Answer Key

Tnpsc Accounts Officer Exam Previous Questions and Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

Tnpsc Accounts Officer Exam Previous Questions and Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE

1. வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க

(அ) வா-வந்து

(ஆ) காண்-கண்ட

(இ) கொள்-கொண்டு

(ஈ) நில்-நின்று

2. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:

வாழியர்

(அ) வாழ்

(ஆ) வாழி

(இ) வா

(ஈ) வாழிய

3. ஒரு பொருள் தரும் பல சொற்கள் “நெருப்பு”

(அ) அனல், கனல்

(ஆ) தணல், வெயில்

(இ) தண்ணீர், தீ

(ஈ) வெயில், குளிர்

4. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக:

அலை அளை

அ. கூப்பிடு தயிர்

ஆ. நத்தை சேறு

இ. துன்பம் சோறு

ஈ. கடல் பாம்புப்புற்று

5. விலை, விளை, விழை போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க:

(அ) உண்டாக்குதல், விரும்பு, பொருளின் மதிப்பு

(ஆ) விரும்பு, பொருளின் மதிப்பு, உண்டாக்குதல்

(இ) விரும்பு, உண்டாக்குதல், பொருளின் மதிப்பு

(ஈ) பொருளின் மதிப்பு, உண்டாக்குதல், விரும்பு

6. கீழ்க்க்ணடவற்றுள் திசைச்சொற்களைக் கண்டறிக:

(அ) மண், பொன் (ஆ) சாவி, சன்னல் (இ) அழுவம், வங்கம் (ஈ) விடம், மடம்

7. “சமுதாயம்” என்ற வடசொல்லின் நேரான தமிழ்ச்சொல்

(அ) மன்பதை (ஆ) குழாம் (இ) நெறி (ஈ) உண்மை

8. பிழை திருத்தம்:

சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:

1. பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.

2. பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.

3. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.

(அ) 1 மற்றும் 3 (ஆ) 3 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 1 மற்றும் 4

9. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

“தாமரை இலை நீர்போல”

(அ) ஏமாற்றம் (ஆ) பற்றுதல் இன்றி (இ) ஏற்றம் (ஈ) இரக்கம்

10. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) தாய்தந்தை – உம்மைத்தொகை

(ஆ) பொற்றொடி வந்தாள் – உவமைத்தொகை

(இ) பனைமரம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

(ஈ) வளர்தமிழ் – வினைத்தொகை

11. சொல்லுக்குரிய பொருளை அறிக:

பொம்மல்

(அ) பொம்மை (ஆ) சோறு (இ) பொம்மலாட்டம் (ஈ) பொதும்பல்

12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்:

குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

(அ) குறிஞ்சி, மருதம் நிலங்கள் (ஆ) மருதம், நெய்தல் நிலங்கள்

(இ) குறிஞ்சி, நெய்த் நிலங்கள் (ஈ) முல்லை, பாலை நிலங்கள்

13. வினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து பொருள் கூறு:

விலை-விளை

(அ) உண்டாக்குதல் – பொருளின் மதிப்பு

(ஆ) பொருளின் மதிப்பு – விரும்பு

(இ) உண்டாக்குதல் – விரும்பு

(ஈ) பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்

14. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

கரிகாலன் கல்லணையைக் கட்டினான்

(அ) செய்வினை வாக்கியம் (ஆ) செயப்பாட்டு வினைவாக்கியம்

(இ) தன்வினை வாக்கியம் (ஈ) பிறவினை வாக்கியம்

15. கீழ்க்கண்டவற்றுள் செயப்பாட்டு வினைத்தொடர் எது எனக் கண்டறிக:

(அ) ஓட்டுநரா பேருந்தை இயக்கினார்? (ஆ) ஓட்டுநர் பேருந்தை இயக்கினார்

(இ) ஓட்டுநரால் பேருந்து இயக்கப்பட்டது (ஈ) ஓட்டுநர் பேருந்தை இயக்கவில்லை

16. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:

(அ) பூங்குழலி திருக்குறள் கற்றள் (ஆ) பூங்குழலி திருக்குறள் கற்கவில்லை

(இ) பூங்குழலி திருக்குறள் கற்றாளா? (ஈ) பூங்குழலி திருக்குறள் கற்பித்தாள்

17. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.

(அ) தூது இலக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

(ஆ) சங்க இலக்கியத்தை சார்ந்ததா?

(இ) தூது இலக்கியம் எக்காலத்தைக் குறிக்கிறது?

(ஈ) சங்க மருவிய கால நூல்கள் என்னென்ன?

18. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

எங்கள் வீட்டில் தக்காளி இல்லை

(அ) உங்கள் வீட்டில் இருக்கிற தக்காளி எவ்வளவு?

(ஆ) உங்கள் வீட்டில் தக்காளி இருக்கிறதா?

(இ) தக்காளி வீட்டில் இருக்கிறதா?

(ஈ) தக்காளி உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது

19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

திருக்குறள் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது

(அ) திருக்குறள் எத்தனை குறள்பாக்களைக் கொண்டுள்ளது?

(ஆ) திருக்குறள் அதிகாரங்கள் எத்தனை?

(இ) திருக்குறள் எதற்கான குறள்களைக் கொண்டுள்ளது?

(ஈ) திருக்குறளை இயற்றியவர் யார்?

20. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) கிளி, தையல், மனிதன், தேனீ (ஆ) கிளி, மனிதன், தையல், தேனீ

(இ) கிளி, தேனீ, தையல், மனிதன் (ஈ) தையல், தேனீ, கிளி, மனிதன்

21. பொருத்துக:

அ. உழைப்புக்கு கொடுப்பது 1. குரல்

ஆ. உரிமைக்கு கொடுப்பது 2. உணவு

இ. கவலைக்கு கொடுப்பது 3. கூலி

ஈ. பசித்தவனுக்கு கொடுப்பது 4. விடை

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 3 4 2 1

இ. 1 4 3 2

ஈ. 3 1 4 2

22. சொற்களை ஒழுங்குபடுத்துக:

“முறையாகப் பண்டமாற்று வணிகம் தொடங்கியது”

(அ) வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது

(ஆ) பண்டமாற்று வணிகம் தொடங்கியது முறையாக

(இ) முறையாகத் தொடங்கியது பண்டமாற்று வணிகம்

(ஈ) வணிகம் தொடங்கியது பண்டமாற்று முறையாக

23. சொற்களை ஒழுங்குபடுத்துக:

“செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம் இப்போது நாம்”

(அ) இப்போது இருக்கிறோம் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் நாம்

(ஆ) இருக்கிறோம் செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் நாம் இப்போது

(இ) இருக்கிறோம் நாம் இப்பேது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில்

(ஈ) நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம்

24. பொருத்தமான காலம் அமைத்தல்.

சரியான தொடரைத் தேர்ந்தெடு

(அ) மாலனை கந்தன் வீழத்தினான் (இறந்த காலம்)

(ஆ) மாலனை கந்தன் வீழ்த்துவான்(நிகழ்காலம்)

(இ) மாலனை கந்தன் வீழ்த்துகிறான் (எதிர்காலம்)

(ஈ) மாலனை கந்தன் வீழ்த்திச் சென்றான் (நிகழ்காலம்)

25. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு.

