General Tamil

6th Tamil Unit 4 Questions

21. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் இவர். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் – இவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) வாலி

C) கண்ணதாசன்

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

22. மாணவர் பிறர் ______________ நடக்கக் கூடாது.

A) போற்றும்படி

B) தூற்றும்படி

C) பார்க்கும்படி

D) வியக்கும்படி

23. நாம் _____________ சொல்படி நடக்க வேண்டும்.

A) இளையோர்

B) ஊரார்

C) மூத்தோர்

D) வழிப்போக்கர்

24. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

A) கையில் + பொருள்

B) கைப் + பொருள்

C) கை + பொருள்

D) கைப்பு + பொருள்

25. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.

A) மானம்இல்லா

B) மானமில்லா

C) மானமல்லா

D) மானம்மில

26. ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி – இது யாருடைய திட்டம்?

A) அண்ணா

B) எம்.ஜி.ஆர்

C) பெரியார்

D) காமராஜர்

27. ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார் தெரியுமா? குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்கக்கூடாது என்று எண்ணியவர் யார் தெரியுமா? பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார் தெரியுமா? – இந்த வினாக்கள் யாருடன் தொடர்புடையது?

A) அண்ணா

B) எம்.ஜி.ஆர்

C) பெரியார்

D) காமராஜர்

28. கல்விக் கண் திறந்தவர் என்று ________________ அவர்களால் மனதாரப் பாராட்டப்பட்டவர் மறைந்த மேனாள் முதல்வர் காமராசர் ஆவார்.

A) திரு.வி.க

B) தந்தை பெரியார்

C) அண்ணா

D) நேரு

29. பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர், கருப்புக் காந்தி, ஏழைப்பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர் – என்ற சிறப்புப் பெயர்களை கொண்டவர் யார்?

A) பெரியார்

B) நேரு

C) காமராசர்

D) அண்ணா

30. காமராசரின் கல்விப்பணிகள் – சரியானது எது?

I. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.

II. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

III. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!