General Tamil

7th Tamil Unit 1 Questions

71) சரியான கூற்றை தேர்வு செய்க.

1. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றிலுகரம்

2. இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டுமே அமையும் (எ.கா) பாகு, மாசு, பாடு, காடு, ஆறு.

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) இரண்டும் தவறு

d) இரண்டும் சரி

விளக்கம்: எப்போதும் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஈரெழுத்துச் சொல்லாகவே மட்டுமே அமையும். அவை தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உதாரணமாக காது என்ற சொல்லில் கா என்ற தனிநெடிலைத் தொடர்ந்து து என்ற குற்றியலுகரச் சொல் வருகிறது.

72) முப்பாற் புள்ளியைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

a) உயிர்த் தொடர் குற்றியலுகரம்

b) இடைத் தொடர் குற்றியலுகரம்

c) ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

d) வன் தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: முப்பாற்புள்ளி அல்லது அஃகேனம் அல்லது தனிநிலை எனப்படும். ஃ என்ற ஆயுத எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனப்படும். உதாரணம்: எஃகு, அஃது.

73) தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எது?

a) உயிர்த் தொடர் குற்றியலுகரம்

b) நெடில் தொடர் குற்றியலுகரம்

c) மென் தொடர் குற்றியலுகரம்

d) இடைத் தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர் குற்றியலுகரம் எனப்படும் (எ.கா) அரசு (ர=ர் + அ)

74) க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 மெய் எழுத்தைத் தொடர்ந்து வருவது எது?

a) மென் தொடர் குற்றியலுகரம்

b) வன் தொடர் குற்றியலுகரம்

c) இடைத் தொடர் குற்றியலுகரம்

d) ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: வல்லின மெய்யெழுத்துக்களான க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன் தொடர் குற்றியலுகரம் ஆகும். (எ.கா) . பாக்கு, பேச்சு

75) மென் தொடர் குற்றியலுகரத்தில் வரும் மெய்யெழுத்துகள் எவை?

a) க், ச், ட், த், ப், ற்

b) கு, சு, டு, து, பு, று

c) ய், ர், ல், வ், ழ், ள்

d) ங், ஞ், ண், ந், ம், ன்

விளக்கம்: மெல்லின மெய்யழுத்துக்களான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய 6 எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென் தொடர் குற்றியலுகரம் ஆகும்.

76) இடைத் தொடர் குற்றியலுகரம் என்பது என்ன?

a) க், ச், ட், த், ப், ற் எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

b) கு, சு, டு, து, பு, று எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

c) ய், ர், ல், வ், ழ், ள் எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

d) ங், ஞ், ண், ந், ம், ன் எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

விளக்கம்: இடையின (ய், ர், ல், வ், ழ், ள) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர் குற்றியலுகரம் எனப்படும் (எ.கா) எய்து, மார்பு

77) பொருத்தமற்றதை தேர்வு செய்க.

a) ஒன்பது

b) வரலாறு

c) உப்பு

d) கயிறு

விளக்கம்: ஒன்பது, வரலாறு, கயிறு ஆகியவை உயிர்த் தொடர் குற்றியலுகரச் சொற்கள். உப்பு என்பது வன் தொடர் குற்றியலுகரச் சொல்லாகும்.

78) சரியான விடையை தேர்வு செய்க.

1. வ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

2. ந் என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

a) 1 சரி

b) 2 சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. மேலும் ந்-ஐ தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் உண்டு (எ.கா) பந்து

79) எந்த எழுத்துகள் இறுதியாக அமையும் இடைத் தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை?

a) கு, சு, டு

b) து, பு, று

c) சு, டு, று

d) சு, டு, கு

விளக்கம்: சு, டு, று ஆகியவை இறுதியாக அடையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. அதேபோல், கு, து, பு ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச்சொற்கள் உண்டு

80) பிரித்தெழுதுக – வரகியாது

a) வர + கியாது

b) வரகி + யாது

c) வரம் + யாது

d) வரகு + யாது

விளக்கம்: வரகியாது = வரகு + யாது. வரகு + யாது-இதில் முதல் சொல்லின் இறுதியிலுள்ள ‘கு’ என்றும் ‘கி’ என்று ஒலிக்கிறது. அதாவது, உகரமானது இகரமாக திரிந்து ஒலிக்கிறது. குற்றியலிகரத்தின் படி வரகு + யாது என்பது வரகியாது என புணரும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!