General Tamil

General Tamil Model Question Paper 21

General Tamil Model Question Paper 21

General Tamil Model Question Paper 21: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. சரியானவற்றைக் காண்க

1. யான்+கு=எனக்கு

2. யான்+கண்=என்னின்கண்

3. யான்+அது=என்னது

4. யான்+ஆல்=என்னால்

(அ) 2, 3 சரி

(ஆ) 1, 2 சரி

(இ) 1, 4 சரி

(ஈ) நான்கும் சரி

விளக்கம்:

விடை மற்றும் விளக்கம்

(இ) 1, 4 சரி

யான்+கு=எனக்கு; யான்+கண்=என்கண்; யான்+அது=எனது; யான்+ஆல்=என்னால்

2. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க: தொழிற்பெயர்

(அ) காலங்காட்டாது

(ஆ) மூவிடங்களிலும் வரும்

(இ) தொழிலுக்குப் பெயராய் வரும்

(ஈ) இருவகைப்படும்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மூவிடங்களிலும் வரும்

ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்டும். இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. இது இருவகைப்படும். அவையாவன, முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

3. கொடுக்கப்படும் சொல்லுக்குரிய சரியான பொருள் எது? ‘கவிகை’

(அ) தேவருலகம்

(ஆ) கவிதை

(இ) பாட்டு

(ஈ) குடை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குடை

4. கொடுக்கப்பட்ட சொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க.

(அ) மான்குட்டி

(ஆ) சிங்கக்குருளை

(இ) கீரிக்குட்டி

(ஈ) கழுதைக்கன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிங்கக்குருளை

மரபுச் சொற்கள்: மான் கன்று, சிங்கக்குருளை, கீரிப்பிள்ளை, கழுதைக்குட்டி.

5. கீழ்க்காணும் “வல்லினம் மிகா இடம்” குறித்த இலக்கணக்கூற்றில் பிழையான கூற்று எது?

(அ) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

(ஆ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(இ) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

(ஈ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. எ.கா: நாய்+போனது-நாய்போனது. மாடு+பாய்ந்தது-மாடு பாய்ந்தது.

இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும். எ.கா: பொருளை+தேடு-பொருளைத்தேடு. அவளை+கண்டேன்-அவளைக்கண்டேன். உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. எ.கா: தாய்+தந்தை-தாய்தந்தை. இரவு+பகல்-இரவுபகல்.

6. PROJECTOR-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

(அ) படப்பிடிப்பு

(ஆ) படப்பிடிப்புக் கருவி

(இ) பட வீழ்த்தி

(ஈ) பார்வை நிலைப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பட வீழ்த்தி

Projector-படவீழ்த்தி (அ) திரைப்படக்கருவி

7. மரபுத் தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக: “ஆகாயத் தாமரை”

(அ) அலைந்து திரிதல்

(ஆ) இல்லாத ஒன்று

(இ) பயனின்றி இருத்தல்

(ஈ) இருப்பது போல் தோன்றும் ஆனால் இராது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இல்லாத ஒன்று

8. இலக்கணக் குறிப்பு அறிக: கெடுப்பதூஉம்

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) இசைநிறை அளபெடை

(இ) சொல்லிசை அளபெடை

(ஈ) செய்யுளிசைஅளபெடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) இன்னிசை அளபெடை

1. இவ்வளபெடை மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். கெடுப்/பதூ/உம். நிறை நிரை நேர் -கருவிளங்காய்

2. “இ” என்னும் எழுத்தில் முடியாது.

3. பெரும்பாலும் “உ” என்னும் எழுத்தில் முடிந்திருக்கும்.

9. “பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை” கீழ் உள்ள விடைகளில் சரியான விடையை எழுதுக:

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) எதுகையும் இயைபும் வந்துள்ளது

(இ) மோனையும் எதுகையும் வந்துள்ளது

(ஈ) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மோனை, எதுகை, இயைபு வந்துள்ளது

பார்குலாம் செவ்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை. மோனை: முதற்சீரில் வந்த முதல் எழுத்து அடுத்து வரும் சீர்களில் வருவது மோனையாகும். பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை. எதுகை: முதற்சீரில் வந்த இரண்டாம் எழுத்து அடுத்து வரும் சீர்களில் ஒன்றி வருவது எதுகையாகும். பார்குலாம் செவ்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை இயைபு: இறுதிச்சீர் ஒன்றி வருவது இயைபு ஆகும்.

10. விடைக்கேற்ற வினாவைக் கண்டறிக.

திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.

(அ) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

(ஆ) திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

(இ) திரைப்படம் எடுப்பதனைவிட கடினமான பணி எது?

(ஈ) திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரைப்படம் எடுப்பதனைவிட எப்படம் எடுப்பது கடினமான பணியாகும்?

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!