Science Questions

12th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

12th Science Lesson 2 Questions in Tamil

2] அன்றாட வாழ்வில் வேதியியல்

1. 1975-ம் ஆண்டு முப்பரிமாண மாற்றிய வேதியியலுக்காக நோபல் பரிசுப் பெற்ற அறிவியல் அறிஞர்கள்__________________

A) விளாடிமிர் பிரிலாக்

B) W. கார்ன் ஃபார்த்

C) விளாடிமிர் புதின்

D) A, B இரண்டும்

விளக்கம்: விளாடிமிர் பிரிலாக் என்பார் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் விஞ்ஞானி ஆவார். 1975 ஆம் ஆண்டு ஜான் W. கார்ன் ஃபார்த் என்பாருடன் இணைந்து முப்பரிமாண மாற்றிய வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றார். மேலும் அவர் அல்கலாய்டுகள் எதிர் உயிரிகள் நொதிகள் மற்றும் பல தாவர மற்றும் உயிரிகளிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருள்களை ஆய்வு செய்தார்.

2. கீழ்க்கண்டவற்றுள் விளாடிமிர் பிரிலாக் பற்றிய கருத்துக்களில் சரியானதைக் கண்டறி.

1) விளாடிமிர் பிரிலாக் என்பார் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் விஞ்ஞானி ஆவார்.

2) 1975 ஆம் ஆண்டு ஜான் W. கார்ன் ஃபார்த் என்பாருடன் இணைந்து முப்பரிமாண மாற்றிய வேதியலுக்காக நோபல் பரிசு பெற்றவர்.

3) மேலும் அவர் அல்கலாய்டுகள் எதிர் உயிரிகள் நொதிகள் மற்றும் பல தாவர மற்றும் உயிரிகளிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பொருள்களை ஆய்வு செய்தவர்.

4) அவர் நவீன முப்பரிமாண மாற்றிய வேதியியலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவர் பிரிலாக் அடைமென்லின் போரோமைசின் அனலாய்டுகள் மற்றும் ரைபாமைசின்கள் ஆகிய பல இயற்பொருட்களை தொகுத்ததுடன் அவற்றின் முப்பரிமாண வேதியியலையும் ஆராய்ந்தவர்.

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 3, 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

3. மருந்து எனும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த மொழிச் சொல்லிருந்து பெரப்பட்டது.

A) இலத்தீன்

B) கரேக்கம்

C) பிரஞ்சு

D) அரேபிய

விளக்கம்: மருந்து (drug) எனும் சொல்லானது “காய்ந்த மூலிகை” எனும் பொருள்படும் “ drogue “ எனும் பிரஞ்சு மொழிச் சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். மருந்து என்பது அதை பெறுபவரின் உடலியல் அமைப்பை அல்லதுநோயுற்ற நிலையை மாற்றக்கூடிய அல்லது ஆய்வு செய்யக்கூடிய சேர்மமாகும். இது நோய் கண்டறிதலுக்காகவும், நோயை தடுக்கவும், நோயிலிருந்து குணமடையச் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

4. கூற்று (i): புரதங்கள் போன்ற பெருமூலக்கூறு இலக்குகளுடன் இடையீடு செய்து, நோயாற்றுதல் மற்றும் பயனுள்ள உயிரியல் துலங்கள்களை உருவாக்கும் பொருட்கள் நோய் நீக்கும் மருந்துகள் என்றழைக்கப்படுகின்றன.

கூற்று (ii): மருந்துகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்தும் செயல்முறையானது அறுவை சிகிச்சை என அறியப்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: மருந்துகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்தும் செயல்முறையானது வேதிச் சிகிச்சை என அறியப்படுகிறது.

5. மருந்து பற்றிய கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியற்றதைக் கண்டறி:

1) ஒரு முழுநிறை மருந்து என்பது நச்சுத் தன்மையற்ற, உயிரி இசைவுறு மற்றும் மக்கும் சேர்மமாகும், மேலும் அது எவ்வித பக்கவிளைவுகளையும் உருவாக்காமல் இருத்தல் அவசியம்.

2) தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துப் பொருள் மூலக்கூறுகள் அதிக செறிவில் பயன்படுத்தப்படும்போது மேற்கூறிய பண்புகளைப் பெற்றுள்ளன. எனினும், குறைந்த செறிவில் பயன்படுத்தப்பட்டால் அவை பக்கவிளைவுகளை உருவாக்கிநச்சுத் தன்மை கொண்டவைகளாக மாறுகின்றன.

3) மருந்துகளின் தரமானது அவற்றின் மருந்தாக்க எண் அடிப்படையில் அளவிடப்படுகிறது.

4) ஒரு குறிப்பிட்ட மருந்தின் அதிகபட்ச தாங்கும் மருந்தளவு மற்றும் குறைந்தபட்ச குணப்படுத்தும் மருந்தளவு ஆகியவற்றிற்கிடையே உள்ள விகிதம் அதன் மருந்தாக்க எண் என வரையறுக்கப்படுகிறது.

A) 1, 2 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 2, 4 மட்டும் தவறு

D) 3 மட்டும் தவறு

விளக்கம்: தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துப் பொருள் மூலக்கூறுகள் குறைந்த செறிவில் பயன்படுத்தப்படும்போது மேற்கூறிய பண்புகளைப் பெற்றுள்ளன. எனினும், அதிக செறிவில் பயன்படுத்தப்பட்டால் அவை பக்கவிளைவுகளை உருவாக்கிநச்சுத் தன்மை கொண்டவைகளாக மாறுகின்றன.

6. உயிரின அமைப்புகளில் நிகழும் உயிர்வேதி வினைகள் அனைத்தும்____________ஆல் வினையூக்கம் பெறுகின்றன.

A) புரதங்கள்

B) கொழுப்புகள்

C) நொதிகள்

D) ஆல்கஹால்கள்

விளக்கம்: அனைத்து உயிரின அமைப்புகளில் நிகழும் உயிர்வேதி வினைகள் அனைத்தும் நொதிகளால் தான் வினையூக்கம் பெறுகின்றன. எனவே, அமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு நொதிகளின் செயல்பாடு மிக அத்தியாவசியமானது.

7. கூற்று (i): நொதி வினையூக்க வினைகளில், கிளர்வு மையம் மற்றும் விளைப்பொருள் ஆகியவற்றில் காணப்படும் அமினோ அமிலங்களுக்கிடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு, வாண்டர் வால்ஸ் விசைகள் போன்ற வலிமை மிகுந்த இடையீடுகளின் வாயிலாக வினைப்பொருளானது நொதியின் கிளர்வு மையத்துடன் பிணைக்கப்படுகிறது.

கூற்று (ii): வினைபொருளின் வடிவமைப்பை ஒத்த மருந்து மூலக்கூறானது உட்செலுத்தப்படும்போது, அதுவும் நொதியுடன் பிணைந்து அதன் செயல்பாட்டை முடக்குகிறது. இவ்வகை தடுப்பான்கள் போட்டித் தன்மையுள்ள தடுப்பான்கள் என்றழைக்கப்படுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: நொதி வினையூக்க வினைகளில், கிளர்வு மையம் மற்றும் விளைப்பொருள் ஆகியவற்றில் காணப்படும் அமினோ அமிலங்களுக்கிடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு, வாண்டர் வால்ஸ் விசைகள் போன்ற வலிமை குறைந்த இடையீடுகளின் வாயிலாக வினைப்பொருளானது நொதியின் கிளர்வு மையத்துடன் பிணைக்கப்படுகிறது.

8. பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும் எதிர் உயிரி மருந்து____________

A) சல்ஃபைடு

B) ஃபோலிக் அமிலம்

C) சல்ஃபனிலமைடு

D) சிந்தடேஸ்

விளக்கம்: P– அமினோபென்சாயிக் அமிலத்தின்(PABA) வடிவமைப்பை ஒத்த அமைப்பு கொண்ட சல்ஃபனிலமைடு எனும் எதிர் உயிரி மருந்தானது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் எனும் துணைநொதியை உற்பத்தி செய்யும் பொருட்டு பல பாக்டீரியாக்களுக்கு PABA தேவைப்படுகிறது.

9. செல்லில் உள்ள உணர்வேற்பிகளின் முக்கிய பணி__________

A) துலங்கலை தூண்டுவது

B) துலங்கலை கட்டுப்படுத்துவது

C) தூண்டல்களை கட்டுப்படுத்துவது

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பல மருந்துகள், உணர்வேற்பி என்றழைக்கப்படும் குறிப்பிட்ட மூலக்கூறுடன் பிணைந்து அவற்றின் உடலியல் விளைவுகளை உண்டாக்குகின்றன. செல்லில் துலங்கலை தூண்டுவதே இந்த உணர்வேற்பிகளின் முக்கிய வேலையாகும்.

10. உணர்வேற்பிகள்___________உடன் இணைந்து காணப்படுகிறது.

A) செல்சுவர்

B) செல்சவ்வு

C) சைட்டோபிளாசம்

D) கோல்கை உறுப்புகள்

விளக்கம்: பெரும்பாலான உணர்வேற்பிகள் செல் சவ்வுகளுடன் இணைந்தே காணப்படுகின்றன. மேலும் இவற்றின் கிளர்வு மையங்கள் செல் சவ்வின் வெளிப்பகுதியில் வெளியே தெரியும்படி அமைந்துள்ளன. செல்களுக்கு தகவல்களை தாங்கிச் செல்லும் வேதித்தூதவர்கள் அந்த உணர்வேற்பிகளின் கிளர்வு மையங்களுடன் பிணைகின்றன. இதன் மூலம் தகவல் செல்லினுள் கடத்தப்படுகிறது.

11. பொருத்துக:

AS) எதிர்வினையூக்கிகள் – 1. தூக்கத்தை கட்டுப்படுத்துவது

B) மார்ஃபின் – 2. இயல்பான செயல்பாட்டை தடுத்தல்

C) அடினோசின் – 3. வலிநிவாரணி

D) காஃபின் – 4. தூக்கத்தை தூண்டுவது

A) 1 2 3 4

B) 4 2 3 1

C) 2 3 4 1

D) 2 3 4 1

விளக்கம்:

A) எதிர்வினையூக்கிகள் – 1. இயல்பான செயல்பாட்டை தடுத்தல்

B) மார்ஃபின் – 2. வலிநிவாரணி

C) அடினோசின் – 3. தூக்கத்தை தூண்டுவது

D) காஃபின் – 4. தூக்கத்தை கட்டுப்படுத்துவது

12. பெரும்பாலான உணர்வேற்பிகள்__________தன்மை கொண்டவைகளாக உள்ளன.

A) பைரல்

B) வைரல்

C) கைரல்

D) பெரல்

விளக்கம்: பெரும்பாலான உணர்வேற்பிகள் கைரல் தன்மை கொண்டவைகளாக உள்ளன. எனவே ஒரு மருந்தின் இன்னிஷியோமர்கள் வேறுபட்ட விளைவுகளை உருவாக்கக்கூடும்.

13. அமிலத்தன்மையை நீக்க நாம் பயன்படுத்தப்படும் வலிமைக் குறைந்த காரங்கள்_____________

A) அலுமினியம்

B) மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு

C) சோடியம் ஹைட்ராக்சைடு

D) A,B இரண்டும்

விளக்கம்: அமிலத்தன்மையை நீக்க நாம் அலுமினியம் மற்றும் மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு போன்ற வலிமை குறைந்த காரங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை இடைவயிற்றில் காரத்தன்மையை உண்டுபண்ணுகின்றன. மேலும் அதிகமான அமில சுரப்பிற்கும் வழிவகுக்கின்றன. மேலும் இந்த சிகிச்சையானது நோய் அறிகுறியை தணிக்கிறதே தவிர, நோய்க்கான காரணத்தை கட்டுப்படுத்தவில்லை.

14. கீழ்க்கண்டவற்றுள் இரைப்பை சுவரில் உள்ள உணர்வேற்பிகளை கிளர்வுறுத்தி,HCL சுரப்பை தூண்டக்கூடியது___________

A) மார்ஃபின்

B) காஃபின்

C) ஹிஸ்டமின்கள்

D) அடினோசின்;

விளக்கம்: ஹிஸ்டமின்கள் இரைப்பை சுவரில் உள்ள உணரவேற்பிகளை கிளர்வுறுத்தி,HCL சுரப்பை தூண்டுகின்றன என்பதை விரிவான ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த கண்டுபிடிப்பானது, செமிடிடின், ரானிடிடின் போன்ற புதிய மருந்துகளை வடிவமைக்க உதவியது.

15. ஹிஸ்டமின் போன்ற மருந்துப்பொருட்களை ஒத்து காணப்படும் சில மருந்துபொருட்கள்____________

A) மார்ஃபின்

B) செமிடிடின்

C) ரானிடிடின்

D) B,C இரண்டும்

16. கீழ்க்கண்டவற்றுள் மன அமைதிப்படுத்தும் மருந்துப் பொருளை கண்டறி.

A) ஹோலோபெரிடால்

B) குளோசாபைன்

C) டையசிபாம்

D) மேற்கண்ட அனைத்தும்

17. கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:

1) டோபமைன் – நரம்புத் தூண்டல் கடத்தி

2) ஆல்ப்ராசோலம் – மன அமைதிப்படுத்தி

3) பெனிசிலின் – மருந்துகளின் ராஜா

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்:

1) டோபமைன் – நரம்புத் தூண்டல் கடத்தி

2) ஆல்ப்ராசோலம் – மன அமைதிப்படுத்தி

3) பெனிசிலின் – மருந்துகளின் ராணி

18. கீழ்க்கண்டவற்றுள்குறுகிய கால வலிநிவாரணியாக பயன்படுத்தபடும் மருந்துப் பொருள் எது.

A) அசிட்டமினோஃபீன்

B) பாரா சிட்டமால்

C) புரூஃபென், ஆஸ்பிரின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இவை குறிப்பிட்ட இடத்திலுள்ள அழற்சி துலங்கல்களை குறைத்து வலியை நீக்குகின்றன. மேலும் குறுகிய கால வலிநிவாரணியாகவும், தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு அழற்சி போன்ற மிதமான வலிகளை போக்கவும் பயன்படுகிறது.

19. கீழ்க்கண்டவற்றுள் காய்ச்சலை கட்டுப்படுத்த பயன்படுத்தபடும் மருந்துப் பொருள் எது.

A) சாலிசிலேட்டுகள்

B) அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

C) அசிட்டமினோஃபீன் (அ) பாராசிட்டமால்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இந்த மருந்துகள், காய்ச்சலை குறைத்தல் மற்றும் சிறுதட்டணுக்கள் உறைதலை தடுத்தல் போன்ற வேறு பல விளைவுகளையும் கொண்டுள்ளன. இந்த பண்பின் காரணமாக, ஆஸ்பிரின் மாரடைப்பை தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

20. கீழ்க்கண்டவற்றுள் மாரடைப்பை தடுக்கும் மருந்தாக பயன்படக்கூடிய மருந்துப்பொருள்___________

A) ஆஸ்பிரின்

B) அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

C) அசிட்டமினோஃபீன் (அ) பாராசிட்டமால்

D) A,B இரண்டும்

விளக்கம்: இந்த மருந்துகள், காய்ச்சலை குறைத்தல் மற்றும் சிறுதட்டணுக்கள் உறைதலை தடுத்தல் போன்ற வேறு பல விளைவுகளையும் கொண்டுள்ளன. இந்த பண்பின் காரணமாக, ஆஸ்பிரின் மாரடைப்பை தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

21. கீழ்க்கண்டவற்றுள் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்புமருந்துப் பொருள்____________

A) அசிட்டமினோஃபீன்

B) பாராசிட்டமால்

C) புரூஃபென்

D) ஆஸ்பிரின்

விளக்கம்: இவை மூளையின் அடிப்பகுதியை (ஹைப்போதலாமஸ்) தூண்டி மென்தசை சுருக்கியினால் உருவாக்கப்பட்ட உயர் உடல் வெப்பநிலையை குறைக்கின்றன.

22. மூளையின் அடிப்பகுதி__________

A) தலாமஸ்

B) ஹைப்போதலாமஸ்

C) முகுளம்

D) அடிப்போஸ் திசு

23. கீழ்க்கண்டவற்றுள் போதை தரும் வலிநிவாரணி_____________

A) மார்ஃபின்

B) அசிட்டமினோஃபீன்

C) பாராசிட்டமால்

D) ஆஸ்பிரின்

விளக்கம்: இவை வலியை நீக்கி தூக்கத்தைக் கொடுக்கின்றன. இந்த மருந்துகள் போதை தரக்கூடியவை. மிக குறைந்தளவு கோமா மற்றும் உயிரிழத்தலை உருவாக்கலாம்.

24. அறுவைசிகிச்சைக்கு பிறகு உண்டாகும் வலி மற்றும் இறுதிநிலைப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு பயன்படும் வலி நிவாரணி________________

A) அசிட்டமினோஃபீன்

B) பாராசிட்டமால்

C) மார்ஃபின்

D) ஆஸ்பிரின்

25. கீழ்க்கண்டவற்றுள் சிறிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உணர்விழப்பு ஊக்கி____________

A) புரோகைன்

B) லிடோகைன்

C) மாஃபின்

D) A,B இரண்டும்

விளக்கம்: இது, உணர்விழக்கச் செய்யாமல், அவை பூசப்பட்ட உடற்பகுதியில் மட்டும் மருத்துப் போகச் செய்கின்றன. இவை புற நரம்ப இழைகளின் வழியாக மூளைக்கு வலி உணர்வு கடத்தப்படுதலை தடுக்கின்றன. இவை சிறிய அறுவை கிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.

26. கீழ்க்கண்டவற்றுள் சிரைவழி பொது உணர்விழப்பு ஊக்கி_______________

A) ஐசோஃபுளுரேன்

B) ப்ரொபோஃபால்

C) லிடோகைன்

D) புரோகைன்

விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.

27. கீழ்க்கண்டவற்றுள் சுவாசவழி பொது உணர்விழப்பு ஊக்கி______________

A) ஐசோஃபுளுரேன்

B) ப்ரொபோஃபால்

C) லிடோகைன்

D) புரோகைன்

விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.

28. கீழ்க்கண்டவற்றுள் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உணர்விழப்பு ஊக்கி_______________

A) லிடோகைன்

B) ப்ரொபோஃபால்

C) ஐசோஃபுளுரேன்

D) B,C இரண்டும்

விளக்கம்: இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, கட்டுப்படுத்தப்பட்ட, மீள்தன்மையுடைய உணர்விழப்பை உண்டாக்குகிறது. மேலும் பெரிய அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படுகின்றன.

29. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது. ( அமிலநீக்கி )

A) மெக்னீசியா பால்மம்

B) சோடியம் பைகார்பனேட்

C) ப்ரொபோஃபால்

D) கால்சியம் பைகார்பனேட்

விளக்கம்: வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கும் அமிலத்தை நடுநிலையாக்குகின்றன. அமில எதிர்வினையால் நெஞ்சு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் உணர்வை நீக்குகின்றன.

30. கீழ்க்கண்டவற்றுள் ஒவ்வாமையை குணப்படுத்த உதவும் நிவாரணிகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) செட்ரிஜின்

B) ரேனிடிடின்

C) லீவோசெட்ரிஜின்

D) டெஸ்லோரோட்டைன்

விளக்கம்: ஹிஸ்டமின் – 1 உணர் வேற்பிகளிலிருந்து ஹிஸ்டமின் வெளிப்படுதலை தடுக்கின்றன. மேலும் ஒவ்வாமை விளைவுகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.

31. பொருத்துக:

A) அமிலநீக்கி – 1. ஒமிபிரசோல்

B) ஒவ்வாமை மருந்து – 2. ஹிஸ்டமின் – 1

C) பீட்டா லாக்டம்கள் – 3. லீவோஃபிளாக்ஸசின்

D) ஃபுளுரோகுயினலோன்கள் – 4. ஆம்பிசிலின்

A) 1 2 4 3

B) 4 2 3 1

C) 2 3 4 1

D) 2 3 4 1

விளக்கம்:

A) அமிலநீக்கி – 1. ஒமிபிரசோல்

B) ஒவ்வாமை மருந்து – 2. ஹிஸ்டமின் – 1

C) பீட்டா லாக்டம்கள் – 3. ஆம்பிசிலின்

D) ஃபுளுரோகுயினலோன்கள் – 4. லீவோஃபிளாக்ஸசின்

32. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது. (அமிலநீக்கி)

A) செஃபாலோஸ்

B) அலுமினியம் ஹைட்ராக்சைடு

C) ரேனிடிடின்

D) ரபிபிரசோல்

33. நிமோனியா மற்றும் மேகவெட்டை நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் பீட்டா லாக்டம்களைக் கண்டறி.

A) பென்சிலின்கள்

B) ஆம்பிசிலின்

C) போரின்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பாக்டீரியா செல் சுவரின் உயிர்த் தொகுப்பை தடுக்கின்றன. மேலும் தோல், பல், காது, சுவாசக்குழல், சிறுநீர்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் தொற்று நோய்கள், நிமோனியா, மற்றும் மேகவெட்டை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

34. சுவாச குழல், பாலின உறுப்புகள் மற்றும் தோல் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் மேக்ரோலைடுகள் எவை.

A) எரித்ரோமைசின்

B) அசித்ரோமைசின்

C) ரபிபிரசோல்

D) A,B இரண்டும்

விளக்கம்: பாக்டீரியாவின் ரிபோசோம்களை தாக்கி புரத தயாரிப்பை தடுக்கின்றன. மேலும் சுவாச குழல், பாலின உறுப்புகள், இரைப்பை குடல் வழி மற்றும் தோல் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

35. கீழ்க்கண்டவற்றுள் நுரையீரலில் நீர்மத்திசு அழற்சி குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஃபுளுரோகுயினலோன்களைக் கண்டறி.

A) கிளினாஃபிளாக்ஸசின்

B) சிப்ரோஃபிளாக்ஸசின்

C) லீவோஃபிளாக்ஸசின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பாக்டீரியா நொதியான DNAகைரேஸை தடுக்கிறது. மேலும் சிறுநீர்குழாய், தோல் மற்றும் சுவாசக்குழல் தொற்று நோய்கள் நுரையீரலில் நீர்மத்திசு அழற்சி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

36. கீழ்க்கண்டவற்றுள் காலரா மற்றும் முகப்பரு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படும் டெட்ராசைக்ளின்களுடன் பொருந்தாதது எது.

A) டாக்ஸிசைக்ளின்

B) மிநோசைக்ளின்

C) ஜென்டாமைசின்

D) ஆக்ஸி டெட்ராசைக்ளின்

விளக்கம்: பாக்டீரியா ரிபோசோமின் துணை அலகான 30S உடன் இடையீடு செய்வதன் மூலம் புரத தொகுப்பை தடுக்கிறது. மேலும் குடற்புண், சுவாசக் குழல் தொற்று, காலரா, முகப்பரு ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

37. கீழ்க்கண்டவற்றுள் இனக்கீற்று ஏற்காத பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் அமினோ கிளைகோசைடுகளுடன் பொருந்தாதது எது.

A) மினோசைக்ளின்

B) கெனாமைசின்

C) ஜென்டாமைசின்

D) நியோமைசின்

விளக்கம்: பாக்டீரியா ரிபோசோமின் துணை அலகான 30S உடன் இடையீடு செய்வதன் மூலம் புரத தொகுப்பை தடுக்கிறது. மேலும் இனக்கீற்று ஏற்காத பாக்டீரியாக்களால் உருவாகும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன.

38. அறுவை சிகிச்சையின்போது தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க பயன்படும் புரைதடுப்பான்களுடன் பொருந்தாததைக் கண்டறி.

A) ஹைட்ரஜன் பெராக்சைடு

B) போவிடோன்

C) அயோடின்

D) நியோமைசின்

விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன அல்லது குறைக்கின்றன – உயிருள்ள திசுக்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க பயன்படுகிறது.

39. கீழ்க்கண்டவற்றுள் அறுவை சிகிச்சையின் போது புரைதடுப்பானாக பயன்படுவது_____________

A) கெனாமைசின்

B) பென்சல்கோனியம்

C) ஜென்டாமைசின்

D) நியோமைசின்

40. கீழ்க்கண்டவற்றுள் உயிரற்ற பொருட்களின் மீது கிரமிநாசினியாக பயன்படுத்தப்படுவதில் பொருந்தாதது.

A) குளோரின்

B) ஆல்கஹால்

C) கெனாமைசின்

D) ஹைட்ரஜன் பெராக்சைடு

விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன அல்லது குறைக்கின்றன. பொதுவாக உயிரற்ற பொருட்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.

41. கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட்ரோஜன் தொகுப்பு மருந்து பொருட்களை கண்டறி.

A) ஈஸ்ட்ராடையால்

B) மென்ஸ்ட்ரனால்

C) எத்தினைல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இந்த தொகுப்பு ஹார்மோன்கள் அண்ட விடுவிப்பை / கருத்தரித்தலை தடுக்கின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளில் பயன்படுகிறது.

42. கருத்தடை மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் புரோஜெஸ்ட்ரோன் தொகுப்பு மருந்து பொருட்களை கண்டறி.

A) நாரீதின்ட்ரோன்

B) நாரீதைநோட்ரெல்

C) எத்தினைல்

D) A,B இரண்டும்

43. உணவுக் கூட்டுப்பொருட்களினால் உண்டாகும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) பதனப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் மிக விரைவில் கெட்டுப்போகின்றன.

B) உணவுடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்ப்பதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைக்கப்படுகிறது.

C) உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருட்கள் உணவின் நறுமணத்தை கூட்டுகின்றன.

D) உணவிலுள்ள லிப்பிடுகள் மற்றும் பிற உட்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடைந்து நச்சுப் பொருட்கள் உருவாவதை எதிர் ஆக்சிஜனேற்றிகள் தடுக்கின்றன.

விளக்கம்: பதனப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.

44. கீழ்க்கண்டவற்றுள் பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களை தடை செய்யும் கரிம அமிலங்கள்___________

A) பென்சாயிக் அமிலம்

B) சார்பிக் அமிலம்

C) போனிக் அமிலம்

D) A,B இரண்டும்

விளக்கம்: பென்சாயிக் அமிலம், சார்பிக் அமிலம் போன்ற கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், எண்ணிலடங்கா பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களை தடை செய்யும் வல்லமை கொண்டவைகளாக உள்ளன.

45. நொதித்தல் மற்றும் அமிலமாக்கல் முறையின் மூலம் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுத்து உணவுக் கெட்டுப் போதலை தடுக்கும் செயல்முறைக்கு_____________என்று பெயர்.

A) உணவு சேகரித்தல்

B) உணவு பதப்படுத்துதல்

C) உணவை கெட்டுப்போகச் செய்தல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: நுண்ணுயிரிகளின் வளர்ச்சி காரணமாக நொதித்தல், அமிலமாக்கல் அல்லது மற்ற உணவுக் கெடும் செயல்முறைகளை தடுக்கவோ, ஒடுக்கவோ செய்யும் திறனை பதனப்பொருட்கள் பெற்றுள்ளன.

46. ஆல்கைல் எஸ்டர்கள் கீழ்க்கண்ட எந்த அமிலத்துடன் தொடர்புடையது.

A) அசிட்டிக் அமிலம்

B) சார்பிக் அமிலம்

C) போனிக் அமிலம்

D) ஹைட்ராக்ஸி பென்சாயிக் அமிலம்

விளக்கம்: குறைந்த அமிலத்தன்மை கொண்ட சூழல்களில் ஹைட்ராக்ஸி பென்சாயிக் அமிலத்தின் ஆல்கைல் எஸ்டர்கள் மிகவும் பயனுள்ளவை.

47. கீழ்க்கண்டவற்றுள் ஊறுகாய் தயாரிப்பதிலும் காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படும் அமிலம்__________________

A) அசிட்டிக் அமிலம்

B) சார்பிக் அமிலம்

C) போனிக் அமிலம்

D) ஹைட்ராக்ஸி பென்சாயிக் அமிலம்

விளக்கம்: அசிட்டிக் அமிலமானது முக்கியமாக ஊறுகாய் தயாரிப்பிலும், காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த சோடியம் மெட்டாபைசல்பைட் பயன்படுகிறது. பால்மிடிக் அமிலம் மற்றும் ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றுடனான சுக்ரோஸ் எஸ்டர்கள் பால்மக் காரணிகளாக பயன்படுகின்றன.

48. புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த பயன்படுவது________________

A) சார்பிக் அமிலம்

B) போனிக் அமிலம்

C) சோடியம் மெட்டாபைசல்பைட்

D) ஹைட்ராக்ஸி பென்சாயிக் அமிலம்

விளக்கம்: அசிட்டிக் அமிலமானது முக்கியமாக ஊறுகாய் தயாரிப்பிலும், காய்கறிகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை பதப்படுத்த சோடியம் மெட்டாபைசல்பைட் பயன்படுகிறது. பால்மிடிக் அமிலம் மற்றும் ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றுடனான சுக்ரோஸ் எஸ்டர்கள் பால்மக் காரணிகளாக பயன்படுகின்றன.

49. பொருத்துக: (உணவுப் பதப்படுத்தல் முறை)

A) வெப்ப முறை – 1. உறையவைத்தல்

B) குளிர் முறை – 2. பால்மக் காரணிகள்

C) உலர்த்தும் முறை – 3. பால் பதப்படுத்துதல்

D) பால்மிடிக் அமிலம் – 4. நீர்நீக்கம்

A) 1 2 4 3

B) 4 2 3 1

C) 3 1 4 2

D) 2 3 4 1

விளக்கம்:

A) வெப்ப முறை – 1. பால் பதப்படுத்துதல்

B) குளிர் முறை – 2. உறையவைத்தல்

C) உலர்த்தும் முறை – 3. நீர்நீக்கம்

D) பால்மிடிக் அமிலம் – 4. பால்மக் காரணிகள்

50. உணவுப் பொருட்கள் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போதலை தடுக்கம் சேர்மங்களுக்கு___________என்று பெயர்.

A) நேர் ஆக்சிஜனேற்றிகள்

B) எதிர் ஆக்சிஜன் ஒடுக்கிகள்

C) எதிர் ஆக்சிஜனேற்றிகள்

D) நேர் ஆக்சிஜன் ஒடுக்கிகள்

விளக்கம்: எதிர் ஆக்சிஜனேற்றிகள் என்பவை உணவுப் பொருள்கள் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போதலை தடுக்கும் சேர்மங்களாகும். கொழுப்பு மற்றும் எண்ணெயை கொண்டுள்ள உணவுகள் எளிதில் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போகின்றன.

51. கொழுப்பு மற்றும் எண்ணெய்களின் ஆக்சிஜனேற்றத்தை தடுக்கும் பொருட்டு உணவில் சேர்க்கப்படும் உணவுக் கூட்டுப்பொருள்கள்______________

A) பியுட்டைல் ஹைட்ராக்ஸி டொலுயீன்

B) பியுட்டைல் ஹைட்ராக்ஸி அனிசோல்

C) பென்சாயிக் அமிலம்

D) A,B இரண்டும்

விளக்கம்: கொழுப்பு மற்றும் எண்ணெய்களின் ஆக்சிஜனேற்றத்தை தடுக்கும் பொருட்டு, உணவில் BHT (பியுட்டைல் ஹைட்ராக்ஸி டொலுயீன்),BHA (பியுட்டைல் ஹைட்ராக்ஸி அனிசோல்) ஆகிய வேதிப்பொருட்கள் உணவுகூட்டுப் பொருட்களாக சேர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக எதிர் ஆக்சிஜனேற்றிகள் என்றழைக்கப்படுகின்றன. எண்ணெய்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதால், உணவு ஆக்சிஜனேற்றம் அடையும் சங்கிலி வினையானது நிறுத்தப்படுகிறது.

52. கீழ்க்கண்டவற்றுள் உணவுக் கூட்டுப்பொருளாக பயன்படும் சேர்மங்களுல் பொருந்தாததைத் கண்டறி.

A) சார்பிக் அமிலம்

B) பியுட்டைல் ஹைட்ராக்ஸி டொலுயீன்

C) சல்பர் டையாக்சைடு

D) சல்பைட்

விளக்கம்: சல்பர் டையாக்சைடும், சல்பைட்டுகளும் உணவு கூட்டுப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை எதிர் நுண்ணுயிரிகளாகவும், எதிர் ஆக்சிஜனேற்றிகளாகவும் மற்றும் நொதி தடுப்பான்களாகவும் செயல்படுகின்றன.

53. கூற்று (i): இனிப்புச் சுவையை பெறுவதற்காக சர்க்கரைகளைப் போல பயன்படுத்தப்படும் சேர்மங்களுக்கு சர்க்கரை பதிலிகள் என்று பெயர்.

கூற்று (ii): இவை இன்சுலின் உதவியுடன் மட்டுமே வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: இனிப்புச் சுவையை பெறுவதற்காக சர்க்கரைகளைப் போல (குளுக்கோஸ், சுக்ரோஸ்) பயன்படுத்தப்படும் சேர்மங்கள் சர்க்கரை பதிலிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை இன்சுலின் உதவி இல்லாமலேயே வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன. எ.கா. சார்பிடால்.

54. கீழ்க்கண்டவற்றுள் செயற்கை இனிப்புச் சுவையூட்டி அல்லாதது எது?

A) சாக்கரின்

B) சர்க்கரை

C) ஆஸ்பார்டேம்

D) சுக்ரலோஸ்

விளக்கம்: இனிப்புச் சுவையுடைய, ஊட்டச்சத்து இல்லாத அல்லது ஒதுக்கத்தக்க ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட தொகுப்பு சேர்மங்கள் செயற்கை இனிப்புச் சுவையூட்டிகள் என்றழைக்கப்படுகின்றன. எ.கா. சாக்கரின், ஆஸ்பார்டேம், சுக்ரலோஸ், அலிடேம்.

55. கூற்று (i): சோப்புகள் என்பவை குறைந்த கொழுப்பு அமிலங்களின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளாகும்.

கூற்று (ii): டிடர்ஜென்ட்டுகள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்பு அல்லது ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களாகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: சோப்புகள் என்பவை உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்புகளாகும். டிடர்ஜென்ட்டுகள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்பு அல்லது ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களாகும்.

56. கீழ்க்கண்டவற்றுள் சோப்பு தயாரிக்க பயன்படுவது___________

A) விலங்கு கொழுப்பு

B) தாவர எண்ணெய்

C) சோடியம் ஹைட்ராக்சைடு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சோப்புகள், விலங்கு கொழுப்பு அல்லது தாவர எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களின் கிளிசரைல் எஸ்டர்களைக் கொண்டுள்ளன. கிளிசரைகளை சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் சேர்த்து வெப்பப்படுத்தபடும்போது அவை சோப்பாகவும், கிளிசராலாகவும் மாறுகின்றன.

57. சோப்பின் தரமானது கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

A) தாவர எண்ணெய்

B) கொழுப்பு

C) சோடியம் ஹைட்ராக்சைடு

D) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

விளக்கம்: ஒரு சோப்பின் தரமானது அதன் மொத்த கொழுப்பளவு ( மதிப்பு) மதிப்பின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. இது, கனிம அமிலங்களுடன் சேர்த்து பகுக்கும்போது தனியாக பிரியும் கொழுப்பு பொருளின் மொத்த அளவு என வரையறுக்கப்படுகிறது. அதிக TFM மதிப்பு கொண்ட சோப்பு அதிக தரமுடையதாகும்.

58. BIS தரநிர்ணயித்தின்படி, முதல்தர சோப்புகள் குறைந்தபட்சம்____________TFM மதிப்பை கொண்டிருக்க வேண்டும்.

A) 70 சதவீதம்

B) 73 சதவீதம்

C) 76 சதவீதம்

D) 79 சதவீதம்

விளக்கம்: BIS தரநிர்ணயித்தின்படி, முதல்தர சோப்புகள் குறைந்தபட்சம் 76 சதவீதம் TFM மதிப்பை கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர சோப்புகள் முறையே குறைந்தபட்சம் 70% மற்றும் 60%TFM மதிப்பை கொண்டிருக்க வேண்டும். நுரைத்தல், ஈரப்பதம், கொழகொழப்புத்தன்மை, ஆல்கஹாலில் கரையாத பொருட்கள் போன்றவை மற்ற தர நிர்ணய கூறுகளாக விளங்குகின்றன.

59. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி. சரியற்றதைத் தேர்ந்தெடு.

A) சோப்பின் அழுக்கு நீக்கும் செயல்பாடானது சோப்பில் உள்ள கார்பாக்ஸிலேட் அயனியின் அமைப்புடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

B) பால்மிடேட் அயனி இருமுனை அமைப்பை கொண்டுள்ளது.

C) ஹைட்ரோகார்பன் பகுதியானது முனைவற்ற பகுதியாகவும், கார்பாக்ஸில் பகுதி முனைவற்ற பகுதியாகவும் உள்ளது.

D) முனைவுற்ற பகுதியானது நீர் விரும்பும் தன்மை கொண்டது. முனைவற்ற பகுதியானது நீர் வெறுக்கும் தன்மை கொண்டது.

விளக்கம்: முனைவுற்ற பகுதியானது நீர் வெருக்கும் தன்மை கொண்டது. முனைவற்ற பகுதியானது நீர் விரும்பும் தன்மை கொண்டது.

60. கீழ்க்கண்ட கூற்றுக்களில் டிடர்ஜெண்ட் பற்றியக் தகவல்களில் பொருத்தமில்லாததைக் கண்டறி.

A) டிடர்ஜெண்ட்கள் என்பவை ஆல்கைல் ஹைட்ரஜன் சல்பேட்டுகளின் சோடியம் உப்புகள் அல்லது நீண்ட சங்கிலி ஆல்கைல் பென்சீன் சல்ஃபானிக் அமிலங்களின் சோடியம் உப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட விளைபொருட்களாகும்.

B) இவை கடின நீரிலும், அமிலச் சூழல்களிலும் டிடர்ஜெண்ட்களை பயன்படுத்த முடியும் என்பதால் இவை சோப்புகளை விட மேம்பட்டவைகளாக கருதப்படுகின்றன.

C) டிடர்ஜெண்ட்களின் அழுக்கு நீக்கம் செயல்பாடானது அழக்கு நீக்கிகளின் சோப்புகளின் அழுக்கு நீக்கும் செயல்பாட்டை ஒத்துள்ளது.

D) டிடர்ஜெண்ட்கள் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விளக்கம்: டிடர்ஜெண்ட்கள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

61. பலபடி எனும் சொல்லானது கீழ்க்கண்ட எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.

A) இலத்தீன்

B) கிரேக்கம்

C) பிரெஞ்சு

D) அரேபிய

விளக்கம்: பலபடி (Polymer) எனும் சொல்லானது ‘Polumeres‘ எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். இதன் பொருள் ‘பல பாகங்களைக் கொண்டது’ என்பதாகும். ஒரு பலபடியின் உள்ளமைப்பானது, அதன் கட்டமைப்பு அலகுகளான ஒற்றைப்படி மூலக்கூறுகளால் விளக்கப்படுகிறது.

62. பொருத்துக:

A) மருந்து – 1. பல பொருள்களைக் கொண்டது

B) பலபடி – 2. காய்ந்த மூலிகை

C) PVC – 3. மாவுப் பதப்படுத்தி

D) E223 – 4. பாலி வினைல் குளோரைடு

A) 1 2 4 3

B) 4 2 3 1

C) 3 1 4 \2

D) 2 1 4 3

விளக்கம்:

A) மருந்து – 1. காய்ந்த மூலிகை

B) பலபடி – 2. பல பொருள்களைக் கொண்டது

C) PVC – 3. பாலி வினைல் குளோரைடு

D) E223 – 4. மாவுப் பதப்படுத்தி

63. பொருத்துக:

A) இயற்கை பலபடி – 1. HDPE

B) செயற்கை பலபடி – 2. விஸ்கோஸ்ரேயான்

C) அரை செயற்கை பலபடி – 3. பாலிதீன்

D) நீண்ட நேரியல் பலபடி – 4. செல்லுலோஸ்

A) 1 2 4 3

B) 4 3 2 1

C) 3 1 4 2

D) 2 1 4 3

விளக்கம்:

A) இயற்கை பலபடி – 1. செல்லுலோஸ்

B) செயற்கை பலபடி – 2. பாலிதீன்

C) அரை செயற்கை பலபடி – 3. விஸ்கோஸ்ரேயான்

D) நீண்ட நேரியல் பலபடி – 4. HDPE

64. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் கண்டறி:

A) கிளையுள்ள பலபடி – பாலிபுரப்பலின்

B) குறுக்க பிணைப்புகளை கொண்ட பலபடி – பேக்கலைட், மேலமின்

C) மீட்சியுறு வடிவம் கொண்ட பலபடி – நியோபிரின், ப்யூனா S

D) இழை பலபடி சங்கிலிகள் – பாலிதீன்

விளக்கம்:

A) கிளையுள்ள பலபடி – பாலிபுரப்பலின்

B) குறுக்க பிணைப்புகளை கொண்ட பலபடி – பேக்கலைட், மேலமின்

C) மீட்சியுறு வடிவம் கொண்ட பலபடி – நியோபிரின், ப்யூனா S

D) இழை பலபடி சங்கிலிகள் – நைலான் 6—6, டெரிலீன்

65. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறி:

1) வெப்ப இளகு பலபடி – பாலிஸ்டைரீன், பாலிதீன்

2) வெப்ப இறுக்கல் பலபடி – பார்மால்டிஹைடு, மேலமைன்

3) சேர்ப்பு பலபடி – பாலிஎத்திலீன்,PVC டெப்லான்

4) குறுக்கு பலபடி – பேக்கலைட்

A) 1, 2 மட்டும் சரி

B) 2, 3 மட்டும் சரி

C) 1, 2, 3 மட்டும் சரி

D) மட்டும் சரி

விளக்கம்:

A) வெப்ப இளகு பலபடி – பாலிஸ்டைரீன், பாலிதீன்

B) வெப்ப இறுக்கல் பலபடி – பார்மால்டிஹைடு, மேலமைன்

C) சேர்ப்பு பலபடி – பாலிஎத்திலீன்,PVC டெப்லான்

D) குறுக்கு பலபடி – நைலான்

66. ஆல்கீன்களை கீழ்க்கண்ட எதனுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன.

A) சோடியம் பெராக்சைடு

B) கால்சியம் பெராக்சைடு

C) பென்சாயில் பெராக்சைடு

D) பொட்டாசியம் பெராக்சைடு

விளக்கம்: ஆல்கீன்களை, பென்சாயிக் பெராக்சைடு போன்ற தனி உறுப்பு துவக்கிகளுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக பெராக்சைடு துவக்கி முன்னிலையில் ஸ்டைரீன் பலபடியாக்கலுக்கு உட்பட்டு பாலிஸ்டைரீனை தருகிறது.

67. ஸ்டைரினானது பலபடியாக்கல் வினைக்கு உட்பட்டு கீழ்க்கண்ட எதனைத் தருகிறது.

A) பாலிதீன்

B) பாலிஸ்டைரீன்

C) விஸ்கோஸ்ரேயான்

D) பாலிபுரப்பலின்

விளக்கம்: ஆல்கீன்களை, பென்சாயிக் பெராக்சைடு போன்ற தனி உறுப்பு துவக்கிகளுடன் வெப்பப்படுத்தும்போது அவை பலபடியாக்கல் வினைக்கு உட்படுகின்றன. எடுத்துக்காட்டாக பெராக்சைடு துவக்கி முன்னிலையில் ஸ்டைரீன் பலபடியாக்கலுக்கு உட்பட்டு பாலிஸ்டைரீனை தருகிறது.

68. பொருத்துக:

A) நேவோலேக் – 1. சீப்பு மற்றும் பேனா

B) பேக்கலைட் – 2. பெயின்ட்

C) இயற்கை இரப்பர் – 3. சிஸ் ஐசோபிரீன்

D) இரப்பர் உரனூட்டல் – 4. சார்லஸ் குட் இயர்

A) 1 2 4 3

B) 4 3 2 1

C) 3 1 4 2

D) 2 1 3 4

விளக்கம்:

A) நேவோலேக் – 1. பெயின்ட்

B) பேக்கலைட் – 2. சீப்பு மற்றும் பேனா

C) இயற்கை இரப்பர் – 3. சார்லஸ் குட் இயர்

D) இரப்பர் உரனூட்டல் – 4. சிஸ் ஐசோபிரீன்

69. 1839 ஆம் ஆண்டு இரப்பர் உரனூட்டல் அல்லது வல்கையாக்கல் என்ற முறையை கண்டறிந்த அறிவியல் அறிஞர்_____________

A) சார்லஸ் உட்

B) சார்லஸ் குட் இயர்

C) சார்லஸ் பேக்கர்

D) அலெக்சாண்டர் பிளமிங்

விளக்கம்: 1839 ஆம் ஆண்டு சார்லஸ் குட் இயர் என்பவர் இயற்கை இரப்பர் மற்றும் சல்பர் சேர்ந்த காலவையை சூடான அடுப்பின் மீது தவறவிட்டார். அந்த இரப்பரானது வலிமையானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் மாறியதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குட் இயர் இந்த செயல்முறையை “இரப்பர் உரனூட்டல்” அல்லது வலகையாக்கல் என்றழைத்தார்.

70. கீழ்க்கண்டக் கூற்றுக்களில் சரியானதைக் கண்டறி:

1) சுற்றுச் சூழலில் காணப்படும் நுண்ணுயிரிகளால் எளிதாக சிதைக்கப்படும் பொருட்களானவை மக்கும் பொருட்கள் என்றழைக்கப்படுகின்றன.

2) இயற்கைப் பலபடிகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தாமாகவே மக்கும் தன்மை உடையவை.

3) செயற்கை பலபடிகளுக்கு அத்தகைய பண்பு கிடையாது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

71. அறுவைசிகிச்சையில் தையலிடுதல் மற்றும் பிளாஸ்மா மாற்றுப் பொருள் போன்றவற்றில்_____________பலபடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

A) மக்கும் பலபடிகள்

B) மக்காத பலபடிகள்

C) ஓரளவு மக்கும் பலபடிகள்

D) மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய

72. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?

A) ஸ்ட்ரெப்டோமைசின்

B) குளோரோமைசிடின்

C) ஆஸ்பிரின்

D) பெனிசிலின்

73. டெட்டால் என்பது எதன் கலவை?

A) குளோரோசைலினால் மற்றும் பைதயோனால்

B) குளோரோசைலினால் மற்றும்α – டெர்பினால்

C) டெர்பினால் மற்றும் பைதயோனால்

D)குளோரோசைலினால் மற்றும் டெர்பினால்

74. புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன பின்வரும் கூற்றுகளில் எது தவறானது.?

A) நீர்த்த போரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன வலிமை மிகுந்த புரைதடுப்பான்களாகும்.

B) கிருமிநாசினிகள் உயிருள்ள செல்களை பாதிக்கின்றன.

C) பீனாலின் 0.2% கரைசல் ஒரு புரைதடுப்பான், ஆனால் 1% கரைசல் ஒரு கிருமிநாசினி.

D) குளோரின் மற்றும் அயோடின் ஆகியவை வலிமை மிக்க கிருமிநாசினிகளாக பயன்படுகின்றன.

75. சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச் சுவையூட்டியாகும், இது__________லிருந்து தயாரிக்கப்படுகிறது.

A) செல்லுலோஸ்

B) டொலுயீன்

C) வளையஹெக்ஸீன்

D) ஸ்டார்ச்

76. உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள்____________என்றழைக்கப்படுகின்றன.

A) எதிர்வினையூக்கி

B) முதன்மை இயக்கி

C) நோதிகள்

D) மூலக்கூறு இலக்குகள்

77. ஆஸ்பிரின் என்பது_____________

A) அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்

B) பென்சாயில் சாலிசிலிக் அமிலம்

C) குளோரோபென்சாயிக் அமிலம்

D) ஆந்த்ரனிலிக் அமிலம்

78. இயற்கை ரப்பர் கொண்டிருப்பது_____________

A) ஒன்றுவிட்ட சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு

B) தன்னிச்சையான சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு

C) அனைத்தும் சிஸ் அமைப்பு

D) அனைத்தும் டிரான்ஸ் அமைப்பு

79. நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

A) பாலிஅமைடு

B) பாலித்தீன்

C) பாலி எஸ்டர்

D) பாலிசாக்கரைடு

80. டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

A) பாலிஅமைடு

B) பாலி எஸ்டர்

C) பாலித்தீன்

D) பாலிசாக்கரைடு

81. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும்பலபடி?

A) நைலான் 6

B) HDPE

C) PVC

D) PHBV

82. பொதுவாக ஒட்டா சமையல் பாத்திரங்கள் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின் ஒற்றைப்படி மூலக்கூறு

A) ஈத்தேன்

B) புரப்-2-ஈன்நைட்ரைல்

C) குளோரோஈத்தீன்

D) 1,1,2,2-டெட்ராஃபுளுரோஈத்தேன்

83. கூற்று: இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2-மெத்தில்-1,3-பியுட்டாடையீன்.

