TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st March 2024

1. உலகின் முதல் வேத கடிகாரம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?

அ. உஜ்ஜயினி, மத்திய பிரதேசம்

ஆ. பிகானேர், இராஜஸ்தான்

இ. அயோத்தி, உத்தரபிரதேசம்

ஈ. கான்பூர், உத்தரபிரதேசம்

  • பழங்கால இந்தியப் பஞ்சாங்கத்தின்படி நேரத்தைக் காட்டும் உலகின் முதல் வேத கடிகாரம், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் ஜந்தர் மந்தருக்குள் 85 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். ஜிவாஜி கூர்நோக்ககத்தை ஒட்டியமைக்கப்பட்டுள்ள இந்தக் கடிகாரம், வேத ஹிந்து பஞ்சாங்கம், கிரக நிலைகள், முகூர்த்தம், ஜோதிடக் கணக்கீடுகள், கணிப்புகள் மற்றும் இந்திய தரநிலை நேரம் (IST) மற்றும் கிரீன்விச் நேரம் (GMT) ஆகியவற்றைக் காட்டுகிறது.

2. ‘முதலீட்டாளர் தகவல் மற்றும் பகுப்பாய்வு தளத்தை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி ரூர்க்கி

ஈ. ஐஐடி பம்பாய்

  • மத்திய இணையமைச்சர் இராஜீவ் சந்திரசேகர், ஐஐடி-மெட்ராஸ் நிறுவனம் உருவாக்கிய, “முதலீட்டாளர் தகவல் மற்றும் பகுப்பாய்வு தளத்தை” தொடக்கி வைத்தார். துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர் கட்டமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்திய புத்தொழில் சூழலின் பல்வேறு கூறுகளை தடையின்றி வழங்கும் ஒரே தளமாக இந்தத் தளம் செயல்படும். பல்வேறு நிலைகளில் தகவல்களை ஒருங்கிணைப்பதன்மூலம், தொழில்முனைவோர், அரசு நிறுவனங்கள், தொழிற்பாதுகாப்பகங்கள், முதலீட்டாளர்கள், துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் புத்தொழில்களில் முதலீடு செய்யும் வங்கிகள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்கான ஒரே தளமாக இந்தத் தளம் விளங்கும். எளிமையாக தரவுகளைக் கண்டறிவாதற்காக AI-அடிப்படையிலான, “StartupGPT” என்ற ஒன்றும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த தளத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 11,000 முதலீட்டாளர்கள் மற்றும் 5,000 துணிகர முதலீட்டாளர்கள், சுமார் 1000 தொழில் பாதுகாப்பகங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் 100க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வங்கிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

3. அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நீல் வாக்னர் சார்ந்த நாடு எது?

அ. நியூசிலாந்து

ஆ. ஆஸ்திரேலியா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. இங்கிலாந்து

  • நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் 2024 பிப்ரவரி.27 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க லெவன் அணியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டதை அடுத்து, நீல் வாக்னர் (37) இந்த முடிவை எடுத்தார். வாக்னர், நியூசிலாந்திற்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகள் பட்டியலில் 37 சராசரியுடன் 260 இரன்களுடன் ஐந்தாவது இடத்தில் அவர் உள்ளார்.

4. அடுக்கு வளிமண்டலத் தூசுப்படல இடையீட்டின்போது (Stratospheric Aerosol Intervention) பொதுவாக அடுக்கு மண்டலத்தில் செலுத்தப்படும் பொருளின் பெயர் என்ன?

அ. சல்பர் டை ஆக்சைடு

ஆ. கார்பன் டை ஆக்சைடு

இ. நைட்ரஜன் டை ஆக்சைடு

ஈ. கார்பன் மோனாக்சைடு

  • மேற்காசியா மற்றும் வட ஆப்ரிக்காவில் புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுவதற்காக அடுக்குவளிமண்டலத் தூசுப்படல இடையீட்டின்மீது ஓர் ஆய்வு கவனஞ்செலுத்தியது. இந்த அடுக்குவளிமண்டலத் தூசுப்படல இடையீட்டு முறையானது எரிமலை வெடிப்புகளைக் குளிரூட்டப் பயன்படுத்தும் முறைகளை பிரதிபலிக்கும் வகையில் அடுக்கு வளிமண்டலத்தில் பிரதிபலிப்பு தூசுப்படலங்களைச் செலுத்துகிறது. 1991 பினாடுபோ எரிமலை வெடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட இந்த முறை, அடுக்கு வளிமண்டலத்தில் கதிர்வீச்சைச் சிதறடித்து, அடியடுக்கில் அக்கதிர்வீச்சின் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. பீரங்கிகள், பலூன்கள் அல்லது விமானங்கள் வழியாக கந்தகத்துகள்களைப் செலுத்துவதன்மூலம் செயற்கை தூசுப்படல அடுக்கை உருவாக்க முடியும்.

