General Tamil

General Tamil Model Question Paper 18

51. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச சொற்களை அறிக:

டயாபெட்டிக் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.

(அ) சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்

(ஆ) நீரிழிவு நேயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

(இ) நீரிழிவு நோயாளிகள் ஸ்வீட் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்

(ஈ) சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பு சாப்பிடக் கூடாது.

விடை மற்றும் விளக்கம்

(ஆ) நீரிழிவு நேயாளிகள் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

52. கீழ்காணும் 4ற்றுகளில் இடம்பெறும் ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிக

(அ)”பூ” எனும் சொல் மலரையும், பெண்ணையும் குறிக்கும்

(ஆ) “பா” எனும் சொல் செய்யுளையும், எழுத்தையும் குறிக்கும்.

(இ) “வா” என்பது “வருதல்” எனும் வினையைக் குறிக்கும்.

(ஈ) “கோ” என்பது கோவிந்தனின் பெயர்

(அ) ஈ, இ மற்றும் ஆ சரியானவை

(ஆ) ஈ, ஆ மற்றும் அ சரியானவை

(இ) ஈ, அ மற்றும் இ சரியானவை

(ஈ) அ, ஆ மற்றும் இ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அ, ஆ மற்றும் இ சரியானவை

விளக்கம்:

பூ-மலர், புவி

பா-பாட்டு, அழகு.

வா-வருதல்.

கோ-மன்னன், பசு.

53. பிழையான சொல்லை எடுத்தெழுதுக.

(அ) சுவற்றில்

(ஆ) அருகில்

(இ) செலவு

(ஈ) பதற்றம்

விடை மற்றும் விளக்கம்

(அ) சுவற்றில்

விளக்கம்:

பிழையான சொல்-சுவற்றில்.

பிழையற்ற சொல்-சுவரில்

54. தொண்ணுற்றாறு

– பிரிக்கும் முறை

(அ) தொண்ணுறு+ஆறு

(ஆ) தொள்ளாயிரம்+ஆறு

(இ) தொண்+ஆறு

(ஈ) தொண்+ணுறு

விடை மற்றும் விளக்கம்

(அ) தொண்ணுறு+ஆறு

விளக்கம்:

தொண்ணூற்றாறு-தொண்ணூறு+ஆறு.

“நெடிலோடு உயிர்த்தொடர்” எனும் விதிப்படி

“தொண்ணூற்று+ஆறு” என்றானது.

“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “தொண்ணூற்ற்+ஆறு என்றானது.

“உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “தொண்ணூற்றாறு” என்று புணர்ந்தது.

55. கீழே தரப்பட்டுள்ளவற்றுள் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

(அ) “உண்ணாது” என்பது எதிர்மறை வினையெச்சம்

(ஆ) “அகழ்வார்” என்பது வினையாலணையும் பெயர்

(இ) “நன்று” என்பது குறிப்பு வினைமுற்று

(ஈ) “ச” என்பது வேர்ச்சொல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) “ச” என்பது வேர்ச்சொல்

56. கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்குரிய தவறான விடை எதுவெனத் தேர்க

(அ) CARTOON–கருத்துப்படம்

(ஆ) NEGATIVE–எதிர்ச்சுருள்

(இ) GRRENROOM–பச்சை அறைகள்

(ஈ) INSTINCT-இயற்கை அறிவு

விடை மற்றும் விளக்கம்

(இ) GRRENROOM–பச்சை அறைகள்

விளக்கம்: GREENROOM-பாசறை

57. சந்திப் பிழையற்ற தொடரைக் குறிக்க.

(அ) சமூகச் சீர்திருத்த கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

(ஆ) சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்து பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

(இ) சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

(ஈ) சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்து பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

விடை மற்றும் விளக்கம்

(இ) சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை விதைத்துப் பயிராக்கி மகிழ்ந்தவர் பண்டிதர்

58. உரவோர்

– இலக்கணக்குறிப்பு தருக.

(அ) வினைமுற்று

(ஆ) பெயர்ச்சொல்

(இ) வினையாலணையும் பெயர்

(ஈ) தொழிற்பெயர்

விடை மற்றும் விளக்கம்

(இ) வினையாலணையும் பெயர்

விளக்கம்:

உரவோர்-வினையாலணையும் பெயர்.

செய்கின்ற தொழிலைக் குறிக்காமல், தொழில் செய்யும் கருத்தாவைக் குறிப்பது வினையாலணையும் பெயராகும்.

59. “திருத்தொண்டர் புராணத்தை” ——– என அழைக்கிறோம்.

(அ) சிவபுராணம்

(ஆ) பெரியபுராணம்

(இ) கந்தரபுராணம்

(ஈ) தணிகைபுராணம்

விடை மற்றும் விளக்கம்

(அ) சிவபுராணம்

விளக்கம்:

பெரியபுராணம்

செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற சிவனடியார்கள் அறுபத்து மூவரின் வரலாற்றையும் தொகையடியார் ஒன்பது பேரின் வரலாற்றையும் இந்நூல் கூறுகிறது. பெருமையுடைய சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதால் “பெரியபுராணம்” என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.

60. அகமும், புறமும் கலந்த பாடல் தொகுதி ———– ஆகும்

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) ஐங்குறுநூறு

(இ) பரிபாடல்

(ஈ) கலித்தொகை

விடை மற்றும் விளக்கம்

(இ) பரிபாடல்

விளக்கம்:

பரிபாடல்

திணை-அகமும் புறமும்.

பாவகை-பரிபாட்டு.

பாடல்கள்-70 (கிடைத்தவை 22).

புலவர்-13 பேர்.

அடி எல்லை- 25-400.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!