General Tamil

6th Tamil Unit 7 Questions

51. இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், _____________, உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

A) காலச்சொல்

B) இடைச்சொல்

C) இலக்கண சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

52. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் ___________ எனப்படும். (எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

53. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் ______________ எனப்படும். (எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

54. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் ____________ ஆகும். இது தனித்து இயங்காது. (எ.கா.) உம் – தந்தையும் தாயும், மற்று – மற்றொருவர், ஐ – திருக்குறளை

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

55. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது _______________ ஆகும். (எ.கா.) மா – மாநகரம், சால – சாலச்சிறந்தது

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

56. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”?

A) கேட்டல்

B) செவிக்கு

C) அவர்

D) மற்று

57. இடைச்சொல் – பொருந்தாதது எது?

A) மா

B) ஐ

C) உம்

D) மற்ற

58. கீழ்க்கண்ட கூற்று யாருடையது?

I. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்.

II. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

A) திருப்பூர் குமரன்

B) பாரதியார்

C) ம.பொ.சிவஞானம்

D) வ.உ.சிதம்பரனார்

59. _______________ ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

A) 1897

B) 1906

C) 1910

D) 1913

60. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) ஓர் ஊர்; ஓர் ஏரி; ஒரு நகரம்; ஒரு கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!