ஆடு-சரியான சொல்

(அ) கன்று (ஆ) குட்டி (இ) குழவி (ஈ) குருளை

26. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க:

விளையாட்டு, பறவை, பாட்டு, திடல்

(அ) பறவை பாட்டு (ஆ) பாட்டு விளையாட்டு

(இ) விளையாட்டுத் திடல் (ஈ) பறவை விளையாட்டு

27. சரியான எழுத்து வழக்கினைக் கண்டறிக:

தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சது

(அ) தேங்கா உழுந்து மண்டை உடைந்தது (ஆ) தேங்காய் விழுந்து மண்ட உடைந்தது

(இ) தேங்காய் விழுந்து மண்டை உடைந்தது (ஈ) தேங்காய் விழுந்து மண்டை உடைஞ்சது

28. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்ந்தெடு

(அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

(ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது

(இ) வறட்சி அனைத்து இடங்களையும் பாதித்துள்ளது

(ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

29. பின்வரும் தொடர்களில் எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:

(அ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமல் போவாது

(ஆ) தேர்வெழுத வேகமாகப் போங்க் நேரமானால் பதட்டமாயிரும்

(இ) காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

(ஈ) காலத்துக்கேத்த மாதிரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்

30. தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போது

(அ) அரைப்புள்ளி (ஆ) முக்காற்புள்ளி

(இ) ஒற்றை மேற்கோள் குறி (ஈ) இரட்டை மேற்கோள் குறி

31. குடந்தை என வழங்கப்படும் ஊர்ப் பெயரைக் கண்டறிக:

(அ) குடுமியான் மலை (ஆ) கும்பகோணம் (இ) குற்றாலம் (ஈ) குடவாசல்

32. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக:

சரியான இணையைத் தேர்ந்தெடுக்க

(அ) திருச்சிராப்பள்ளி – திருச்சி

(ஆ) புதுக்கோட்டை – புதுவை

(இ) மயிலாப்பூர் – மயிலம்

(ஈ) நாகர்கோவில் – நாகை

33. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

“எக்ஸ்பெரிமென்ட்”

(அ) செய்முறை (ஆ) சோதனை (இ) பரிசோதனை (ஈ) உற்றுநோக்கல்

34. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்:

செக்

(அ) காசோலை (ஆ) வரைவோலை (இ) பணத்தாள் (ஈ) பற்று அட்டை

35. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டு பொருத்துக:

(அ) Cabinet 1. எல்லை

(ஆ) Cultural 2. மனிதநேயம்

(இ) Humanism 3. பண்பாடு

(ஈ) Boundaries 4. அமைச்சரவை

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 4 1 3

இ. 3 2 4 1

ஈ. 1 2 3 4

36. உடன்பட்டுக் கூறும் விடை என்பதை கீழ்வருவனவற்றுள் எந்த விடையைக் கூறலாம்?

(அ) உற்றது உரைத்தல் விடை (ஆ) நேர்விடை

(இ) இனமொழி விடை (ஈ) உறுவது கூறல் விடை

37. விடை எத்தனை வகைப்படும்? விடை வகைகள்

(அ) இரண்டு (ஆ) ஆறு (இ) எட்டு (ஈ) ஐந்து

38. அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக:

ஸ்டேப்ளர் (Stapler)

(அ) மை பொதி (ஆ) மடிப்புத்தாள் (இ) கம்பி தைப்புக் கருவி (ஈ) கோப்பு

39. அலுவல் சார்ந்த கலைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக:

ரப்பர் ஸ்டேம்ப் (Rubber Stamp)

(அ) கோப்பு (ஆ) இழுவை முத்திரை (இ) மடிப்புத்தாள் (ஈ) கம்பி தைப்புக் கருவி

40. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச்சொல்).

சரியான இணையைத் தேர்ந்தெடுக்க

(அ) உருபன்-உரேபன் (ஆ) ஒலியன்-ஒலியன்

(இ) பேரகராதி-பேரகராதி (ஈ) ஒப்பிலக்கணம்-ஒப்பில் இலக்கணம்

41. கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு.

நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. மேலவீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத் தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது. அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.

நெல்லை நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளன. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர் கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.

41. காவற்புரை என்றால் என்ன?

(அ) சிறைச்சாலை (ஆ) காவற்சாலை (இ) காவலர் (ஈ) அரசர்

42. கூலம் என்பது எதைக் குறிக்கும்?

(அ) பயிறு (ஆ) அரிசி (இ) தானியம் (ஈ) பயறு

43. அணிகலள்களும், பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எது?

(அ) அணிகலன் (ஆ) பொன் (இ) தட்டச்சன் (ஈ) அக்கசாலை

44. பாண்டிய மன்னரை வரவேற்ற இடம் எது?

(அ) அயனபுரம் (ஆ) அரண்மனை (இ) பாண்டியபுரம் (ஈ) பாண்டியர்

45. நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது?

(அ) நெல்லையப்பர் (ஆ) பேட்டை (இ) காவலர் (இ) நின்றசீர்

46. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

(அ) நான் வாங்கிய நூல் இது அல்ல (ஆ) நான் வாங்கிய நூல் இது அன்று

(இ) நான் வாங்கிய நூலகள் இது அல்ல (ஈ) நான் வாங்கிய நூல்கள் இவை அன்று

47. ஒருமை-பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) பகைவர் நீவீர் அல்லர் (ஆ) பகைவர் நீவீர் அல்லீர்

(இ) பகைவர் நீவீர் அல்லோம் (ஈ) பகைவர் நீவீர் அல்ல

48. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) மதலை, நெகிழி, அழுவம், சென்னி, உரவு நீர், கரையும்

(ஆ) அழுவம், உரவு நீர், மதலை, நெகிழி, சென்னி, கரையும்

(இ) நெகிழி, அழுவம், உரவு நீர், கரையும், மதலை, சென்னி

(ஈ) அழுவம், உரவு நீர், கரையும், நெகிழி, சென்னி, மதலை

49. “கெடுதல்” என்ற தொழிற்பெயர் எவ்வாறு திரியும்?

(அ) கெடு, கேடு (ஆ) கொடு, கோடு (இ) கேடு, கோடு (ஈ) கெடு, கொடு

50. விகுதி பெறாத தொழிற்பெயர்

(அ) கூத்து (ஆ) வேக்காடு (இ) கடவுள் (ஈ) ஏற்றுமதி

51. பகுதி I உடன் பகுதி II-ஐப் பொருத்துக:

பகுதி I பகுதி II

அ. குறிஞ்சி 1. வருணன்

ஆ. முல்லை 2. முருகன்

இ. மருதம் 3. திருமால்

ஈ. நெய்தல் 4. இந்திரன்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 2 3 4 1

இ. 1 2 3 4

ஈ. 4 1 2 3

52. எடுத்துக்காட்டினை பொருத்துக:

மரம்,காடு – மா, கருவேலங்காடு

(அ) இடுகுறிப் பெயர் – காரணப்பெயர்

(ஆ) இடுகுறிப்பெயர் – இடுகுறி சிறப்புப்பெயர்

(இ) பண்புப்பெயர் – இடுகுறிப்பெயர்

(ஈ) இடுகுறிப்பெயர் – சினைப்பெயர்

53. சொல்-பொருள் பொருத்துக:

(அ) காலை – பணி

(ஆ) தால் – நாக்கு

(இ) தழை – கட்டு

(ஈ) வேலை – வேளை

54. பிழையற்ற தொடரைக் கண்டறிக:

(அ) வலதுபக்கச் சுவரில் எழுதாதே (ஆ) இடப்பக்க சுவரில் எழுதாதே

(இ) வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே (ஈ) இடது பக்கச் சுவற்றில் எழுதாதே

55. சந்திப்பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:

(அ) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஆ) கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(இ) கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஈ) கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

56. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக:

(அ) தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழ்கள்தான்” என்றார்.

(ஆ) “தில்லான்” இந்திய தேசிய இராணுவத்தின், இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.

(இ) தில்லான், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.

(ஈ) தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின், இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்”

57. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க:

(அ) மனிதா, மனிதா! அழைப்பது கேட்கிறதா?

எங்கு பார்க்கிறாய்; யாரைத் தேடுகிறாய்?

(ஆ) மனிதா மனிதா அழைப்பது கேட்கிறதா;

எங்கு பார்க்கிறாய் யாரைத் தேடுகிறாய்?

(இ) மனிதா! மனிதா! அழைப்பது கேட்கிறதா?

எங்கு பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்?

(ஈ) மனிதா, மனிதா, அழைப்பது கேட்கிறதா?

