General Tamil

General Tamil Model Question Paper 20

41. வானம்பாடி இயக்கம் தமிழ்நாட்டில் எங்கு செயல்பட்டது?

(அ) சென்னை

(ஆ) மதுரை

(இ) கோவை

(ஈ) திருச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கோவை

42. பாவலரேறு என அழைக்கப்படுபவர்

(அ) தேவநேயபாவாணர்

(ஆ) பெருஞ்சித்திரனார்

(இ) சுப்புரத்தினதாசன்

(ஈ) வெ.இராமலிங்கனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பெருஞ்சித்திரனார்

பாவலரேறு என அழைக்கப்பட்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். அவருடைய இயற்பெயர் துரை.மாணிக்கம். இவர் பாரதிதாசனின் தலை மாணாக்கர் ஆவார். உலகத் தமிழர்களிடையே தமிழுணர்வை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர். இவருடைய படைப்புகள் கனிச்சாறு, ஐயை, கொய்யாக் கனி, பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் முதலியன.

43. “சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப்புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்தாக இருந்தவர்”

(அ) அண்ணல் காந்தியடிகள்

(ஆ) அம்பேத்கர்

(இ) தந்தை பெரியார்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அம்பேத்கர்

44. இந்தியாவிலுள்ள காடுகளின் அளவைக் குறிக்கவும்.

(அ) ஆறில் ஒரு பங்கு

(ஆ) எட்டில் ஒரு பங்கு

(இ) நான்கில் ஒரு பங்கு

(ஈ) மூன்றில் ஒரு பங்கு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) எட்டில் ஒரு பங்கு

45. களிமண் பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?

(அ) ஆம்பூர்

(ஆ) நிப்பூர்

(இ) மேப்பூர்

(ஈ) அரியலூர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நிப்பூர்

பாபிலோனியாவில் உள்ள நிப்பூர் என்ற ஊரில் கி.மு.2000 ஆண்டிற்கு முந்தைய சுமார் 2500 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.

46. “திராவிட” என்னும் சொல்லை முதன் முதலில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்

(அ) கால்டுவெல்

(ஆ) ஈ.வெ.ரா

(இ) மறைமலையடிகள்

(ஈ) ஹீராஸ் பாதிரியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கால்டுவெல்

47. “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும்” எனப் பாடியவர்

(அ) பெருந்தேவனார்

(ஆ) பாரதியார்

(இ) பாரதிதாசன்

(ஈ) வள்ளலார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வள்ளலார்

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூ டிப்போக ஓத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்ஆகிஉல கியல் நடத்தல் வேண்டும்” – வள்ளலார்.

48. கண்ணதாசன் பணியாற்றாத இதழ் பெயர்

(அ) தென்றல்

(ஆ) முல்லை

(இ) குயில்

(ஈ) தமிழ் மலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) குயில்

பாரதிதாசன் நடத்திய இதழ் “குயில்”

49. இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது?

(அ) யாப்பருங்கலக் காரிகை

(ஆ) தண்டியலங்காரம்

(இ) தொல்காப்பியம்

(ஈ) நன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தொல்காப்பியம்

50. மாதானுபங்கி என அழைக்கப்படுபவர் யார்?

(அ) கம்பர்

(ஆ) பாரதியார்

(இ) வீரமாமுனிவர்

(ஈ) திருவள்ளுவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) திருவள்ளுவர்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!