காரணம்: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

84. கருவுறுதலை தடுக்கும் மருந்துப் பொருளுக்கு எடுத்துக்காட்டு

A) நோவெஸ்ட்ரால்

B) செல்டேன்

C) சல்வார்சன்

D) குளோரம்பினிகால்

85. தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது.

A) பாராசிட்டமால்

B) பைதயோனால்

C) குளோரோகுயின்

D) ஈக்வனில்

86. பின்வருவனவற்றுள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி?

A) ஆர்லான்

B) PVC

C) டெஃப்லான்

D) PHBV

87. போர்வைகள் (செயற்கை கம்பிளி) செய்ய பயன்படும் பலபடி

A) பாலிஸ்டைரீன்

B)PAN

C) பாலிஎஸ்டர்

D) பாலித்தீன்

88. பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பான தவறான கூற்று எது?

A) பேக்கலைட் மற்றும் மேலமைன் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.

B) அவை, இரண்டு அல்லது மூன்று வினைசெயல் தொகுதிகளைக் கொண்ட ஒற்றைப்படி மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன.

C) அவை, பல்வேறு நேர்க்கோட்டு பலபடி சங்கிலிகளுக்கிடையே சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.

D) அவை, அவற்றின் பலபடி சங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.

89. குளோரோசைலினால் மற்றும் டெர்பினிகால் கலவையானது____________ஆக பயன்படுகிறது.

A) புரைதடுப்பான்

B) காய்ச்சல் மருந்து

C) எதிர்உயிரி

D) வலிநிவாரணி

90. சரியான இணையற்றதைக் கண்டறி:

A) PHB – பாலிஹைட்ராக்ஸி பியுட்டிரேட்

B) PHBV – பாலிடைராக்ஸி பியுட்டிரேட் -co- ஹைட்ராக்ஸில் வேளரேட்

C) PGA – பாலிகிளைக்காலிக் அமிலம்

D) PLA – பாலிலேக்டொஜெனிக் அமிலம்

விளக்கம்:

A) PHB – பாலிஹைட்ராக்ஸி பியுட்டிரேட்

B) PHBV – பாலிடைராக்ஸி பியுட்டிரேட் -co- ஹைட்ராக்ஸில் வேளரேட்

C) PGA – பாலிகிளைக்காலிக் அமிலம்

D) PLA – பாலிலேக்ட்க் அமிலம்

91. இரப்பரின் இயற் பண்புகளை மாற்றியமைக்க____________

A) வல்கனையாக்கலுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை கட்டுப்படுத்துதல்

B) வல்கனையாக்கலுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை மிகைப்படுத்தல்

C) வல்கனையாக்கலுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை இரு மடங்காக்கல்

D) வல்கனையாக்கலுக்கு பயன்படுத்தப்படும் சல்பரின் அளவை நான்கு மடங்காக்கல்

92. கூற்று (i): 1 முதல் 3% வரை சல்பரைக் கொண்டுள்ள இரப்பரானது மிருதுவானதாகவும், நீளும் தன்மை கொண்டதாகவும் உருவாகிறது.

கூற்று (ii): 3 முதல் 10% வரை சல்பரைப் பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால், நெகிழும் தன்மை கொண்டதாக மாறுகிறது.

A) கூற்று i மட்டும் சரி

B) கூற்றுii மட்டும் சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

93. கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.

A) இரப்பர் என்பது இயற்கையில் காணப்படும் பலபடி ஆகும்.

B) இரப்பர் மரத்தின் பட்டைகளில் உண்டாக்கப்படும் வெட்டுகளிலிருந்து வழியும் இரப்பர் பாலிலிருந்து இவை பெறப்படுகின்றன.

C) இயற்கை இரப்பரில் சிஸ் ஐசோபிரீன் எனப்படும் ஒற்றைப்படி அலகு காணப்படுகிறது. மேலும் இயற்கை இரப்பரில் ஆயிரக்கணக்கான ஐசோபிரீன் அலகுகள் ஒரே சங்கிலியாக இணைந்துள்ளன.

D) இற்கை இரப்பரானது வலிமையானது மற்றும் நீளும் தன்மை கொண்டதாகும்.

விளக்கம்: இயற்கை இரப்பரானது வலிமையானதாகவோ அல்லது நீளும் தன்மை கொண்டதாகவோ இருப்பதில்லை. இரப்பர் உரனூட்டல் எனும் செயல்முறையின் மூலம் இயற்கை இரப்பரின் பண்புகளை மாற்றியமைக்க முடியும்.

94. ஸ்டைரீன் மற்றும் பியுட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்ட இரப்பர்____________

A) இயற்கை இரப்பர்

B) பியூனா—S

C) நைலான்

D) ரேயான்

விளக்கம்: SBR இரப்பர் (Buna-S) எனும் பலபடியானது ஸ்டைரீன் மற்றும் பியுட்டாடையீன் ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. பல்லின பலபடிகள், ஒற்றைப்பலபடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன.

95. கீழ்க்கண்டவற்றுள் ஒற்றைப்படி மூலக்கூறு அல்லாதது எது.

A) எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெரிப்தாலிக் அமிலம்

B) பீனால் மற்றும் ஃபார்மால்டிஹைடு

C) இயற்கை இரப்பர்

D) மேலமைன் மற்றும் ஃபார்மால்டிஹைடு

96. கீழ்க்கண்டவற்றுள் பலபடி மூலக்கூறு அல்லாதது எது.

A) யூரியா மற்றும் ஃபார்மால்டிஹைடு

B) நியோப்ரீன்

C) பியூனா – S

D) பியூனா – N

97. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மின்கம்பிகளுக்கு காப்புப் பொருளாகவும் மற்றும் பொம்மைகள் செய்யவும் பயன்படுகிறது.

A) குறை அடர்த்தி பாலிஎத்திலீன்

B) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன்

C) டெஃப்லான்

D) நைலான்

98. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பாட்டில்கள் மற்றும் குழாய்கள் செய்யப் பயன்படுகிறது.

A) டெஃப்லான்

B) நைலான்

C) குறை அடர்த்தி பாலிஎத்திலீன்

D) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன்

99. பொருட்கள் மீது மேல் பூச்சு பூசவும், ஒட்டா சமையல் பாத்திரங்கள் செய்யவும் பயன்படக்கூடியது?

A) டெஃப்லான்

B) நைலான்

C) குறை அடர்த்தி பாலிஎத்திலீன்

D) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன்

100. போர்வைகள் மற்றும் ஸ்வெட்டர்கள் தயாரிப்பில் கம்பளிக்கு மாற்றாக பயன்படக்கூடியது__________

A) டெஃப்லான்

B) நைலான்

C) ஆர்லான்

D) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன்

101. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜவுளித் துறையிலும் அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

A) டெஃப்லான்

B) நைலான் –6, 6

C) ஆர்லான்

D) நைலான் – 6

102. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று டயர்கள் மற்றும் இழைகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

A) டெஃப்லான்

B) நைலான் –6, 6

C) ஆர்லான்

D) நைலான் – 6

103. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பாதுகாப்பு தலைகவசங்களில் கண்ணாடி வலூவூட்ட பொருளாக பயன்படுகிறது.

A) டெஃப்லான்

B) டெரிலீன்

C) ஆர்லான்

D) நைலான் – 6

விளக்கம்: இது பஞ்சு அல்லது கம்பளி இழைகளுடன் கலத்திலும், பாதுகாப்பு தலைகவசங்களில் கண்ணாடி வலுவூட்ட பொருளாகவும் பயன்படுகிறது.

104. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று எளிதில் உடையாத தட்டுகள் செய்ய பயன்படுகிறது.

A) நோவோலேக்

B) பேக்கலைட்

C) மேலமைன் ஃபார்மால்டிஹைடு

D) டெரிலீன்

105. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று வேதிப்பொருள் சேமிப்பு கலன்கள் மற்றும் இடமாற்றுப் பட்டைகள் தயாரிக்க பயன்படுகிறது.

A) நோவோலேக்

B) பேக்கலைட்

C) டெரிலீன்

D) நியோப்ரீன்

விளக்கம்: இது இரப்பரை விட மேம்பட்டது, மேலும் இது வேதிப்பொருள்களால் பாதிக்கப்படுவதில்லை. இது வேதிப்பொருள் சேமிப்பு கலன்கள் மற்றும் இடமாற்றுப் பட்டைகள் தயாரிக்க பயன்படுகிறது.

106. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று நெளிகுழல்கள் தயாரிக்கவும் மற்றும் தண்ணீர் தொட்டியின் உள்பூச்சியாகவும் பயன்படுகிறது.

A) பியூனா – N

B) பேக்கலைட்

C) டெரிலீன்

D) நியோப்ரீன்

107. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று எலும்பியல் சாதனங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட மருந்து விடுவிப்பிலும் பயன்படுகிறது.

A) 3 – ஹைட்ராக்ஸி பியுட்டனாயிக் அமிலம்

B) 3 – ஹைட்ராக்ஸி பென்டனாயிக் அமிலம்

C) நைலான் – 6

D) A,B இரண்டும்

12th Science Lesson 3 Questions in Tamil

3] பொருளாதாரப்பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவுத்தாவரவியலும்

1. சோளம் கீழ்கண்ட எந்த வகை தாவரத்தைச் சார்ந்தது.

A) சிறுசெடி

B) புதர்செடி

C) புல்வகை

D) தண்டுத் தாவரம்

விளக்கம்: ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.

2. தோராயமாக தற்போது பயன்பாட்டில் உள்ள உணவுத் தாவரங்களின் எண்ணிக்கை____________

A) 5,000

B) 10,000

C) 15,000

D) 20,000

விளக்கம்: ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.

3. தானியம் என்ற சொல் கீழ்க்கண்ட எந்த வார்த்தையிலிருந்து உருவானது.

A) இலத்தின்

B) கிரேக்கம்

C) ஸ்பானிஷ்

D) சீரிஸ்

விளக்கம்: தானியம் எனும் சொல் ‘சீரிஸ்’ எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும் புல் குடும்பத் தாவரங்களாகும்.

4. ஸ்டார்ச் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து தாவரங்களும் கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும்.

A) சொலானேசி

B) ரூபியேசி

C) போயேசி

D) யூஃபோர்பியேசி

விளக்கம்: தானியம் எனும் சொல் ‘சீரிஸ்’ எனும் வார்த்தையிலிருந்து உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும் புல் குடும்பத் தாவரங்களாகும்.

5. பொருத்துக:

A) கோதுமை – 1. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

B) சீரிஸ் – 2. ரோமானிய வேளாண்மைக் கடவுள்

C) நெல் – 3. அரை நீர்வாழ்த்தாவரம்

D) மணிலா – 4. புல் வகைத்தாவரம்

A) 1 2 3 4

B) 1 2 4 3

C) 1 4 3 2

D) 4 2 3 1

விளக்கம்:

A) கோதுமை – 1. புல் வகைத்தாவரம்

B) சீரிஸ் – 2. ரோமானிய வேளாண்மைக் கடவுள்

C) நெல் – 3. அரை நீர்வாழ்த்தாவரம்

D) மணிலா – 4. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

6. தானியங்கள் பயிரிடப்படுவதற்கான முக்கிய காரணங்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) எவ்வகை வளர் சூழலுக்கும் ஏற்ப வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மை

B) எளிதில் பயிரிடப்படக்கூடியவை.

C) அதிக அடிகிளைத்தல் செய்யும் தன்மையினால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அதிக விளைச்சல் கிடைக்கச் செய்தல்.

D) குறைந்த கலோரி மதிப்புள்ள ஆற்றலை வழங்கக்கூடியவை.

விளக்கம்: அதிக கலோரி மதிப்புள்ள ஆற்றலை வழங்கக்கூடியவை.

7. தானியங்களிலிருந்து கிடைக்கப்பெரும் ஊட்டச்சத்துக்களைக் கண்டறி.

A) கார்போஹைட்ரேட்

B) புரதங்கள்

C) வைட்டமின்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கார்போஹைட்ரேட், புரதங்கள், நார்கள் மற்றும் பலவகையான வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைத் தானியங்கள் வழங்குகின்றன. அளவின் அடிப்படையில் தானியங்கள் இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை பெருந்தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் ஆகும்.

8. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) நெல் – 1. ஒரைசா சட்டைவா

B) கோதுமை – 2. பெனிசிட்டம் அமெரிக்கானம்

C) மக்காச் சோளம் – 3. ஜியா மேய்ஸ்

D) கம்பு – 4. டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்

A) 1 2 3 4

B) 1 2 4 3

C) 1 4 3 2

D) 4 3 2 1

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) நெல் – 1. ஒரைசா சட்டைவா

B) கோதுமை – 2. டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்

C) மக்காச் சோளம் – 3. ஜியா மேய்ஸ்

D) கம்பு – 4. பெனிசிட்டம் அமெரிக்கானம்

9. கீழ்கண்டவற்றுள் பெருந்தானிய வகைதாவரங்கள் அல்லாதது எது.

A) கம்பு

B) கோதுமை

C) நெல்

D) மக்காச் சோளம்

விளக்கம்: நெல், கோதுமை மற்றும் மக்காச் சோளம் ஆகியவை பெருந்தானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.

10. கீழ்கண்டவற்றுள் சிறுதானிய வகைதாவரங்கள் அல்லாதது எது.

A) கம்பு

B) நெல்

C) கேழ்வரகு

D) சோளம்

விளக்கம்: கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியவை சிறுதானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.

11. கீழ்க்கண்டவற்றுள் மிகச்சிறு தானியவகை தாவரம் எது.

A) சாமை

B) தினை

C) வரகு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சாமை, தினை மற்றும் வரகு ஆகியவை மிகச்சிறு தானிய வகையைச் சார்ந்த உணவுத் தாவரங்களாகும்.

12. பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள உணவுத்தாவரம்______________

A) மக்காச் சோளம்

B) நெல்

C) கம்பு

D) கேழ்வரகு

விளக்கம்: தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த் தாவரம் நெல். முக்கியமான உணவுப் பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.

13. அதிகளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள முக்கிய உணவுப் பொருள்_______________

A) நெல்

B) மக்காச் சோளம்

C) கோதுமை

D) கேழ்வரகு

விளக்கம்: தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த் தாவரம் நெல். முக்கியமான உணவுப் பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.

14. நெல்லின் தோற்ற மையம்______________

A) தென்மேற்கு ஆசியா

B) தெற்கு ஆசியா

C) தென்கிழக்கு ஆசியா

D) வடக்கு ஆசியா

விளக்கம்: நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழக்த்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

15. நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்ட இடங்கள்____________

A) சீனா

B) இந்தியா

C) தாய்லாந்து

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழகத்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

16. தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்______________

A) கோதுமை

B) கேழ்வரகு

C) அரிசி

D) மக்காச்சோளம்

விளக்கம்: அரிசி கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

17. காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்____________

A) கோதுமை

B) அவல்

C) பொரி

D) B,C இரண்டும்

விளக்கம்: அவல் பொரி போன்ற அரிசி பொருட்கள் காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

18. நெல்லின் பகுதிப்பொருள்களின் பயன்களில் சரியானதைக் கண்டறி:

1) அரிசி தவிட்டிலிருந்து பெறப்பட்ட தவிட்டு எண்ணெய் சமையலிலும் தொழிற்சாலையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

2) உமி எரிபொருளாகவும், பொதி கட்டுவதற்கும், உரம் போன்றவை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

19. கீழ்க்கண்டவற்றுல் கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுப் பொருள் எது.

A) கோதுமை

B) வரகு

C) சாமை

D) அரிசி

விளக்கம்: அரிசி கலோரி மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

20. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்___________

A) தாய்லாந்து

B) கியூபா

C) பிலிப்பைன்ஸ்

D) இந்தியா

விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்(IRRI) பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் IRRIஆகும்.

21. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம்__________

A) பன்னாட்டு வேளாண் ஆராய்ச்சி கழகம்

B) பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

C) பன்னாட்டு சுற்று ஆய்வு மையம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்(IRRI) பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல் ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் IRRIஆகும்.

22. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்களில் சரியானதைக் கண்டறி.

1) வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை நீக்கி வாழ்வாதாரங்கள் மற்றும் ஊட்டச் சத்துக்களை மேம்படுத்துவது.

2) உலகிலுள்ள எல்லா IR நெல் வகைகளும் நெல் கலப்பினப் பயிர் பெருக்கத் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்து வெளியிடுவது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

23. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ள அரிசி ரகங்களின் எண்ணிக்கை______________

A) 800

B) 820

C) 834

D) 843

விளக்கம்: இன்றுவரை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமானது 843 அரிசி ரகங்களை உற்பத்தி செய்து,77 நாடுகளில் வெளியிட்டுள்ளது.

24. அற்புத அரிசி என்றழைக்கப்படுவது அரிசி வகை______________

A) IR8

B) IR30

C) IR36

D) IR20

விளக்கம்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் 1960-களின் துவக்கத்தில் IR8 எனும் உயர்விளைச்சல் குட்டை ரக நெல் வகையை உருவாக்கியது. பஞ்சத்தைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றியதால் இது ‘அற்புத அரிசி’ என அனைவராலும் போற்றப்பட்டது.

25. அதிகப் பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு திறன் கொண்ட அரைக்குட்டை நெல் ரகம்______________

A) IR8

B) IR30

C) IR36

D) IR20

விளக்கம்: IR36 இன்னொரு குறிப்பிடத்தகுந்த அதிகப் பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு திறன் கொண்ட அரைக்குட்டை நெல் ரகம். இந்த ரகம் உயர்விளைச்சல் மூலம் ஆசியக் குடும்பங்களில் முக்கிய உணவான அரிசியின் விலையை மலிவாக்கியது. IRRI-ன் பன்னாட்டு மரபணு வங்கி 1,17,000-க்கும் அதிகமான நெல் வகைகளைச் சேகரித்து வைத்துள்ளது. இதில் பாரம்பரிய நெல் வகைகளும், அவற்றின் உறவுடைய வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படாத நெல் வகைகளும் அடங்கும்.

26. செழுமை பிறை என்ற பகுதியில் கீழ்க்கண்ட எந்த தாவரம் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

A) நெல்

B) கோதுமை

C) மக்காச்சோளம்

D) கேழ்வரகு

விளக்கம்: கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள் செழுமை பிறை பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டியம் சுமார் 7,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆந்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

27. அதிகமாக பயிரிடப்படும் டிரிட்டிக்கம் ஏஸ்டியம் என்பது ஒரு__________ரகம்.

A) அரிசி

B) வரகு

C) சாமை

D) கோதுமை

28. கோதுமை அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்கள்__________

A) ஆந்திரப்பிரதேசம்

B) மத்தியப்பிரதேசம்

C) ஹரியானா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள் செழுமை பிறை பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டியம் சுமார் 7,500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. ஆந்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

29. கீழ்க்கண்டவற்றுள் கோதுமையின் பயன்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) கோதுமை தென் இந்தியாவில் முக்கிய உணவாக உள்ளது.

B) கோதுமை மாவு ரொட்டி மற்றும் பிற அடுமனை பொருட்கள் தயாரிக்க ஏற்றது.

C) மைதா என்றழைக்கப்படும் நார்ச்சத்து அற்ற பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு பரோட்டா, ரொட்டி மற்றும் அடுமனை பொருட்களைத் தயாரிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

D) முளைகட்டிய கோதுமை மதுபானம், ஊட்டச்சத்து பானங்கள் போன்றவை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாகும்.

விளக்கம்:கோதுமை வட இந்தியாவில் முக்கிய உணவாக உள்ளது.

30. புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானிய வகை___________

A) கரும்பு

B) நெல்

C) மக்காச் சோளம்

D) கம்பு

விளக்கம்: மக்காச்சோளம் புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.

31. இந்தியாவில் மக்காச்சோளம் அதிகளவு உற்பத்தி செய்யும் மாநிலம்___________

A) மத்தியப்பிரதேசம்

B) இமாச்சலப் பிரதேசம்

C) பஞ்சாப்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மக்காச்சோளம் புதிய உலகிலிருந்து தோன்றி வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.

32. மக்காச்சோள பொரியின் பெரும்பகுதி___________திசுவால் ஆனது.

A) மென்மையான கருவூன்திசு

B) சைலம் கருவூன்திசு

C) கடினமான திசு

D) புளோயம் திசு

விளக்கம்: சோளத்தில் மென்மையான மற்றும் கடினமான கருவூண்திசுக்கள் உள்ளன. மக்காச்சோளப்பொரியின் பெரும்பகுதி மென்மையான கருவூண்திசுவாலானது. இதைச் சூழ்ந்து கடினக் கருவூண்திசு உள்ளது.

33. மதுபானம் தயாரிக்கும் ஆலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுவது___________

A) கோதுமை

B) கேழ்வரகு

C) கரும்பு

D) மக்காச்சோளம்

விளக்கம்: உற்பத்தி செய்யப்படும் பெரும்பான்மை மக்காச்சோளம் உணவை விடத் தீவனமாகவே பயன்படுகிறது. மக்காச்சோள நீர்ப்பாகு குழந்தைகளுக்கான உணவுத்தயாரிப்பில் பயன்படுகின்றது. மக்காச்சோளம் மதுபானம் தயாரிக்கும் ஆலைகளில் மூலப்பொருளாகும்.

34. பொருத்துக:

A) பொய்தானியம் – 1. ராகிமால்ட் ஊட்டச்சத்துப் பானம் தயாரிக்க

B) குளுட்டன் – 2. புரோபயாட்டிக் பானங்கள் தயாரிக்க

C) கம்பு – 3. கீனோபோடியம் கினோவா

D) கேழ்வரகு – 4. புரத பசையற்ற தானிய வகை

A) 1 2 3 4

B) 1 2 4 3

C) 3 4 2 1

D) 4 3 2 1

விளக்கம்:

A) பொய்தானியம் – 1. கீனோபோடியம் கினோவா

B) குளுட்டன் – 2. புரத பசையற்ற தானிய வகை

C) கம்பு – 3. புரோபயாட்டிக் பானங்கள் தயாரிக்க

D) கேழ்வரகு – 4. ராகிமால்ட் ஊட்டச்சத்துப் பானம் தயாரிக்க

35. கீனோபோடியம் கினோவா என்பது கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சார்ந்தது.

A) மால்வேசி

B) ரூபியேசி

C) சொலானேசி

D) அமராந்தேசி

விளக்கம்: பொய் தானியம் எனும் சொல் புல் குடும்பத்தைச் சாராத தாவரங்களிலிருந்து பெறப்பட்டு, உண்ணப்படும் தானியங்களைக் குறிக்கிறது எ.கா. கீனோபோடியம் கினோவா உண்மையில் இது அமராந்தேசி குடும்பத்தைச் சார்ந்த கீனோபோடியம் கினோவா எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. குளுட்டன் அற்ற முழுதானிய கார்போஹைட்ரேட்டும், முழுமையான புரதமும் உடையது. மேலும் 6,000 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது.

36. கீழ்க்கண்ட சிறுதானிய வகைகளுல் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பு வகை____________

A) ஜியா மேய்ஸ்

B) பெனிசிட்டம் அமெரிக்கானம்

C) டிரிட்டிக்கம் ஏஸ்டியம்

D) எல்லுசின் கோரகனா

விளக்கம்: பெனிசிட்டம் அமெரிக்கானம் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பு வகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாகக் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.

37. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கேழ்வரகு – 1. சொர்கம் வல்கேர்

B) சோளம் – 2. சிட்டேரியா இடாலிக்கா

C) சாமை – 3. எல்லுசின் கோரகனா

D) தினை – 4. பானிக்கம் சுமத்ரன்ஸ்

A) 3 1 4 2

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கேழ்வரகு – 1. எல்லுசின் கோரகனா

B) சோளம் – 2. சொர்கம் வல்கேர்

C) சாமை – 3. பானிக்கம் சுமத்ரன்ஸ்

D) தினை – 4. சிட்டேரியா இடாலிக்கா

38. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் வகை_________

A) எல்லுசின் கோரகனா

B) சொர்கம் வல்கேர்

C) பானிக்கம் சுமத்ரன்ஸ்

D) சிட்டேரியா இடாலிக்கா

விளக்கம்: கேழ்வரகு (எல்லுசின் கோரகனா) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வெகு காலத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட பயிர். இது கால்சியம் நிறைந்தது.

39. நொதி பானங்கள் தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுவது__________

A) சொர்கம் வல்கேர்

B) பானிக்கம் சுமத்ரன்ஸ்

C) சிட்டேரியா இடாலிக்கா

D) எல்லுசின் கோரகனா

விளக்கம்: இந்தியாவின் பல தெற்கு மலைப்பகுதிகளில் ஒரு முக்கிய உணவாக இது பயன்படுத்தப்படுகிறது. கேழ்வரகு கஞ்சியாகவோ, கூழாகவோ உண்ணப்படுகிறது. ராகிமால்ட் ஒரு பிரபலமான ஊட்டச்சத்துப் பானமாகும். கேழ்வரகு நொதி பானங்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

40. சோளம் கீழ்க்கண்ட எந்த பகுதியிலிருந்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

A) ஆஸ்திரிலேயா

B) ஐரோப்பா

C) ஆப்பிரிக்கா

D) வட அமெரிக்கா

விளக்கம்: சோளம் ஆப்பிரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் முக்கிய சிறுதானியங்களில் சோளமும் ஒன்று. கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது.

41. நொதி சாராயப் பானங்களில் மூலப் பொருளாக பயன்படுவது_____________

A) சொர்கம் வல்கேர்

B) பானிக்கம் சுமத்ரன்ஸ்

C) சிட்டேரியா இடாலிக்கா

D) எல்லுசின் கோரகனா

விளக்கம்: கோழி, பறவைகள், பன்றிகள் மற்றும் கால்நடைகளுக்குச் சோளம் (சொர்கம் வல்கேர்) தீவனமாகப் பயன்படுகிறது. நொதி சாராயப் பானங்களின் மூலப் பொருளாக உள்ளது.

42. இந்தியாவை தாயகமாகக் கொண்ட மிகச்சிறு தானிய வகை____________

A) சாமை

B) தினை

C) வரகு

D) கேழ்வரகு

விளக்கம்: பழமையான மிகச்சிறு தானியங்களில் சாமை ஒன்று. இது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இதன் சிற்றினப் பெயர் சுமத்திராவிலிருந்து சேகரிக்கப்பட்ட வகை மாதிரியின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதில் இரும்பு சத்து, நார்ச்சத்து போன்றவை அரிசியை விட அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

43. இரத்தச் சோகை, மலச்சிக்கல் மற்றும் இதர செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்து உதவும் தானிய வகை____________

A) சொர்கம் வல்கேர்

B) பானிக்கம் சுமத்ரன்ஸ்

C) சிட்டேரியா இடாலிக்கா

D) எல்லுசின் கோரகனா

விளக்கம்: சாமை(பானிக்கம் சுமத்ரன்ஸ்) அரிசியைப் போன்றே சமைக்கவும், அரைக்கவும், அடுமனை பண்டத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இது இரத்தச் சோகை, மலச்சிக்கல் மற்றும் இதர செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.

44. 6,000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தினை வகை_____________

A) சொர்கம் வல்கேர்

B) பானிக்கம் சுமத்ரன்ஸ்

C) சிட்டேரியா இடாலிக்கா

D) எல்லுசின் கோரகனா

விளக்கம்: இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தினை வகைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. தினையில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் B,C, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை மிகுந்துள்ளன.

45. இதயத்தைப் பலப்படுத்தவும் கண்பார்வையை மேம்படுத்தவும் பயன்படும் தினை வகை___________

A) சொர்கம் வல்கேர்

B) பானிக்கம் சுமத்ரன்ஸ்

D) எல்லுசின் கோரகனா

C) சிட்டேரியா இடாலிக்கா

விளக்கம்: தினை (சிட்டேரியா இடாலிக்கா) இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்பையை மேம்படுத்தவும் பயன்படுகிறது. தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையருக்குக் கொடுக்கப்படுகிறது.

46. மேற்கு ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட தினை வகை____________

A) சாமை

B) தினை

C) வரகு

D) கேழ்வரகு

விளக்கம்: வரகு மேற்கு ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. நார்சத்து, புரதம் மற்றும் கனிமங்கள் நிறைந்தது.

47. கீழ்க்கண்டவற்றுள் வரகினால் உண்டாகும் மருத்துவ பயன்களை கண்டறி.

A) மலச்சிக்கலைக் குணப்படுத்த

B) உடல் பருமனைக் குறைக்க

C) இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வரகு மாவாக அரைக்கப்பட்டுக் களியாக்கப்படுகின்றது. சிறுநீர் பெருக்கியாகவும், மலச்சிக்கலைக் குணப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

48. பல்சஸ் என்ற சொல் கீழ்க்கண்ட எந்த மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது.

A) கிரேக்கம்

B) சீரிஸ்

C) ஸ்பானிஸ்

D) இலத்தின்

விளக்கம்: ‘பல்சஸ்’ என்ற சொல் ‘அடர்ந்த சூப்’ எனப் பொருள்படும் இலத்தின் வார்த்தைகளான பல்ஸ் அல்லது பல்டிஸ் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. பருப்பு என்பது ஃபேபேஸி குடும்பங்களிலிருந்து பெறப்படும் விதைகள். இவை உலகிலுள்ள மக்களுக்குத் தேவையான தாவரசார் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வழங்குகின்றன.

49. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பருப்பு வகை____________

A) உளுந்து

B) துவரை

C) பாசிப்பயறு

D) கொண்டைக்கடலை

விளக்கம்: இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. தொன்மை தொல்தாவரவியல் சான்றுகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உளுந்து இருந்ததை உறுதி செய்கின்றன. இது வறண்ட இடங்களில் மானாவாரி பயிராகப் பயிரிடப்படுகிறது.

50. பொருத்துக:

A) பருப்பு வகைத் தாவரங்கள் – 1. மானாவாரி பயிர்

B) உளுந்து – 2. ஃபேபேஸி குடும்பம்

C) வரகு – 3. பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்

D) கொண்டைக்கடலை – 4. மேற்கு ஆசியா

A) 3 1 4 2

B) 2 1 3 4

C) 4 3 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

A) பருப்பு வகைத் தாவரங்கள் – 1. ஃபேபேஸி குடும்பம்

B) உளுந்து – 2. மானாவாரி பயிர்

C) வரகு – 3. பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்

D) கொண்டைக்கடலை – 4. மேற்கு ஆசியா

51. உலகளாவிய உளுந்து உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு____________

A) 40 சதவீதம்

B) 60 சதவீதம்

C) 80 சதவீதம்

D) 85 சதவீதம்

விளக்கம்: உலகளாவிய உளுந்து உற்பத்தியில் இந்தியா 80 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

52. தென்னிந்தியக் காலை சிற்றுண்டிகளில் உணவாகப் பயன்படும் பருப்பு வகைத் தாவரம்____________

A) துவரை

B) பாசிப்பயறு

C) கொண்டைக்கடலை

D) உளுந்து

விளக்கம்: உளுந்து விதைகள் முழுதாகவோ, உடைத்தோ, வறுத்தோ அல்லது மாவாக அரைத்தோ உண்ணப்படுகிறது. உளுந்துமாவு பிரபலமான தென்னிந்தியக் காலை சிற்றுண்டிகளில் உணவைத் தயாரிப்பதற்கான ஒரு முக்கியப் பொருளாக உள்ளது. உடைத்த உளுத்தம் பருப்பு இந்தியக் குழம்பு வகைகளில் தாளிக்கப் பயன்படுகிறது.

53. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) உளுந்து – 1. சிசர் எரேட்டினம்

B) துவரை – 2. விக்னா ரேடியேட்டா

C) பாசிப்பயறு – 3. கஜானஸ் கஜன்

D) கொண்டைக்கடலை – 4. விக்னோ முங்கோ

A) 3 1 4 2

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) உளுந்து – 1 விக்னோ முங்கோ

B) துவரை – 2. கஜானஸ் கஜன்

C) பாசிப்பயறு – 3. விக்னா ரேடியேட்டா

D) கொண்டைக்கடலை – 4. .சிசர் எரேட்டினம்

54. தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகைத் தாவரம்______________

A) விக்னோ முங்கோ

B) கஜானஸ் கஜன்

C) விக்னோ ரேடியேட்டா

D) சிசர் எரேட்டினம்

விளக்கம்: தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை துவரை ஆகும். இது மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.

55. பாசிப்பயிறு இந்தியாவில் தோன்றியது என்பதற்கான தொல்லியல் சான்று கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் கிடைத்துள்ளது.

A) ஆந்திரப் பிரதேசம்

B) மத்தியப் பிரதேசம்

C) கர்நாடகா

D) மகாராஸ்டிரா

விளக்கம்: பாசிப்பயறு இந்தியாவில் தோன்றியது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் மகாராஷ்டிரா, மாநிலத்தில் கிடைக்கப்பெற்றன. இது மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

56. பாரம்பரியமாக தோல் பராமரிப்புக்கான ஒப்பனைப் பொருளாக பயன்படுத்துப்படும் பயறு வகை தாவரம்______________

A) விக்னோ முங்கோ

B) கஜானஸ் கஜன்

C) விக்னோ ரேடியேட்டா

D) சிசர் எரேட்டினம்

விளக்கம்: பாசிப்பருப்பு தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவான பொங்கலில் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. வறுத்துத் தோல் நீக்கப்பட்ட உடைத்த அல்லது முழுப் பயிறு பிரபலமான சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மாவு பாரம்பரியமாகத் தோல் பராமரிப்புக்கான ஒப்பனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

57. இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்ட பருப்பு வகைத் தாவரம்_______________

A) விக்னோ முங்கோ

B) கஜானஸ் கஜன்

C) விக்னோ ரேடியேட்டா

D) சிசர் எரேட்டினம்

விளக்கம்: கொண்டைக்கடலை மேற்கு ஆசியாவில் தோன்றியது. மேலும் இந்தியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே பயிரிடப்பட்டது. மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.

58. கொண்டைக்கடலை உயர் மதிப்புடைய உணவூட்டப்பொருளாக பயன்படுத்த காரணம் அதிலுள்ள____________யே காரணமாகும்.

A) புரதம்

B) அமினோ அமிலம்

C) செரிமானத்தன்மை

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கொண்டைக்கடலையிலுள்ள புரதம், அமினோ அமிலம், அதன் செரிமானத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உயர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான உணவின் முக்கிய உபப்பொருளாக முளைகட்டிய கடலை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

59. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) உருளைக்கிழங்கு – 1. மாஞ்சி ஃபெரா இண்டிகா

B) வெண்டைக்காய் – 2. குக்குமிஸ் சடிவஸ்

C) வெள்ளரி – 3. சொலானம் டியூபரோசம்

D) மா – 4. எபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்

A) 3 4 2 1

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 3 1 2 4

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) உருளைக்கிழங்கு – 1. சொலானம் டியூபரோசம்

B) வெண்டைக்காய் – 2. எபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்

C) வெள்ளரி – 3. குக்குமிஸ் சடிவஸ்

D) மா – 4. மாஞ்சிஃபெரா இண்டிகா

60. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) உருளைக்கிழங்கு – 1. மால்வேசி

B) வெண்டைக்காய் – 2. அனகார்டியேசி

C) வெள்ளரி – 3. குக்கர்பிட்டேசி

D) மா – 4. சொலானேசி

A) 3 4 2 1

B) 1 2 3 4

C) 4 1 3 2

D) 3 1 2 4

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) உருளைக்கிழங்கு – 1. சொலானேசி

B) வெண்டைக்காய் – 2. மால்வேசி

C) வெள்ளரி – 3. குக்கர்பிட்டேசி

D) மா – 4. அனகார்டியேசி

61. உருளைக்கிழங்கு முதன் முதலில் தோன்றிய மலைப்பகுதி___________

A) பெரு

B) பொலிவியா

C) A,B இரண்டும்

D) இங்கிலாந்து

விளக்கம்: பெரு மற்றும் பொலிவியா உயர் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

62. தமிழகத்தில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்_____________

A) உத்திரப்பிரதேசம்

B) மேற்கு வங்கம்

C) பீகார்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: பெரு மற்றும் பொலிவியா உயர் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு தோன்றியது. இந்தியாவில் உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தென்னிந்திய மலைப்பகுதியில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலைத் தொடர்கள் உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

63. உருளைக்கிழங்கு விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னிந்திய மலைப்பகுதி____________

A) நீலகிரி

B) பழனி மலைத் தொடர்கள்

C) கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி

D) A,B இரண்டும்

64. நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான பொருட்களின் உற்பத்தியில் முக்கிய இடுப்பொருளாக பயன்படுவது_____________

A) சொலானம் டியூபரோசம்

B) ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்

C) குக்குமிஸ் சடிவஸ்

D) மாஞ்சிஃபெரா இண்டிகா

விளக்கம்: உருளைக்கிழங்கு வேகவைத்தோ வறுத்தோ, அடுமனையிலிட்டோ, சூப்புகளாகவோ, மசித்தோ அல்லது அப்பமாகவோ பயன்படுத்துப்படுகின்றது. நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான பொருட்களின் உற்பத்தியில் முக்கிய இடுப்பொருளாக உள்ளது.

65. வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட காய்கறி வகை______________

A) சொலானம் டியூபரோசம்

B) ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்

C) குக்குமிஸ் சடிவஸ்

D) மாஞ்சிஃபெரா இண்டிகா

விளக்கம்: வெண்டை வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தமிழத்தில் கோயம்பத்தூர், தர்மபரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.

66. தமிழகத்தில் வெண்டை அதிகமாகப் பயிரிடப்படும் மாவட்டங்கள் எவை__________

A) கோயம்புத்தூர்

B) தர்மபுரி

C) வேலூர்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வெண்டை வெப்பமண்டல ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அசாம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. தமிழத்தில் கோயம்பத்தூர், தர்மபரி, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.

67. இந்தியா முழுவதிலும் பயன்படுத்துப்படும் முக்கியமான கோடைக்கால காய்கறி வகை____________

A) சொலானம் டியூபரோசம்

B) ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்

C) குக்குமிஸ் சடிவஸ்

D) மாஞ்சிஃபெரா இண்டிகா

விளக்கம்: குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ், பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும். இந்தியா முழுவதிலும் பரவலாக வெள்ளரி பயிரிடப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளரி ஒரு முக்கியக் கோடைக்காலக் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் தோன்றிய இவ்வினம்,3,000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது.

68. குக்கர்பிட் என்பது கீழ்க்கண்ட எந்த வகை தாவரங்களை குறிக்கும் சொல்______________

A) வெள்ளரி

B) முலாம்

C) பூசணி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ், பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும்.

69. வெள்ளரி விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெயானது கீழ்க்கண்ட எதற்கு சிறந்ததாக உள்ளது______________

A) இதயம்

B) கல்லீரல்

C) மண்ணீரல்

D) மூலை மற்றும் உடல்

விளக்கம்: வெள்ளரி விதைகளிலிருந்து பெறப்பட்ட எண்ணெய் மூளை மற்றும் உடலுக்குச் சிறந்தது. மேலும் அதன் விதைப்பருப்பு பல்வேறு இனிப்பு தயாரிப்புகளில் பயன்படுகிறது.

70. கீழ்க்கண்டவற்றுள் குளிர்மண்டலத்தில் விளையும் பழங்களுடன் பொருந்தாதது.

A) ஆப்பிள்

B) பேரிக்காய்

C) ஊட்டி ஆப்பிள்

D) மா

71. கீழ்க்கண்டவற்றுள் வெப்ப மண்டலத்தில் விளையும் பழங்களுடன் பொருந்தாதது.

A) ஆப்பிள்

B) மா

C) பலா

D) வாழை

72. பொருத்துக:

A) மா – 1. இந்தியா முழுவதும்

B) வெண்டைக்காய் – 2. தெற்காசியா மற்றும் கிழக்கிந்தியா

C) வாழை – 3. வெப்பமண்டல ஆப்பிரிக்கா

D) வெள்ளரி – 4. தென்கிழக்கு ஆசியா

A) 3 4 2 1

B) 1 2 3 4

C) 4 1 3 2

D) 2 3 4 1

விளக்கம்:

A) மா – 1. தெற்காசியா மற்றும் கிழக்கிந்தியா

B) வெண்டைக்காய் – 2.வெப்பமண்டல ஆப்பிரிக்கா

C) வாழை – 3.தென்கிழக்கு ஆசியா

D) வெள்ளரி – 4.இந்தியா முழுவதும்

73. இந்தியாவின் முக்கிய மாம்பழ வகை____________

A) அல்போன்ஸா

B) பங்கனபள்ளி

C) மல்கோவா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும் கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத் கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் ஆகும்.

74. மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் இந்திய மாநிலங்கள்____________

A) ஆந்திரப்பிரதேசம்

B) பீகார்

C) குஜராத்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மா தெற்காசியாவைக் குறிப்பாகப் பர்மா மற்றும் கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது இந்தியாவின் தேசியப் பழமாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், குஜராத் கர்நாடகா ஆகியவை மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் மாநிலங்களாகும். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை அதிக மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டங்களாகும். அல்போன்ஸா, பங்கனபள்ளி, நீலம், மல்கோவா போன்றவை இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் ஆகும்.

75. மாம்பழம் அதிகமாகப் பயிரிடப்படும் தமிழக மாவட்டங்கள்____________

A) சேலம்

B) கிருஷ்ணகிரி

C) தர்மபுரி

D) மேற்கண்ட அனைத்தும்

76. மாம்பழத்தில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்துப் பொருள்___________

A) கால்சியம்

B) வைட்டமின்கள்

C) பீட்டா கரோட்டின்

D) இரும்புச் சத்து

விளக்கம்: மாம்பழம் இந்தியாவில் அதிகளவில் உட்கொள்ளப்படும் பழம். இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது பின் உணவுப் பண்டமாகவோ, பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டோ, உலர்த்திப் பாதுகாக்கப்பட்டோ, இந்திய உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

77. உலகளவில் வாழை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்______________

A) ஆந்திரப் பிரதேசம்

B) தெலுங்கானா

C) கர்நாடகா

D) தமிழ்நாடு

விளக்கம்: வாழை தென்கிழக்கு ஆசியாவில் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. வாழை உற்பத்தியில் தமிழ்நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது.

78. தமிழகத்தில் அதிகமாக பயிரிடப்படும் வாழை இரகங்கள்___________

A) செவ்வாழை

B) நேந்திரன்

C) கற்பூரவல்லி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: செவ்வாழை, நேந்திரன், கற்பூரவல்லி, பூவன், பேயன் ஆகியவை அதிகமாகப் பயிரிடப்படும் வாழை இரகங்களாகும்.

79. நொதிக்கவைக்கப்பட்ட வாழைப்பழச்சாறு கீழ்க்கண்ட எவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது____________

A) பீர்

B) வினிகர்

C) ஒயின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையாத வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இது நேரடியாக அல்லது சமைத்து வறுத்து, உலர வைத்து, வேகவைத்து உண்ணப்படுகிறது. பழம் பதப்படுத்தப்பட்டு மாவாக்கப்படுகிறது. மேலும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களான வாழைப்பழச்சாறு பீர், வினிகர், ஒயின் தயாரிக்கப்பயன்படுகிறது.

80. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) வாழை – 1. ப்ரூனஸ் டல்சிஸ்

B) பலா – 2. அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்

C) முந்திரி – 3. அட்ரோகார்ப்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ்

D) பாதாம் – 4. மியூசாபாரடிசியாகா

A) 3 4 2 1

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) வாழை – 1. மியூசாபாரடிசியாகா

B) பலா – 2. அட்ரோகார்ப்பஸ் ஹெட்டிரோஃபில்லஸ்

C) முந்திரி – 3. அனகார்டியம் ஆக்ஸிடெண்டேல்

D) பாதாம் – 4. ப்ரூனஸ் டல்சிஸ்

81. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) வாழை – 1. ரோசேசி

B) பலா – 2. அனகார்டியேசி

C) முந்திரி – 3. மியூசேசி

D) பாதாம் – 4. மோரேசி

A) 3 4 2 1

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) வாழை – 1. மியூசேசி

B) பலா – 2. மோரேசி

C) முந்திரி – 3. அனகார்டியேசி

D) பாதாம் – 4. ரோசேசி

82. இந்தியாவன் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பழ வகை___________

A) வாழை

B) பலா

C) மா

D) ஆப்பிள்

விளக்கம்: பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர் கன்னியாக்குமாரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பண்ரூட்டி கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச் சந்தை மையங்கள்.

83. பொருத்துக:

A) தேசியப்பழம் – 1. பனைமரம்

B) மாநிலப்பழம் – 2. மாம்பழம்

C) மாநிலமரம் – 3. பலாப்பழம்

D) சூரியகாந்தி எண்ணெய் – 4. நிறைவுறா கொழுப்பு அமிலம்

A) 3 4 2 1

B) 2 3 1 4

C) 4 3 2 1

D) 2 3 4 1

விளக்கம்:

A) தேசியப்பழம் – 1. மாம்பழம்

B) மாநிலப்பழம் – 2. பலாப்பழம்

C) மாநிலமரம் – 3. பனைமரம்

D) சூரியகாந்தி எண்ணெய் – 4. நிறைவுறா கொழுப்பு அமிலம்

84. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான பலாச் சந்தைகள்______________

A) சேலம்

B) பண்ரூட்டி

C) கோயம்புத்தூர்

D) B,C இரண்டும்

விளக்கம்: பலா இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது தமிழ்நாட்டின் மாநிலப்பழம் தமிழ் நாட்டில் கடலூர் கன்னியாக்குமாரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பண்ரூட்டி கோயம்புத்தூர் போன்ற இடங்கள் முக்கியச் சந்தை மையங்கள்.

85. முந்திரியின் பிறப்பிடம்_____________

A) சீனா

B) ஜப்பான்

C) பிரேசில்

D) கனடா

விளக்கம்: முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

86. 16-ம் நூற்றாண்டில் முந்திரி இந்தியாவிற்குள் நுழைய முக்கிய காரணமானவர்கள்_____________

A) போர்ச்சக்கீசியர்கள்

B) டச்சக்காரர்கள்

C) டேனியர்கள்

D) பிரெஞ்சுக்காரர்கள்

விளக்கம்: முந்திரி பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

87. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கொய்யா – 1. பைகஸ் கேரிகா

B) பப்பாளி – 2. ப்யூனில்லா கிராண்டம்

C) மாதுளை – 3. கேரிக்கா பப்பாயா

D) அத்தி – 4. சிடியம் குவாஜீவா

A) 3 4 2 1

B) 1 2 3 4

C) 4 3 2 1

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கொய்யா – 1. சிடியம் குவாஜீவா

B) பப்பாளி – 2. கேரிக்கா பப்பாயா

C) மாதுளை – 3. ப்யூனில்லா கிராண்டம்

D) அத்தி – 4. பைகஸ் கேரிகா

88. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) கொய்யா – 1. மோரேசி

B) பப்பாளி – 2. ப்யூனிக்கேசி

C) மாதுளை – 3. கேரிக்கேசி

D) அத்தி – 4. மிர்டேசி

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 3 4

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) கொய்யா – 1. மிர்டேசி

B) பப்பாளி – 2. கேரிக்கேசி

C) மாதுளை – 3. ப்யூனிக்கேசி

D) அத்தி – 4. மோரேசி

89. பொருத்துக:

பொதுப்பெயர் பயன்படும் பகுதி

A) கொய்யா – 1. கனி, நடுத்தோல் மற்றும் உட்தோல்

B) பப்பாளி – 2. கனி நடுத்தோல்

C) மாதுளை – 3. சதைப்பற்றான பூத்தளம்

D) அத்தி – 4. சூல்காம்புத்திசு (ஏரில்)

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் பயன்படும் பகுதி

A) கொய்யா – 1. கனி, நடுத்தோல் மற்றும் உட்தோல்

B) பப்பாளி – 2. கனி நடுத்தோல்

C) மாதுளை – 3. சூல்காம்புத்திசு (ஏரில்)

D) அத்தி – 4. சதைப்பற்றான பூத்தளம்

90. சரியான இணையற்றதைக் காண்க: (பேரிச்சம்)

A) பொதுப்பெயர் – பேரிச்சம்

B) தாவரவியல் பெயர் – ஃபோனிக்ஸ் டேசிடைலிஃபெரா

C) குடும்பம் – மால்வேசி

D) பயன்படும் பகுதி – கனித்தோல்

விளக்கம்:

A) பொதுப்பெயர் – பேரிச்சம்

B) தாவரவியல் பெயர் – ஃபோனிக்ஸ் டேசிடைலிஃபெரா

C) குடும்பம் – அரிகேசி

D) பயன்படும் பகுதி – கனித்தோல்

91. கீழ்க்கண்டவற்றுள் மத்தியத் தரைக்கடலைப் பிறப்பிடமாகக் கொண்டது__________

A) முந்திரி

B) பாதாம்

C) கரும்பு

D) பேரிச்சம்

விளக்கம்: பாதாம் மத்தியத் தரைக்கடல் பகுதியின் மத்தியக் கிழக்கு பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் பாதாம் விளைவிக்கப்படுகின்றது.

