக்கு நூலில் எத்தனையாவது பகுதியில் இடம்பெற்றுள்ளது?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: இக்கவிதை குடும்ப விளக்கு நூலில் இரண்டாம் பகுதியில் விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம் பெற்றுள்ளது)

73. ” கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி அங்கே

நல்லறிவு உடைய மக்கள்

விளைவது நவில வோநான் ”

என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

அ) இருண்ட வீடு

ஆ) குடும்ப விளக்கு

இ) பாண்டியன் பரிசு

ஈ) தமிழியக்கம்

(விளக்கம்: கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதை இப்பாடல் காட்டுகிறது.)

74. கனக. சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) சிற்பி

(விளக்கம்: இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என தம் பெயரை மாற்றிக்கொண்டார்.)

75. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

அ) இருண்ட வீடு

ஆ) குடும்ப விளக்கு

இ) பாண்டியன் பரிசு

ஈ) பிசிராந்தையார்

76. பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் எவ்வகை நூல்?

அ) சிறுகதை

ஆ) நாவல்

இ) நாடக நூல்

ஈ) செய்யுள்

77. கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசனின் படைப்புகள் எவை?

1. இருண்ட வீடு

2. குடும்ப விளக்கு

3. பாண்டியன் பரிசு

4. தமிழியக்கம்

5. அழகின் சிரிப்பு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2, 3

இ) 1, 2, 5

ஈ) 2, 3, 5

78. “ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ” என்று பாடியவர் யார்?

அ) பாரதி

ஆ) பாவேந்தர்

இ) கவிமணி

ஈ) பெரியார்

79. ” மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்

செய்திடல் வேண்டுமம்மா. . . “என்று பாடியவர் யார்?

அ) பாரதி

ஆ) பாவேந்தர்

இ) கவிமணி

ஈ) பெரியார்

80. ” பெண்எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது “என்று பாடியவர் யார்?

அ) பாரதி

ஆ) பாவேந்தர்

இ) கவிமணி

ஈ) பெரியார்

81. ” பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்”

இவ்வடிகளில் பயின்று வரும் அணி

அ) உவமையணி

ஆ) எடுத்துக்காட்டு உவமையணி

இ) பிறிது மொழிதல் அணி

ஈ) பொருள் பின்வரும் நிலையணி

82. “தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு”

இவ்வரிகளை இயற்றியவர் யார்?

அ) கணிமேதாவியர்

ஆ) காரியாசன்

இ) கபிலர்

ஈ) தொல்காப்பியர்

83. தவறான இணையைத் தேர்ந்தெடு

1. மூவாது – முதுமை அடையாமல்

2. நாறுவ – முளைப்ப

3. தாவா – தாவாமல்

அ) அனைத்தும்

ஆ) 1, 2

இ) 2 மட்டும்

ஈ) 3 மட்டும்

84. இலக்கணக் குறிப்புத் தருக

அறிவார், வல்லார்

அ) தொழிற்பெயர்கள்

ஆ) வினையெச்சங்கள்

இ) வினையாலணையும் பெயர்கள்

ஈ) வினைத் தொகைகள்

(விளக்கம்: வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)

85. இலக்கணக் குறிப்புத் தருக

விதையாமை, உரையாமை

அ) எதிர்மறை தொழிற்பெயர்கள்

ஆ) வினையெச்சங்கள்

இ) எதிர்மறை பெயரெச்சங்கள்

ஈ) வினைத் தொகைகள்

(விளக்கம்: ஒரு தொழிற் பெயர் எதிர்மறையாகப் பொருள் தருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.)

86. இலக்கணக் குறிப்புத் தருக – தாவா

அ) எதிர்மறை தொழிற்பெயர்

ஆ) வினையெச்சம்

இ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

ஈ) வினைத் தொகை

(விளக்கம்: ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும். ‘ஆ’ எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.)

87. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உரையாமை

அ) உரை + ய் + ஆமை

ஆ) உரையா + மை

இ) உரை + ஆ + மை

ஈ) உரை + ய் + ஆ + மை

88. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காய்க்கும்

அ) காய் + க் + உம்

ஆ) காய் + க் + க் + உம்

இ) காய் + கும்

ஈ) காய்க்கு + உம்

89. ” உரையாமை –> உரை + ய் + ஆ + மை ” இதில் ‘மை’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்சவிகுதி

இ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

ஈ) தொழிற் பெயர் விகுதி

(விளக்கம்: உரை -பகுதி, ய் – சந்தி, ஆ – எதிர்மறை இடைநிலை)

90. ” காய்க்கும்  காய் + க் + க் + உம் ” இதில் ‘ உம் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

அ) பெயரெச்சவிகுதி

ஆ) வினையெச்சவிகுதி

இ) ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

ஈ) தொழிற் பெயர் விகுதி

(விளக்கம்: காய் – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை)

91. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

1. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின.

2. அவை பதினெண் கீழ்க்கணக்கு என தொகுக்கப்பட்டுள்ளன

3. சிறுபஞ்ச மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 2 தவறு

ஈ) 3 தவறு

92. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?

அ) ஐந்து சிறிய பூக்கள்

ஆ) ஐந்து சிறிய வேர்கள்

இ) ஐந்து சிறிய இலைகள்

ஈ) ஐந்து சிறிய விதைகள்

(விளக்கம்: ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.)

93. கீழ்க்கண்டவற்றுள் சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் ஐந்து மருந்து பொருள்களுள் வருபவை எவை?

1. கண்டங்கத்திரி 2. சிறுநாவற்பூ

3. இலவங்கம் 4. பெருமல்லி

5. நெருஞ்சி 6. திப்பிலி

அ) 1, 4, 5

ஆ) 1, 2, 4, 5

இ) 1, 2, 5

ஈ) 1, 2, 3, 4

(விளக்கம்: ஐந்து வேர்கள் – கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி)

94. சிறுபஞ்சமூல ஆசிரியரை ‘ மாக்காரியாசான் ‘ என சிறப்பிக்கும் செய்யுள் எது?

அ) தொல்காப்பியம்

ஆ) திருக்குறள்

இ) பாயிரம்

ஈ) அகத்தியம்

95. காரியாசான் குறித்த கூற்றுகளுள் எது தவறானது?

1. மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.

2. காரி என்பது இயற்பெயர்

3. ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1, 3 சரி

ஈ) 2, 3 சரி

96. 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?

அ) பாரதியார்

ஆ) வள்ளலார்

இ) விக்டர் ஹியூகோ

ஈ) அலெக்சாண்டர்

97. அரசவையில் கவிதை எழுதி ‘ பாரதி ‘ என்னும் பட்டத்தை பெற்ற போது பாரதியாரின் வயது _____.

அ) 10

ஆ) 11

இ) 15

ஈ) 16

98. பிரஞ்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பிய போது விக்டர் ஹியூகோவின் வயது _____.

அ) 10

ஆ) 11

இ) 15

ஈ) 16

99. மாவீரன் அலெக்சாண்டர் தமது தந்தையின் போர்ப்படையில் தளபதியான போது அவரின் வயது_____.

அ) 10

ஆ) 11

இ) 15

ஈ) 16

100. பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து கலீலியோ ஆராய்ந்த போது அவரின் வயது_____.

அ) 10

ஆ) 11

இ) 17

ஈ) 16

101. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளை கூறும் நூல் எது?

அ) திரிகடுகம்

ஆ) ஏலாதி

இ) சிறுபஞ்ச மூலம்

ஈ) நன்னூல்

102. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துகளை கூறும் நூல் எது?

அ) திரிகடுகம்

ஆ) ஏலாதி

இ) சிறுபஞ்ச மூலம்

ஈ) நன்னூல்

103. “ நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் “ என்று கூறியவர் யார்?

அ) காந்தி

ஆ) நேரு

இ) ஆபிரகாம் லிங்கன்

ஈ) அலெக்சாண்டர்

104. நடுவணரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு

அ) 2008

ஆ) 2009

இ) 2010

ஈ) 2011

105. ____ ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

அ) 2008

ஆ) 2009

இ) 2010

ஈ) 2011

106. “ நல்ல வரலாறுகளை படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் ” என்று கூறியவர் யார்?

