General Tamil

7th Tamil Unit 4 Questions

21) மக்கள் எதில் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?

A) கடலில்

B) காற்றில்

C) கழனியில்

D) வங்கத்தில்

விளக்கம்: மக்கள் வங்கத்தில் அதாவது கப்பலில் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர். வங்கம் – கப்பல்

22) புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது எது?

A) காற்று

B) நாவாய்

C) கடல்

D) மணல்

விளக்கம்: புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல். சான்று: “புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ”.

23) பிரித்தெழுதுக. “பெருங்கடல்”

A) பெருமை + கடல்

B) பெரு + கடல்

C) பெரி + கடல்

D) பெருங் + கடல்

விளக்கம்: பெருங்கடல் = பெருமை + கடல் எனப் பிரியும்.

24) இன்று + ஆகி சேர்த்தெழுதுக.

A) இன்றுஆகி

B) இன்றிஆகி

C) இன்றாகி

D) இன்றாஆகி

விளக்கம்: இன்று + ஆகி = இன்றாகி எனப் புணரும்

25) எதுகை இடம்பெறாத இணை எது?

A) இரவு-இயற்கை

B) வங்கம்-சங்கம்

C) உலகு-புலவு

D) அசைவு-இசைவு

விளக்கம்: சொல்லின் 2-வது எழுத்து ஒன்றி வருவது எதுகை. இரவு-இயற்கை-இதில் 2-ம் எழுத்து ஒன்றாக இல்லை.

26) பயணம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பயணம் 3 வகைப்படும். அவை, தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் ஆகும். பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெரு விருப்பம் உண்டு.

27) நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

28) வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியை எவை?

A) ஆறுகள்

B) மாடுகள்

C) குதிரைகள்

D) கப்பல்கள்

விளக்கம்: வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல். கப்பல்கள் கட்டுவதும், கப்பல்கள் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகளாகும்.

29) நமக்கு கிடைத்த நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது?

A) திருக்குறள்

B) சங்க இலக்கியம்

C) நாலடியார்

D) தொல்காப்பியம்

விளக்கம்: நமக்கு கிடைத்த நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூல நூல் அகத்தியம் என்பர்.

30) “முந்நீர் வழக்கம்” என்று கடற்பயணத்தைக் குறிப்பிடும் நூல் எது?

A) திருக்குறள்

B) அகத்தியம்

C) தொல்காப்பியம்

D) சங்க இலக்கியம்

விளக்கம்: தொல்காப்பியம், கடற்பயணத்தை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!