5. 2024 – உலகளாவிய அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 42ஆவது

ஆ. 45ஆவது

இ. 44ஆவது

ஈ. 46ஆவது

  • அமெரிக்க வர்த்தக சபையானது உலகளாவிய அறிவுசார் சொத்துக் குறியீட்டின் பன்னிரண்டாவது (12) பதிப்பை வெளியிட்டது. 55 நாடுகள் அவற்றின் அறிவுசார் சொத்துக் கட்டமைப்பின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியா 38.64% மதிப்பெண்களுடன் 42ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து (UK) மற்றும் பிரான்சு ஆகியவை பட்டியலில் முன்னணியில் உள்ளன. உலகளவில் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான தொழிற்துறைகளை வளர்ப்பதில் அறிவுசார் சொத்துகளின் செயல்திறனை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.

6. இசுலாமிய திருமணம் மற்றும் மணமுறிவுப் பதிவுச் சட்டம், 1935ஐ இரத்து செய்ய முடிவு செய்துள்ள மாநில அரசு எது?

அ. திரிபுரா

ஆ. அஸ்ஸாம்

இ. கேரளா

ஈ. உத்தரபிரதேசம்

  • அண்மையில் கௌகாத்தியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அஸ்ஸாம் இசுலாமிய திருமணம் மற்றும் மணமுறிவுப் பதிவுச் சட்டம், 1935ஐ இரத்துசெய்வதாக அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்தது. திருமணம் மற்றும் மண முறிவுப் பதிவுகளுக்கு 94 இசுலாமிய பதிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட சட்டம் இனிசெல்லாது. இச்சட்டத்தின்கீழ், இசுலாமிய திருமணம் மற்றும் மணமுறிவுப் பதிவுகள் இனி நடத்தப்படாது என அஸ்ஸாம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இசுலாமிய திருமணப் பதிவாளர்களின் மறுவாழ்வுக்காக இரண்டு இலட்சம் ரூபாய் நட்டஈட்டையும் அஸ்ஸாம் மாநில அரசாங்கம் வழங்கவுள்ளது.

7. ரோன் ஓல்மி (டெர்மிடோமைசஸ் இனங்கள்) என்றால் என்ன?

அ. டெய்ஸி மலர்

ஆ. சாதாரண சூரியகாந்தி

இ. காட்டுக்காளான்

ஈ. இரப்பர் தாவரம்

  • கோவாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் டெர்மிடோமைசஸ் இனத்திலிருந்து தங்க நானோதுகள்களை உருவாக்கி உள்ளனர். இது இப்பகுதியில் பரவலாக நுகரப்படும் ஒரு காட்டுக்காளானாகும். இந்தவகை காளான் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியப்பங்கினை வகிக்கிறது; இது இறந்த தாவர பொருட்களை 50% மண்ணாக மாற்றுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் கரையான் புற்றுக்களில் காணப்படும் இவை, அதன் வளர்ச்சிக்கு கரையான்களை நம்பியுள்ளன. 1992இல் வனஞ்சார் நோய்கள்பற்றிய கவலைகள் காரணமாக இதன் அறுவடை தடைசெய்யப்பட்டது. ஆனால் இந்தத் தடையானது பின்னர் வனவிலங்குச் சரணாலயங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான காப்புக்காடுகள் அளவில் மட்டுப்படுத்தப்பட்டது.

8. இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தைத் திருத்த முடிவுசெய்துள்ள நாடு எது?

அ. மொரிஷியஸ்

ஆ. மாலத்தீவுகள்

இ. ஆஸ்திரேலியா

ஈ. சிங்கப்பூர்

  • OECDஇன் அடிப்படை தேய்மானம் மற்றும் இலாபத்தை மாற்றுதல் திட்டத்துடன் ஒத்துப்போவதற்காக மொரிஷியஸ் அரசு இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை (DTAA) திருத்தவுள்ளது. DTAA என்பது குடி உரிமை பெறாதவர்கள் இரட்டை வரி செலுத்துவதைத் தடுக்கும் ஒப்பந்தமாகும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கும் நோக்கில், இந்தியா 85 நாடுகளுடன் DTAA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 1983இல் கையெழுத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-மொரிஷியஸ் DTAA, $160 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை எளிதாக்கியுள்ளது. திருத்தத்தின் முதன்மை நோக்கம், வரி தவிர்ப்பைத் தடுப்பது, ஒப்பந்தத்தை BEPS MLIஇன் கீழ் உள்ளடக்கிய வரி ஒப்பந்தமாக உயர்த்துவது ஆகும்.

9. 21ஆவது பயோ-ஆசியா மாநாடு தொடங்கப்பட்ட இடம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. சென்னை

இ. மும்பை

ஈ. பெங்களூரு

  • சர்வதேச வணிக மாநாடான பயோ ஆசியாவின் 21ஆவது பதிப்பு 2024 பிப்.26-28 ஆகிய தேதிகளில் இந்தியாவின் ஹைதராபாத்தில் தொடங்கியது. “Data and AI: Redefining Possibilities” என்பது இந்த நிகழ்விற்கானக் கருப்பொருள் ஆகும். ‘BioAsia’ என்பது தெலுங்கானா அரசு, இந்திய அரசு மற்றும் ஆசிய பயோடெக் சங்கங்களின் கூட்டமைப்பு (FABA) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டாண்மை ஆகும். இந்த நிகழ்வு தொழிற்துறை தலைவர்களை ஒன்றிணைத்தல், கருத்துக்களைக் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் புதுமைகளை வளர்த்தல் ஆகியவற்றை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வாழ்க்கை அறிவியல் துறை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல் ஆகியவற்றின் எதிர்காலத்தை வடிவமைக்க தரவுகள் மற்றும் AIஇன் திறனையும் இம்மாநாடு ஆராய்கிறது.

