General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 15

61. நடுவண் அரசு ———-ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

(அ) 1950

(ஆ) 1975

(இ) 1978

(ஈ) 1980

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 1978

நடுவண் அரசு 1978-ல் பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

62. நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்

(அ) பாண்டித்துரையார்

(ஆ) மருது பாண்டியர்

(இ) முத்துராமலிங்களார்

(ஈ) திருமலை நாயக்கர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பாண்டித்துரையார்

பாஸ்கர சேதுபதி தலைமையில், பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் பரிதிமாற் கலைஞர், உ.வோ.சா., இராகவனார் இணைந்து நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கினர்

63. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ————– இல்லாமை

(அ) வாக்குரிமை

(ஆ) பேச்சுரிமை

(இ) சொத்துரிமை

(ஈ) எழுத்துரிமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சொத்துரிமை

“பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். பெண்ணடிமைக்கு முக்கியக் காரணம் சொத்து மறுப்பேயாகும். அதற்காக அவர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும்” – ஈ.வெ.ரா. பெரியார்

64. “Instinct” என்னும் ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழ்ச்சொல்

(அ) இயற்கை ஒழுங்கு

(ஆ) இயற்கை வனப்பு

(இ) இயற்கை அறிவு

(ஈ) இயற்கை கொடை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இயற்கை அறிவு

Instinct-இயற்கை அறிவு.

Order of Nature-இயற்கை ஒழுங்கு.

Aesthetic-இயற்கை வனப்பு

65. பொருத்துக:

தாவர உறுப்புப் பெயர்கள்

அ. மூங்கில் – 1. தாள்

ஆ. வேப்பம் – 2. கூந்தல்

இ. கமுகம் – 3. தழை

ஈ. நெல் – 4. இலை

அ அ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 2 1 4 3

இ. 3 2 1 4

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ). 4 3 2 1

66. பொருத்துக:

அ. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – 1.கண்ணதாசன்

ஆ. பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் – 2.கவிமணி

இ. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – 3. நாமக்கல் கவிஞர்

ஈ. சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் – 4. பாரதிதாசன்

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 4 3 1 2

இ. 2 1 4 3

ஈ. 3 1 2 4

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

ஆ. 4 3 1 2

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

– பாரதிதாசன்.

“பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும்

பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்”

– நாமக்கல் கவிஞர்.

“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்”

– கவிஞர் கண்ணதாசன்.

“சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்

சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்”

– கவிமணி

67. பண்டைத் தமிழர் எருதுவிடும் திருவிழாவை எவ்விதம் அழைத்தனர்

(அ) மஞ்சு விரட்டு

(ஆ) ஜல்லிக்கட்டு

(இ) ஏறு தழுவுதல்

(ஈ) எருதுகட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஏறு தழுவுதல்

68. “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்

(இ) புறநானூறு

(ஆ) குறுந்தொகை

(இ) அகநானூறு

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) குறுந்தொகை

69. உமர்கய்யாம் 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ———— கவிஞர்

(அ) வங்கத்துக்

(ஆ) சீனத்துக்

(இ) பாரசீகக்

(ஈ) ருஷியக்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பாரசீகக்

உமர்கய்யாம் 11-ஆம் நூற்றாண்டில் வாழந்த பாரசீகக் கவிஞர். இவர் எழுதிய பாடல்களை, தமிழில் “ரூபாயத்” என்ற தலைப்பில் கவிமணி மொழிபெயர்த்துள்ளார். உமர்கய்யாமின் இயற்பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பதாகும். இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர். இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.

70. “அறிவுண்டாகுக” என வாழ்த்தியவர் யார்?

(அ) மணிமேகலா தெய்வம்

(ஆ) ஆபுத்திரன்

(இ) ஆதிரை

(ஈ) அறவண அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) அறவண அடிகள்

மணிமேகலை

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

தேவியும் ஆயமும் சித்திரா பதியும்

மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்

எழுந்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால்

தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க

அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்

– சீத்தலைச் சாத்தனார்.

பொருள்: அறவண அடிகளைக் கண்ட அளவில் அரசமாதேவியும் தோழியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும் எழுந்து, அவர் எதிரே சென்றனர். வணங்கும் தகுதியுடைய அறவணரின் இருபாதங்களையும் தம் இரு கைகளாலும் தொட்டு வணங்கினர். அடிகள், “அறிவுண்டாகுக” என அவர்களை வாழ்த்தினார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!