General Tamil

6th Tamil Unit 4 Questions

31. மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால் நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார். இவ்வாறு கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர் இவர் ஆவார் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) காமராசர்

B) அண்ணா

C) எம்.ஜி.ஆர்

D) பக்தவச்சலம்

32. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. நடுவண் அரசு ____________ இல் பாரதரத்னா விருது வழங்கியது.

A) 1956

B) 1966

C) 1976

D) 1986

33. இவர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் இவரது சிலை நிறுவப்பட்டது. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது – இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?

A) காமராசர்

B) அண்ணா

C) எம்.ஜி.ஆர்

D) பக்தவச்சலம்

34. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் ___________ ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

A) 02.10.2000

B) 10.02.2000

C) 11.11.2000

D) 02.12.2000

35. ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ______________ கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

A) ஜூன் பதினைந்தாம் நாள்

B) ஜூலை பதினைந்தாம் நாள்

C) ஆகஸ்டு பதினைந்தாம் நாள்

D) மே பதினைந்தாம் நாள்

36. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________________.

A) ஆடு மேய்க்க ஆள் இல்லை

B) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

C) வழி தெரியவில்லை

D) பேருந்து வசதியில்லை

37. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________.

A) பசி + இன்றி

B) பசி + யின்றி

C) பசு + இன்றி

D) பசு + யின்றி

38. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________.

A) படி + அறிவு

B) படிப்பு + அறிவு

C) படி + வறிவு

D) படிப்பு + வறிவு

39. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________.

A) காட்டாறு

B) காடாறு

C) காட்டுஆறு

D) காடுஆற

40. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் இந்தியாவின் _____________ மாநிலத்தில் உள்ளது.

A) டெல்லி

B) ஆந்திரா

C) தமிழ்நாடு (அண்ணா நூற்றாண்டு நூலகம்)

D) கேரளா

(குறிப்பு – ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம். தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்)

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!