92. உயர் அடர்வு கொழுப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்க பயன்படுவது_____________

A) முந்திரி

B) பாதாம்

C) கரும்பு

D) பனை

விளக்கம்: பாதாம் பருப்பு நேரடியாகவோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகின்றது. பாதாம் உயர் அடர்வு கொழுப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.

93. கீழ்க்கண்டவற்றுள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை தயாரிக்க பயன்படுவது_____________

A) முந்திரி

B) பனை

C) கரும்பு

D) B,C இரண்டும்

விளக்கம்: சர்க்கரை என்பது உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படுத்தக்கூடிய இனிப்புச் சுவையுடைய, கரையக்கூடிய கார்போஹைட்ரேட்டின் பொதுவான பெயராகும். கரும்பு மற்றும் பனையில் காணப்படுகின்ற சர்க்கரை திறம்படப் பிரித்தெடுப்பதற்கு ஏற்றதாக உள்ளதால் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை தயாரிக்கப் பயன்படுகிறது.

94. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கரும்பு – 1. அராகிஸ் ஹைபோஜியா

B) சர்க்கரைத் துளசி – 2. சக்காரம் அஃபிசினாரம்

C) பனை – 3. ஸ்டீவியா ரிபௌடியானா

D) வேர்க்கடலை – 4. பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கரும்பு – 1. சக்காரம் அஃபிசினாரம்

B) சர்க்கரைத் துளசி – 2. ஸ்டீவியா ரிபௌடியானா

C) பனை – 3. பொராசஸ் ஃபிளாபெல்லிஃபெர்

D) வேர்க்கடலை – 4. அராகிஸ் ஹைபோஜியா

95. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) கரும்பு – 1. பேபேசி

B) சர்க்கரைத் துளசி – 2. அரிகேசி

C) பனை – 3. போயேசி

D) வேர்க்கடலை – 4. அஸ்டிரேசி

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) கரும்பு – 1. போயேசி

B) சர்க்கரைத் துளசி – 2. அஸ்டிரேசி

C) பனை – 3. அரிகேசி

D) வேர்க்கடலை – 4. பேபேசி

96. தமிழ்நாட்டில் கரும்பு பயிரிடப்படாத மாவட்டம்_____________

A) நீலகிரி

B) தஞ்சாவூர்

C) கன்னியாகுமரி

D) A.C இரண்டும்

விளக்கம்: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கரும்பு விளைவிக்கப்படுகின்றது.

97. தற்போது பயிரிடப்படும் கரும்பு ரகமானது கீழ்க்கண்ட எந்த இரு ரகங்களைக் கொண்டு மேம்படுத்தப்பட்டது.

A) சக்காரம் ஆஃபிசினாரம்

B) சக்காரம் ஸ்பான்டேனியம்

C) சக்காரம் சொலானிசிபோரம்

D) A,B இரண்டும்

விளக்கம்: தற்போது பயிரிடப்படுகின்ற கரும்பு நியூகினியாவிலுள்ள காட்டு ரகமான சக்காரம் ஆஃபிசினாரம் மற்றும் இந்தியாவிலுள்ள சக்காரம் ஸ்பான்டேனியத்துடன் அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பலமுறை பிற்கலப்பு செய்ததன் மூலம் பரியமித்தது.

98. வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் மூலப்பொருளாக இருப்பது____________

A) சர்க்கரை வள்ளிக்கிழங்கு

B) சர்க்கரைத் துளசி

C) கரும்பு

D) பனை

விளக்கம்: வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சகணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.

99. எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குவது___________

A) சர்க்கரைத் துளசி

B) கரும்பு

C) பனை

D) வெல்லக்கழிவுப் பாகு

விளக்கம்: வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் கரும்பு மூலப்பொருளாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உற்பத்தி செய்யும் ஆலைகள், மதுபான ஆலைகள், லட்சகணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளின் ஆதாரமாகக் கரும்பு துணை புரிகின்றது. கரும்புச்சாறு ஒரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். வெல்லக்கழிவுப் பாகு எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருளாக விளங்குகிறது.

100. கூற்று (i): ஸ்டீவியா என்பது ஸ்டீவியா ரிபௌடியானா இலைகளிலிருந்து எடுக்கப்படும், சர்க்கரைக்கு மாற்றான ஒரு இனிப்பாகும்.

கூற்று (ii): இது கலோரிகளற்றது. சர்க்கரையை விட 200 மடங்கு அதிகம் இனிப்பானது. ஸ்டீவியாவின் இனிப்புக்கு ஸ்டீவியோசைட் எனும் வேதி பொருளே காரணமாகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

101. ஸ்டீவியா என்னும் கலோரிகளற்ற இனிப்புப் பொருளானது கீழ்க்கண்ட எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது_____________

A) கனடா

B) பிரேசில்

C) ரஷ்யா

D) சீனா

விளக்கம்: ஸ்டீவியா பிரேசில் மற்றும் பராகுவேயைப் பிறப்பிடமாகக் கொண்டது. இமாச்சல பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது.

102. நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல்நலன் பேணுபவரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனிப்புப் பொருள்_____________

A) கரும்பு

B) பனை

C) சர்க்கரை துளசி

D) வெல்லக்கழிவுப் பாகு

விளக்கம்: சர்க்கரை துளசி மிகவும் பிரபலமான இயற்கை இனிப்பாகவும், வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல்நலன் பேணுபவரால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

103. தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளரக்கூடிய மரம்____________

A) மாமரம்

B) தென்னைமரம்

C) தேக்குமரம்

D) பனைமரம்

விளக்கம்: பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது.

104. ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியா போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்ட மரம்______________

A) பனைமரம்

B) மாமரம்

C) தென்னைமரம்

D) தேக்குமரம்

விளக்கம்: பனை ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. இம்மரம் தமிழகம் முழுவதும், குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது.

105. பனைமரத்தின் பயன்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) கருப்பட்டி/கருப்புக்கட்டி தயாரிக்க அதன் மஞ்சரி அச்சிலிருந்து வெளியேறும் பதநீர் கரைசல் சேகரிக்கப்படுகிறது.

B) மஞ்சரியை வெட்டுவதிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர் ஆரோக்கியமற்ற பானமாகப் பயன்படுகிறது.

C) பதநீர் பதப்படுத்தப்பட்டு பனை வெல்லமாகவோ அல்லது புளிக்க வைத்துக் கள்ளாகவோ பெறப்படுகிறது.

D) இதன் கருவூண்திசு புத்துணர்ச்சி தரும் கோடைக்கால உணவாக பயன்படுகிறது. முளைவிட்ட விதைகளில் உள்ள நீளமான கருவினைச் சூழ்ந்து காணப்படும் சதைப்பற்றான செதில் இலை உண்ணக்கூடியது.

விளக்கம்: மஞ்சரியை வெட்டுவதிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர் ஆரோக்கியமானப் பானமாகப் பயன்படுகிறது.

106. அத்தியாவசியமான எண்ணெய்க் குறித்தக் கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.

A) அத்தியாவசியமான எண்ணெய்கள் அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணம் கொண்ட எண்ணெய்கள் காற்றுடன் கலக்கும்போது ஆவியாவதில்லை.

B) அத்தியாவசியமான எண்ணெய்க்கு ஒரு தாவரத்தின் எந்தப் பகுதியும் மூல ஆதாரமாக இருக்கலாம். எ.கா. புக்கள், கனிகள், தரைகீழ்த்தண்டு

C) தாவர எண்ணெய்கள் அல்லது நிலைத்த எண்ணெய்கள் ஆவியாவதில்லை.

D) முழுவிதை அல்லது கருவூண்திசு தாவர எண்ணெய்க்கு மூல ஆதாரமாக உள்ளது.

விளக்கம்: அத்தியாவசியமான எண்ணெய்கள் அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய நறுமணம் கொண்ட எண்ணெய்கள் காற்றுடன் கலக்கும்போது ஆவியாகின்றன.

107. கூற்று (i): ஒற்றைச் செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்பநிலையில் திரவமாகவும், குறைந்த வெப்பநிலையில் திடமாகவும் மாறும். எ.கா. தேங்காய் எண்ணெய்

கூற்று (ii): பற்செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் அறைதிரவமாகவே இருக்கும். எ.கா. சோயாபீன் எண்ணெய்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: பற்செறிவுறா கொழுப்பு அமிலம் அறை வெப்ப நிலையிலும், குளிர்விக்கப்பட்டாலும் திரவமாகவே இருக்கும். எ.கா. சோயாபீன் எண்ணெய்.

108. ஒற்றைச் செறிவுறா மற்றும் பற்செறிவுறா கொழுப்பு அமிலங்கள் கலந்து காணப்படும் எண்ணெய் வகை_____________

A) எள் எண்ணெய்

B) தேங்காய் எண்ணெய்

C) தவிட்டு எண்ணெய்

D) A,C இரண்டும்

விளக்கம்: எள் எண்ணெய் மற்றும் தவிட்டு எண்ணெய்யில் ஒற்றைச் செறிவுறா மற்றும் பற்செறிவுறா கொழுப்பு அமிலங்கள் கலந்து காணப்படுகின்றன.

109. வேர்க்கடலையின் பிறப்பிடம்_________________

A) கியூபா

B) கனடா

C) சீனா

D) பிரேசில்

விளக்கம்: வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.

110. ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலயை அறிமுகப்படுத்தியவர்கள்_____________

A) போர்ச்சுகீசியர்கள்

B) டச்சுக்காரர்கள்

C) டேனியர்கள்

D) பிரெஞ்சுக்காரர்கள்

விளக்கம்: வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில், போர்ச்சுகீசியர்கள் ஆப்பிரிக்காவிற்கு நிலக்கடலையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயின் நாட்டவர்கள் பிலிப்பைன்ஸ் வழியாகத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்தியாவிற்கும் எடுத்துச் சென்றனர். இந்தியாவில் குஜராத், ஆந்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.

111. கீழ்க்கண்டவற்றுள் நிலக்கடலையின் பயன்களுல் தவறானதைக் கண்டறி:

1) நிலக்கடலை 90 சதவீதம் எண்ணெய்யைக் கொண்டுள்ளது.

2) நிலக்கடலைப் பருப்பு அதிக அளவில் பாஸ்பரஸ், வைட்டமின்கள் குறிப்பாகத் தயாமின், ரைபோபிளேவின் மற்றும் நியாசின்னைக் கொண்டுள்ளது.

3) இது ஒரு உயர் மதிப்புமிக்க சமையல் எண்ணெய் ஏனெனில் இதை உயர் வெப்பத்திற்குச் சூடேற்றும்போது புகையை வெளிவிடுவதில்லை மலிவுத்திறன் எண்ணெய் சோப் மற்றும் உயவுப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

A) 1 மட்டும் தவறு

B) 2, 3 மட்டும் தவறு

C) 1, 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: நிலக்கடலை 45 சதவீதம் எண்ணெய்யைக் கொண்டுள்ளது.

112. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) எள் எண்ணெய் – 1. காஃபியா அராபிகா

B) தென்னை – 2. கேமெல்லியா சைனென்சிஸ்

C) தேயிலை – 3. கோகோஸ் நியுசிபெரா

D) காஃபி – 4. செஸாமம் இண்டிகம்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) எள் எண்ணெய் – 1. செஸாமம் இண்டிகம்

B) தென்னை – 2. கோகோஸ் நியுசிபெரா

C) தேயிலை – 3. கேமெல்லியா சைனென்சிஸ்

D) காஃபி – 4. காஃபியா அராபிகா

113. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) எள் எண்ணெய் – 1. ரூபியேசி

B) தென்னை – 2. தியேசி

C) தேயிலை – 3. பெடாலியேஸி

D) காஃபி – 4. அரிக்கேசி

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) எள் எண்ணெய் – 1. பெடாலியேஸி

B) தென்னை – 2. அரிக்கேசி

C) தேயிலை – 3. தியேசி

D) காஃபி – 4. ரூபியேசி

114. பொருத்துக:

பொதுப்பெயர் பூர்விகம்

A) எள் எண்ணெய் – 1. வெப்பமண்டல எத்தியோப்பி

B) தென்னை – 2. ஆப்பிரிக்கா

C) தேயிலை – 3. பசிபிக் தீவு

D) காஃபி – 4. சைனா

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பொதுப்பெயர் பூர்விகம்

A) எள் எண்ணெய் – 1. ஆப்பிரிக்கா

B) தென்னை – 2. பசிபிக் தீவு

C) தேயிலை – 3. சைனா

D) காஃபி – 4. வெப்பமண்டல எத்தியோப்பி

115. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று வறண்டநிலப் பயிராகும்___________

A) நெல்

B) கரும்பு

C) எள்

D) தேயிலை

விளக்கம்: செஸாமம் இண்டிகம் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாக் கொண்டது. எள் ஒரு வறண்ட நிலப்பயிராகப் பயிரிடப்படுகிறது. 2017-2018ல் மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் இந்தியாவின் அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்கள். தென்னிந்தியக் கலாசாரத்தில் இது ஒரு ஆரோக்கியமான எண்ணெய்யாகச் சமையலிலும், மருத்துவத்துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

116. எள் எண்ணெயின் பயன்களுல் பொருந்தாதது எது.

A) எள் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது.

B) குறைந்த தரமுள்ள எண்ணெய் சோப் தயாரிப்பிலும், பெயிண்ட் தொழிற்சாலைகளில் உயவுப் பொருளாகவும், விளக்கெரிக்கவும் பயன்படுகிறது.

C) இந்தியாவில் நறுமணப்பொருட்களில் பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய்களில் இது அடிப்படை எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது.

D) உலக நாடுகள் முழுவதும் எள் விதையிலான சிற்றுண்டிகள் பிரபலமாக உள்ளன.

விளக்கம்: இந்தியா முழுவதும் எள் விதையிலான சிற்றுண்டிகள் பிரபலமாக உள்ளன.

117. இந்தியாவில் தென்னை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்_______________

A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) கேரளா

D) குஜராத்

விளக்கம்: தென்னையின் பூர்விகம் பசிபிக் தீவுப்பகுதிகள் ஆகும். கேரளா, தமிழ்நாடு இந்தியாவின் மிகுந்த உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.

118. தேங்காய் எண்ணெய் கீழ்க்கண்ட எவற்றில் பயன்படுகிறது____________

A) இரப்பர்

B) செயற்கை ரெசின்கள்

C) உயவுப்பொருட்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இரப்பர், செயற்கை ரெசின்கள், உயவுப்பொருட்கள், விமான நிறுத்தத்திரவங்கள், துவைக்கும் சோப் போன்றவைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.

119. ஆல்கஹால் அற்ற பானங்களின் முக்கிய பணி_____________

A) மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுதல்

B) சிறுநீர் பெருக்கி

C) தானியியங்கி நரம்பு மண்டலத்தை தூண்டுதல்

D) A,B இரண்டும்

விளக்கம்: ஆல்கலாய்டு உள்ளதால் எல்லா ஆல்கஹால் அற்ற பானங்களும் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுபவையாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளன. இந்த அத்தியாயத்தின் பாகத்தில் தேனீர், காஃபி, கோக்கோ என்ற மூன்று பிரபலமான ஆல்கஹால் அற்ற பானங்களைப் பற்றி கற்கலாம்.

120. பொருத்துக:

பயிர் வகை விளையுமிடம்

A) நெல் – 1. குஜராத்

B) கோதுமை – 2. மத்தியப் பிரதேசம்

C) மக்காச் சோளம் – 3. உத்திரப் பிரதேசம்

D) கம்பு – 4. டெல்டாப் பகுதி

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 3 4 1

விளக்கம்:

பயிர் வகை விளையுமிடம்

A) நெல் – 1. டெல்டாப் பகுதி

B) கோதுமை – 2. உத்திரப் பிரதேசம்

C) மக்காச் சோளம் – 3. மத்தியப் பிரதேசம்

D) கம்பு – 4. குஜராத்

121. சரியாகப் பொருந்தாததைக் கண்டறி.

பருப்பு வகைத் தாவரம் முதன்மை மாநிலம்

A) உளுந்து – உத்திரப்பிரதேசம்

B) துவரை – மகாராஷ்டிரா

C) பாசிப்பயிறு – மத்தியப் பிரதேசம்

D) கொண்டைக்கடலை – தமிழ்நாடு

விளக்கம்:

பருப்பு வகைத் தாவரம் முதன்மை மாநிலம்

A) உளுந்து – உத்திரப்பிரதேசம்

B) துவரை – மகாராஷ்டிரா

C) பாசிப்பயிறு – மத்தியப் பிரதேசம்

D) கொண்டைக்கடலை – மத்தியப் பிரதேசம்

122. பொருத்துக:

காய்கறி மற்றும் பழம் – முதன்மை மாநிலம்

A) உருளைக்கிங்கு – 1. தமிழ்நாடு

B) வெண்டைக்காய் – 2. உத்திரப் பிரதேசம்

C) வாழை – 3. ஆந்திரப் பிரதேசம்

D) மா – 4. அசாம்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 4 1 3

விளக்கம்:

காய்கறி மற்றும் பழம் – முதன்மை மாநிலம்

A) உருளைக்கிங்கு – 1. உத்திரப் பிரதேசம்

B) வெண்டைக்காய் – 2. அசாம்

C) வாழை – 3. தமிழ்நாடு

D) மா – 4. ஆந்திரப் பிரதேசம்

123. பொருத்துக:

A) தென்னை – 1. மேற்குவங்காளம்

B) தேயிலை – 2. கர்நாடகா

C) சணல் – 3. கேரளா

D) காஃபி – 4. அசாம்

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 1 2 4 3

D) 2 4 1 3

விளக்கம்:

A) தென்னை – 1. கேரளா

B) தேயிலை – 2. அசாம்

C) சணல் – 3. மேற்குவங்காளம்

D) காஃபி – 4. கர்நாடகா

124. நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கப் நாம் பருக வேண்டியது______________

A) தென்னை

B) தேயிலை

C) காஃபி

D) கோகோ

விளக்கம்: தேயிலை இந்தியாவின் அனைத்துப்பிரிவு மக்களின் மிகச்சிறந்த பிரபலமான புத்துணர்வு பானமாகும். பசுமைத் தேயிலையை தினமும் குடித்தால் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

125. இந்திய இஸ்லாமியத் துறவியான பாபா பதான் என்பவரால் ஏமனிலிருந்து மைசூர் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பானம்____________

A) இளநீர்

B) தேயிலை

C) காஃபி

D) கோகோ

விளக்கம்: காஃபியா அராபிகா வணிகக் காஃபியின் தலையாய மூலப்பொருட்களாகும். இந்திய இஸ்லாமியத் துறவி பாபா பதான் என்பவர் காஃபியை ஏமனிலிருந்து மைசூர் பகுதிக்கு அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் கர்நாடகா காஃபியின் மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகும்.

126. இந்தியாவில் காஃபியின் மிகப்பெரிய நுகர்வோராக செயல்படும் மாநிலம்______________

A) கர்நாடகா

B) குஜராத்

C) அசாம்

D) தமிழ்நாடு

விளக்கம்: தமிழ்நாடு இந்தியாவில் காஃபியின் மிகப்பெரிய நுகர்வோர் மாநிலமாக உள்ளது.

127. காஃபியின் பயன்களுல் பொருந்தாததைக் கண்டறி:

A) காஃபியின் அசிட்டைல்கோலைன் எனும், நரம்பிடைக் கடத்தியைச் சுரக்கச் செய்கிறது.

B) இது செயல்திறனை குறைக்கிறது.

C) கொழுப்படைத்த கல்லீரல் நோய், சிர்ரோசிஸ் (கல்லீரல் இழைநார் நோய்), புற்றுநோய்களைக் குறைக்கப் பயன்படுகிறது.

D) இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது.

விளக்கம்: இது செயல்திறனை அதிகரிக்கிறது.

128. வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்ட பானம்___________

A) தேயிலை

B) தென்னை

C) காஃபி

D) கோகோ

விளக்கம்: கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) ‘கடவுள்களின் உணவு’ எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.

129. கோகோ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம்___________________

A) கர்நாடகா

B) குஜராத்

C) கேரளா

D) தெலுங்கானா

விளக்கம்: கோகோ வெப்பமண்டல அமெரிக்கப்பகுதியை பூர்விகமாகக் கொண்டது. தியொபுரொமா என்ற சொல் (தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு) ‘கடவுள்களின் உணவு’ எனும் பொருள் தரும். இந்தியாவில் கேரளா மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாகவும், அதை அடுத்துக் கர்நாடகாவும் உள்ளன.

130. கீழ்க்கண்டவற்றுள் கோகோவின் பயன்களுல் சரியானதைக் கண்டறி.

1) மிட்டாய் தொழிற்சாலைகளில் முக்கியமாகப் பயன்படுத்துப்படுகிறது.

2) சத்து பானங்களின் முக்கியமான கலவைப் பொருளாகவும் இருக்கிறது.

3) கோகோ தயாரிப்புகள் நார்சத்து, கனிமங்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்து இருப்பதால் புற்றுநோய், இதயத்தமனி நோய்கள், முன்முதிர்வு வராமலும் தடுக்கிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

131. இந்தியாவிற்கு கடல் பாதையைக் கண்டறியக் முதன்மைக் காரணமாக இருந்த நறுமணப் பொருள்____________

A) ஏலக்காய்

B) மிளகு

C) மஞ்சள்

D) மிளகாய்

விளக்கம்: பல்லாயிரம் ஆண்டுகளாக நறுமணப்பொருட்கள் உலகமெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெங்காயமும் பூண்டும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே உபயோகபடுத்தப்பட்டதற்குப் பதிவுகள் உள்ளன. பெரும்பாலான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள், குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக் கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.

132. நறுமணப்பொருட்களுக்காக இந்தியாவிற்கு பயணங்கள் மேற்கொண்டவர்கள்______________

A) டேனியர்கள்

B) ஸ்பானியர்கள்

C) போர்த்துகீசியர்கள்

D) B,C இரண்டும்

விளக்கம்: பெரும்பாலான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும் வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள், குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக் கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.

133. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) ஏலக்காய் – 1. கேப்சிகம் அன்னுவம், கே.ஃப்ருட்டிசென்ஸ்

B) கரு மிளகு – 2. பைப்பர் நைக்ரம்

C) மஞ்சள் – 3. குர்குமா லாங்கா

D) மிளகாய் – 4. எலிட்டரியா கார்டோமோமம்

A) 4 2 3 1

B) 3 4 1 2

C) 1 2 4 3

D) 2 4 1 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) ஏலக்காய் – 1. எலிட்டரியா கார்டோமோமம்

B) கரு மிளகு – 2. பைப்பர் நைக்ரம்

C) மஞ்சள் – 3. குர்குமா லாங்கா

D) மிளகாய் – 4. கேப்சிகம் அன்னுவம், கே.ஃப்ருட்டிசென்ஸ்

134. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க.

A) ஏலக்காய் – 1. ரூபியேசி

B) கரு மிளகு – 2. பைப்பரேசி

C) மஞ்சள் – 3. ஜிஞ்ஜிபெரேசி

D) மிளகாய் – 4. சொலானேசி

விளக்கம்:

A) ஏலக்காய் – 1. ஜிஞ்ஜிபெரேசி

B) கரு மிளகு – 2. பைப்பரேசி

C) மஞ்சள் – 3. ஜிஞ்ஜிபெரேசி

D) மிளகாய் – 4. சொலானேசி

135. பொருத்துக:

A) தியொபுரொமா – 1. ஏலக்காய்

B) நறுமணப்பொருட்களின் அரசி – 2. கடவுள்களின் உணவு

C) நறுமணப்பொருட்களின் அரசன் – 3. மஞ்சள் நிறத்திற்கு காரணம்

D) குர்குமின் – 4. கரு மிளகு

A) 4 2 3 1

B) 3 4 1 2

C) 1 2 4 3

D) 2 1 4 3

விளக்கம்:

A) தியொபுரொமா – 1. கடவுள்களின் உணவு

B) நறுமணப்பொருட்களின் அரசி – 2. ஏலக்காய்

C) நறுமணப்பொருட்களின் அரசன் – 3. கரு மிளகு

D) குர்குமின் – 4. மஞ்சள் நிறத்திற்கு காரணம்

136. பொருத்துக:

A) ஏலக்காய் – 1. தென் அமெரிக்கா

B) கரு மிளகு – 2. தெற்காசியா

C) மஞ்சள் – 3. தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

D) மிளகாய் – 4. மேற்குத் தொடர்ச்சி மலை

A) 4 2 3 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 4 1 3

விளக்கம்:

A) ஏலக்காய் – 1. தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

B) கரு மிளகு – 2. மேற்குத் தொடர்ச்சி மலை

C) மஞ்சள் – 3. தெற்காசியா

D) மிளகாய் – 4. தென் அமெரிக்கா

137. மருத்துவத்தில் தூண்டியாகவும், அபானவாயு நீக்கியாகவும் பயன்படும் நறுமணப்பொருள்_______________

A) ஏலக்காய்

B) கருமிளகு

C) மஞ்சள்

D) மிளகாய்

விளக்கம்: இதன் விதைகள் மகிழ்விக்கும் நறுமணம், வெதுவெதுப்பான பண்புடன், லேசான காரச்சுவையும் கொண்டவை. மருத்துவத்தில் தூண்டியாகவும், அபானவாயு நீக்கியாகவும் பயன்படுகிறது. வாய் நறுமணமூட்டியாகவும் பயன்படுகிறது.

138. இந்தியாவின் கருந்தங்கம் என்றழைக்கப்படுவது_____________

A) ஏலக்காய்

B) கருமிளகு

C) மஞ்சள்

D) மிளகாய்

விளக்கம்: இது இந்தியாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. மிளகு இந்தியாவின் மிக முக்கியமான நறுமணப்பொருட்கள். இது நறுமணப்பொருட்களின் அரசன், அந்தியாவின் கருந்தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

139. மிளகின் காரத்தன்மைக்கு காரணம்_____________

A) அல்கலாய்டு ரெசின்

B) அல்கலாய்டு பாஸ்பட்டேஸ்

C) அல்கலாய்டு அல்கைல்

D) அல்கலாய்டு பைபர்

விளக்கம்: மிளகின் பண்பான காரத்தன்மைக்கு அதிலுள்ள அல்கலாய்டு பைப்பரின் காரணமாகும். கருமிளகு மற்றும் வெண்மிளகு என இருவகையான மிளகுகள் சந்தையில் கிடைக்கின்றன.

140. கீழ்க்கண்டவற்றுள் கரு மிளகின் பயன்______________

A) நறுமணத் தூண்டி

B) செரிப்பு மருந்து

C) மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்க

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சாஸ்கள், சூப்கள், குழம்புப்பொடி மற்றும் ஊறுகாய் தயாரிப்பில் மணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் நறுமணத் தூண்டியாக உமிழ்நீர், வயிற்றுச் சுரப்பிகளிலும், செரிப்பு மருந்தாகவும் உபயோகப்படுகிறது. மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

141. சர்வதேச அளவில் மஞ்சளுக்கான மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தையாக உள்ள மாவட்டம்_______________

A) சேலம்

B) கோவை

C) ஈரோடு

S) திருப்பூர்

விளக்கம்: மஞ்சள் மிக முக்கியமான நறுமணப்பொருட்களில் ஒன்று. இந்தியா மிகப் பெரிய மஞ்சள் உற்பத்தி, நுகர்வு, ஏற்றுமதி செய்யும் நாடாகும். தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சர்வதேச அளவில் மஞ்சளுக்கான மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையாக உள்ளது.

142. கீழ்க்கண்டவற்றுள் மஞ்சள் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி:

A) இதன் மஞ்சள் நிறத்திற்குக் காரணம் குர்குமின் என்ற செயற்கைப்பொருளாகும்.

B) குர்குமின் ஒரு நல்ல ஆண்டி-ஆக்ஸிடெண்ட் இது பல வகையான புற்றுநோயை எதிர்க்கும்.

C) இது வீக்க எதிர்ப்பி, சர்க்கரை நோய் எதிர்ப்பி, பாக்டீரியம் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, வைரஸ் எதிர்ப்பி செயல்பாடுகளைக் கொண்டது.

D) இரத்தக் குழாய்களில் தட்டையச்செல்களில் உறைதலைக் தடுப்பதன் மூலம் மாரடைப்பைத் தடுக்கிறது.

விளக்கம்: இதன் மஞ்சள் நிறத்திற்குக் காரணம் குர்குமின் என்ற வேதிப்பொருளாகும்.

143. கீழ்க்கண்டவற்றுள் ரெட் பெப்பர் என்று அழைக்கப்படுவது_____________

A) கரு மிளகு

B) ஏலக்காய்

C) மிளகாய்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது. ஆங்கிலத்தில் சில்லீஸ் என்றும், ரெட் பெப்பர் என்றும் பிரபலமாக அறியப்பட்டது. இந்தியா உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உள்ளது. கே. அன்னுவம், கே. ஃப்ருட்டிசென்ஸ் மிளகாயின் விளைவிக்கப்படும் முக்கிய சிற்றினங்களாகும்.

144. கீழ்க்கண்டவற்றுள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை____________

A) கே. அன்னுவம்

B) கே. ஃப்ருட்டிசென்சஸ்

C) கே. குர்குமா லங்கா

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கே. ஃப்ருட்டிசென்சஸை விடக் கே. அன்னுவம் குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது. இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை.

145. மிளகாய்களில் காணப்படும் செயல்படும் கலவைக் பொருள்___________

A) குர்குமின்

B) கேப்சைசின்

C) ஃப்ருட்டிசென்ஸ்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: கே. ஃப்ருட்டிசென்சஸை விடக் கே. அன்னுவம் குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது. இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை. கேப்சைசின் மிளகாகளில் காணப்படும் செயல்படும் கலவைக் கூறாகும். இது வலி நீக்கும் பண்பு கொண்டதால் வலி நீக்கிக் களிம்புகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

146. மிளகாயில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள்____________

A) வைட்டமின்கள் C

B) வைட்டமின்கள் A

C) வைட்டமின்கள் E

D) மேற்கண்ட அனைத்தும்

147. மிளகாயின்__________தன்மையை ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் மூலம் அளக்கப்படுகிறது.

A) வாழ்நாள் தன்மை

B) வளரும் தன்மை

C) காரத்தன்மை

D) நிறத்தன்மை

விளக்கம்: கேப்சைசின் மிளகாயின் காரச்சுவை அல்லது காட்டமாக இருப்பதற்குக் காரணம் மிளகாய்களின் காரத்தன்மை ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் மூலம் அளக்கப்படுகிறது.

148. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க. (மிளகாயின் காரத்தன்மை)

1) கரோலினா ரீப்பர் – 2,200,000

2) நாகா வைப்பர் – 1,349,000

3) கேய்னி பெப்பர் – 10000-லிருந்து 50000

A) 1, 2 மட்டும்

B) 1, 3 மட்டும்

C) 3 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

149. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க. (புளியின் தன்மை)

A) தாவரப்பெயர் – டாமெரின்டஸ் இண்டிகா

B) குடும்பம் – சீசல்பனியாய்டியே

C) பூர்விகம் – வெப்பமண்டல ஆப்பிரிக்கப்பகுதி

D) டாமரிண்டஸ் – இத்தாலிய மொழிச்சொல்

விளக்கம்:

A) தாவரப்பெயர் – டாமெரின்டஸ் இண்டிகா

B) குடும்பம் – சீசல்பனியாய்டியே

C) பூர்விகம் – வெப்பமண்டல ஆப்பிரிக்கப்பகுதி

D) டாமரிண்டஸ் – அரேபிய மொழிச்சொல்

150. டாமரிண்டஸ் என்ற அரேபியச் சொல்லுக்கு__________என்று பொருள்.

A) சீனாவின் பேரிச்சை

B) பிரேசிலின் பேரிச்சை

C) இந்தியாவின் பேரிச்சை

D) இலங்கையின் பேரிச்சை

விளக்கம்: புளி வெகு காலத்திற்கு முன்பிருந்தே ஆப்பிரிக்காவிலும் தெற்காசியாவிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘டாமரிண்டஸ்’ என்ற அரேபியச் சொல்,‘இந்தியாவின் பேரீச்சை’ (டமர் – பேரீச்சை, இண்டஸ் – இந்தியா) என்று பொருள்படும்.

151. பொருத்துக:

பூர்விகம் தாவரம்

A) மத்தியத் தரைக்கடல் – 1. மிளகாய்

B) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சிமலை – 2. மஞ்சள்

C) தெற்காசியா – 3. மிளகு

D) தென் அமெரிக்கா – 4. கடுகு, சீரகம்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 4 3

D) 2 4 1 3

விளக்கம்:

பூர்விகம் தாவரம்

A) மத்தியத் தரைக்கடல் – 1. கடுகு, சீரகம்

B) இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சிமலை – 2. மிளகு

C) தெற்காசியா – 3. மஞ்சள்

D) தென் அமெரிக்கா – 4. மிளகாய்

152. கீழ்க்கண்டவற்றுள் அவற்றின் பூர்வீகத்துடன் ஒப்பிட்டு சரியான இணையற்றதைக் காண்க.

A) வெங்காயம் – ஆப்கானிஸ்தான்

B) புளி – வெப்பமணடல ஆப்பிரிக்கா

C) தக்காளி – தென் அமெரிக்கா

D) உருளை – வட அமெரிக்கா

விளக்கம்:

A) வெங்காயம் – ஆப்கானிஸ்தான்

B) புளி – வெப்பமண்டல ஆப்பிரிக்கா

C) தக்காளி – தென் அமெரிக்கா

D) உருளை – பெரு மற்றும் பொலிவியா

153. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க. (பிறப்பிடம்)

1) வெண்டை – தென் இந்தியா

2) துவரை – ஆப்பிரிக்கா

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 2 இரண்டும் தவறு

D) 1, 2 இரண்டும் சரி

விளக்கம்:

1) வெண்டை – ஆப்பிரிக்கா

2) துவரை – தென் இந்தியா

154. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கொத்துமல்லி – 1. கோரியாண்ட்ரம் சட்டைவம்

B) சீரகம் – 2. கமினம் சாமினம். லி

C) வெந்தயம் – 3. டிரிரைகோநெல்லா ஃபீனம் கிரேகம் லி

D) இலவங்கம் – 4. யூஜினியா அரோமாட்டிகம்

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 3 4

D) 2 4 1 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கொத்துமல்லி – 1. கோரியாண்ட்ரம் சட்டைவம்

B) சீரகம் – 2. கமினம் சாமினம். லி

C) வெந்தயம் – 3. டிரிரைகோநெல்லா ஃபீனம் கிரேகம் லி

D) இலவங்கம் – 4. யூஜினியா அரோமாட்டிகம்

155. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) கொத்துமல்லி – 1. மிர்டேசி

B) வெங்காயம் – 2. ஏபியேசி

C) வெந்தயம் – 3. ஃபேபேசி

D) இலவங்கம் – 4. அமாரிலிடேசி

A) 4 3 2 1

B) 3 4 2 1

C) 1 2 3 4

D) 2 4 3 1

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) கொத்துமல்லி – 1. ஏபியேசி

B) வெங்காயம் – 2. அமாரிலிடேசி

C) வெந்தயம் – 3. ஃபேபேசி

D) இலவங்கம் – 4. மிர்டேசி

156. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காணக்.

A) பெருங்காயம் – ஃபெருலா அஸஃபோடிடா. லி

B) வெங்காயம் – அல்லியம் சீபா

C) சீரகம் – ஏபியேசி

D) பெருங்காயம் – மால்வேசி

விளக்கம்:

A) பெருங்காயம் – ஃபெருலா அஸஃபோடிடா. லி

B) வெங்காயம் – அல்லியம் சீபா

C) சீரகம் – ஏபியேசி

D) பெருங்காயம் – அம்பெல்லிஃபெரே (ஏபியேசி)

157. பொருத்துக:

நாரின் வகைகள் பயன்கள்

A) நெசவு நார் – 1. தொப்பிகள், கூடைகள்

B) தூரிகை நார் – 2. தலையணைகள் குஷன்கள்

C) பின்னல் நார் – 3. வலைகள் கயிறுகள் தயாரிக்க

D) திணிப்பு நார் – 4. துடைப்பம் செய்ய

A) 4 3 1 2

B) 3 4 1 2

C) 1 2 3 4

D) 2 4 3 1

விளக்கம்:

நாரின் வகைகள் பயன்கள்

A) நெசவு நார் – 1. வலைகள் கயிறுகள் தயாரிக்க

B) தூரிகை நார் – 2. துடைப்பம் செய்ய

C) பின்னல் நார் – 3. தொப்பிகள், கூடைகள்

D) திணிப்பு நார் – 4. தலையணைகள் குஷன்கள்

158. பொருத்துக:

நாரின் வகைகள் உதாரணம்

A) நெசவு நார் – 1. வைடெக்ஸ், லாண்டனா

B) தூரிகை நார் – 2. பருத்தி, சணல், சணப்பை

C) பின்னல் நார் – 3. கேலோடிராபிஸ்

D) திணிப்பு நார் – 4. துடைப்புற்கள்

A) 4 3 1 2

B) 3 4 1 2

C) 1 2 3 4

D) 2 4 1 3

விளக்கம்:

நாரின் வகைகள் உதாரணம்

A) நெசவு நார் – 1. பருத்தி, சணல், சணப்பை

B) தூரிகை நார் – 2. துடைப்புற்கள்

C) பின்னல் நார் – 3. வைடெக்ஸ், லாண்டனா

D) திணிப்பு நார் – 4. கேலோடிராபிஸ்

159. கீழ்க்கண்டவற்றுள் ஏபியேசி குடும்பத்தைச் சாராத நறுமணப்பொருட்களை கண்டறி.

A) கொத்துமல்லி

B) சீரகம்

C) பெருங்காயம்

D) வெங்காயம்

விளக்கம்: வெங்காயம் – அமாரிலிடேசி

160. கீழ்க்கண்டவற்றுள் மால்வேசி குடும்பத்தைச் சாராத தாவறத்தைக் கண்டறி.

A) பருத்தி

B) சணல்

C) செம்பருத்தி

D) இலவங்கம்

விளக்கம்: இலவங்கம்- மிர்டேசி

161. பருத்தியின் சிற்றினங்களுல் பொருந்தாததைக் காண்க.

A) கா. ஹிர்சூட்டம்

B) கா. பார்படென்ஸ்

C) கா. ஆர்போரிடம்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: இது உலகத்தின் மிகப்பழமையான, பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்று ஏறத்தாழ 8,000 ஆண்டுகளாகப் புது உலகிலும், பண்டைய உலகிலும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. கா.ஹிர்சூட்டம், கா.பார்படென்ஸ் ஆகியவை புதிய உலகச் சிற்றினங்களாகும். கா. ஆர்போரிடம், கா. ஹெர்பேசியம் ஆகிய இரண்டும் பண்டைய உலகச் சிற்றினங்களாகும்.

162. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தாததைக் கண்டறி.

A) பருத்தி – காஸிபியம் சிற்றினம்

B) சணல் – கார்கோரஸ் சிற்றினம்

C) தேங்காய் நார் – கோகோஸ் நியுசிபெரா

A) 1, 2 மட்டும் தவறு

B) 1 மட்டும் தவறு

C) 1, 3 மட்டும் தவறு

D) அனைத்தும் சரி

163. தேங்காய் நார் கீழ்க்கண்ட எந்த குடும்பத்தைச் சேர்ந்த நார்த்தாவரம்____________

A) மால்வேசி

B) ரூபியேசி

C) சொலானேசி

D) அரிகேசி

164. சணல் தாவரத்தை அவற்றின் சிற்றினத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியான இணையைக் கண்டறி.

1) கார்கோரஸ் கேப்சுலாரிஸ் – இந்தோ-பர்மா

2) கார்கோரஸ் ஒலிடோரியஸ் – ஆப்பிரிக்கா

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 2 இரண்டும் சரி

D) 1, 2 இரண்டும் தவறு

165. இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிப்பொருள்____________

A) பருத்தி

B) தேயிலை

C) சணல்

D) தேங்காய் நார்

விளக்கம்: இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாகும். நார்ப்பொருட்களில் ஒன்று சணல் தொழில் இந்தியாவின் தேசியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. சணல் இயற்கையான மறுசுழற்சி, செய்யக்கூடிய, மக்கக்கூடிய சுற்றுசூழலுக்கு உகந்த, பாதுகாப்பான பொதிகட்டும் பொருள்.

166. சணல் உற்பத்தியில் 75 சதவீதம்_____________க்கு பயன்படுகிறது.

A) காலுரைத் தயாரிக்க

B) பைகள் செய்ய

C) தலையணை செய்ய

D) A,B இரண்டும்

விளக்கம்: சணல் உற்பத்தியில் 75 சதவீதம் காலுரை தயாரிக்கவும், பைகள் செய்யவும் பயன்படுகிறது. போர்வைகள், கம்பளிப் போர்வைகள், திரைச்சீலைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சமீபகாலமாக நெசவு நாராகப் பயன்படுத்தப்படுகிறது.

167. அதிக தேங்காய்நார் உற்பத்தி செய்யும் இந்திய மாநிலங்கள்____________

A) குஜராத்

B) கேரளா

C) தமிழ்நாடு

D) B,C இரண்டும்

விளக்கம்: இந்தியாவும், ஸ்ரீலங்காவும் மிகுந்த தேங்காய்நார் உற்பத்தி செய்யும் நாடுகள். கேரளாவும், தமிழ்நாடும் இந்தியாவின் அதிகத் தேங்காய்நார் உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.

168. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) தேக்கு – 1. டயாஸ்பைரஸ் எபெனம்

B) தோதகத்தி – 2. டால்பெர்ஜியா லாட்டிபோலியா

C) கருங்காலி – 3. டெக்டோனா கிராண்டிஸ்

A) 3 2 1

B) 1 2 3

C) 2 1 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) தேக்கு – 1. டெக்டோனா கிராண்டிஸ்

B) தோதகத்தி – 2. டால்பெர்ஜியா லாட்டிபோலியா

C) கருங்காலி – 3. டயாஸ்பைரஸ் எபெனம்

169. தென்கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட மரக்கட்டை_____________

A) தேக்கு

B) தோதகத்தி

C) கருங்காலி

D) நூக்க மரம்

விளக்கம்: தென் கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்டது. அஸ்ஸாமில் காட்டுப்பயிராக அறியப்பட்டுள்ளது. வங்காளம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் வடமேற்கு இந்தியாவில் பயிரிடப்படுகிறது.

170. உலகின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்றாகக் பயன்படுபவை________

A) தோதகத்தி

B) கருங்காலி

C) நூக்க மரம்

D) தேக்கு

விளக்கம்: இது உலகத்தின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்று புதிதாக அறுக்கப்பட்ட வன்கட்டை தங்கநிற மஞ்சளிலிருந்து தங்கநிறப் பழுப்பாகவும், ஒளியில் வெளிப்படும் போது அடர் நிறமாகவும் மாறும். கரையான் மற்றும் பூஞ்சைகளின் எதிர்ப்பாற்றல் கொண்டதால் இது நீண்ட காலப் பயன்பாட்டிற்கு உகந்தது என்பது தெரிந்ததே.

171. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மரக்கட்டை வகை____________

A) தோதகத்தி

B) ஈட்டி

C) நூக்கமரம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தோதகத்தி ஈட்டி இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இது உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிஸா, மத்திய மேற்கு மற்றும் தென் இந்தியாவில் வளர்க்கப்படுகிறது.

172. நூக்கமரம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் பயன்படுகிறது.

A) ராணுவ வேன்கள்

B) கோயில் தேர்கள்

C) ரயில் தூக்கு கட்டைகள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இது நீராடி பயன்பாட்டிற்கு உகந்தது. மரச்சாமான்கள், ராணுவ வேன்கள், கோயில் தேர்கள், அலமாரிகள், ரயில் தூக்கு கட்டைகள், இசைக்கருவிகள், சுத்தியல் கைப்பிடிகள், காலணி அடிபுறங்கள், புகையிலைக்குழாய்கள் செய்யவும் பயன்படுகிறது.

173. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி.

1) தேக்கு – லேமியேசி

2) நூக்க மரம் – பேபேசி

3) கருங்காலி – மால்வேசி

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 2 இரண்டும் தவறு

D) 3 மட்டும் தவறு

விளக்கம்:

1) தேக்கு – லேமியேசி

2) நூக்க மரம் – பேபேசி

3) கருங்காலி – எபெனேசி

174. கீழ்க்கண்டவற்றுள் பியானோ விசைக்கருவிகள் செய்ய பயன்படும் மரவகை_____________

A) தேக்கு

B) ஈட்டி மரம்

C) நூக்க மரம்

D) கருங்காலி

விளக்கம்: வன்கட்டையானது சீராக்கப்படும் போது பளபளப்பான கருப்பாகவும் உலோகப் பளபளப்பிலும் இருக்கும். அது பியானோ விசைகள், கருவிகளின் கைப்பிடிகள், இசைக்கருவிகள், கைத்தடிகள், குடைக் கைப்பிடிகள், சாட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகிறது.

175. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) இரப்பர் – 1. அலோ வீரா

B) மருதாணி – 2. இண்டிகோ பெரா

C) இண்டிகோ – 3. லாசோனியா இனெர்மிஸ்

D) சோற்றுக்கற்றாழை – 4.ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 1 2 3 4

D) 2 4 1 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) இரப்பர் – 1. பிரேசிலியன்ஸிஸ்

B) மருதாணி – 2. லாசோனியா இனெர்மிஸ்

C) இண்டிகோ – 3. இண்டிகோ பெரா

D) சோற்றுக்கற்றாழை – 4. அலோ வீராஹீவியா

176. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) இரப்பர் – 1. யூஃபோர்பியேசி

B) மருதாணி – 2. லைத்ரேசி

C) இண்டிகோ – 3. அஸ்ஃபோடெலேசி

D) சோற்றுக்கற்றாழை – 4. பேபேசி

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 1 2 4 3

D) 2 4 1 3

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) இரப்பர் – 1. யூஃபோர்பியேசி

B) மருதாணி – 2. லைத்ரேசி

C) இண்டிகோ – 3. பேபேசி

D) சோற்றுக்கற்றாழை – 4. அஸ்ஃபோடெலேசி

177. பொருத்துக:

பொதுப்பெயர் பிறப்பிடம்

A) இரப்பர் – 1. பிரேசில்

B) மருதாணி – 2. வட ஆப்பிரிக்கா

C) இண்டிகோ – 3. இந்தியா

D) சோற்றுக்கற்றாழை – 4. சூடான்

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 1 2 3 4

D) 2 4 1 3

விளக்கம்:

பொதுப்பெயர் பிறப்பிடம்

A) இரப்பர் – 1. பிரேசில்

B) மருதாணி – 2. வட ஆப்பிரிக்கா

C) இண்டிகோ – 3. இந்தியா

D) சோற்றுக்கற்றாழை – 4. சூடான்

178. இரப்பரின் உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு__________சதவீதமாகும்.

A) 60

B) 70

C) 80

D) 90

விளக்கம்: இது பிரேசிலைப் பூர்விகமாகக் கொண்ட இது காலணிக் காலத்தில் பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு முக்கிய பணப்பயிராகவும் ஆனது உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு 90 சதவீதம் ஆகும். இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்துத் தமிழ்நாடு மிகப்பெரிய உற்பத்தி மாநிலமாக உள்ளது.

179. இரப்பரின் பயன்பாடுகளில் பொருந்தாததைக் காண்க.

A) டயர் மற்றும் மற்ற வாகனப்பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் 20 சதவீதம் இரப்பர் உற்பத்தியைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

B) காலனி, கம்பி மற்றும் கேபிள் சுற்றியுள்ள கடத்தாப்பொருள், மழைக்கோட்டுகள், வீடு மற்றும் மருத்துவமனைப் பொருள்கள், அதிர்வு தாங்கிகள், பெல்டுகள், விளையாட்டுப் பொருள்கள், அழிப்பான்கள், பசைகள், இரப்பர் பட்டைகள் போன்றவற்றின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது.

C) கடின இரப்பர் மின் மற்றும் வானொலி பொறியியல் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

D) அடர் மரப்பால கையுறைகள், பலூன்கள் மற்றும் கருத்தடைச் சாதனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

விளக்கம்: டயர் மற்றும் மற்ற வாகனப்பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் 70 சதவீதம் இரப்பர் உற்பத்தியைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

180. வல்கனைசேசன் முறையைக் கண்டுபிடித்தவர்_______________

A) சார்லஸ் வுட்

B) சார்லஸ் கூப்பர்

C) சார்லஸ் குட் இயர்

D) சார்லஸ் டவுன்

விளக்கம்: சார்லஸ் குட் இயர் 1839-ல் வல்கனைசேசனைக் கண்டுபிடித்தார். இரப்பர் பொருட்களில் உள்ள குறைகளை அதை 1,500உ-ல் சல்பருடன் அழுத்தத்தில் சூடாக்குவதன் மூலம் சரியாக்க முடியும் எனக் கண்டறிந்தார். இந்தச் செயல்முறை வல்கனைசேசன் எனப்பட்டது.

