General Tamil

General Tamil Model Question Paper 18

81. தன் வாழ்க்கை வரலாற்றை “என்சரிதம்” என்னும் பெயரில் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதியவர் யார்?

(அ) உ.வே.சாமிநாத ஐயர்

(ஆ) மறைமலை அடிகள்

(இ) காந்தியடிகள்

(ஈ) நேரு

விடை மற்றும் விளக்கம்

(அ) உ.வே.சாமிநாத ஐயர்

82. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ———- எனப்படும்.

(அ) நகரம்

(ஆ) பட்டினம்

(இ) பாக்கம்

(ஈ) பட்டி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பட்டினம்

83. ஆட்டனத்தி ஆதிமந்தியின் ஆசிரியர்

(அ) வண்ணதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) சுப்பரத்தினதாசன்

விடை மற்றும் விளக்கம்

(இ) கண்ணதாசன்

84. “இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்” என்ற நூலை இயற்றியவர்

(அ) பெரியார்

(ஆ) அண்ணா

(இ) பாரதிதாசன்

(ஈ) டாக்டர். அம்பேத்கர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) டாக்டர். அம்பேத்கர் 

85. “உவமைக்கவிஞர்” எனப் போற்றப்படுபவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) கவிமணி

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சுரதா

86. “ஒரு கிராமத்து நதி” – என்ற நூலின் ஆசிரியர்

(அ) சிற்பி பாலசுப்ரமணியம்

(ஆ) கவிஞர் தாராபாரதி

(இ) கவிஞர் கண்ணதாசன்

(ஈ) நா.காமராசன்

விடை மற்றும் விளக்கம்

(அ) சிற்பி பாலசுப்ரமணியம்

87. ‘தமிழ் நாடகத் தந்தை’ என்று போற்றப்பட்டவர் ————- ஆவர்

(அ) பம்மல் சம்பந்தனார்

(ஆ) பரிதிமாற் கலைஞர்

(இ) சங்கரதாசு சுவாமிகள்

(ஈ) தி.க.காமராசன்

விடை மற்றும் விளக்கம்

(அ) பம்மல் சம்பந்தனார்

விளக்கம்:

பம்மல் சம்பந்தனார்-தமிழ்நாடகத் தந்தை.

பரிதிமாற்கலைஞர்-திராவிட சாஸ்திரி.

சங்கராஸ்சுவாமிகள்-நாடக உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர்.

ஒளவை சண்முகனார்-திக.சண்முகனார்

88. “நீதித் திருக்குறளை நெஞ்சாரத்தம் வாழ்வில்

ஓதித் தொழுது எழுக ஓர்ந்து” என்று கூறியவர்

(அ) கபிலர்

(ஆ) பரணர்

(இ) கவிமணி

(ஈ) மாங்குடி மருதனார்

விடை மற்றும் விளக்கம்

(இ) கவிமணி

89. இந்திய அரசின் ஞானபீட பரிசு பெற்ற முதல் தமிழன்

(அ) அகிலன்

(ஆ) கு.ப.ராஜகோபாலன்

(இ) இராஜாஜி

(ஈ) மௌனி

விடை மற்றும் விளக்கம்

(அ) அகிலன்

விளக்கம்:

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஞானபீட விருதாகும். “பாரதிய ஞானபீடம்” என்ற பண்பாட்டு இலக்கிய கழகத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது. “டைம்ஸ் ஆஃ.ப் இந்தியா” நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் 1965 முதல் இவ்வருது வழங்கப்பட்டு வருகிறது. 1975-ஆம் ஆண்டு “சித்திரப்பாவை” என்ற இலக்கியத்திற்காக தமிழ் எழுத்தாளர் அகிலனுக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசின் ஞானபீட பரிசினைப் பெற்ற முதல் தமிழன் இவரேயாவார்.

90. யார் என்று கண்டறிக:

எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்

(அ) சீத்தலைச் சாத்தனார்

(ஆ) உமறுப்புலவர்

(இ) பாரதியார்

(ஈ) திருத்தக்கதேவர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) உமறுப்புலவர்

விளக்கம்:

சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவரின் ஆசிரியர் எட்டையபுர அரசவைப் புலவராக பணியாற்றிய கடிகை முத்துப்புலவராவார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!