General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 6

71. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்

(அ) நந்தவர்மன்

(ஆ) ஜெயங்கொண்டார்

(இ) குமரகுருபரர்

(ஈ) பெயர் தெரியவில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பெயர் தெரியவில்லை

72. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. கொண்டல் – 1.மாலை

ஆ. தாமம் – 2.வளம்

இ. புரிசை – 3.மேகம்

ஈ. மல்லல் – 4.மதில்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 3 4 1 2

(இ) 3 2 1 4

(ஈ) 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 1 4 2

73. “முக்கூடற்பள்ளு” பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

அ. முக்கூடலில் வாழும் பள்ளி “மூத்த மனைவி” மருதூர்ப்பள்ளி “இளைய மனைவி” என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு

ஆ. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்

இ. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது

ஈ. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்துவந்த பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல் “சதகம்”

(அ) ஈ மற்றும் அ

(ஆ) இ மற்றும் ஈ

(இ) அ மற்றும் இ

(ஈ) ஆ மற்றும் அ

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) அ மற்றும் இ

74. “விற்பெருந்தடந்தோள் வீர!” இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

(அ) இலக்குவன்

(ஆ) இராமன்

(இ) குகன்

(ஈ) அனுமன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இராமன்

75. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்

(அ) நம்மாழ்வார்

(ஆ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

(இ) குலசேகராழ்வார்

(ஈ) திருமங்கையாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

விளக்கம்:

திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில் எழுந்தருளியுள்ள திருமாலைக் குறித்து பாடப்பட்ட அந்தாதி வகை நூல் திருவேங்கடத்தந்தாதி ஆகும். இந்நூலை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இந்நூல், இவர் பாடிய அஷ்டப்பிரபந்தம் என்னும் எட்டு நூல்களுள் ஒன்றாகும்.

76. ஐங்குநுறூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தெர்ந்தெடு

(அ) பேயனார்

(ஆ) கபிலர்

(இ) ஓதலாந்தையார்

(ஈ) ஓரம்போகியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பேயனார்

விளக்கம்:

ஐங்குறூநூறு என்னும் நூல் ஐம்பெரும் புலவர்களால் பாடப்பட்டனவாகும்.

மருதத்திணை-ஓரம்போகியார்.

நெய்தல் திணை-அம்மூவனார்.

குறிஞ்சித்திணை-கபிலர்.

பாலைத்திணை-ஓதலாந்தையார்.

முல்லைத்திணை-பேயனார்.

77. கீழே காணப்பெறுபவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக

அ. அகப்பொருள் பற்றிய, “நற்றிணை” நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்று குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது.

ஆ. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை.

இ. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை.

ஈ. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்.

(அ) அ மற்றும் இ சரியற்றவை

(ஆ) ஆ மற்றும் ஈ சரியற்றவை

(இ) இ மற்றும் ஈ சரியற்றவை

(ஈ) அ மற்றும் ஆ சரியற்றவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) அ மற்றும் ஆ சரியற்றவை

விளக்கம்:

நற்றிணையில் உள்ள பாடல்கள் 9 அடிச்சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்டவை.

ஓரறிவு உயிர்களைக் கூட விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலான தமிழர்தம் உயரிய பண்புகளை எடுத்தியம்பும் நூல் இது.

78. பொருந்தாத இணையினைக் காண்க:

அ. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே-புறநானூறு

ஆ. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-திருக்குறள்

இ. கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-சிலப்பதிகாரம்

ஈ. பண்ணொடு தமிழொப்பாய்-தேவாரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-சிலப்பதிகாரம்

விளக்கம்:

கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன்-திருவாசகம்

79. “திரிகடுகம்” பற்றிய கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

அ. திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது.

ஆ. திரிகடுகத்தின் ஆசரியர் நல்லாதனார்

இ. திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

ஈ. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது.

விளக்கம்:

திரிகடுகம்-காப்புச் செய்யுள் விடுத்து 100 பாடல்கள் உள்ளன.

80. பாந்தன், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ——– என்பதாகும்.

(அ) கரடி

(ஆ) யானை

(இ) முதலை

(ஈ) பாம்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பாம்பு

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!