General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 18

91.பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக்

அ. யுனெஸ்கோ விருது – 1. 21,400

ஆ. அஞ்சல்தலை – 2. 10,700

இ. பங்கேற்ற கூட்டங்கள் – 3. 1970

ஈ. உரையாற்றிய மணிநேரம் – 4. 1978

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 2 1

இ. 2 3 4 1

ஈ. 1 3 4 2

விடை மற்றும் விளக்கம்

விடை:

ஆ. 3 4 2 1

ஈ.வெ.ரா.பெரியார்: 1970ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின்யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது. நடுவன் அரசு 1797-ல் பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அவர் பங்கேற்ற கூட்டங்களின் எண்ணிக்கை 10,700. அவர் உரையாற்றிய நேரம் 21400 மணி நேரம்.

92. திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

(அ) மதுரைக்காண்டம்

(ஆ) கூடற்காண்டம்

(இ) வஞ்சிக் காண்டம்

(ஈ) திருவாலவாயக் காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) வஞ்சிக் காண்டம்

வஞ்சிக்காண்டம் – சிலப்பதிகாரத்தின் பிரிவு

93. “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

(அ) முதலாம் குலோத்துங்கன்

(ஆ) இராசராசன்

(இ) கரிகாலன்

(ஈ) பராந்தகன்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) கரிகாலன்

“நரைமுடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்” கரிகாலன்

94. “மணிமேகலை” அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

(அ) மணிமேகலா தெய்வம்

(ஆ) கதமதி

(இ) தீவதிலகை

(ஈ) அறவண அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) தீவதிலகை

மணிபல்லவத் தீவில், தீவதிலகையின் உதவியால்p மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள்.

95. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

(அ) முன்றுறை அரையனார்

(ஆ) காரியாசான்

(இ) மிளைகிழான் நல்வேட்டனார்

(ஈ) கணிமேதாவியார்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) மிளைகிழான் நல்வேட்டனார்

நற்றிணை அரிகால் மாறிய அங்கண் வயல் ———– ———— ———– ——— ————— ——– ———— ————- நெடிய மாழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே. – மிளைகிழான் நல்வேட்டனார். பொருள்: அரசால் சிறப்பு செய்யப் பெறுதலும், யானை, தேர், குதிரை முதுலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் செல்வச் சிறப்பன்று. அஃது, அவரவர்தம் முன்வினைப் பயனே. தன்பால் புகலிடம் தேடி வந்த எளியோரைக் கைவிடாமல் காக்கும் மென்மையான பண்பே செல்வமெனச் சான்றோர் கூறுவர்

96. தமிழெண்களைக் கூட்டுக ருஅ சா.அ – ?

(அ) சாகஉ

(ஆ) கசாஉ

(இ) கருக

(ஈ) கஉசா

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) கஉசா

ரு 5. அ-3-58இ சா-6. அ-8-68. 58 68 – 126. 1 – க. 2-உ. சா-6

97. ஆற்றீர் – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி எவ்வாறு பிரியும்?

(அ) ஆற்று ஈர்

(ஆ) ஆறு ஈர்

(இ) ஆ இற்று ஈர்

(ஈ) ஆற்று ஆ ஈர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஈ) ஆற்று ஆ ஈர்

ஆற்று ஆ ஈர் – ஆற் -பகுதி, ஆ-எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது, ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி.

98. தமிழ் – ஓசை மொழி

(அ) செப்பல்

(ஆ) தூங்கல்

(இ) மெல்

(ஈ) துள்ளல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) மெல்

99. “சான்றாண்மை” அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

(அ) நேர் நிறை நேர்

(ஆ) நேர் நேர் நேர்

(இ) நிறை நிறை நிறை

(ஈ) நிறை நேர் நேர்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(ஆ) நேர் நேர் நேர் 

சான்றான்மை-நேர் நேர் நேர்- தேமாங்காய். ஒற்றெழுத்து வரும் போது பிரிக்க வேண்டும். நெடில் எழுத்து வரும்போது பிரிக்க வேண்டும்

100. புறத்தினைகள் ———- வகைப்படும்

(அ) பன்னிரெண்டு

(ஆ) ஏழு

(இ) ஐந்து

(ஈ) ஒன்பது

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) பன்னிரெண்டு

புறத்திணைகள்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!