அ) காந்தி

ஆ) அண்ணா

இ) நேரு

ஈ) விவேகானந்தர்

107. “ தென்னகத்து பெர்னாட்ஷா ” என்று அழைக்கப்படுபவர் யார்?

அ) பெரியார்

ஆ) காமராஜர்

இ) அண்ணா

ஈ) வ. உ. சி

108. திராவிட சீர்திருத்த கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?

அ) பெரியார்

ஆ) காமராஜர்

இ) அண்ணா

ஈ) வ. உ. சி

109. கீழ்க்கண்டவற்றுள் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?

1. திராவிடநாடு

2. மாலைமணி

3. குடியரசு

4. விடுதலை

5. காஞ்சி

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 5

(விளக்கம்: அண்ணா ஹோம்ரூல், ஹோம்லேண்ட், , நம்நாடு, திராவிடநாடு, மாலை மணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராக இருந்தார்.)

110. கீழ்க்கண்டவற்றுள் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?

1. திராவிடநாடு

2. மாலைமணி

3. குடியரசு

4. விடுதலை

5. காஞ்சி

அ) 1, 2, 5

ஆ) 3, 4

இ) 1, 4

ஈ) 3, 5

111. சென்னை மாகாணத்தைத் ‘ தமிழ்நாடு ‘ என்று பெயர் மாற்றியவர் யார்?

அ) பெரியார்

ஆ) காமராஜர்

இ) அண்ணா

ஈ) வ. உ. சி

112. கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது தவறானது?

அ) பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர்.

ஆ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர்.

இ) 1953 ல் சென்னை, பெத்த நாய்க்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

ஈ) முதலமைச்சராக பொறுப்பை ஏற்றதும் இரு மொழி சட்டத்தை உருவாக்கினார்.

(விளக்கம்: 1935 ல் சென்னை, பெத்த நாய்க்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.)

113. ‘அண்ணாவின் சிறுகதை திறன் ‘ என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) பரஞ்சோதி

ஆ) முனைவர் பெ. குமார்

இ) அரவிந்த் குப்தா

ஈ) குமரேசன்

114. ஆசியாவிலேயே மிகப் பழையான நூலகம் எது?

அ) கன்னிமரா நூலகம்

ஆ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

இ) தேசிய நூலகம் – கல்கத்தா

ஈ) திருவனந்தபுரம் நடுவன் நூலகம்

(விளக்கம்: இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.)

115. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?

அ) கன்னிமரா நூலகம்

ஆ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

இ) தேசிய நூலகம் – கல்கத்தா

ஈ) திருவனந்தபுரம் நடுவன் நூலகம்

(விளக்கம்: கன்னிமரா நூலகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.)

116. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?

அ) கன்னிமரா நூலகம்

ஆ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

இ) தேசிய நூலகம் – கல்கத்தா

ஈ) திருவனந்தபுரம் நடுவன் நூலகம்

117. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது? எப்போது தொடங்கப்பட்டது?

அ) தஞ்சாவூர் – 1863

ஆ) தஞ்சாவூர் – 1836

இ) கல்கத்தா – 1836

ஈ) கல்கத்தா – 1863

(விளக்கம்: இது 1953 ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும் இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.)

118. உலகின் மிகப் பெரிய நூலகம் எது? எங்கு அமைந்துள்ளது?

அ) லைப்ரரி ஆப் காங்கிரஸ் – அமெரிக்கா

ஆ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

இ) தேசிய நூலகம் – கல்கத்தா

ஈ) திருவனந்தபுரம் நடுவன் நூலகம்

119. ” வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும் ” என்று கூறியவர் யார்?

அ) பெரியார்

ஆ) காமராஜர்

இ) அண்ணா

ஈ) கதே

120. ” உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! “ என்று கூறியவர் யார்?

அ) பெரியார்

ஆ) காமராஜர்

இ) அண்ணா

ஈ) கதே

121. யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது?

அ) அண்ணா – ஆகஸ்டு 9

ஆ) சீர்காழி இரா. அரங்கநாதன் – ஆகஸ்டு 9

இ) சீர்காழி இரா. அரங்கநாதன் – ஆகஸ்டு 6

ஈ) அண்ணா – ஆகஸ்டு 6

122. கீழ்க்கண்டவற்றுள் மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொற்கள் எவை?

