General Tamil

12th Tamil Unit 1 Questions

101) வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் ____________ திரியும்.

A) ளகரமாக

B) றகரமாக

C) டகரமாக

D) னகரமாக

விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் – பன்முகம்.

102) பின்வருவனவற்றில் எது அகிலன் எழுதிய நூல் ஆகும்?

A) பாரதியின் கடிதங்கள்

B) இலக்கண உலகில் புதிய பார்வை

C) காட்டுவாத்து

D) நெல்லூர் அரிசி

விளக்கம்: பாரதியின் கடிதங்கள் – ரா.அ.பத்மநாபன்

இலக்கண உலகில் புதிய பார்வை – டாக்டர் பொற்கோ

காட்டுவாத்து – நா.பிச்சமூர்த்தி

நெல்லூர் அரிசி – அகிலன்

103) பாரதி வாழ்த்து என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) சுப்புரத்தினதாசன்

D) பரலி.சு.நெல்லையப்பர்

விளக்கம்: நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி – பரலி.சு.நெல்லையப்பர்

104) மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா, வா – என்ற வரிகளை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியம்

B) பவணந்தி முனிவர்

C) ந.பிச்சமூர்த்தி

D) பாரதியார்

விளக்கம்: மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா, வா – சிற்பி பாலசுப்பிரமணியம்

105) ஆழி என்ற சொல்லின் பொருள் என்ன?

A) உலகம்

B) பெரிய

C) கடல்

D) சூரியன்

விளக்கம்: ஆழி என்றால் கடலைக் குறிக்கும். ஆழி என்றால் மோதிரம் என்ற பொருளும் உண்டு.

106) உனக்குள் சிறகுகள் தோன்றுக. பறந்து போ

பற பற – மேலே மேலே மேலே – என்று கூறியவர் யார்?

A) கவிமணி

B) மனோண்மனியம்

C) விவேகானந்தர்

D) பாரதியார்

விளக்கம்: உனக்குள் சிறகுகள் தோன்றுக. பறந்து போ

பற பற – மேலே மேலே மேலே – பாரதியார்.

107) வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் __________ திரியும்.

A) ளகரமாக

B) றகரமாக

C) ழகரமாக

D) டகரமாக

விளக்கம்: வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. கல் + சிலை – கற்சிலை. கடல் + கரை – கடற்கரை

108) ந, ண, ன, ர, ற, ல, ள, ழ ஆகிய எழுத்துக்களில் எது சொல்லின் இறுதியில் வராது?

A) ர

B) ற

C) ந

D) ல

விளக்கம்: மேலுள்ள எட்டு எழுத்துக்களில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும். றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்

109) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.

A) செந்தமிழ்

B) செந்நிறம்

C) சிவந்து

D) செம்பரிதி

விளக்கம்: செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்.

சிவந்து – வினையெச்சம்

110) இலக்கண நூலார், உரையாசிரியர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்ற இலக்கண நூல் எது?

A) முத்துவீரியம்

B) இலக்கண விளக்கம்

C) தண்டியலங்காரம்

D) மாறனலங்காரம்

விளக்கம்: தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் தண்டி ஆவார். இந்நூல் காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இலக்கண நூலார், உரையாசிரியர்கள் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!