General Tamil

6th Tamil Unit 7 Questions

11. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) நூல் + ஆடை

B) நூலா + டை

C) நூல் + லாடை

D) நூலா + ஆடை

12. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) எதிரலிக்க

B) எதிர்ஒலிக்க

C) எதிரொலிக்க

D) எதிர்ரொலிக்க

13. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன – என்ற கூற்று யாருடையது?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

14. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன – என்ற கூற்று யாருடையது?

A) தாராபாரதி

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

15. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது – என்ற கூற்று யாருடையது?

A) உ.வே.சா

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) தாராபாரதி

16. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடிபடாத இடமே இல்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் இவர் பற்று வைத்திருந்தார்.

A) அண்ணல் அம்பேத்கர்

B) காந்தியடிகள்

C) நேரு

D) சுபாஷ் சந்திர போஸ்

17. ______________ ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார்.

A) 1913

B) 1923

C) 1929

D) 1919

18. காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் ____________ அவர்களின் வீட்டில் நடைபெற்றது.

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) இவற்றில் ஏதுமில்லை

19. “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” – என்று கேட்டவர் யார்?

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) வ. உ. சிதம்பரம்பிள்ளை

20. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள். “அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) பாரதியார்

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!