General Tamil

7th Tamil Unit 7 Questions

21) ஓடை + எல்லாம் – சேர்த்தெழுதுக.

A) ஓடைஎல்லாம்

B) ஓடையெல்லாம்

C) ஓட்டையல்லாம்

D) ஓடெல்லாம்

விளக்கம்: ஓடை + எல்லாம் – ஓடையெல்லாம் எனப் புணரும்

22) பொருத்துக.

அ. நாற்று – 1. பறித்தல்

ஆ. நீர் – 2. அறுத்தல்

இ. கதிர் – 3. நடுதல்

ஈ. களை – 4. பாய்ச்சுதல்

A) 3, 4, 2, 1

B) 3, 4, 1, 2

C) 3, 2, 4, 1

D) 3, 1, 4, 2

விளக்கம்: நாற்று – நடுதல்

நீர் – பாய்ச்சுதல்

கதிர் – அறுத்தல்

களை – பறித்தல்

23) எவை பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன?

A) பட்டினம்

B) பாக்கம்

C) கிராமம்

D) நகரம்

விளக்கம்: நகரங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.

24) பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் எது?

A) மதுரை

B) திருச்சி

C) கரூர்

D) திருநெல்வேலி

விளக்கம்: பாண்டியர்களின் முதல் தலைநகரம் – மதுரை

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் – திருநெல்வேலி

25) மூவேந்தர்கள் எனப்படுபவர்கள் யார்?

A) பாரி, ஓரி, காரி

B) சேரர், சோழர், பாண்டியர்

C) அதியமான், ஆய், நளங்கிள்ளி

D) A மற்றும் B

விளக்கம்: சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரும் மூவேந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் மூவரும் பழந்தமிழகத்தை ஆண்டு வந்தனர்.

26) “நெல்லை” என வழங்கப்படும் ஊர் எது?

A) தூத்துக்குடி

B) தஞ்சாவூர்

C) கும்பகோணம்

D) திருநெல்வேலி

விளக்கம்: திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது.

27) “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று கூறியவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் பெருமைய உரைத்தவர் திருஞானசம்பந்தர்.

28) “தண்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் எது?

A) கோவை

B) மதுரை

C) திருநெல்வேலி

D) சேலம்

விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று அழைக்கப்படும் ஊர் திருநெல்வேலி. இங்கு பொருநை நதி பாயந்ததை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

29) “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியின் சிறப்பை போற்றியவர் யார்?

A) சேக்கிழார்

B) அப்பர்

C) சுந்தரர்

D) சம்பந்தர்

விளக்கம்: “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியில் பொருநை நதி பாய்ந்த பெருமையைக் கூறியவர் சேக்கிழார்.

30) “பொதியி லாயினும் இயம மாயினும்

பதியெழு அறியாப் பழங்குடி” – இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

A) மணிமேகலை

B) சிலப்பதிகாரம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

விளக்கம்: இவ்வரிகள் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!