10. அகலேகா தீவு அமைந்துள்ள நாடு எது?

அ. மொரீஷியஸ்

ஆ. மாலத்தீவுகள்

இ. இந்தோனேசியா

ஈ. ஐஸ்லாந்து

  • மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், புனித ஜேம்ஸ் படகுத்துறையைப் பிரதமர் நரேந்திர மோதி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜூக்நாத் ஆகியோர் காணொலிமூலம் கூட்டாகத் தொடக்கி வைத்தனர். இது மொரீஷியஸ் மற்றும் அகலேகா இடையேயான சிறந்த போக்குவரத்துக்கான தேவையை நிறைவேற்றுவதாகவும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், சமூக-பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதாகவும் அமையும்.
  • மொரீஷியஸைச் சார்ந்திருக்கும் அகலேகா தீவு, தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள இரண்டு வெளிப்புறத் தீவுகளை உள்ளடக்கியதாகும். மொரீஷியஸ் தீவிலிருந்து 1,050 கிமீட்டர் வடக்கே அமைந்துள்ள இத்தீவின் மொத்த பரப்பளவு 2,600 ஹெக்டேர் ஆகும்.

11. NSSOஇன் ஓர் அண்மைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நிலவும் வறுமை வீதம் யாது?

அ. 4%

ஆ. 5%

இ. 6%

ஈ. 10%

  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) நுகர்வோர் செலவின ஆய்வின்படி, இந்தியாவின் வறுமை வீதம் 5% ஆகும். இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டும் செழிப்பாக வளர்ந்து வருவதைக் குறிக்கிறது. தனிநபர் மாதாந்திர குடும்பச் செலவு இரட்டிப்பாகியுள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டுகிறது. 2011-12இல் 25.7%ஆக இருந்த கிராமப்புற வறுமை 2022-23இல் 7.2%ஆக குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நகர்ப்புற வறுமையும் 2011-12இல் 4.6%ஆக இருந்து 2022-23இல் 4.5-5%ஆக குறைந்துள்ளது.

12. பே ஜல் சர்வேக்ஷன் விருதுகளுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆ. ஜல் சக்தி அமைச்சகம்

இ. வேளாண்மை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமானது தனது முதலாவது குடிநீர் கணக்கெடுப்பு விருதுகளை வழங்கவுள்ளது. நகரங்கள் மற்றும் மாநிலங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், 130 விருதுகள் வழங்கப்படவுள்ளன. மதிப்புமிக்க குடிநீருக்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல நகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தந்த மக்கள்தொகை பிரிவுகளில் (1 முதல் 10 இலட்சம் வரை, 10 முதல் 40 இலட்சம் வரை, 40 இலட்சத்திற்கு மேல்) சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகளின்படி தங்கம் என்பது முதலிடத்தையும், வெள்ளி என்பது இரண்டாவது இடத்தையும், வெண்கலம் மூன்றாவது இடத்தையும் குறிக்கின்றன.
  • சிறந்த நீர்நிலை, நிலைத்தன்மை சாம்பியன், மறுபயன்பாட்டு சாம்பியன், நீர் தரம், நகர செறிவூட்டல் & ஆண்டின் மதிப்புமிக்க அம்ருத் 2.0 சுழற்கோப்பை ஆகியவற்றிற்கான பாராட்டுகளுக்கு இந்த விருதுகள் நீட்டிக்கப்படுகின்றன. குடிநீர் கணக்கெடுப்பின் கீழ் NAPL ஆய்வக சோதனைமூலம் சுத்தமான தண்ணீர் உறுதிசெய்யப்பட்டது. GIS சார்ந்த வலைப்பக்கம், புவி-குறியீடு மற்றும் உட்கட்டமைப்பு வரைபடமாக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கணக்கெடுப்பு துல்லியமான மற்றும் வெளிப்படையான தரவைச் சேகரித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு.

இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற துறை வெளியிட்டது. மாநில வனத்துறைகளுடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன விலங்குகள் நிறுவனம் சிறுத்தைகள் குறித்த இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது. இதன்மூலம் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874-ஆகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3907 சிறுத்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 1985 சிறுத்தைகளும், கர்நாடகாவில் 1879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் 1070 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

2. மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கிய மூன்று விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், ‘நம்மாழ்வார் விருது’ வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோ. சித்தருக்கு, முதல் பரிசாக `2.50 இலட்சம்; `10,000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமிக்கு, இரண்டாம் பரிசாக `1.50 லட்சம்; 7,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம்; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலனுக்கு, மூன்றாம் பரிசாக `1 இலட்சம்; `5,000 மதிப்புள்ள பதக்கம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!