Tnpsc Tamil Current Affairs 8th September 2016
Tamil Current Affairs 8th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 8th September 2016 is given below as quiz format.
Tnpsc Tamil Current Affairs 8th September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 8th September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தின் பெயர் என்ன ?
A | GasoneIndia campaign |
B | Gas4India campaign |
C | GasinIndia campaign |
D | GasallIndia campaign |
Question 1 Explanation:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மத்திய இணை அமைச்சர் (I/C) தர்மேந்திர பிரதான், சமீபத்தில் இந்தியாவில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க புது தில்லியில் Gas4India பிரச்சாரத்தை துவக்கிவைத்தார். இது தவிர, இப்பிரச்சாரத்திற்கென வலைத்தளம், ட்விட்டர் கணக்கு , முகநூல் பக்கம் மற்றும் தீம் பாடல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் அல்லது எதிர்காலத்தில் பயன்படுத்த போகும் குடிமகன்களுக்கு அதிலுள்ள தேசிய, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளைக் கூற துவங்கப்பட்ட மல்டிமீடியா பிரச்சாரமே Gas4India ஆகும். மேலும் இப்பிரச்சாரம் Twitter, Facebook, Youtube, LinkedIn போன்ற சமூக வலைத்தளங்களிலும் செய்யப்பட உள்ளது. அத்துடன் நுகர்வோரை நேரடியாக இணைக்க விவாதங்கள், பட்டறைகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Question 2 |
2. . 2015-ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ஜே.சி. டேனியல் விருதை பெற்றவர் யார் ?
A | ராணி ஜார்ஜ் |
B | கே ஜி ஜார்ஜ் |
C | பாலு மகேந்திரா |
D | வி சசி |
Question 2 Explanation:
K.G. ஜார்ஜ், பிரபல திரைப்பட இயக்குநர். மலையாள சினிமாவிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2015-ம் ஆண்டிற்கான ஜே.சி. டேனியல் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், தனது படங்களில் மனித மனத்தினை ஆழமாக உளவியல் பகுப்பாய்வு செய்வதிலும், கதாபாத்திரத்தை படிப்பதிலும் பெயர் பெற்றவர். பாலக்காட்டில் நடைபெற்ற "கேரளா மாநில திரைப்பட விருதுகள்" விழாவில் இவ்விருதிற்காக இவருக்கு ரூ .1 லட்சம் மற்றும் ஒரு சான்று அளிக்கப்பட்டது.
Question 3 |
3.பின்வரும் எந்த இந்திய நகரில் 2016 பிரிக்ஸ் ஆரோக்கிய பட்டறை(Wellness Workshop) நடைபெறவுள்ளது ?
A | கொச்சி |
B | பெங்களூரு |
C | சென்னை |
D | மும்பை |
Question 3 Explanation:
2016 பிரிக்ஸ் ஆரோக்கிய பட்டறை(Wellness Workshop) கர்நாடகாவின் பெங்களூரில் செப்டம்பர் 10-13 வரை நடைபெறவுள்ளது. இதனை AYUSH அமைச்சகம்,Research and Information System for Developing Countries (RIS) அமைப்புடன் இணைந்து நடத்தவுள்ளது. இது தவிர AYUSH அமைச்சகம், இந்தியா மற்றும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்கள் பாரம்பரிய ஆரோக்கிய பலத்தை வெளிப்படுத்த, "AROGYA Fair" எனப்படும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த 4-நாள் கண்காட்சியை நடத்த உள்ளது.
Question 4 |
4. மின் தடை குறித்து அறிய, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பான்-இந்தியா ஹெல்ப்லைன்
என்ன ?
A | Urja Power Helpline |
B | Urja Mitra Helpline |
C | Urja Nihit Helpline |
D | Urja Kendra Helpline |
Question 4 Explanation:
மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT), சமீபத்தில் உர்ஜா மித்ரா என்ற ஹெல்ப்லைனை அறிமுகம் செய்தது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் 14401 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு டயல் செய்து விநியோக நிறுவனங்களிடமிருந்து மின் தடை பற்றிய தகவல்களை பெற முடியும். பான்-இந்தியா பயன்பாட்டிற்காக துவங்கப்பட்ட இது, குரல் அழைப்புகள் மற்றும் SMS-கள் மூலம் வாடிக்கையாளர்களின் பகுதியிலுள்ள மின்தடை தகவல்களை அனுப்பும். இதைப்பொறுத்து பயனர்கள் தங்கள் பணித்திட்டங்களை மாற்றிக்கொள்ள முடியும். இது அனைத்து தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டாய சேவை ஆகும்.
Question 5 |
5. உலகின் முதல் ஓட்டுனரில்லா பஸ் சேவையை எந்த நாடு சமீபத்தில் தொடங்கியது?
