General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 10

91. வீரமாமுனிவர் தமது எத்தனையாவது வயதில் தமிழகம் வந்து தமிழ் படித்து காப்பியம் படைத்தார்?

(அ) நாற்பது

(ஆ) முப்பது

(இ) இருபது

(ஈ) அறுபது

விடை மற்றும் விளக்கம்

(ஆ) முப்பது

விளக்கம்:

இத்தாலியிலிருந்து சமயத்திருப்பணிக்காக வீரமாமுனிவர் தனது 30-ஆவது அகவையில் தமிழகம் வந்தார். இவருடைய காலம் 1680-1747 ஆகும்

92. “கருணாமிர்த சாகரம்” என்னும் இசையாராய்ச்சி நூலை எழுதியவர்

(அ) அண்ணாமலை செட்டியர்

(ஆ) ஆர்.கே.சண்முகம் செட்டியார்

(இ) தண்டபாணி தேசியர்

(ஈ) ஆபிரகாம் பண்டிதர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஆபிரகாம் பண்டிதர்

விளக்கம்:

இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்த தலைமகனாக தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் விளங்கினார். இவர் எழுதி வெளியிட்ட “கருணாமிர்த சாகரம்” என்ற நூல் முன்னோடி ஆய்வு நூலாக விளங்குகிறது

93. “திராவிட சாஸ்திரி” என்று பட்டத்தைப் பெற்றவர் யார்?

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) மறைமலையடிகள்

(இ) நீலாம்பிகை அம்மையார்

(ஈ) தாயுமானவர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பரிதிமாற் கலைஞர்

விளக்கம்:

பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

94. இன்றைய கர்நாடக இசைக்கு தாய்

(அ) தமிழ்

(ஆ) தெலுங்கு

(இ) கன்னடம்

(ஈ) சமஸ்கிருதம்

விடை மற்றும் விளக்கம்

(அ) தமிழ்

95. உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் ———– பிறந்து விட்டது என்பர்.

(அ) நடனம்

(ஆ) இயல்

(இ) இசை

(ஈ) நாடகம்

விடை மற்றும் விளக்கம்

(இ) இசை

96. ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை மொழிப் பெயர்த்தவர்

(அ) தி.க.சண்முகனார்

(ஆ) பம்மல் சம்பந்தனார்

(இ) சங்கரதாஸ் சுவாமிகள்

(ஈ) காசி விசுவநாதர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பம்மல் சம்பந்தனார்

97. அகராதி முறையைத் தமிழுக்குத் தந்தவர்

(அ) எல்லீசு துரை

(ஆ) போப் ஐயர்

(இ) ரேனியஸ் ஐயர்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வீரமாமுனிவர்

விளக்கம்:

அகராதி முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் வீருமாமுனிவர். இவர் உருவாக்கிய சதுரகராதியே தமிழ் மொழியின் முதல் அகராதியாகும். மேலும் இவர், தமிழ்-இலத்தீன், இலத்தீன்-தமிழ், பிரெஞ்சு-தமிறை, தமிழ்-பிரெஞ்சு, போத்துகீசிய-இலத்தீன்- தமிழ் முதலிய அகராதிகளையும் உருவாக்கியுள்ளார்

98. மிக வேகமாகச் செய்யுள் எழுதுவதில் வல்ல இவர், தமிழில் மிகப்பல செய்யுள் நூல்களை எழுதியவர்

(அ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

(ஆ) பலபட்டடைச் சொக்கநாதர்

(இ) தஞ்சை வேதநாயகம்

(ஈ) இராமலிங்கர்

விடை மற்றும் விளக்கம்

(அ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

விளக்கம்:

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

உ.வே.சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவான தேசிகர் இவருக்கு “மகாவித்துவான்” என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். 19-ஆம் நூற்றாண்டில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.

99. “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்” – எனக் கூறியவர்

(அ) பாரதிதாசனார்

(ஆ) பாரதியார்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

100. வால்ட் விட்மனின் சாயலில் வசன கவிதை பாடியவர் யார்?

(அ) கவிமணி

(ஆ) பாரதியார்

(இ) பாரதிதாசனார்

(ஈ) நாமக்கல் கவிஞர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பாரதியார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!