General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 15

91. குழவி என்பதன் பொருள்

(அ) ஒருவகைத் தேனீ

(ஆ) ஒருவகைத் குருவி

(இ) குழந்தை

(ஈ) ஒருவகைத் தாவரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) குழந்தை

92. “பிரணவ கேசரி” என அன்போடு அழைக்கப்பட்ட தேசியத் தலைவர்

(அ) முத்துராமலிங்கர்

(ஆ) இராஜாஜி

(இ) காமராசர்

(ஈ) விவேகானந்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) முத்துராமலிங்கர்

வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை என்றெல்லாம் பாராட்டப்பெற்றவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

93. உயிர் வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிப்பது

(அ) கார்பன் மோனாக்சைடு

(ஆ) கார்பன்-டை-சல்பைடு

(இ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

(ஈ) குளோரோ டெட்ரா கார்பன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) குளோரோ ஃபுளுரோ கார்பன்

94. வசன நடை கைவந்த வல்லாளர் என ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர்

(அ) ஜி.யூ.போப்

(ஆ) பரிதிமாற் கலைஞர்

(இ) வீரமாமுனிவர்

(ஈ) ரா.பி.சேதுப்பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பரிதிமாற் கலைஞர்

தமிழ் உரைநடை வளர்ச்சிப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, பரிதிமாற்கலைஞர் “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியுள்ளார்.

95. பொருத்துக:

அ. டால்ஸ்டாய் – 1. விசுவ பாரதியில் பணி புரிந்த பேராசிரியர்

ஆ. பெட்ரண்ட் ரஸ்ஸல் – 2. கிரேக்க சிந்தனையாளர்

இ. கிருபளானி – 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்

ஈ. பிளேட்டோ – 4. சிந்தனையாளர் கல்வியாளர்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 4 1 2

இ. 4 2 3 1

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

96. நடுத்திராவிட மொழிகளில் ஒன்று

(அ) நண்பர்

(ஆ) உறவினர்

(இ) தாய்மார்

(ஈ) பெற்றோர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) உறவினர்

டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் ஈ.வெ.ரா.அவர்களுக்கு “பெரியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

97. இராமசாமிக்குப் “பெரியார்” என்று பட்டம் வழங்கியவர்.

(அ) நண்பர்

(ஆ) உறவினர்

(இ) தாய்மார்

(ஈ) பெற்றோர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தாய்மார்

டாக்டர் எஸ்.தருமாம்பாள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு “பெரியார்” எ ன்ற பட்டம் வழங்கப்பட்டது

98. பெரியார், பெண்களுக்கு மிக முக்கியம் என்றவை

1.அறிவு. 2.நகை. 3.அழகு. 4.சுயமரியாதை.

(அ) 1, 2 சரி

(ஆ) 1,3 சரி

(இ) 2, 3 சரி

(ஈ) 1, 4 சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 1, 4 சரி

“பெண்களுக்கு நகையோ, அழகான உடையோ முக்கியமில்லை; அறிவும் சுயமரியாதையும் மிக முக்கியம்” என்று ஈ.வெ.ரா பெரியார் கூறினார்.

99. கோடிட்ட இடங்களை நிரப்புக:

பெரியார் தம் வாழ்நாளில் —— கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து சமுதாயத் தொண்டாற்றினார்.

(அ) 8600

(ஆ) 21,400

(இ) 10,700

(ஈ) 13,12,000

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) 13,12,000

பெரியாரின் நடைப்பயணம் பற்றிய குறிப்புகள்:

நாட்கள்-8600,

தொலைவு-13,12,000 கி.மீட்டர்.

பங்கேற்ற கூட்டங்களின் எண்ணிக்கை-10,700.

உரையாற்றிய நேரம்-21,400 மணிநேரம்.

100. தவறான தொடரைக் கண்டறிக:

(அ) தமிழகப் பொருள்கள் சீனாவில் விற்கப்பட்டன.

(ஆ) சீனத்துப் பட்டும் சர்க்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின.

(இ) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

(ஈ) கரும்பு சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் புறநானூறு

பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் குறித்து கூறும் நூல்கள் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகியனவாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!