General Tamil

7th Tamil Unit 5 Questions

51) “வறுமை”-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?

A) நீ

B) நே

C) நை

D) நோ

விளக்கம்: நீ – முன்னிலை ஒருமை

நே – அன்பு

நை – இழிவு

நோ – வறுமை

52) “மேகம்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) பா

B) பூ

C) பே

D) பை

விளக்கம்: பா- பாடல்

பூ – மலர்

பே – மேகம்

பை – இளமை

53) “வான்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) போ

B) மா

C) மீ

D) மூ

விளக்கம்: போ – செல்

மா – மாமரம்

மீ – வான்

மூ – மூப்பு

54) “அன்பு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) மே

B) மை

C) மோ

D) யா

விளக்கம்: மே – அன்பு

மை – அஞ்சனம்

மோ – மோத்தல்

யா – அகலம்

55) “மலர்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) வா

B) வீ

C) வை

D) வெள

விளக்கம்: வா – அழைத்தல்

வீ – மலர்

வை – புல்

வெள – கவர்

56) ‘து’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி உணர்த்தும் பொருள் என்ன?

A) உண்

B) நோய்

C) அம்பு

D) பசு

விளக்கம்: து – உண்

நொ – நோய்

ஏ – அம்பு

ஆ – பசு

57) பகுபதம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும். இது பெயர் பகுபதம், வினைப்பகுபதம் என 2 வகைப்படும்.

(எ.கா) வேலன் – இதை வேல் + அன் எனப் பிரிக்க இயலும்.

58) பெயர்பகுபதத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை பொருள், இடம், காலம், சினை, குணம்(அல்லது) பண்பு, தொழில் என 6 வகையாகப் பிரிக்கலாம்.

59) பொருத்துக.

அ. பொன்னன் – 1. இடம்

ஆ. நாடன் – 2. பொருள்

இ. கண்ணன் – 3. காலம்

ஈ. சித்திரையான் – 4. சினை

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 1, 2, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்: (பொன் + அன்) பொன்னன் – பொருள்

(நாடு + அன்) நாடன் – இடம்

(கண் + அன்) கண்ணன் – சினை

(சித்திரை + அன்) சித்திரையான் – காலம்

60) “இனியன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?

A) சினை

B) பொருள்

C) பண்பு

D) இடம்

விளக்கம்: இனியன் என்பதை இனிமை + அன் எனப் பிரிக்கலாம். இனிமை என்பது பண்பைக் குறிக்கும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!