எங்கு பார்க்கிறாய்? யாரைத் தேடுகிறாய்?

58. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:

தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) கோவை – கோயம்புத்தூர்

(ஆ) திருச்சி – திருச்சிராப்பள்ளி

(இ) நெல்லை – நெய்வேலி

(ஈ) புதுவை – புதுச்சேரி

59. “சனி நீராடு”

எப்புலவரின் வாக்கு?

(அ) பாரதியின் வாக்கு (ஆ) பாரதிதாசனின் வாக்கு

(இ) ஒளவையின் வாக்கு (ஈ) கம்பரின் வாக்கு

60. சரியான எண்ணடையைக் கண்டறிக:

(அ) ஒரு இரவு (ஆ) ஒன்று இரவு (இ) ஒன் இரவு (ஈ) ஓர் இரவு

61. “நன்மொழி” என்பதன் எதிர்ச்சொல் எழுதுக:

(அ) நல்ல மொழி (ஆ) தீமொழி (இ) நற்சொல் (ஈ) நன்மை

62. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக: அழி-ஆழி

(அ) அழித்தல்-வீரம் (ஆ) வயல்-கடல் (இ) நெருப்பு-பறவை (ஈ) அழித்தல்-கடல்

63.மதி-இரு பொருள் கண்டறிக:

(அ) நிம்மதி, மதித்தல் (ஆ) நிலா, அறிவு (இ) சந்திரன், அழகு (ஈ) இடை,கடை

64. இரு பொருள் தருக:

கால்

(அ) கால் பங்கு பிரித்துக்கொடு, ஈரம் பார்த்து கால் வை

(ஆ) கால் வலிக்கிறது, காலில் செருப்பு அணி

(இ) கால் முறிந்தது, காலில் புண் உள்ளது

(ஈ) கடல் அலை, கால் பாகம் உண்டு

65. இச்செயலைச் செய்தது மங்கையா? மடந்தையா?

என்று வினவுவது

(அ) கொடை வினா (ஆ) ஏவல் வினா (இ) ஐய வினா (ஈ) அறியா வினா

66. பல தொழில்களால் இயங்கினாலும் உலகம்

ஏருக்குப் பின்னாலேயே போகும்! வருந்தி

உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

– சரியான இணைப்புச் சொல்லை எழுது

(அ) எனவே (ஆ) அதனால் (இ) ஆகையால் (ஈ) அதுபோல

67. கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக:

நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் ——- துன்பப்பட நேரிடும்

(அ) ஏனெனில் (ஆ) இல்லையென்றால் (இ) அதனால் (ஈ) ஆகையால்

68. பிரித்தெழுதுதல்:

“இரண்டல்ல” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ———

(அ) இரண்டு + டல்ல (ஆ) இரண் + அல்ல

(இ) இரண்டு + இல்ல (ஈ) இரண்டு + அல்ல

69. பிரித்து எழுதுக:

“பெருங்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(அ) பெரு + கடல் (ஆ) பெருமை + கடல் (இ) பெரிய + கடல் (ஈ) பெருங் + கடல்

70. இரு பொருள் கொண்ட ஒரு சொல்.

அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை —— பழகும்.

அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி ——

(அ) வழக்கு (ஆ) அழகு (இ) நடை (ஈ) நயம்

71. அடைப்புக்குறிக்குள் உள்ளசொல்லை பொருத்தமான இடத்தில் எழுது

(அவர்)

(அ) என் வீடு ——– உள்ளது (ஆ) தம்பி ——- வா

(இ) நீர் ———– தேங்கி இருக்கிறது (ஈ) யார் ————- தெரியுமா?

72. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(வேற்றுமை)

(அ) ———– இறக்கமும் மலைக்கு அழகு (ஆ) அழுகையும் ——— வாழ்வில் இயல்பு

(இ) ————– முதுமையும் யாவர்க்கும் உண்டு (ஈ) ஒற்றுமை கண்டால் ———- நீங்கும்

73. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

(உணவு)

(அ) உறவுக்கு ——— கொடு (ஆ) பசித்தவனுக்கு ——– கொடு

(இ) உழைப்புக்கு —— கொடு (ஈ) உரிமைக்கு —— கொடு

74. குயிலுக்குக் கூடு கட்டத்தெரியாது

காக்கையின் கூட்டில் முட்டையிடும்.

சரியான இணைப்புச் சொல் எது?

(அ) அதனால் (ஆ) ஆகையால் (இ) எனவே (ஈ) ஏனெனில்

75. கல்-கூட்டுப்பெயர்.

சரியான எண்ணடையைத் தேர்வு செய்க:

(அ) கல்லுக்கூட்டம் (ஆ) கற்குலை (இ) கற்கட்டு (ஈ) கற்குவியல்

76. தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு.

ஆராயும் அறிவு உடையவர்கள் ———– சொற்களைப் பேசமாட்டார்

(அ) உயர்வான (ஆ) விலையற்ற (இ) பயன்தராத (ஈ) பயன் உடைய

77. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

சரியான இணையைத் தேர்ந்தெடு.

(அ) தாள்-முடி (ஆ) பனி-குளிர் (இ) அரம்-வீரம் (ஈ) கரம்-கால்

78. தவறான இணையைத் தேர்க:

(அ) தொண்டு – Charity

(ஆ) தத்துவம் – Philosophy

(இ) பகுத்தறிவு – Integrity

(ஈ) சீர்திருத்தம் – Reform

79. கலைச்சொற்களை அறிதல்:

சரியான இணையைத் தேர்க:

(அ) ஆன்லைன் ஷப்பிங் – மின்னணு வணிகம்

(ஆ) கிரெடிட் கார்டு – காசோலை

(இ) ஈ காமர்ஸ் – மின்னணு மயம்

(ஈ) டிமாண்ட் டிராப்ட் – வரைவோலை

80. “Epigraph” – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல்லைத் தேர்ந்தெடுக்க

(அ) சித்திர எழுத்து (ஆ) கல்வெட்டு (இ) செப்பேடு (ஈ) ஒப்பெழுத்து

81. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.

காரணம் : பண்டைத்தமிழ் மன்னர்களின் ஆட்சி, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம்.

(அ) கூற்று சரி: காரணம் சரி (ஆ) கூற்று தவறு : காரணம் தவறு

(இ) கூற்று சரி : காரணம் தவறு (ஈ) கூற்று தவறு : காரணம் சரி

82. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று: திருமூலர் திருமந்திரம் எழுதினார்.

காரணம்: பதினெண் சித்தர்களுள் ஒருவர் திருமூலர்.

(அ) கூற்று தவறு : காரணம் தவறு (ஆ) கூற்று சரி : காரணம் தவறு

(இ) கூற்று தவறு : காரணம் சரி (ஈ) கூற்று சரி: காரணம் சரி

83. குறில் நெடில் மாற்றம்.

