General Tamil

6th Tamil Unit 4 Questions

41. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் __________ நாட்டில் உள்ளது.

A) சீனா

B) வியட்நாம்

C) மலேசியா

D) சிங்கப்பூர்

42. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என்றும் அழைக்கப்படுகிறார்.

A) தாமோதரன்

B) முனைவர் இரா. அரங்கநாதன்

C) சீர்காழி ராமசாமி

D) இவர்களில் யாருமில்லை

43. பார்வைத் திறன் குறைபாடு உடையோர் தொட்டுப் பார்த்துப் படிக்கும் முறையின் பெயர் என்ன?

A) வரி வடிவம்

B) ஐரீன்

C) பிரெய்லி

D) இவற்றில் ஏதுமில்லை

44. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

II. சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

45. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

II. ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.

III. சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். (எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்.

IV. இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, IV மட்டும் சரி

46. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

II. குறில் எழுத்து இல்லாத ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்பது இன எழுத்தாகும். ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்பது இன எழுத்தாகும்.

III. சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். (எ. கா.) ஓஒதல், தூஉம், தழீஇ

IV. தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

A) I, II, III மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, IV மட்டும் சரி

47. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

A) மஞ்சள்

B) வந்தான்

C) கண்ணில்

D) தம்பி

48. தவறான (பொருந்தாத) சொல்லை வட்டமிடுக.

A) கண்டான்

B) வென்ரான்

C) நண்டு

D) வண்டு

49. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை- அந்நாடு வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புதிய ஆத்திச்சூடி

B) குறுந்தொகை

C) பழமொழி நானூறு

D) நற்றிணை

50. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புதிய ஆத்திச்சூடி

B) திருக்குறள்

C) பழமொழி நானூறு

D) நற்றிணை

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!