General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 13

41. பெரியார் இரு கண்களாகக் கருதியவை

(அ) அன்பு, ஈகை

(ஆ) மரியாதை சுயமரியாதை

(இ) வாய்மை, தூய்மை

(ஈ) ஈகை, வாய்மை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மரியாதை சுயமரியாதை

42. “பிருங்கராசம்”, “தேகராசம்” – எந்த மூலிகையின் வேறு பெயர்கள்

(அ) குப்பைமேனி

(ஆ) கரிசாலாங்கண்ணி

(இ) கறிவேப்பிலை

(ஈ) கற்றாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கரிசாலாங்கண்ணி

கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்களாவன, கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.

43. குரல்வளத்தை மேம்படுத்தும் மூலிகை

(அ) துளசி

(ஆ) ஞானப் பச்சிலை

(இ) குப்பைமேனி

(ஈ) கற்றாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஞானப் பச்சிலை

குரல்வளத்தை மேம்படுத்தும் மூலிகை தூதுவளை. இதன் வேறுபெயர்களாவன தூதுளை, சிங்கவல்லி. இதனை வள்ளலார் “ஞானப்பச்சிலை” எனப் போற்றுகிறார்.

44 “மீதூண் விரும்பேல்” என்றவர்

(அ) கம்பர்

(ஆ) ஒளவையார்

(இ) வள்ளுவர்

(ஈ) திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஒளவையார்

45. “சித்திரக்காபரப்புலி” என்றழைக்கப்பட்டவர்

(அ) மகேந்திரவர்மன்

(ஆ) நந்திவர்மன்

(இ) கோப்பெருஞ்சோழன்

(ஈ) குலோத்துங்கன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) மகேந்திரவர்மன்

முதலாம் மகேந்திரவர்மன் சிறந்த ஓவியனாகப் புகழ் பெற்றிருந்தான். “சித்திரக்காரப்புலி” என்று புகழப்பட்டான் “தட்சண சித்திரம்” என்ற ஓவிய இலக்கண நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

46. “தேவாரம்” என்பது

(அ) இக்காலத்து இசைத்தமிழ் நூல்

(ஆ) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்

(இ) முற்காலத்து இசைத்தமிழ் நூல்

(ஈ) சங்ககாலத்து இசைத்தமிழ் நூல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்

இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்கள்: தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யபிரபந்தம்.

முற்காலத்து இசைத்தமிழ் நூல்கள்: முதுநாரை, முதுகுருகு, பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இசை நுணுக்கம், பஞ்சமரபு.

சங்ககாலத்து இசைத்தமிழ் நூல்கள்: பரிபாடல், கலித்தொகை.

47. உரிய விடையை எழுதுக:

முத்துவீரப்பன் ஆட்சிக்காலம்

(அ)நான்காண்டு

(ஆ) ஐந்தாண்டு

(இ) ஏழாண்டு

(ஈ) ஆறாண்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஏழாண்டு

மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள். தன் கணவர் இறந்த பின்பு காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்டு வந்தார். பின்னர் அவரது மகன் முத்து வீரப்பன் பதவிக்கு வந்து ஏழாண்டு காலம் ஆட்சி செய்தார். முத்து வீரப்பன் திடீரென இறந்து விடவே ராணி மங்கம்மாள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

48. பொருத்தமான விடையை எழுதுக:

“நாடகத்தமிழ்”

(அ) இயற்றமிழில் பிறந்தது

(ஆ) இயல் இசை சேர்ந்த வழியே பிறந்தது

(இ) இசைத்தமிழில் பிறந்தது

(ஈ) ஏதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இயல் இசை சேர்ந்த வழியே பிறந்தது

49. “எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம்” என்றவர்

(அ) பெரியார்

(ஆ) அண்ணல் அம்பேத்கர்

(இ) காந்தியடிகள்

(ஈ) திரு.விக.

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அண்ணல் அம்பேத்கர்

50. எண்பது விழுக்காடு திராவிட மொழிக்கூறுகளை கொண்ட மொழி

(அ) மலையாளம்

(ஆ) தமிழ்

(இ) தெலுங்கு

(ஈ) கன்னடம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தமிழ்

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!