தவறான இணையைக் கண்டறிக:

(அ) கலம் காலம் (ஆ) சுழல் சூழல் (இ) புகழ் திகழ் (ஈ) வளம் வாழ்வு

84. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

கல்லில் நார் உரித்தல்

(அ) நீண்டகாலமாக இருப்பது (ஆ) ஆராய்ந்து பாராமல்

(இ) இயலாத செயல் (ஈ) விரைந்து வெளியேறுதல்

85. சொற்களை ஒழுங்குபடுத்துக:

“வரின் ஆயினும் அல்லில் விருந்து உவக்கும்”

(அ) ஆயினும் உவக்கும் விருந்துவரின் அல்லில் (ஆ) விருந்துவரின் உவக்கும் அல்லில் ஆயினும்

(இ) அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் (ஈ) உவக்கும் விருந்துவரின் ஆயினும் அல்லில்

86. ஆங்கிலச் சொல்லுக்கான நேரான தமிழ்ச்சொல் அறிக:

(அ) Vowel 1. ஒரு மொழி

(ஆ) Consonant 2. ஒப்பெழுத்து

(இ) Homograph 3.உயிரெழுத்து

(ஈ) Monolingual 4. மெய்யெழுத்து

அ ஆ இ ஈ

அ. 2 3 1 4

ஆ. 4 2 3 1

இ. 3 1 2 4

ஈ. 3 4 2 1

87. Space Technolgoy என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக:

(அ) விண்வெளி நுட்பம் (ஆ) உயிரித் தொழில் நுட்பம்

(இ) விண்வெளித் தொழில் நுட்பம் (ஈ) மீநுண் தொழில் நுட்பம்

88. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக:

(அ) Crop 1. உறை

(ஆ) Folder 2. உலாவி

(இ) Cursor 3. செதுக்கி

(ஈ) Browser 4.சுட்டி

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 2 3 1 4

இ. 3 1 4 2

ஈ. 4 2 3 1

89. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) பனை வடலி (ஆ) தென்னங்கன்று (இ) வாழை நாற்று (ஈ) விளாங்கூழ்

90. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக:

சென்றனர்

(அ) சென்று (ஆ) செல் (இ) சென்ற (ஈ) செல்ல

91. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்:

நடந்தாள்

(அ) நட (ஆ) நடக்கிறாள் (இ) நடப்பாள் (ஈ) நடக்குவாள்

92. ஒருபொருள் தரும் பல சொற்கள்:

“வயல்”

(அ) பகல், பழனம் (ஆ) கழனி, பழனம் (இ) செய், நெல் (ஈ) நீர்நிலை, கேணி

93. சேர்த்து எழுதுக:

எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

(அ) எழுத்து ஆணி (ஆ) எழுத்தாணி (இ) எழுத்து தாணி (ஈ) எழுதாணி

94. சரியான வினாவைத் தேர்ந்தெடு:

“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது

(அ) ஐயவினா (ஆ) அறியா வினா (இ) அறிவினா (ஈ) கொளல் வினா

95. சரியான வினாச்சொல் எது?

நெல்லையப்பர் கோவில் ——– உள்ளது?

(அ) எப்படி (ஆ) எத்தனை (இ) எங்கு (ஈ) என்ன

96. மூன்று காலங்களையும் குறிக்கும் சொல் எது?

(அ) நடந்தாள், நடக்கிறாள், நடப்பாள் (ஆ) காண், காண்பாள், கண்டாள்

(இ) ஆடினாள், ஆடு, ஆடுவாள் (ஈ) பார்த்தல், பார்ப்பாள், பார்த்தாள்

97. தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க:

(அ) பசுமரத்தாணிபோல – எளிதில் மனத்தில் பதிதல்

(ஆ) மடைதிறந்த வெள்ளம்போல – தடையின்று

(இ) கீரியும் பாம்பும் போல – ஒற்றுமை

(ஈ) விழலுக்கு இறைத்த நீர்போல – பயனற்றசெயல்

98. எதிர்சொல்லை எழுத்தெழுது:

எத்தனிக்கும்

(அ) முயலாமை (ஆ) அறியாமை (இ) நீங்காமை (ஈ) தளராமை

99. “இளமை” என்பதன் எதிர்ச்சொல் எழுதுக:

(அ) புதுமை (ஆ) முதுமை (இ) தனிமை (ஈ) இனிமை

100. கூட்டப்பெயர்:

“புள்”

சரியான எண்ணடையைத் தேர்வு செய்க:

(அ) புள் கூட்டம் (ஆ) புள் திரள் (இ) புட் குழாம் (ஈ) புள் குவியல்

101. ஈஸ்டில் காணப்படும் ஸ்டீராய்டின் பெயர் என்ன?

(அ) லானோஸ்டீரால் (ஆ) பித்த அமிலம் (இ) எர்கோஸ்டீரால் (ஈ) ஆஸ்டிரியோஸ்டீரால்

102. பூச்சிகளின் ஹீமோலிம்பில் காணப்படும் சர்க்கரை ———- ஆகும்

(அ) செல்லோபயோஸ் (ஆ) மால்டோஸ்

(இ) டிரக்கலோஸ் (ஈ) குளுக்கோஸ்

103. தற்கால உலகம் என்பது ————ஆல் உருவாக்கப்பட்டுள்ளது

(அ) பரிணாம சக்திகளால் (ஆ) கனிம மற்றும் கரிம பொருள்களால்

(இ) கடவுளால் (ஈ) கரிம பரிணாமத்தால்

104. ஜாவா குரங்கு மனிதனின் புதைபடிவமான பித்திகேன்தோரோபஸ் எரக்டஸ்யை கண்டுபிடித்தவர்.

(அ) மாயர் (ஆ) சிம்சன் (இ) எல்.எஸ்.பி.லீக்கி (ஈ) டிபாயிஸ்

105. ஒரு தனிமத்தின் பொருண்மை எண் “A”. அதன் அணுக்கருவின் பருமன் எந்த விகிதம்?

(அ) A (ஆ) A2 (இ) A3 (ஈ) A1/3

106. பின்வரும் துகள்களில் எலக்ட்ரானின் அதே அளவு நிறை கொண்ட துகள் எது?

(அ) புரோட்டான் (ஆ) நியூட்ரான் (இ) பாசிட்ரான் (ஈ) நியூட்ரினோ

107. அறுவை சிகிச்சை செய்ய லேசர் கற்றை பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் அது

(அ) மிகவும் ஓரியல் கற்றையாகும் (ஆ) மிகவும் திசை கற்றை ஆகும்

(இ) கூர்மையான குவியம் கொண்டது (ஈ) மிகவும் ஒற்றை நிறமுடையது

108. சோடியம் ஃப்ளோரோ அசிட்டேட், ஆல்பா நாப்தைல் யூரியா, நார்போர்மைடு மற்றும் தாலியம் சிட்டேட் ஆகியவற்றுள் கொறித்துண்ணிகளான எலிகளுக்கு மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்லியை தேர்ந்தெடு

(அ) சோடியம் ஃப்ளோரோ அசிடேட் (ஆ) ஆல்பா நாப்தைல் யூரியா

(இ) நார்போர்மைடு (ஈ) தாலியம் அசிட்டேட்

109. இந்திய விலங்கினம் கணக்கெடுப்பு மையத்தால் கீழ்க்கண்டவற்றுள் எது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருசிகுல்யா நதி வாய் வழியாக வலசைபோகும் அழிந்து வரும் இனங்களை ஆராய குறியீடு செய்யப்பட்டுள்ளது.

(அ) இந்திய கருப்பு ஆமை (ஆ) பச்சை கடல் ஆமை

(இ) ஆலிவ் ரிட்லி ஆமை (ஈ) இந்திய நட்சத்திர ஆமை

110. கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக கீழ்கண்ட திட்டங்களில் எது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது?

(அ) கங்கா செயல் திட்டம் (ஆ) நமாமி கங்கே

(இ) கங்கே நமாமி செயல்திட்டம் (ஈ) கங்கையை சுத்தம் செய்யும் பணி

111. 2021 ஜீன் 4ஆம் தேதி அறிவுசார் பொருளாதார மிஷன் எந்த அரசால் நிறுவப்பட்டது?

(அ) மத்திய பிரதேசம் (ஆ) தமிழ்நாடு (இ) உத்தர பிரதேசம் (ஈ) கேரளா

112. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதுமைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வருவனவற்றுள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்

(அ) பிரதமரின் யுவா திட்டம் (ஆ) பிரதமரின் ஸ்ரம் யோகி மன்-தன் திட்டம்

(இ) பிரதமரின் வய வந்தனா திட்டம் (ஈ) பிரதமரின் முத்ரா திட்டம்

113. தோலாவிரா பழமையான ——– நகரம்

(அ) ஹரப்பன் (ஆ) மொஹஞ்சதாரோ (இ) கீழடி (ஈ) லோதல்

114. வந்தே மாதரம் என்ற பாடல் ————- மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது.