181. பொருத்துக:

A) வல்கன் – 1. பேப்பர் மாதிரி தயாரிப்பு

B) பேப்பர் – 2. நெருப்புக் கடவுள்

C) எகிப்தியர்கள் – 3. பேப்பைரஸ்

D) அராபியர்கள் – 4. காகிதம் தயாரிக்கும் கலை

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 2 3 1 4

D) 2 4 1 3

விளக்கம்:

A) வல்கன் – 1. நெருப்புக் கடவுள்

B) பேப்பர் – 2. பேப்பைரஸ்

C) எகிப்தியர்கள் – 3. பேப்பர் மாதிரி தயாரிப்பு

D) அராபியர்கள் – 4. காகிதம் தயாரிக்கும் கலை

182. வல்கனைசேசன் முறையில் முதன் முதலாக இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு_____________

A) 1860

B) 1863

C) 1867

D) 1869

விளக்கம்: வல்கன் என்ற பெயர் ரோம நெருப்புக் கடவுள் பெயரிலிருந்து கொடுக்கப்பட்டது. இந்த முறையால் முதன் முறையாக 1867-ல் திட இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் தான் நாம் சாலைகளில் அதிர்வின்றிப் பயணம் செய்கிறோம்.

183. முதன் முதலில் காகித உற்பத்தியைக் கண்டுபிடித்தவர்கள்_____________

A) கிரேக்கர்கள்

B) எகிப்தியர்கள்

C) அராபியர்கள்

D) சீனர்கள்

விளக்கம்: காகித உற்பத்தியானது ஒரு சீனக்கண்டுபிடிப்பு சீனர்கள் 105 பொ.ஆ.பி.ல் காகித மல்பெரி உள்மரப்பட்டையிலிருந்து காகிதத்தைக் கண்டுபிடித்தனர். அராபியர்கள் காகிதம் தயாரிக்கும் கலையைக் கற்று 750 பொ.ஆ.பி. வாக்கில் மேம்படுத்தும் வரை நீண்ட காலமாக அது சீனர்களின் பிரத்யேக உரிமையாக இருந்தது. அச்சுப்பதித்தல் கண்டறிந்த பின்பு காகிதத்திற்கான தேவை அதிகரிக்கிறது.

184. மரக்கூழ் தயாரிக்க பயன்படும் மரக்கட்டைகள்___________

A) மலை வேம்பு – மீலியா அசடிரக்டா

B) வெண்கடம்பு – நியோலாமார்கியா சைனென்சிஸ்

C) சவுக்கு – கேசுவரைனா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கட்டையானது கூழாக எந்திர மற்றும் வேதிமுறைகளால் கூழாக மாற்றப்படுகிறது. காகிதக்கூழ் தயாரித்த மீலியா அசடிரக்டா (மலை வேம்பு), நியோலாமார்கியா சைனென்சிஸ் (வெண்கடம்பு), கேசுவரைனா (சவுக்கு) ஆகியவற்றின் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

185. ரேயான் என்னும் செயற்கைப்பட்டு கீழ்க்கண்ட எந்தப் பொருள்களை தயாரிக்க அடிப்படைப் பொருளாக உள்ளது.

A) செல்லோபேன்

B) செல்லுலோஸ்

C) அசிட்டேட் பிலிம்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: ரேயான் அல்லது செயற்கைப்பட்டு, துணிகள், ஒளி ஊடுருவும் பிலிம்கள் (செல்லோபேன், செல்லுலோஸ் அசிட்டேட் பிலிம்கள்) நெகிழிகள் தயாரிப்பிற்கான அடிப்படைப் பொருளாகச் சுத்திகரிக்கப்பட்ட கரையும் கூழ் உபயோகபடுத்தப்படுகிறது.

186. பொருத்துக:

A) விஸ்கோஸ் – 1. ஆரஞ்சு சாயம்

B) ஹென்னா – 2. ரேயான் தயாரிப்பதற்கான பொதுவான முறை

C) அலாயின் – 3. மூப்படைந்த தோலை பொலிவாக்க

D) சோற்றுக் கற்றாழை – 4. குளுக்கோசைடுகளின் கலவை

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 2 3 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

A) விஸ்கோஸ் – 1. ரேயான் தயாரிப்பதற்கான பொதுவான முறை

B) ஹென்னா – 2. ஆரஞ்சு சாயம்

C) அலாயின் – 3. குளுக்கோசைடுகளின் கலவை

D) சோற்றுக் கற்றாழை – 4. மூப்படைந்த தோலை பொலிவாக்க

187. பண்டைய காலங்களில் சாயங்கள் இருந்ததற்கான அடையாளம்__________

A) சீனரகளின் சுவரோவியங்கள்

B) கீரேக்கர்களின் வண்ண ஓவியங்கள்

C) எகிப்தின் கல்லறை ஓவியங்கள்

D) அரேபியர்களின் கல்லறை ஓவியங்கள்

விளக்கம்: பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது.

188. அவுரி சாயங்கள் இந்தியாவில் இடம்பெற்றிருந்த இடங்கள்__________

A) குகை ஓவியங்கள்

B) பாறை ஓவியங்கள்

C) சுவரோவியங்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: பண்டைய எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருப்பதற்கான நம்பக்கூடிய பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவுரி, குங்குமப்பூ போன்றவற்றின் சாயங்கள் மம்மியைச் சுற்றிய சிமெண்ட்களில் காணப்படுகின்றன. இச்சாயம் இந்தியாவில் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது.

189. தற்போது இண்டிகோ பயிர்செய்யப்படும் இந்திய மாநிலங்கள்___________

A) பஞ்சாப்

B) தமிழ்நாடு

C) ஆந்திரப்பிரதேசம்

D) B,C இரண்டும்

விளக்கம்: இண்டிகோபெராடின்க்டோரியா இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்தியாவின் பல மாநிலங்களில் முன்பு வளர்க்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே வளர்க்கப்படுகிறது.

190. கூற்று (i): இண்டிகோபெராவின் பல சிற்றினங்களின் இலைகளிலிருந்து பெற்ற சாறுதான் பளபளப்பான அடர் நீலச் சாயமே இண்டிகோவாகும்.

கூற்று (ii): இண்டிகோபெரா தென்இந்தியாவின் கோவில் கலைகளிலும் நீண்டகாலமாக உபயோகத்திலுள்ளது. பருத்தி ரேயான் மற்றும் கம்பளிகளைச் சாயமேற்றவும் அச்சேற்றவும் பயன்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் தவறு

D) கூற்று i,ii இரண்டும் சரி

191. காந்தி சம்பாரன் சத்தியாகிரத்தை விவசாயிகளுக்கு ஆதராவாக துவங்கிய மாநிலம்_______________

A) பஞ்சாப்

B) குஜராத்

C) பீகார்

D) அகமதாபாத்

விளக்கம்: ஆங்கிலேயர் இந்தியாவில் பயிர் செய்தவற்றில் அவுரிதான் மிக முக்கியமான பணப்பயிர். உணவுப் பயிர்களுக்குப் பதிலாக அவுரியைப் பயிரிட விவசாயிகள் கட்டாயப் படுததப்பட்டதார்கள். காந்தி பீகாரை சேர்ந்த சம்பாரணில் விவசாயிக்கு ஆதரவாகச் சத்தியாகிரத்தை ஆரம்பித்தார். காந்தியால் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சத்தியாகிரகம் இதுதான் அரசு சம்பாரன் விவசாயிகள் மசோதா’வை ஏற்றுக்கொண்டது.

192. சோற்றுக்கற்றாழையின் எதிர்ப்பு தன்மை______________

A) பாக்டீரிய எதிர்ப்பு

B) ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு

C) பூஞ்சை எதிர்ப்பு

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கற்றாழை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குழைவுத்தன்மை, பாக்டீரிய எதிர்ப்பி, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமிநாசினி போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

193. பெர்ஃபியூம் என்ற சொல் கீழ்க்கண்ட எம்மொழிச் சொல்லிருந்து உருவானது_____________

A) கிரேக்கம்

B) அரேபிய

C) இலத்தீன்

D) ஃப்ரெஞ்ச்

விளக்கம்: பெர்ஃபியூம் என்ற சொல் ‘பெர்’ (வழி) மற்றும் ‘ஃபியூம்ஸ்’ (புகை) எனப் பொருள்படும் ஒரு இலத்தீன் சொற்களிலிருந்து உருவானது. இச்சொல் ‘புகைவழி’ எனப்படும். இது சமய விழாக்களில் நறுமணக் கட்டைகளை எரிக்கின்ற பழம்பெரும் மரபைக் குறிக்கின்றது.

194. நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப் பயன்படும் தாவர பாகங்களைக் கண்டறி.

A) இலைகள்

B) மலர்கள்

C) பழங்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: நறுமண எண்ணெய்கள் இலைகள் (கறிவேப்பிலை, புதினா), மலர்கள் (ரோஜா, மல்லிகை), பழங்கள் (சிட்ரஸ், ஸ்டிராபெர்ரி), மரம் (சந்தனக்கட்டை, யூக்கலிப்டஸ்) போன்ற பல்வேறு தாவரப்பாகங்களில் காணப்படுகின்றது.

195. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) மல்லிகை – 1. ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்

B) ரோஜா – 2. சான்டலம் ஆல்பம்

C) சந்தன மரம் – 3. ரோசா டாமசீனா

A) 1 3 2

B) 3 2 1

C) 1 2 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) மல்லிகை – 1. ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்

B) ரோஜா – 2. ரோசா டாமசீனா

C) சந்தன மரம் – 3. சான்டலம் ஆல்பம்

196. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க

பொதுப்பெயர் குடும்பம்

1) மல்லிகை – 1. ஒலியேசி

2) ரோஜா – 2. மால்வேசி

3) சந்தன மரம் – 3. சான்டலேசி

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 1, 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

1) மல்லிகை – 1. ஒலியேசி

2) ரோஜா – 2. ரோசாசி

3) சந்தன மரம் – 3. சான்டலேசி

197. மல்லிகை மலரின் பண்புகளைப் பற்றியக் கருத்துகளுல் சரியானதைக் கண்டறி.

1) மலரிலிருந்து பெறப்படும் வாசனைத் திரவியங்களில் செம்பருத்திக்கு அடுத்த இடத்தில் மல்லிகை உள்ளது.

2) வணிக ரீதியாக வளர்க்கப்படும் ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் வடமேற்கு இமயமலை பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது.

3) தமிழ்நாட்டில் மதுரை, கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை ஆகியவை மல்லிகை வளர்ப்பு மையங்களாகும்.

4) ஒரு டன் மல்லிகை மலரிலிருந்து 2.5 முதல் 3 கிலோ நறுமண எண்ணெய் பெறப்படுகிறது. இது பூவின் மொத்த எடையில் 0.25 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.

A) 1 மட்டும் சரி

B) 1 2 மட்டும் சரி

C) 1, 2, 3 மட்டும் சரி

D) 2, 3, 4 மட்டும் சரி

விளக்கம்: மலரிலிருந்து பெறப்படும் வாசனைத் திரவியங்களில் ரோஜாவிற்கு அடுத்த இடத்தில் மல்லிகை உள்ளது.

198. மல்லிகை மலரின் நறுமணத்திற்கான காரணமான வேதிப்பொருள்_____________

A) ஜாஸ்மைன்

B) ஆல்பா டெர்பினியால்

C) பீட்டா டெர்பினியால்

D) A,B இரண்டும்

விளக்கம்: மதுரை மல்லியில் தடித்த இதழ்களையும், இதழ்களின் உயரத்திற்குச் சம அளவான காம்புகளையும், ஜாஸ்மைன் மற்றும் ஆல்பா டெர்பினியால் போன்ற வேதி பொருட்கள் இருப்பதால் தனித்துவமான நறுமணத்தினைக் கொண்டுள்ளது. இத்தகைய பண்பால் மதுரை மல்லி வேறு இடங்களிலுள்ள மல்லிகையிலிருந்து வேறுபடுகிறது. மதுரை மல்லி “மைசூர் மல்லிகைக்குப்” பிறகு புவிசார் குறியீடு வழங்கப்பெற்ற இரண்டாவது மல்லிகை இரகமாகும்.

199. கூற்று (i): ‘மதுரை மல்லி’ முதன் முரையாக புவிசார் குறியீடு பெற்ற ஒரு மல்லிகை ரகமாகும்.

கூற்று (ii): ‘மதுரை மல்லி’ க்கு அடுத்து இரண்டாவது புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை ரகம் மைசூர் மல்லி ஆகும்.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: ‘மைசூர் மல்லி’ முதன் முரையாக புவிசார் குறியீடு பெற்ற ஒரு மல்லிகை ரகமாகும். ‘மைசூர் மல்லி’ க்கு அடுத்து இரண்டாவது புவிசார் குறியீடு பெற்ற மல்லிகை ரகம் ‘மதுரை மல்லி’ ஆகும்.

200. கூற்று (i): 1000 கிராம் மலர்களிலிருந்து சராசரியாக 0.5 கிராமுக்குச் சற்றுக் குறைவாக எண்ணெய் கிடைக்கிறது.

கூற்று (ii): பினைல் எத்தில் ஆல்கஹால் மற்றும் பிற கலவைகள் சேர்ந்த பன்னீர் இனிப்பு வகைகள், நீர்ப்பாகுகள் மற்றும் மென்பானங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

201. பொருத்துக:

நறுமணமலர்கள் – பிறப்பிடம்

A) மல்லிகை – மத்தியக் கிழக்குப் பகுதி

B) ரோஜா – வடமேற்கு இமய மலைப்பகுதி

C) சந்தன மரம் – தென்கிழக்கு ஆசியா

A) 2 1 3

B) 1 2 3

C) 3 2 1

விளக்கம்:

நறுமணமலர்கள் – பிறப்பிடம்

A) மல்லிகை – வடமேற்கு இமய மலைப்பகுதி

B) ரோஜா – மத்தியக் கிழக்குப் பகுதி

C) சந்தன மரம் – தென்கிழக்கு ஆசியா

202. சந்தனக் கட்டையில் இருந்து மணம் வருவதற்கு காரணமான வேதிப்பொருள்_____________

A) விஸ்கோஸ்

B) ஹன்னா

C) அலாயின்

D) சான்டலால்

விளக்கம்: சந்தன மரக்கட்டையில் சான்டலால் உள்ளதால் மனமுள்ளதாக உள்ளது. இதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கபடுகிறது. மரச் சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் 4 – 5% வேறுபடுகின்றது. மலர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் (மலர் எடையில் 10-%) மரச்சீவல்களிலிருந்து பெறப்படும் எண்ணெயை விட (உலர் எடையில் 4 – 5%) அதிகமாகும்.

203. இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகள்________________

A) சித்தா மருத்துவம்

B) அறுவை சிகிச்சை

C) ஆயுற்வேத மருத்துவம்

D) AC இரண்டும்

204. சித்த மருத்துவக்குறிப்புகளை எழுதிய சித்தர்களின் எண்ணிக்கை______________

A) 12

B) 14

C) 16

D) 18

விளக்கம்: தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மிகவும் பிரபலமாக, பரவலாக நடைமுறை கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமுறையாகும். இது 18 சித்தர்கள் எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த 18 சித்தர்களின் கூட்டமைப்பு குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

205. பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ முறை____________

A) ஆயுர்வேத மருத்துவம்

B) அறுவை சிகிச்சை

C) சித்த மருத்துவம்

D) மேற்கொண்ட எதுவுமில்லை

விளக்கம்: சித்த மருத்துவம் முக்கியமாகப் பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மருத்துவமுறைப்படி, மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் காரணமானவை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உடல்நீர்மங்கள். இந்த உடல் நீர்மங்கள் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்.

206. சித்த மருத்துவம் பற்றியக் கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி:

1) சித்த மருத்துவத்தின் மருந்து மூலங்கள் தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற் பொருட்கள், தாதுக்கள் ஆகியவையாகும்.

2) இம்மருத்துவ முறையில் கரிமங்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இருக்கும் மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் உள்ளது.

3) இந்த முறையில் மருந்துகளின் ஆதாரமாகச் சுமார் 800 மூலிகைகள் பயன்படுத்துப்படுகின்றன.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: சித்த மருத்துவத்தின் மருந்து மூலங்கள் தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற் பொருட்கள், தாதுக்கள் ஆகியவையாகும். இம்மருத்துவ முறையில் கனிமங்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இருக்கும். மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் உள்ளது. இந்த முறையில் மருந்துகளின் ஆதாரமாகச் சுமார் 800 மூலிகைகள் பயன்படுத்துப்படுகின்றன.

207. ஆயர்வேத மருத்துவம் பற்றியக் கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.

A) ஆயர்வேதம் திருமாலிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது.

B) சரகா, சுஷ்சுதா, வாக்பட்டா ஆகியோரால் எழுதப்பட்ட செறிவடக்க ஏடுகளில் ஆயர்வேதத்திற்கான மூல ஆதார அறிவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

C) இம்முறையில் கூட ஆரோக்கியமான வாழ்க்கை சமநிலையிலுள்ள மூன்று உடல்நீர்மங்களான வாத, பித்த, கபத்தை அடிப்படையாக கொண்டது. இம்மருத்துவமுறை அதிக மூலிகைகளிலும் சில விலங்ககுகளுலிம் இருந்து மருத்துவ ஆதாரங்களைப் பெறுகின்றது.

D) ஆயர்வேத மூலிகைகளில் இமாலய மூலிகைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

விளக்கம்: ஆயர்வேதம் பிரம்மனிடமிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது.

208. இந்திய ஆயுர்வேதக் குணப்பாட நூல் கீழ்க்கண்ட எத்தனை மூலிகைகளைப் பட்டியலிடுகின்றது.

A) 400

B) 600

C) 800

D) 1200

209. இந்திய அரசால் பழங்குடிகளால் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆவணப்படுத்த அகில இந்திய ஒருங்கிணைந்த பழங்குடி உயிரியல் ஆய்வுத்திட்டம் எனும் திட்டத்தை தொடங்கிய அமைப்பு_______________

A) சுற்றுச்சூழல் அமைச்சகம்

B) உலக சுகாதார ஆணையம்

C) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

D) வனத்துறை அமைச்சகம்

விளக்கம்: மக்கள் மருத்துவமுறை இந்தியாவின் எண்ணற்ற கிராமபுற மற்றும் பழங்குடி இன மக்களின் ஒரு பாரம்பரிய வாய்மொழி மருத்துவமாக இருந்து வருகின்றது. இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் பழங்குடிகளால் பயன்படுத்தப்படும் மூலிகைகளை ஆவணப்படுத்த அகில இந்திய ஒருங்கிணைந்த பழங்குடி உயிரியல் ஆய்வுத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக மருத்துவப் பயன்பாடுள்ள ஏறக்குறைய 8,000 தாவரச் சிற்றினங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.

210. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பழங்குடியின மக்கள்______________

A) இருளர்கள்

B) மலையாளிகள்

C) குரும்பர்கள்

D) மேற்கண்ட அனைத்தும்.

விளக்கம்: தமிழ்நாட்டிலுள்ள முக்கிய பழங்குடி இனங்களான இருளர்கள், மலையாளிகள், குரும்பர்கள், பளியன்கள், காணிகள் ஆகியோர் அவர்களது மருத்துவ அறிவால் அறியப்பட்டவர்கள்.

211. கூற்று (i): இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளிலும் மருந்துகள் தயாரிக்க மூலிகைகளே ஆதாரமாக பயன்படுத்துகின்றன.

கூற்று (ii): தற்போது 10% மூலிகைகள் பயிரிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளிலும் மருந்துகள் தயாரிக்க மூலிகைகளே ஆதாரமாக பயன்படுத்துகின்றன. தற்போது 90% மூலிகைகள் பயிரிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது.

212. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கீழாநெல்லி – 1. குர்குமா லாங்கா

B) ஆடாதோடா – 2. ஜஸ்டிசியா ஆடாதோடா

C) நிலவேம்பு – 3. பில்லாந்தஸ் அமாரஸ்

D) மஞ்சள் – 4. ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா

A) 4 3 2 1

B) 3 2 4 1

C) 2 3 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) கீழாநெல்லி – 1. பில்லாந்தஸ் அமாரஸ்

B) ஆடாதோடா – 2. ஜஸ்டிசியா ஆடாதோடா

C) நிலவேம்பு – 3. ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா

D) மஞ்சள் – 4. குர்குமா லாங்கா

213. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) கீழாநெல்லி – 1. ஜிஞ்சிஃபெரேசி

B) ஆடாதோடா, நிலவேம்பு – 2. பில்லாந்தேசி

C) மஞ்சள் – 3. அக்காந்தேசி

A) 2 3 1

B) 3 2 1

C) 1 2 3

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) கீழாநெல்லி – 1. பில்லாந்தேசி

B) ஆடாதோடா, நிலவேம்பு – 2. அக்காந்தேசி

C) மஞ்சள் – 3. ஜிஞ்சிஃபெரேசி

214. கீழாநெல்லிப் பற்றிய தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) இத்தாவரம் அயணமண்டல அமெரிக்கப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது.

B) இத்தாவரம் இந்தியாவிலும் பிற வெப்பமண்டல நாடுகளிலும் இயல் தாவரம் போல் பரவியுள்ளது.

C) இது பயிரிடப்படுவதில்லை. மாறாகச் சமவெளிகளிலுள்ள ஈரமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது.

D) வனமல்லாத பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் பில்லாந்தஸ் மெட்ராஸ்பெட்டென்சிஸ் மருத்துவத் தாவரசந்தைகளில் கீழாநெல்லி எனும் பெயரில் விற்கப்படுகிறது.

விளக்கம்: இத்தாவரம் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது.

215. பொருத்துக:

A) கீழாநெல்லி – 1. மூச்சுக்குழலை விரிவடைய செய்தல்

B) நிலவேம்பு – 2. மஞ்சள் காமாலை

C) ஆடாதோடை – 3. கசப்புகளின் அரசன்

D) பெர்ஃபியூம் – 4. புகைவழி

A) 4 3 2 1

B) 3 2 4 1

C) 2 3 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

A) கீழாநெல்லி – 1. மஞ்சள் காமாலை

B) நிலவேம்பு – 2. கசப்புகளின் அரசன்

C) ஆடாதோடை – 3. மூச்சுக்குழலை விரிவடைய செய்தல்

D) பெர்ஃபியூம் – 4. புகைவழி

216. கல்லீரல் பாதுகாப்பிற்கு பயன்படும் மூலிகைத் தாவரம்_____________

A) கீழாநெல்லி

B) ஆடாதோடா

C) மஞ்சள்

D) வேம்பு

விளக்கம்: மஞ்சள் காமாலை நோய்க்கும் கல்லீரல் பாதுகாப்பிற்கும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட தாவரம் கீழாநெல்லி ஆகும். டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

217. ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படும் எதிர்ப்பொருள் கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

A) ஃபிலாந்தஸ் அமாரஸ்

B) ஜஸ்டிசியா ஆடாதோடா

C) குர்குமா லாங்கா

D) ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா

விளக்கம்: டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

218. ஆடாதோடா மூலிகைத்தாவரத்தின் பிறப்பிடம்_________________

A) இந்தியா

B) ஸ்ரீலங்கா

C) வடஅமெரிக்கா

D) A,B இரண்டும்

விளக்கம்: ஆடாதோடா இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் சிற்றினம் தமிழ்நாட்டில் இயற்கைச் சூழலில் வளரும் தாவரமாக அறியப்படவில்லை. ஆனால் உயிர் வேலியாகவும், கோவில்களைச் சுற்றியும் பரவலாக வளர்க்கப்படுகிறது.

219. தி கிங் ஆப் பிட்டர்ஸ் என அழைக்கப்படும் மூலிகைத்தாவரம்____________

A) ஃபிலாந்தஸ் அமாரஸ்

B) ஜஸ்டிசியா ஆடாதோடா

C) குர்குமா லாங்கா

D) ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா

220. கீழ்க்கண்டவற்றில் கல்லீரல் பாதுகாப்பியாக செயல்படுவது____________

A) கீழாநெல்லி

B) ஆடாதோடா

C) நிலவேம்பு

D) மஞ்சள்

விளக்கம்: நிலவேம்பு சக்தி வாய்ந்த கல்லீரல் பாதுகாப்பி என்பதால் கல்லீரல் நோய்களுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலவேம்பும் எட்டு மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப்படும் வடிநீர் மலேரியா, டெங்கு சிகிச்சையில் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது.

221. அமெரிக்காவின் மிசிசிப்பி மருத்துவ மையப் பல்கலைக்கழகத்திற்குக் காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளின் தன்மைக்காக காப்புரிமை வழங்கப்பட்ட ஆண்டு____________

A) 1990

B) 1991

C) 1993

D) 1995

விளக்கம்: அமெரிக்காவின் மிசிசிப்பி மருத்துவ மையப் பல்கலைக்கழகத்திற்குக் காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளின் தன்மைக்காக 1995ல் காப்புரிமை தரப்பட்டது. இந்தக் காப்புரிமை வாய்வழி மற்றும் மேற்பூச்சுப் பயன்பாடுகளுக்காக விற்பனை செய்ய மற்றும் விநியோகிப்பதற்கான ஒரு பிரத்யேக உரிமையை வழங்குகிறது.

222. பொருத்துக:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) துளசி – 1. ஏகில் மார்மிலாஸ்

B) நெல்லி – 2. அக்காலிஃபா இண்டிகா

C) குப்பைமேனி – 3. ஃபில்லாந்தஸ் எம்பிளிகா

D) வில்வம் – 4. ஆசிமம் டெனுயிஃபுளோரம்

A) 4 3 2 1

B) 3 2 4 1

C) 2 3 1 4

D) 2 1 4 3

விளக்கம்:

பொதுப்பெயர் தாவரவியல் பெயர்

A) துளசி – 1. ஆசிமம் டெனுயிஃபுளோரம்

B) நெல்லி – 2. ஃபில்லாந்தஸ் எம்பிளிகா

C) குப்பைமேனி – 3. அக்காலிஃபா இண்டிகா

D) வில்வம் – 4. ஏகில் மார்மிலாஸ்

223. பொருத்துக:

பொதுப்பெயர் குடும்பம்

A) துளசி – 1. ரூட்டேசி

B) நெல்லி – 2. யூஃபோர்பியேசி

C) குப்பைமேனி – 3. ஃபில்லாந்தேசி

D) வில்வம் – 4. லேமியேசி

A) 3 2 4 1

B) 2 3 1 4

C) 2 1 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

பொதுப்பெயர் குடும்பம்

A) துளசி – 1. லேமியேசி

B) நெல்லி – 2. ஃபில்லாந்தேசி

C) குப்பைமேனி – 3. யூஃபோர்பியேசி

D) வில்வம் – 4. ரூட்டேசி

224. பொருத்துக:

தாவரம் – பயன்படும் தாவரப் பகுதி

A) துளசி – 1. இலைகள்

B) நெல்லி – 2. இலைகளும் வேர்களும்

C) குப்பைமேனி – 3. கனி

D) பிரண்டை – 4. தண்டும் வேரும்

A) 3 2 4 1

B) 2 3 1 4

C) 2 1 4 3

D) 4 3 2 1

விளக்கம்:

தாவரம் – பயன்படும் தாவரப் பகுதி

A) துளசி – 1.இலைகளும் வேர்களும்

B) நெல்லி – 2. கனி

C) குப்பைமேனி – 3. இலைகள்

D) பிரண்டை – 4. தண்டும் வேரும்

225. பொருத்துக:

தாவரம் மருத்துவ பயன்கள்

A) துளசி – 1. குடல்வாழ் ஒட்டுண்ணிகளை அழிக்க

B) நெல்லி – 2. தோல் நோய்களை குணப்படுத்த

C) குப்பைமேனி – 3. செரிமானத்தை அதிகரிக்க

D) வில்வம் – 4. மலேரிய காய்ச்சலுக்கு வியர்வையூக்கி

A) 3 2 4 1

B) 2 3 1 4

C) 4 3 2 1

D) 2 1 4 3

விளக்கம்:

தாவரம் மருத்துவ பயன்கள்

A) துளசி – 1. மலேரிய காய்ச்சலுக்கு வியர்வையூக்கி

B) நெல்லி – 2. செரிமானத்தை அதிகரிக்க

C) குப்பைமேனி – 3. தோல் நோய்களை குணப்படுத்த

D) வில்வம் – 4. குடல்வாழ் ஒட்டுண்ணிகளை அழிக்க

226. கீழ்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க: (பிரண்டை)

A) தாவரவியல் பெயர் – சிசஸ் குவாட்ராங் குலாரிஸ்

B) குடும்பம் – ரூட்டேசி

C) பயன்படும் தாவரப் பகுதி – தண்டும் வேரும்

D) மருத்துவப் பயன் – எலும்பு முறிவை குணப்படுத்த

விளக்கம்:

A) தாவரவியல் பெயர் – சிசஸ் குவாட்ராங் குலாரிஸ்

B) குடும்பம் – வைட்டேசி

C) பயன்படும் தாவரப் பகுதி – தண்டும் வேரும்

D) மருத்துவப் பயன் – எலும்பு முறிவை குணப்படுத்த

227. அல்சிமியர் நோய் சிகிச்சைக்கு பயன்படும் மூலிகைத்தாவரம்____________

A) கீழாநெல்லி

B) ஆடாதோடா

C) நிலவேம்பு

D) மஞ்சள்

விளக்கம்: இது இரத்தக்குழாய் மூளைத்தடுப்புகளை கடந்து செல்லும் பண்புள்ளதால் அல்சிமியர் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த எதிர் ஆக்சிஜனேற்றியாகவும், புற்றுநோய் எதிர்ப்பியாகவும், அழற்சி எதிர்ப்பி, நீரிழிவு எதிர்ப்பி, பாக்டீரிய எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி போன்ற சக்தி வாய்ந்த பண்புகளைப் பெற்றுள்ளது. காயங்களைக் குணப்படுத்துவதற்கான பாரம்பரிய மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.

228. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க: (அபின்ஃகசகசா)

A) தாவரவியல் பெயர் – பப்பாவர் சாம்னிபெரம்

B) குடும்பம் – ரூட்டேசி

C) பிறப்பிடம் – தென்கிழக்கு ஐரோப்பா

D) பெறப்படும் தாவரம் பகுதி – பாப்பி தாவரத்தின் கனி

விளக்கம்:

A) தாவரவியல் பெயர் – பப்பாவர் சாம்னிபெரம்

B) குடும்பம் – பப்பாவரேசி

C) பிறப்பிடம் – தென்கிழக்கு ஐரோப்பா

D) பெறப்படும் தாவரம் பகுதி – பாப்பி தாவரத்தின் கனி

229. கூற்று (i): பாப்பி தாவரத்தின் கனிகளின் கசிவிலிருந்து ஓப்பியம் பாப்பி பெறப்படுகிறது.

கூற்று (ii): இது பாரம்பரியமாகத் தூக்கத்தைத் தூண்டுவதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டது. ஓப்பியத்திலிருந்து கிடைக்கப்பெறும் மார்ஃபின் ஒரு வலுவான வலிநிவாரணி என்பதால் அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

230. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையற்றதைக் காண்க: (கஞ்சாசெடி)

A) தாவரவியல் பெயர் – கன்னாபிஸ் சட்டைவா

B) குடும்பம் – கன்னாபியேசி

C) பிறப்பிடம் – பிரேசில்

D) செயலாக்க மூல மருந்து – THC

விளக்கம்:

A) தாவரவியல் பெயர் – கன்னாபிஸ் சட்டைவா

B) குடும்பம் – கன்னாபியேசி

C) பிறப்பிடம் – சீனா

D) செயலாக்க மூல மருந்து – THC

231. டிரான்ஸ்-டெட்ராஹைட்ரோகெனாபினாலின் மருத்துவ குனங்களுல் சரியானதைக் காண்க.

A) இது ஒரு சிறந்த வலிநிவாரணியாகவும் உயர் இரத்த அழுத்தத்தைத் குறைக்கும் மருந்தாகவும் உள்ளது.

B) கிளாக்கோமா எனப்படும் கண்களில் ஏற்படும் அழுத்தத்திற்குச் சிகிச்சையளிக்க THC பயன்படுத்தப்படுகிறது.

C) புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு ஏற்படும் குமட்டலைக் குறைப்பதில் THC பயன்படுத்தப்படுகிறது.

D) சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மையுடையதால் சுவாச நோய்கள், குறிப்பாக ஆஸ்துமாவிற்கு நிவாரணியாகப் பயன்படுகின்றது.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 1, 2, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

232. கூற்று (i): இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புத்துறை என்பது போதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மற்றும் அதன் நுண்ணறிவுப் பிரிவாகும்.

கூற்று (ii): மேலும் போதை மருந்து கடத்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும் பொறுப்பும் இத்துறைக்கு உள்ளது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

233. காளான்கள் என்பது பூஞ்சையின் உண்ணத்தகுந்த____________பகுதியாகும்.

A) தண்டு

B) இலை

C) மொட்டு

D) கனியுறுப்பு

விளக்கம்: காளான்கள் பூஞ்சையின் உண்ணக்கூடிய கனியுறுப்பு அதன் ஊட்டச்சத்து மதிப்பு மட்டுமல்ல, அதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையினால் காய்கறிகளில் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது.

234. வெள்ளைக்காய்கறி என்றழைக்கப்படுவது____________

A) காளான்கள்

B) முட்டைக்கோசு

C) காளிஃப்ளவர்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: வெள்ளை காய்கறி என்றும் காளான்கள் அழைக்கப்படுகின்றன. இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில் காளான் வளர்ப்பு பெருமளவில் நடைபெறுகிறது. காளான் வளர்ப்பு செயல்பாடுகள் உள்ளுர் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் துணைபுரிகின்றன.

235. காளான் வளர்ப்பு படிநிலைகள் பற்றியக் கருத்துக்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) உரமாகப் பயன்படுத்தப்படும் பழுத்த வைக்கோல், தங்க மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதை 2-10 அங்குல நீளத்தில் வெட்டிக் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும்.

B) வளர்ப்பிடம் சுத்தமாகவும், காற்றோட்டத்துடனும் இருத்தல் வேண்டும். மேலும் பூச்சிகள், பறவைகள் போன்றவைகள் நுழைவதைத் தடுக்கும் வண்ணம் ஜன்னல்கள் கம்பி வலையால் மூடப்பட வேண்டும்.

C) வளர்ப்பு அறையில் வித்து இடும் முன்னரும், பிற பைகளுக்கு மாற்றுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரும் 0.1% நியூவான் மற்றும் 5% பார்மலின் கலந்து தெளிக்க வேண்டும்.

D) காளான் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் வித்து தொற்றுநீக்கம் செய்யப்பட வேண்டும். வளர்ப்புப் பைகளில் 8 கிலோ ஈரமான வைக்கோலை நிரப்ப வேண்டும்.

விளக்கம்: உரமாகப் பயன்படுத்தப்படும் பழுத்த வைக்கோல், தங்க மஞ்கள் நிறத்தில் இருக்க வேண்டும். அதை 2-10 அங்குல நீளத்தில் வெட்டிக் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும்.

236. காளான் வளர்ப்பு படிநிலைகள் பற்றியக் கருத்துக்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) வித்திடும் நேரத்தில் நிலவும் வெப்பநிலை200C– 300C யும், ஈரப்பதம் 75-85% வரை இருக்கும்படி பராமரித்தல் வேண்டும்.

B) வளர் உறைகளை அகற்றும்போது சரியான முறையில் நீர் தெளித்து உலர் திட்டுக்கள் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளும் அவசியம் அதிகப்படியான நீர் பயன்பாட்டைத் தவிர்த்தல் நலம்.

C) இரண்டு பைகள் அல்லது தொகுதிகளுக்கு இடையே 50செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

D) காளான் குடைகள் 10-12 செ.மீ. அளவை எட்டும்போது, திருகிப் பறிக்க வேண்டும்.

விளக்கம்: இரண்டு பைகள் அல்லது தொகுதிகளுக்கு இடையே 20 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

237. மனித உணவாகவோ, விலங்குத் தீவனமாகவோ பயன்படும் நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள்____________எனப்படும்.

A) ஒற்றைச்செல் புரதம்

B) இரட்டைச் செல் புரதம்

C) பலச் செல் புரதம்

D) இரட்டை சர்க்கரை புரதம்.

விளக்கம்: ஒற்றைச்செல் புரதம் என்பது மனித உணவாகவோ, விலங்குத் தீவனமாகவோ பயன்படும் நுண்ணியிரிகளின் உலர்ந்த செல்கள் ஒற்றைச் செல் புரத உற்பத்திக்காகப் பயன்படுத்தக்கூடிய நுண்ணியிரிகள், உயர் உயிரினங்களை விடப் புரதங்களை விரைவாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

238. சிறிய அளவிலான ஸ்பைருலினா உயிர்த்திரள் உற்பத்தி பற்றியக் கருத்துக்களில் பொருந்தாததைக் கண்டறி.

A) 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மீன்தொட்டியில் பாதியளவு அளவு நீரை நிரப்ப வேண்டும்.

B) நீரில் ஃபுளுரின், கால்சியம், கார்பனேட் போன்றவை அல்லது ஏதாவது கன உலோகங்கள் உள்ளனவா. என்பதைச் சோதிக்க வேண்டும்.

C) தொட்டியில் நீரை நிரப்பி ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கும்போது முக்கியமாக ஜருக் ஐ முதலில் பாதியையும், பின்னர் மீதியையும் சேர்த்தல் வேண்டும்.

D) ஊட்டத்துக்களைச் சேர்த்த பிறகு, ஊடகத்தைக் காற்றேற்றுவதற்கு காற்று உந்தியைப் பொருத்த வேண்டும். (மையவிலக்கு விசை உந்தியைத் தவிர்க்கவும்)

விளக்கம்: 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மீன்தொட்டியில் பாதியளவு அளவு நீரை நிரப்ப வேண்டும்.

239. சிறிய அளவிலான ஸ்பைருலினா உயிர்த்திரள் உற்பத்தி முறைகள் பற்றியக் கருத்துக்களில் பொருந்தாததைக் கண்டறி.

A) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் தாய் மூலத்தை தொட்டியில் சேர்த்தல் வேண்டும்.

B) ஒரு வாரத்திற்குப் பின் வளர்ஊடகத்தை சரிபார்த்து, மீண்டும் கூடுதலாக நீர் சேர்த்து, உயிரித்திறள் அடர் பச்சை நிறமாக மாறும் வரை வைத்திருக்க வேண்டும்.

C) மெல்லிய துணியைப் பயன்படுத்தி பாசியை அறுவடை செய்தல் வேண்டும்.

D) நீரை மீண்டும் பயன்படுத்தமுடியாது.

விளக்கம்: நீரை மீண்டும் பயன்படுத்தலாம்.

240. ஒற்றைச் செல் புரதத்தில் அதிகமுள்ள ஊட்டச் சத்துக்கள்_________

A) புரதம்

B) வைட்டமின்கள்

C) அமினோ அமிலங்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: புரதம், வைட்டமின்கள் இன்றியமையாத அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளதால் ஒற்றைச்செல் புரதம் அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ளதாகிறது. எனவே இது புரதத்திற்கான சிறந்த துணை உணவாகிறது. எனினும் அதிக நியூக்ளிக் அமிலம் உள்ளதாலும் செரிமானம் தாமதிப்பதாலும் வழக்கமான புரத மூலங்களுக்கு முற்றிலும் மாற்றாகக் கருதமுடியாது.

241. தாவரங்கள் பயன்பெறும் வகையில் எத்தனை வகையான ஊட்டச்சத்துக்களை திரவ கடற்களை உரங்கள் அளிக்கின்றன.

A) 40

B) 50

C) 60

D) 80

விளக்கம்: திரவக் கடற்கரை உரங்களில் நுண்சத்து கனிமங்கள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அவற்றை அறுவடை செய்தவுடன் உரத்துக்கான தழைக்கூளமாகவோ அல்லது திரவ உரம் தயாரிக்கவோ எளிதாகப் பயன்படுத்தலாம்.

242. இயற்கை வேளாண்மைப் பற்றியக் கருத்துக்களில் தவறானதைக் கண்டறி.

A) இயற்கை வேளாண்மை என்பது ஒரு மாற்று வேளாண்மை முறையாகும். இதில் உயிரியல் இடுபொருட்களைப் பயன்படுத்தி இயற்கையாகத் தாவரங்கள் பயிரிடப்படுவதால் மண்வளமும் சுற்றுச்சூழல் சமநிலையும் பராமரிக்கப்பட்டு மாசு மற்றும் இழப்பு குறைக்கப்படுகிறது.

B) பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர்.

C) ஒருங்கிணைந்த இயற்கை விவசாய மேலாண்மையின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக உயிரி உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

D) இவை விலை உயர்ந்த, புதுப்பிக்க இயலாத மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன்தரு வேளாண்மையில் பங்கு பெறுகின்றன.

விளக்கம்: இவை விலை உயர்ந்த, புதுப்பிக்க இயலாத மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன்தரு வேளாண்மையில் பங்கு பெறுகின்றன.

243. இயற்கை வேளாண்மை என்பது______________என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாக கருதப்படுகிறது.

A) செயற்கைக்கு திரும்புதல்

B) இயற்கைக்கு திரும்புதல்

C) A,B இரண்டும்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: உயிரி உரங்கள் தயாரிப்பில் தாவரங்களுடன் தொடர்புடைய பல நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாகக் கருதப்படுகிறது.

244. ___________யின் இலைகளிலிருந்து தாவரப் பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

A) மஞ்சள்

B) எருக்கு

C) வேம்பு

D) கறிவேப்பிலை

விளக்கம்: வேம்பின் உலர்ந்த இலைகளிலிருந்து தாவரப் பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

245. இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு முறைகள் பற்றிய தவறானக் கூற்றினைக் காண்க.

A) 120 கிராம் காரமான மிளகாயுடன் 110 கிராம் பூண்டு அல்லது வெங்காயம் சேர்த்துத் துண்டுகளாக நறுக்க வேண்டும்.

B) இவற்றைக் கைகளாலோ அல்லது மின் அரவையை பயன்படுத்தியோ கெட்டியான கூழாக்க வேண்டும்.

C) 500 மி.லி. சூடான நீரைக் காய்கறிக்கூழுடன் சேர்த்து, மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.

D) ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் கரைசலை ஊற்றி 24 மணி நேரத்திற்கு அப்படியே சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம் வெதுவெதுப்பான இடத்தில் வைக்கவும்.

விளக்கம்: 500 மி.லி. வெதுவெதுப்பான நீரைக் காய்கறிக்கூழுடன் சேர்த்துஇ மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.

246. இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு முறைகள் பற்றிய சரியானக் கூற்றினைக் காண்க.

1) கரைசலை வடிகட்டியில் ஊற்றும் போது வடிகட்டியில் தங்கும் காய்கறி எச்சங்களை அகற்றிவிட்டு வடிநீரைச் சேகரித்து மற்றொரு கொள்கலனில் ஊற்றி வைக்க வேண்டும். இதுவே பூச்சிக்கொல்லி ஆகும்.

2) பூச்சிக்கொல்லியை ஒரு தெளிப்பானில் ஊற்றவும். முன்னதாகத் தெளிப்பானை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பினால் கழுவிப் பிற தொற்றுகள் நீக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும். புனலைப் பயன்படுத்திக் கரைசலைத் தெளிப்பானில் ஊற்றி மூடி வைக்கவும்.

3) நோய் தாக்கிய தாவரங்களில் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும் 3 அல்லது 4 தெளிப்புகளில் பூச்சிகள் நீக்கப்படுகின்றன. அப்பகுதி முழுவதும் பூச்சிக்கொல்லி தெளித்திருந்தால் அப்பருவ நிலையின் மற்ற காலத்திலும் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தாவரங்களைக் காக்கலாம்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1, 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

247. உயிரிப் பூச்சிவிரட்டி தயாரிப்பு பற்றிய கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.

A) வேப்பமரத்திலிருந்து இலைகளைப் பறித்துச் சிறிய துண்டுகளாக வெட்டவும்.

B) நறுக்கிய இலைகளைச் சுமார் 50 லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தில் பாதியளவு நீரில் போட்டு மூடி மூன்று நாட்கள் நொதிக்க விடவும்.

C) மூன்று மாதம் நொதித்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி இலைகளை நீக்கவும் வடி கட்டிய நீரைப் பூச்சிகளை விரட்டத் தாவரங்களில் தெளிக்கவும்.

D) பூச்சிவிரட்டி தாவரத்தில் ஒட்டுவதை உறுதிசெய்ய 100 மிலி சமையல் எண்ணெயும் அதே அளவு சோப்புக்கரைசலும் சேர்க்க வேண்டும். (சோப்புக்கரைசல் எண்ணெய்ப் பசையை நீக்கவும், எண்ணெய் பூச்சிவிரட்டி இலைகளில் ஒட்டிக்கொள்ளவும் உதவுகிறது.)

விளக்கம்: மூன்று நாட்கள் நொதித்த கலவையை வடிகட்டியைப் பயன்படுத்தி மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி இலைகளை நீக்கவும் வடி கட்டிய நீரைப் பூச்சிகளை விரட்டத் தாவரங்களில் தெளிக்கவும்.

248. போன்சாய் என்பது___________கலை

A) சீன

B) ஸ்பானிய

C) அரேபிய

D) ஜப்பானிய

விளக்கம்: ஒரு முழு வளர்ந்த மரத்தின் வடிவையும் அளவையும் ஒத்திருக்கும், கொள்கலனில் குறுமரங்களாக வளர்க்கப்படும், ஜப்பானிய கலை போன்சாய் ஆகும்.

249. பொதுவான போன்சாய் வடிவங்களில பொருந்தாததைக் கண்டறி.

A) முறையான நேர்நிமிர் வடிவம்

B) முறைசாரா நேர்நிமிர் வடிவம்

C) துடைப்ப வடிவம்

D) அரைப்புள்ளி வடிவம்

250. பொதுவான போன்சாய் வடிவங்களில பொருந்தாததைக் கண்டறி.

A) சாய்வு வடிவம்

B) வீழ் வடிவம்

C) அரைவீழ் வடிவம்

D) காற்புள்ளி வடிவம்

251. கண்ணாடித் தாவரப் பேணகத்தை தயாரிக்கும் முறைகளுல் பொருந்தாதது.

A) கொள்கலனைத் தயார் செய்தல்

B) வடிகால் அடுக்குகளை அமைத்தல்

C) செயலூட்டப்பட்ட கரியைச் சேர்த்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

252. கண்ணாடித் தாவரப் பேணகத்தை தயாரிக்கும் முறைகளில் பொருந்தாததைக் கண்டறி.

A) கொள்கலனை கூழாங்கற்களைப் பயன்படுத்தி ஒரு வடிகால் போன்ற அடுக்கை உருவாக்குவதால் நீர் வடிந்து, தேக்கமடைவது தவிர்க்கப்படுகிறது. கொள்கலனின் அளவைப் பொறுத்துக் கூழாங்கற்களின் அடுக்கின் ஆழத்தைத் தீர்மானிக்கலாம்.

B) பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காகவும், கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரித்தார் சேர்க்கப்படுகிறது.

C) தாவர வேர்கள் பற்றி வளர்வதற்குப் போதுமான இடமளிக்கும் வகையில் தேவையான அளவு மண் சேர்க்கவும்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காகவும், கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரி சேர்க்கப்படுகிறது.

253. இந்தியாவில் உள்ள மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் முறையே______________

A) 4000,5500

B) 8000,2500

C) 2500,8000

D) 2000,5000

விளக்கம்: உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நுகர்வோர் பொருட்களுக்கான தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஏறக்குறைய 8000 மூலிகைத் தாவரங்களையும் 2500 நறுமணத் தாவரங்களையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இந்திய அரசாங்கம் இந்தியாவை 21-ம் நூற்றாண்டில் உலக முன்னோடியாக்கக் கூடிய துறைகளில் ஒன்றாக மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களை அடையாளம் கண்டுள்ளது.

254. நறுமணத் தாவரங்களைப் பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) துணைத் தொழில்களின் வளர்ச்சி மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

B) இறக்குமதி மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டலாம்.

C) வீட்டு விலங்குகளாலும், பறவைகளாலும் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதில்லை.

D) இதன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கும் சூழலுக்கும் உகந்ததாக உள்ளன.

விளக்கம்: ஏற்றுமதி மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டலாம்.

255. செங்காந்தள் மூலிகைத் தாவரம் பற்றியக் தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) தாவரவியல் பெயர் – குளோரியோசா சூபர்பா

B) பயன்பெறும் பகுதி – கனி மற்றும் தண்டு.

