General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 6

Tnpsc General Tamil Previous Question Paper 6

Tnpsc General Tamil Previous Question Paper 6: Tnpsc Aspirants can use this opportunity to check Tnpsc General Tamil Previous Question Papers For Tnpsc Exam Preparation. General Tamil Previous Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Previous Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.

(ஆ) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது

(இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது

(ஈ) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது

2. விடை தேர்க: சரியான சொற்றொடரைத் தேர்க:

(அ) தாழ்வு உயர்வு கருதுதல் பிறப்பில் தவறு

(ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு

(இ) பிறப்பில் உயர்வு கருதுதல் தாழ்வு தவறு

(ஈ) உயர்வு கருதுதல் பிறப்பில் தாழ்வு தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை

அ. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்.

ஆ. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.

இ. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.

ஈ. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்

(அ) அ மற்றும் இ

(ஆ) ஆ மற்றும் ஈ

(இ) இ மற்றும் ஈ

(ஈ) ஆ மற்றும் இ

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) இ மற்றும் ஈ

விளக்கம்

எனது மகன்-தவறு. என் மகன்-சரி. அவளது தந்தை-தவறு. அவளுடைய தந்தை-சரி. ஆறாம் வேற்றுமை உருபுகள்-அது, ஆது, அ என்பன. “உடைய” என்பது சொல்லுருபாக அமையும். அது, ஆது உருபுகள் அஃறிணை ஒருமைக்கும், “அ” உருபு அஃறிணைப் பன்மைக்கும் உரியன. உயர்திணை ஒருமைக்கும் பன்மைக்கும் இவ்வுருபுகள் பொருந்தா.

4. “முட்டையிட்டது சேவலா பெட்டையா?” இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?

(அ) பால் வழு

(ஆ) திணை வழு

(இ) வினா வழு

(ஈ) மரபு வழு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வினா வழு

விளக்கம்:

சேவல்-ஆண்பால். ஆண்பால் முட்டையிடாது. எனவே இது வினா வழுழுவாகும்.

5. வரை-இவ்வேர்ச்சொல் வினையாலணையும் பெயராக்குக:

(அ) வரைதல்

(ஆ) வரைந்த

(இ) வரைந்தவன்

(ஈ) வரைந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வரைந்தவன்

விளக்கம்:

வரை-வேர்ச்சொல்.

வரைதல்-தொழிற்பெயர்.

வரைந்த-பெயரெச்சம்.

வரைந்தவன்-வினையாலணையும் பெயர்.

வரைந்து-வினையெச்சம்

6. பின்வருவனவற்றைப் பொருத்துக:

(அ) டெலிகேட் – 1.கருத்துரு

(ஆ) சாம்பியன் – 2. மரபுத்தகவு

(இ) புரபோசல் – 3. பேராளர்

(ஈ) புரோட்டோகால் – 4. வாகைசூடி

அ ஆ இ ஈ

(அ) 1 3 4 2

(ஆ) 3 2 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

7. “ஊ” என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு:

(அ) இறைச்சி

(ஆ) உலகம்

(இ) உயிர்

(ஈ) உயர்வு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இறைச்சி

விளக்கம்:

ஊ-உணவு, இறைச்சி, ஊன், தசை

8. “து” என்ற சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

(அ) ஆறு

(ஆ) துப்பு

(இ) உண்

(ஈ) துன்பம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உண்

விளக்கம்:

து-உண்

துப்பார்க்கு-உண்பவர்க்கு

9. பொருத்துக:

பட்டிபயல் I – பட்டியல் II

(அ) சரதம் – 1. நிலா முற்றம்

(ஆ) சூளிகை – 2. நாடு

(இ) மகோததி – 3. வாய்மை

(ஈ) அவனி – 4. கடல்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 1 3 4

(இ) 3 2 1 4

(ஈ) 1 4 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

விளக்கம்:

இராசராச சோழனுலா பாடல் எண்: 9 & 10

“தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்

கரைகண்ட போர் முரசங் காணீர் – சரதப்

பவித்ர விசயப் படைப்பரசு ராமன்

கவித்த வபிடேகங் காணீர்”

  • ஓட்டக்கூத்தர்

பொருள்: போரில் தோற்ற வேற்று நாட்டு மன்னர், முன்னர்த் தாம் இழந்த நாட்டினைப் பெற்றுக் கொண்டதற்காகத் தம் தலையில் மண் சுமந்து காவிரி அணை கட்டுமாறு செய்த போர் முரசத்தைக் காணுங்கள். வாய்மை, தூய்மை, வெற்றி ஆகியவற்றினை உடைய படையாகிய மழுவாயுதத்தைக் கைக்கொண்ட பரசுராமன் சூட்டிய கிரீடத்தைக் காணுங்கள்.