(அ) வங்காளம் (ஆ) ஹிந்தி (இ) உருது (ஈ) சமஸ்கிருதம்

115. “சமத்துவச் சிலை” அமையப் பெற்ற நகரம்

(அ) ஒரிசா (ஆ) டில்லி (இ) ஹைதராபாத் (ஈ) குஜராத்

116. கீழ்கண்டவற்றுள் எது விஜயநகர் இரும்பு எஃகு ஆலையுடன் பொருந்தாது?

(அ) இது கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது

(ஆ) இதற்கு ஜாரியாவிலிருந்து நிலக்கரி பெறுகிறது

(இ) இதற்கு துங்கபத்ரா நீர்மின் சக்தியிலிருந்து நீர்;மின சக்தி கிடைக்கிறது

(ஈ) இங்கு நிலக்கரியானது கோரக்ஸ் முறையில் பயன்படுத்தப்படுகிறது

117. கீழே கொடுக்கப்பட்ட விலங்குகளை அவற்றின் சரியான இனங்களுடன் பொருத்துக:

(அ)ஆபத்தான இனங்கள் 1. காட்டு எருமை
(ஆ) பாதிக்கப்படக்கூடிய இனங்கள் 2. ஆசிய புலி

(இ) அரிதான இனங்கள் 3. முதலை

(ஈ) அழிந்து போன இனங்கள் 4. டால்ஃபின்

அ ஆ இ ஈ

(அ) 3 4 1 2

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 2 3 4 1

18. இந்தியாவில் எத்தனை உயி கோள காப்பகங்கள் உள்ளன?

(அ) 22 (ஆ) 23 (இ) 18 (ஈ) 16

19. இந்தியாவில், தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எத்தனை நகரங்கள் மற்றும் இடைநிலை ஆறுகள் உள்ளடக்கப்பட்டன?

(அ) 152 நகரங்கள் மற்றும் 27 இடைநிலை ஆறுகள்

(ஆ) 125 நகரங்கள் மற்றும் 30 இடைநிலை ஆறுகள்

(இ) 512 நகரங்கள் மற்றும் 33 இடைநிலை ஆறுகள்

(ஈ) 215 நகரங்கள் மற்றும் 25 இடைநிலை ஆறுகள்

20. புவிவெப்ப சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம்

(அ) அமைதி பள்ளத்தாக்கு (ஆ) தப்தி பள்ளத்தாக்கு

(இ) புகா பள்ளத்தாக்கு (ஈ) அரக்கா பள்ளத்தாக்கு

121. கூற்று (A): சிந்து வியாபாரிகள் மெசபடோமியாவில் தங்கினர்.

காரணம் (R): பருத்தியை தங்களுடன் கொண்டு சென்றனர்

(அ) (A) சரி (R) தவறு (ஆ) (A) (R) இரண்டும் சரி

(இ) (A) தவறு (R) சரி (ஈ) (A) சரி ஆனால் (R) (A) யின் சரியான விளக்கமல்ல

122. இந்தோ-இஸ்லாமிய கவிஞர்களில் மிகப்பெரியவர். ஏழு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். மேலும் அலாவுதீன் அரச அவையில் நீண்ட காலம் தொடர்பு உடையவர். அவர் யார்?

(அ) அமிர் குஸ்ரு (ஆ) பரணி (இ) கபீர் (ஈ) ஹனிபா டீன்

123. “சிபார்ஸ்” என்ற சொல் எதை குறிக்கின்றது?

(அ) துப்பாக்கியுடன் கூடிய படகுகள் (ஆ) வலிமையான வாணிப கப்பல்கள்

(இ) வணிக படகுகள் (ஈ) கப்பல் பணியாளர்கள்

124. 1303 ஆம் ஆண்டில் வங்காளத்தின் வழியாக வாரங்கலுக்கு எதிராக அலாவுதின் கில்ஜியின் தெற்கு படையெடுப்பை வழி நடத்தியது யார்?

(அ) பிர்துல் (ஆ) ஜலாலுதின் பிருஸ் (இ) மாலிக்கபூர் (ஈ) ஷிகாபுதின் ஒமர்

125. இந்தியாவில் இந்து பண்பாடு ——— ஆட்சியில் கீழ் உச்சத்தை அடைந்தது.

(அ) மௌரியர்கள் (ஆ) குப்தர்கள் (இ) குஷாணர்கள் (ஈ) ஹர்ஷர்கள்

126. இந்தியாவில் அதன் பித்தளை பொருட்களின் வரம்பிற்கு உலகப்புகழ் பெற்ற இடத்தின் பெயரைக் குறிப்பிடவும்

(அ) பனாரஸ் (ஆ) ஜெய்ப்பூர் (இ)மொராதாபாத் (ஈ) பலித்தானா

127. கி.பி.5-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன?

(அ) நாலந்தா (ஆ) வாதாபி (இ) தட்சசீலம் (ஈ) விக்ரமஷிலா

128. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்

பட்டியல் I பட்டியல் II

அ. டெப்ஸா கணவாய் 1.உத்தரகாண்ட்

ஆ. லிகாபனி கணவாய் 2. ஹிமாச்சல பிரதேசம்

இ. நாது லா கணவாய் 3. அருணாச்சல பிரதேசம்

ஈ. முலிங் லா கணவாய் 4. சிக்கிம்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 4 2 3 1

இ. 2 3 1 4

ஈ. 4 2 1 3

29. இந்திய அரசியலமைப்பு விதி 94 விளக்குவது

(அ) சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நீக்கம்

(ஆ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்

(இ) தலைமை தேர்தல் ஆணையர் நீக்கம்

(ஈ) துணைக் குடியரசுத் தலைவர் நீக்கம்

30. இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தடை செய்கிறது?

(அ) உறுப்பு 21 (ஆ) உறுப்பு 22 (இ) உறுப்பு 23 (ஈ) உறுப்பு 24

31. அடிப்படைக் கடமைகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?

1. உரிமைகளை அனுபவிக்கின்ற குடிமக்களுக்கு, அவர்களின் கடமைகள் பற்றிய நினைவூட்டலாக இது அமைந்துள்ளது.

2. தேச விரோதிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.

3. குடிமக்களுக்கு ஊக்கத்தின் ஆதாரமாகவும், அவர்களிடம் ஒழுங்கை மேம்படுத்துமாறும் இது அமைந்துள்ளது.

4. இது சட்டத்தின் மூலம் நிலை நாட்டக்கூடியது.

(அ) 1,2 மற்றும் 3 சரியானது (ஆ) 1, 3 மற்றும் 4 சரியானது

(இ) 1 மற்றும் 2 சரியானது (ஈ) அனைத்தும் சரியானது

132. “கிழக்கு நோக்கும் கொள்கையை” துவக்கிய இந்திய பிரதமர் யார்?

(அ) P.V.நரசிம்ம ராவ் (ஆ) அடல் பிகாரி வாஜ்பாய் (இ) மன்மோகன் சிங் (ஈ) குஜ்ரால்

133. சட்டமன்ற மேலவையை உருவாக்கவும் மற்றும் நீக்கவுமான அதிகாரம் யாரிடம் உள்ளது?

(அ) குடியரசு துணைத் தலைவர் (ஆ) மாநில சட்டமன்றம்

(இ) குடியரசு தலைவர் (ஈ) நாடாளுமன்றம்

134. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உருhவக்கப்பட்ட ஆண்டு

(அ) 1984 (ஆ) 1985 (இ) 1986 (ஈ) 1987

135. “பொது நல வழக்கு” முதன் முதலாக எந்த நாட்டில் கொண்டுபரப்பட்டது?

