General Tamil

7th Tamil Unit 1 Questions

61) முதலெழுத்துகள் என்பவை எவை?

a) உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்து

b) உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து

c) உயிரெழுத்து, ஆயுத எழுத்து

d) உயிரெழுத்து, மெய்யெழுத்து

விளக்கம்: உயிரெழுத்துக்கள் 12 மற்றும் மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துக்களும் முதலெழுத்துகள் எனப்படுகின்றன.

62) வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து

குறைந்து ஒலிக்கும் உகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

a) குற்றியலிகரம்

b) குற்றியலுகரம்

c) உயிர்த்தொடர் குற்றியலுகரம்

d) நெடில்தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து குறைந்து ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.

63) குற்றியலுகரம் – பிரித்தெழுதுக.

a) குற்றம் + இகரம்

b) குறுமை + உகரம்

c) குறுமை + இயல் + உகரம்

d) குறுமை + உகரம்

விளக்கம்: குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். ஈறுபோதல் விதிப்படி “மை விகுதி கெட்டு குறு + இயல் + உகரம் என்றானது. பின் “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி, குற் + இயல் + உகரம் என்றானது. “தன்னொற்றிரட்டல்” என்னும் விதிப்படி குற்(ற்) + இயல் + உகரம் என்றானது. இறுதியாக உடல்மேல் “உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி குற்றியலுகரம் என்றானது.

64) கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது,

ஒரு மாத்திரை அளவிலிருந்து எவ்வாறு மாறி ஒலிக்கும்?

a) 1 மாத்திரையாகவே ஒலிக்கும்

b) 2 மாத்திரையாக உயர்ந்து ஒலிக்கும்

c) 1½ மாத்திரையாக உயர்ந்து ஒலிக்கும்

d) ½ மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்

விளக்கம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ½ மாத்திரையாக ஒலிக்கும். இது குற்றியலுகம் எனப்படும்.

65) தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் எத்தனை மாத்திரை அளவுக்கு

ஒலிக்கும்?

a) 1

b) 2

c) ½

d) a மற்றும் b

விளக்கம்: தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். இதே போல், வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்

66) பொருந்தாததைத் தேர்வு செய்க.

a) காசு

b) பயறு

c) சால்பு

d) மாவு

விளக்கம்: காசு, பயறு, சால்பு ஆகியவை குற்றிலுகரச் சொற்கள். மாவு என்பது முற்றியலுகரம் ஆகும். வு என்பது வல்லின உகரமல்ல. அதனால் அது தனது ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

67) தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு எத்தனை எழுத்துச் சாரியைப் பயன்படுத்தலாம்?

a) 3

b) 2

c) 4

d) 7

விளக்கம்: தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய 4 எழுத்து சாரியைப் பயன்படுத்துகிறோம்.

68) தமிழ் எழுத்துக்களை அதன் எழுத்து சாரியையுடன் பொருத்துக.

a. குறில் – 1. கேனம்

b. நெடில் – 2. காரம்

c. குறில், நெடில் – 3. கான்

d. ஆயுதம் – 4. கரம்

a) 3, 4, 2, 1

b) 2, 3, 4, 1

c) 4, 3, 2, 1

d) 4, 3, 1, 2

விளக்கம்: 1. குறில் – கரம்

2. நெடில் – கான்

3. குறில், நெடில் – காரம்

4. ஆயுதம் – கேனம்

69) பொருத்துக.

a. அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – 1. நெடில்

b. ஐகான், ஒளகான் – 2. ஆயுதம்

c. மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – 3. குறில்

d. அஃகேனம் – 4. குறில், நெடில்

a) 3, 1, 4, 2

b) 1, 3, 4, 2

c) 3, 1, 2, 4

d) 3, 2, 4, 1

விளக்கம்: அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – குறில்

ஐகான், ஒளகான்- நெடில்

மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – குறில், நெடில்

அஃகேனம் – ஆயுதம்

70) குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a) 4

b) 2

c) 5

d) 6

விளக்கம்: குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. நெடில் தொடர் குற்றியலுகரம் 2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம் 3. உயிர்த் தொடர் குற்றியலுகரம் 4. வன் தொடர் குற்றியலுகரம் 5. மென் தொடர் குற்றியலுகரம் 6. இடைத் தொடர் குற்றியலுகரம்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!