General Tamil

7th Tamil Unit 4 Questions

61) பழந்தமிழர்கள் எவற்றை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது?

A) சுறா

B) டால்பின்கள்

C) திமிங்கலம்

D) ஆமைகள்

விளக்கம்: கடல் ஆமைகள் இன்ப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. அவை செல்லும் வழியைசல் செயற்கைக் கோள்கள் மூலம் தற்போது ஆராயந்துள்ளனர். அவ்வழியிலுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.

62) தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்க எதுப் பயன்படுகிறது?

A) கலம்

B) வங்கம்

C) நாவாய்

D) கடம்

விளக்கம்: சிறிய நீர்நிலைகளைக் கடக்க – தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்.

கடல் பயணத்திற்கு – கலம், வங்கம், நாவாய்

63) கடலின் நீர் மட்டம் எப்போது உயரும்?

A) மாதத் தொடக்கத்தில்

B) மாத இறுதியில்

C) முழுநிலவு நாள்

D) A மற்றும் C

விளக்கம்: கடலின் நீர் மட்டம் அம்மாவாசை மற்றும் முழுநிலவு நாளன்று உயரும். காரணம் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாளன்று பூமி, சூரியன், நிலவு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும்.

64) ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் பெற்று எத்தனை மணி நெரம் வரை கடலுக்குள் நீந்த முடியும்?

A) 6 மணி நேரம்

B) 7 மணி நேரம்

C) 8 மணி நேரம்

D) 9 மணி நேரம்

விளக்கம்: ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் பெற்று ஒன்பது மணி நேரம் வரை கடலுக்குள் நீந்த முடியும்.

65) அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?

A) நெமோ

B) நாட்டிஸஸ்

C) ஜுல்ஸ் வெர்ன்

D) ஃபராகட்

விளக்கம்: அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜுல்ஸ் வெர்ன்

66) ஜுல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) பிரான்ஸ்

B) இத்தாலி

C) இலண்டன்

D) அமெரிக்கா

விளக்கம்: ஜுல்ஸ் வெர்ன் என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் புனைகதைகளின் தலைமகன் எனப் போற்றப்படும் இவர், அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றி தம் புதினங்களில் எழுதியவர்.

67) பொருந்தாததைத் தேர்க.

A) எண்பது நாளில் உலகத்தை சுற்றி

B) பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

C) ஆழ்கடலின் அடியில்

D) உயிரினங்களின் தோற்றம்

விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் என்ற நூலின் ஆசிரியர் சார்லஸ் டார்வின். மற்ற நூல்களை ஜுல்ஸ் வெர்ன் எழுதினார்.

68) பொருந்தாததைத் தேர்க.

A) சொல்

B) எழுத்து

C) மொழி

D) பதம்

விளக்கம்: மொழி, பதம், கிளவி ஆகியவை சொல் என்பதன் பொரள் தரும் வேறு சொற்கள் எழுத்து என்பது தமிழ் எழுத்துக்களைக் குறிக்கிறது.

69) ஓர் எழுத்து தனித்தும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எது?

A) எழுத்து

B) சொல்

C) பொருள்

D) சொற்றொடர்

விளக்கம்: சொல் என்பது ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவதாகும். (எ.கா) வா, அறம்

70) இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும்?

A) 3

B) 2

C) 4

D) 6

விளக்கம்: இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என சொற்கள் 4 வகைப்படும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!