General Tamil

7th Tamil Unit 9 Questions

7th Tamil Unit 9 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 9 Questions With Answers Uploaded Below.

1) கண்ணதாசனின் இயற்பெயர்?

A) முத்தையா

B) முத்தரசு

C) சாத்தப்பன்

D) கவியரசு

விளக்கம்: கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா என்பதாகும். இவர் ஏராளமான திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.

2) கண்ணதாசன் எழுதிய நூலின் பெயர்?

A) கிறிஸ்து காவியம்

B) இயேசு காவியம்

C) இந்து காவியம்

D) புத்த, சமண அர்த்தங்கள்

விளக்கம்: கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்களுள் ஒன்று இயேசு காவியம் என்பதாகும். இதில் இயேசு நாதர் தம் சீடர்களுக்கு கூறிய அறிவுரை மலைப்பொழிவு என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

3) சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!” இதில் தாரணி என்ற சொல்லின் பொருள்?

A) இயேசு நாதர்

B) நாடு

C) உலகம்

D) சொற்பொழிவு

விளக்கம்: இப்பாடல் வரிகள் கண்ணதாசன் இயற்றிய இயேசு காவியம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் தாரணி என்றால் உலகம் என்று பொருள்.

4) மனித வாழ்க்கையில் தேவைப்படுவது________?

A) பணம்

B) பொறுமை

C) புகழ்

D) வீடு

விளக்கம்: மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை என்று இயேசு நாதர் தம் சீடர்களுக்கு கூறியதாக. கண்ணதாசன் அவர்கள் தம் இயேசு காவியம் என்னும் நூலில் மலைப்பொழிவு என்னும் தலைப்பின் கீழ் உள்ள ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் .

5) சாந்த குணம் உடையவர்கள்________முழுவதையும் பெறுவர்?

A) புத்தகம்

B) செல்வம்

C) உலகம்

D) துன்பம்

விளக்கம்: சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார் – இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!” – என்னும் வரிகளில் சாந்தமுடையோர் இந்த உலகம் முழுவதையும் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது

6) மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) மலை + யளவு

B) மலை + அளவு

C) மலையின் + அளவு

D) மலையில் + அளவு

விளக்கம்: மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மலை + அளவு

7) தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) தன் + னாடு

B) தன்மை + னாடு

C) தன் + நாடு

D) தன்மை + நாடு

விளக்கம்: தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது தன் + நாடு என்பதாகும்

8) இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

A) இவையில்லாது

B) இவைஇல்லாது

C) இவயில்லாது

D) இவஇல்லாது

விளக்கம்: இவை + இல்லாது என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இவையில்லாது.

9) பொருத்துக

அ. சாந்தம் – 1. சிறப்பு

ஆ. மகத்துவம் – 2. உலகம்

இ. தாரணி – 3. கருணை

ஈ. இரக்கம் – 4. அமைதி

A) 4, 1, 2, 3

B) 1, 4, 2, 3

C) 3, 2, 4, 1

D) 2, 4, 1, 3

விளக்கம்: சாந்தம் – அமைதி

மகத்தும் – சிறப்பு

தாரணி – உலகம்

இரக்கம் – கருணை

10) கவியரசு என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்?

A) கண்ணதாசன்

B) வாணிதாசன்

C) பாரதிதாசன்

D) சுப்பு ரத்தின தாசன்

விளக்கம்: முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.

1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!