General Tamil

7th Tamil Unit 5 Questions

61) “உழவன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?

A) பண்பு

B) இடம்

C) காலம்

D) தொழில்

விளக்கம்: உழவன் என்பதை உழவு + அன் எனப் பிரிக்கலாம். இது ‘உழவு’ என்னும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.

62) “உண்கின்றான்” என்பது எவ்வகை சொல்?

A) பகுபதம்

B) பெயர்ப்பகுபதம்

C) வினைப்பகுபதம்

D) பகாப்பதம்

விளக்கம்: உண்கின்றான் என்பதை உண் + கின்று + ஆன் எனப் பிரிக்கலாம். மேலும் இது உணவு உண்பதைப் பற்றிய வினையைப் பேசுவதால் இது வினைப்பகுபதம் ஆகும்.

63) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: பகுபத உறுப்புகள் 6 வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

64) எப்போதும் கட்டளையாகவே அமையும் பகுபத உறுப்பு எது?

A) பகுதி

B) விகுதி

C) சந்தி

D) சாரியை

விளக்கம்: பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.

65) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?

A) சந்தி

B) இடைநிலை

C) சாரியை

D) விகாரம்

விளக்கம்: பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.

66) பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?

A) சந்தி

B) இடைநிலை

C) சாரியை

D) விகாரம்

விளக்கம்: பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.

67) பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

A) சந்தி

B) விகாரம்

C) சாரியை

D) பகுதி

விளக்கம்: பெரும்பாலும் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.

68) பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்

A) சந்தி

B) விகாரம்

C) சாரியை

D) பகுதி

விளக்கம்: பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்

69) பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் அல்லது முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டுவது எது?

A) பகுதி

B) சந்தி

C) விகுதி

D) சாரியை

விளக்கம்: பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.

70) வந்தான்-இச்சொல்லில் பகுபதத்தின் சாரியை உறுப்பு எது எனக் காண்க?

A) வா

B) த்

C) அன்

D) வ

விளக்கம்: வந்தான் – வா(வ) + த்(ந்) + த் + அன் + ஆன்

வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்

த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அன் – சாரியை

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!