C) முக்கிய வேதிக்கூறுகள் – கால்சிசின் (0.5 – 0.7%)

D) பயன்கள் – கீல்வாதம் புற்றுநோய் குணப்படுத்த

விளக்கம்:

A) தாவரவியல் பெயர் – குளோரியோசா சூபர்பா

B) பயன்பெறும் பகுதி – விதை மற்றும் மட்டநிலத்தண்டு

C) முக்கிய வேதிக்கூறுகள் – கால்சிசின் (0.5 – 0.7%)

D) பயன்கள் – கீல்வாதம் புற்றுநோய் குணப்படுத்த

256. செங்காந்தள் மலர் பயிர் செய்வதற்கு ஏற்ற மண் வகை____________

A) கரிசல் மண்

B) வண்டல் மண்

C) செம்மண்

D) சரளை மண்

விளக்கம்: சிவப்பு தோட்ட மண் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. தமிழ்நாட்டில், முக்கியமாகத் திருப்பூர், திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் 2000 ஹெக்டேர் பரப்பளவில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.

257. இந்திய அரசு தேசிய மருத்துவத் தாவர வாரியம்(NMPB) ஒன்றை அமைத்த ஆண்டு____________

A) 24 நவம்பர் 2000

B) 24 அக்டோபர் 2001

C) 24 நவம்பர் 2004

D) 12 நவம்பர் 2008

விளக்கம்: இந்திய அரசு 24 நவம்பர் 2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது.

258. தேசிய மருத்துவ வாரியம் தற்போது கீழ்க்கண்ட எந்த அமைப்பின் கீழ் உள்ளது.

A) ஆயுஷ்

B) ஆயோக்

C) ஆயுஷ்மான்

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: இந்திய அரசு 24 நவம்பர் 2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPB) ஒன்றை அமைத்தது. தற்போது இந்த வாரியம் இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைப்பின் கீழ் இயங்குகிறது. பல்வேறு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ மூலதனத்துடன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான முறையை உருவாக்குவதே தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் முக்கிய நோக்கமாகும்.

259. செங்காந்தள் மூலிகைத் தாவரம்_____________மாதம் நடவு செய்யப்படுகிறது.

A) ஜீன் – நவம்பர்

B) ஜீன் – ஜீலை

C) ஜனவரி – மார்ச்

D) மார்ச் – ஜீன்

விளக்கம்: ஜீன் – ஜீலை மாதத்தில் நடவு செய்யப்படுகிறது. இரண்டு முதல் மூன்று முறை வயலை உழுது, கடைசி உழவின் போது 10 டன் பண்ணை உரம் சேர்க்க வேண்டும்.

260. எலுமிச்சம் புல் பற்றிய தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி.

1) தாவரப் பெயர் – சிம்போபோகான் சிட்ரேட்டஸ்

2) பயன்படும் தாவரப் பகுதி – தண்டின் அடிப்பகுதிஇ இலைகள்

3) முக்கிய வேதிக் கூறுகள் – சிட்ரோனெல்லால், ஜெரனியால்

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 1 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

261. பொருத்துக:

A) IRRI – 1. Council Of Scientific and Industrial Research

B) GRI – 2. National Medicinal Plants Board

C) NMPB – 3. Geographical indication Registry of India

D) CSIR – 4.International Rice Research Institute

A) 3 2 4 1

B) 2 3 1 4

C) 4 3 2 1

D) 2 1 4 3

விளக்கம்:

A) IRRI – 1. International Rice Research Institute

B) GRI – 2. Geographical indication Registry of India

C) NMPB – 3.National Medicinal Plants Board

D) CSIR – 4.Council Of Scientific and Industrial Research

262. நடவு செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மூலம் கிராமப்புற முன்னேற்றத்திற்கு உதவும் அமைப்பு______________

A) தேசிய மருத்துவ வாரியம்

B) இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்

C) போதைப்பொருள் தடுப்புத் துறை

D) இந்திய புவிசார் குறியீடு

விளக்கம்: இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் நடவு செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் கிராமப்புற முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இத்திட்டம் நாட்டில் அத்தியாவசிய எண்ணெய் சார்ந்த நறுமணத் தொழில் நிறவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கிறது.

263. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடு.

(i) தானியங்கள் புல் குடும்ப உறுப்பினர்கள்

(ii) பெரும்பான்மையான உணவுத் தானியங்கள் ஒரு விதையிலைத் தாவரத் தொகுதியைச் சார்ந்தவை.

A) i சரியானது மற்றும் ii தவறானது.

B) i மற்றும் ii இரண்டும் சரியானவை

C) i தவறானது மற்றும் ii சரியானது.

D) i மற்றும் ii இரண்டும் தவறானது.

264. கூற்று: காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய அங்கமாகும்.

காரணம்: காய்கறிகள் சதைப்பற்றான இனிய நறுமணம் மற்றும் சுவைகள் கொண்ட தாவரப் பகுதிகள் ஆகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரியானது

C) இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

D) இரண்டும் சரியானவை மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

265. கூற்று i: காஃபி காஃபின் கொண்டது.

கூற்று ii: காஃபி பருகுவதால் புற்றுநோய் வளர்க்கும்.

A) கூற்று i சரி, கூற்று ii தவறு

B) கூற்று i,ii இரண்டும் சரி

C) கூற்று i தவறு, கூற்று ii சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

266. பருத்தியின் புது உலகச் சிற்றினங்கள்__________

A) காஸிப்பியம் ஆர்போரிடம்

B) கா.ஹெர்பேசியம்

C) A மற்றும் B இரண்டும்

D) கா. பார்படென்ஸ்

267. கூற்று: மஞ்சள் பல்வேறு புற்றுநோய்களை எதிர்க்கிறது.

காரணம்: மஞ்சளில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

268. சரியான இணையைக் கண்டறிக.

A) இரப்பர் – ஷோரியா ரொபஸ்டா

B) சாயம் – இண்டிகோஃபெரா அன்னக்டா

C) கட்டை – சைப்ரஸ் பாப்பைரஸ்

D) மரக்கூழ் – ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்

269. தவறான இணையைக் கண்டறிக.

A) பர்மா தேக்கு – டெக்டோனா கிராண்டிஸ்

B) தோதகத்தி – டால்பெர்ஜியா சிற்றினம்

C) கருங்காளி – டயாஸ்பைரஸ் எபெனம்

D) மரக்கூழ் – ஷொரியா ரொபஸ்டா

270. பின்வரும் கூற்றுகளை கவனித்து அவற்றிலிருந்து சரியானவற்றை தேர்வு செய்யவும்.

கூற்று i: மணமூட்டிகள் அத்தியாவசிய எண்ணெயிலிருந்து உற்பத்திச் செய்யப்படுகின்றன.

கூற்று ii: அத்தியாவசிய எண்ணெய்கள் தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் உருவாக்குகின்றன.

A) கூற்று i சரியானது

B) கூற்று ii சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானவை

D) இரண்டு கூற்றுகளும் தவறானவை

271. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து, பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று i: சித்த மருத்துவத்தின் மருந்து ஆதாரமாக மூலிகைகள், விலங்குகளின் பாகங்கள், தாதுக்கள் தனிமங்கள் போன்றவைகள் உள்ளன.

கூற்று ii: நீண்ட நாட்கள் கெடாத மருந்துகள் தயாரிக்க கனிமங்கள் பயன்படுத்துப்படுகின்றன.

A) கூற்று i சரியானது

B) கூற்று ii தவறானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானவை

D) இரண்டு கூற்றுகளும் தவறானவை

272. பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்கவும்

A) ஆன்ரோகிராபிஸ் – கல்லீரல் பாதுகாப்பி

B) ஆடாதொடா – மூச்சுக்குழலை விரிவடையச் செய்யும்

C) பில்லாந்தஸ் – நீரிழிவு எதிர்ப்பி

D) குர்க்குமின் – எதிர் ஆக்சிஜனேற்றி

273. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணை எது?

A) பனைமரம் – பிரேசிலை பிறப்பிடமாகக் கொண்டது.

B) கரும்பு – கன்னியாகுமரியில் அதிகளவில் உள்ளது.

C) ஸ்டீவியா – இயற்கை இனிப்பு

D) பதனீர் – எத்தனாலுக்காக நொதிக்க வைக்கப்படுகிறது.

274. புதிய உலகிலிருந்து உருவானதும், வளர்க்கப்பட்டதுமான ஒரே தானியம்.

A) ஒரைசா சட்டைவா

B) டிரிட்டிக்கம் ஏஸ்டியம்

C) டிரிட்டிக்கம் டியூரம்

D) ஜியா மேய்ஸ்

275. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

i) காளான்கள் உண்ணக்கூடிய பூஞ்சைகளின் கனியுறுப்பு

ii) ஒற்றைச் செல் புரதங்கள் என்பது பெரு உயிரினங்களின் உலர்ந்த செல்களாகும்.

iii) திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது.

iV) SCPவழக்கமான புரதங்களுக்கு முழுமையான மாற்றாகும்.

A) i மற்றும் ii

B) iமற்றும்iii

C) i மற்றும் iV

D) ம மட்டும்

276. ஒற்றைச் செல் புரதத்தைப் பற்றிய கூறுகளில் தவறான இணை/இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

i. வேதிப்பூச்சிக் கொல்லிகள் – மனிதர்களுக்கம் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு

ii காளான்கள் – வெண் காய்கறி

iii சாருக் – வளர்ப்பு ஊடகம்

iV கடற்கறை – பொட்டாசியம் நிறைந்தது.

A) i மற்றும் ii

B) i மற்றும் iV

C) i மற்றும் iii

D) i மட்டும்

277. பொருத்துக:

A) IRRI – 1.இந்தியப் புவிசார் குறியீடு பதிவகம்

B) GRI – 2. தேசிய மருத்துவத் தாவர வாரியம்

C) NMPB – 3.இந்திய அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்

D) CSIR – 4.பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

A) 3 2 4 1

B) 2 3 1 4

C) 2 1 4 3

D) 4 1 2 3

விளக்கம்:

A) IRRI – 1.பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

B) GRI – 2. இந்தியப் புவிசார் குறியீடு பதிவகம்

C) NMPB – 3.தேசிய மருத்துவத் தாவர வாரியம்

D) CSIR – 4.இந்திய அறிவியல் (ம) தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம்

278. ஃபில்லாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை கண்டறிந்த குழு_____________

A) எஸ்.பி. தியாகராஜன் குழு

B) அரிஸ்டாட்டில்

C) லின்னேயஸ்

D) சார்லஸ் வுட்

விளக்கம்: டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

279. சார்லஸ் குட் இயர் என்பவரால் வல்கனைசேசன் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு______________

A) 1830

B) 1834

C) 1837

D) 1839

12th Science Lesson 4 Questions in Tamil

4] உயிரித் தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்

1. டி.என்.ஏ மற்றும் இயற்கையாக நடைபெறும் புரத உற்பத்தியை மனித விருப்பப்படி, மாற்றியமைத்து மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த புரதங்கள் மற்றும் இதர பயன்பாட்டிற்கான புரதங்களை உருவாக்கும் செயல்முறைக்கு___________என்று பெயர்.

A) மரபியல்

B) ஜீனாக்கவியல்

C) மரபு பொறியியல்

D) பண்பாட்டியல்

விளக்கம்: டி.என்.ஏ மற்றும் இயற்கையாக நடைபெறும் புரத உற்பத்தியை மனித விருப்பப்படி, மாற்றியமைத்து மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த புரதங்கள் மற்றும் இதர பயன்பாட்டிற்கான புரதங்களை உருவாக்கும் செயல்முறைகள் ‘மரபுப் பொறியியல்’ எனப்படும்.

2. ஒரு உயிரியிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்து அதே சிற்றினத்தையோ அல்லது வேறு சிற்றினத்தையோ சார்ந்த உயிரியின் டி.என்.ஏ ஏவுடன் பொருத்தப்படுவதன் மூலம் உருவாக்கப்படும் டி.என்.ஏ____________

A) ஆர்.டி.என்.ஏ

B) எம்.டி.என்.ஏ

C) ஆர்.என்.ஏ

D) எம்.ஆர்.என்.ஏ

விளக்கம்: ஒரு உயிரியிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்து அதே சிற்றினத்தையோ அல்லது வேறு சிற்றினத்தையோ சார்ந்த உயிரியின் டி.என்.ஏ ஏவுடன் மாற்றிப் பொருத்தப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் டி.என்.ஏ வானது மறுச்சேர்க்கை டி.என்.ஏ என்றழைக்கப்படுகிறது.

3. ஒரு உயிரியிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்து அதே சிற்றினத்தையோ அல்லது வேறு சிற்றினத்தையோ சார்ந்த உயிரியின் டி.என்.ஏ ஏவுடன் பொருத்தப்படுவதன் மூலம் மறுச்சேர்க்கை(rDNA) டி.என்.ஏ உருவாக்கப்படும் செயல்முறைக்கு_________என்று பெயர்.

A) டி.என்.ஏ தொழில்நுட்பம்

B) ஆர்.என்.ஏ தொழில்நுட்பம்

C) எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம்

D) டி.என்.ஏ மறுச்சேர்க்கை தொழில்நுட்பம்

விளக்கம்: ஒரு உயிரியிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்து அதே சிற்றினத்தையோ அல்லது வேறு சிற்றினத்தையோ சார்ந்த உயிரியின் டி.என்.ஏ ஏவுடன் பொருத்தப்படுவதன் மூலம் மறுச்சேர்க்கை(rDNA) டி.என்.ஏ உருவாக்கப்படும் செயல்முறைக்கு டி.என்.ஏ மறுச்சேர்க்கை தொழில்நுட்பம் என்று பெயர்.

4. மருத்துவ சிகிச்சைப் பயன்பாடு கொண்ட ஹார்மோன்களையும் புரதங்களையும் பெரும் அளவில் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள தொழில்நுட்பம்__________

A) டி.என்.ஏ தொழில்நுட்பம்

B) டி.என்.ஏ மறுச்சேர்க்கை தொழில்நுட்பம்

C) ஆர்.என்.ஏ தொழில்நுட்பம்

D) எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம்

விளக்கம்: மருத்துவ சிகிச்சைப் பயன்பாடு கொண்ட ஹார்மோன்களையும் புரதங்களையும் பெரும் அளவில் உற்பத்தி செய்வதில் டி.என்.ஏ மறுச்சேர்க்கை தொழில்நுட்பம் முன்னணியில் உள்ளது.

5. மனித இன்சுலினை உற்பத்தி செய்வது__________

A) ஆல்ஃபா செல்கள்

B) பீட்டா செல்கள்

C) கல்லீரல் செல்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

6. லாங்கர்கான் திட்டுக்கள் கீழ்க்கண்ட எந்த உறுப்புடன் தொடர்புடையது___________

A) கல்லீரல்

B) நரம்புசெல்

C) கணையம்

D) மண்ணீரல்

7. இன்சுலினாது கீழ்க்கண்ட எத்தனை அமினோ அமிலங்களால் ஆனது____________

A) 51 அமினோ அமிலங்கள்

B) 54 அமினோ அமிலங்கள்

C) 56 அமினோ அமிலங்கள்

D) 58 அமினோ அமிலங்கள்

விளக்கம்: கணையத்திலுள்ள லாங்கர்ஹான் திட்டுகளில் காணப்படும் பீட்டா செல்களிலிருந்து மனித இன்சுலின் உற்பத்தியாகிறது. இது 51 அமினோ அமிலங்களால் ஆனது. இவை A மற்றும் B என்னும் இரண்டு பாலிபெப்டைடு சங்கிலிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

8. கூற்று (i): இன்சுலினானது 51 அமினோ அமிலங்களைக் கொண்ட A மற்றும் B என்னும் இரண்டு பாலிபெப்டைடு சங்கிலிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

கூற்று(ii): A சங்கிலி 30 அமினோ அமிலங்களையும் B சங்கிலி 21 அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: இன்சுலினானது 51 அமினோ அமிலங்களைக் கொண்ட A மற்றும் B என்னும் இரண்டு பாலிபெப்டைடு சங்கிலிகளாக அமைக்கப்பட்டுள்ளன. A சங்கிலி 21 அமினோ அமிலங்களையும் B சங்கிலி 30 அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளன.

9. இன்சுலினில் காணப்படும் பாலிபெப்டைடு சங்கலியானது கீழ்க்கண்ட எந்த பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.

A) டைசல்ஃபைடு

B) ட்ரைசல்ஃபைடு

C) டெட்ராசல்ஃபைடு

D) மோனோ சல்ஃபைடு

விளக்கம்: இன்சுலினில் காணப்படும் பாலிபெப்டைடு சங்கலியானது டைசல்ஃபைடு பிணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

10. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது____________

A) குளுக்கோகான்

B) புரதம்

C) கொழுப்பு

D) இன்சுலின்

11. இன்சுலின் பற்றியக் கூற்றுக்களுல் பொருந்தாததைக் கண்டறி.

A) செல்கள் குளுகோஸை எடுத்துக் கொண்டு அதை ஆற்றலாக மாற்றி வெளியிடுவதற்கு இன்சுலின் உதவுகிறது.

B) இன்சுலின் பற்றாக்குறையினால் ‘டயாபடிஸ் இன்சிபிடஸ்’ எனும் சர்க்கரை நோய் உண்டாகிறது.

C) சிகிச்சை அளிக்காவிடில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோயான இது இரத்ததில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் மற்றும் சிக்கலான அறிகுறிகளையும் கொண்டு காணப்படுகிறது.

D) தொடர்ச்சியான இன்சுலின் சார்புசிகிச்சை மூலம் இப்பற்றாக்குறை நோயைச் சரி செய்யலாம்.

விளக்கம்: இன்சுலின் பற்றாக்குறையினால் ‘டயாபடிஸ் மெலிடஸ்’ எனும் சர்க்கரை நோய் உண்டாகிறது.

12. ஆரம்பகாலத்தில் கீழ்க்கண்ட எந்த உயிறினங்களின் கணையத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இன்சுலின் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

A) பசு மற்றும் நாய்

B) பசு மற்றும் எருது

C) பன்றி மற்றும் பசு

D) பன்றி மற்றும் நாய்

விளக்கம்: முற்காலத்தில் பன்றிகள் மற்றும் பசுக்களின் கணையங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட இன்சுலினை சர்க்கரை நோயாளிகளுக்குச் செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டது. விலங்கு இன்சுலினுக்கும் மனித இன்சுலினுக்கும் அமைப்பில், சிறிய அளவில் வேறுபாடுகள் உள்ளதால், சில நோயாளிகளில் இது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

13. டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள்_______________

A) பெனிசிலின்

B) குளுக்காகோன்

C) இன்சுலின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.

14. சர்க்கரை நோயைக் குணப்படுத்த டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இன்சுலினை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்ட ஆண்டு____________

A) 1980

B) 1981

C) 1982

D) 1984

விளக்கம்: 1982 ல் சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த இன்சுலினைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.

15. 1986 ல் ஹியுமிலின் என்னும் வணிகப் பெயரோடு, சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்துப்பொருள்.

A) பெனிசிலின்

B) குளுக்காகோன்

C) கோவேக்ஸின்

D) இன்சுலின்

விளக்கம்: 1986 ல் ஹியுமிலின் என்னும் வணிகப் பெயரோடு, சந்தையில் மனித இன்சுலின் விற்பனை செய்யப்பட்டது.

16. 1921-ல் நாயின் கணையத்திட்டுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட இன்சுலின் ஹார்மோனைக் கொண்டு சர்க்கரை நோய் குணப்படுத்தும் திறனை விளக்கிக் காட்டியவர்கள்.

A) பெஸ்ட் மற்றும் பேன்டிங்

B) சாமுவேல் ஹானிமேன்

C) லாவாய்சியர்

D) மேற்கண்ட எவருமில்லை

விளக்கம்: 1921 ல் பெஸ்ட் மற்றும் பேன்டிங் என்பவர்கள், நாயின் கணையத்திட்டுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட இன்சுலின் ஹார்மோனின் சர்க்கரை நோய் குணப்படுத்தும் திறனை விளக்கிக் காட்டினார்கள்.

17. ஆல்ஃபா லேக்டால்புமின் என்பது_______________

A) கொழுப்பு

B) புரதம்

C) தாது உப்புக்கள்

D) வைட்டமின்

விளக்கம்: ஆல்ஃபா லேக்டால்புமின் என்பது 123 அமினோ அமிலங்களையும் 4 டைசல்ஃபைடு இணைப்புகளையும் 14178 டால்டன் மூலக்கூறு எடையையும் கொண்ட ஒரு புரதம் ஆகும்.

18. மனித தாய்ப்பாலில் காணப்படும் ஆல்ஃபா லேக்டாபுமினின் அளவு_____________

A) 10 சதவீதம்

B) 25 சதவீதம்

C) 30 சதவீதம்

D) 50 சதவீதம்

விளக்கம்: மனித தாய்ப்பாலிலுள்ள புரதங்களுள் 25% புரதம் ஆல்ஃபா லேக்டால்புமின் ஆகும். இது பால் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. லேக்டால்புமின் கால்சியம் மற்றும் துத்தநாக அயனிகளுடன் இணைந்து பாக்டீரியங்களைக் கொல்லும் பண்பையும் கட்டி-எதிர்ப்புச் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.

19. கூற்று (i) உடற்செல் உட்கரு மாற்றிப் பொருத்துதல் மூலம் நலமான, மரபியல்பு மாற்றப்பட்ட பசுக்கள் உருவாக்கப்பட்டன.

கூற்று (ii) அப்புசுவின் பாலில், ஒரு லிட்டருக்கு 1.55 கிராம் மறுசேர்க்கை ஆல்ஃபா லேக்டால்புமின் உற்பத்தி சாத்தியமானது.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

20. உடற்செல் உட்கரு மாற்றிப் பொருத்துதல் எனும் தொழில் நுட்பத்தில், ஒரு உயிருள்ள கரு உருவாக்க எடுத்துக்கொள்ளப்படுவது________________

A) ஒரு அண்ட செல்

B) ஒரு விந்து செல்

C) ஒரு உடற்செல்

D) A,C இரண்டும்

விளக்கம்: உடற்செல் உட்கரு மாற்றிப் பொருத்துதல் எனும் தொழில் நுட்பத்தில், ஒரு உடற்செல்லையும் ஒரு அண்ட செல்லையும் கொண்டு ஒரு உயிருள்ள கரு உருவாக்கப்படுகிறது.

21. முதன் முதலில் ‘ரோஸி’ எனும் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்ட ஆண்டு.

A) 1991

B) 1993

C) 1997

D) 1999

விளக்கம்: 1997ம் முதன் முதலில் ‘ரோஸி’ எனும் மரபியல்பு மாற்றப்பட்ட பசு உருவாக்கப்பட்டது. இப்பசுவின் பால், மனித லேக்டால்புமின் கொண்ட புரதச் செறிவு மிக்க பாலாகக் காணப்பட்டது. சாதாரண பசுவின் பாலை விட, புரதம் செறிந்த (2.4 கிராம்ஃலிட்டர்) இப்பசும்பாலானது பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவூட்டம் மிக்க ஒரு சரிவிகித உணவாகும்.

22. கீழ்க்கண்டவற்றுள் மனித வளர்ச்சி ஹார்மோன் அல்லாதது எது.

A) சொமட்டோஸ்டேட்டின்

B) சொமட்டோடிரோபின்

C) பிட்யூட்டரி

D) டெஸ்டோஸ்டிரான்

விளக்கம்: சொமட்டோஸ்டேட்டின் மற்றும் சொமட்டோடிரோபின் எனும் ஹார்மோன்கள் பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படுகிறது. இந்த பெப்டைடு ஹார்மோன்கள், அமினோ அமில உள்ளெடுப்பு மற்றும் புரத உற்பத்தியை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு மனித வளர்ச்சியைத் தூண்டவும் நெறிப்படுத்தவும் செய்கின்றன.

23. வளர்ச்சி ஹார்மோன் பற்றாக்குறையினால் ஏற்படும் குறைபாடு________________

A) இராட்சத தன்மை

B) அக்ரோமெகாலி

C) குள்ளத்தன்மை

D) இரத்த சோகை

விளக்கம்: வளர்ச்சி ஹார்மோன் பற்றாக்குறையினால் ‘குள்ளத்தன்மை’ ஏற்படுகறிது. மனித பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனை ஊசி வழியாகச் செலுத்துவதன் மூலம் இக்குள்ளத்தன்மையைச் சரிசெய்யலாம்.

24. குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாக செயல்படுவது_____________

A) சொமட்டோஸ்டேட்டின்

B) சொமட்டோடிரோபின்

C) பிட்யூட்டரி

D) டெஸ்டோஸ்டிரான்

விளக்கம்: மறுசேர்க்கை வகையான,‘சொமட்டோட்ரோபின்’ என்று அழைக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனானது குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாக விளங்குகிறது.

25. கீழ்க்கண்ட எந்த தொழில்நுட்பத்தின் மூலம் மனித வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.

A) பரவல்

B) சவ்வூடு பரவல்

C) நொதித்தல்

D) எதிர் சவ்வூடு பரவல்

விளக்கம்: எ.கோலை பாக்டீரியங்கள் வளர்ப்பு ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு நொதித்தல் தொழில்நுட்பத்தின் மூலம் பெருமளவில் மனித வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.

26. பொருத்துக:

A) ஹீமோபிலியா – 1. வைரஸ் எதிர்ப்பு மருந்து

B) ஆம்ஸ்டர் – 2. ஒரு வகை கொரிக்கும் விலங்கு

C) இன்டர்பெரான் – 3. செயற்கை தடுப்பூசி

D) ஹெப்பாடைடிஸ்B – 4. இரத்தம் உறையாமை

A) 4 2 1 3

B) 4 3 2 1

C) 1 2 3 4

D) 1 3 2 4

விளக்கம்:

A) ஹீமோபிலியா – 1.இரத்தம் உறையாமை

B) ஆம்ஸ்டர் – 2. ஒரு வகை கொரிக்கும் விலங்கு

C) இன்டர்பெரான் – 3. வைரஸ் எதிர்ப்பு மருந்து

D) ஹெப்பாடைடிஸ்B – 4. செயற்கை தடுப்பூசி

27. அலிக் ஐசக்ஸ் மற்றும் ஜீன் லின்ட்மேன் என்பவர்களால் இண்டர்பெரான்கள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு_____________

A) 1937

B) 1947

C) 1957

D) 1967

விளக்கம்: 1957ல் அலிக் ஐசக்ஸ் மற்றும் ஜீன் லின்ட்மேன் என்பவர்களால் இண்டர்பெரான்கள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் அமைப்பின் அடிப்படையில் இன்டர்ஃபெரான்கள் ஆல்பா, பீட்டா மற்றும் காமா என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை செல்லில் உள்ள டி.என்.ஏ வைத் தூண்டி, வைரஸ் எதிர்ப்பு நொதிகளைச் சுரக்கச் செய்து அதன் மூலம் வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுத்து செல்களைப் பாதுகாக்கின்றன.

28. இன்டர்பெரான்களின் உற்பத்தி பற்றியக் கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.

1) இன்டர்பெரான்கள் உற்பத்தி செய்ய அதிக அளவு இரத்தம் தேவைப்படுகிறது.

2) இன்டர்பெரான்களை ஆர்டி.என்.ஏ தொழில் நுட்பம் மூலம் உருவாக்குவது உகந்ததாகும்.

3) மறுச்சேர்க்கை இன்டர்பெரான்கள் உற்பத்திக்கு ‘எ.கோலை’ யை விட ‘சாக்கரோமைசெஸ் செரிவிசியே’ என்னும் ஈஸ்ட் பொருத்தமானதாகும்.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

29. இன்டர்பெரான்கள் கீழ்க்கண்ட எந்த நோய்க்கான சிகிச்சைக்கான பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

A) புற்றுநோய்

B) எய்ட்ஸ்

C) தண்டுவட மரபு நோய்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: புற்றுநோய், எய்ட்ஸ், தண்டுவட மரபு நோய், கல்லீரல் அழற்சி, அக்கிப்புடை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் இன்டர்ஃபெரான்கள் பெரிதும் பயன்படுகின்றன.

30. கூற்று: புதிய தலைமுறைத் தடுப்பூசிகளை உருவாக்க டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் பயன்படுகிறது.

காரணம்: வழக்கமான நடைமுறைகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் சீரான தரத்துடன் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன.

A) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிர்க்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிர்க்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு, காரணம் சரி

31. நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசி__________

A) துணை அலகு தடுப்பூசிகள்

B) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்

C) டி.என்.ஏ தடுப்பூசிகள்

D) வலுவேற்றப்பட்ட தடுப்பூசிகள்

விளக்கம்: நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு துணை அலகு தடுப்பூசிகள் என்று பெயர். புதிய வகை துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஏற்றதாகும். இம்முறையில் நோயுண்டாக்கும் உயிரியிலுள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏக்கள் ஆகிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

32. மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் அவற்றின் நோயுண்டாக்கும் தன்மை நீக்கப்பட்டு பயன்படுத்தப்படும் தடுப்பூசி_______________

A) துணை அலகு தடுப்பூசிகள்

B) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்

C) டி.என்.ஏ தடுப்பூசிகள்

D) வலுவேற்றப்பட்ட தடுப்பூசிகள்

விளக்கம்: மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் (பாக்டீரியா அல்லது வைரஸ்) அவற்றின் நோயுண்டாக்கும் தன்மை நீக்கப்பட்டு தடுப்பூசிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாகப் பயன்படுத்தலாம்.

33. டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுறை நடைமுறைக்கு வந்த ஆண்டு________________

A) 1990

B) 1993

C) 1997

D) 1999

விளக்கம்: டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுறை 1990ல் நடைமுறைக்கு வந்தது. டி.என்.ஏ மூலக்கூறுகள் மூலம் உடலில் தடைகாப்பு வினைகள் தூண்டப்படுகின்றன.

34. மனித மற்றும் விலங்குகளில் வாய்வழி நோய் தடுப்பு மருந்து மூலம் குணப்படுத்தப்படும் நோய்களைக் கண்டறி.

A) மணல்வாரி

B) காலரா

C) கல்லீரல் அழற்சி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மரபுப்பொறியியல் என்னும் அறிவியற்புலத்தைப் பயன்படுத்தி மூலக்கூறு மருந்தாக்கம் என்னும் முறை மூலம் வாய்வழி தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தற்பொழுது, மனித மற்றும் விலங்கு நோய்களான, மணல்வாரி, காலரா, கால் மற்றும் வாய் நோய் மற்றும் கல்லீரல் அழற்சி போன்றவற்றிற்கான உண்ணத்தகுந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

35. முதன் முதலில் செயற்கை தடுப்பூசி உருவாக்கப்பட்ட ஆண்டு____________

A) 1991

B) 1993

C) 1995

D) 1997

விளக்கம்: 1997ல் முதன் முதலில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தடுப்பூசி ஹெப்பாடைடிஸ் B நோய்க்கு எதிரான மறுசேர்க்கைத் தடுப்பூசி ஆகும்.

36. ஹெப்பாடைடிஸ் B என்ற நோய்க்கு எதிரான செயற்கை தடுப்பூசியானது கீழ்க்கண்ட எந்த வணிகப் பெயர்களில் விற்பனையாகிறது.

A) ரிகாம்பிவேக்ஸ்

B) என்ஜெரிக்ஸ் டி

C) ஹியுமிலின்

D) A,B இரண்டும்

37. அமெரிக்கா, ஃப்ரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹெப்பாடைடிஸ் B தடுப்பூசியைச் சொந்தமாகத் தயாரித்த நான்காவது நாடு_____________

A) சீனா

B) ஜப்பான்

C) இந்தியா

D) இந்தோனேசியா

விளக்கம்: அமெரிக்கா, ஃப்ரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹெப்பாடைடிஸ் B தடுப்பூசியைச் சொந்தமாகத் தயாரித்த நான்காவது நாடு இந்தியா ஆகும்.

38 புதிய தொழில் நுட்ப முறைகளின் மூலம் உருவாக்கப்படும் தடுப்பூசிகளின் நன்மைகளில் பொருந்தாதது____________

A) புரத உற்பத்தி

B) கொழுப்பு உற்பத்தி

C) நோய்த்தடைக்காப்பு

D) நோயுண்டாக்கிகளுக்கு எதிரான தடைகாப்பு

விளக்கம்: புதிய தொழில்நுட்ப முறைகளின் மூலம் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் உறுதியான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவை இலக்கு புரத உற்பத்தி, நீண்டு நிலைக்கும் நோய்த்தடைகாப்பு மற்றும் குறிப்பிட்ட நோயுண்டாக்கிகளுக்கு எதிரான தடைகாப்பு வினைகளை குறைந்த நச்சு விளைவுகளுடன் விரைவாகத் தூண்டுதல் ஆகியன.

39. மரபிய நோயோடு பிறக்கும் மனிதனுக்கு அந்நோயை சரி செய்ய பயன்படுத்தப்படும் சிகிச்சை முறை_______________

A) தடுப்பூசி செலுத்துதல்

B) மரபணு சிகிச்சை

C) அருவை சிகிச்சை

D) எந்த சிகிச்சையும் பயனற்றது.

விளக்கம்: பிறக்கும்போதே ஒரு மனிதன் மரபிய நோயோடு பிறப்பானேயாகில் ‘மரபணு சிகிச்சை’ எனும் செயல்முறையின் மூலம் அது சாத்தியம் ஆகும். ஒன்றோ அதற்கு மேற்பட்டோ திடீர் மாற்றமடைந்த அல்லீல்களைக் கொண்ட ஒருவருடைய செல்களுக்குள் இயல்பான மரபணுவை செலுத்தி அவற்றைச் சரி செய்யலாம்.

40. ஒரு மரபணுவானது திடீர் மாற்றமடையும்போது ஏற்படும் நோய்______________

A) நீர்மத் திசுவளற்சி

B) இரத்த உறையாமை

C) மஞ்சள் காமாலை

D) A,B இரண்டும்

விளக்கம்: ஒரு மரபணுத்திடீர் மாற்றத்தால் உருவாகும் நோய்களான,‘நீர்மத்திசுவளற்சி’ மற்றும் ‘இரத்த உறையாமை’ போன்ற நோய்களைக் குணப்படுத்தும் முயற்சியே மரபணு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும்.

41. கீழ்க்கண்டக் கூற்றுகளைக் கவனி. (சரியற்றதைத் தேர்ந்தெடு)

1) மரபணு பெருக்குதல் சிகிச்சை மற்றும் மரபணுத்தடை சிகிச்சை ஆகியன மரபணு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இருவித உத்திகளாகும்.

2) இழந்த பொருட்களை ஈடுசெய்ய மரபணுத் தொகுதியில் ஆர்.என்.ஏ வை நுழைத்துச் சரி செய்யும் முறைக்கு மரபணு பெருக்கல் சிகிச்சை என்று பெயர்.

3) உணர்தடை மரபணுக்களை நுழைத்து ஓங்கு மரபணுவின் வெளிப்பாட்டைத் தடை செய்யும் சிகிச்சைக்கு மரபணுத் தடை சிகிச்சை என்று பெயர்

A) 1, 2 மட்டும் தவறு

B) 1 மட்டும் தவறு

C) 2 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: இழந்த பொருட்களை ஈடுசெய்ய மரபணுத் தொகுதியில் டி.என்.ஏ வை நுழைத்துச் சரி செய்யும் முறைக்கு மரபணு பெருக்கல் சிகிச்சை என்று பெயர்.

42. உடற்செல் மரபணு சிகிச்சைப் பற்றியக் கருத்துக்களில் பொருந்தாதது எது.

1) சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன.

2) எலும்பு மஜ்ஜை செல்கள், இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது.

3) பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன.

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. எலும்பு மஜ்ஜை செல்கள், இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகிறது. பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை.

43. இனச்செல் மரபணு சிகிச்சை பற்றியக் கருத்துக்களில் பொருந்தாதது எது.

1) சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன.

2) அண்டசெல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன.

3) பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவதில்லை.

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: சிகிச்சையளிக்கும் மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. அண்டசெல்கள் மற்றும் விந்து செல்களுக்குள் மரபணுக்கள் செலுத்தப்படுகின்றன. பிந்தைய தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுகின்றன.

44. அடினோசைன் டி அமினேஸ்(ADA) குறைபாடு கொண்ட நான்கு வயது பெண் குழந்தைக்கு முதன் முதலில் மரபணு சிகிச்சை அளித்த மருத்துவரான ஆன்டர்சன் எந்த நாட்டைச் சார்ந்தவர்______________

A) அமெரிக்கா

B) ஃப்ரெஞ்ச்

C) இங்கிலாந்து

D) ஜப்பான்

விளக்கம்: அடினோசைன் டி அமினேஸ்(ADA) குறைபாடு கொண்ட நான்கு வயது பெண் குழந்தைக்கு ஃப்ரெஞ்ச் ஆன்டர்சன் என்பவரால் 1990ல் முதன் முதலில் மரபணு சிகிச்சை மருத்துவம் அளிக்கப்பட்டது.

45. முதன் முதலில் மரபணு சிகிச்சை செய்யப்பட்ட ஆண்டு______________

A) 1990

B) 1991

C) 1992

D) 1993

விளக்கம்: அடினோசைன் டி அமினேஸ்(ADA) குறைபாடு கொண்ட நான்கு வயது பெண் குழந்தைக்கு ஃப்ரெஞ்ச் ஆன்டர்சன் என்பவரால் 1990ல் முதன் முதலில் மரபணு சிகிச்சை மருத்துவம் அளிக்கப்பட்டது.

46. அடினோசைன் டி அமினேஸ்(ADA) அல்லது தீவிர ஒருங்கிணைந்த நோய்த்தடைகாப்பு குறைபாடு(SCID) என்பது ஒரு_______________

A) உடற்குரோமோசோமின் ஓங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைபாடு

B) உடற்குரோமோசோமின் ஒடுங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைபாடு

C) இனச்செல் குரோமோசோமின் ஓங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைபாடு

D) இனச்செல் குரோமோசோமின் ஒடுங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைபாடு

விளக்கம்: அடினோசைன் டி அமினேஸ்(ADA) அல்லது தீவிர ஒருங்கிணைந்த நோய்த்தடைகாப்பு குறைபாடு(SCID) என்பது ஒரு உடற்குரோமோசோமின் ஒடுங்கு ஜீன் வளர்சிதை மாற்றக்குறைபாடு ஆகும்.

47. குழந்தைகளில் அடினோசின் டி அமினேஸ் குறைபாட்டை கீழ்க்கண்ட எந்த மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

A) தசை மாற்று சிகிச்கை

B) எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

C) எலும்பு மாற்று சிகிச்சை

D) இனசெல் மாற்று சிகிச்சை

விளக்கம்: சில குழந்தைகளில் அடினோசின் டி அமினேஸ் குறைபாட்டை, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதில், குறைபாடுடைய நோய்த்தடை செல்களை கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நலமான நோய்த்தடை செல்களைக்கொண்டு பதிலீடு செய்யப்படுகிறது. சில நோயாளிகளில், நொதி பதிலீட்டு சிகிச்சை முறையாக, செயல்நிலை ADA நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது.

48. மரபணு சிகிச்சையின்போது நோயாளியின் இரத்தத்திலிருந்து______________பிரித்தெடுக்கப்படுகிறது.

A) த்ரம்போசைட்டுகள்

B) லியூக்கோசைட்டுகள்

C) லிம்போசைட்டுகள்

D) எரித்ரோசைட்டுகள்

விளக்கம்: மரபணு சிகிச்சையின்போது நோயாளியின் இரத்தத்திலிருந்து லிம்போசைட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு, ஒரு ஊட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. ADA நொதி உற்பத்திக்குக் குறியீடு செய்யும் நலமான, செயல்நிலை மனித மரபணுவான ADAcDNAவை ரெட்ரோவைரஸ் கடத்தியின் உதவியுடன் லிம்போசைட்டுகளுக்குள் செலுத்தப்படுகிறது. இவ்வாறு மரபுப்பொறியியல் செய்யப்பட்ட லிம்போசைட்டுகளை மீண்டும் மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

49. முழுமையான செயல்பாட்டுடனும் வெளிப்படுத்து திறனுடனும் உள்ள மரபணுக்களை உடற்செல்லுக்குள் செலுத்தி மரபியல் நோயை நிரந்தமாக சரி செய்யும் முறை______________

A) உடற்செல் மரபணு சிகிச்சை

B) இனச்செல் மரபணு சிகிச்சை

C) தசைச்செல் மரபணு சிகிச்சை

D) உடற்கூறு மரபணு சிகிச்சை

விளக்கம்: முழுமையான செயல்பாட்டுடனும் வெளிப்படுத்து திறனுடனும் உள்ள மரபணுக்களை உடற்செல்லுக்குள் செலுத்தி மரபியல் நோயை நிரந்தமாக சரி செய்யும் முறை ‘உடற்செல் மரபணு சிகிச்சை’ என்றழைக்கப்படுகிறது.

50. மரபணுக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லும் வகையில் இனச் செல்களுக்குல் டி.என்.ஏ வைச் செலுத்தி சரி செய்யும் முறைக்கு_________என்று பெயர்.

A) உடற்செல் மரபணு சிகிச்சை

B) இனச்செல் மரபணு சிகிச்சை

C) தசைச்செல் மரபணு சிகிச்சை

D) உடற்கூறு மரபணு சிகிச்சை

51. பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள்______________

A) நரம்பு செல்கள்

B) எலும்பு செல்கள்

C) தசைச் செல்கள்

D) தண்டு செல்கள்

விளக்கம்: பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் ‘தண்டு செல்கள்’ ஆகும். இவை பல மறைமுகப்பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடு அடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.

52. தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் இயல்புடைய செல்கள்___________

A) நரம்பு செல்கள்

B) எலும்பு செல்கள்

C) தண்டு செல்கள்

D) தசைச் செல்கள்

விளக்கம்: தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் இயல்புடைய ‘தண்டு செல்கள்’ ‘செல் திறனை’ வெளிப்படுத்துகின்றன. மூன்று வகை வளர்ச்சி அடுக்குகளான புற அடுக்கு, அக அடுக்கு மற்றும் நடு அடுக்கு ஆகிய அடுக்குகளிலிருந்து உருவாகும். அனைத்து வகை செல்களாகவும் மாறும் திறன் படைத்தவை தண்டு செல்கள் ஆகும்.

53. பாலூட்டிகளில் காணப்படும் முக்கிய தண்டு செல் வகைகள்______________

A) கருநிலை தண்டு செல்கள்

B) இள நிலை தண்டு செல்கள்

C) முதிர் நிலை தண்டு செல்கள்

D) A,C இரண்டும்

விளக்கம்: பாலூட்டிகளில் இரு முக்கிய தண்டு செல் வகைகள் காணப்படுகின்றன. அவை கருநிலை தண்டு செல்கள் மற்றும் முதிர் தண்டு செல்கள் ஆகியவையாகும்.

54. கருநிலை தண்டு செல்கள் பற்றிய கூற்றுக்களில் பொருந்தாததைக் கண்டறி.

A) கருநிலை தண்டு செல்கள் ‘பகுதித்திறன்’ கொண்டவை. அவற்றிற்கு புற அடுக்கு, நடு அடுக்கு மற்றும் அக அடுக்கு என்னும் மூன்று அடிப்படை வளர்ச்சி அடுக்குகளையும் உருவாக்கும் திறன் உள்ளது.

B) கருநிலை செல்கள் பல்திறன் கொண்டவையாகவும் விளங்குகின்றன.

C) இவை பலவகையான செல்களாக மாற்றமுறும் திறன் அற்றவை.

D) கருக்கோளத்தினுள் காணப்படும் செல்திரளின் மேற்பகுதி திசுக்களில் இருந்து கருநிலை தண்டு செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

விளக்கம்: இவை பலவகையான செல்களாக மாற்றமுறும் திறன் படைத்தவை.

55. முதிர் தண்டு செல் பற்றிய கூற்றுகளில் சரியற்றதைக் கண்டறி:

A) குழந்தைகள் மற்றும் முதிர்ந்த மனிதர்களின் பல்வேறு திசுக்களில் முதிர் தண்டு செல்கள் காணப்படுகின்றன.

B) முதிர் தண்டு செல் அல்லது உடல் தண்டு செல் பிரிதலடைந்து தன்னைப்போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலாது.

C) பெரும்பாலான முதிர் தண்டு செல்கள் பல்திறன் கொண்டவை.

D) இவை உடலின் சேதமுற்ற பாகங்களைச் சரி செய்யும் அமைப்பாகவும் முதிர் உயிரி திசுக்களைப் புதுப்பிக்கும் அமைப்பாகவும் திகழ்கின்றன.

விளக்கம்: முதிர் தண்டு செல் அல்லது உடல் தண்டு செல் பிரிதலடைந்து தன்னைப்போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலும்.

56. முதிர் தண்டு செல்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மூலாதாரமாக விளங்குவது_____________

A) பிளாஸ்மா

B) இரத்த செல்கள்

C) சிவப்பு மஜ்ஜை

D) கல்லீரல் செல்

57. புதிய மருந்துகளைச் சோதனை செய்து பார்க்க உதவும் மனித செல்கள்______________

A) பிளாஸ்மா

B) இரத்த செல்கள்

C) சிவப்பு மஜ்ஜை

D) தண்டு செல்கள்

விளக்கம்: மனித தண்டு செல்களின் மிக முக்கியமான திறன் வாய்ந்த பயன்பாடு என்னவெனில், செல் அடிப்படையிலான சிகிச்சைகளுக்குப் பயன்படும் செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்தல் ஆகும். மனித தண்டு செல்கள் புதிய மருந்துகளைச் சோதனை செய்து பார்க்க உதவுகின்றன.

58. ஒற்றைச் செல், பிரிதலைடைந்து ஒரு உயிரியின் அனைத்து வகையான வேறுபாடடைந்த செல்களையும் உருவாக்கும் திறன்______________

A) முழுமைத்திறன்

B) பகுதித்திறன்

C) பல்திறன்

D) குறுதிறன்

விளக்கம்: முழுமைத்திறன் எனப்படுவது, ஒற்றைச் செல், பிரிதலைடைந்து ஒரு உயிரியின் அனைத்து வகையான வேறுபாடடைந்த செல்களையும் உருவாக்கும் திறனாகும்.

59. தண்டு செல்லானது புற அடுக்கு. அக அடுக்கு நடு அடுக்கு என்னும் மூவகை அடுக்குகளில் ஏதேனும் ஒரு செல் அடுக்காக மாறும் திறன்_________எனப்படுகிறது.

A) முழுமைத்திறன்

B) பகுதித்திறன்

C) பல்திறன்

D) குறுதிறன்

விளக்கம்: பகுதித்திறன் எனப்படுவது, தண்டு செல்லானது புற அடுக்கு, அக அடுக்கு, நடு அடுக்கு என்னும் மூவகை அடுக்குகளில் ஏதேனும் ஒரு செல் அடுக்காக மாறும் திறனாகும்.

60. தொடர்புடைய, பலவகை செல்வகைகளாக மாற்றமுறும் தண்டு செல்களின் திறன்____________எனப்படுகிறது.

A) முழுமைத்திறன்

B) பகுதித்திறன்

C) பல்திறன்

D) குறுதிறன்

விளக்கம்: பல்திறன் எனப்படுவது, தொடர்புடைய பலவகை செல்வகைகளாக மாற்றமுறும் தண்டு செல்களின் திறனாகும். எடுத்துக்காட்டாக, இரத்தத்தண்டு செல்கள், லிம்போசைட்டுகள், மோனோசைட்டுகள், நியூட்ரோஃபில்கள் மற்றும் இன்னபிற செல்களாக வேறுபாடடைதல்.

61. தண்டு செல்கள் சில வகை செல்களாக மட்டும் வேறுபாடடையும் திறனுக்கு_____________என்று பெயர்.

A) முழுமைத்திறன்

B) பகுதித்திறன்

C) பல்திறன்

D) குறுதிறன்

விளக்கம்: குறுதிறன் எனப்படுவது, தண்டு செல்கள், சில வகை செல்களாக மட்டும் வேறுபாடடையும் திறனாகும். எடுத்துக்காட்டாக லிம்ஃபாய்டு அல்லது மயலாய்டு தண்டு செல்கள் B மற்றும் T செல்களாக மட்டும் வேறுபாடடைதல், ஆனால் RBC யாக வேறுபாடடைவதில்லை.

62. தண்டு செல்கள் ஒரேயொரு செல்வகையாக மட்டும் வேறுபாடடையும் திறன் என்பது_______________

A) முழுமைத்திறன்

B) ஒற்றைத்திறன்

C) பல்திறன்

D) குறுதிறன்

63. தண்டு செல் வங்கிகள் எனப்படுவது கீழ்க்கண்ட எதனை உள்ளடக்கியது.

A) செல்களைப் பிரித்தெடுத்தல்

B) பதப்படுத்துதல்

C) சேமித்து வைத்தல்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: தண்டு செல் வங்கிகள் எனப்படுவது எதிர்கால சிகிச்சைத் தேவைகளுக்காக தண்டு செல்களைப் பிரித்தெடுத்தல், பதப்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கியதே தண்டு செல் வங்கியியல் எனப்படும்.

64. கூற்று (i): பனிக்குட திரவத்திலிருந்து பெறப்படும் தண்டு செல்களை எதிர்காலப் பயன்பாட்டிற்காகச் சேமித்து வைக்கும் வசதி கொண்ட இடத்திற்கு பனிக்குட திரவ செல் வங்கி என்று பெயர்.

