General Tamil

7th Tamil Unit 4 Questions

51) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பதிற்றுப்பத்து

C) பரிபாடல்

D) தொல்காப்பியம்

விளக்கம்: பாய்மரங்களைக் கட்டும் பல வகையான கயிறுகளும் இருந்தன. அலை அஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, மூட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு. இதேபோல் பாய் மற்றும் கயிறு ஆகியவற்றை இணைக்க மரப்பிசின் பயன்படுத்தியதாக பரிபாடல் கூறுகிறது

52) பொருத்துக

அ. அடிமரம் – 1. நங்கூரம்

ஆ. குறுக்கு மரம் – 2. பருமல்

இ. கப்பலை திருப்ப – 3. ஏரா

ஈ. கப்பலை நிறுத்த – 4. சுக்கான்

A) 2, 3, 1, 4

B) 3, 2, 4, 1

C) 4, 2, 1, 3

D) 4, 3, 21

விளக்கம்: அடிமரம் – எரா, குறுக்கு மரம் – பருமல், கப்பலைத் திருப்ப – சுக்கான், கப்பலை நிறுத்த – நங்கூரம்

53) கப்பலின் முதன்மையான உறுப்பு எது?

A) அடி மரம்

B) பருமல்

C) வங்கு

D) கூம்பு

விளக்கம்: கப்பலின் முதன்மை உறுப்பு அடிமரம் ஆகும். இது எரா எனவும் அழைக்கப்படும். இது ஏரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.

54) சமுக்கு என்னும் ஒரு கருவியை கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) பரிபாடல்

C) பட்டிப்பாலை

D) கப்பல் சாத்திரம்

விளக்கம்: சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

55) பொருத்தமற்றதைக் காண்க.

A) மாலுமி

B) மீகாமன்

C) நீகான்

D) சமுக்கு

விளக்கம்: மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி முதலியவை கப்பல் செலுத்துபவரை குறிப்பிடுகிறது. சமுக்கு என்பது அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட திசைக்காட்டும் கருவி.

56) காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழ்கள் நன்கு அறிந்திருந்தனர் எனக் கூறும் நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) பரிபாடல்

D) ஐங்குறுநூறு

விளக்கம்: காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் எனப் புறப்பாடல் அடிகளில் வெண்ணக் குயத்தியார் குறிப்பிடுகிறார்.

57) “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என்ற வரிகளில் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) பரிபாடல்

D) ஐங்குறுநூறு

விளக்கம்: இவ்வரிகள் புறநானூற்றில் 66-வது பாடலாக அமைந்துள்ளது. தமிழர்கள் காற்றின் திசை அறிந்து கலம் செலுத்தினர் என்று குறிப்பிடுகிறது.

58) தவறானக் கூற்றைத் தேர்க.

1. கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் தம் படட்றிவால் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர்

2. திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தியும் வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர் தமிழர்கள்

3. எனினும், கோள்களின் நிலைமையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களை தமிழர்களால் கணிக்க முடியவில்லை.

A) 1, 3 சரி

B) 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவை பெற்றிருந்தனர். கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர்; பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில்

கப்பலைச் செலுத்தினர்.

59) “கலங்கரை விளக்கம்” என்பதன் பொருள் என்ன?

A) கப்பலை நிறுத்தும் சமிக்ஞை விளக்கு

B) கப்பலை புறப்படச் சொல்லும் சமிக்ஞை விளக்கு

C) கப்பலை துறைமுகத்திற்கு அழைக்கும் விளக்கு

D) A மற்றும் C

விளக்கம்: “கலங்கரை விளக்கம்” என்பதன் பொருள் கப்பலை அழைக்கும் விளக்கு என்பதாகும். உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்டதாக இஃது அமைக்கப்படும். கலம் – கப்பல், கரைதல் – அழைத்தல் – அழைத்தல். இதனால் இது கலங்கரை விளக்கம் எனப் பெயர் பெற்றது.

60) “கலம் தந்த பொற்பரிசும்

கழித்தோணியால் கரை சேரக்குந்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) நெடுந்தொகை

C) புறநானூறு

D) பரிபாடல்

விளக்கம்: இவ்வரிகள், புறநானூற்றில் 343-ஆனது பாடலாக அமைந்துள்ள, பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. எனவே கப்பலிலுள்ள பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்த செய்தியை இப்பாடல் வரிகள் உணரத்துகிறது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!