General Tamil

General Tamil Model Question Paper 22

21. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்

(அ) பரிபாடல்

(ஆ) கலிப்பாடல்

(இ) முல்லைப்பாட்டு

(ஈ) குறிஞ்சிப்பாட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குறிஞ்சிப்பாட்டு

22. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிப்பட்ட சித்தர் யார்?

(அ) பாம்பாட்டி சித்தர்

(ஆ) கடுவெளிச்சித்தர்

(இ) குதம்பைச் சித்தர்

(ஈ) அழுகுணிச் சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கடுவெளிச்சித்தர்

கடுவெளிச்சித்தர்:

இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுள் என்றெண்ணி வழிபட்டார். அதனால் இவருக்கு கடுவெளிச்சித்தர் என்ற பெயர் வழங்கி வந்தது. மிக எளிய சொற்களில் அறக்கருத்துகளை எடுத்துரைத்தவர்

23. “குறட்டை ஒலி” சிறுகதையின் ஆசிரியர்

(அ) மு.வரதராசனார்

(ஆ) அகிலன்

(இ) விந்தன்

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) மு.வரதராசனார்

24. “மீதூண் விரும்பேல்” என்று கூறியவர்

(அ) திருமூலர்

(ஆ) திருவள்ளுவர்

(இ) பாரதியார்

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஒளவையார்

25. தமிழக மக்களால் “காந்தியக் கவிஞர்” எனப் பெருமையுடன் அழைக்கப்பெற்றவர்

(அ) வெ.இராமலிங்கனார்

(ஆ) பாரதியார்

(இ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வெ.இராமலிங்கனார்

26. “மலரும் மாலையும்” என்ற நூலை இயற்றியவர்

(அ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(ஆ) மு.வரதராசனார்

(இ) கவிமணி தேசிக விநாயகம்

(ஈ) மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

27. இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிச்சாலை” (Museum of Languages) எனக் குறிப்பிட்டுள்ள தமிழ் அறிஞர் யார்?

(அ) ஹீராஸ் பாதிரியார்

(ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(இ) நேரு

(ஈ) ச.அகத்தியலிங்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ச.அகத்தியலிங்கம்

நம்நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

28. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி” எனக் கூறியவர்.

(அ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(இ) உ.வே.சாமிநாத ஐயர்

(ஈ) தேவநேயப் பாவாணர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தேவநேயப் பாவாணர்

“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி” எனக் கூறியவர் தேவநேயப் பாவாணர்.

16 செவ்வியல் தன்மைகள்: தென்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை.

29. “நுணங்கிநூல் நோக்கி இழையா” இத்தொடரில் “நுணங்கி” என்பதன் பொருள்

(அ)ஆராய்ந்து

(ஆ) நுண்ணறிவு

(இ) வணங்கி

(ஈ) பணிந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) நுண்ணறிவு

30. “புத்தரது ஆதி வேதம்” என்னும் நூலை எழுதியவர்

(அ) அம்பேத்கர்

(ஆ) பெரியார்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஈ) ஆறு.அழகப்பன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

“புத்தரது ஆதிவேதம்” என்னும் நூலை 28 காதைக் கொண்ட பெருநூலாக அயோத்திதாசப் பண்டிதர் இயற்றியுள்ளார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!