General Tamil

General Tamil Model Question Paper 23

91. குழவி என்பதன் பொருள்

(அ) ஒருவகைத் தேனீ

(ஆ) ஒருவகைத் குருவி

(இ) குழந்தை

(ஈ) ஒருவகைத் தாவரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) குழந்தை

92. “பிரணவ கேசரி” என அன்போடு அழைக்கப்பட்ட தேசியத் தலைவர்

(அ) முத்துராமலிங்கர்

(ஆ) இராஜாஜி

(இ) காமராசர்

(ஈ) விவேகானந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) முத்துராமலிங்கர்

வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை என்றெல்லாம் பாராட்டப்பெற்றவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

93. உயிர் வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிப்பது

(அ) கார்பன் மோனாக்சைடு

(ஆ) கார்பன்-டை-சல்பைடு

(இ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

(ஈ) குளோரோ டெட்ரா கார்பன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

94. வசன நடை கைவந்த வல்லாளர் என ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர்

(அ) ஜி.யூ.போப்

(ஆ) பரிதிமாற் கலைஞர்

(இ) வீரமாமுனிவர்

(ஈ) ரா.பி.சேதுப்பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பரிதிமாற் கலைஞர்

தமிழ் உரைநடை வளர்ச்சிப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, பரிதிமாற்கலைஞர் “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியுள்ளார்.

95. பொருத்துக:

அ. டால்ஸ்டாய் – 1. விசுவ பாரதியில் பணி புரிந்த பேராசிரியர்

ஆ. பெட்ரண்ட் ரஸ்ஸல் – 2. கிரேக்க சிந்தனையாளர்

இ. கிருபளானி – 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்

ஈ. பிளேட்டோ – 4. சிந்தனையாளர் கல்வியாளர்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 4 1 2

இ. 4 2 3 1

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

96. நடுத்திராவிட மொழிகளில் ஒன்று

(அ) நண்பர்

(ஆ) உறவினர்

(இ) தாய்மார்

(ஈ) பெற்றோர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) உறவினர்

டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் ஈ.வெ.ரா.அவர்களுக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

97. இராமசாமிக்குப் “பெரியார்” என்று பட்டம் வழங்கியவர்.

(அ) நண்பர்

(ஆ) உறவினர்

(இ) தாய்மார்

(ஈ) பெற்றோர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தாய்மார்

டாக்டர் எஸ்.தருமாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு “பெரியார்” எ ன்ற பட்டம் வழங்கப்பட்டது

98. பெரியார், பெண்களுக்கு மிக முக்கியம் என்றவை

1.அறிவு. 2.நகை. 3.அழகு. 4.சுயமரியாதை.

(அ) 1, 2 சரி

(ஆ) 1,3 சரி

(இ) 2, 3 சரி

(ஈ) 1, 4 சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1, 4 சரி

“பெண்களுக்கு நகையோ, அழகான உடையோ முக்கியமில்லை; அறிவும் சுயமரியாதையும் மிக முக்கியம்” என்று ஈ.வெ.ரா பெரியார் கூறினார்.

99. கோடிட்ட இடங்களை நிரப்புக:

பெரியார் தம் வாழ்நாளில் —— கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து சமுதாயத் தொண்டாற்றினார்.

(அ) 8600

(ஆ) 21,400

(இ) 10,700

(ஈ) 13,12,000

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 13,12,000

பெரியாரின் நடைப்பயணம் பற்றிய குறிப்புகள்:

நாட்கள்-8600,

தொலைவு-13,12,000 கி.மீட்டர்.

பங்கேற்ற கூட்டங்களின் எண்ணிக்கை-10,700.

உரையாற்றிய நேரம்-21,400 மணிநேரம்.

100. தவறான தொடரைக் கண்டறிக:

(அ) தமிழகப் பொருள்கள் சீனாவில் விற்கப்பட்டன.

(ஆ) சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின.

(இ) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

(ஈ) கரும்பு சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் குறித்து கூறும் நூல்கள் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகியனவாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!