அ) பெயர்ச்சொற்கள்

ஆ) வினைச்சொற்கள்

இ) இடைச் சொற்கள்

ஈ) உரிச்சொற்கள்

123. ” இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல” என்று கூறியவர் யார்?

அ) அகத்தியர்

ஆ) தொல்காப்பியர்

இ) கபிலர்

ஈ) கம்பர்

124. பொருத்துக

1. வேற்றுமை உருபுகள் – i) கிறு, கின்று

2. பன்மை விகுதிகள் – ii) ஏன், ஓம், ஆய்

3. திணை, பால்விகுதிகள் – iii) கள், மார்

4. கால இடைநிலைகள் – iv) இன், அது, கண்

5. வினையெச்ச விகுதிகள் – v) உ, இ

அ) i ii iii iv v

ஆ) v ii iii iv i

இ) iv iii ii i v

ஈ) ii iii v i iv

125. பொருத்துக

1. எதிர்மறை இடைநிலைகள் – i) ஆ, அல், இல்

2. தொழிற்பெயர் விகுதிகள் – ii) தல், அம், மை

3. வியங்கோள் விடுதிகள் – iii) க, இய

4. சாரியைகள் – iv) அத்து, அற்று, அம்

5. உவம உருபுகள் – v) போல, விட, காட்டிலும், மாதிரி

அ) i ii iii iv v

ஆ) iii ii i iv v

இ) iv iii ii i v

ஈ) ii iii v i iv

126. பொருத்துக

1. இணைப்பிடைச்சொற்கள் – i) உம், அல்லது, ஆனால்

2. தத்தம் பொருள் உணர்த்தும் இடைச்சொற்கள் – ii) உம், ஓ, ஏ, தான்

3. சொல்லுருபுகள் – iii) மூலம், கொண்டு, இருந்து

4. வினா உருபுகள் – iv) ஆ, ஓ

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) iv iii ii i

ஈ) ii iii i iv

127. கீழ்க்கண்டவற்றுள் தற்காலத் தமிழில் அதிகமாக பயன்படுத்தப்படும் இடைச்சொற்கள் எவை?

1. உம்

2. ஓ

3. ஏ

4. தான்

5. மட்டும்

அ) அனைத்தும்

ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 3, 5

128. எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் ஆகிய பொருள்களில் வரும் இடைச்சொல் எது?

அ) உம்

ஆ) ஓ

இ) ஏ

ஈ) தான்

(எ-கா: மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை (எதிர்மறை உம்மை)

பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)

129. ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் இடைச்சொல் எது?

அ) உம்

ஆ) ஓ

இ) ஏ

ஈ) தான்

(விளக்கம்: ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் ஓ என்னும் இடைச்சொல் வரும் என நன்னூல் கூறுகிறது.)

130. பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் இடைச்சொல் எது?

அ) உம்

ஆ) ஓ

இ) ஏ

ஈ) தான்

(விளக்கம்: பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் ஏ என்னும் இடைச்சொல் வரும் என நன்னூல் கூறுகிறது. தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது.)

131. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1. ‘ தான் ‘ என்னும் இடைச்சொல் அழுத்தப் பொருளில் வரும்.

2. சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ, அதை முதன்மைப்படுத்துகின்றது.

3. ஒரு சொற்றொடரில் ஒரு முறை மட்டுமே வருகிறது.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

132. வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது?

அ) உம்

ஆ) மட்டும்

இ) ஏ

ஈ) தான்

133. வினாப் பொருளில் வரும் இடைச்சொல் எது?

1. உம்

2. ஓ

3. ஏ

4. தான்

5. ஆ

அ) 1, 2, 3

ஆ) 2, 3, 4

இ) 2, 3, 5

ஈ) 1, 3, 5

(விளக்கம்: ஆ என்னும் இடைச்சொல், சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ, அச்சொல் வினாவாகிறது)

134. சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கு பயன்படும் இடைச்சொல் எது?

அ) உம்

ஆ) ஓ

இ) ஆம்

ஈ) தான்

135. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. இது பழம் அல்ல.

