General Tamil

General Tamil Model Question Paper 20

91. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்

(அ) ஆட்டனத்தி ஆதிமந்தி

(ஆ) மாங்கனி

(இ) சேரமான் காதலி

(ஈ) அங்கயற்கண்ணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சேரமான் காதலி

92. “கீழ்க்காண்பவற்றுள் கம்பர் எழுதாத நூல் எது?

(அ) சடகோபரந்தாதி

(ஆ) சரஸ்வதி அந்தாதி

(இ) திருக்கை வழக்கம்

(ஈ) தொன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தொன்னூல்

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் இயற்றிய நூலாகும்.

93. பாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்கக் கவிஞர்

(அ) வால்ட் விட்மன்

(ஆ) வேர்ட்ஸ்வொர்த்

(இ) கீட்ஸ்

(ஈ) ஷேக்ஸ்பியர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வால்ட் விட்மன்

94. தமிழர்களின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று

(அ) சிலம்பாட்டம்

(ஆ) ஒயிலாட்டம்

(இ) ஏறுதழுவுதல்

(ஈ) கபடி ஆட்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சிலம்பாட்டம்

95. “முக்கூடற்பள்ளு” எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கைக் கொண்டுள்ளது?

(அ) தஞ்சாவூர்

(ஆ) மதுரை

(இ) ஈரோடு

(ஈ) திருநெல்வேலி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) திருநெல்வேலி

“முக்கூடல்” என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் உள்ளது. அங்கு உழவுத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த பள்ளர்களின் வாழ்க்கையைப் பற்றி இந்நூல் கூறுவதால் “முக்கூடற்பள்ளு” என வழங்கப்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

96. “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு” என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) பழமொழி

(ஆ) திருக்குறள்

(இ) தேவாரம்

(ஈ) திருவாசகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருக்குறள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் – திருக்குறள் 942. பொருள்: ஒருவன் முன்பு உண்ட உணவு செரித்த தன்மையைத் தெளிவாக அறிந்து அதன் பின்னர் தக்க அளவு உண்பானானால், அவன் உடம்பிற்கு மருந்து என்னும் ஒன்று தேவையில்லை.

97. “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” என்று கூறியவர்.

(அ) கி.ஆ.பெ.விசுவநாதம்

(ஆ) இ.ரா.கிருஷ்ணமூர்த்தி

(இ) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

(ஈ) பரிமேலழகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கி.ஆ.பெ.விசுவநாதம்

98. “வீரமாமுனிவரைப் போல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்”

(அ) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

(ஆ) பாண்டித்துரை தேவர்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஈ) பேரறிஞர் அண்ணா

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அயோத்திதாசப் பண்டிதர்

99. எள் செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே இத்திருநாள்

(அ) கார்த்திகை தீபத் திருநாள்

(ஆ) தமிழர் திருநாள்

(இ) விசாகத் திருநாள்

(ஈ) தீபாவளி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தீபாவளி

என் செடியின் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட நாளே “தீபாவளித் திருநாள்” என்று கூறியவர் அயோத்திதாசப் பண்டிதர். மேலும் ஜப்பான் நாட்டில் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று ஆதாரத்துடன் கூறினார்.

100. “சித்திரகாரப் புலி” என அழைக்கப்படுபவர்

(அ) நரசிம்மவர்ம பல்லவன்

(ஆ) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

(இ) இரண்டாம் குலோத்துங்கன்

(ஈ) இராசராச சோழன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

கி.பி.7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனாக இருந்த முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் ஓவியக்கலை உன்னத நிலையை எட்டியது. இம்மன்னனே சிறந்த ஓவியனாகப் புகழ் பெற்றிருந்தான். “சித்திரகாரப்புலி” எனப் புகழப்பட்டான். “தட்சிண சித்திரம்” என்ற ஓவிய இலக்கண நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

 

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!