சரதம்-வாய்மை

பாடல் எண் 1

“மாளிகையும் சாலையு மாலயமு மண்டபமும்

சூளிகையு மெம்மருங்குந் தோரணமும்”

– ஓட்டக்கூத்தர்.

பொருள்: இராசராச சோழன் தெருவில் உலா வந்தவோது அவனைக் காணப் பல்வேறு குலமங்கையரும் மாளிகைகளிலும் சாலையிலும் கோயிலிலும் மண்டபத்திலும் நிலா முற்றங்களிலும் கூடியிருந்தனர்.

சூளிகை-நிலாமுற்றம்

பாடல் எண்:5

“வட்ட மகோததி வேவ வொருவாளி

விட்ட திருக்கொற்ற விற்காணீர்

– ஒட்டக்கூத்தர்.

பொருள்: உலகை வட்டமாய்ச் சூழ்ந்துள்ள பெருங்கடல் காய்ந்து வற்றுமாறு, முன்பு வளைத்து ஓர் அம்பினை விடுத்த சிறந்த வெற்றி பொருந்திய வில்லினைப் பாரீர்.

மகோததி-பெருங்கடல்

10. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்

கருத்துகள்

(அ) மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு

(ஆ) ஆசிரியரை “ஐயா” என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தூர் மரபு.

(இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு

(ஈ) திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாடு மரபு.

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு

General Tamil Study Materials

General Tamil Previous Questions Pdf

11. “எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்” இந்த அடியில் அமைந்துள்ள மோனை வைகயைத் தேர்ந்தெடு

(அ) கீழ்க்கதுவாய்

(ஆ) இணை

(இ) கூழை

(ஈ) மேற்கதுவாய்

விடை மற்றும் விளக்கம்

விடை:

(அ) கீழ்க்கதுவாய்

விளக்கம்:

ஓர் அடியில் 1,2 மற்றும் 4-ஆம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது கீழ்க்கதுவாய் மோனையாகும்.

1 2 4

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

12. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க

(அ) வெண்மதி-வெண்+மதி

(ஆ) வெந்துவர்ந்து-வெந்து+உவர்ந்து

(இ) காடிதனை-காடு+இதனை

(ஈ) கருமுகில்-கருமை+முகில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) வெண்மதி-வெண்+மதி

விளக்கம்:

வெண்மதி-வெண்மை+மதி

13. பொருந்தாத இணையினைக் காண்க:

(அ) “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்

(ஆ) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்

(இ) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”- இளங்கோவடிகள்

(ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) “அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்

விளக்கம்:

“அழுது அடியடைந்த அன்பர்”

– மாணிக்கவாசகர்.

திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கிஅ ழுது தொழுதவர் மாணிக்கவாசகர். அதனால் இவரை “அழுது அடியடைந்த அன்பர்” என்பர்.

14. “நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது

செய்தல் ஓம்புமின்” – இவ்வடிகள் பெற்றுள்ள நூல்

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) பரிபாடல்

(இ) புறநாநூறு

(ஈ) குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) புறநாநூறு

விளக்கம்:

“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” – என்ற அடிகள் புறநானூற்றில் அமைந்துள்ள பாடலடிகள் ஆகும். “பல்சான்றீரே பல்சான்றீரே” எனத்தொடங்கும் இப்பாடலை நரிவெரூஉத் தலையார் இயற்றியுள்ளார். இவர் சங்ககாலப் புலவர் என்பதைத் தவிர, வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. இவரின் பாடல்கள் புறநானூறு தவிர குறுந்தொகையிலும் திருவள்ளுவமாலையிலும் இடம் பெற்றுள்ளன.

பாடலின் பொருள்: உயிருடன் வாழும்போதே நல்லவற்றை செய்ய வேண்டும். அஃது இயலாத போது தீயதைச் செய்தலையாவது கைவிட வேண்டும்.

15. திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?

அ. திரு+குறள் – திருக்குறள்: மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின் “திருக்குறள்” எனப்பெயர் பெற்றது.

ஆ. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளை கூறுவர்.

இ. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.

ஈ. திருவள்ளுவருடைய காலம் கி.மு.32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

(அ) ஆ, ஈ சரியானவை

(ஆ) அ,இ சரியானவை

(இ) இ,ஈ சரியானவை

(ஈ) ஆ,இ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அ, இ சரியானவை

விளக்கம்:

திருக்குறளின் வேறுபெயர்கள்: முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவரின் காலம் கி.மு.31 என்றும் அறிஞர் சிலர் கூறுவர். இதைக் கணக்கில் கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது.

16. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

(அ) தேன்மழை

(ஆ) குயில்

(இ) தென்றல்

(ஈ) இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) குயில்

விளக்கம்:

பாரதிதாசன் வெளியிட்ட இதழ் “குயில்”.

“தேன்மழை”-சுரதாவின் கவிதை நூல்.

தென்றல்-கண்ணதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகை.

இந்தியா-பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய வார ஏடு.

17. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

அ. கோக்கோதை நாடு – 1.பறவை இனம்

ஆ. பார்ப்பு – 2. சேற்று வயல்

இ. புள்ளினம் – 3. சேர நாடு

ஈ. அள்ளற் பழனம் – 4. குஞ்சு

அ ஆ இ ஈ

(அ) 3 2 4 1

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

விளக்கம்:

சேரநாடு-கோக்கோதை நாடு என அழைக்கப்பட்டது.

பார்ப்பு-கோழிக்குஞ்சு, மான்கன்று.

புள்ளினம்-பறவையினம்.

அள்ளல்-சேறு.

பழனம்-வயல். அ

அள்ளற்பழனம்-சேற்றுவயல்

18. “நாடக இயல்” எனும் நூலை இயற்றியவர் யார்?

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) பம்மல் சம்மந்த முதலியார்

(இ) கிருஷ்ணசாமிப் பாவலர்

(ஈ) விபுலானந்த அடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பரிதிமாற் கலைஞர்

விளக்கம்:

“நாடக இயல்” என்ற நூல் பரிதிமாற்கலைஞரால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நூலாகும். “சூரியநாராயண சாஸ்திரி” என்ற தனது பெயரைத் தனித்தமிழில் “பரிதிமாற் கலைஞர்” என இவர் மாற்றிக் கொண்டார். மேலும் ரூபாவதி, கலாவதி போன்ற நற்றமிழ் நாடகங்களையும், “மானவிஜயம்” என்ற இலக்கிய நாடகத்தையும் இயற்றியுள்ளார்

19. “ஏலாதி” பற்றி கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?

அ. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம் “ஏலாதி”

ஆ. “ஏலாதி” நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.

இ ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.

ஈ. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.

(அ) ஆ மற்றும் இ

(ஆ) இ மற்றும் ஈ

(இ) அ மற்றும் இ

(ஈ) அ மற்றும் ஈ

விடை மற்றும் விளக்கம்

விடை:(இ) அ மற்றும் இ

விளக்கம்:

ஏலாதி-இதனை இயற்றியவர் கணிமேதவியார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். தற்சிறப்புப் பாயிரம் மற்றும் கடவுள் வாழ்த்து ஆகியவற்றைத் தவிர்த்து 80 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கொண்டுள்ளது.

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்களும் உடல் பிணியை நீக்குவதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமையை நீக்க வல்லமை.

20. பொருந்தா இணையைக் கண்டறிக:

வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்

(அ) இயேசு பெருமான் – 1. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

(ஆ) சிவபெருமான் – 2. சுந்தரர்

(இ) புத்தபிரான் – 3. நீலகேசி

(ஈ) நபிகள் நாயகம் – 4. உமறுப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) புத்தபிரான் 3. நீலகேசி

விளக்கம்:

“நீலகேசி” ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகும்.

குண்டலகேசி என்ற பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண சமயக்காப்பியமாகும். இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. இந்நூல் 10 சருக்கங்களையும் 894 செய்யுள்களையும் கொண்டது. இதன் மற்றொரு பெயர் நீலகேசித் தெருட்டு, ஐந்து வகை மனிதர்களைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!