(அ) அமெரிக்கா (ஆ) இங்கிலாந்து (இ) கனடா (ஈ) ஜப்பான்

136. கீழே உள்ளவற்றினைப் பொருத்தி சரியான விடை எழுதுக:

சட்டம் வருடம்

அ. ஆதார் சட்டம் 1. 1997

ஆ. நிதி ஆயோக் 2. 1999

இ. ஐ.ஆர்.டி.ஏ.சட்டம் 3. 2015

ஈ. டிராய் சட்டம் 4. 2016

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 3 2 4 1

இ. 3 2 1 4

ஈ. 4 1 3 2

137. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்

(அ) நிலைத்தன்மையுடனான வளர்ச்சி

(ஆ) வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி

(இ) வறுமையை ஒழித்தல்

(ஈ) தற்சார்பு அடைதல்

138. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்ட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் II

அ. எம்.என்.ராய் 1.காந்திய திட்டம்

ஆ. ஸ்ரீமன் நாராயன் 2. பம்பாய் திட்டம்

இ. எட்டு தொழிலதிபர்கள் 3. மக்கள் திட்டம்

அ ஆ இ

அ. 2 3 1

ஆ. 3 1 2

இ. 1 3 2

ஈ. 3 2 1

39. கீழே காணப்படும் இனங்களில் மாநில அரசின் வரி வருவாய் மூலம் இல்லாதது எது?

(அ) நில வருவாய் (ஆ) மோட்டார் வாகன வரி

(இ) பொழுதுபோக்கு வரி (ஈ) வணிக நிறுவன வரி

40. கீழ்கண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் நிதிக்குழு எந்த பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது?

(அ) பிரிவு 252 (ஆ) பிரிவு 268 (இ) பிரிவு 272 (ஈ) பிரிவு 280

141. பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்ட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் II

அ. NABARD 1. தொழில் நிதி அல்லது (கடன்)

ஆ. HDFC 2. நுண்ணிய நிதி அல்லது (கடன்)

இ. IDBI 3. வீட்டு நிதி அல்லது (கடன்)

ஈ. SHG 4. விவசாய நிதி அல்லது (கடன்)

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 3 1 2 4

இ. 2 1 4 3

ஈ. 4 3 1 2

142. “இந்தியாவில் செய்யுங்கள்” திட்டம் தொடங்கப்பட்ட நாள் மற்றும் ஆண்டு

(அ) மார்ச் 25, 2012 (ஆ) ஏப்ரல் 20, 2014 (இ) செப்டம்பர் 25, 2014 (ஈ) டிசம்பர் 12, 2016

143. நகர்ப்புறத்தில் உள்ள அடிப்படை வசதிகளை கிராமப்புறத்தில் வழங்குதல் (PURA) திட்டமானது 2003ல் ——— கிராம வளர்ச்சி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டது

(அ) 2000 வட்டாரங்கள் (ஆ) 3000 வட்டாரங்கள்

(இ) 5000 வட்டாரங்கள் (ஈ) 6000 வட்டாரங்கள்

144. பின்வருவனவற்றுள் எது சரி?

கூற்று (A): அந்நிய ஆட்சிக்கு எதிராக நடந்த முதல் கிளர்ச்சி 1770ல் வங்காளத்தில் வெடித்தது.

காரணம் (R): இதற்கான முக்கிய காரணம் அழிவை ஏற்படுத்தி பஞ்சமும் மற்றும் விவசாயிகள் சுரண்டப்பட்டதும் ஆகும்.

(அ) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) (A) க்கான சரியான விளக்கம் அல்ல

(ஆ) (A) சரி, ஆனால் (R) தவறு

(இ) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R), (A) க்கான சரியான விளக்கம்

(ஈ) (A) தவறு, ஆனால் (R) சரி

145. கூற்று (A): தாதாபாய் நௌரோஜி கிழக்கிந்தியக் கழகத்தை லண்டனில் உருவாக்கினார்.

காரணம் (R): பிரிட்டிஷ் பொதுமக்கள் கருத்தின் மீது செல்வாக்கு ஏற்படுத்த விரும்பினார்

(அ) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R) (A)க்கான சரியான விளக்கம்

(ஆ) (A) சரி, ஆனால் (R) தவறு

(இ) (A) தவறு, ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) சரி, மற்றும் (R), (A)க்கான சரியான விளக்கமல்ல

146. சரியானவற்றை பொருத்துக:

1. இந்திய தேசியத்தின் தூதுவர் – இராஜாராம் மோகன்ராய்.

2. மக்களின் சிறந்த பாரம்பரியத்தை

தெரிந்து கொண்டு எழுச்சி பெற “வேதங்களை

நோக்கி செல்லும்” – சுவாமி விவேகானந்தா.

3. R.G. பிரதான் இவரை இந்திய “தேசியத்தின்

தந்தை” என்றழைத்தார் – சுவாமி தயானந்த சரஸ்வதி.

4. “சுயராஜியம் எனது பிறப்புரிமை” என்று

கூறியவர் – பாலகங்காதர் திலகர்

(அ) 1 மற்றும் 2 சரி (ஆ) 2 மற்றும் 3 சரி (இ) 3 மற்றும் 4 சரி (ஈ) 1 மற்றும் 4 சரி

147. பின்வரும் வார்த்தைகளைக் கூறியவர் யார்?

“இரும்பை உருக்கி, எஃகு உருவாக்கி, உறுதியான இயந்திரங்களை உருவாக்கு”

(அ) வ.உ.சிதம்பரனார் (ஆ) பகத்சிங் (இ) சுப்ரமண்ய பாரதி (ஈ) சுபாஷ் சந்திர போஸ்

148. பின்வரும் கூற்றினை கூறியவர் யார்?

“வன்முறையில்லாமல் விடுதலை அடைந்துவிட்டால் மிக நல்லது; இல்லை என்றால் தேசத்திற்கு படையை வைத்து அந்நியரை விரட்டும் உரிமை உண்டு”

(அ) பகத்சிங் (ஆ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

(இ) சுபாஷ் சந்திர போஸ் (ஈ) குர்தியால் சிங் திலான்

149. சத்தியாகிரக உத்தி பல்வேறு முறைகளை உள்ளடக்கியது.

பின்வருவனவற்றுள் எது/எவை காந்தியால் சேர்க்கப்படவில்லை?

1. உண்ணாவிரதம்.

2.வேலை நிறுத்தம்.

3.எரிந்த பூமி கொள்கை.

4.நிலத்தடி நடவடிக்கை

(அ) 1 மற்றும் 4 (ஆ) 3 மற்றும் 4 (இ) 1 மற்றும் 3 (ஈ) 2 மற்றும் 4

150. பின்வருவனவற்றுள் எக்கருத்து/கள் சரி?

கூற்று (A): அலிகார் இயக்கம் சர் சையத் அகமத் கான் தலைமையின் கீழ் வகுப்புவாதத்தை உருவாக்கியது. அது பாகிஸ்தான் உருவாவதற்கு உறுதுணை செய்தது.

காரணம் (R): சர் சையத் அகமத் கான் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஷாரை சார்ந்து இருந்தார். இது பிரிட்டிஷார் முஷ்லீம் வகுப்புவாதம் கொண்டு வர வைத்தது.

(அ) (a) மற்றும் (R) சரி (R), (A) க்கான சரியான விளக்கம்

(ஆ) (A) சரி (R) தவறு

(இ) (A) மற்றும் (R) சரி (R), (A) க்கான சரியான விளக்கமல்ல

(ஈ) (A) தவறு (R) சரி

151. கீழ்வருவனவற்றுள் ஒன்று பல்லவர்களது கிராம நிர்வாகத்தை கூறும் கல்வெட்டு ஆகும்.

(அ) மானூர் கல்வெட்டு (ஆ) திருச்சிராப்பள்ளி கல்வெட்டு

(இ) கழுகுமலை கல்வெட்டு (ஈ) ஏர்வாடி கல்வெட்டு

152. கூற்று (A): தமிழர்கள் ரோமானியர்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.

காரணம் (R): ரோமன் நாட்டு பானை ஓடுகளும் தங்க நாணயங்களும் அரிக்கமேட்டில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.