கூற்று (ii): குழந்தை பிறக்கும்போது அதன் தொப்புள் கொடியிலிருந்து தண்டு செல்களைப் பிரித்தெடுத்து அவற்றைச் சேமிக்கும் முறைக்கு தொப்புள்கொடி இரத்த வங்கியியல் என்று பெயர். A) கூற்று i சரி ii தவறு

B) கூற்று i தவறு ii சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

65. 1971ல் எலைசா சோதனையைக் கண்டறிந்தவர்கள்_____________

A) எவா எங்வால்

B) பீட்டர் பெர்ல்மான்

C) பீட்டர் ஆன்டர்ஸன்

D) A,B இரண்டும்

விளக்கம்: சீரம் அல்லது சிறுநீர் மாதிரியின் குறிப்பிட்ட வகை எதிர்ப்பொருள் அல்லது எதிர்ப்பொருள் தூண்டிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய எவா எங்வால் மற்றும் பீட்டர் பெர்ல்மான் ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர்வேதி செய்முறையே எலைசா ஆகும்.

66. ஒரு நபர் HIV தொற்று கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் சோதனை முறை____________

A) வெஸ்ட்ரன் பிளாட் சோதனை

B) எலைசா சோதனை

C) ஜான்டிஸ் சோதனை

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: ஒரு நபர் HIV தொற்று கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் மிக முக்கியமான கருவியாக எலைசா சோதனை விளங்குகிறது. ஒரு நபரின் உடலில் உள்ள சீரத்தில் எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானிக்கவும் குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகள், மனித கோரியானிக் கொனடோட்ரோபின் போன்ற ஹார்மோன்கள் ஆகியவற்றைக் கண்டறிவும் எலைசா ஒரு சோதனைக் கருவியாக உள்ளது.

67. ஒரு நபரின் உடலில் உள்ள சீரத்தில் எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானிக்க உதவும் சோதனை முறை_______________

A) எலைசா சோதனை

B) வெஸ்ட்ரன் பிளாட் சோதனை

C) ஜான்டிஸ் சோதனை

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: ஒரு நபர் HIV தொற்று கொண்டவரா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் மிக முக்கியமான கருவியாக எலைசா சோதனை விளங்குகிறது. ஒரு நபரின் உடலில் உள்ள சீரத்தில் எதிர்ப்பொருள் அளவைத் தீர்மானிக்கவும் குறிப்பிட்ட எதிர்ப்பொருள் தூண்டிகள், மனித கோரியானிக் கொனடோட்ரோபின் போன்ற ஹார்மோன்கள் ஆகியவற்றைக் கண்டறிவும் எலைசா ஒரு சோதனைக் கருவியாக உள்ளது.

68. நேனோகிராம் அளவிலுள்ள எதிர்ப்பொருள் துண்டிகளைக்கூட கண்டறிய உதவும் அதி உணர்திறன் கொண்ட சோதனை முறை____________

A) வெஸ்ட்ரன் பிளாட் சோதனை

B) ஜான்டிஸ் சோதனை

C) எலைசா சோதனை

D) PCR சோதனை

விளக்கம்: எலைசா என்பது நேனோகிராம் அளவிலுள்ள எதிர்ப்பொருள் தூண்டிகளைக்கூட கண்டறிய உதவும் அதி உணர்திறன் கொண்ட முறையாகும்.

69. கதிர்வீச்சு ஐசோடோப்புகளோ, கதிர்வீச்சு அளவிடும் கருவிகளோ தேவைப்படாத ஒரு எளிய சோதனை முறை_________

A) வெஸ்ட்ரன் பிளாட் சோதனை

B) ஜான்டிஸ் சோதனை

C) எலைசா சோதனை

D) PCR சோதனை

விளக்கம்: நான்கு வகையான எலைசா சோதனைகள் உள்ளன. அவை, நேரடி எலைசா, மறைமுக எலைசா, இடையடுக்கு எலைசா மற்றும் போட்டியிடும் எலைசா ஆகியனவாகும். கதிர்வீச்சு ஐசோடோப்புகளோ, கதிர்வீச்சு அளவிடும் கருவிகளோ தேவைப்படாத ஒரு முறையாக எலைசா இருப்பது அதன் தனிச்சிறப்பு ஆகும்.

70. பாலிமெரேஸ் சங்கிலி வினை பற்றிய கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி.

1) நமக்கு விருப்பமான டி.என்.ஏ துண்டுகளை எண்ணற்ற ஒத்த நகல்களாக அதிக அளவில் பெருக்கம் செய்யப் பயன்படும் ஒரு உடல் வெளி ஆய்வகத் தொழில் நுட்பமாக பாலிமரேஸ்சங்கிலி வினை செயல்படுகிறது.

2) 1983-ல் கேரி முல்லிஸ் என்பவரால் இத்தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

3) இயல்பு திரிபு அல்லது முதன்மை இணைப்பு இழை பதப்படுத்தல் மற்றும் அதன் உற்பத்தி அல்லது நீட்சி ஆகிய மூன்று நிலைகள் பாலிமரேஸ் சங்கிலி வினையில் நடைபெறுகின்றன.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

71. மரபுக்குறைபாடுகள், வைரஸ்நோய்கள், பாக்டீரிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய பயன்படும் சோதனை முறை______________

A) PCR முறை

B) ஜான்டிஸ் சோதனை முறை

C) எலைசா சோதனை முறை

D) மேற்கண்ட எதுமில்லை

விளக்கம்: மரபியக்குறைபாடுகள், வைரஸ்நோய்கள், பாக்டீரிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய PCR ன் இலக்குத் தன்மை மற்றும் உணர்திறன் மிகவும் பயன்படுகிறது.

72. PCR முறை சோதனைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ மாதிரி__________

A) இரத்தம்

B) தண்டுவட திரவம்

C) சளி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இரத்தம், மலம், தண்டுவட திரவம், சளி போன்ற மருத்துவ மாதிரிகளில் PCR முறைப்படி பரிசோதிப்பதன் மூலம் நோய் வகைகளைக் கண்டறியலாம்.

73. குழந்தை பிரப்பதற்கு முன்பே அக்குழந்தைக்கு மரபியல் நோய்கள் உள்ளனவா என்பதைக் எவ்வாறு கண்டறியலாம்.

A) கோரியான் நீட்சிகளின் மாதிரிகளைப் ஆய்வு செய்தல்

B) பனிக்குட திரவ செல்களை ஆய்வு செய்தல்

C) நரம்பு செல்களை ஆய்வு செய்தல்

D) A,B இரண்டும்

விளக்கம்: கோரியான் நீட்சிகளின் மாதிரிகளைப் பயன்படுத்தியோ அல்லது பனிக்குட திரவ செல்களை ஆய்வதன் மூலமோ குழந்தை பிறப்பதற்கு முன்பே அக்குழந்தைக்கு மரபியல் நோய்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியலாம்.

74. PCR சோதனை முறை மூலம் கண்டறியப்படும் நோய்களைக் கண்டறி.

A) கதிர் அரிவாள் இரத்த சோகை

B) தலாசீமியா

C) ஃபினைல்கீட்டோனூரியா

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: கதிர் அரிவாள் இரத்த சோகை, தலாசீமியா, ஃபினைல்கீட்டோனூரியா போன்ற நோய்களையும் PCR முறையில் கண்டறிந்து விடலாம்.

75. ரெட்ரோவைரஸ் தொற்றுகளைக் கண்டறியவும் கண்காணிக்கவும் உதவும் ஒரு மதிப்பு மிகுந்த கருவி______________

A) எலைசா

B) ஜான்டிஸ்

C) வெஸ்ட்டன் பிளாட்

D) PCR

விளக்கம்: PCR மூலம் கண்டறியப்படும் cDNA வானது ரெட்ரோவைரஸ் தொற்றுகளைக் கண்டறியவும் (எ.கா. மைகோபாக்டீரியம் டியுபர்குலோசிஸ்) கண்காணிக்கவும் உதவும் ஒரு மதிப்பு மிகுந்த கருவியாகும்.

76. பாப்பிலோமா வைரஸால் தோற்றுவிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்று நோய் போன்ற வைரஸ்களால் தூண்டப்படும் புற்று நோய்களைக் கண்டறிய உதவும் முறை____________

A) PCR

B) எலைசா

C) ஜான்டிஸ்

D) வெஸ்ட்டன் பிளாட்

விளக்கம்: PCR முறை மூலம், பாப்பிலோமா வைரஸால் தோற்றுவிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்று நோய் போன்ற வைரஸ்களால் தூண்டப்படும் புற்று நோய்களைக் கண்டறிய இயலும்.

77. PCR யை பயன்படுத்தி செய்யும் சோதனை முறைகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) மனிதக்கரு கண்டறிதல்

B) கால் நடைகளின் கருவை கண்டறிதல்

C) வெளிக்கருக்களின் பால் தன்மையைக் கண்டறிதல்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: முதன்மை இழைகளையும் டி.என்.ஏ துலக்கியையும் பயன்படுத்தி பால் குரோமோசோம்களைக் கண்டறிந்து மனிதக்கரு, கால் நடைகளின் கரு மற்றும் உடல் வெளிக்கருக்களின் பால் தன்மையை PCR முறையில் கண்டறியலாம்.

78. கருவுற்ற முட்டையில் ஏதேனும் பால் சார்ந்த குறைபாடுகள் உள்ளதா எனக் கண்டறிய உதவும் முறை___________

A) எலைசா

B) ஜான்டிஸ்

C) வெஸ்ட்டன் பிளாட்

D) PCR

79. PCR யின் பயன்பாடுகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) இரு வேறு உயிரிகளின் மரபணுத் தொகுதியில் காணப்படும் வேறுபாடுகளை PCR மூலம் ஆய்வு செய்யலாம்.

B) பரிணாமத்தில், குறிப்பாக, மரபுவழி இனவரலாறுகளை ஆய்வு செய்ய PCR மிக முக்கியமானதாகும்.

C)முடி, பதப்படுத்தப்பட்ட திசுக்கள், எலும்புகள் அல்லது ஏதேனும் படிவமாக்கப்பட்ட பொருள்கள் போன்ற மூலங்களிலிருந்து கிடைக்கப்பெறும் நுண்ணிய அளவு ஆர்.என்.ஏ க்களைக் கூட அளவில் பெருக்கி ஆய்வுகள் மேற்கொள்ள இயலும்.

D) தடயவியல் மருத்துவத்திலும் PCR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

விளக்கம்: இதில், முடி, பதப்படுத்தப்பட்ட திசுக்கள், எலும்புகள் அல்லது ஏதேனும் படிவமாக்கப்பட்ட பொருள்கள் போன்ற மூலங்களிலிருந்து கிடைக்கப்பெறும் நுண்ணிய அளவு டி.என்.ஏ க்களைக் கூட அளவில் பெருக்கி ஆய்வுகள் மேற்கொள்ள இயலும்.

80. தடயவியல் துறையில் PCR யின் பயன்பாடுகளுல் பொருந்தாதது எது.

1) இரத்தக்கறை, மயிர், விந்து திரவம் போன்ற தடயங்களிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரேயொரு டி.என்.ஏ மூலக்கூறைக்கூட PCR தொழில்நுட்பம் மூலம் பெருக்கி ஆய்வு செய்ய இயலும்.

2) இவ்வாறு பெருக்கப்பட்ட டி.என்.ஏ வைப் பயன்படுத்தி டி.என்.ஏ ரேகை அச்சிடப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் ஒரு கருவியாக, தடவியல் அறிவியலில் பயன்படுத்தலாம்.

3) மரபணு சிகிச்சையில், குறிப்பிட்ட ஆர்.என்.ஏ துண்டங்களை உற்பத்தி செய்து பெருக்குவதற்கும் PCR பயன்படுகிறது.

A) 1, 2 மட்டும் தவறு

B) 1, 3 மட்டும் தவறு

C) அனைத்தும் தவறு

D) 3 மட்டும் தவறு

விளக்கம்: மரபணு சிகிச்சையில், குறிப்பிட்ட டி.என்.ஏ துண்டங்களை உற்பத்தி செய்து பெருக்குவதற்கும் PCR பயன்படுகிறது.

81. மரபணு மாற்றம் குறித்தக் கருத்துகளுல் தவறானதைக் கண்டறி.

1) உயிரிகளின் மரபணுத் தொகுதிக்குள் புதிய, மிகைப்படியான டி.என்.ஏக்களை நுழைத்து நிலையான மரபியல் மாற்றங்களை விரும்பிய வண்ணம் தோற்றுவிக்கு முறைக்கு மரபணு மாற்றம் என்று பெயர்.

2) இவ்விதம் உள் நுழைக்கப்படும் அந்நிய DNA வானது ‘மாற்று மரபணு’ எனவும், இதனால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை ‘மரபுப்பொறியில் மூலம் மாற்றப்பட்ட’ அல்லது ‘மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள்’ என்று அழைக்கலாம்.

A) கூற்று 1 சரி,2 தவறு

B) கூற்று 1 தவறு,2 சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

82. இதுவரை மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உயிரிணங்களைக் கண்டறி.

A) சுண்டெலி

B) முயல்

C) பன்றி

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: சுண்டெலி, எலி, முயல், பன்றி, பசு, வெள்ளாடு செம்மறியாடு மற்றும் மீன் ஆகியவற்றில் மரபணு மாற்ற வகைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

83. மரபணு மாற்றுதலின் பயன்பாடுகளில் தவறானதைக் கண்டறி:

A) உயர்வகை உயிரிகளில் மரபணு வெளிப்பாட்டையும் வளர்ச்சி செயல்முறைகளையும் அறிந்து கொள்ள உதவும் சக்தி வாய்ந்த கருவியாக மரபணு மாற்றம் உள்ளது.

B) மரபணு மாற்றம் விலங்குகளின் மரபுப் பண்புகளை மேம்படுத்த உதவுகிறது.

C) மரபணு மாற்ற விலங்குகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் புரதங்கள் மருத்துவத்துறையிலும் மருந்து உற்பத்தித் துறையிலும் முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.

D) தடுப்பூசிகளின் பாதுகாப்புத்தன்மையைச் சோதிப்பதற்கு மரபணு மாற்ற கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

விளக்கம்:தடுப்பூசிகளின் பாதுகாப்புத்தன்மையைச் சோதிப்பதற்கு மரபணு மாற்ற சுண்டெலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

84. மரபணு மாற்றுதலின் பயன்பாடுகளில் சரியானக் கூற்றினைக் கண்டறி:

1) பாலின் அளவையும் தரத்தையும் மேம்படுத்துவதற்கும், மாமிசம், முட்டைகள் மற்றும் கம்பளி உற்பத்திக்கும், மருந்து எதிர்ப்புத்தன்மையைப் பரிசோதிப்பதற்கும் மரபியல்பு மாற்றுதல் முக்கியப் பங்காற்றுகிறது.

2) மனித நோய்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றிற்குரிய புதிய சிகிச்சை முறைகளைப்பற்றி ஆய்வு செய்யவும் உதவும் நல்ல மாதிரிகளாக மரபணு மாற்ற விலங்குகள் விளங்குகின்றன.

A) கூற்று 1 சரி,2 தவறு

B) கூற்று 1 தவறு,2 சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

85. தற்போது கிடைக்கப்பெறும் மறுச்சேர்க்கை புரதங்களைக் கண்டறி.

A) இன்சுலின்

B) மனித வளர்ச்சி ஹார்மோன்கள்

C) மனித ஆல்ஃபா லாக்டால்புமின்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: மறுசேர்க்கை ஹார்மோன்களான இன்சுலின், மனித வளர்ச்சி ஹார்மோன்கள், மறுசேர்க்கை தடுப்பூசிகள் மற்றும் மனித ஆல்ஃபாலாக்டால்புமின் போன்ற மறுசேர்க்கைப் புரதங்கள் தற்போது கிடைக்கின்றன.

86. கூற்று (i): விலங்கு நகலாக்கம் என்பது ஒரு உயிரிலிருந்து மரபொத்த பல உயிரிகளை இயற்கை முறை அல்லது செயற்கை முறையில் உருவாக்குவது ஆகும்.

கூற்று (ii): இயற்கையில் பல உயிரினங்கள் நகலாக்கம் எனும் பால் இனப்பெருக்க முறையை மேற்கொள்கின்றன.

A) கூற்று i சரி,ii தவறு

B) கூற்று i தவறு,ii சரி

C) கூற்று i,ii இரண்டும் சரி

D) கூற்று i,ii இரண்டும் தவறு

விளக்கம்: விலங்கு நகலாக்கம் என்பது ஒரு உயிரிலிருந்து மரபொத்த பல உயிரிகளை இயற்கை முறை அல்லது செயற்கை முறையில் உருவாக்குவது ஆகும். இயற்கையில் பல உயிரினங்கள் நகலாக்கம் எனும் பாலிலி இனப்பெருக்க முறையை மேற்கொள்கின்றன.

87. ஐயன் வில்மட் மற்றும் கேம்பல் என்பவர்களால் முதன் முதலில் நகலாக்கம் செய்யப்பட்ட பாலூட்டி____________

A) வெள்ளாடு

B) செம்மறியாடு

C) கழுதை

D) சுண்டெலி

விளக்கம்: ஐயன் வில்மட் மற்றும் கேம்பல் ஆகியோர் 1997 ல் முதன் முதலில் டாலி எனும் முதல் பாலூட்டியை (செம்மறி ஆடு) நகலாக்கம் செய்தனர்.

88. டாலி எனும் பாலூட்டி நகலாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஆண்டு____________

A) 1991

B) 1993

C) 1995

D) 1997

89. டாலி நகலாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட நிகழ்வுகளுல் பொருந்தாததைக் கண்டறி.

A) கொடையாளி செம்மறி ஆட்டின் பால்மடி செல்கள் தனிமைப் படுத்தப்பட்டு 5 நாட்களுக்கு உணவூட்டமின்றி வைக்கப்பட்டது,

B) பின் மடி செல்கள் இயல்பான வளர்ச்சி அடையாமல் உறக்க நிலையை அடைந்து முழுமைத்திறனைப் பெறுகின்றது. மற்றொரு செம்மறி ஆட்டின் அண்டசெல் பிரித்தெடுக்கப்ட்டு உட்கரு வெளியேற்றப்படுகின்றது.

C) பின்னர் உறக்க நிலை மடிசெல் மற்றும் உட்கரு நீக்கிய அண்ட செல் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு மடிசெல்லின் வெளியறை சிதைக்கப்பட்டு உட்கருவைச் சுற்றி அண்ட செல் சூழும்படி செய்யப்பட்டது. இவ்வாறு ஒன்றிணைந்த செல் பிரிதொரு செம்மறி ஆட்டின் கருப்பையில் பதிவேற்றப்பட்டது.

D) ஓராண்டுக்குப்பின் ‘டாலி பிறந்தது.

விளக்கம்: 5 மாதங்களுக்குப்பின் ‘டாலி பிறந்தது.

90. விலங்கு நகலாக்கத்தின் நன்மைகளுல் பொருந்தாதது எது.

1) மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் கொழுப்புகள் மற்றும் மருந்துகள் உற்பத்திக்கு உதவுகின்றது.

2) தண்டு செல் ஆராய்ச்சிக்கு வழிகோலுகிறது.

A) 1 மட்டும்தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் புரதங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்திக்கு உதவுகின்றது.

91. விலங்கு நகலாக்கத்தின் தீமைகளுல் பொருந்தாதது எது.

A) நகலாக்க செயல்முறை கடினமானது மற்றும் விலையுயர்ந்தது.

B) இச் செயலால் விலங்குகள் பாதிப்படைவதில்லை.

C) வாடகைத்தாய் உயிரிகள், எதிர்மறையாகி கேடுகளுக்கு ஆட்படுவதுடன் நகலாக்க விலங்குகள் நோய் பாதிப்புக்கு உட்பட்டு உயர்இறப்பு வீதம் ஏற்படுகின்றது.

D) நகலாக்க விலங்குகளின் இறைச்சியை உண்பதால் உடல் நலனில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.

விளக்கம்: இச் செயலால் விலங்குகள் பாதிப்படைகின்றன.

92. விலங்கு நகலாக்கத்தின் தீமைகளுல் பொருந்தாதது எது.

A) இயல்பான விலங்குகளைவிட நகலாக்க விலங்குகள் விரைவாக மூப்படைவதுடன், பெற்றோர் உயிரியைவிட குறைந்த நலமுடையனவாக உள்ளன.

B) நகலாக்க விலங்குகளில் மரபுக் கோளாறுகள் தோன்றுகின்றன.

C)90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்கும் தன்மையைப் பெறுகின்றன.

D) விலங்கு மற்றும் மனித செயல் முனைவோர் நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமைக்கான சவாலானது எனக் கருதுகின்றனர்.

விளக்கம்: 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.

93. ஐயன் வில்மட் மற்றும் கேம்பல் என்பவர்கள் நகலாக்க சோதனைக்கு எடுத்துக்கொண்ட மடி செல்களின் எண்ணிக்கை____________

A) 200

B) 217

C) 227

D) 237

விளக்கம்: ஐயன் வில்மட் மற்றும் கேம்ப்பெல் முதிர்ந்த செம்மறி ஆட்டின் 227 மடிசெல்களை 227 உட்கரு நீக்கிய அண்டசெல்களுடன் ஒன்றிணைத்தனர். 6 நாட்கள் கருவளர்ச்சிக்குப்பின் 29 வளர்கருக்களை வாடகைத்தாய் கருப்பையில் பதித்தனர். அவற்றில் ஒன்று மட்டுமே ‘டாலி’ யாக உற்பத்தியானது.

94. ஒரு உயிரியிலுள்ள குரோமோசோம்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களை மரபுப்பொறியியல் வாயிலாக செயல்பட இயலாமல் செய்வதன்தென்பது_______________

A) குரோமோசோம் வெளியேற்றம்

B) ஜீன் மாற்றம்

C) மரபணு வெளியேற்றம்

D) மரபணு ஏற்றம்

விளக்கம்: மரபணு வெளியேற்றம் என்பது ஒரு உயிரியிலுள்ள குரோமோசோம்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்களை மரபுப்பொறியியல் வாயிலாக செயல்பட இயலாமல் செய்வதாகும்.

95. மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகளை உள்ளடக்கிய உயிரிய தொழில்நுட்பவியல் வழி உற்பத்திப் பொருட்கள் பயன்பாட்டை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு______________

A) சுற்று சூழல் ஆணையம்

B) உலக உயிரிய தொழில்நுட்ப நெறிப்படுத்து ஆணையம்

C) இந்திய உயிரிய தொழில்நுட்ப நெறிப்படுத்து ஆணையம்

D) மாநில உயிரிய தொழில்நுட்ப நெறிப்படுத்து ஆணையம்

விளக்கம்: இந்திய உயிரிய தொழில்நுட்ப நெறிப்படுத்து ஆணையம் மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகளை உள்ளடக்கிய உயிரிய தொழில்நுட்பவியல் வழி உற்பத்திப் பொருட்கள் பயன்பாட்டை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

96. நம் நாட்டில் மரபுப்பொறியியல் உற்பத்திப் பொருட்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அமைப்பு______________

A) மரபுப்பொறியியல் ஒப்புதல் குழுமம்

B) மரபியல் குழுமம்

C) சுற்று சூழல் ஆணையம்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இந்திய வனங்கள், சூழ்நிலை மாற்றம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆளுகையில் உள்ள மரபுப்பொறியியல் ஒப்புதல் குழுமம் நம் நாட்டில் மரபுப்பொறியியல் உற்பத்திப் பொருட்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அமைப்பு ஆகும்.

97 உயிரிய தொழில் நுட்பவியல் நெறிப்படுத்து ஆணையத்தின் துணைப்பிரிவு___________

A) மரபுப்பொறியியல் ஒப்புதல் குழுமம்

B) சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு

C) உலக சுற்றுச்சூழல் குழுமம்

D) உலக சுகாதார நிறுவனம்

98. மரபுப்பொறியியல் ஒப்புதல் குழுமத்திற்கு உதவி புரியும் அமைப்பு__________

A) இந்திய உயிரிய தொழில் நுட்ப ஒருங்கிணைப்புக் குழுமம்

B) மாநில உயிரிய தொழில் நுட்ப ஒருங்கிணைப்புக் குழுமம்

C) மாவட்ட உயிரிய தொழில் நுட்ப ஒருங்கிணைப்புக் குழுமம்

D) B,C இரண்டும்

விளக்கம்: சட்டப்படியான தன்னாட்சி நிறுவனமான நெறிப்படுத்து அமைப்பு உயிரிய தொழில்நுட்ப உற்பத்திப் பொருட்கள் மற்றும் உயிரிகளைப்பற்றி ஆராய்ச்சி, இறக்குமதி, போக்குவரத்து மற்றும் உற்பத்தி ஆகியனவற்றை நெறிப்படுத்துகின்றது. மாநில உயிரிய தொழில் நுட்ப ஒருங்கிணைப்புக் குழுமம் மற்றும் மாவட்ட உயிரிய தொழில் நுட்ப ஒருங்கிணைப்புக் குழுமம் ஆகியன மரபுப்பொறியியல் ஒப்புதல் குழுமத்திற்கு துணைப் புரிவதாகும்.

99. உயிரிய தொழில்நுட்பவியல் துறையால் டி.என்.ஏ பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் வெளியிடப்பட்ட ஆண்டு____________

A) 1990

B) 1991

C) 1993

D) 1994

விளக்கம்: 1990 ல் உயிரிய தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்பட்ட மறுசேர்க்கை டி.என்.ஏ பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் மரபுப்பொறியியலால் மாற்றப்படும் உயிரிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை உள்ளடக்கியதாகும்.

100. உயிரிய தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்பட்ட டி.என்.ஏ பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் திருத்தப்பட்ட ஆண்டு_____________

A) 1990

B) 1991

C) 1993

D) 1994

விளக்கம்: 1990 ல் உயிரிய தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்பட்ட மறுசேர்க்கை டி.என்.ஏ பாதுகாப்பு வழிகாட்டி முறைகள் மரபுப்பொறியியலால் மாற்றப்படும் உயிரிகள் தொடர்பான ஆராய்ச்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த வழிகாட்டி முறைகள்,1994 ல் மேலும் திருத்தி அமைக்கப்பட்டது.

101. டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெருமளவு மருந்து உற்பத்தி செய்யும் தொழிலகங்களுக்கு உரிமம் வழங்கும் விதி_____________

A) விதி 1943

B) விதி 1945

C) விதி 1950

D) விதி 1951

விளக்கம்: டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெருமளவு மருந்து உற்பத்தி செய்யும் தொழிலகங்களுக்கு உரிமம் பெறுவது தொழிற்சாலை விதி 1951 ன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

102. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி அறிவுசார் சொத்துரிமை வர்த்தகத்தின் கையொப்பதாரர் எனும் முறையில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட காப்புரிமை விதி____________

A) காப்புரிமை விதி 1991

B) காப்புரிமை விதி 1993

C) காப்புரிமை விதி 1996

D) காப்புரிமை விதி 1999

விளக்கம்: உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி அறிவுசார் சொத்துரிமை வர்த்தகத்தின் கையொப்பதாரர் எனும் முறையில் இந்தியா, காப்புரிமை விதி 1999 உட்பட பல்வேறு அறிவுசார் சொத்துகளின் மீதான சட்ட விதிகளில் திருத்தங்களைச் செய்துள்ளது.

103. உயிரிய பாதுகாப்புக்காக முறை சாரா பணிக் குழுக்களை உருவாக்கிய அமைப்பு______________

A) உலக சுகாதார நிறுவனம்

B) இந்திய ஆய்வு நிறுவனம்

C) உலக வர்த்தக அமைப்பு

D) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்

விளக்கம்: மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள் வளர்ச்சி பற்றி கருத்துகள் புவியளவில் வளர்ந்து வருவதால் உலக சுகாதார நிறுவனம் 1991 ஆம் ஆண்டு உயிரிய பாதுகாப்புக்காக முறை சாரா பணிக் குழுக்களை உருவாக்கியது.

104. உலக சுகாதார நிறுவனம் உயிரிய பாதுகாப்புக்காக முறை சாரா பணிக் குழுக்களை உருவாக்கிய ஆண்டு_____________

A) 1990

B) 1991

C) 1993

D) 1994

விளக்கம்: மரபியல்பு மாற்றப்பட்ட உயிரிகள் வளர்ச்சி பற்றி கருத்துகள் புவியளவில் வளர்ந்து வருவதால் உலக சுகாதார நிறுவனம் 1991 ஆம் ஆண்டு உயிரிய பாதுகாப்புக்காக முறை சாரா பணிக் குழுக்களை உருவாக்கியது. இக்குழு சுற்றுச்சூழலில் உயிரிகளை விடுவிக்க ‘தன்னார்வக் குறியீடு’ ஒன்றை தயாரித்துள்ளது.

105. தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவில் உயிரிய தொழில் நுட்பத் துறையை உருவாக்கிய அமைப்பு______________

A) உலக சுகாதார நிறுவனம்

B) இந்திய ஆய்வு நிறுவனம்

C) உலக வர்த்தக அமைப்பு

D) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்

விளக்கம்: தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவில் உயிரிய தொழில் நுட்பத் துறை(DBT) ‘rDNA பாதுகாப்பு வழிமுறை’ களை உருவாக்கியுள்ளது.

106. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்_______________

A) 1980

B) 1984

C) 1986

D) 1988

107. உலகிலேயே 1000க்கும் மேற்பட்ட காப்புரிமையை தன் கணக்கில் கொண்ட அறிவியலாளர்_______________

A) தாமஸ் அடிசன்

B) தாமஸ் ஆல்வா எடிசன்

C) ரூதர்போர்டு

D) இராபர்ட் ஹீக்

108. காப்புரிமை என்பது தோராயமாக எத்தனை ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுவதாகும்___________

A) 10 ஆண்டுகள்

B) 15 ஆண்டுகள்

C) 20 ஆண்டுகள்

D) 25 ஆண்டுகள்

விளக்கம்: ஒருவர் கண்டுபிடித்த ஒரு பொருளை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த அரசால் ஒரு குறிப்பிட்ட காலம் (இயல்பாக 20 ஆண்டுகள்) வரை முழு உரிமையை ஆவணமாக வழங்குவதே காப்புரிமை என்பதாகும்.

109. காப்புரிமை பெறத் தேவையான அடிப்படைத் தகுதிகளுல் சரியானதைக் கண்டறி.

1) கண்டுபிடிப்பு புதுமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.

2) உற்பத்திப் பொருட்கள் புதிய கண்டுபிடிப்பாகவும் மீண்டும் தயாரிக்கத் தகுந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

3) காப்புரிமை விண்ணப்பத்தில் கண்டுபிடிப்பு பற்றிய முழு விளக்கமும் இருத்தல் வேண்டும்.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 3 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

110. மரபுப் பொறியியல் மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவான சூடோமோனாஸ் புடிடா எனும் உயிரினத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்ட ஆண்டு____________

A) 1976

B) 1978

C) 1980

D) 1986

விளக்கம்: 1980ல் முதன் முதலில் காப்புரிமை பெற்ற உயிரினம் மரபுப் பொறியியல் மாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவான சூடோமோனாஸ் புடிடா ஆகும்.

111. சூடோமோனாஸ் புடிடா எனும் பாக்டீரியாவை உருவாக்கியவர்.

A) ஆனந்தன் சக்கரவர்த்தி

B) ஆனந்த மோகன் சக்கரவர்த்தி

C) ஆனந்த்கிஷோர் சக்கரவர்த்தி

D) ஆனந்த் சக்கரவர்த்தி

விளக்கம்: 1971 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆனந்த மோகன் சக்கரவர்த்தி என்பவரால் இது உருவாக்கப்பட்டது.

112. சூடோமோனாஸ் புடிடா எனும் பாக்டீரியா கண்டறியப்பட்ட ஆண்டு____________

A) 1970

B) 1971

C) 1977

D) 1980

விளக்கம்: 1971 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆனந்த மோகன் சக்கரவர்த்தி என்பவரால் இது உருவாக்கப்பட்டது.

113. பொருத்துக:

A) சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1. (1948)

B) GATE – 2. (1986)

C) டார்ஜிலிங் தேயிலை – 3. (1974)

D) நீர் பாதுகாப்புச் சட்டம் – 4. (2004)

A) 2 1 4 3

B) 2 4 3 1

C) 1 2 3 4

D) 1 3 2 4

விளக்கம்:

A) சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1. (1986)

B) GATE – 2. (1948)

C) டார்ஜிலிங் தேயிலை – 3. (2004)

D) நீர் பாதுகாப்புச் சட்டம் – 4. (1974)

114. அமெரிக்க பாராளுமன்றத்தில் அனைத்து வணிகம் மற்றும் போட்டித் தன்மை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு___________

A) 1980

B) 1984

C) 1986

D) 1988

விளக்கம்: 1988ல் அமெரிக்க பாராளுமன்றம் அனைத்து வணிகம் மற்றும் போட்டிச் தன்மை சட்டம் எனும் சட்டத்தை இயற்றி வர்த்தகம் தொடர்பான சட்ட திட்டங்களை விசாரிக்கும் அதிகாரத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வழங்கியது.

115. இந்தியாவில் முதன் முதலில் புவிசார்க் குறியீடு பெற்ற பொருள்___________

A) மஞ்சள்

B) பாசிமதி அரிசி

C) மாம்பழம்

D) டார்ஜிலிங் தேயிலை

விளக்கம்: 2004 – 05 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற பொருள் டார்ஜிலிங் தேயிலை ஆகும். காஞ்சிப்பட்டு, கோவை மாவரைக்கும் இயந்திரம், தஞ்சை வண்ண ஓவியங்கள், மதுரை மல்லிகை மற்றும் நாகர்கோவில் கோவில் ஆவரணங்கள் ஆகியன தமிழகத்தில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற சில பொருட்கள் ஆகும்.

116. இந்தியாவில் டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட ஆண்டு___________

A) 2000

B) 2004

C) 2006

D) 2008

விளக்கம்: 2004 – 05 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற பொருள் டார்ஜிலிங் தேயிலை ஆகும். காஞ்சிப்பட்டு, கோவை மாவரைக்கும் இயந்திரம், தஞ்சை வண்ண ஓவியங்கள், மதுரை மல்லிகை மற்றும் நாகர்கோவில் கோவில் ஆவரணங்கள் ஆகியன தமிழகத்தில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற சில பொருட்கள் ஆகும்.

117. தமிழகத்தில் கீழ்க்கண்ட எந்தப் பொருளுக்கு புவிசார்க் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

A) காஞ்சிப்பட்டு

B) கோவை மாவரைக்கும் இயந்திரம்

C) தஞ்சை வண்ண ஓவியங்கள்

D) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: காஞ்சிப்பட்டு, கோவை மாவரைக்கும் இயந்திரம், தஞ்சை வண்ண ஓவியங்கள், மதுரை மல்லிகை மற்றும் நாகர்கோவில் கோவில் ஆவரணங்கள் ஆகியன தமிழகத்தில் புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற சில பொருட்கள் ஆகும்.

118. 1919 ஆம் ஆண்டு உயிரி தொழில் நுட்பவியல் என்ற சொல்லை உருவாக்கியவர்______________

A) கார்ல் மார்க்ஸ்

B) கார்ல் முர்ரே

C) கார்ல் எரிகி

D) கார்ல் பியர்ல்

விளக்கம்: உறங்கேரிய வேளாண் பொறியாளர் கார்ல் எரிகி 1919 ஆம் ஆண்டு உயிரி தொழில் நுட்பவியல் என்ற சொல்லை உருவாக்கினார். உயிரிதொழில் நுட்பவியல் மரபுப்பொறியியல் மற்றும் வேதிப் பொறியியல் எனும் இரு பெரும் தொழில் நுட்பவியலை உள்ளடக்கியதாகும்.

119. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்.

A) எய்ட்ஸ்

B) புற்றுநோய்

C) நீர்மத் திசு அழற்சி

D) மஞ்சள் காமாளை

120. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்___________

A) ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம்

B) இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம்

C) உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம்

D) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்

121. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு.

A) நொதி இடமாற்ற சிகிச்சை

B)ADA cDNAகொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்களை கால இடைவெளியில் உட்செலுத்துதல்

C) அடினோசின் டி அமினேஸ் தூண்டிகளை அளித்தல்

D) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்.

122. GEAC என்பது

A) ஜீனோம் பொறியியல் செயல் குழுமம்

B) நில சுற்றுச்சூழல் செயல் குழுமம்

C) மரபுப் பொறியியல் ஒப்புதல் குழுமம்

D) மரபிய மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் குழுமம்

123. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.

A) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்

B) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்

C) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20 அமினோ அமிலங்கள்

D) A சங்கிலியில் 20 மற்றும் B சங்கிலியில் 12 அமினோ அமிலங்கள்

124. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை

A) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி

B) உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு

C) இணைப்பு, உற்பத்தி, இயல்திரிபு

D) செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு

125. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.

A) உள்நுழைத்த டி.என்.ஏ வை பெற்றுக் கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகிறது.

B) இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது.

C) இது வைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது.

D) உயர் வெப்பநிலையிலும் செயல்படுகின்றது.

126. எலைசா முதன்மையாக இதற்குப் பயன்படுகிறது.

A) திடீர் மாற்றங்களைக் கண்டறிய

B) விரும்பத்தக்க பண்புகளையுடைய விலங்குகளைத் தேர்வு செய்ய

C) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய

D) நோய்க்கிருமிகளைக் கண்டறிய

127. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது.

A) சில செல்களில் அயல் டி.என்.ஏ

B) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ

C) சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ

D) அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ

128. மறுசேர்க்கை காரணி VIIIசீனா ஆம்ஸ்டரின்___________செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன.

A) கல்லீரல் செல்கள்

B) அண்டக செல்கள்

C) இரத்த செல்கள்

D) மூளை செல்கள்

129. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.

A) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்

B) வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்

C) டி.என்.ஏ தடுப்பூசிகள்

D) வழக்கமான தடுப்பூசிகள்

130. பொருத்துக:

A) BRAI – 1. Genetic Engineering Approval Committee

B) GEAC – 2. State Biotechnology Co-ordination Committees

C) SBCC – 3. The Institutional Biosafety Committees

D) IBSC – 4. Bio technology Regulatory Authority of India

A) 1 2 3 4

B) 4 1 2 3

C) 1 3 2 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) BRAI – 1. Bio technology Regulatory Authority of India

B) GEAC – 2. Genetic Engineering Approval Committee

C) SBCC – 3. State Biotechnology Co-ordination Committees

D) IBSC – 4. The Institutional Biosafety Committees

131. பொருத்துக:

A) RCGM – 1. Review Committee on Genetic Manipulation

B) WTO – 2. World Health Organization

C) WHO – 3. Ominibus Trade and Competitiveness Act

D) OTCA – 4. World Trade Organization

A) 1 4 2 3

B) 4 1 2 3

C) 1 3 2 4

D) 4 3 2 1

விளக்கம்:

A) RCGM – 1. Review Committee on Genetic Manipulation

B) WTO – 2. World Trade Organization

C) WHO – 3. World Health Organization

D) OTCA – 4. Ominibus Trade and Competitiveness Act

12th Science Lesson 5 Questions in Tamil

5] அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்

1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருள் ஒன்று பிளக்கப்பட்டு அதனால் உருவாகும் பகுதிகள் மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டால், மேலும் ஒரு கட்டத்தில் பிளக்க முடியாத துளிமநிலையை அது அடையும். அத்தகைய சிறு துரும்பு பகுதி அணு எனப்படும்.

2] லத்தின் மொழியில் அணு என்றால் “பிளக்க இயலாதது” என்று பொருள்.

3] அணு ஒன்றின் அளவு மிகச்சிறியதாகும்.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 3 சரி 2 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: பொருள் ஒன்று பிளக்கப்பட்டு அதனால் உருவாகும் பகுதிகள் மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டால், மேலும் ஒரு கட்டத்தில் பிளக்க முடியாத துளிமநிலையை அது அடையும். அத்தகைய சிறு துரும்பு பகுதி அணு எனப்படும். கிரேக்க மொழியில் அணு என்றால் “பிளக்க இயலாதது” என்று பொருள். அணு ஒன்றின் அளவு மிகச்சிறியதாகும்.

2. ஹைட்ரஜன் அணுவின் அளவு ____________

A) 10-10 m

B) 10-1.0 m

C) 10-11 m

D) 10-9 m

விளக்கம்: ஹைட்ரஜன் அணுவின் அளவு 10-10 m ஆகும்.

3. “அணுவை ஆப்பிளின் அளவிற்கு பெரிதாக்கினால், ஆப்பிளானது புவியின் அளவிற்கு பெரிதாகிவிடும் “என கூறியவர்____________

A) ரிச்சட் பிராங்க்ளின்

B) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

C) ஆல்பர்ட் பிராங்க்ளின்

D) ரிச்சர்ட் பெயின்மேன்

விளக்கம்: அணுவை ஆப்பிளின் அளவிற்கு பெரிதாக்கினால், ஆப்பிளானது புவியின் அளவிற்கு பெரிதாகிவிடும் என அமெரிக்க அறிவியல் அறிஞர் ரிச்சர்ட் பெயின்மேன் கூறினார்.

4. .கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அணு அடிப்படை உட்பொருள் ஆகும்.

2] அணு எலெக்ட்ரான்கள் மற்றும் அணுக்கருவை உள்ளடக்கியது.

3] அணுக்கருவும் புரோட்டான்கள் மற்றும் எலெக்ட்ரான்களை உள்ளடக்கியது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 3 தவறு 2 சரி

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: அணுவும் கூட அடிப்படை உட்பொருள் அல்ல என்பதை அறிவியல் அறிஞர்கள் பின்னாளில் கண்டறிந்தனர். அணு எலெக்ட்ரான்கள் மற்றும் அணுக்கருவை உள்ளடக்கியது. அணுக்கருவும் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை உள்ளடக்கியது.

5. நியூட்ரான்கள் ____________ என்ற அடிப்படை உட்பொருளை கொண்டவை.

A) குவாட்சுகள்

B) நியூகர்கள்

C) குவார்க்குகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நியூட்ரான்களும் கூட குவார்க்குகள் என்ற அடிப்படை உட்பொருளை கொண்டவை.

6. கூற்று(A): வாயுக்களில் கடத்துப் பண்பை தரும் கட்டுறா எலெக்ட்ரான்கள் இல்லை.

காரணம்(R): எனவே வளிமண்டல அழுத்தத்தில் வாயுக்கள் மின்னோட்டத்தை அரிதாகவே கடத்துகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: வாயுக்களில் கடத்துப் பண்பை தரும் கட்டுறா எலெக்ட்ரான்கள் இல்லாததால். சாதாரணமான வளிமண்டல அழுத்தத்தில் வாயுக்கள் மின்னோட்டத்தை அரிதாகவே கடத்துகின்றன.

7. வாயுக்களின் வழியே நிகழும் மின்னிறக்கத்தை ஆராய உதவும் எளிய கருவி ____________

A) மின்னழுத்த குழாய்

B) மின்னேற்ற குழாய்

C) மின்மாற்றி குழாய்

D) மின்னிறக்க குழாய்

விளக்கம்: வாயுக்களின் வழியே நிகழும் மின்னிறக்கத்தை ஆராய உதவும் எளிய கருவியே மின்னிறக்க குழாய் எனப்படும்.

8. .கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] கேதோடு கதிர்கள் ஆற்றல் மற்றும் உந்தத்தைப் பெறவில்லை.

2] மின் மற்றும் காந்தப் புலங்களால் அவை விலக்கம் அடைவதில்லை.

3] இவ்விலக்கத்தின் திசையை வைத்து அவை எதிர் மின்துகள்கள் என்பதை அறியலாம்.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 தவறு 3 சரி

C) 1, 3 தவறு 2 சரி

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: கேதோடு கதிர்கள் ஆற்றல் மற்றும் உந்தத்தைப் பெற்றுள்ளன. மின் மற்றும் காந்தப் புலங்களால் அவை விலக்கம் அடைகின்றன. இவ்விலக்கத்தின் திசையை வைத்து அவை எதிர் மின்துகள்கள் என்பதை அறியலாம்.

9. கேதோடு கதிர்கள் ____________ என்ற அளவிலான அதிவேகத்துடன் நேர்க்கோட்டில் அவை செல்கின்றன.

A) 109

B) 108

C) 107

D) 106

விளக்கம்: கேதோடு கதிர்கள் 107 ms-1 என்ற அளவிலான அதிவேகத்துடன் நேர்க்கோட்டில் அவை செல்கின்றன.

10. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பொருள்களின் மீது கேதோடு கதிர்கள் வீழும் போது, வெப்பம் உருவாகின்றது.

2] கேதோடு கதிர்கள் புகைப்படத் தகட்டை பாதிக்கின்றன.

C) சில படிகங்கள் மற்றும் கனிமப் பொருள்கள் மீது அவை படும்போது ஒளிர்தலை ஏற்படுத்துகின்றன.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 தவறு 3 சரி

C) 1, 3 தவறு 2 சரி

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: பொருள்களின் மீது கேதோடு கதிர்கள் வீழும் போது, வெப்பம் உருவாகின்றது. கேதோடு கதிர்கள் புகைப்படத் தகட்டை பாதிக்கின்றன. மேலும் சில படிகங்கள் மற்றும் கனிமப் பொருள்கள் மீது அவை படும்போது ஒளிர்தலை ஏற்படுத்துகின்றன.

11. அதிக அணு எடை கொண்ட பொருள்களின் மீது கேதோடு கதிர்கள் விழும் போது, ____________ உருவாகின்றன.

A) ஆல்பா கதிர்கள்

B) பீட்டா கதிர்கள்

C) அணுக்கதிர்வீச்சு கதிர்கள்

D) X–கதிர்கள்

விளக்கம்: அதிக அணு எடை கொண்ட பொருள்களின் மீது அவை விழும் போது, X–கதிர்கள் உருவாகின்றன.

12. கேதோடு கதிர்கள் வாயுக்களின் வழியே செல்லும்போது அவ்வாயுக்களை ____________ செய்கின்றன.

A) வெப்பமடைய

B) குளிர்விக்க

C) மின்னிறக்கம்

D) அயனியாக்கம்

விளக்கம்: கேதோடு கதிர்கள் வாயுக்களின் வழியே செல்லும்போது அவ்வாயுக்களை அயனியாக்கம் செய்கின்றன.

13. கேதோடு கதிர்கள் ஒளியின் வேகத்தில்____________ மடங்கு வரையிலான வேகத்தில் இயங்குகின்றன.

A) (1/9)

B) (1/11)

C) (1/12)

D) (1/10)

விளக்கம்: கேதோடு கதிர்கள் ஒளியின் வேகத்தில் (1/10) மடங்கு வரையிலான வேகத்தில் இயங்குகின்றன.

14. மின்னிறக்கக் குழாயினுள் உள்ள வாயுக்களைப்பற்றி அறிய உதவும் முறைகளில் குறிப்பிடத்தகுந்த மேம்பாடுகளை கண்டறிந்தவர்____________

A) ரூதர் போர்டு

B) போர்

C) ரிச்சர்ட் மேய்மென்

D) ஜே.ஜே. தாம்சன்

விளக்கம்: மின்னிறக்கக் குழாயினுள் உள்ள வாயுக்களைப்பற்றி அறிய உதவும் முறைகளில் குறிப்பிடத்தகுந்த மேம்பாடுகளை 1887 – ஆம் ஆண்டில் ஜே.ஜே. தாம்சன் செய்தார்.

15. கேதோடு கதிர்களின் ஓரலகு நிறைக்கான மின்னூட்ட மதிப்பு____________

A) (e/ h)

B) (e/ b)

C) (e/ m)

D) (e/ v)

விளக்கம்: மின் மற்றும் காந்தப் புலங்களினால் கேதோடு கதிர்கள் விலக்கம் அடைவதையும், மின்புலம் மற்றும் காந்தப் புலத்தை மாற்றுவதன் மூலம் கேதோடு கதிர்களின் நிறை–இயல்புநிலை மின்னூட்டம் (mass normalized charge) அல்லது மின்னூட்ட எண் (அதாவது ஓரலகு நிறைக்கான மின்னூட்ட மதிப்பு (e/ m) அளக்கப்படுகிறது.

16. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] மின்னூட்ட எண்ணானது பயன்படுத்தப்படும் வாயுவை சார்ந்திருக்கும்.

2] மின்னூட்ட எண்ணானது மின்வாய்களின் இயல்பை சார்ந்திருக்கும்.

A) 1, 2 சரி

B) 1, 2 தவறு

C) 1 தவறு 2 சரி

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னூட்ட எண்ணானது பயன்படுத்தப்படும் வாயு மற்றும் மின்வாய்களின் இயல்பு ஆகியவற்றை சார்ந்திராது.

