General Tamil

General Tamil Model Question Paper 22

31. “புரட்சி முழக்கம்” என்ற நூலை இயற்றியவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) பெரியார்

(இ) சாலை.இளந்திரையன்

(ஈ) வண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சாலை.இளந்திரையன்

32. பொருத்துக:

சிறப்பு அடைமொழிப்பெயர் பெயர்

அ. தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ – 1. புதுமைப்பித்தன்

ஆ. தமிழ்நாட்டின் மாபசான் – 2. அனுத்தமா

இ. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் – 3. பாரதிதாசன்

ஈ. தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் – 4. கல்கி

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 3 1 4 2

இ. 2 1 3 4

ஈ. 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 1 4 2

33. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. தமழிச்சுடர்மணிகள் – 1. மறைமலையடிகள்

ஆ. தமிழர் மதம் – 2. திரு.வி.கல்யாண சுந்தரனார்

இ. சைவத்திறவு – 3. ரா.பி. சேதுப்பிள்ளை

ஈ. செந்தமிழும்கொடுந்தமிழும் – 4. எஸ்.வையாபுரிப்பிள்ளை

அ ஆ இ ஈ

அ. 4 1 2 3

ஆ. 3 4 1 2

இ. 2 3 4 1

ஈ. 2 4 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 1 2 3

34. பொருத்துக:

தழிழறிஞர் சிறப்பு அடைமொழி

அ. பெருஞ்சித்திரனார் – 1. தமிழ்த்தாத்தா

ஆ. உ.வே.சா – 2. சொல்லின் செல்வர்

இ. ரா.பி.சேதுப்பிள்ளை – 3. தமிழ்த் தென்றல்

ஈ. திரு.வி.க – 4. தனித்தமிழ் இயக்க மறவர்

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 2 4 1 3

இ. 4 1 2 3

ஈ. 2 3 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 4 1 2 3

35. “கவிஞர் முடியரசன்” எழுதாத நூல்

(அ) காளியப்பாவை

(ஆ) தேன்மழை

(இ) வீரகாவியம்

(ஈ) பூங்கொடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) தேன்மழை

“தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் சுரதா ஆவார். இந்நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.

36. இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது

(அ) சரசுவதி மகால்

(ஆ) கன்னிமாரா நூலகம்

(இ) கொல்கத்தா தேசிய நூலகம்

(ஈ) தேவநேயப் பாவாணர் நூலகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கொல்கத்தா தேசிய நூலகம்

இந்தியாவில் உள்ள நூலகங்களில் கொல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது. இதில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.

37. “வசனநடை கைவந்த வல்லாளர்” – எனப் பாராட்டப்பட்டவர்

(அ) ஆறுமுகநாவலர்

(ஆ) மறைமலையடிகள்

(இ) பரிதிமாற்கலைஞர்

(ஈ) இரா.பி.சேதுப்பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஆறுமுகநாவலர்

தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை, ‘வாசனநடை கைவந்த வல்லாளர்” என்று பரிமாற் கலைஞர் பாராட்டியுள்ளார்.

38. “ஈசான தேசிகர்” என்று அழைக்கப்படுபவர்

(அ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(ஆ) ஞானதேசிகர்

(இ) சுவாமிநாத தேசிகர்

(ஈ) மறைமலை அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சுவாமிநாத தேசிகர்

“திருச்செந்திற்கலம்பகம்” என்ற நூலின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் ஆவார். இவரின் சிறப்புப் பெயர் “ஈசான தேசிகர்” என்பதாகும்.

39. களிற்று மருப்பு“ – இலக்கணக்குறிப்பு கூறுக:

(அ) வினைத்தொகை

(ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

(இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

(ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை

40. “குயில்கள் கூவியது” என்பது

(அ) பால் வழு

(ஆ) திணை வழு

(இ) எண் வழு

(ஈ) இட வழு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) எண் வழு

குயில்கள் கூவின-சரியான தொடர்.

குயில் கூவியது-சரியான தொடர்.

குயில்கள் கூவியது-எண்வழு தொடர்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!