(அ) (A) மற்றும் (R) சரி இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்

(ஆ) (A) சரி ஆனால் (R) தவறு

(இ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

153. கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்க:

புலவர்கள் பகுதிகள்

அ. மருதனார் 1. ஓரகடம் (செங்கை)

ஆ. வங்கனார் 2. இடைக்காடு (குமரி)

இ. காடனார் 3. ஆலங்குடி (புதுக்கோட்டை)

ஈ. சுந்தரத்தனார் 4. குருங்குடி (நெல்லை)

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 4 3 2 1

இ. 1 2 3 4

ஈ. 4 2 3 1

154. வரிசை Iஐ வரிசை II-உடன் பொருத்தி விடையை காண்க:

வரிசை (படைப்புகள்) வரிசை (ஆசிரியர்கள்)

அ. பெரியபுராணம் 1. ஓளவையார்

ஆ. கொன்றை வேந்தன் 2. ஜெயங்கொண்டார்

இ. கலிங்கத்துப்பரணி 3. கங்காதேவி

ஈ. மதுராவிஜயம் 4. சேக்கிழார்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 1 2 3

இ. 2 3 4 1

ஈ. 4 3 2 1

155. கீழ்க்கண்ட கூற்றுகளில் பாரதிதாசனிடம் தொடர்பில்லாத நூல் எது?

(அ) பாண்டியன் பரிசு (ஆ) அழகின் சிரிப்பு

(இ) மலரும் மாலையும் (ஈ) இருண்ட வீடு

156. கூற்று (A): திருக்குறள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காரணம் (R): மனிதர்கள் திருக்குறளின் மூலப்பொருளான அகிம்சை, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றுகின்றனர்

(அ) (A) சரி ஆனால் (R) தவறு

(ஆ) (A) தவறு ஆனால் (R) சரி

(இ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும்

157. “…யிவ்விரண்டும் கண்ணெண்ப வாழும் உயிர்க்கு”

மேற்காணும் திருக்குறளில் இந்த இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்.

(அ) அறமும் பொருளும் (ஆ) நடுவுநிலைமையும் அடக்கமுடைமையும்

(இ) பொருளும் இன்பமும் (ஈ) எண்ணும் எழுத்தும்

158. 1.”பொய்மையும் வாய்மை யிடத்த—“

2. “புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை”

இவ்விரண்டு குறள்களையும் ஒரு சேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர்?

(அ) பொய்மை (ஆ) வாய்மை (இ) புறந்தூய்மை (ஈ) புரை தீர்ந்த நன்மை

159. முதல் கர்நாடகப் போரின் போது ஐரோப்பாவில் நடந்த போர் எது?

(அ) ஏழாண்டுப்போர் (ஆ) ஆஸ்திரிய-பிரஸயப்போர்

(அ ரோஜாப்பூ போர் (ஈ) ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்

160.கீழ்க்கண்டவற்றை கால் வரிசைப்படுத்தி விடையை தேர்ந்தெடு:

1.வேலூர் கலகம்.

2.கட்டபொம்மனை தூக்கிலிடுதல்.

3. பழனி சதிதிட்டம்.

4. பாண்டிச்சேரி உடன்படிக்கை

(அ) 1,2,3,4 (ஆ) 4,3,2,1 (இ) 2,3,4,1 (ஈ) 4,2,3,1

161. 1934ம் ஆண்டு மெட்ராஸ் தொகுதியில் நடைபெற்ற ஒன்பதாவது பெண்கள் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய பெண்மணியின் பெயரைக் குறிப்பிடுக

(அ) டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி (ஆ) திருமதி. மார்க்கெரட் கசின்ஸ்

(இ) பேகம் ஷரிஜா ஹமித் அலி (ஈ) திருமதி.அன்னிபெசன்ட்

162. கீழ்கண்டவற்றுள் எது உண்மையான கூற்று அல்ல?

(அ) சட்ட மேலவையில் நீதிக்கட்சி 98க்கு 63 தேர்தல் இடங்களை வென்றது.

(ஆ) சென்னை மாகாணத்தில் A.சுப்புராயன் முதல் முதலமைச்சராக ஆனார்

(இ) 1919-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது.

(ஈ) 1920-ஆம் ஆண்டுத் தேர்தலில் நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியை முழுமையாக தோற்கடித்தது

163. நீதிக்கட்சியின் முக்கியமான நோக்கம் எது?

(அ) முஸ்லீம் லீக்கிற்கு எதிராகப் போராடுதல்

(ஆ) அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை பங்கேற்கச் செய்தல்

(இ) ஜமின்தார்களின் சர்வாதிகாரத்திலிருந்து விவசாயிகளை காப்பாற்றுதல்

(ஈ) பொதுப்பிரச்சை பற்றி விவாதி

164. கூற்று (A): E.V.இராமாசமி 20-ம் நூற்றாண்டின் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாவார்.

காரணம் (R): அவர் சுயமரியாதை இயக்த்தின் மூலம் ஒதுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க பாடுபட்டார்

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்.

(ஆ) (A) சரி ஆனால் (R) தவறு

(இ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் சரி

165. கீழ்க்கண்ட கூற்றுகளில் E.V.இராமசாமி பற்றிய தவறான கூற்று எது?

(அ) E.V.இராமசாமி “வைக்கம் வீரர்” என அழைக்கப்படுகிறார்

(ஆ) இவர் “குருகுல” கல்வி முறையை ஆதரித்தார்

(இ) இவர் “சுயமரியாதை இயக்கத்தை” தோற்றுவித்தார்

(ஈ) இவர் “சுயமரியாதை திருமணத்திற்கு” ஆதரவு தந்தார்

166. சமுதாய காரணிகளான ஒருவர் உயிர் வாழும் வாய்ப்புள்ள அளவு, கல்வி அறிவு மற்றும் வருமானம் ஆகியவைகளை கொண்டு கணிக்கும் குறியீடு

(அ) அத்தியாவசிய தேவை குறியீடு (ஆ) வாங்கும் திறன் குறியீடு

(இ) மனித மேம்பாட்டு குறியீடு (ஈ) நல குறியீடு

167. பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:

பட்டியல் I பட்டியல் II

அ. தியோசோபிகல் சங்கம் 1. 1865

ஆ. சுத்தி இயக்கம் 2. 1897

இ. இராமகிருஷ்ண மிஷன் 3. மேடம் பிளவாட்ஸ்கி

ஈ. சுமரச சுத்த சன்மார்க்கம் 4. தயானந்த சரஸ்வதி

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ 2 1 3 4

இ. 4 2 3 1

ஈ. 3 4 1 2

168. “சட்டமும் விதிகளும் மக்களுக்காக தான், ஆனால் மக்கள் சட்டத்திற்காகவும் விதிகளுக்காகவும் அல்ல” என்று கூறியவர்

(அ) அண்ணாதுரை (ஆ) பெரியார்.ஈ.வே.ராமசாமி (இ) ராஜாஜி (ஈ) காமராசர்

169. தமிழ்நாட்டில் 1923ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் ———— ஏற்பாடு செய்யப்பட்டது

(அ) சிங்காரவேலர் (ஆ) ஈ.வே.ரா (இ) காமராஜர் (ஈ) ராஜாஜி

170. “இந்திய முத்திரை பலம் அமைப்பு” – யாரால் நிறுவப்பட்டது?