17. எலக்ட்ரானிக் மின்னூட்ட மதிப்பை காண உதவும் ஆய்வு____________

A) மின்னிறக்க ஆய்வு

B) தாம்சனின் எண்ணெய்துளி ஆய்வு

C) போரின் எண்ணெய்துளி ஆய்வு

D) மில்லிகனின் எண்ணெய்துளி ஆய்வு

விளக்கம்: இயற்கையின் மிக முக்கிய அடிப்படை மாறிலிகளில் ஒன்றான எலக்ட்ரானிக் மின்னூட்ட மதிப்பை காண உதவும் மில்லிகனின் எண்ணெய்துளி ஆய்வு, நவீன இயற்பியலில் உள்ள சிறந்த செயல்முறை ஆய்வுகளில் ஒன்றாகும்.

18. எந்த ஒரு பொருளும் மீண்டும் மீண்டும் பகுக்கப்படும் போது இறுதியில் கிடைப்பது அணுவே” என்று கூறியவர்____________

A) லியூசிபஸ்

B) டெமோக்ரடிஸ்

C) ஐன்ஸ்ட்டின்

D) நீல்ஸ் போர்

விளக்கம்: ஏறக்குறைய கி.மு. (பொ.ஆ.மு) 400ஐ ஒட்டிய காலத்தில், லியூசிபஸ் மற்றும் டெமொகரிட்டஸ் ஆகிய கிரேக்க தத்துவஅறிஞர்கள் “எந்த ஒரு பொருளும் மீண்டும் மீண்டும் பகுக்கப்படும் போது இறுதியில் கிடைப்பது அணுவே” என்று கூறினர்.

19. ஒய்வுநிலையில் உள்ள மின் துகள்களின் பரவலை அடிப்படையாகக் கொண்டு கருத்தியல் ரீதியான ஒரு அணு மாதிரியை முன்மொழிந்தவர் ____________

A) ரூதர்போர்டு

B) போர்

C) வேய்மன்

D) ஜே. ஜே. தாம்சன்

விளக்கம்: ஒய்வுநிலையில் உள்ள மின் துகள்களின் பரவலை அடிப்படையாகக் கொண்டு கருத்தியல் ரீதியான ஒரு அணு மாதிரியை ஜே. ஜே. தாம்சன் முன்மொழிந்தார். அணுவின் நிலைத்தன்மையை ஜே. ஜே. தாம்சனின் அணு மாதிரிவிளக்க முடியவில்லை.

20. அணு குறித்தான முதல் இயக்க மாதிரியை முன்மொழிந்தவர்____________

A) ரூதர்போர்டு

B) போர்

C) வேய்மன்

D) ஜே. ஜே. தாம்சன்

விளக்கம்: ரூதர்போர்டு அணு குறித்தான முதல் இயக்க மாதிரியை முன்மொழிந்தார்.

21. நீல்ஸ் போரின் அணு மாதிரி அணுவின் நிலைத்தன்மையை விளக்கியதோடு மட்டுமல்லாமல் ____________ விளக்கியது.

A) அணுவின் நிறைத்தன்மை

B) வரி நிறமாலையின் நிலைத்தன்மை

C) அணுவின் தோற்றம்

D) வரி நிறமாலையின் தோற்றம்

விளக்கம்: நீல்ஸ் போரின் அணு மாதிரி அணுவின் நிலைத்தன்மையை விளக்கியதோடு மட்டுமல்லாமல் வரி நிறமாலையின் தோற்றத்தினையும் விளக்கியது.

22. ஹைட்ரஜன் நிறமாலை வரிகளின் குறைந்த அலைநீள பகுதியில், (முதன்மை) வரிகளுடன் கூடிய மங்கலான வரிகள் உடனிருப்பதை H.C யுரே மற்றும் அவரது குழுவினர் ____________ ல் கண்டறிந்தனர்.

A) 1930

B) 1931

C) 1932

D) 1933

விளக்கம்: ஹைட்ரஜன் நிறமாலை வரிகளின் குறைந்த அலைநீள பகுதியில், (முதன்மை) வரிகளுடன் கூடிய மங்கலான வரிகள் உடனிருப்பதை H.C யுரே மற்றும் அவரது குழுவினர் 1931 ல் கண்டறிந்தனர்.

23. கூற்று(A): ஒரே தனிமத்தின் ஐசோடோப்புகள் சற்றே வேறுபட்ட நிறமாலை வரிகளை வெளியிடுகின்றன.

காரணம்(R): இதற்கு காரணம் ஐசோடோப்பு இடப்பெயர்ச்சி விளைவு ஆகும்.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஐசோடோப்பு இடப்பெயர்ச்சி விளைவு அல்லது ஐசோடோப்பு நகர்வு காரணமாக ஒரே தனிமத்தின் ஐசோடோப்புகள் சற்றே வேறுபட்ட நிறமாலை வரிகளை வெளியிடுகின்றன.

24. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஹைட்ரஜன் அணுவில் ஒரு எலக்ட்ரான் ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரான் உள்ளன.

2] டியூட்டிரியம் அணுவில் ஒரு எலக்ட்ரானும் ஒரு புரோட்டானும் உள்ளன.

A) 1, 2 சரி

B) 1, 2 தவறு

C) 1 தவறு 2 சரி

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஹைட்ரஜன் அணுவுக்கும் டியூட்டிரியம் அணுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவெனில் ஹைட்ரஜன் அணுவில் ஒரு எலக்ட்ரானும் ஒரு புரோட்டானும் உள்ளன. டியூட்டிரியம் அணுவில் ஒரு எலக்ட்ரான் ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரான் உள்ளன.

25. போர் அணு மாதிரியின் குறைபாடுகளில் எவை சரியானவை?

1] ஹைட்ரஜன் அல்லது ஹைட்ரஜனைப் போன்ற அணுக்களுக்கு மட்டுமே போர் அணு மாதிரி பொருத்தமானது. பிற சிக்கலான அணுக்களுக்கு இது பொருந்துவதில்லை.

2] அணுக்களில் எலக்ட்ரான்களின் பகிர்வு தொடர்பான முழுமையான விளக்கமும் போர் அணு மாதிரியால் தரப்படவில்லை.

3] நிறமாலை வரிகளின் செறிவில் காணப்படும் மாற்றங்களுக்கான விளக்கம் போர் அணு மாதிரியால் தரப்படவில்லை.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 தவறு 3 சரி

C) 1, 3 தவறு 2 சரி

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: ஹைட்ரஜன் அல்லது ஹைட்ரஜனைப் போன்ற அணுக்களுக்கு மட்டுமே போர் அணு மாதிரி பொருத்தமானது. பிற சிக்கலான அணுக்களுக்கு இது பொருந்துவதில்லை. அணுக்களில் எலக்ட்ரான்களின் பகிர்வு தொடர்பான முழுமையான விளக்கமும் போர் அணு மாதிரியால் தரப்படவில்லை. நிறமாலை வரிகளின் செறிவில் காணப்படும் மாற்றங்களுக்கான விளக்கம் போர் அணு மாதிரியால் தரப்படவில்லை.

26. ஹைட்ரஜன் நிறமாலையின் வரிகளை உற்றுநோக்கும் போது, ஒவ்வொரு வரியும் பல மங்கலான வரிகளால் ஆனது எனத் தெரிகிறது. இதை ____________ என்பர்.

A) மெல்லிய வரியமைப்பு

B) அணு வரியமைப்பு

C) மின்னனு வரியமைப்பு

D) நுண்வரியமைப்பு

விளக்கம்: ஹைட்ரஜன் நிறமாலையின் வரிகளை உற்றுநோக்கும் போது, ஒவ்வொரு வரியும் பல மங்கலான வரிகளால் ஆனது எனத் தெரிகிறது. இதை நுண்வரியமைப்பு (fine structure) என்பர். போர் கொள்கை இதற்கு விளக்கம் தரவில்லை.

27. அணுக்கரு ஒன்றிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ____________ எனப்படும்.

A) நிறை எண்

B) அணுவின் பருமன்

C) அணுக்கரு எண்

D) அணு எண்

விளக்கம்: அணுக்கரு ஒன்றிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அணு எண் எனப்படும்.

28. அணுக்கருவில் காணப்படும் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கை____________ எனப்படும்.

A) நிறை எண்

B) அணுவின் பருமன்

C) அணுக்கரு எண்

D) அணு எண்

விளக்கம்: அணுக்கருவில் காணப்படும் நியூட்ரான்கள் மற்றும் புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண் எனப்படும்.

29. ஒரு புரோட்டானின் நிறை____________

A) 1.6726 × 10-2.7 – kg

B) 16726 × 10-27 – kg

C) 1.672 × 10-27 – kg

D) 1.6726 × 1027 − kg

விளக்கம்: ஒரு புரோட்டானின் நிறை 1.6726 × 1027 − kg ஆகும்.

30. புரோட்டானின் நிறை எலக்ட்ரானின் நிறையைப்போல்____________ மடங்காகும்.

A) 1837

B) 1836

C) 1838

D) 1839

விளக்கம்: புரோட்டானின் நிறை எலக்ட்ரானின் நிறையைப்போல் ஏறத்தாழ 1836 மடங்காகும்.

31. நியூட்ரானின் நிறை ____________

A) 1.6749 × 102.7 – kg

B) 1.6749 × 10-27 – kg

C) 1.674× 10-27 – kg

D) 1.6746 × 10-27 – kg

விளக்கம்: நியூட்ரானின் நிறை 1.6749 × 10-27 – kg ஆகும்.

32. சமமான அணு எண் (Z) மற்றும் வேறுபட்ட நிறை எண் (A) கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ____________

A) ஐசோபார்கள்

B) ஐசோடோன்கள்

C) ஐசோடோப்புகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சமமான அணு எண் (Z) மற்றும் வேறுபட்ட நிறை எண் (A) கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும்.

33. சமமான நிறை எண் (A) மற்றும் வேறுபட்ட அணு எண் (Z) கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ____________

A) ஐசோபார்கள்

B) ஐசோடோன்கள்

C) ஐசோடோப்புகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஐசோபார்கள் என்பவை சமமான நிறை எண் (A) மற்றும் வேறுபட்ட அணு எண் (Z) கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஆகும்.

34. சம எண்ணிக்கையில் நியூட்ரான்களைக் கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ____________

A) ஐசோபார்கள்

B) ஐசோடோன்கள்

C) ஐசோடோப்புகள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: சம எண்ணிக்கையில் நியூட்ரான்களைக் கொண்டுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.

35. அணுக்களின் நிறையை செய்முறை ஆய்வின் மூலம் கண்டறிய____________ நிறைமாலைமானி என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

A) வெயின் பிரிட்ஜ்

B) கெயின் பிரிட்ஜ்

C) மெயின்பிரிட்ஜ்

D) பெயின்பிரிட்ஜ்

விளக்கம்: அணுக்களின் நிறையை செய்முறை ஆய்வின் மூலம் கண்டறிய பெயின்பிரிட்ஜ் நிறைமாலைமானி என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

36. அணு நிறை அலகு (u) என்பது இயற்கையாகக் கிடைக்கப் பெறும் ____________ஐசோடோப்புகளில் அதிக அளவில் காணப்படும்.

A) நைட்ரஜன்

B) ஹைட்ரஜன்

C) கார்பன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அணு நிறை அலகு (u) என்பது இயற்கையாகக் கிடைக்கப் பெறும் கார்பன் ஐசோடோப்புகளில் அதிக அளவில் காணப்படும்.

37. குறிப்பிட்ட அணுக்கருவின் நிறையைக் காண அதன் அணுக்களின் நிறையிலிருந்து ____________ நிறையைக் கழிக்க வேண்டும்.

A) புரோட்டான்

B) நியூட்ரான்

C) எலக்ட்ரான்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: குறிப்பிட்ட அணுக்கருவின் நிறையைக் காண அதன் அணுக்களின் நிறையிலிருந்து எலக்ட்ரான்களின் நிறையைக் கழிக்க வேண்டும்.

38. ஒரேயொரு தேக்கரண்டி அளவு அணுக்கருவின் பருப்பொருளின் நிறையானது கிட்டத்தட்ட ____________ டன்களுக்குச் சமமாகும்.

A) மில்லியன்

B) பில்லியன்

C) ட்ரில்லியன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரேயொரு தேக்கரண்டி அளவு அணுக்கருவின் பருப்பொருளின் நிறையானது கிட்டத்தட்ட டிரில்லியன் டன்களுக்குச் சமமாகும்.

39. எந்தவொரு அணுக்கருவின் நிறையும் அதிலுள்ள நியூக்ளியான் நிறைகளின் கூட்டுத்தொகையை விட____________ உள்ளது.

A) அதிகமாக

B) குறைவாக

C) மிக அதிகமாக

D) மிக குறைவாக

விளக்கம்: எந்தவொரு அணுக்கருவின் நிறையும் அதிலுள்ள நியூக்ளியான் நிறைகளின் கூட்டுத்தொகையை விட குறைவாக உள்ளது என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

40. அதிக நிறை கொண்ட ஒரு அணுக்கரு குறைந்த நிறை கொண்ட அணுக்கருக்களாக சிதைவுறுவது ____________ எனப்படும்.

A) அணுக்கரு இணைவு

B) அணுக்கரு பிளவு

C) அணுக்கரு சேர்க்கை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அதிக நிறை கொண்ட ஒரு அணுக்கரு குறைந்த நிறை கொண்ட அணுக்கருக்களாக சிதைவுறுவது அணுக்கரு பிளவு எனப்படும். „

41. குறைந்த நிறை கொண்ட இரு அணுக்கருக்கள் அதிக நிறை கொண்ட அணுக்கருவாக இணைவது ____________ எனப்படும்.

A) அணுக்கரு இணைவு

B) அணுக்கரு பிளவு

C) அணுக்கரு சேர்க்கை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: குறைந்த நிறை கொண்ட இரு அணுக்கருக்கள் அதிக நிறை கொண்ட அணுக்கருவாக இணைவது அணுக்கரு இணைவு எனப்படும்.

42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அணுக்கரு உலைகளில் அணுக்கருதொடர்வினை கட்டுக்குள் உள்ளது.

2] விண்மீன்களில் அணுக்கரு பிளவு நிகழ்வினால் ஆற்றல் உருவாகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: அணுக்கரு உலைகளில் அணுக்கருதொடர்வினை கட்டுக்குள் உள்ளது. விண்மீன்களில் அணுக்கரு இணைவு நிகழ்வினால் ஆற்றல் உருவாகிறது.

43. குறைந்த ஆற்றல் நிலையிலிருந்து அதிக ஆற்றல் நிலைக்கு ஒரு எலக்ட்ரானை கிளர்வுறச் செய்யத் தேவைப்படும் ஆற்றல் ____________ எனப்படும்.

A) அயனியாக்க மின்னழுத்தம்

B) அயனியாக்க ஆற்றல்

C) கிளர்வு மின்னழுத்தம்

D) கிளர்வு ஆற்றல்

விளக்கம்: குறைந்த ஆற்றல் நிலையிலிருந்து அதிக ஆற்றல் நிலைக்கு ஒரு எலக்ட்ரானை கிளர்வுறச் செய்யத் தேவைப்படும் ஆற்றல் கிளர்வு ஆற்றல் எனப்படும், அதற்கு தேவையான மின்னழுத்தம் கிளர்வு மின்னழுத்தம் எனப்படும்.

44. அடி நிலையிலுள்ள ஒரு எலக்ட்ரானை அணுவிலிருந்து வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல்____________ எனப்படும்.

A) அயனியாக்க மின்னழுத்தம்

B) அயனியாக்க ஆற்றல்

C) கிளர்வு மின்னழுத்தம்

D) கிளர்வு ஆற்றல்

விளக்கம்: அடி நிலையிலுள்ள ஒரு எலக்ட்ரானை அணுவிலிருந்து வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல் அயனியாக்க ஆற்றல் எனப்படும்.

45. அயனியாக்க ஆற்றலைப் பெற எலக்ட்ரானை முடுக்குவிக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு ___________ எனப்படும்.

A) அயனியாக்க மின்னழுத்தம்

B) அயனியாக்க ஆற்றல்

C) கிளர்வு மின்னழுத்தம்

D) கிளர்வு ஆற்றல்

விளக்கம்: அயனியாக்க ஆற்றலைப் பெற எலக்ட்ரானை முடுக்குவிக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு அயனியாக்க மின்னழுத்தம் எனப்படும்.

46. பாஷன் மற்றும் பிராக்கெட் வரிசைகளுக்கான அலைநீளங்கள்___________ பகுதியில் அமைகின்றன.

A) கண்ணுறு ஒளிப் பகுதியில்

B) புற ஊதாப் பகுதியில்

C) அகச்சிவப்புப் பகுதியில்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பாஷன் மற்றும் பிராக்கெட் வரிசைகளுக்கான அலைநீளங்கள் அகச்சிவப்புப் பகுதியிலும் அமைகின்றன.

47. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] லைமன் வரிசைக்கான நிறமாலை வரிகளின் அலைநீளம் கண்ணுறு ஒளிப் பகுதியில் அமைகின்றன.

2] பாமர் வரிசைக்கான அலைநீளம் புற ஊதாப் பகுதியில் அமைகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: லைமன் வரிசைக்கான நிறமாலை வரிகளின் அலைநீளம் புற ஊதாப் பகுதியிலும் பாமர் வரிசைக்கான அலைநீளம் கண்ணுறு ஒளிப் பகுதியிலும் அமைகின்றன.

48. பீட்டா சிதைவு மற்றும் விண்மீன்களில் ஆற்றல் உருவாதல் ஆகிய நிகழ்வுகளில் ___________ விசை முக்கிய பங்காற்றுகிறது.

A) வலிமையான அணுக்கரு விசை

B) மென்விசை

C) ஈர்ப்பு விசை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பீட்டா சிதைவு மற்றும் விண்மீன்களில் ஆற்றல் உருவாதல் ஆகிய நிகழ்வுகளில் மென்விசை முக்கிய பங்காற்றுகிறது.

49. சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாகும் நிகழ்வில் நியூட்ரினோக்களும் ஏராளமான கதிர்வீச்சுகளும் ___________ விசையினாலேயே உருவாகின்றன.

A) வலிமையான அணுக்கரு விசை

B) மென்விசை

C) ஈர்ப்பு விசை

D) மின்காந்தவிசை

விளக்கம்: சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாகும் நிகழ்வில் நியூட்ரினோக்களும் ஏராளமான கதிர்வீச்சுகளும் மென் விசையினாலேயே உருவாகின்றன.

50. இயற்கையின் அடிப்படை விசைகள் யாவை?

A) அணுக்கரு விசை

B) மென்விசை

C) ஈர்ப்பு விசை

D) இவை அனைத்தும்

விளக்கம்: ஈர்ப்புவிசை, மின்காந்தவிசை, அணுக்கருவிசை மற்றும் மென் விசை ஆகிய நான்கும் இயற்கையின் அடிப்படை விசைகள். நம் அன்றாட வாழ்வில் கூட இந்த அடிப்படை விசைகள் தேவைப்படுகின்றன.

51. நாம் புவியின் பரப்பில் இருத்தலுக்கு புவிப்பரப்பிலுள்ள அணுக்களுக்கும் நம் பாதத்திலுள்ள அணுக்களுக்கும் இடையேயுள்ள___________ விசை காரணமாக உள்ளது.

A) வலிமையான அணுக்கரு விசை

B) மென்விசை

C) ஈர்ப்பு விசை

D) மின்காந்தவிசை

விளக்கம்: நாம் புவியின் பரப்பில் இருத்தலுக்கு புவிப்பரப்பிலுள்ள அணுக்களுக்கும் நம் பாதத்திலுள்ள அணுக்களுக்கும் இடையேயுள்ள மின்காந்த விசை காரணமாக உள்ளது.

52. நம் உடலிலுள்ள அணுக்கள் நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு___________ விசை தேவைப்படுகிறது.

A) வலிமையான அணுக்கரு விசை

B) மென்விசை

C) ஈர்ப்பு விசை

D) மின்காந்தவிசை

விளக்கம்: நம் உடலிலுள்ள அணுக்கள் நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு வலிமையான அணுக்கரு விசை தேவைப்படுகிறது.

53. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களின் வாழ்விற்குத் தேவையான சூரிய ஆற்றல், சூரியனிலிருந்து உருவாதலுக்குக் காரணமாக ஈர்ப்புவிசை முக்கிய பங்காற்றுகிறது.

2] நாம் பூமியில் இருப்பதற்கு புவியின் ஈர்ப்பு விசை காரணமாக உள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களின் வாழ்விற்குத் தேவையான சூரிய ஆற்றல், சூரியனிலிருந்து உருவாதலுக்குக் காரணமாகவும், மென்விசை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் பூமியில் இருப்பதற்கு புவியின் ஈர்ப்பு விசை காரணமாக உள்ளது.

54. சூரியனின் உள்ளகத்தில் அணுக்கரு இணைவு வினை நிகழ்வதற்கு ___________ விசை முக்கிய பங்கு வகிக்கிறது.

A) வலிமையான அணுக்கரு விசை

B) மென்விசை

C) ஈர்ப்பு விசை

D) மின்காந்தவிசை

விளக்கம்: சூரியனின் உள்ளகத்தில் அணுக்கரு இணைவு வினை நிகழ்வதற்கும் மென்விசை முக்கிய பங்கு வகிக்கிறது.

55. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] புரோட்டான்களும் நியூட்ரான்களும் அடிப்படைத் துகள்கள் ஆகும்.

2] எலக்ட்ரான்கள் அடிப்படைத் துகள்கள் அல்ல.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: புரோட்டான்களும் நியூட்ரான்களும் அடிப்படைத் துகள்கள் அல்ல; எலக்ட்ரான்கள் வேறு எந்த துகள்களாலும் உருவாக்கப்படாததால் அவை அடிப்படைத் துகள்களாகவே கருதப்படுகின்றன.

56. குவார்க்குகள் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன?

A) 1969

B) 1968

C) 1967

D) 1966

விளக்கம்: 1968ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு துகள் முடுக்கி மையத்தில் (SLAC) நடந்த சோதனைகளில் குவார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

57. குவார்க்குகள் எத்தனை வகைப்படும்?

A) 7

B) 5

C) 6

D) 8

விளக்கம்: மேல்(up) குவார்க், கீழ்(down) குவார்க், கவர்வு (charm) குவார்க், புதுமை (strange) குவார்க், உச்சி (top) குவார்க், அடி (bottom) குவார்க் என ஆறு வகை குவார்க்குகளும் அவற்றின் எதிர்த்துகள்களும் உள்ளன.

58. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு புரோட்டான் ஒரு மேல் குவார்க்குகள், மற்றும் ஒரு கீழ் குவார்க்காலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

2] ஒரு நியூட்ரான் ஒரு கீழ் குவார்க்குகள் மற்றும் ஒரு மேல் குவார்க்காலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: ஒரு புரோட்டான் இரண்டு மேல் குவார்க்குகள், மற்றும் ஒரு கீழ் குவார்க்காலும் ஆக்கப்பட்டிருக்கிறது. அதே போல், ஒரு நியூட்ரான் இரண்டு கீழ் குவார்க்குகள் மற்றும் ஒரு மேல் குவார்க்காலும் ஆக்கப்பட்டிருக்கிறது.

59. குவார்க்குகள் அனைத்துமே ____________ மதிப்புடைய மின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

A) எதிர்

B) நேர்

C) நடுநிலை

D) பின்ன

விளக்கம்: குவார்க்குகள் அனைத்துமே பின்ன மதிப்புடைய மின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

60. அடிப்படைத் துகள்களை ஆராயும் இயல்____________ என்றழைக்கப்படுகிறது.

A) அணு இயற்பியல்

B) அயனி இயற்பியல்

C) துகள் இயற்பியல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அடிப்படைத் துகள்களை ஆராயும் இயல் ’துகள் இயற்பியல்’ என்றழைக்கப்படுகிறது.

61. விண்மீன்களின் வெப்பநிலை கிட்டத்தட்ட ____________ அளவில் இருப்பதால் இயற்கையிலே அணுக்கரு இணைவு வினை நடைபெறுகிறது.

A) 109 K

B) 108 K

C) 107 K

D) 106 K

விளக்கம்: விண்மீன்களின் வெப்பநிலை கிட்டத்தட்ட 107 K அளவில் இருப்பதால் இயற்கையிலே அணுக்கரு இணைவு வினை நடைபெறுகிறது.

62. ஒவ்வொரு விண்மீனிலும் ஆற்றல் உருவாகும் நிகழ்வு____________ ஆகும்.

A) அணுக்கருவினை

B) வெப்ப அணுக்கரு வினை

C) அணுக்கரு இணைவு வினை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒவ்வொரு விண்மீனிலும் ஆற்றல் உருவாகும் நிகழ்வு வெப்ப அணுக்கரு வினையே ஆகும்.

63. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] விண்மீனின் தொடக்க கட்டத்தில் மேகமும் தூசுகளும் மட்டுமே காணப்படுகின்றன.

2] தன் ஈர்ப்பு விசையினால் அம்மேகங்கள் உள்நோக்கி வீழ்கின்றன.இதனால் ஈர்பழுத்த ஆற்றல் இயக்க ஆற்றலாகவும் இறுதியில் வெப்ப ஆற்றலாகவும் மாறுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: விண்மீனின் தொடக்க கட்டத்தில் மேகமும் தூசுகளும் மட்டுமே காணப்படுகின்றன. தன் ஈர்ப்பு விசையினால் அம்மேகங்கள் உள்நோக்கி வீழ்கின்றன.இதனால் ஈர்பழுத்த ஆற்றல் இயக்க ஆற்றலாகவும் இறுதியில் வெப்ப ஆற்றலாகவும் மாறுகிறது.

64. சூரியனின் உட்பகுதி வெப்பநிலை ஏறக்குறைய ____________ ஆகும்.

A) 1.5×107 K

B) 1.5×106 K

C) 15×107 K

D) 15×107 K

விளக்கம்: சூரியனின் உட்பகுதி வெப்பநிலை ஏறக்குறைய 1.5×107 K ஆகும்.

65. தீமை பயக்கும் கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ____________ தடிமனுள்ள கற்காரையினால் (concrete) ஆன சுவரானது அணுக்கரு உலையைச் சுற்றி அமைக்கப் படுகிறது.

A) 2-2.0 m

B) 2-2.1 m

C) 2-2.4 m

D) 2-2.5 m

விளக்கம்: தீமை பயக்கும் கதிர்வீச்சுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள 2-2.5 m தடிமனுள்ள கற்காரையினால் (concrete) ஆன சுவரானது அணுக்கரு உலையைச் சுற்றி அமைக்கப் படுகிறது.

66. அணுக்கரு பிளவு வினை நடைபெறும் வீதத்தை சரிசெய்வதற்கு ____________ கட்டுப்படுத்தும் தண்டுப்பொருளாக செயல்படுகிறது.

A) கிராபைட்

B) . யுரேனியம்

C) காட்மியம்

D) நியூட்ரான்

விளக்கம்: பொதுவாக, காட்மியம் அல்லது போரான் ஆகியவை கட்டுப்படுத்தும் தண்டுப்பொருளாக செயல்படுகிறது.

67. ஒவ்வொரு அணுக்கரு பிளவின் போதும் சராசரியாக 2.5____________ வெளியேறுகின்றன.

A) கிராபைட்

B) யுரேனியம்

C) காட்மியம்

D) நியூட்ரான்

விளக்கம்: ஒவ்வொரு அணுக்கரு பிளவின் போதும் சராசரியாக 2.5 நியூட்ரான்கள் வெளியேறுகின்றன.

68. உலைகளில் தணிப்பான்களாகப் பயன்படுத்தப்படுபவை எவை?

A) நீர்

B) கனநீர்

C) கிராபைட்

D) இவை அனைத்தும்

விளக்கம்: பெரும்பாலான உலைகளில் நீர், கனநீர் (D2 O) மற்றும் கிராபைட் ஆகிய பொருள்களே தணிப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

69. முதல் அணுக்கரு உலை ____________ ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் கட்டப்பட்டது.

A) 1940

B) 1941

C) 1942

D) 1945

விளக்கம்: முதல் அணுக்கரு உலை 1942ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் கட்டப்பட்டது.

70. முதல் அணுக்கரு உலை____________ என்ற இயற்பியல் அறிஞரால் கட்டப்பட்டது.

A) என்ரிகோ பெர்மி

B) ஹென்றிகோ பெர்மி

C) எட்வின் மார்ட்டின்

D) போர்

விளக்கம்: முதல் அணுக்கரு உலை என்ரிகோ பெர்மி (Enrico Fermi) என்ற இயற்பியல் அறிஞரால் கட்டப்பட்டது.

71. அணுகுண்டு ____________க்கு எடுத்துக்காட்டு.

A) கட்டுப்பாட்டிலுள்ள தொடர் வினை

B) கட்டுப்பாடற்ற தொடர் வினை

C) முடிவில்லா தொடர் வினை

D) இவற்றில் எதுவுமில்ல

விளக்கம்: கட்டுப்பாடற்ற தொடர் வினையாக அணுக்கரு பிளவு நிகழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டு அணுகுண்டு.

72. கீழடி ____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

A) சிவகங்கை

B) மதுரை

C) தஞ்சாவூர்

D) திருச்சி

விளக்கம்: கீழடி என்ற சிறிய கிராமம் தமிழ்நாட்டிலுள்ள மிகவும் முக்கியமான அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிகளில் (படம்) ஒன்றாகும். இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

73. கீழடி பொருள்களின் காலத்தைக் கணிப்பதற்கு, ____________ கரியானது கார்பன் காலக்கணிப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

A) 300 g

B) 400 g

C) 200 g

D) 500 g

விளக்கம்: கீழடி பொருள்களின் காலத்தைக் கணிப்பதற்கு, 200 g கரியானது கார்பன் காலக்கணிப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

74. பீட்டா சிதைவின் போது, கதிரியக்க அணுக்கரு____________ வெளிவிடுகிறது.

A) எலக்ட்ரான்

B) புரேட்டான்

C) நியூட்ரான்

D) இவற்றில் எதுவுமில்ல

விளக்கம்: பீட்டா சிதைவின் போது, கதிரியக்க அணுக்கரு எலக்ட்ரான் அல்லது பாசிட்ரானை வெளிவிடுகிறது.

75. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] எலக்ட்ரான் (e– ) வெளியிடப்பட்டால் β+ சிதைவு என்றும் அழைக்கப்படும்.

2] பாசிட்ரான் (e+) வெளியிடப்பட்டால் β- சிதைவு என்றும் அழைக்கப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: எலக்ட்ரான் (e– ) வெளியிடப்பட்டால் β- சிதைவு என்றும், பாசிட்ரான் (e+) வெளியிடப்பட்டால் β+ சிதைவு என்றும் அழைக்கப்படும்.

76. ____________ என்பது எலக்ட்ரான் நிறையும் மற்றும் +e மின்னூட்டமும் கொண்ட எலக்ட்ரானின் எதிர்த்துகள் ஆகும்.

A) பாசிட்ரான்

B) நியூட்ரினோ

C) போரான்

D) இவற்றில் எதுவுமில்

விளக்கம்: பாசிட்ரான் என்பது எலக்ட்ரான் நிறையும் மற்றும் +e மின்னூட்டமும் கொண்ட எலக்ட்ரானின் எதிர்த்துகள் ஆகும்.

77. தீயுணர் கருவியானது, ____________ என்றழைக்கப்படும் மிகக்குறைந்த கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது.

A) பாசிட்ரான்

B) நியூட்ரினோ

C) போரான்

D) அமெரிசியம்

விளக்கம்: தீயுணர் கருவியானது, கிட்டத்தட்ட 0.2 mg அளவுள்ள, அமெரிசியம் ( 95 241Am ) என்றழைக்கப்படும் மிகக்குறைந்த கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரு செயற்கைக் கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது.

78. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஆல்பா சிதைவின் ஒரு முக்கியமான பயன்பாடு, ஆபத்து நிறைந்த எவ்வகைத் தீயிலிருந்தும் நம்மைக் காத்திடும் தீயுணர் (smoke detector) கருவியாகும்.

2] அமெரிசியத்தால் வெளிவிடப்படும் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான அளவை விடவும் மிக குறைவானதாகவே இருப்பதால் அது நமது உடலுக்கு தீங்கற்றது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: ஆல்பா சிதைவின் ஒரு முக்கியமான பயன்பாடு, ஆபத்து நிறைந்த எவ்வகைத் தீயிலிருந்தும் நம்மைக் காத்திடும் தீயுணர் (smoke detector) கருவியாகும். அமெரிசியத்தால் வெளிவிடப்படும் கதிர்வீச்சு அளவு பாதுகாப்பான அளவை விடவும் மிக குறைவானதாகவே இருப்பதால் அது நமது உடலுக்கு தீங்கற்றது.

79. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு தனிமத்திலிருந்து அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்வீச்சுகளான α, β மற்றும் γ கதிர்கள் தன்னிசையாக உமிழப்படும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படும்.

2] இத்தகைய கதிர்வீச்சு உமிழும் தனிமங்கள் கதிரியக்க தனிமங்கள் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: ஒரு தனிமத்திலிருந்து அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்வீச்சுகளான α, β மற்றும் γ கதிர்கள் தன்னிசையாக உமிழப்படும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படும். மேலும், இத்தகைய கதிர்வீச்சு உமிழும் தனிமங்கள் கதிரியக்க தனிமங்கள் எனப்படும்.

80. கதிரியக்க செயல்பாட்டை முதன் முதலாக 1896 ல் கண்டறிந்தவர்____________

A) மேரி கீயூரி

B) பியர் கியூரி

C) ஹென்றி பெக்கரால்

D) தாமஸ் ஹெபெ

விளக்கம்: கதிரியக்க செயல்பாட்டை முதன் முதலாக 1896 ல் கண்டறிந்தவர் ஹென்றி பெக்கரால் ஆவார்.

81. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அணுக்கரு ஒன்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை Z என்று குறிக்கப்படுகிறது.

2] அணு எண் N என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: அணுக்கரு ஒன்றிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை N என்று குறிக்கப்படுகிறது. அணு எண் Z என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.

82. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] நிறை எண் A என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. எனவே, A = Z+N.

2] அணுக்கருவின் ன மின்னூட்ட மதிப்பு +Ze ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: நிறை எண் A என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. எனவே, A = Z+N. அணுக்கருவில் நேர் மின்னூட்டம் உடைய புரோட்டான்களும் மின் நடுநிலைத் தன்மையுடைய நியூட்ரான்களும் உள்ளதால், அதன் மின்னூட்ட மதிப்பு +Ze ஆகும்.

83. அணுவிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணுக்கருவிலுள்ள ____________ களின் எண்ணிக்கைக்குச் சமமாகும்.

A) புரோட்டான்

B) நியூட்ரான்

C) குவார்கர்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: அணுவிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணுக்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும்.

84. கூற்று(A): அணுக்கருவில் நிகர மின்னூட்டம் நேர்க்குறி கொண்டது.

காரணம்(R): அணுக்கருவில் நேர் மின்னூட்டம் உடைய புரோட்டான்களும் மின் நடுநிலைத் தன்மையுடைய நியூட்ரான்களும் உள்ளது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அணுக்கருவில் நேர் மின்னூட்டம் உடைய புரோட்டான்களும் மின் நடுநிலைத் தன்மையுடைய நியூட்ரான்களும் உள்ளதால், அதன் நிகர மின்னூட்டம் நேர்க்குறி கொண்டது.

85. β- கதிர்கள் என்பவை ____________

A) புரோட்டான்

B) எலக்ட்ரான்

C) நியூட்ரான்

D) மின்காந்த கதிர்வீச்சு

விளக்கம்: β- கதிர்கள் என்பவை எலக்ட்ரான்கள் ஆகும்.

86. γ-கதிர் என்பவை ____________

A) புரோட்டான்

B) எலக்ட்ரான்

C) நியூட்ரான்

D) மின்காந்த கதிர்வீச்சு

விளக்கம்: γ-கதிர் என்பவை மின்காந்த கதிர்வீச்சாகும்.

87. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] ஒரு கியூரி என்பது1g ரேடியம் ஒரு வினாடியில் உமிழும் சிதைவுகளின் எண்ணிக்கைக்கு சமமாகும்.

2] ஒரு வினாடிக்கு 3.07× 107 சிதைவுகள் ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: ஒரு கியூரி என்பது1g ரேடியம் ஒரு வினாடியில் உமிழும் சிதைவுகளின் எண்ணிக்கைக்கு சமமாகும். அதாவது ஒரு வினாடிக்கு 3.7× 107 சிதைவுகள் ஆகும்.

88. கூற்று(A): குறைந்த அரை ஆயுட்காலம் கொண்ட பொருள் பாதுகாப்பானது.

காரணம்(R): குறைந்த ஆயுட்காலம் கொண்ட பொருள் குறைவான காலமே செயல்பாட்டில் இருக்கும் என்பதால் அது பாதுகாப்பானது.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: குறைந்த அரை ஆயுட்காலம் கொண்ட பொருள் அதிக ஆயுட்காலம் கொண்ட பொருளை விட குறைவான காலமே செயல்பாட்டில் இருக்கும் என்பதால் அது பாதுகாப்பானது என்று கூற முடியாது. ஏனெனில், குறைந்த ஆயுட்காலம் கொண்ட பொருள் அதிக கதிரியக்க செயல்பாட்டினை கொண்டிருக்கும். எனவே அது அதிக கதிரியக்கத்துடன் இருப்பதால் அதிக ஆபத்து கொண்டது.

89. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] β-கதிர்கள் மின்காந்த கதிர்வீச்சுகள் அல்ல.

2] பீட்டா சிதைவின் ஒரு முக்கியமான பயன்பாடு கதிரியக்கக் காலக்கணிப்பு அல்லது கார்பன் காலக்கணிப்பு ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: β-கதிர்கள் மின்காந்த கதிர்வீச்சுகள் அல்ல. பீட்டா சிதைவின் ஒரு முக்கியமான பயன்பாடு கதிரியக்கக் காலக்கணிப்பு அல்லது கார்பன் காலக்கணிப்பு ஆகும்.

90. வாழும் அனைத்து உயிரினங்களும் காற்றிலிருந்து____________ உட்கவர்ந்து கரிம மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

A) CO2

B) O2

C) H2

D) H2O

விளக்கம்: வாழும் அனைத்து உயிரினங்களும் காற்றிலிருந்து கார்பன் டையாக்சைடை (CO2) உட்கவர்ந்து கரிம மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

91. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] பெரிலியத்தை α துகள்களால் மோதச் செய்யும்போது அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்வீச்சு வெளிப்படுகின்றது.

2] இதனை போத்தே மற்றும் பெக்கர் ஆகிய ஜெர்மானிய இயற்பியல் அறிஞர்கள் 1931ல் கண்டறிந்தனர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: பெரிலியத்தை α துகள்களால் மோதச் செய்யும்போது அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்வீச்சு வெளிப்படுகின்றது என்பதை போத்தே மற்றும் பெக்கர் ஆகிய ஜெர்மானிய இயற்பியல் அறிஞர்கள் 1930ல் கண்டறிந்தனர்.

92. நியூட்ரான்களை கண்டறிந்தவர்____________

A) போத்தே

B) பெக்கர்

C) ஜேம்ஸ் சாட்விக்

D) H.C ஹீரே

விளக்கம்: புரோட்டானை விட சற்று அதிக நிறை கொண்ட மின்னூட்டமற்ற துகள்களே என்பதையும் ஜேம்ஸ் சாட்விக் என்பார் கண்டுபிடித்தார்.

93. நியூட்ரான் கண்டறியப்பட்ட ஆண்டு____________

A) 1930

B) 1931

C) 1932

D) 1933

விளக்கம்: 1932 ம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் என்பார் கண்டுபிடித்தார்.

94. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] அணுக்கருவினுள் நியூட்ரான்கள் நிலைத்தன்மையற்று உள்ளன.

2] அணுக்கருவுக்கு வெளியே நிலைத் தன்மையுடன் இருக்கின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: அணுக்கருவினுள் நியூட்ரான்கள் நிலைத் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் அணுக்கருவுக்கு வெளியே அவை நிலைத்தன்மையற்று உள்ளன.

95. அணுக்கருவை விட்டு வெளியேறும் நியூட்ரான் எவையாக சிதைவுறுகின்றன?

A) புரோட்டான்

B) எலக்ட்ரான்

C) எதிர்நியூட்ரினோ

D) இவை அனைத்தும்

விளக்கம்: அணுக்கருவை விட்டு வெளியேறும் நியூட்ரான் (தனித்த நியூட்ரான்) மிக விரைவிலேயே (அரை ஆயுட்காலம்-13 நிமிடங்கள்) புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் எதிர்நியூட்ரினோ ஆகியவையாக சிதைவுறுகிறது.

96. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] குறைவேக நியூட்ரான்கள் (0 to 100 eV).

2] வேக நியூட்ரான்கள் (0.5 MeV to 100 MeV).

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1 சரி 2 தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: குறைவேக நியூட்ரான்கள் (0 to 1000 eV) (ii) வேக நியூட்ரான்கள் (0.5 MeV to 10 MeV).

97. ____________ அளவிலான சராசரி ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் வெப்ப நியூட்ரான்கள் எனப்படும்.

A) 0.02 eV

B) 0.024 eV

C) 0.025 eV

D) 025 eV

விளக்கம்: கிட்டத்தட்ட 0.025 eV அளவிலான சராசரி ஆற்றல் கொண்ட, வெப்பச் சமநிலையில் உள்ள நியூட்ரான்கள் வெப்ப நியூட்ரான்கள் எனப்படும்.

98. அணுக்கரு உலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் நியூட்ரான் எவை?

1] குறைவேக நியூட்ரான்கள்

2] வேக நியூட்ரான்கள்

3] வெப்ப நியூட்ரான்கள்

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: குறைவேக மற்றும் வேக நியூட்ரான்கள் அணுக்கரு உலைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

99. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை?

1] யுரேனியம் அணுக்கருவை புரோட்டானால் மோதச் செய்யும்போது, அது கிட்டத்தட்ட சமமான நிறைகளையுடைய இரு சிறிய அணுக்கருக்களாகவும், அவற்றுடன் ஆற்றலும் வெளிப்படும் வண்ணம் பிளவுறுகிறது.

2] அணுக்கரு பிளவில் வெளிப்படும் ஆற்றலின் அளவு வேதிவினைகளில் வெளிப்படும் ஆற்றலைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது.

A) 1, 2, 3 சரி

B) 1 தவறு 2, 3 சரி

C) 1, 2 சரி 3 தவறு

D) 1 சரி 2, 3 தவறு

விளக்கம்: யுரேனியம் அணுக்கருவை நியூட்ரானால் மோதச் செய்யும்போது, அது கிட்டத்தட்ட சமமான நிறைகளையுடைய இரு சிறிய அணுக்கருக்களாகவும், அவற்றுடன் ஆற்றலும் வெளிப்படும் வண்ணம் பிளவுறுகிறது. அணுக்கரு பிளவில் வெளிப்படும் ஆற்றலின் அளவு வேதிவினைகளில் வெளிப்படும் ஆற்றலைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது.

100. இந்தியாவில்செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகள்____________

A) 23

B) 22

C) 21

D) 24

விளக்கம்: இந்தியாவில் தற்போது 22 அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன.

101. இந்தியாவின் ஆற்றல் தேவையில்____________ அளவு மட்டுமே அணுக்கரு உலைகளினால் கிடைக்கின்றன.

A) 3%

B) 2%

C) 4%

D) 5%

விளக்கம்: நம் ஆற்றல் தேவையை நிறைவேற்றுவதே அணுக்கரு உலைகளின் நோக்கமாக இருப்பினும் இந்தியாவின் ஆற்றல் தேவையில் வெறும் 2% அளவு மட்டுமே அவற்றால் வழங்க முடியும்.

102. கூற்று(A):அணுக்கரு பிளவை போல அறைவெப்பநிலையில் அணுக்கரு இணைவு நிகழாது.

காரணம்(R): குறைந்த நிறையுடைய இரு அணுக்கருக்கள் ஒன்றையொன்று நெருங்கும் போது கூலூம் விலக்கு விசையினால் அவை கடுமையாக விலக்கபடுகின்றன.

A) A சரி ஆனால் R தவறு

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: அணுக்கரு பிளவை போல அறைவெப்பநிலையில் அணுக்கரு இணைவு நிகழாது.ஏனெனில், குறைந்த நிறையுடைய இரு அணுக்கருக்கள் ஒன்றையொன்று நெருங்கும் போது கூலூம் விலக்கு விசையினால் அவை கடுமையாக விலக்கபடுகின்றன.

103. ____________ என்பாரின் கருத்துப்படி சூரியனின் ஆற்றல் புரோட்டான்- புரோட்டான் சுற்று எனப்படும்.

A) ஹான்ஸ் பெத்தே

B) B) பெக்கர்

C) ஜேம்ஸ் சாட்விக்

D) H.C ஹீரே

விளக்கம்: ஹான்ஸ் பெத்தே என்பாரின் கருத்துப்படி சூரியனின் ஆற்றல் புரோட்டான்- புரோட்டான் சுற்று எனப்படும்.

104. ஹைட்ரஜன் அணுவில் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம் ____________

A) 1: 2: 3

B) 2: 4: 6

C) 1: 4: 9

D) 1: 3: 5

விளக்கம்: ஹைட்ரஜன் அணுவில் முதல் மூன்று சுற்றுப்பாதைகளின் ஆரங்களின் விகிதம் 1: 4: 9 ஆகும்.

105. ஹைட்ரஜன் அணுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம் ____________

A) h

B) h/ π

C) 4h/ π

D) 2h/ π

விளக்கம்: ஹைட்ரஜன் அணுவில் நான்காவது சுற்றுப்பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம் 2h/ π ஆகும்.

106. கீழடி நகரம் எந்த ஆற்றங்கரையில் செழித்திருந்தது?

A) காவிரி

B) வைகை

C) தாமிரபரணி

D) பாலாறு

விளக்கம்: கீழடி நகரம் வைகை ஆற்றங்கரைகளில் பண்டைய நாகரிகம் செழித்திருந்தது என்பதற்கான தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது.

12th Science Lesson 6 Questions in Tamil

6] நிலைமின்னியல்

1. மின்சாரம் என்பது முறைப்படுத்தப்பட்ட மின்னலே என கூறியவர்____________

A) நியூட்டன்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) நீல்ஸ் போர்

D) ஜார்ஜ் கார்லின்

விளக்கம்: மின்சாரம் என்பது முறைப்படுத்தப்பட்ட மின்னலே– ஜார்ஜ் கார்லின்

2. கூற்று(A): பொருளொன்று தள்ளப்படும்போது, நம் கைகளில் உள்ள அணுக்களுடன் அப்பொருளிலுள்ள அணுக்கள் இடைவினை (interact) புரிகின்றன.

காரணம்(R): இந்த இடைவினைவிசையானது உராய்வு இயல்பினை பெற்றுள்ளது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பொருளொன்று தள்ளப்படும்போது, நம் கைகளில் உள்ள அணுக்களுடன் அப்பொருளிலுள்ள அணுக்கள் இடைவினை (interact) புரிகின்றன. இந்த இடைவினைவிசையானது மின்காந்த இயல்பையே பெற்றுள்ளது.

3. கூற்று(A): பரப்பு ஒன்றின் மீது ஒரு பொருளைத் தள்ளும்போது, அது நகர முற்படுவதை ஓய்வுநிலை உராய்வு தடுக்கும்.

காரணம்(R): இந்த ஓய்வுநிலை உராய்வானது பரப்பிலுள்ள அணுக்களுக்கும் பொருளிலுள்ள அணுக்களுக்கும் இடையே ஏற்படும் மின்காந்த இடைவினையால் உருவாகின்றது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: பரப்பு ஒன்றின் மீது ஒரு பொருளைத் தள்ளும்போது, அது நகர முற்படுவதை ஓய்வுநிலை உராய்வு தடுக்கும். இந்த ஓய்வுநிலை உராய்வானது பரப்பிலுள்ள அணுக்களுக்கும் பொருளிலுள்ள அணுக்களுக்கும் இடையே ஏற்படும் மின்காந்த இடைவினையால் உருவாகின்றது.

4. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] புவிப்பரப்பின் மீது நாம் நிற்கும்போது, நம் மீதுபுவியீர்ப்பு விசை கீழ்நோக்கிய திசையில் செயல்படுகிறது.

2] தரையின் செங்குத்து விசை மேல்நோக்கிய திசையில் செயல்பட்டு அதை சமன் செய்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: புவிப்பரப்பின் மீது நாம் நிற்கும்போது, நம் மீதுபுவியீர்ப்பு விசை கீழ்நோக்கிய திசையில் செயல்படுகிறது. தரையின் செங்குத்து விசை மேல்நோக்கிய திசையில் செயல்பட்டு அதை சமன் செய்கிறது.

5. நிலையாக உள்ள மின்துகள்களைப் பற்றி அறிய உதவும் மின்னியலின் இந்தப் பிரிவு____________

A) மின்னியல்

B) நிலை மின்னியல்

C) மின்சாரவியல்

D) காந்தவியல்

விளக்கம்: நிலையாக உள்ள மின்துகள்களைப் பற்றி அறிய உதவும் மின்னியலின் இந்தப் பிரிவு நிலை மின்னியல் எனப்படும்.