A | ஜப்பான் |
B | பிரான்ஸ் |
C | ஜெர்மனி |
D | சிங்கப்பூர் |
Question 5 Explanation:
உலகின் முதல் தினசரி ஓட்டுனரில்லா பஸ் சேவையை பிரான்சின் லியோன்(Lyon) நகரம் தொடங்கியது.
இதில் அதிகபட்சமாக 15 பயணிகள் பயணிக்கலாம் மற்றும் விபத்துககளை தவிர்க்க உதவும் வகையில் LIDAR ரேடார் தொழில்நுட்பம் மற்றும் இயக்க உணரிகள்(Motion Sensors ) போன்ற அம்சங்கள் உள்ளன.
Question 6 |
6. “Imagine Me Gone” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A | ஆடம் ஹாஸ்லேட் |
B | போரிஸ் கச்கா |
C | மேடி க்ரம் |
D | டான் ஓல்டன்பேர்க் |
Question 6 Explanation:
“Imagine Me Gone” என்ற நாவலின் ஆசிரியர் ஆடம் ஹாஸ்லேட். இந்நாவல், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தை காதல் மற்றும் விரக்தி எப்படி வடிவமைக்கிறது என்று கூறுகிறது.
Question 7 |
7. 2016 ஐக்கிய நாடுகளின் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் (ILD) மையக்கருத்து(Theme) என்ன ?
A | Literacy for the 21st Century |
B | Reading the past, writing the future |
C | Literacy and sustainable development |
D | Literacy and sustainable societies |
Question 7 Explanation:
தனிநபர்கள், சமூகம் மற்றும் சமூகங்கள் ஆகியோருக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் (ILD) அனுசரிக்கப்படுகிறது. 2016-ல் கொண்டாட்டப்படும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் 50வது பதிப்பின் மையக்கருத்தானது, "Reading the past, writing the future" ஆகும். இத்தினம் 1966-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ-வால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Question 8 |
8. “IoT (Internet of Things) India Congress-2016” மாநாட்டின் முதல் பதிப்பு பின்வரும் எந்த நகரத்தில் துவங்கியது ?
A | சென்னை |
B | புது தில்லி |
C | பெங்களூரு |
D | கொல்கத்தா |
Question 8 Explanation:
IoT (Internet of Things) India Congress-2016” மாநாட்டின் முதல் பதிப்பு கர்நாடகாவின் பெங்களூரில் தொடங்கியது.
3 நாள் நடைபெறும் இந்நிகழ்வின் நோக்கம், முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ஒத்துழைப்பை வழங்கி, IoT-யை செயற்படுத்துவதில் ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்வதேயாகும். இதனை மத்திய தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் மின்னணு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.
Question 9 |
9. இந்தியா சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டுடன் "திறந்த வான்வெளி" ஒப்பந்தம்(open skies agreement) செய்துள்ளது ?
A | தென் ஆப்ரிக்கா |
B | பிரேசில் |
C | ர ஷ்யா |
D | கிரீஸ் |
Question 9 Explanation:
இந்தியா சமீபத்தில் கிரேக்க நாட்டுடன் "திறந்த வான்வெளி" ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி,
இந்தியாவில் இருந்து கிரேக்க நாடு செல்லும் விமானங்களை வரம்பற்ற(Unlimited) முறையில் அந்நாடு அனுமதிக்கும். அதேசமயம் இந்தியாவின் 6 மெட்ரோ நகரங்களில் கிரேக்க நாட்டிற்கு வரம்பற்ற போக்குவரத்து உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய உள்நாட்டு விமான போக்குவரத்து கொள்கையின் கீழ், இந்தியா திறந்த வான் வெளி ஒப்பந்தத்தை முதன்முதலாக கிரீஸ் உடன் செய்துள்ளது. இக்கொள்கையின்படி, சார்க் நாடுகளுடன் பரஸ்பர அடிப்படையிலும், புது டெல்லியில் இருந்து 5000 கி.மீ சுற்றளவில் உள்ள நாடுகளுடனும் 'திறந்த வான்வெளி' ஒப்பந்தத்தை இந்தியா உருவாக்கிக் கொள்ளமுடியும்.
Question 10 |
10. "PRABAL DOSTYK-16" எனப்படும் இருதரப்பு இராணுவ பயிற்சி, இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்குமிடையே தொடங்கியது?
A | கஜகஸ்தான்
|
B | தஜிகிஸ்தான் |
C | துர்க்மெனிஸ்தான் |
D | .கிர்கிஸ்தான் |
Question 10 Explanation:
"PRABAL DOSTYK-16" எனப்படும் 14 நாள் நடைபெறும் இருதரப்பு இராணுவ பயிற்சி, இந்தியாவிற்கும் கஜகஸ்தான் நாட்டிற்குமிடையே கரகண்டா எனுமிடத்தில் தொடங்கியது. இந்த இருதரப்பு இராணுவ பயிற்சியின் நோக்கம், ஐக்கிய நாடுகள் குடையின் கீழ், கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற சூழலில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதேயாகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
September 10, 2016
0 1,621 Less than a minute