2. இவை பழங்கள் அன்று.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

(விளக்கம்: அன்று என்பது ஒருமைக்கும், அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

1. இது பழம் அன்று.

2. இவை பழங்கள் அல்ல.)

136. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. எத்தனை நூல்கள் உள்ளன?

2. எத்துணை பெரிய மரம்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1 மட்டும் சரி

இ) 2 மட்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

(விளக்கம்: எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்)

137. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.

2. இவை இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.

3. இவை ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை ஆனால் தனித்து வழங்கப்படுவதில்லை.

4. இவை செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

அ) அனைத்தும் சரி

ஆ) 2, 3 சரி

இ) 2, 3 தவறு

ஈ) 4 மட்டும் தவறு

138. கீழ்க்கண்டவற்றுள் மிகுதி என்னும் பொருளில் வரும் சொற்கள் எவை?

1. கடி 2. உறு

3. தவ 4. நனி

அ) 1, 2

ஆ) 2, 3

இ) 2, 3, 4

ஈ) 1, 2, 3

139. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு

1. உவப்பு – உவகை

2. பசப்பு – நிறம் மங்குதல்

3. பயப்பு – பயன்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

140. பதம் எத்தனை வகைப்படும்?

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

(விளக்கம்: பதம் பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்)

141. பிரிக்கக் கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் _____ எனப்படும்.

அ) பகுபதம்

ஆ) பகாப்பதம்

இ) இலக்கணம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

(விளக்கம்: பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என பகுபதம் இரு வகைப்படும்)

142. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

(விளக்கம்: பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவை பகுபத உறுப்புகள்)

143. கீழ்க்கண்ட பகுதி குறித்த கூற்றுகளில் எது சரியானது?

1. சொல்லின் முதலில் நிற்கும்.

2. பகாப்பதமாக அமையும்.

3. வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச்சொல்லில் அறுவகை பெயராகவும் அமையும்.

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

144. சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டும் பகுபத உறுப்பு எது?

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடைநிலை

ஈ) சந்தி

(விளக்கம்: பகுதி முதனிலை எனவும், விகுதி இறுதி நிலை எனவும் அழைக்கப்படுகிறது)

145. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் பகுபத உறுப்பு எது?

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடைநிலை

ஈ) சந்தி

146. பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைத்து, பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு எது?

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடைநிலை

ஈ) சந்தி

147. பகுதி, விகுதி, இடைநிலைகளை சார்ந்து, பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு எது?

அ) பகுதி

ஆ) விகுதி

இ) சாரியை

ஈ) சந்தி

148. பொருத்துக

1. ஆண்பால் வினை முற்று விகுதி – i) அ, ஆ

2. பெண்பால் வினைமுற்று விகுதி – ii) து, று

3. பலர்பால் வினைமுற்று விகுதி – iii) ஆர், அர்

4. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி – iv) அள், ஆள்

5. பலவின்பால் வினைமுற்று விகுதி – v) அன், ஆன்

அ) i ii iii iv v

ஆ) v iv iii ii i

இ) iv iii ii i v

ஈ) ii iii v i iv

149. பொருத்துக

1. தன்மை ஒருமை வினைமுற்று விகுதி – i) என், ஏன்

2. தன்மை பன்மை வினைமுற்று விகுதி – ii) ஆம், அம், ஏம், ஓம்

3. முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி – iii) ஐ, ஆய், இ

4. முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி – iv) இர், ஈர்

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) iv iii ii i

ஈ) ii iii i iv

150. பொருத்துக

1. பெயரெச்ச விகுதிகள் – i) உ, இ

2. வினையெச்ச விகுதிகள் – ii) அ, உம்

3. வியங்கோள் வினைமுற்று விகுதி – iii) தல், அல், ஐ

4. தொழிற்பெயர் விகுதி – iv) க, இய, இயர்

அ) i ii iii iv

ஆ) ii iii iv i

இ) ii i iv iii

ஈ) ii iii i iv

151. பொருத்துக

1. இறந்தகால இடைநிலை – i) ப், வ், க்

2. நிகழ்கால இடைநிலை – ii) கிறு, கின்று, ஆநின்று

3. எதிர்கால இடைநிலை – iii) த், ட், ற், ன்

4. எதிர்மறை இடைநிலை – iv) ஞ், ந், வ், ச், த்

5. பெயர் இடைநிலை – v) இல், அல், அ

அ) i ii iii iv v

ஆ) v iv iii ii i

இ) iv iii ii i v

ஈ) iii ii i v iv

152. சரியான இணையைத் தேர்ந்தெடு

1. சந்தி – த், ப், க்

2. உடம்படு மெய் சந்தி – ய், வ்

3. சாரியை – அன், ஆன், இன், இற்று

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

153. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு ஆகும்.

