General Tamil

6th Tamil Unit 4 Questions

11. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________.

A) குற்றமில்லாதவர்

B) குற்றம்இல்லாதவர்

C) குற்றமல்லாதவர்

D) குற்றம்அல்லாதவர்

12. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

A) சிறப்புஉடையார்

B) சிறப்புடையார்

C) சிறப்படையார்

D) சிறப்பிடையார்

13. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. “கல்வி அழகே அழகு” என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி.

II. கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும்.

III. பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

14. ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

15. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. தூற்றும் படி – இகழும்படி

II. மூத்தோர் – பெரியோர்

III. மாற்றார் – மற்றவர்

IV. நெறி – வழி

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

16. நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக் கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும் படி வளரக் கூடாது – என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) உ.வே.சா

C) திரு.வி.க

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

17. பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது – என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) உ.வே.சா

C) திரு.வி.க

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

18. மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

19. துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

20. வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும் பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!