(அ) நிதி அமைச்சகம் (ஆ) வாணிபம் மற்றும் தொழில் அமைச்சகம்

(இ) தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (ஈ) மனித வள வளர்ச்சி அமைச்சகம்

171. பட்டியல் I மற்றும் IIஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க:

பட்டியல் I – திட்டம் பட்டியல் II – அமைச்சகம்

அ. சுவாஜல் திட்டம் 1. பண்பாட்டு

ஆ. சமக்ரா சிக்ஷா 2. முனிதவள மேம்பாடு

இ. சேவா போஜ் யோஜனா 3. தகவல் தொடர்பு

ஈ. சும்பூர்ண பீமா கிராம் யோஜனா 4. குடிநீர் மற்றும் சுகாதாரம்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 2 3 4 1

இ. 1 4 3 2

ஈ. 4 2 1 3

172. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் அமைப்பு

(அ) மருத்துவ கல்வி இயக்குநரகம்

(ஆ) மருத்துக மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம்

(இ) தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம்

(ஈ) பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்

173. “கொடிவேரி அணை” எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

(அ) நொய்யல் ஆறு (ஆ) பவானி ஆறு (இ) காவிரி ஆறு (ஈ) தாமிரபரணி ஆறு

174. தமிழகத்தில் இந்திரா காந்தி தேசிய பூங்கா (ஆனைமலை புலிகள் காப்பகம்) அமைந்துள்ள மாவட்டம்மாவட்டங்கள்

(அ) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் (ஆ) நீல்கிரிஸ் (இ) ஏலகிரி (ஈ) கொடைக்கானல்

175. ஜனவரி 2020-ல் இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்களிப்பு —— சதவீதம் ஆகும்

(அ) 16.05% (ஆ) 17.00% (இ) 18.05% (ஈ) 19.00%

176. ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்தத்தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க:

(அ) 24% (ஆ) 25% (இ) 28% (ஈ) 30%

177. 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40க்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80க்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்?

(அ) தமிழ் (ஆ) ஆங்கிலம் (இ) அறிவியல் (ஈ) கணிதம்

178. ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு?

(அ) 1000 வாக்குகள் (ஆ) 1050 வாக்குகள் (இ) 1100 வாக்குகள் (ஈ) 1200 வாக்குகள்

179. இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பொ.கா 5 எனில் அவ்வெண்கள் யாவை?

(அ) 30,20 (ஆ) 25, 12 (இ) 10, 30 (ஈ) 15, 20

180. ஒரு மிகi முழுவை 88 ஆல் வகுக்கும் போது மீதி 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி யாது?

(அ) 0 (ஆ) 2 (இ) 4 (ஈ) 6

181. மீ.பொ.ம.காண்க:

5x – 10 and 5x2 – 20

(அ) 5 ( x-2) (ஆ) 5(x+2) (இ) (x-2) (x+2) (ஈ) 5(x-2) (x+2)

182. மீ.பொ.ம.காண்க:

16m, -12m2n2, 8n2

(அ) -16mn (ஆ) -16m2n2 (இ) -48m2n2 (ஈ) 48 m2n2

183. ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்?

(அ) 9 அலகுகள் (ஆ) 10 அலகுகள் (இ) 11 அலகுகள் (ஈ) 12 அலகுகள்

184. 25% இன் 25% என்பது

(அ) 6.25 (ஆ) 0.625 (இ) 0.0625 (ஈ) 0.00625

185. ஆண்டுக்கு 13% தனிவட்டி வீதத்தில் ஒரு தொகை ரூ.16,500/-ல் இருந்து எத்தனை ஆண்டுகளில் ரூ.22,935/- ஆக உயரும்?

(அ) 2 (ஆ) 3 (இ) 4 (ஈ) 5

186. ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனி வட்டி வீதத்தில் தொகை ரூ.17,000/- ஆகக் கிடைக்கிறது. எனில் அந்த அசலைக் காண்க:

(அ) ரூ.12,500/- (ஆ) ரூ.13,000/- (இ) ரூ.14,500/- (ஈ) ரூ.13,300/-

187. ஒரு தொகை தனிவட்டியில் 4 ஆண்டுகளில் 50% அதிகரித்தால், ரூ.10,000க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?

(அ) ரூ. 3,842 (ஆ) ரூ.4,238 (இ) ரூ.2,438 (ஈ) ரூ.3,482

188. ஒரு மரத்தின் தற்போதைய உயரம் 847 செ.மீ அது ஆண்டுக்கு 10% வீதம் வளர்கிறது எனில், 2 ஆண்டுகளுக்கு முன் அதன் உயரத்தைக் காண்க:

(அ) 770 செ.மீ (ஆ) 700 செ.மீ (இ) 630 செ.மீ (ஈ) 560 செ.மீ

189. ஓர் உருளையின் உயரம் 35 செ.மீ மற்றும் அதன் அடிப்பரப்பு 70 மீ2. ஏனில் அதன் கன அளவு யாது?

(அ) 200 செ.மீ2 (ஆ) 200 செ.மீ3 (இ) 2450 மீ3 (ஈ) 24.5 மீ3

190. ஒரு சதுரம் வட்டத்தினுள் அதன் நான்கு முனைகளும் தொடுமாறு அமைந்துள்ளது. அவ்வட்டத்தின் பரப்பு 110 ச.செ.மீ எனில் அதனுள் அமைந்த சதுரத்தின் பரப்பளவு யாது?

(அ) 77 செ.மீ2 (ஆ) 35 செ.மீ2 (இ) 70 செ.மீ2 (ஈ) 2 செ.மீ2

191. கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 சதுர மீட்டர் எனில் கயிற்றின் நீளம்

(அ) 7 மீட்டர் (ஆ) 8 மீட்டர் (இ) 15 மீட்டர் (ஈ) 56 மீட்டர்

192. என்பவர் ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர், மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்?

(அ) 36 நாட்கள் (ஆ) 48 நாட்கள் (இ) 30 நாட்கள் (ஈ) 32 நாட்கள்

193. 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ரூ.12,500ஐ 5 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். 10 ஆண்கள் மற்றும் 6பெண்கள் ரூ.17,400-ஐ 3 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள், எனில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் ரூ.35,000/-ஐ வருமானமாக ஈட்ட எத்தனை நாட்களாகும்?

(அ) 6 நாட்கள் (ஆ) 8 நாட்கள் (இ) 10 நாட்கள் (ஈ) 12 நாட்கள்

194. ஒரு தேர்வில் 10 வினாக்கள் சரியா? துவறா? ஏன்ற வகையில் உள்ளது எனில், அவ்வினாக்களுக்கு எத்தனை வகையில் விடையளிக்க முடியும்?

(அ) 120 வழிகள் (ஆ) 240 வழிகள் (இ) 1024 வழிகள் (ஈ) 512 வழிகள்

195. கீழ்கண்ட பட்டியலிலன் விவரங்களைக் கொண்டு அதன் வீச்சைக் காண்க:

வயது (ஆண்டுகளில்) 16-18 18-20 20-22 22-24 24-26 26-28
மாணவர்களின் எண்ணிக்கை 0 4 6 8 2 2

(அ) 8 ஆண்டுகள் (ஆ) 6 ஆண்டுகள் (இ) 12 ஆண்டுகள் (ஈ) 10 ஆண்டுகள்

196. STOP=24; PEN=10; NEAR=12 எனக் குறிப்பிட்டால் ROSE என்பதை எவ்வாறு குறிப்போம்?

(அ) 19 (ஆ) 20 (இ) 18 (ஈ) 22

197. ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் “LIFE” என்ற வார்த்தைக்கு “2965” என்று குறயீடுச் செய்யப்பட்டால் “SAVE” என்ற வார்த்தையின் குறியீடு யாது?

(அ) 1912 (ஆ) 1901 (இ) 9125 (ஈ) 9120

198. கூடுதல் காண்க:

3 +5+7+…+71

(அ) 1296 (ஆ) 1295 (இ) 1294 (ஈ) 1286

199. 13+23+33+…k3 = 44100 எனில் 1+2+3+…+k ன் மதிப்புக் காண்க:

(அ) 210 (ஆ) 220 (இ) 225 (ஈ) 230

200. கீழ்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல், மற்றும் மூலை விட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், X,Y மற்றும் Zன் மதிப்புகளைக் காண்க:

1 -10 X
Y -3 -2
-6 4 Z

(அ) x=-7, y=-4, z = 0 (ஆ) x=0 y=-7, z=-4 (இ) x=0, y=-4, z=-7 (ஈ) x=-7, y=0, =-7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!