2. பெரும்பாலும் ‘த்’ மட்டுமே எழுத்துப்பேறாக வரும்.

3. சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

154. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வந்தனன்

அ) வந்து + அன் + அன்

ஆ) வா + த் + அன் + அன்

இ) வா (வ) + த் (ந்) + த் + அன் + அன்

ஈ) வா (வ) + த்(ந்) + த் + அன்

155. பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்யாதே

அ) செய் + ய் + ஆ + தே

ஆ) செய் + ஆ + த் + ஏ

இ) செய் + ய் + ஆ + தே

ஈ) செய் + ய் + ஆ + த் + ஏ

156. ” செய்யாதே  செய் + ய் + ஆ + த் + ஏ “ இதில் ‘த்’ என்பதன் பகுபத உறுப்பிவக்கணம்

அ) சந்தி

ஆ) எழுத்துப்பேறு

இ) சாரியை

ஈ) இடைநிலை

157. பொருத்தமான விடையைத் தேர்க

1. சிறுபஞ்சமூலம் – i) காப்பிய இலக்கியம்

2. குடும்ப விளக்கு – ii) சங்க இலக்கியம்

3. சீவகசிந்தாமணி – iii) அற இலக்கியம்

4. குறுந்தொகை – iv) தற்கால இலக்கியம்

அ) i ii iii iv

ஆ) iii iv i ii

இ) iv iii ii i

ஈ) iii ii i iv

158. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக

அ) கலைக்கூடம்

ஆ) திரையரங்கம்

இ) ஆடுகளம்

ஈ) அருங்காட்சியகம்

159. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக

அ) வினவினான்

ஆ) செப்பினான்

இ) உரைத்தான்

ஈ) பகன்றான்

160. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக

அ) இன்

ஆ) கூட

இ) கிறு

ஈ) அம்பு

161. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?

அ) சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.

ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?

இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக

162. பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

அ) பெயரெச்சம், உவமைத்தொகை

ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்

இ) வினையெச்சம், உவமை

ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

163. கீழ்க்கண்ட தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்வு செய்க

அ) மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்

ஆ) நல்ல தமிழுக்கு எழுதுவோம்

இ) பவளவிழிதான் பரிசு உரியவள்

ஈ) குழலிக்கும் பாடத் தெரியும்

(விளக்கம்: அ) மதீனாவுக்கு சிறந்த இசை வல்லுநர் வேண்டும்

ஆ) நல்ல தமிழில் எழுதுவோம்

இ) பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்)

164. பொருத்துக

1. அரங்கு – i) நாடகம் ஆடும் இடம்

2. ஒட்பம் – ii) அறிவு

3. கான் – iii) காடு

4. நசை – iv) அன்பு

5. பொருநர் – v) கூத்தர்

அ) i ii iii iv v

ஆ) v iv iii ii i

இ) iv iii ii i v

ஈ) ii iii v i iv

165. பொருத்துக

1. சமூக சீர்திருத்தவாதி – i) Sentence

2. தன்னார்வலர் – ii) Seline soil

3. களர்நிலம் – iii) volunteer

4. சொற்றொடர் – iv) Social Reformer

அ) i ii iii iv

ஆ) iv iii ii i

இ) iv iii i ii

ஈ) ii iii i iv

166. சரியான இணையை தேர்ந்தெடு

1. முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

2. கல்வியில் நாடகம் – பிரளயன்

3. மலாலா – கரும்பலகை யுத்தம்

அ) அனைத்தும் சரி

ஆ) 1, 2 சரி

இ) 2, 3 சரி

ஈ) 1, 3 சரி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!