General Tamil

General Tamil Model Question Paper 21

31. நான்மணிக்கடிகையைப் பாடியவர் யார்?

(அ) விளம்பிநாகனார்

(ஆ) கபிலர்

(இ) முன்றுறை அரையனார்

(ஈ) கடுவெளிச்சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) விளம்பிநாகனார்

திருவாரூர் நான்மணிமாலையைப் பாடியவர் குமரகுருபரர் ஆவார். திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நூல் நான்மணிமாலைஆகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆன மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆன நாற்பது செய்யுள்களைக் கொண்டது.

32. திருவாரூர் நான்மணிமாலையைப் பாடியவர்

(அ) திருமூலர்

(ஆ) குமரகுருபரர்

(இ) சிவபெருமான்

(ஈ) திருஞானசம்பந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) குமரகுருபரர்

திருவாரூர் நான்மணிமாலையைப் பாடியவர் குமரகுருபரர் ஆவார். திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நூல் நான்மணிமாலை ஆகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆன மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆன நாற்பது செய்யுள்களைக் கொண்டது.

33. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) புகழேந்தி

(ஈ) சடையப்ப வள்ளல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பாரதியார்

யாமறிந்த புலவர்களிலே

கம்பனைப்போல் வள்ளுவனைப்போல்

இளங்கோவைப்போல் பூமிதனில்

யாங்கணுமே கண்டதில்லை

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

– பாரதியார்

34. குறுந்தொகையின் அடிவரையறை

(அ) 8-16

(ஆ) 13-31

(இ) 4-8

(ஈ) 9-12

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 4-8

குறுந்தொகையின் அடிவரையறை 4-8 ஆனால் ஒன்பதடியில் இருபாடல்கள் (307, 391) இந்நூலில் அமைந்துள்ளன.

35. சரியான விடையைத் தேர்வு செய்

சொல் பொருள்

(அ) விசும்பு – 1.தந்தம்

(ஆ) துலை – 2. யானை

(இ) மருப்பு – 3. துலாக்கோல்

(ஈ) களிற – 4. வானம்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 4 3 1 2

(இ) 3 1 4 2

(ஈ) 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 4 3 1 2

36. கலித்தொகை ————- நூல்களில் ஒன்று

(அ) பத்துப்பாட்டு

(ஆ) எட்டுத்தொகை

(இ) பதினெண்கீழ்க்கணக்கு

(ஈ) பதினெண்மேல்கணக்கு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) எட்டுத்தொகை

37. சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கலம்பகம் ——— வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று

(அ) தொண்ணூற்றாறு

(ஆ) பதினெட்டு

(இ) பத்து

(ஈ) தொண்ணுற்றொன்பது

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தொண்ணூற்றாறு

38. பெருமாள் திருமொழியில் ——– பாசுரங்கள் உள்ளன.

(அ) இருநூற்றைந்து

(ஆ) நூற்றைந்து

(இ) நூறு

(ஈ) பதினெட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நூற்றைந்து

பெருமாள் திருமொழி குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இந்நூலில் 105 பாசுரங்கள் உள்ளன.

39. உ.வே.சா.வின் தமிழ்ப்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்

(அ) கோலரிட்ஜ்

(ஆ) வோர்ட்ஸ்வொர்த்

(இ) கீட்ஸ்

(ஈ) சூலியஸ் வின்சோன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) சூலியஸ் வின்சோன்

உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிய அயல்நாட்டவர்கள் ஜி.யூ.போப் மற்றும் சூலியல் வின்சோன் ஆவர்.

40. உடற்பிணியைப் போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்

1.அகத்தியர். 2.தேரையர். 3.போகர். 4.புலிப்பாணி

(அ) 1,4 சரி

(ஆ) 1,3,4 சரி

(இ) 3,4 சரி

(ஈ) 1,2,3,4 சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1,2,3,4 சரி

பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். தேரையர், அகத்தியர். போகர், புலிப்பாணி முதலிய சித்தர்களின் மருத்துவ நூல்கள் இன்றும் மனிதர்களின் உடற்பிணியைப் போக்குகின்றன். உலகில் பின்விளைவுகளற்ற ஒரே மருத்துவம் சித்த மருத்துவமாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!