6. அரக்கு எனப்படுவது____________

1] இது ஒளி ஊடுருவும் தன்மையுடையது.

2] புதைப்படிமமாக மாறிய ஒரு வகை மரப்பிசின்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அரக்கு (amber) எனப்படும் ஒரு வகைப் பொருளை (இது ஒளிகசியும் தன்மையுடைய, புதைப்படிமமாக மாறிய ஒரு வகை மரப்பிசினே) ஆகும்.

7. கூற்று(A): மின்னூட்டம் பெற்ற இரப்பர் தண்டு மின்னூட்டம்பெற்ற இன்னொரு இரப்பர் தண்டினை விலக்குகிறது.

காரணம்(R): ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மின்னூட்டம் பெற்ற இரப்பர் தண்டு மின்னூட்டம்பெற்ற இன்னொரு இரப்பர் தண்டினை விலக்குகிறது. இதிலிருந்து, ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன எனலாம்.

8. கூற்று(A): மின்னூட்டம் பெற்ற இரப்பர் தண்டை மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டு கவருகின்றது.

காரணம்(R): வேறின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவருகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: மின்னூட்டம் பெற்ற இரப்பர் தண்டை மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டு கவருகின்றது. இதிலிருந்து கண்ணாடித் தண்டிலுள்ள மின்னூட்டமும் இரப்பரிலுள்ள மின்னூட்டமும் ஒரே வகையல்ல என்பதும் வேறின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவருகின்றன.

9. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அரக்கு மின்னூட்டம் அற்றவை.

2] இரப்பர் தண்டு பெற்ற மின்னூட்டம் கண்ணாடித் தண்டு பெற்ற மின்னூட்டத்திலிருந்து வேறுபட்டது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அரக்கு மின்னூட்டம் பெற்றுள்ளது. இரப்பர் தண்டு பெற்ற மின்னூட்டம் கண்ணாடித் தண்டு பெற்ற மின்னூட்டத்திலிருந்து வேறுபட்டது.

10. மின்னூட்டங்களை நேர் மின்னூட்டம் எதிர் மின்னூட்டம் என 18ம் நூற்றாண்டில் வகைப்படுத்தியவர்____________

A) நியூட்டன்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) நீல்ஸ் போர்

D) பெஞ்சமின் பிராங்க்ளின்

விளக்கம்: பிரபஞ்சத்தில் இரு வகை மின்னூட்டங்களே உள்ளன. ஒரு வகையை நேர் மின்னூட்டம் (+) எனவும் இன்னொரு வகையை எதிர் மின்னூட்டம் (–) எனவும் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பார் 18 ம் நூற்றாண்டில் வகைப்படுத்தினார்.

11. ஒரு பொருளிலுள்ள நிகர (net) மின்னூட்டம்____________எனில், அப்பொருள் மின் நடுநிலையில் உள்ளது எனலாம்.

A) ஒன்று

B) சுழி

C) நேர்

D) எதிர்

விளக்கம்: ஒரு பொருளிலுள்ள நிகர (net) மின்னூட்டம் சுழியெனில், அப்பொருள் மின் நடுநிலையில் உள்ளது எனலாம்.

12. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை என்பதால் அவையும் மின் நடுநிலைமைகொண்டவையே.

2] உராய்வின் மூலம் பொருள்களை மின்னேற்றம்செய்யும் முறை ‘உராய்வு மின்னேற்றம்’ எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: அனைத்துப் பொருள்களும் அணுக்களால் ஆனவை என்பதால் அவையும் மின் நடுநிலைமைகொண்டவையே. உராய்வின் மூலம் பொருள்களை மின்னேற்றம் (charging)செய்யும் முறை ‘உராய்வு மின்னேற்றம்’ எனப்படும்.

13. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை;

2] அணுக்கள் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களால் ஆனவை.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களால் ஆனவை.

14. மின்னூட்டத்தின் SI அலகு____________

A) ஆம்பியர்

B) ஜூல்

C) கூலூம்

D) கெல்வின்

விளக்கம்: மின்னூட்டத்தின் SI அலகு கூலூம் [C] ஆகும்.

15. கூற்று(A): கண்ணாடி தண்டினை பட்டுத் துணியால் தேய்க்கும்போது, எதிர்மின்னூட்டம் பெற்ற மின்துகள்கள் கண்ணாடித் தண்டிலிருந்து பட்டுத்துணிக்கு இடம்பெயர்கின்றன.

காரணம்(R): கண்ணாடித் தண்டு நிகர எதிர் மின்னூட்டத்தையும் பட்டுத்துணி நிகர நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கண்ணாடி தண்டினை பட்டுத் துணியால் தேய்க்கும்போது, எதிர்மின்னூட்டம் பெற்ற மின்துகள்கள் கண்ணாடித் தண்டிலிருந்து பட்டுத்துணிக்கு இடம்பெயர்கின்றன. இதனால் கண்ணாடித் தண்டு நிகர நேர் மின்னூட்டத்தையும் பட்டுத்துணி நிகர எதிர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.

16. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ‘மின்னூட்டங்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது’ என்றும் ‘அவற்றை ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றம் செய்ய மட்டுமே இயலும்’ என்று ஜார்ஜ் கார்லின் கூறினார்.

2] இதையே மொத்த மின்னூட்ட மாறாத் தன்மை என்பர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ‘மின்னூட்டங்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது’ என்றும் ‘அவற்றை ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றம் செய்ய மட்டுமே இயலும் என்று பெஞ்சமின் பிராங்க்ளின் கூறினார். இதையே மொத்த மின்னூட்ட மாறாத் தன்மை என்பர்.

17. மின்னூட்ட மாற்றம்____________ஆக இருக்கும்

A) ஒன்று

B) சுழி

C) நேர்

D) எதிர்

விளக்கம்: எந்தவொரு இயற்கை நிகழ்விலும் மொத்த மின்னூட்ட மாற்றம் சுழியாகவே இருக்கும்.

18. e இன் மதிப்பு____________

A) 1.6 x 1019 C

B) 1.6 x 10-19 C

C) 1.60 x 1019 C

D) 1.61 x 1019 C

விளக்கம்: e இன் மதிப்பு 1.6 x 10-19 C

19. எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு____________

A) +1.6 x 1019 C

B) -1.6 x 10-19 C

C) +1.60 x 1019 C

D) -1.61 x 1019 C

விளக்கம்: எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு = –1.6 × 10-19 C

20. புரோட்டானின் மின்னூட்ட மதிப்பு____________

A) +1.6 x 10-19 C

B) -1.6 x 10-19 C

C) +1.60 x 1019 C

D) -1.61 x 1019 C

விளக்கம்: புரோட்டானின் மின்னூட்ட மதிப்பு = +1.6 x 10-19 C

21. மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் முறையை கண்டறிந்தவர்____________

A) நியூட்டன்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) இராபர்ட் மில்லிகன்

D) பெஞ்சமின் பிராங்க்ளின்

விளக்கம்: மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் முறையை இராபர்ட் மில்லிகன் கண்டறிந்தார்.

22. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] வெற்றிட வெளியில் (free space) நிலையாக உள்ள இரு புள்ளி மின்துகள்களுக்கு இடையே காணப்படும் விசைக்கான கோவையை பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவர் தருவித்தார்.

2] இவர் 1788 ஆம் ஆண்டில் இதனை தருவித்தார்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: வெற்றிட வெளியில் (free space) நிலையாக உள்ள இரு புள்ளி மின்துகள்களுக்கு இடையே காணப்படும் விசைக்கான கோவையை 1786 ஆம் ஆண்டில் கூலூம் என்பவர் தருவித்தார்.

23. ஒரு குறிப்பிட்ட மின்துகள் மீது செயல்படும் மொத்த விசையானது மற்ற அனைத்து மின்துகள்கள் அதன்மீது செயல்படுத்தும் விசைகளின்____________ கூடுதலுக்குச் சமமாகும்.

A) நேர்மறை

B) எதிர்மறை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட மின்துகள் மீது செயல்படும் மொத்த விசையானது மற்ற அனைத்து மின்துகள்கள் அதன்மீது செயல்படுத்தும் விசைகளின் வெக்டர் கூடுதலுக்குச் சமமாகும்.

24. ____________ மற்றும் கூலூம் விதி ஆகியவை நிலை மின்னியலின் அடிப்படைத் தத்துவங்களாகும்.

A) பிராங்க்ளின் தத்துவம்

B) நிலைமின்னியல் தத்துவம்

C) மேற்பொருந்துதல் தத்துவம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மேற்பொருந்துதல் தத்துவம் மற்றும் கூலூம் விதி ஆகியவை நிலை மின்னியலின் அடிப்படைத் தத்துவங்களாகும்.

25. இரு மின்துகள்களுக்கு இடையே நிகழும் இடைவினை____________ விதியினால் பெறப்படுகிறது.

A) பிராங்க்ளின் விதி

B) நிலைமின்னியல் விதி

C) மேற்பொருந்துதல் விதி

D) கூலூம் விதி

விளக்கம்: இரு மின்துகள்களுக்கு இடையே நிகழும் இடைவினை கூலூம் விதியினால் பெறப்படுகிறது.

26. மின்புலத்தின் SI அலகு____________

A) நியூட்டன்

B) கூலூம்

C) நியூட்டன் / ஜூல்

D) நியூட்டன் / கூலூம்

விளக்கம்: மின்புலத்தின் SI அலகு நியூட்டன் / கூலூம் (NC-1) ஆகும்.

27. மின்புலம் ஒரு____________ அளவாகும்

A) வழி

B) அடிப்படை

C) ஸ்கேலார்

D) வெக்டர்

விளக்கம்: மின்புலம் ஒரு வெக்டர் அளவாகும்.

28. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்துகள் q நேர் மின்னூட்டம் (+) கொண்டதாக இருந்தால், மின்துகளிலிருந்து வெளிநோக்கிய திசையில் மின்புலம் இருக்கும்.

2] q எதிர்மின்னூட்டம் (–) கொண்டதாக இருந்தால் உள்நோக்கிய திசையில் மின்புலம் இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்துகள் q நேர் மின்னூட்டம் (+) கொண்டதாக இருந்தால், மின்துகளிலிருந்து வெளிநோக்கிய திசையில் மின்புலம் இருக்கும். q எதிர்மின்னூட்டம் (–) கொண்டதாக இருந்தால் உள்நோக்கிய திசையில் மின்புலம் இருக்கும்.

29. மின்புலம் என்ற கருத்தியலை அறிமுகம் செய்தவர்____________

A) நியூட்டன்

B) ஸ்டீபன் ஹாங்கிங்

C) மைக்கேல் பாரடே

D) பெஞ்சமின் பிராங்க்ளின்

விளக்கம்: மைக்கேல் பாரடே மின்புலம் என்ற கருத்தியலை அறிமுகம் செய்தார்.

30. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்புலம் ஒரு ஸ்கேலார் அளவு என்பதால் அதற்கு தனித்தவொரு திசையும் எண்மதிப்பும் வெளியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் இருக்கும்.

2] மின்துகளுக்கும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு (r) அதிகரித்தால் மின்புலத்தின் எண்மதிப்பு அதிகரிக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்புலம் ஒரு வெக்டர் அளவு என்பதால் அதற்கு தனித்தவொரு திசையும் எண்மதிப்பும் வெளியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் இருக்கும். மின்துகளுக்கும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு (r) அதிகரித்தால் மின்புலத்தின் எண்மதிப்பு குறையும்.

31. புறவெளியில் (space) உள்ள அனைத்து புள்ளிகளிலும் ஒரே திசையுடன் மாறாத எண்மதிப்பும் கொண்டிருந்தால் ____________ மின்புலம் எனப்படும்.

A) நேரான

B) எதிரான

C) சீரான

D) சீரற்ற

விளக்கம்: புறவெளியில் (space) உள்ள அனைத்து புள்ளிகளிலும் ஒரே திசையுடன் மாறாத எண்மதிப்பும் கொண்டிருந்தால் அது சீரான மின்புலம் (uniform electric field) எனப்படும்.

32. புறவெளியில் வெவ்வேறு புள்ளிகளில் வெவ்வேறு திசைகள் அல்லது வெவ்வேறு எண்மதிப்புகள் அல்லது இவ்விரண்டுமே கொண்டிருந்தால் அது____________ மின்புலம் எனப்படும்.

A) நேரான

B) எதிரான

C) சீரான

D) சீரற்ற

விளக்கம்: புறவெளியில் வெவ்வேறு புள்ளிகளில் வெவ்வேறு திசைகள் அல்லது வெவ்வேறு எண்மதிப்புகள் அல்லது இவ்விரண்டுமே கொண்டிருந்தால் அது சீரற்ற மின்புலமாகும்.

33. புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் மின்புலம்____________

A) நேரான

B) எதிரான

C) சீரான

D) சீரற்ற

விளக்கம்: புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் மின்புலம் சீரற்ற மின்புலமே.

34. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஏதேனும் ஒரு புள்ளியில் காணப்படும் தொகுபயன் மின்புலமானது ஒவ்வொரு மின்துகளும் அப்புள்ளியில் உருவாக்கும் மின்புலங்களின் ஸ்கேலார் கூடுதலுக்குச் சமம்.

2] இதுவே மின்புலங்களின் மேற்பொருந்துதல் எனப்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஏதேனும் ஒரு புள்ளியில் காணப்படும் தொகுபயன் மின்புலமானது ஒவ்வொரு மின்துகளும் அப்புள்ளியில் உருவாக்கும் மின்புலங்களின் வெக்டர் கூடுதலுக்குச் சமம். இதுவே மின்புலங்களின் மேற்பொருந்துதல் எனப்படும்.

35. நுண்ணிய நிலைகளில் மின்னூட்டம்____________ தன்மை கொண்டது.

A) நேரான

B) எதிரான

C) குவாண்டம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: நுண்ணிய நிலைகளில் மின்னூட்டம் குவாண்டத் தன்மை கொண்டது.

36. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்புலக் கோடுகள் நேர் மின்துகளில் தொடங்கி எதிர் மின்துகளிலோ அல்லது முடிவிலாத் தொலைவிலோ முடிவடைகின்றன.

2] ஒரு புள்ளி நேர் மின்துகளுக்கு வரையப்படும் மின்புலக் கோடுகள் ஆரப்போக்கில் வெளிநோக்கிய திசையிலும், ஒரு புள்ளி எதிர் மின்துகளுக்கு அவை ஆரப்போக்கில் உள்நோக்கிய திசையிலும் அமைகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்புலக் கோடுகள் நேர் மின்துகளில் தொடங்கி எதிர் மின்துகளிலோ அல்லது முடிவிலாத் தொலைவிலோ முடிவடைகின்றன. ஒரு புள்ளி நேர் மின்துகளுக்கு வரையப்படும் மின்புலக் கோடுகள் ஆரப்போக்கில் வெளிநோக்கிய திசையிலும், ஒரு புள்ளி எதிர் மின்துகளுக்கு அவை ஆரப்போக்கில் உள்நோக்கிய திசையிலும் அமைகின்றன.

37. மின்புலக் கோட்டிற்கு ஒரு புள்ளியில் வரையப்படும்____________ திசையில் அப்புள்ளியின் மின்புல வெக்டர் அமையும்.

A) நேர்கோட்டின்

B) செங்குத்து கோட்டின்

C) தொடுகோட்டின்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்புலக் கோட்டிற்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோட்டின் திசையில் அப்புள்ளியின் மின்புல வெக்டர் அமையும்.

38. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] எந்தவொரு பகுதியில் மின்புலத்தின் செறிவு அதிகமாக உள்ளதோ அங்கு மின்புலக் கோடுகள் இடைவெளி விட்டு காணப்படுகின்றன.

2] எங்கு மின்புலத்தின் செறிவு குறைவாக உள்ளதோ அங்கு மின்புலக் கோடுகள் நெருக்கமாக காணப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: எந்தவொரு பகுதியில் மின்புலத்தின் செறிவு அதிகமாக உள்ளதோ அங்கு மின்புலக் கோடுகள் நெருக்கமாகவும், எங்கு மின்புலத்தின் செறிவு குறைவாக உள்ளதோ அங்கு அவை இடைவெளி விட்டும் காணப்படுகின்றன.

39. மின்துகளிலிருந்து தொலைவு அதிகரிக்கும்போது மின்புலத்தின் வலிமை____________

A) அதிகரிக்கும்

B) குறையும்

C) மாறாது

D) சுழி

விளக்கம்: மின்துகளிலிருந்து தொலைவு அதிகரிக்கும்போது மின்புலத்தின் வலிமை குறையும்.

40. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] இரு மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.

2] அவ்வாறு வெட்டிக் கொண்டால், ஒரே புள்ளியில் இருவேறு மின்புல வெக்டர்கள் உள்ள நிலை ஏற்படும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: இரு மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை. அவ்வாறு வெட்டிக் கொண்டால், ஒரே புள்ளியில் இருவேறு மின்புல வெக்டர்கள் உள்ள நிலை ஏற்படும்.

41. சிறிய இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரு சமமான, வேறின மின்துகள்கள்____________ யை உருவாக்குகின்றன.

A) மின் ஓரு முனை

B) மின் பல முனை

C) மின் இரு முனை

D) மின் முனை

விளக்கம்: சிறிய இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரு சமமான, வேறின மின்துகள்கள் மின் இருமுனையை உருவாக்குகின்றன.

42. நிலையான மின் இரு முனைகளைப்போல் செயல்படுவற்றில் தவறானது எது?

A) CO

B) நீர்

C) அம்மோனியா

D) குளோரைடு

விளக்கம்: பல மூலக்கூறுகளில் நேர் மின்துகள்களின் மையமும் எதிர் மின்துகள்களின் மையமும் ஒரே புள்ளியில் பொருந்துவது இல்லை. அத்தகைய மூலக்கூறுகள் நிலையான மின் இரு முனைகளைப்போல் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்: CO, நீர், அம்மோனியா, HCl உள்ளிட்டவை.

43. மின்இருமுனை திருப்புத்திறனின் SI அலகு____________

A) மீட்டர் கூலூம்

B) கூலூம் சென்டிமீட்டர்

C) கூலூம் மீட்டர்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்இருமுனை திருப்புத்திறனின் SI அலகு கூலூம் மீட்டர் (Cm).

44. வான் டி கிராப் இயற்றியின் செயல்பாடு____________ மற்றும் கூர்முனைச் செயல்பாடு ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் அமைகிறது.

A) மின்புல தத்துவம்

B) மின் இருமுனை

C) மின் தூண்டல்

D) நிலைமின் தூண்டல்

விளக்கம்: வான் டி கிராப் இயற்றியின் செயல்பாடு நிலைமின் தூண்டல் மற்றும் கூர்முனைச் செயல்பாடு ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் அமைகிறது.

45. வான் – டி – கிராப் மின்னியற்றிவடிவமைக்க பட்ட ஆண்டு____________

A) 1930

B) 1921

C) 1928

D) 1929

விளக்கம்: 1929 ஆம் ஆண்டில் ராபர்ட் வான் டி கிராப் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

46. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்துகள்களின் தொடர் பரவல்களுக்கு தொகையிடல் முறைகளைப் பயன்படுத்தலாம்.

2] மின்புலக் கோடுகள் நேர் மின்துகளிலிருந்து தொடங்கி எதிர் மின்துகளிலோ அல்லது முடிவிலாத் தொலைவிலோ முடிவடையும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்துகள்களின் தொடர் பரவல்களுக்கு தொகையிடல் முறைகளைப் பயன்படுத்தலாம். மின்புலக் கோடுகள் நேர் மின்துகளிலிருந்து தொடங்கி எதிர் மின்துகளிலோ அல்லது முடிவிலாத் தொலைவிலோ முடிவடையும்.

47. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] குறைந்த அளவிலான மின்னழுத்த வேறுபாடுகளை உருவாக்க வான் டி கிராப் இயற்றி பயன்படுத்தப்படுகிறது.

2] வான் டி கிராப் இயற்றியின் மூலம் பெறப்படும் குறைந்த மின்னழுத்த வேறுபாடு அணுக்கருப் பிளவையில் பயன்படும் நேர் அயனிகளை முடுக்குவிக்கப் பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: பெரிய அளவிலான மின்னழுத்த வேறுபாடுகளை உருவாக்க வான் டி கிராப் இயற்றி பயன்படுத்தப்படுகிறது. வான் டி கிராப் இயற்றியின் மூலம் பெறப்படும் உயர் மின்னழுத்த வேறுபாடு அணுக்கருப் பிளவையில் பயன்படும் நேர் அயனிகளை (புரோட்டான்கள் மற்றும் டியூட்டிரான்கள்) முடுக்குவிக்கப் பயன்படுகிறது.

48. வான் டி கிராப் இயற்றியின் மூலம் பெறப்படும் மிக அதிக நிலைமின்னழுத்த வேறுபாடு____________

A) 108 V

B) 107 V

C) 109 V

D) 106 V

விளக்கம்: வான் டி கிராப் இயற்றியின் மூலம் பெறப்படும் மிக அதிக நிலைமின்னழுத்த வேறுபாடு 107 V ஆகும்.

49. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்னல் கடத்தி மின்னலைத் தடுக்கின்றது.

2] தரையை நோக்கி மின்னலைத் தடுப்பதன் மூலம் கட்டடங்களைப் பாதுகாக்கிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்னல் கடத்தி மின்னலைத் தடுப்ப தில்லை. மாறாக தரையை நோக்கி மின்னலைத் திருப்புவதன் மூலம் கட்டடங்களைப் பாதுகாக்கிறது.

50. வளைவு ஆரம் ____________ இருக்கும் பகுதிகளில் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும்.

A) அதிகமாக

B) சுழி

C) குறைவாக

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: வளைவு ஆரம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும்.

51. கூர்முனைச் செயல்பாட்டை____________ எனவும் அழைப்பர்

A) ஒளி வட்ட இறக்கம்

B) ஒளி வட்ட மின்னிறக்கம்

C) ஒளி வட்ட நிலைமின்னிறக்கம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கூர்முனைச் செயல்பாட்டை ஒளி வட்ட மின்னிறக்கம் எனவும் அழைப்பர்.

52. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஆரம் குறைவாக இருந்தால் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும்.

2] ஆரம் அதிகமாக இருந்தால் மின்னூட்டப் பரப்படர்த்தி குறைவாக இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஆரம் குறைவாக இருந்தால் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும் அல்லது ஆரம் அதிகமாக இருந்தால் மின்னூட்டப் பரப்படர்த்தி குறைவாக இருக்கும்.

53. மின்தேக்கிகளின் தொகுப்பில் உள்ள மின்தேக்கிகளின் தொகுபயன் மின்தேக்குத்திறன்____________

A) 7µF

B) 8µF

C) 5µF

D) 6µF

விளக்கம்: மின்தேக்கிகளின் தொகுப்பில் உள்ள மின்தேக்கிகளின் தொகுபயன் மின்தேக்குத்திறன் 6µF ஆகும்.

54. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] தொகுபயன் மின்தேக்குத் திறனின் மதிப்பு பக்க இணைப்பிலுள்ள அதிகபட்ச தனித்த மின்தேக்குத்திறனை விட எப்போதும் குறைவாகவே இருக்கும்.

2] பக்க இணைப்பிலுள்ள மின்தேக்கி ஒவ்வொன்றின் பரப்பளவையும் கூட்டும்போது கிடைக்கும் தொகுபயன் பரப்பளவு அதிகமாக உள்ளதால் அதன் தொகுபயன் மின்தேக்குத்திறனும் அதிகமாக உள்ளது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: தொகுபயன் மின்தேக்குத் திறனின் மதிப்பு பக்க இணைப்பிலுள்ள அதிகபட்ச தனித்த மின்தேக்குத்திறனை விட எப்போதும் அதிகமாகவே இருக்கும். பக்க இணைப்பிலுள்ள மின்தேக்கி ஒவ்வொன்றின் பரப்பளவையும் கூட்டும்போது கிடைக்கும் தொகுபயன் பரப்பளவு அதிகமாக உள்ளதால் அதன் தொகுபயன் மின்தேக்குத்திறனும் அதிகமாக உள்ளது.

55. கணினி விசைப்பலகையிலுள்ள பட்டன்கள் மின்காப்புடன் கூடிய____________ ஆனவை.

A) மின் கடத்தி

B) மின் தேக்கி

C) மின் தடை

D) மின் கம்பி

விளக்கம்: கணினி விசைப்பலகையிலுள்ள பட்டன்கள் (keys) மின்காப்புடன் கூடிய மின்தேக்கிகளால் ஆனவை.

56. கூற்று(A): கணினி விசைப்பலகையிலுள்ள பட்டனை அழுத்தும்போது தட்டுகளுக்கு இடையேயுள்ள தொலைவு குறைவதால் மின்தேக்குத்திறன் அதிகரிக்கிறது.

காரணம்(R): இதனால் தூண்டப்படும் எலக்டரானிய சுற்றுகளால் எந்த பட்டன் அழுத்தப்பட்டது என்ற தகவல் கணினியை அடைகிறது.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: கணினி விசைப்பலகையிலுள்ள பட்டனை அழுத்தும்போது தட்டுகளுக்கு இடையேயுள்ள தொலைவு குறைவதால் மின்தேக்குத்திறன் அதிகரிக்கிறது. இதனால் தூண்டப்படும் எலக்டரானிய சுற்றுகளால் எந்த பட்டன் அழுத்தப்பட்டது என்ற தகவல் கணினியை அடைகிறது.

57. மின்காப்புப் பொருள்களான எவற்றை தட்டுகளுக்கு இடையே புகுத்தினால் மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் மாற்றம் அடையும்.

A) மைக்கா

B) கண்ணாடி

C) காகிதம்

D) இவை அனைத்தும்

விளக்கம்: மின்காப்புப் பொருள்களான மைக்கா, கண்ணாடி அல்லது காகிதம் போன்றவற்றை தட்டுகளுக்கு இடையே புகுத்தினால் மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் மாற்றம் அடையும்.

58. நாம் புகைப்படம் எடுக்கும்போது அதிலிருந்து தெறிப்பொளி (flash) வெளிப்படுவது ____________

A) ஒளி மின்தேக்கி

B) தெறிப்பு மின்தேக்கி

C) வீச்சு மின்தேக்கி

D) கதிர் மின்தேக்கி

விளக்கம்: நாம் புகைப்படம் எடுக்கும்போது அதிலிருந்து தெறிப்பொளி (flash) வெளிப்படுவதற்கு தெறிப்பு மின்தேக்கி எனப்படும்.

59. இதய நிறுத்தம் ஏற்படும்போது, ____________ என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி இதயத்துடிப்பை இயல்புக்குக் கொண்டு வருவார்கள்.

A) இதய செலுத்தல் நீக்கி

B) இதய உதறல் நீக்கி

C) இதய அதிர்தல் நீக்கி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இதய நிறுத்தம் (cardiac arrest) ஏற்படும்போது, இதய உதறல் நீக்கி (heart difibrillator) என்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி திடீரென அதிகளவிலான மின்னாற்றலை நோயாளியின் நெஞ்சுப் பகுதியில் செலுத்துவதன் மூலம் இதயத்துடிப்பை இயல்புக்குக் கொண்டு வருவார்கள்.

60. மின் வழங்கிகளில் (Power supplies) மின்திறன் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கு____________ பயன்டுகின்றன.

A) மின் கடத்தி

B) மின் தேக்கி

C) மின் தடை

D) மின் கம்பி

விளக்கம்: மின் வழங்கிகளில் (Power supplies) மின்திறன் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கு மின்தேக்கிகள் பயன்டுகின்றன.

61. மின்திறன் அனுப்பீட்டில் அதன் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்ய____________ பயன்டுகின்றன.

A) மின் கடத்தி

B) மின் தேக்கி

C) மின் தடை

D) மின் கம்பி

விளக்கம்: மின்திறன் அனுப்பீட்டில் அதன் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்யவும் மின்தேக்கிகள் பயன்டுகின்றன.

62. மின்தேக்கியை____________ செய்யும்போது ஆற்றல் திரும்பப் பெறப்படுகிறது.

A) மின்னேற்றம்

B) மின்னிறக்கம்

C) மின்னைடைவு

D) மின்னிழப்பு

விளக்கம்: மின்தேக்கியை மின்னிறக்கம் (discharge) செய்யும்போது ஆற்றல் திரும்பப் பெறப்படுகிறது.

63. ஓரலகு பருமனில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை, ____________ என வரையறுக்கலாம்.

A) நிலை மின்னழுத்த ஆற்றல்

B) மின்னழுத்த ஆற்றல்

C) மின்னழுத்த ஆற்றல் அடர்த்தி

D) நிலை மின்னழுத்த ஆற்றல் அடர்த்தி

விளக்கம்: ஓரலகு பருமனில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலை, நிலை மின்னழுத்த ஆற்றல் அடர்த்தி என வரையறுக்கலாம்.

64. ஒரு பொருளை சுழலச் செய்ய அதன் மீது____________ செலுத்தப்பட வேண்டும்.

A) விசை

B) ஆற்றல்

C) திருப்பு விசை

D) முடுக்கம்

விளக்கம்: ஒரு பொருளை சுழலச் செய்ய அதன் மீது திருப்புவிசை செலுத்தப்பட வேண்டும்.

65. கூரை விசிறியில் பொருத்தப்பட்டுள்ள மின்தேக்கி____________

A) கண்டம்சர்

B) வோல்டயிக் கண்டம்சர்

C) கண்டென்சர்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கூரை விசிறியில் இந்த தொடக்கத் திருப்புவிசையை அளிப்பதற்கு மின்தேக்கி பொருத்தப்பட்டுள்ளது. கண்டென்சர் (Condenser) என்ற பெயரில் அறியப்படும் மின்தேக்கி பழுதடைந்து விட்டால், தேவைப்படும் தொடக்கத் திருப்பு விசையை அதனால் அளிக்க இயலாது.

66. மின்தேக்குதிறனின் SI அலகு ____________

A) வோல்ட்/ கூலூம்

B) கூலூம்/ ஜூல்

C) கூலூம் / வோல்ட்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்தேக்குதிறனின் SI அலகு கூலூம் / வோல்ட் அல்லது மைக்கேல் பாரடேயின் நினைவாக பாரட் (F) என்றும் குறிக்கப்படுகிறது.

67. ____________என்பது மின்தேக்குத் திறனின் மிகப்பெரிய ஓர் அலகு

A) கூலூம்

B) வோல்ட்

C) ஜூல்

D) பாரட்

விளக்கம்: பாரட் என்பது மின்தேக்குத் திறனின் மிகப்பெரிய ஓர் அலகு.

68. மைக்ரோபாரட்____________

A) 10-4F

B) 10-5F

C) 10-6F

D) 10-7F

விளக்கம்: மைக்ரோபாரட் (1µF = 10-6F)

69. பைக்கோபாரட் ____________

A) 10-13F

B) 10-11F

C) 10-12F

D) 10-13F

விளக்கம்: பைக்கோபாரட் (1pF = 10-12 F)

70. மின்தேக்கியின் இரு தகடுகளில் சேமிக்கப்படும் மின்துகள்களின் மொத்த மின்னூட்டம் ____________

A) ஒன்று

B) இரண்டு

C) சுழி

D) மூன்று

விளக்கம்: மின்தேக்கியின் இரு தகடுகளில் சேமிக்கப்படும் மின்துகள்களின் மொத்த மின்னூட்டம் சுழி ஆகும்.

71. மின்துகள்கள் மற்றும் மின்னாற்றலை சேமிக்க உதவும் கருவி____________

A) மின் கடத்தி

B) மின் தேக்கி

C) மின் தடை

D) மின் கம்பி

விளக்கம்: மின்துகள்கள் மற்றும் மின்னாற்றலை சேமிக்க உதவும் கருவியே மின்தேக்கி.

72. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்காப்பிற்கு அளிக்கப்படும் புற மின்புலம் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தால் அது அணுக்களில் உள்ள எலக்ட்ரான் கட்டமைப்பை உடைத்து கட்டுண்ட மின்துகள்களை கட்டுறா மின்துகள்களாக்குகின்றது.

2] இந்நிலையில் மின்காப்புப் பொருள் மின்னோட்டத்தைக் கடத்த ஆரம்பிக்கின்றது. இதையே மின்காப்பு முறிவு என்பர்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்காப்பிற்கு அளிக்கப்படும் புற மின்புலம் அதிக வலிமை வாய்ந்ததாக இருந்தால் அது அணுக்களில் உள்ள எலக்ட்ரான் கட்டமைப்பை உடைத்து கட்டுண்ட மின்துகள்களை கட்டுறா மின்துகள்களாக்குகின்றது. இந்நிலையில் மின்காப்புப் பொருள் மின்னோட்டத்தைக் கடத்த ஆரம்பிக்கின்றது. இதையே மின்காப்பு முறிவு (dielectric break down) என்பர்.

73. மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு ஒன்று தாங்கக்கூடிய பெரும மின்புலம்____________

A) மின்காப்பு அடர்த்தி

B) மின்காப்பு புலமை

C) மின்காப்பு வலிமை

D) மின்காப்பு செறிவு

விளக்கம்: மின்காப்பு முறிவு ஏற்படும் முன் மின்காப்பு ஒன்று தாங்கக்கூடிய பெரும மின்புலம் மின்காப்பு வலிமை எனப்படும்.

74. காற்றின் மின்காப்பு வலிமை____________

A) 3 × 10-6 v m-1.

B) 3 × 107 V m-1.

C) 3 × 10-6 V m-1.

D) 3 × 106 V m-1.

விளக்கம்: காற்றின் மின்காப்பு வலிமை 3 × 106V m-1.

75. மைக்கா மின்காப்பு வலிமை____________

A) 100 × 10-6 V m-1

B) 101 × 107 V m-1.

C) 100 × 106 V m-1

D) 100 × 10-5 V m-1.

விளக்கம்: மைக்கா மின்காப்பு வலிமை 100 × 106 V m-1

76. டெப்லான் மின்காப்பு வலிமை____________

A) 60 × 10-6 V m-1

B) 60 × 107 V m-1.

C) 60 × 106 V m-1

D) 100 × 10-5 V m-1.

விளக்கம்: டெப்லான் மின்காப்பு வலிமை 60 × 106 V m-1

77. காகிதம் மின்காப்பு வலிமை____________

A) 16 × 10-6 V m-1

B) 16 × 107 V m-1.

C) 16 × 106 V m-1

D) 16 × 10-5 V m-1.

விளக்கம்: காகிதம் மின்காப்பு வலிமை 16 × 106 V m-1

78. பைரக்ஸ் கண்ணாடி மின்காப்பு வலிமை____________

A) 14 × 10-6 V m-1

B) 14 × 107 V m-1.

C) 14 × 106 V m-1

D) 14 × 10-5 V m-1.

விளக்கம்: பைரக்ஸ் கண்ணாடி மின்காப்பு வலிமை 14 × 106 V m-1

79. மின்காப்புப் பொருளில் ஓரலகு பருமனில் (தூண்டப்படும்) மொத்த இருமுனை திருப்புத்திறனை ____________ என்பர்.

A) மின் முனைவாக்கம்

B) முனைவாக்கம்

C) நிலை மின்முனைவாக்கம்

D) ஆற்றல் முனைவாக்கம்

விளக்கம்: மின்காப்புப் பொருளில் ஓரலகு பருமனில் (தூண்டப்படும்) மொத்த இருமுனை திருப்புத்திறனை முனைவாக்கம் என்பர்.

80. புற மின்புலம் இல்லாத நிலையில் நிகர இருமுனை திருப்புத்திறன்_____________

A) ஒன்று

B) இரண்டு

C) சுழி

D) மூன்று

விளக்கம்: புற மின்புலம் இல்லாத நிலையில் நிகர இருமுனை திருப்புத்திறன் சுழியாகும்.

81. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்காப்பு பொருள் என்பது மின்னோட்டத்தைக் கடத்தாத ஒரு பொருள்.

2] அதில் கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகம்

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்காப்பு பொருள் என்பது மின்னோட்டத்தைக் கடத்தாத ஒரு பொருள். அதில் கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கை குறைவு.

82. கீழ்க்கண்டவற்றுள் மின்காப்பு அல்லாதவை எவை?

A) அலுமினியம்

B) எபோனைட்

C) கண்ணாடி

D) மைக்கா

விளக்கம்: மின்காப்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்: எபோனைட், கண்ணாடி, மைக்கா போன்றவை.

83. நேர் மின்துகள்களின் மின்னூட்ட மையமும் எதிர் மின்துகள்களின் மின்னூட்ட மையமும் ஒரே புள்ளியில் பொருந்தி அமைகின்ற மூலக்கூறு_____________

A) முனைவற்ற மூலக்கூறு

B) முனைவுறு மூலக்கூறு

C) மின் முனைவற்ற மூலக்கூறு

D) மின் முனைவுறு மூலக்கூறு

விளக்கம்: நேர் மின்துகள்களின் மின்னூட்ட மையமும் எதிர் மின்துகள்களின் மின்னூட்ட மையமும் ஒரே புள்ளியில் பொருந்தி அமைகின்ற மூலக்கூறு மின் முனைவற்ற மூலக்கூறு எனப்படும்.

84. ____________ நிலைத்த இருமுனை திருப்புத்திறனைப் பெற்றிருப்பதில்லை.

A) முனைவற்ற மூலக்கூறு

B) முனைவுறு மூலக்கூறு

C) மின் முனைவற்ற மூலக்கூறு

D) மின் முனைவுறு மூலக்கூறு

விளக்கம்: மின் முனைவற்ற மூலக்கூறு நிலைத்த இருமுனை திருப்புத்திறனைப் பெற்றிருப்பதில்லை.

85. புற மின்புலம் செயல்படாத நிலையிலும் நேர் மற்றும் எதிர் மின்துகள்களின் மின்னூட்ட மையங்கள் பிரிக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள்____________

A) முனைவற்ற மூலக்கூறு

B) மின்முனைவுள்ள மூலக்கூறு

C) மின் முனைவற்ற மூலக்கூறு

D) மின் மூலக்கூறு

விளக்கம்: புற மின்புலம் செயல்படாத நிலையிலும் நேர் மற்றும் எதிர் மின்துகள்களின் மின்னூட்ட மையங்கள் பிரிக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள் மின்முனைவுள்ள மூலக்கூறுகள் எனப்படும்.

86. ____________ நிலைத்த இருமுனை திருப்புத்திறனைப் பெற்றுள்ளன.

A) முனைவற்ற மூலக்கூறு

B) மின்முனைவுள்ள மூலக்கூறு

C) மின் முனைவற்ற மூலக்கூறு

D) மின் மூலக்கூறு

விளக்கம்: மின்முனைவுள்ள மூலக்கூறு நிலைத்த இருமுனை திருப்புத்திறனைப் பெற்றுள்ளன.

87. மின்முனைவற்ற மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு____________

A) ஹைடிரஜன்

B) ஆக்சிஜன்

C) கார்பன் டையாக்சைடு

D) இவை அனைத்தும்

விளக்கம்: மின்முனைவற்ற மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டுகள்: ஹைடிரஜன், ஆக்சிஜன், கார்பன் டையாக்சைடு உள்ளிட்டவை.

88. மின்முனைவுள்ள மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டு____________

A) H2O

B) N2O

C) HCL

D) இவை அனைத்தும்

விளக்கம்: மின்முனைவுள்ள மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டுகள்: H2O, N2O, HCl, NH3

89. தொடுதல் இன்றியே ஒரு பொருளை மின்னேற்றம் பெறச் செய்யும் நிகழ்வு____________

A) மின் தூண்டல்

B) மின் காந்த தூண்டல்

C) நிலை மின் தூண்டல்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தொடுதல் இன்றியே ஒரு பொருளை மின்னேற்றம் பெறச் செய்யும் நிகழ்வு நிலைமின் தூண்டல் எனப்படும்.

90. ஒரு உலோகக் கடத்தியில் உள்ள இயங்கும் மின்துகள்கள்____________

A) கட்டுறா புரோட்டான்கள்

B) கட்டுறா நியூட்ரான்கள்

C) கட்டுறா எலக்ட்ரான்கள்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒரு உலோகக் கடத்தியில் உள்ள இயங்கும் மின்துகள்கள் கட்டுறா எலக்ட்ரான்களே ஆகும்.

91. மின்துகள் அமைப்பு ஏதேனுமொரு சமச்சீர் தன்மையைப் பெற்றிருந்தால் மின்புலத்தைக் கணக்கிட____________ மிகச்சிறந்த வழியாகும்.

A) கூலூம் விதி

B) காஸ் விதி

C) பாரடே விதி

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: மின்துகள் அமைப்பு ஏதேனுமொரு சமச்சீர் தன்மையைப் பெற்றிருந்தால் மின்புலத்தைக் கணக்கிட காஸ் விதியே மிகச்சிறந்த வழியாகும்.

92. மின்புலக் கோடுகளுக்குக் குறுக்கே அமைந்த குறிப்பிட்ட பரப்பு ஒன்றின் வழியே பாயும் மின்புலக் கோடுகளின் எண்ணிக்கை____________

A) மின்பாயம்

B) மின்னழுத்த வேறுபாடு

C) மின் தூண்டல்

D) மின்புலம்

விளக்கம்: மின்புலக் கோடுகளுக்குக் குறுக்கே அமைந்த குறிப்பிட்ட பரப்பு ஒன்றின் வழியே பாயும் மின்புலக் கோடுகளின் எண்ணிக்கை மின்பாயம் எனப்படும்.

93. மின்பாயத்தின் அலகு____________

A) N m2 C-2

B) N m C-2

C) N m2 C-1

D) N m2 C-2

விளக்கம்: மின்பாயம் அலகு N m2 C-1 ஆகும்.

94. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்பாயம் ஒரு வெக்டர்அளவு ஆகும்.

2] இது நேர்க்குறி அல்லது எதிர்க்குறி மதிப்பைப் பெற்று இருக்கும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்பாயம் ஒரு ஸ்கேலர் அளவு ஆகும். மேலும் இது நேர்க்குறி அல்லது எதிர்க்குறி மதிப்பைப் பெற்று இருக்கும்.

95. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒரு பரப்பில் உள்ள எல்லா புள்ளிகளும் ஒரே மின்னழுத்தத்தைக் கொண்டிருந்தால் அப்பரப்பு சமமின்னழுத்தப்பரப்பு எனப்படுகிறது.

2] ஒவ்வொரு கோளப் பரப்பும் ஒரு சம மின்னழுத்தப் பரப்பே என்றாலும் ஒவ்வொன்றின் மின்னழுத்த மதிப்பும் வெவ்வேறு ஆகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு பரப்பில் உள்ள எல்லா புள்ளிகளும் ஒரே மின்னழுத்தத்தைக் கொண்டிருந்தால் அப்பரப்பு சமமின்னழுத்தப்பரப்பு எனப்படுகிறது. ஒவ்வொரு கோளப் பரப்பும் ஒரு சம மின்னழுத்தப் பரப்பே என்றாலும் ஒவ்வொன்றின் மின்னழுத்த மதிப்பும் வெவ்வேறு ஆகும்.

96. கூற்று(A): ஒரு புள்ளி மின்துகளைவிட மின் இருமுனையின் மின்னழுத்தம் வேகமாகக் குறைகின்றது.

காரணம்(R): ஏனென்றால் மின் இருமுனையிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது நேர் மற்றும் எதிர் மின்துகள்களின் விளைவுகள் ஒன்றையொன்று சமன்செய்து கொள்கின்றன.

A) A தவறு ஆனால் R சரி

B) A சரி ஆனால் R சரியான விளக்கமல்ல

C) A மற்றும் R தவறு

D) A சரி மற்றும் R சரியான விளக்கம்

விளக்கம்: ஒரு புள்ளி மின்துகளைவிட மின் இருமுனையின் மின்னழுத்தம் வேகமாகக் குறைகின்றது. ஏனென்றால் மின் இருமுனையிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது நேர் மற்றும் எதிர் மின்துகள்களின் விளைவுகள் ஒன்றையொன்று சமன்செய்து கொள்கின்றன.

97. நுண்ணலை அடுப்பு உருவாக்கும் நுண்ணலைகள், ____________ ஆகும்.

A) அலைவுறா மின்காந்த அலை

B) அலைவுறும் மின்காந்த அலை

C) அலைவுறும் மின்காந்த புலம்

D) அலைவுறா மின்காந்த புலம்

விளக்கம்: நுண்ணலை அடுப்பு உருவாக்கும் நுண்ணலைகள், அலைவுறும் மின்காந்தப் புலங்களே ஆகும்.

98. ____________ தத்துவத்தின் அடிப்படையில் நுண்ணலை அடுப்பு செயல்படுகிறது.

A) மின் ஒருமுனை மீது செயல்படும் திருப்பு விசை

B) மின்காந்த தூண்டல்

C) கூ லூம் விதி

D) மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசை

விளக்கம்: மின் இருமுனையின் மீது செயல்படும் திருப்பு விசை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நுண்ணலை அடுப்பு (microwave oven) செயல்படுகிறது.

99. நாம் உண்ணும் உணவில் உள்ள நீர் மூலக்கூறுகள் நிலைத்த____________ ஆகும்.

A) மின் ஒருமுனை

B) மின் இருமுனை

C) மின் மும்முனை

D) மின்முனை

விளக்கம்: நாம் உண்ணும் உணவில் உள்ள நீர் மூலக்கூறுகள் நிலைத்த மின் இருமுனைகள் ஆகும்.

100. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்காப்பு அல்லது மின்கடத்தாப் பொருள்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் ஆகும்.

2] ஆனால் மின்புலத்தில் அவை வைக்கப்படும் போது மின்முனைவாக்கம் அடைகின்றன.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்காப்பு அல்லது மின்கடத்தாப் பொருள்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் கிடையாது. ஆனால் மின்புலத்தில் அவை வைக்கப்படும் போது மின்முனைவாக்கம் அடைகின்றன.

101. ____________ முறையைப் பயன்படுத்தி கடத்தியை மின்னேற்றம் செய்யலாம்.

A) மின்பாயம்

B) மின்னழுத்த வேறுபாடு

C) மின் தூண்டல்

D) மின்புலம்

விளக்கம்: மின் தூண்டல் முறையைப் பயன்படுத்தி கடத்தியை மின்னேற்றம் செய்யலாம்.

102. கடத்தியின் பரப்பின் மீதுள்ள அனைத்து புள்ளிகளிலும்____________ சமமாகும்.

A) மின்பாயம்

B) மின்னழுத்த வேறுபாடு

C) மின்னழுத்தம்

D) மின்புலம்

விளக்கம்: கடத்தியின் பரப்பின் மீதுள்ள அனைத்து புள்ளிகளிலும் மின்னழுத்தம் சமமாகும்.

103. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தேக்குத்திறனானது தனித்தனி மின்தேக்குத் திறன்களின் கூடுதலுக்குச் சமமாகும்.

2] மின்தேக்கிகள் தொடரிணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தேக்குத் திறனின் தலைகீழ் மதிப்பு தனித்தனி மின்தேக்குத் திறன்களின் தலைகீழ் மதிப்புகளின் கூடுதலுக்குச் சமமாகும்.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தேக்குத்திறனானது தனித்தனி மின்தேக்குத் திறன்களின் கூடுதலுக்குச் சமமாகும். மின்தேக்கிகள் தொடரிணைப்பில் உள்ளபோது தொகுபயன் மின்தேக்குத் திறனின் தலைகீழ் மதிப்பு தனித்தனி மின்தேக்குத் திறன்களின் தலைகீழ் மதிப்புகளின் கூடுதலுக்குச் சமமாகும்.

104. கடத்தியின் கூர்முனைகளில், மின்னூட்டப் பரப்படர்த்தி____________

A) குறைவு

B) அதிகம்

C) சுழி

D) நடுநிலையானது

விளக்கம்: கடத்தியின் கூர்முனைகளில், மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாகும்.

105. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

1] ஒரு கடத்தியில் மின்துகள்களின் பரவலானது கடத்தியின் வடிவத்தைப் பொறுத்தது அல்ல.

2] இத்தத்துவம் மின்னல் கடத்திகளில் பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1 தவறு 2 சரி

C) 1, 2 தவறு

D) 1 சரி 2 தவறு

விளக்கம்: ஒரு கடத்தியில் மின்துகள்களின் பரவலானது கடத்தியின் வடிவத்தைப் பொறுத்தது. இத்தத்துவம் மின்னல் கடத்திகளில் பயன்படுகிறது.

106. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?

A) புள்ளி மின்துகள்

B) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி

C) சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

D) சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூட

விளக்கம்: சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம் சீரான மின்புலத்தை உருவாக்கும்

107. q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை

A) முன்பை விடக் குறைவாக இருக்கும்

B) அதேயளவு இருக்கும்

C) முன்பை விட அதிகமாக இருக்கும்

D) சுழி

108. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

A) மின் தேக்குத்திறன்

B) மின்துகள்

C) மின்னழுத்த வேறுபாடு

D) ஆற்றல் அடர்த்தி

விளக்கம்: இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் ஆற்றல் அடர்த்தி மாறுபடும்.

109. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

A) Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

B) Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

C) C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

D) Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

Previous page 1 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!