General Tamil

General Tamil Model Question Paper 19

71. இதில் “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது யாருடைய மொழி?

(அ) கணியன் பூங்குன்றனார்

(ஆ) பாரதியார்

(இ) ஒளவையார்

(ஈ) கம்பர்

விடை மற்றும் விளக்கம்

(இ) ஒளவையார்

72. “இறந்தும் இறவாது வாழும் தமிழ மாணவர்! அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார், என்றும் வாழ்வார்” – யார்?

(அ) உ.வே.சாமிநாத ஐயர்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) கால்டுவெல்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜி.யூ.போப்

விளக்கம்:

தமிழின் பெருமையைத் தரணி முழுவதும் பரப்பிய போப், 11.02.1908 அன்று தம் இன்னுயிரை நீத்தார். அவரது கல்லறையில் அவரின் விருப்பப்படி, “இங்கே தமிழ் மாணவன் ஒருவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று எழுதப்பட்டுள்ளது

73. “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுபவர்

(அ) சி.இராமநாதன்

(ஆ) சி.இரா.அரங்கநாதன்

(இ) ப.கமலநாதன்

(ஈ) ம.இளந்திரையன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சி.இரா.அரங்கநாதன்

விளக்கம்:

நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்த சீர்காழி சி.இரா.அரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுகிறார்.

74. “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்

(அ) குறுந்தொகை

(ஆ) கலித்தொகை

(இ) புறநானூறு

(ஈ) பரிபாடல்

விடை மற்றும் விளக்கம்

(அ) குறுந்தொகை

விளக்கம்:

குறுந்தொகை-135-வது பாடல்.

“வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்

மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என,

நமக்கு உரைத்தோரும் தாமே,

அழாஅல்-தோழி! அழங்குவர் செலவே

– பாலை பாடிய பெருங்கடுங்கோ

பொருள்: வினை செய்தல் ஆடவர்க்கு உயிர் போன்றது. ஒளி பொருந்திய நெற்றியையுடைய, இல்லின்கண் உறையும் மகளிர்க்கு அவர்தம் கணவர் உயிர் போன்றவர் என நமக்குக் கூறியவர் நம் தலைவரே ஆவார். அதனால் அழுதலை ஒழிவாயாக. அவர் நின்னைப் பிரிந்து செல்லுதலைத் தவிர்வர்.

75. “மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே” – இக்கூற்றை கூறியவர்.

(அ) கணியன் பூங்ககுன்றனார்

(ஆ) கம்பர்

(இ) உமறுப்புலவர்

(ஈ) வள்ளலார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வள்ளலார்

விளக்கம்:

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

குருவை வணங்கக் கூசி நிற்காதே.

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே.

பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே……. போன்றவை.

76. பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்” கொண்டாடும் மேலை நாடுகள்

(அ) இலங்கை, மலேசியா

(ஆ) ஜப்பான், ஜாவா

(இ) மொரீஷியஸ், சிங்கப்பூர்

(ஈ) இங்கிலாந்து, அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜப்பான், ஜாவா

77. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

(அ) பொன்மனம்

(ஆ) ஆர்த்து

(இ) உற்றார்

(ஈ) சார்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) உற்றார்

விளக்கம்:

தமிழில் சில எழுத்துகள் தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும். அது உடனிலை மெய்மயக்கம் எனப்படும்.

எ.கா:பக்கம், அச்சம், மொத்தம், அப்பம், உற்றார்.

78. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. இரண்டு சீர்களான அடி 1.நெடிலடி

ஆ. நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடி

இ. ஐந்து சீர்களான அடி 3. குறளடி

ஈ. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 2 1 3 4

இ. 1 2 3 4

ஈ. 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

ஈ. 3 4 1 2

விளக்கம்:

அடிதோறும் இரண்டு சீர்களைப் பெற்று வருவது குறளடி.

அடிதோறும் மூன்று சீர்களைப் பெற்று வருவது சிந்தடி.

அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது அளவடி.

அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது நெடிலடி.

அடிதோறும் ஆறு அல்லது அதற்கு மேற்கண்ட பல சீர்களைப் பெற்று வருவது கழிநெடிலடி

கழிநெடிலடி

அறுசீர் எழுசீர் எண்சீர்

79. “அங்காப்பு” என்பதன் பொருள்

(அ) சலிப்படைதல்

(ஆ) வாயைத் திறத்தல்

(இ) அலட்டிக் கொள்ளுதல்

(ஈ) வளைகாப்பு

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வாயைத் திறத்தல்

விளக்கம்:

எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இருவகையாகப் பிரிக்கலாம்.

முதலெழுத்துகளின் முயற்சிப் பிறப்பு.

முயற்சியுள் அஆ அங்காப்புடைய-நன்னூல் 76.

அ, ஆ ஆகிய இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.

அங்காப்பு-வாயைத்திறத்தல்.

80. “கார்குலாம்” எனும் சொல் எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

(அ) ஐந்தாம் வேற்றுமைத்தொகை

(ஆ)மூன்றாம் வேற்றுமைத்தொகை

(இ) ஆறாம் வேற்றுமைத்தொகை

(ஈ) நான்காம் வேற்றுமைத்தொகை

விடை மற்றும் விளக்கம்

(இ) ஆறாம் வேற்றுமைத்தொகை

விளக்கம்:

இரண்டு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகையாகும். ஆறாம் வேற்றுமை உருபு “அது”

கார்குலாம்-காரது குலாம். எனவே இச்சொல் ஆறாம் வேற்றுமைத் தொகையாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!