General Tamil

General Tamil Model Question Paper 23

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

11. “கடம்” என்ற சொல்லின் பொருள்

(அ) முகம்

(ஆ) கைகள்

(இ) உடம்பு

(ஈ) இடுப்பு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உடம்பு

கள்ளவேடம் புனையாதே – பல

கங்கையிலே உன் கடம் நனையாதே

– கடுவெளிச் சித்தர்.

பொருள்: போலியான வேடங்களைப் போடாதே!

புண்ணிய நதிகளைத் தேடிச் சென்று முழுகாதே!

கடம் – உடம்பு.

12. அகத்துறுப்பு என்பது

(அ) பல்

(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு

(இ) இதயம்

(ஈ) வயிறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) மனத்தின் உறுப்பு அன்பு

திருக்குறள்-அன்புடைமை

புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

– குறள்-79.

பொருள்: உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு அதன் புறத்து உறுப்புகளால் யாதொரும் பயனும் இராது.

13. “தமிழ் பிறமொழி துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்”

– என்று கூறிய அறிஞர்

(அ) தேவநேயப் பாவாணர்

(ஆ) பாரதிதாசன்

(இ) கால்டுவெல்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கால்டுவெல்

தமிழின் தூய்மை: “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்”

– கால்டுவெல் கூற்று.

14. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

(அ) சகலகலாவல்லி மாலை

(ஆ) பூங்கொடி

(இ) மணிக்கொடி

(ஈ) உரிமை வேட்கை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பூங்கொடி

கவிஞர் முடியரசன் ‘பூங்கொடி’ என்னும் காவியத்திற்காக 1966-இல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றார்.

15. “நற்கலை” என்று அழைக்கப்படும் கலை

(அ) நாடகக்கலை

(ஆ) சிற்பக்கலை

(இ) ஓவியக்கலை

(ஈ) அழுகுக்கலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) நாடகக்கலை

நாடகக் கலையை ‘நற்கலை’ என்று கவிமணி தேசிய விநாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடக சாலையை நற்கலாசாலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ?

– கவிமணி

கொடுக்கப்பட்டுள்ள 4 கொள்குறிகளும் தவறானவை.

16. “கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்

(அ) புளியங்குடி

(ஆ) சிறுகூடல் பட்டி

(இ) மாங்குளம்

(ஈ) இடையன்குடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இடையன்குடி

இராபர்ட் கால்டுவெல்

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல் 1841-இல் தமிழகம் வந்து, திருநெல்வேலியில் உள்ள இடையன்குடி என்ற ஊரில் தனது சமயப் பணியையும் தமிழ்ப்பணியையும் தொடங்கினார். இடையன்குடி என்ற ஊரில் 50 ஆண்டுகள் வாழ்ந்தார். 1891-இல் தனது சமயப் பணியிலிருந்து ஓய்வு பெற்று கொடைக்கானல் சென்று தங்கியிருந்த போது இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்கு கொண்டுவரப்பட்டு, அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது,

17. பொருத்துக:

திணை பொழுது

அ. குறிஞ்சி – 1. எற்பாடு

ஆ. முல்லை – 2. நண்பகல்

இ. மருதம் – 3. மாலை

ஈ. நெய்தல் – 4. யாமம்

உ. பாலை – 5. வைகறை

அ ஆ இ ஈ உ

அ. 4 3 5 1 2

ஆ. 2 1 4 5 3

இ. 5 4 1 2 3

ஈ. 3 1 2 4 5

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

அ. 4 3 5 1 2

அகப்பொருள் திணைகள் ஐந்து அவற்றிற்கான பெரும்பொழுதுகள், சிறுபொழுதுகள் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கூறுபாடுகள் ஆகும். அவை, சிறுபொழுது என்பது ஒரு நாளின் கூறுபாடுகள் ஆகும்.

1.காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை

2. நண்பகல் – காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

4. மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

5. யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

6. வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

ஐந்திணைகளுக்கும் உரிய முதற்பொருள்:

திணை நிலம் பெரும் பொழுது சிறுபொழுது
குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் குளிர்காலம், முன்பனிக் காலம் யாமம்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும் கார்காலம் மாலை
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆறுபெரும் பொழுதுகள் வைகறை
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆறுபெரும் பொழுதுகள் எற்பாடு
பாலை மணலும் கடல் சார்ந்த இடமும் இளவேனில், முதுவேனில், பின்பணி நண்பகல்

18. “எற்பாடு” என்னும் சொல்லில் “பாடு” என்பதன் பொருள்

(அ) தயார் செய்தல்

(ஆ) பாட்டு பாடுதல்

(இ) மறையும் நேரம்

(ஈ) துன்பப்படுதல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மறையும் நேரம்

எற்பாடு – எல்+பாடு

எல்-ஞாயிறு

பாடு-மறையும் நேரம்

19. “வயிரமுடைய நெஞ்சு வேணும்” – எனக்கூறிய கவிஞர்

(அ) பாரதிதாசன்

(ஆ) கவிமணி

(இ) பாரதியார்

(ஈ) அழ.வள்ளியப்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாரதியார்

பாப்பா பாட்டு

உயிர்களிடத்து அன்பு வேணும் – தெய்வம்

உண்மை என்று தானறிதல் வேண்டும்

வயிரமுடைய நெஞ்சு வேணும் – இது

வாழும் முறைமை யடிபாப்பா!

– பாரதியார்.

20. “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” – என்ற பாடல் இடம் பெறும் நூல்.

(அ) மாறனலங்காரம்

(ஆ) காரிகை

(இ) தண்டியலங்காரம்

(ஈ) நன்னூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தண்டியலங்காரம்

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னோர் தனியாழி வெங்கதிரோன் றேனையது

தன்னே ரிலாத் தமிழ்”

– தண்டியலங்காரம்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!