General Tamil

General Tamil Model Question Paper 25

General Tamil Model Question Paper 25

General Tamil Model Question Paper 25: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “உலகம்” என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது?

(அ) உலகு

(ஆ) உலவு

(இ) உலக

(ஈ) உல

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) உலவு

“உலகம்” என்னும் தமிழ்சொல் “உலவு” என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது. உலவு என்ற சொல் “சுற்றுதல்” என்ற பொருளில் வருவதால், தன்னையும் ஞாயிற்றையும் சுற்றுகின்ற உலகத்திற்கு அப்பெயரை தமிழர்கள் அறிவியல் நோக்கில் வைத்தனர்.

2. ஒழுக்கம் விழுப்பத் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

இக்குறில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.

(அ) தொழிற்பெயர்

(ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

(இ) பண்புத்தொகை

(ஈ) வினைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) தொழிற்பெயர்

ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.

3. விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்”

(அ) நம் இளைஞர்களிடையே எந்த எண்ணம் வளரக்கூடாது?

(ஆ) நம் இளைஞர்களிடையே எந்த எண்ண வளர வேண்டும்?

(இ) பெரியோர்களிடம் எந்த எண்ணம் வளர வேண்டும்?

(ஈ) பெரியோர்களிடம் எந்த எண்ணம் வளரக்கூடாது?

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நம் இளைஞர்களிடையே எந்த எண்ண வளர வேண்டும்?

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

4. ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது

(அ) சொல் பின்வரு நிலையணி

(ஆ) பொருள் பின்வரு நிலையணி

(இ) சொற்பொருள் பின்வரு நிலையணி

(ஈ) பிறிதுமொழிதலணி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) பொருள் பின்வரு நிலையணி

செய்யுளில் முன்னர் வந்த சொல்லே, பொருளோ, மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும், அதற்கு பின்வரு நிலையணி என்று பெயராகும்.

இது மூன்று வகைப்படும். பின்வரு நிலையணி: சொல் பின்வரு நிலையணி. பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருள் பின்வரு நிலையணி.

சொல் பின்வரு நிலையணி: செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவதாகும்.

எ.கா. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

மேற்கண்ட குறட்பாவில் “துப்பு” என்னும் ஒரே சொல் உண்பவர், உணவு, உண்ணும் பொருள் எனப் பல்வேறு பொருள்களில் வந்துள்ளது.

பொருள் பின்வரு நிலையணி: செய்யுளில் ஒரே பொருளைத் தரும் பல சொற்கள் வருவதாகும்.

எ.கா: “அவிழ்ந்தன தோன்றி, அலர்ந்தன காயா,

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை”

மேற்கண்ட பாடலில் “மலர்தல்” என்னும் ஒரு பொருளில் அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல் ஆகிய சொற்கள் வந்துள்ளன.

சொற்பொருள் பின்வரு நிலையணி: செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதாகும்.

எ.கா: “தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்”

மேற்கண்ட குறளில் “தீய” என்னும் சொல் தீமை என்ற ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

பிறிதுமொழிதலணி: உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதலணி ஆகும்.

எ.கா: “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்”

மென்மையான மயில்தோகையே ஆயினும், அதனை அளவுக்கு விஞ்சி வண்டியிலோற்றின் அச்சு ஒடிந்து விடும் என்பது உவமை.

பகைவர்கள் தனித்தனியே நோக்கும் போது மிக எளியோராயினும் ஒன்றுகூடின், தனிப்பட்ட மன்னன் எவ்வளவு வலிமையுடையவன் ஆயினும் அவனை எளிதில் வென்றுவிடுவர் என்பது பொருளாகும்.

5. ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது

(அ) தனிநிலைத் தொடர்

(ஆ) கலவைத் தொடர்

(இ) உணர்ச்சித் தொடர்

(ஈ) செய்தித் தொடர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) தனிநிலைத் தொடர்

ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனிநிலைத் தொடராகும்.

எ.கா: கண்ணன் படித்தான் – ஓர் எழுவாய், ஒரு பயனிலை

சேர,சோழ, பாண்டியர் தமிழை வளர்த்தனர் – பல எழுவாய்கள், ஒரு பயனிலை.

6. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) ஈண்டு-இவ்விடம்

(ஆ) காண்டகு-காணத்தக்க

(இ) இருப்பாணி-இரும்பு ஆணி

(ஈ) கீண்டு-அடித்து

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கீண்டு-அடித்து

“கீண்டு” – என்பதன் பொருள் தோண்டி, பிளந்து என்பனவாகும்.

7. பிழையற்ற தொடரை எழுதுக:

(அ) புத்தகப் படிப்பு தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்து கொள்ளல் வேண்டும்

(ஆ) புத்தகப் படிப்புத் தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

(இ) புத்தக படிப்பு தேவை அத்தோடு பட்டறிவை சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

(ஈ) புத்தக படிப்பு தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) புத்தகப் படிப்புத் தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்

8. பொருந்தாத வினை மரபினை எழுதுக

(அ) சுவர் கட்டினான்

(ஆ) அம்பு எய்தான்

(இ) பால் பருகினான்

(ஈ) ஆடை நெய்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) சுவர் கட்டினான்

“சுவர் எழுப்பினான்” என்பது சரியான வினைமரபாகும்.

9. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

(அ) அங்கை, அஞ்சு, அந்தி, அல்லல், அள்ளள்

(ஆ) அஞ்சு, அல்லல், அந்தி, அங்கை, அள்ளள்

(இ) அந்தி, அஞ்சு, அங்கை, அள்ளள், அல்லல்

(ஈ) அல்லல், அள்ளள், அந்தி, அங்கை, அஞ்சு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அங்கை, அஞ்சு, அந்தி, அல்லல், அள்ளள்

10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

சுவைப்பண்பு

(அ) காரம்

(ஆ) சதுரம்

(இ) புளிப்பு

(ஈ) இனிப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) சதுரம்

அறுசுவை – இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, காரம்.

சதுரம் என்பது வடிவமாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!